| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 483 online users. » 0 Member(s) | 480 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,304
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,293
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,632
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,058
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,461
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,478
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,026
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| Sri Lanka accuses Tigers of killing Tamil MP |
|
Posted by: வினித் - 12-25-2005, 05:42 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
<b>Sri Lanka accuses Tigers of killing Tamil MP</b>
COLOMBO (AFP) - Tamil Tiger rebels carried out assassination of a minority Tamil legislator during a Christmas mass at a Roman Catholic church in eastern Sri Lanka, the defence ministry said.
It said members of the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) carried out the killing while MP Joseph Pararajasingham attended a midnight service at St. Mary's church in the town of Batticaloa.
He was "brutally gunned down by LTTE pistol men inside St. Mary's Cathedral," the defence ministry said in a statement Sunday. There was no immediate reaction from the Tamil Tigers.
http://au.news.yahoo.com/051225/19/xcug.html
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
|
|
|
| யாழில் மகிந்தரின் சிந்தனையில் -அப்பாவிகளின் கொலைகள் |
|
Posted by: narathar - 12-25-2005, 04:47 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
யாழில் மகிந்தரின் சிந்தனையில் -அப்பாவிகளின் கொலைகள்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16634
Identity of Jaffna victims raise questions
[TamilNet, December 25, 2005 12:43 GMT]
One of the five bodies recovered by the Sri Lanka Army (SLA) and transferred to Jaffna Teaching Hospital claiming to be those of LTTE fighters, after the firefight near Jaffna Fort Saturday, was identified as belonging to Krishnar Vimaleswaran (31), a watcher at Jaffna Central College, located 300 meters from where the bodies were found. Relatives identified another body as belonging to Balasingham Santhirakanthan (24) who owns a motorbike repairshop in Kottadi Jaffna.
The watcher was killed inside the College compound and his body was taken to the area where firefight occurred, residents charged. Large amounts of blood stains were found inside the School premises beside the watcher's stand, sources in Jaffna said.
Mr Santhirakanthan was displaced from Velani in Kayts (Jaffna Islet) and was living in Manipay, his wife and relatives told the Mallakam acting Magistrate Ms Sarojini Ilankovan when they identified the body, sources said.
The yet unidentified body belonging to a woman whose body was recovered had a traditional skirt worn underneath denim trousers. Suspicion pointing to SLA attempting to indentify her as a LTTE fighter by dressing her with LTTE's denim trouser, mistaking the denims as the traditional dress of LTTE women cadre, surrounds her killing.
Reports speculated that she was a civilan worker got caught in the crossfire.
Further suspicions are being raised as residents close to the firefight said they heard gunshots nearly 20 to 30 minutes after the initial exchange of fire.
Speculation is ripe in Jaffna that the rest of the bodies may belong to Tamils arrested earlier in other parts of the district who were brought to the site and shot dead by the SLA.
Krishnar Vimaleswaran, the Jaffna Central College watcher, is from Mirisuvil, Kodikamam in Thenmaradchy. His mother Mrs Krishnar Sellama (54), who identified her sons body, said that his son prepared his night meal and came to work at 4 p.m. Saturday. Her inquiries when her son failed to return home at the usual time of 9 a.m, led her to Jaffna Hospital, she said.
|
|
|
| குமுதத்துக்கு என்னச்சு..ஈழ மக்களுக்காய் குரல்? |
|
Posted by: ஆறுமுகம் - 12-25-2005, 04:16 PM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>யுத்தம் என்றால் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்தது. இனி போர் என்றால் கொழும்பில் தான் - குமுதம் </b>
இலங்கையில் மீண்டும் போர்மேகங்கள் திரள்கின்றன. ஈழத் தமிழர்களின் சாதாரணஉரிமைகளைக்கூட அடியோடு மறுக்கும் சக்திகளின் பிரதிநிதி மகிந்தா ராஜபட்சே,
குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார்.
அவர் சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி வேட்பாளர். அவரை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே போட்டியிட்டார். முன்னவர் ஒரு லட்சம்
வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருக்கிறார். நாடு தழுவிய அளவில் நடந்த தேர்தலில், ஒரு லட்சம் என்பது பெரிய வேறுபாடல்ல.
இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் வாக்களிக்கவில்லை. முப்பது லட்சம் பேரில்
நூற்றுக்கணக்கில்தான் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர் என்று செய்திகள் வந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அவர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருவர். தமிழர்
இயக்கங்களின் தங்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவர்.
சிங்களர் ஒருவர்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அவர்
எந்தக் கட்சியாக இருந்தாலும், இனவாதம் என்று வரும் போது, ஈழத்திலிருந்து
தனியாகத் தங்களுக்கு எல்லைக்கோடு போட்டுக் கொள்வார்கள். நடந்து முடிந்த
தேர்தலில் தமிழர் பகுதிகளுக்கு வந்து ரணில் விக்ரமசிங்கே கூட வாக்குக்
கேட்கவில்லை. காரணம், சிங்களவர்களின் சீற்றத்திற்கும், புத்தத் துறவிகளின் அக்கினிக்
கண்களுக்கும் ஆளாக வேண்டும் என்று அச்சம் கொண்டார்.
போர்முனையில் நின்ற ஈழத் தமிழர்கள் சமாதானத்திற்கும் தயாராக இருந்தனர்.
அவர்கள் தூக்கிய துப்பாக்கியில் குண்டு மட்டுமல்ல; வெண்புறாவும் கூடு கட்டி
இருக்கிறது. எனவே தான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நார்வே எடுத்த
முயற்சியின் காரணமாகப் போர் நிறுத்தம் செய்தனர். அப்போது ரணில் விக்ரமசிங்கே
பிரதமராக இருந்தார். அவரே போர் நிறுத்த உடன்பாட்டில் அரசு சார்பாகக்
கையெழுத்திட்டார். அவரிடமிருந்து ஈழத் தமிழர்கள் நிரம்ப எதிர்பார்த்தனர்.
ஈழத் தமிழர்களின் வடக்கு, கிழக்கு மாநிலப் பள்ளிகள், ஆலயங்கள்,
மாதாகோயில்களில் இன்றைக்கும் ராணுவ முகாம்கள் உண்டு. அந்த முகாம்களை மூடி
ராணுவத்தை அதன் முகாமுக்கு அனுப்புவது என்பது உடன்பாட்டில் ஓர் அம்சம்.
ஆனால், அந்தச் சாதாரணக் கோரிக்கை கூடச் செயலுக்கு வரவில்லை. அங்கிருந்து
ராணுவம் வெளியேற மறுக்கிறது என்றார் ரணில்.
தற்போது தங்களிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதாக இலங்கையின் புதிய ராணுவத்
தளபதி கூறுகிறார். இதன் பொருள் என்ன? போர் நிறுத்த காலத்தில் இலங்கை அரசு
தமது ராணுவத்தை நவீனப்படுத்திவிட்டது. நாசகார ஆயுதங்களை வாங்கிக் குவித்து
விட்டது என்று அர்த்தம்.
இலங்கை அரசியல் திசையைத் தீர்மானிப்பது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ அல்ல.
ராணுவம்தான். அதனால்தான், அமைதி உடன்பாட்டையே குப்பைத் தொட்டியில் தூக்கி
எறிந்தது. அந்த ராணுவத்தில் ஈழத்தமிழர்கள் எந்தப் பொறுப்பிற்கும் வரமுடியாது. தமது
பராக்கிரமத்தைக் காட்ட ஈழத்தை இலங்கை ராணுவம் மயான பூமியாகப் பயன்படுத்திக்
கொள்ளும்.
வழியில் போகிறவனை அண்ணா என்று அழைத்தானாம். ஏண்டா! மடையா!
என்னோடா பிறந்தாய்? முட்டாள்! என்றானாம் வழிப்போக்கன். அப்படித்தான்
ஈழத்தமிழர்களை சிங்கள இனவாதிகள் பார்க்கிறார்கள்.
அந்த ராணுவத்திற்கு இசைவான ஓர் அரசு இப்போது அமைந்திருக்கிறது. குடியரசுத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தா ராஜபட்சே நாடாளுமன்றத்தில் முதல் உரை
நிகழ்த்தினார்.
இலங்கை அரசு, சிங்கள இனவாதப் பேரரசுதான் என்பதனை அவர் தெளிவாக
அறிவித்தார். இதுவரை சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஈழத்தமிழர்களுக்கு
அளித்த உறுதிமொழியையும் உதறித் தள்ளினார்.
இலங்கைக்கு, சிங்களவர்களின் ஒற்றை ஆட்சிதான், கூட்டாட்சி என்பது இல்லை
என்றார். ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை
என்றார். இது ஈழ மக்களுக்கு விடுத்த போர் பிரகடனமாகும்.
இந்தப் பிரகடனம் கேட்டு ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி அடையவுமில்லை.
வியப்படையவும் இல்லை. சிங்கள இனவாதிகள் தங்களுக்கு எந்த உரிமையும்
தரமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். உரிமையைப் போராடித்தான் பெற
முடியும் என்பதனை அவர்கள் அறிவார்கள்.
ஆனால், இலங்கை அரசுடன் ஏன் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்?
தங்கள் விடுதலை இயக்கத்திற்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்
என்று எதிர்பார்த்தார்கள். உரிமைகளை அவர்கள் பெற முடியவில்லையென்றாலும்
உலக அரங்கில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. கெரில்லாப் போருக்கு
மட்டுமல்ல; சமாதானத்திற்கும் தயார் என்பதனை அவர்கள் உலகிற்கு
உணர்த்திவிட்டார்கள்.
சமரசத்திற்கோ, சமாதானத்திற்கோ, உடன்பாட்டிற்கோ தயாராக இல்லை என்பதனை
ராஜபட்சே தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் இனி எந்தத் தாக்குதலையும்
ராணுவம் எதிர்கொள்ளும் என்று, இலங்கையின் புதிய தளபதி தெரிவித்திருக்கிறார்.
சூரியனுக்குப் பனிக்கட்டிகள் சவால் விடுகின்றன.
நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய முதல் உரையில் ராஜபட்சே ஓர் நச்சுக் கருத்தை நட்டு,
இலங்கைச் சுழலுக்குள் இந்தியாவை இழுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்?
ஐ.நா. மன்றத்தின் உதவியோடு ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா உதவ
வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வேடிக்கை.
நார்வே நாட்டின் முன் முயற்சியால் ரணில் விக்ரமசிங்கேயுடன் ஈழ விடுதலை இயக்கம்
உடன்பாடு கண்டது. அதன் பின்னர் சந்திரிகாவுடன் உடன்பாடு கண்டது. இந்த
உடன்பாடுகளை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. ஆனால், ஈழமக்கள்
பொறுமையின் பெட்டகமாக இருந்தனர்.
இப்போது இந்தியாவை ஏன் புதிய குடியரசுத் தலைவர் ராஜபட்சே அழைக்கிறார்?
அதன் மூலம் ஈழ மக்களை அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அந்தக்
கூண்டில் நிற்க வேண்டியது இலங்கை இனவாத அரசுதான். உலகம் அறிய நடுநிலை
நாடான நார்வேயின் முன்னிலையில் கையெழுத்திட்ட இரண்டு உடன்பாடுகளையும்,
எட்டிக்காயாகக் கருதியது அந்த அரசுதான்.
எந்தக் காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும், ஈழத் தமிழர்களை இலங்கையின்
மைந்தர்களாக சிங்கள இனவாதம் ஏற்றுக் கொள்ளாது. அவர்களை இரண்டாம் தரக்
குடிமக்களாகத்தான் கருதுகிறது. இனியும் கருதும். போராடித்தான் தங்கள் நியாயத்தை,
உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற நிலைக்கு ஈழத்து மக்களைத் தள்ளுவது
சிங்கள இனவாதம்தான். அவர்கள் மகாவம்சப் பரம்பரையினராம். புத்த புராணங்களில்
ஆதாரங்களைத் தேடுகிறார்கள். ஈழத் தமிழர்கள் நசுக்கப்பட வேண்டிய பொட்டுப்
பூச்சிகளாம்.
இந்த முருங்கைப் பந்தலில் நின்று எதற்காக இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள்?
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக சமர வீரா பொறுப்பேற்றிருக்கிறார்.
அண்மையில் அவர் டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார்.
ஈழப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண புதிய அரசு தயாராக இருப்பதாகப்
பிரதமரிடம் தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தை திறந்த மனதுடன் நடைபெற
வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி ராஜபட்சே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஈழ விடுதலை இயக்கத்துடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்
முடிவுகளை அதன் ராணுவமே புதை குழிக்கு அனுப்பியது. இது வரலாறு.
இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை என்று சமர வீரா புதிய திரை விரிக்கிறார்.
ஆனால், ராஜபட்சேயின் நாடாளுமன்ற உரையில் அதற்கான அறிகுறியே இல்லை.
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காணும் முறையில் ராஜபட்சேயின் உரை அமையவில்லை.
போருக்குத் தயார் என்று புதிய ராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் கூட்டாட்சி மூலம் தான் ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண
வேண்டும் என்பது, இந்திய அரசின் நிலைப்பாடு. வாஜ்பாய் வகுத்த இந்தக்
கொள்கைகளை, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இலங்கையில் ஒற்றை ஆட்சிதான்; கூட்டாட்சி இல்லை என்று,
நாடாளுமன்றத்தில் ராஜபட்சே அறிவிக்கிறார். பின்னர் எந்த அடிப்படையில்
பேச்சுவார்த்தை நடைபெற முடியும்?
இலங்கையில் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்
சம்மட்டி அடியாகத் தெரிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்கது.
கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு என்பதனை இலங்கை அரசு ஏற்க வேண்டும்.
ராஜபட்சேயின் உரை திருத்தப்பட வேண்டும். அதுவரை இலங்கை அரசுடன் இந்தியா
எந்த உடன்பாடும் கொள்ளக்கூடாது.
ஏனெனில் ஈழப் பிரச்னை என்பது முப்பது லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப்
பிரச்னை. அவர்களுடைய அரசியல் உரிமைகள், பண்பாடு காக்கப்பட வேண்டும்
என்பதில், ஆறுகோடித் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர்.
யுத்தம் என்றால் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்தது. இனி போர் என்றால் கொழும்பில் தான்
குமுதம்
|
|
|
| அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்... |
|
Posted by: Rasikai - 12-25-2005, 02:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (39)
|
 |
<b>ஜோசப் பரராஜசிங்கம்!
--------------------</b>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/12/mandur_1_21998_150px.jpg' border='0' alt='user posted image'>
<b>சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்....
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்!
எங்களுக்கு மட்டுமே அது புரியும்!!
எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு...
விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் ..
எப்படி விடை பெற்று போயிற்று
தன் மானத்துடன் வாழ்பவனுக்கு...
சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு?
யுத்தம் அழித்தது...
மேகம் அழித்தது...
கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது!
இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே
உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்!
அழிவென்றால் தமிழன் - என்று அகராதி
ஒன்று ஆகிடுமோ?
உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே
இப்போ நாமழிகிறோம்... வந்து
எப்போது .............
எமை காப்பீர்????</b>
|
|
|
| 4 வயது குழந்தை உட்பட 5 பேரை எரித்துக் கொன்றது சிறிலங்கா கடற் |
|
Posted by: mayooran - 12-25-2005, 02:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர்.
பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில்
4 வயது குழந்தை டிலக்சன்,
அவரது தாயார் திரேசா (சுகந்தி)
கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ்
மாணவி அந்தோனிக்கா
ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்டியுள்ளனர்.
சிறு பிள்ளையின் கால் ஒன்றும், பெரியவர்களின் கால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கின்றது.
நன்றி : புதினம்
|
|
|
| தொடரும் மகிந்தவின் சிந்தனைகள்... |
|
Posted by: Nellaiyan - 12-25-2005, 12:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
சிங்கள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள இனவாதிகளின் வாக்குகளினால் வெற்றி மகிந்த ராஜபக்ஸவின் சிந்தனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தமிழர்களை நோக்கி எய்தப்பட தொடங்கியிருக்கின்றது.
கொழும்பில் கைதுகளில் தொடங்கிய மகிந்தவின் சிந்தனைகள்......
* வடக்கு/கிழக்கில் மாணவ/ஆசிரிய சமூகம் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.
* மீண்டும் மெல்ல மெல்லமாக தமிழ்ப்பிரதேசங்கள் மீது பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது.
* தமிழ்ப்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.
* அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் பின் பயங்கரவாத முத்திரைகள் குத்தப்படுவதும் தொடக்கப்பட்டிருக்கின்றது.
* தமிழ்த் தேசிய விரோதக் கூலிகளும் சிங்கள இலங்கைப் புலனாய்வாளர்களாளும் செர்ந்து தமிழ்மக்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளார்கள்.
* .....
.......
* இவை எல்லாவற்றிற்றும் கிகரம் வைத்ததுபோல் சிங்கள பாராளூமன்றத்திலேயே அங்கத்தவர்களாயிருக்கும் உறுப்பினர்கள் கூட வேட்டையாடப்படத் தொடங்கியுள்ளார்கள்.
.......... இப்படியான தொடரும் மகிந்தவின் சிந்தனைக்கு சர்வதேசமே உன் பதில் என்ன?????????????????????
|
|
|
| புலிகளுடனான இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பை தடுக்க |
|
Posted by: நர்மதா - 12-25-2005, 11:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புலிகளுடனான இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பை தடுக்கப் போராடிய சிறிலங்கா!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் தூதர்கள் சந்தித்துள்ளது சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 4 ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இணைத் தலைமை நாடுகள் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இது.
இந்தச் சந்திப்பைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கஇ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சந்தித்துள்ளனர்.
பேசாலையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா அரச தரப்பினர் தற்போதைய பதற்றமான சூழலில் விடுதலைப் புலிகளுடனான சந்திப்பைத் தவிர்க்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த யோசனையை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர். தங்களது நாடுகளின் அரச தலைவர்கள்இ விடுதலைப் புலிகளுடனான சந்திப்பை விரும்புவதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் இருப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தாங்கள் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றும் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர்.
இணைத் தலைமை நாடுகளின் குழுவில் உள்ள அமெரிக்கா தனது பிரதிநிதியை கிளிநொச்சிக்கு அனுப்பாமைக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தமும் காரணமாக இருக்கக் கூடும் என்றும் கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமது எதிர்ப்பின் வெளிப்பாடாகவே இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் பயணம் மேற்கொள்ள விமானப்படை விமானத்தை அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு திரும்பிய இணைத் தலைமை நாடுகள் விடுதலைப் புலிகளுடனான பேச்சு விவரங்களை சிறிலங்கா அரச அதிகாரிகளைச் சந்தித்து விளக்கினர்.
2000 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களாக முன்வந்து யுத்த நிறுத்தத்தை அறிவித்த நாள் டிசம்பர் 24 என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம்
|
|
|
|