Yarl Forum
திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு (/showthread.php?tid=2113)



திருமலை ஈபிடிபி கும்பலின் முகாமில் குண்டுவெடிப்பு - தூயவன் - 12-10-2005

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள ஈபிடிபி தேசவிரோதிகளின் முகாமிற்குள் இன்று காலை 11.45 மணியளவில் பாரிய குண்டொன்று வெடித்துள்ளது. இதனால் குறித்த முகாமின் மேற்கூரை து}க்கி வீசப்பட்டு, முகாம் கடுமையாகச் சிதைந்துள்ளதுடன், தேசவிரோதிகளும் படுகாயமடைந்துள்ளனர் . ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது காயமடைந்தவர்களின் பெயர் விபரம். ஞானப்பிரகாசம் புூலோகராஜன்-திருமலை அலுவலகப் பொறுப்பாளர்(வயது 40) அவரின் இளைய சகோதரர் ஞானப்பிரகாசம் அந்தனி பர்னான்டோ(சிறி 29 வயது), ஏ.ஏபிரகாம்(வயது 60), வேலாயுதம் ரகுநாதன்(முத்து 37 வயது),
இக் குண்டு அவர்களின் அலுவலகத்தில் பாவனையிலிருந்த கணணித் தொகுதியிலிருந்து வெடித்ததாகவும், இக் கணணி நீண்ட காலம் அவ் அலுவலகத்தில் பாவிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமலை காவல்த் துறையினர் தகவல் தருகையில் அலுவலகத்திற்க்கு வெளியிலிருந்து தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர். இது ஒரு உள் வீட்டு சதி என நம்பப்படுகின்றது.
சிறீலங்கா இராணுவம், மற்றும் கடற்படையின் உச்ச பாதுகாப்பில் உள்ள குறிப்பிட்ட முகாமிலேயே குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பையடுத்து வீதித்தடைகள் இராணுவத்தாலும், கடற்படையாலும் ஏற்படுத்தப்பட்டு குறித்த பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத அதேவேளை சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


நன்றி: சங்கதி


- Thala - 12-10-2005

என்னப்பா ஆயுதம் தரிக்காத அரசியல்க் கட்சியின் முகாமிற்குள்ளே வெடிபொருட்கள் எப்பிடிப் போனது..???? புலிகளின் நாசகாரச் செயல் எண்டு இப்ப அறிக்கை தயார் செய்து கொண்டு இருப்பினம்... பின்னேரம் பிபிசில வரும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 12-10-2005

தல அப்ப தமிழிளால் இயங்கும் சிங்கள தமிழோசையில் இந்த செய்தி இன்று வரும் எங்குறீங்க.


- தூயவன் - 12-11-2005

எல்லாருடைய புலனாய்வையும் விட டக்கின் புலனாய்வு கெட்டித்தனம் வாய்சதப்பா! உடனே கண்ணை மூடிக் கொண்டே புலிதான் அதை செய்தது என்று அறிக்கை விடுவினம். கடைசியாக சுறாவளி வந்ததற்கு புலிகள் தான் காரணம் என்று அறிக்கை விடப்போகினமாம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 12-11-2005

Quote:என்னப்பா ஆயுதம் தரிக்காத அரசியல்க் கட்சியின் முகாமிற்குள்ளே வெடிபொருட்கள் எப்பிடிப் போனது..????

எப்படி எப்படி எப்படி?? :roll: :roll: :roll:


அப்ப இவ்வளவு காலமும் நடந்ததில இவர்களிற்கும் பங்கிருக்கு எனலாமா???


- MUGATHTHAR - 12-11-2005

இந்த முகாம் அமைந்த உட்துறைமுக வீதியில் ஒரு இராணுவ செக் பொயின்டைப் போடச் சொல்லி ஈ.பி.டி.பி யினர் கேட்டு வருகிறார்கள் (தங்களின் பாதுகாப்புக்காம்) ஆனால் அது இதுவரை நடைமுறைபடுத்தவில்லை எனவே இந்த இடம் பாதுகாப்பு குறைந்தது எண்டு காட்டுவதற்காக சென்ற மாதம் அந்த இடத்தில் 2 கைக்குண்டுகளை வெடிக்க வைத்து பாத்தார்கள் அதுக்கும் ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை இப்ப உள்ளேயே குண்டை வெடிக்கப் பண்ணியுள்ளார்கள் இது பொது மக்கள் எல்லாருக்கும் தெரிந்த விடயம் (அது சரி என்ன வேலை செய்தாலும் எப்பிடி மாட்டுப்படுகிற மாதிரியே செய்யிறாங்கள் எல்லாம் போராட்ட தந்திரமாக்கும்)


- தூயவன் - 12-11-2005

*இன்று முற்பகல் 11-45 மணியளவில் திருகோணமலையில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை நகரிலும் தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இன மோதல்களைத் தோற்றுவிக்கும் முகமாக ஈ.பி.டி.பி யினர் முஸ்லிம் பகுதிகளுக்கு வீச வைத்திருந்த குண்டே அங்கு வெடித்துள்ளது என தெரியவருகின்றது

திருகோணமலையில் திருஞான சம்பந்தர் வீதிக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசமான மூர் வீதிக்கு கைக்குண்டு தாக்குதல்களை நிகழ்த்தும் நோக்குடனேயே இந்த திட்டம் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளால் தீட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இன்று இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பினை நோக்கினால் இராணுவத்தரப்பினால் வெளியில் இருந்தே இந்தக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தாலும். அதற்கான சாத்தியங்கள் இங்கு ஒரு வீதத்திற்குக்கூட இல்லை என்றே கருதலாம்.

இந்த அலுவலகத்தைச்சுற்றி நாற்புறமும் இராணுவத்தினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர மேலதிகமாக சிறீ லங்கா கடற்படையினர் இங்கு காவலரன்களை அமைத்தும் இருக்கின்றனர். இது தவிர இந்த அலுவலகத்திற்கு சிறீ லங்கா காவற்துறையினரின் பாதுகாப்பும் வழங்கப்டபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முகாமைச்சுற்றி மகவும் உயரமான சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன்மேல் இருந்து கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இது தவிர குண்டு வெடித்த இடம் அலுவலகத்தின் நடுப்பகுதி என்பதனால் வெளியில் இருந்து வீசப்பட்ட குண்டு இந்தனையையும் தாண்டி எவ்வாறு வெடித்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்தி: சங்கதி
*இச் செய்தி நேற்று வந்தது என்பதை கவனத்தில் கொள்க.