Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 162 online users.
» 0 Member(s) | 159 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு
Posted by: நர்மதா - 01-02-2006, 04:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை.

அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறியா சிங்கள மக்களைக் கொன்று குவித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையும் இணைந்து சிங்கள சிப்பாய்கள் ஆயிரக் கணக்கில் இறப்பதற்கு வழி அமைத்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்இ ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதிலும் கொல்லப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் குறித்து இந்தத் தலைவர்கள் ஒரு கணமாவது சிந்தித்தார்களா? அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால் ஆயுத இறக்கு மதி எனக்கூறி கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று பெரிய தனவந்தர்களாகியிருக்க முடிந்திருக்குமா? சந்திரிகா தற்போது பிரிட்டனில் மாளிகை ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? சந்திரிகாவுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது?!!

அவ்வாறானவர்களின் வசதிக்காக அவர்களின் கட்டளைகளை ஏற்று நீங்கள் மடிவதில் எதுவித பயனும் இல்லை. முல்லைத்தீவு முகாமில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களைக்கூட அரசு பொறுப்பேற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு முகாம்களுக்கும் மற்றும் ஜெயசிகுறுஇ அக்கினிச் சுவாலை நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளை வழங்கிய இராணுவ அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்று தங்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற சிப்பாய் கள் குறித்தும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் எதையுமே அவர்கள் செய்யவில்லை. நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டமான வாழ்க்கை குறித்து நாங்கள் நன்கு அறிவோம். ஏன் நீங்கள் மாத்திரம் இவ்வாறு கஷ்டமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்?

உங்களது தாயகத்தை பெறுவதற்கா நாங்கள் போராடுகிறோம்? தமிழீழம் எமது தாயகம். உங்களது தாயகம் சிறிலங்கா. உங்களது நாட்டைக் காக்க நீங்கள் விரும்பினால் தென்பகுதிக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களது கல்லறைகளை நாங்கள் கட்டுவோம். எமது தாயகத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி தற்போது ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இந்த மக்கள் ஒன்று திரண்டு படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டால் படையினரின் மரணம் உறுதி. உங்கள் மீது நாங்கள் அனுதாபப்படுகிறோம். உங்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நாங்கள் கவலையடைகின்றோம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்யத் தயாராய் இருக்கிறோம்.
விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களின் உரிமை. நீங்கள் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு உங்கள் முகாம்களுக்கு வராமல் விடுங்கள். இல்லாவிடின் எங்களிடம் சரணடையுங்கள். எல்.ரீ.ரீ.ஈ யினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு நீங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல எங்களால் வசதிக ளைச் செய்துதர முடியும். இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் பயமோ அச்சமோ இன்றி வாழ்கின்றனர். ஒரு கணம் சிந்தியுங்கள்!

சிங்களத் தலைவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக எங்களது புத்திஜீவிகளையும் ஏதுமறியா மக்களையும் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழ் மகன் அரசினால் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பத்துச் சிப்பாய்கள் கொல்லப்படுவர். பழிவாங்கல்களுக்கு பலியாவது நீங்களே. இதைத் தடுப்பது கடினமாகும்.

எனவே எமது வேண்டுகோளை ஏற்று பெறுமதியான உயிரைப் பற்றிச் சிந்தித்து நல்ல தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள்இ சிங்கள அரசியல் தலைவர்களினதும் இராணுவக் கட்டளை அதிகாரிகளினதும் கட்டளைகளை கணக்கில் எடுக்காது நாங்கள் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். இதை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் குடும்பத்தினரும் திருப்தியடைவார்கள் என்பது உறுதி.

""எமது இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உங்கள் பெறுமதி மிக்க உயிரைக் காப்பாற்றுங்கள்''

நன்றி.
இப்படிக்கு
பொங்கி எழும் மக்கள் படை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சூரியன்

Print this item

  போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு
Posted by: நர்மதா - 01-02-2006, 04:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு நிழல் யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன?
முழு அளவிலான யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினரின் பதில் நடவடிக்கைகள் அப்பாவிப் பொது மக்களையே இலக்கு வைப்பதாயிருப்பதால் அரசுக்கும் படையினருக்குமெதிரான உணர்வு மக்கள் மத்தியில் உச்சமடைந்துள்ளது.

போர்நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. நிழல்யுத்தத்தின் தொடர்ச்சியே இந்த மோதல்களாகும். நிழல் யுத்தத்தை அரசு தூண்டியதன் விளைவை முழுநாடும் விரைவில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கில் கடந்த இரு வருடங்களாக நிலவிய நிழல் யுத்தம் வடக்கே பரவிய போதே முழு அளவிலான யுத்தமொன்றை நாடு எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோதல்களை தவிர்த்து சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதை விடுத்து போருக்கான சூழ்நிலையையே அரசு ஏற்படுத்திவருகிறது.

இந்த மோதல்களில் உயிரிழக்கும் படையினரின் மரணச் சடங்குகளுக்கு செல்ல அமைச்சர்கள் அஞ்சுமளவிற்கு போருக்கு எதிரான உணர்வு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கையில் சமாதான முயற்சிகளை கேள்விக் குறியாக்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

போருக்கானதொரு அரசாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கூட்டு ஆட்சிபீடமேறியுள்ளது. அதற்கேற்ப கடும் போக்காளரொருவரும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுஇ உத்தரவுகள் மக்களை பெரும் பீதியடையச் செய்துள்ளன. மோதல்களின் பக்கவிளைவாக பெருமளவு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கடும் தாக்குதலுக்குஇ நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் இலக்காகியுள்ளனர். இராணுவ தலைமைப் பீடத்தின் உத்தரவின் பேரிலேயே பதில் நடவடிக்கைகளில் மக்கள் இலக்காவதாக படை அதிகாரிகளே கூறுமளவிற்கு அங்கு அச்சமூட்டும் யுத்தமொன்றை நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய அரசு பதவியேற்றவுடனேயே போருக்கான சூழ்நிலை உருவாகிவிட்டது. அதற்கான சூழ்நிலையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்படுத்தியிருந்தார். புதிய ஜனாதிபதிஇ அந்தச் சூழ்நிலை தொடரக் காரணமானதுடன் முழு அளவிலான போருக்கும் வழிவகுத்துவிட்டார்.

அவரது கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி.யும்இ ஜாதிக ஹெல உறுமயவும் சமாதான முயற்சிகளுக்கு ஆப்பு வைத்தன. சர்வதேச சமூகத்தின் நெருக்குதலாலும் கிழக்கில் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கருதியதாலும்இ புலிகளால் யுத்தமொன்றுக்குச் செல்ல முடியாத நிலையிருப்பதாக இவர்கள் தப்புக்கணக்கு போட்டனர்.

ஆனாலும்இ நிலைமை வேறு. போர்நிறுத்த உடன்பாட்டை முற்றுமுழுதாக அமுல்படுத்துவதன் மூலம் தற்போதைய மோதல் நிலைமைகளை தடுக்க முடியுமெனப் புலிகள் கூறுகின்றனர். ஆனால்இ போர்நிறுத்த உடன்பாட்டில்இ தமிழர்களுக்கு சாதகமான அம்சங்களை வெட்டி நீக்கி அதில் திருத்தங்களை கொண்டுவர அரசு முனைகிறது.

மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினரை வாபஸ் பெறுவதுஇ அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாதொழிப்பதுஇ தமிழ் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து அவர்களை வடக்கு - கிழக்கிற்கு வெளியே அப்புறப்படுத்துவது உட்படஇ மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் போர்நிறுத்த உடன்பாட்டிலுள்ள போதிலும் அவை எதுவும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.

இயல்பு நிலையை உருவாக்கும் இவ்வாறான அம்சங்களையெல்லாம் உடன்பாட்டிலிருந்து நீக்கிவிடவே அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. இதனால் தான்இ போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முயல்கிறது. ஆனாலும்இ இந்த உடன்பாட்டை முழு அளவில் அமுலாக்கும் பேச்சுக்களுக்கு மட்டுமே தாங்கள் தயாரெனவும் இதில் திருத்தங்களை ஏற்படுத்தும் எவ்வித முயற்சிக்கும் சம்மதிக்கப்போவதில்லையெனப் புலிகள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் தான் வடக்கு கிழக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாரிய மோதலொன்றுக்கு தேவையான சிறுசிறு தாக்குதல்களும் மோதல்களும் இடம்பெற்றுவிட்டதால் இனி முழு அளவிலான போருக்கு நாடு காத்திருக்கிறது. அதுவும் விரைவில் வெடித்துவிடும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

நோர்வேயை அனுசரணைப் பணியிலிருந்து அப்புறப்படுத்தி ஆசிய நாடொன்றை அதிலமர்த்தும் முயற்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டபோதேஇ போர்நிறுத்த உடன்பாடு கேள்விக் குறியாகிவிட்டது. அத்துடன்இ போர்நிறுத்த உடன்பாட்டில் பல திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்ற அவரது நிலைப்பாடுஇ மோதல்களுக்கு வழிவகுத்து விட்டது.

புலிகளின் பலம் தொடர்பான தப்புக்கணக்கே இந்த நிலைமைக்கு காரணமாகிவிட்டது. புலிகளின் பலத்தின் அடிப்படையில் தான் இந்தப் போர்நிறுத்த உடன்பாடு உருவானதென்பதையும் புதிய அரசு மறந்துவிட்டது. இதனால்இ புலிகளின் பலத்தை உணரும் வரை இந்த அரசு சமாதான முயற்சிகளை ஒருபோதும் ஆரம்பிக்கமாட்டாது. மாறாகஇ போரொன்றின் மூலம் புலிகளை சுலபமாக அடக்கிவிடலாமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.

அதேநேரம்இ மக்களை அச்சமூட்டும் உளவியல் போரில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது. தாக்குதல்கள் நடைபெறும் இடங்களில் கண்டபடி சுட்டுத் தள்ளுவதன் மூலம்இ படையினர் குறித்து மக்கள் பெரிதும் அச்சமுறும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழ் குழுக்களை பயன்படுத்தி எவ்வாறு நிழல்யுத்தம் மேற்கொள்ளப்படுகிறதோ அதே பாணியில் வடக்கில் படையினரே நேரில் இறங்கி மக்களை அச்சமடையச் செய்யும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கருணா குழு என்ற பெயரில் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் நிழல்யுத்தத்தை புலிகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தியிருந்தாலும் அங்கும் மக்களை இலக்கு வைப்பதன் மூலம் புலிகளிடமிருந்து மக்களைத் தாங்கள் பிரித்து வைத்திருப்பதாகவே அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தின் இழப்பு புலிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் அமைப்பில் கருணா புரட்சி செய்த நாள் முதல் கருணா குழுவின் நடவடிக்கைகளை ஜோசப் பரராஜசிங்கம் கடுமையாக எதிர்த்து வந்தவர். வடக்கு - கிழக்கு பிரதேசவாதம் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். அதனால்இ அவரை கருணா குழுவும் அந்தக் குழுவை இயக்குபவர்களும் இலக்கு வைத்திருந்தனர்.

கருணா குழு இன்று பலமிழந்து வெறும் சிலருடன் இயங்கினாலும் அது மிகப்பெரும் பலத்துடனிருப்பது போல் காண்பிக்க வேண்டியதொரு தேவையுள்ளது. சாதாரண பொது மக்களை இவர்கள் கொல்லும் போது அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஆனால்இ கௌசல்யன்இ ஜோசப் பரராஜசிங்கம் போன்றோர் கொல்லப்பட்ட போதுஇ கருணா குழு மிகவும் சக்திமிக்கதாகவும் புலிகளின் மிக முக்கியஸ்தரொருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிக முக்கியஸ்தரொருவரையும் இலகுவாகக் கொல்லுமளவிற்கு அவர்கள் சக்திமிக்கவர்களாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையின் விளைவு விரைவில் உணரப்படுமெனக் கருதப்படுகிறது. சமாதானப் பேச்சுக்களுக்கான வாய்ப்பே இல்லையென்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஒருபுறம்இ அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை அகற்றுவதன் மூலம் சமாதான முயற்சிகளைஇ தங்கள் தேவைக்கேற்பவெல்லாம் கையாள முடியுமெனக் காட்ட அரசு முனைவதுடன் மறுபுறம் ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் கொலைகள் மூலம் கள நிலையிலும் தங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்பதை காட்ட முயல்கின்றனர்.

சமாதான முயற்சிகளை கேள்விக் குறியாக்குவதுடன் சண்டையை தூண்டுவதுதான் நோக்கமென்பது தெளிவாகிவிட்டது. இதனைப் புலிகளும் நன்குணர்ந்துள்ளனர். எவர் ஆட்சிக்கு வருவதன் மூலம் தங்கள் இலட்சியம் நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனப் புலிகள் கருதினார்களோ அவர் ஆட்சிக்கு வந்துஇ புலிகள் நினைத்த காலப்பகுதியை விட மிக விரைவிலேயே தமிழர்களின் தாயகப் போராட்டத்தை விரைந்து முன்னெடுக்கக் காரணமாகியும் விட்டார்.

அதேநேரம்இ அனுசரணை முயற்சியிலிருந்து நோர்வேயை அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக ஜப்பானை நுழைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் வேண்டாவெறுப்பாக நோர்வேக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதிஇ விஷேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மை அப்பதவியிலிருந்து மட்டுமல்லாது அனுசரணைப் பணியிலீடுபடும் குழுவிலிருந்தும் அப்புறப்படுத்தவும் முனைகிறார்.

அடிக்கடி இவ்வாறு ஆட்களை மாற்றுவதன் மூலம் சமாதான முன்னெடுப்புகளை மேலும் மேலும் தாமதப்படுத்துவதும் புதிதாக அனுசரணைப் பணிக்கு வருவோரை குழப்பமடையச் செய்வதும் இதன் நோக்கமாகும். ஆனாலும்இ எரிக் சொல்ஹெய்மை இக் குழுவில் நியமிப்பதில் நோர்வேயின் புதிய அரசும் தீவிரம் காட்டுகிறது. இதனால்இ இழுபறி நிலை தொடர்கிறது.

இவ்வாறானதொரு நிலைமைஇ தற்போதைய மோதல்களை தணிக்க எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. முழு அளவில் போர் வெடிக்கும் நாள் வெகு தூரத்திலில்லையென போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவும் கூறிவிட்டது. நிலைமையை கட்டுப்படுத்த அவர்களாலும் முடியவில்லை. அறிக்கைகளை வெளியிடுவதுடன் அவர்களது பணி முடிவடைந்து விடுகிறது.

ஆனால்இ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இடைக்கிடையே படையினருக்கும் மக்கள் படைக்குமிடையே நடைபெறும் சிறுசிறு குழு மோதல்கள் பெரும் மோதல்களாக வெடிக்கப் போகின்றன.

புலிகளே பொங்கியெழும் மக்கள் படையென்ற பெயரில் தாக்குதல்களை நடத்துவதாக அரசும் படைத்தரப்பும் கூறினாலும்இ தங்களிடம் ஆயுதப் பயிற்சிபெற்ற மக்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலிகள் கூறுகின்றனர். முழு அளவில் மோதல் வெடிக்கும் போது புலிகளும் மக்கள் படையுடன் இணைவரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கில் கருணா குழுவின் பெயரில் படைத்தரப்பு எவ்வாறு தாக்குதல்களை நடத்துகின்றதோ அவ்வாறே மக்கள் படையென்ற பெயரில் வடக்கில் புலிகளே தாக்குதல்களை நடத்துவதாக பலரும் கருதுகின்றனர். மக்கள் படை இந்த மோதல்களில் ஈடுபடும் வரை அது சிறுசிறு மோதல்களாகவும் தாக்குதல்களாகவுமே இருக்கப்போகின்றது. இந்த நிலைமையை உணர்ந்துஇ மக்கள் படை புலிப்படையாக மாறிபெரும் போர் வெடிப்பதற்கிடையில் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட வேண்டும்.

ஆனாலும்இ இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அரசோ அல்லது அனுசரணையாளர்களோ பெரிதும் முயலவில்லை. தற்போதைய மோதல்களுக்கு புலிகளே காரணமெனப் படையினர் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் கிளைமோர் தாக்குதலை நடத்தி மோதலை உருவாக்கியது அவர்களே எனவும் அரசும் படைத்தரப்பும் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால்இ கிளைமோர் தாக்குதல் நடைபெறுவதற்கான காரணங்களை மறைக்கிறார்கள். கிழக்கின் நிழல்யுத்தத்தை வடக்கிற்கு நகர்த்தியது யார் எனக் கூற மறுக்கின்றனர். இந்த நிழல் யுத்தம் நிஜ யுத்தமாகப் போகின்றதென எச்சரித்த போதெல்லாம் மௌனம் சாதித்தவர்கள்இ அந்த நிழல் யுத்தம் இன்று நிஜப் போருக்கு வழிவகுத்து விட்டதென்ற உண்மையை மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.

அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசும் புலிகளும் தான். அப்பணியிலிருந்து அவர்களை விலக்க வேண்டுமென்றால்இ அழைத்த இரு தரப்பும் தான் நிராகரிக்கவும் வேண்டும். ஆனால்இ ஒரு தரப்பு அவர்களை நிராகரிக்கும் போது எப்படி மற்றத்தரப்பு புதிய அனுசரணையாளர்களுக்கு ஆதரவு வழங்குமென உணர அனைவரும் தவறிவிட்டனர்.

புதிய நோர்வே அரசுஇ அமெரிக்க விரோதப் போக்கை கொண்டதென்பதால் அமெரிக்காவும் அதன் நேச அணியான ஐரோப்பிய ஒன்றியமும் மௌனம் சாதிக்கின்றன.

முழு அளவில் போர் வெடித்து விடலாமென்ற சூழ்நிலையில்இ அந்த நிலைமையை தணிக்கக்கூடிய நோர்வே அனுசரணையாளர்களையும் வேண்டாமென்றால்இ அரசு யுத்தப் பிரகடனத்தை செய்யப்போகின்றதா?

ஏற்கனவேஇ மோதல்கள் உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டதால் போர்நிறுத்த உடன்பாடு செயலிழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதனால்இ போருக்கான அந்தப் 14 நாள் கால அவகாசமும் காலாவதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாட்டின்படி மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினர் வெளியேறி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். ஆனால்இ மக்கள் குடியிருப்புகளுக்குள்ளிருக்கும் படையினர்இ மோதல்களின் போது மக்களைத் தாக்குவதால்இ போர்நிறுத்த உடன்பாட்டுக்கு விரோதமாகஇ மக்கள் குடியிருப்புக்களிலிருந்து மக்களே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய மோதல்கள் முடிவுக்கு வரும் சாத்தியமில்லை. அரசும் - புலிகளும் அல்லது புலிகளும் - படையினரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாது போய்விட்டது. எரிக் சொல்ஹெய்ம் கூட இந்த மாதக் கடைசியில் தான் வரப்போகின்றார். அதற்கு இன்னும் பல நாட்களிருப்பதால் அதற்கிடையில் என்ன நடக்கப்போகின்றது என்பது தான் மிகப்பெரும் கேள்வி.

சொல்ஹெய்ம் என்றாலென்ன நோர்வே என்றாலென்ன எவர் வந்தாலும் இந்த மோதல்களை எப்படி நிறுத்தப் போகின்றார்கள்? போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்க அரசோ படைத்தரப்போ ஒருபோதும் தயாரில்லை. இதனால்இ நிழல் யுத்தம் நிறுத்தப்படப் போவதில்லை. மக்கள் குடியிருப்புக்களிலிருந்து படையினரும் வாபஸ்பெறப்படப் போவதில்லை.இதனால்இ நிழல்யுத்தமும் தொடரத்தான் போகின்றது.

இந்த நிலையில்இ ஒற்றையாட்சிஇ தாயகக் கோட்பாடில்லைஇ சுயநிர்ணய உரிமை இல்லைஇ சமஷ்டி பற்றி பேசக்கூடாதென்றெல்லாம் கூறும் அரசுடன் எந்த அடிப்படையில் புலிகள் பேச்சுக்களை ஆரம்பிப்பர்.

சமாதானமும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால்இ சண்டையும் வந்துவிடக்கூடாதென இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் விரும்புவதை தமிழ்த்தரப்பு எப்படி ஏற்றுக் கொள்ளும்?

புலிகளின் பலத்தின் அடிப்படையில் உருவான போர்நிறுத்தத்திற்கே இன்று மவுசில்லை. புலிகளின் பலம் பற்றி தென்னிலங்கை மறந்துவிட்டது. போர்நிறுத்த கால ஹசுகம்' அவர்களை அப்படிச் சிந்திக்க வைத்துவிட்டதென்றால்இ இனியொரு யுத்தநிறுத்தத்துக்கு புலிகள் இரட்டைப் பலத்துடன் செல்ல வேண்டுமென்று தமிழர்கள் கூறுகின்றனர். அப்படியானால்இ புலிகள் வசம் பல பிரதேசங்கள் வரவேண்டுமென்றல்லவா அவர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறானால்இ புலிகள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

தினக்குரல்

Print this item

  தோல் பள பளக்க..
Posted by: ப்ரியசகி - 01-02-2006, 12:50 PM - Forum: மருத்துவம் - Replies (56)

<img src='http://img362.imageshack.us/img362/1015/beautyskin3sx.jpg' border='0' alt='user posted image'>


மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது.

வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் - பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் - பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்துணர்வும் கிடைக்கும். பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையவும் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் தீ விபத்தினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி மேல் தோல் பாதிப்படைந்திருப்பவர்கள் சிகிச்சை செய்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக இறந்த செல்களை நீக்கிப் புதிய செல்களின் வழியாக புத்துணர்ச்சியான சருமம் உண்டாவதற்கு வழி வகுப்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. இதற்காக மருத்துவமனைகளில் ''டெர்மடிரேஷன்'' செய்கிறார்கள். அங்கு 70 சதம் க்ளைகாலிக் அமிலம் (கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது) உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையை மூன்று நிமிடங்களில் முடித்து அனுப்பி விடுகிறார்கள். ஆனால் சில அழகு நிலையத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே ''க்ளைகாலிக்'' அமிலம் உபயோகபடுத்துகிறார்கள். சிகிச்சையின் பின்னும், அவரவர் சருமத்திற்கேற்பப் பிரத்யேகக் கவனம் எடுக்க வேண்டும்.

ஸ்கின் பாலிஸ் முறை அறிமுகமாவதற்கு முன் பொடி செய்யப்பட்ட சர்க்கரையைச் சருமத்தில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவோம். அல்லது சோப், க்ரீம் இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி அதன் மேல் உப்புத் தூளைத் தேய்ப்போம். ஏனென்றால் உப்பை நேரிடையாக சருமத்தில் தடவக் கூடாது. இந்த முறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.

ஸ்கின் பாலிஷ் முறை சமீபத்தில் நவீனமாக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சுலபம். பலனும் அதிகம். இந்தச் சிகிச்சையை வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்கள் செய்யக் கூடாது. பருவ வயதான பெண்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அவர்களும் தகுதியான அழகுக் கலைஞரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.

இந்தச் சிகிச்சையை ப்ரசிங் முறையிலும் சிலிகான் கற்கள் கொண்ட உபகரணங்களை வைத்தும் செய்யப்படுகிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உபகரணங்களை பயன்படுத்துவார்கள். க்ளைகாலிக் அமிலத்தைக் கொண்டு மூன்று நிமிடம் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். நேரம் அதிகமானால் சருமத்தில் எரிச்சல் தோன்றும். இந்தச் சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் வரை சருமத்தில் சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தண்­ரில் நீந்தக் கூடாது. ஃபேசியலும் செய்துக் கொள்ள கூடாது. கடினமான சோப், பவுடர்களை உபயோகிக்கக் கூடாது. பரு இருப்பவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. மணப்பெண்கள் தகுந்த ஆலோசனையின்பேரில் இருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

இறந்த செல்கள் அதிகமாக சருமத்தில் உருவாவதற்குக் காரணம் அதிகப்படியான தூசியே. படுக்கை, தலையணை, உறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள பாக்டீரியாவினாலேயே தொற்று உருவாகி பொடுகு, பரு இவை உருவாகின்றன.

தரமான பொருட்களைச் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் அவ்வப்போது உருவாகும் இறந்த செல்களைப் போக்கலாம். பப்பாளியில் என்சைம் இருப்பதால் அந்தப் பழத்தின் கூழைச் சருமத்தில் தடவினால், பளபளப்பும், நிறமும் அதிகரிக்கும். ஆனால் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல மேனியிலும் தெரிவதற்கு உதவும் ஸ்கின் பாலிஷ் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்.

இதையெல்லாம் விட..சினிமா நடிகை திரிசா சொன்னது:
தோடம்பழசாறு குடித்து வந்தால்...தோல் பள பளப்பு பெறும் என்பது.

நன்றி கூடல் அன்ட் திரிசா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு
Posted by: parisian - 01-02-2006, 12:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (58)

Please read this article.
http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html

Print this item

  இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும்
Posted by: நர்மதா - 01-02-2006, 12:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு


சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர்.

முன்னர் எண்பதுகளின் ஆரம்பப்பகுதிகளில் உள்ளது போன்றே குடாநாட்டின் நிலைமையுள்ளது. எனினும் 85 களில் யாழ்.குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது போல் இப்போதும் எத்தனிக்கின்றனர்.

இப்போது புலிகள் பொதுமக்களைத் தூண்டி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இராணுவப்பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பொது மக்களா?
தற்போது மாவீரர் குடும்பங்களைச்சேர்ந்த 2000 பேர் வரையில் விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுள்ளனர். அது தவிர யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 15000 பேர் புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றவர்களே.

தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரின் ஆயுதங்களை களையுமாறு கோருகின்றனர். ஆனால் அவர்கள் மட்டும் மக்களுக்கு இராணுவப் பயிற்சிகளை ஏன் வழங்கிவருகின்றனர்?

இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பயங்கரவாத யுத்தியாக பொது மக்களை தமது கவசமாக பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கெதிராகவும் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், அவ்வாறானவர்களை படையினரை தாக்க எத்தனித்தால் சுட்டுத்தள்ளவும் தான் இராணுவத்தினருக்கு உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சங்கதி

Print this item

  தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய
Posted by: நர்மதா - 01-02-2006, 12:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு
றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006

தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்ற வாளிகள்,போதைப் பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கைது செய்ய உத்தரவிடப் பட்டவர்களையே தேடுதல் நடத்தி கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். கைது செய்யப்பட்டவர்கள். அனைவரும் இதனடிப்படையிலேயே பிடிக்கப்பட்டவர்கள். தமிழர்கள் எனது நண்பர்கள். அவர்கள் துன்பப்படுவதையும் அவர்களுக்கு தீங்கேற்படுவதையும் நான் விரும்பவில்லை. இது தொடர்பில் அதிக கவனம் கொண்டு செயற்படுகின்றேன் என்றார்.

சங்கதி

Print this item

  2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின்
Posted by: நர்மதா - 01-02-2006, 12:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை ரத்துசெய்யுமாறு ஐனாதிபதி உத்தரவு.
2005 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் பகுதி ஒன்று பல்தேர்வு வினாத்தாள்களின் முடிவுகளை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனணி மயப்படுத்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக தமது பரீட்சை முடிவுகள் தொடர்பில் மீள் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்தே இந்த உத்தரவு ஜனாதியினால் பரீட்சை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கண்டி மற்றும் தங்காலை பகுதி மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்தார்.

இதேவேளை இந்தப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை 2006 ஆம் ஆண்டுக்காக பல்கலைகழகத்திற்கான மாணவ அனுமதிகளை நிறுத்திவைக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கனணி மயப்படுத்தலில் தவறுகளை ஏற்படுத்திய அதிகாரிகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.

பதிவு

Print this item

  மக்கள் படைத் தாக்குதல்களும்....
Posted by: selvanNL - 01-02-2006, 11:31 AM - Forum: தமிழீழம் - Replies (4)

<span style='color:red'><b>மக்கள் படைத் தாக்குதல்களும் திறக்கப் போகும் போர் முனைகளும்</b>

*குடநாட்டு இராணுவ விநியோகம் கேள்விக்குள்ளாகும் நிலை

*புலிகள் வெட்டி குழியில் விழும் அரசு.

ஆப்பிழுத்த குரங்கின் நிலை என்ன என்பதற்கு சிறந்த உதாரணம் காட்ட வேண்டுமாயின் தற்போதைய கொழும்பு அரசாங்கத்தின் நிலையை விட சிறப்பான தொன்றை காட்டுவது கடினமாகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ துணைக் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் நடத்திவந்த நிழல் யுத்தம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு வளை எறியாக (boomerang) மாறிவிட்டதையே அண்மைக்கால வடக்கு, கிழக்கு சம்பவங்கள் காட்டுகின்றன.

கிழக்கில் புலிகள் மீதும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மீதும் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களுக்கு இராணுவ உளவுப் பிரிவும் அவர்களால் இயக்கப்படும் துணைக் குழுக்களும் தான் காரணம் என விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசாங்கம் தனக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர் தான் அதை மேற்கொண்டு வருவதாகவும் பிரசாரம் செய்து வந்தது.

அரசாங்கத்தின் மறுப்பு வெளி உலகத்தைப் பொறுத்தவரை நம்பத்தகுந்த ஒன்றாக இருக்கவில்லை என்பதையே இணைத் தலைமை நாடுகள் உட்பட வெளி நாடுகள், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கூற்றுக்கள் காட்டுகின்றன.

இவற்றைப் புறக்கணித்து, கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கும் செயற்பாட்டையே கொழும்பு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. அந்தப் பூனைக்கு மத்தால் உச்சந் தலையில் விழுந்த அடியாகவே குடாநாட்டிலும், வட கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் படை எனும் அமைப்புகள் நடத்தும் தாக்குதல்கள் அமைந்துள்ளன.

\"எமக்கு துன்பத்தை தருபவர்களுக்கே அத்துன்பத்தை திருப்பி விட வேண்டும்\" என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் கூறுவதாக தெரிவிக்கப்படும் பிரபல வாசகமாகும். நிழல் யுத்தத்தையும் புலிகள் இந்தக் கூற்றுகமையவே கையாண்டுள்ளார்கள் என்பது தற்பொழுது புலனாகிறது.

<i>பொது மக்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை புலிகள் வழங்கியமைக்கு நிழல் யுத்தத்திற்கு பதிலடி கொடுப்பதும் ஒரு காரணம் என்பது தற்பொழுது தெளிவாகிவிட்டது.</i>

புலிகள் இத் தாக்குதலை நடத்துவதாகவோ, பின்னணியில் இருப்பதாகவோ தற்பொழுது அரசு புலம்புவது ஒரு சோக நகைச்சுவை காட்சியாகவே உலகின் கண்களுக்கு தென்படும்.

இதேவேளை நிழல் யுத்தமும் இந்த பதில் தாக்குதல்களும் யுத்த நிறுத்தத்தை அதன் எல்லைக்கு கொண்டு வந்து விட்டன. மக்கள் படைகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக அப்பாவி பொது மக்களை இராணுவம் பலியாக்கி வருகின்றது. இந்தப் பதிலடி பொது மக்கள் மத்தியில் பாரிய இழப்பை ஏற்படுத்தினால் யுத்த நிறுத்த முடிவிற்கு வழங்கப்பட வேண்டிய 14 நாள் காலக்கெடு இயல்பாகவே இல்லாதொழிந்து பெரும் போர் வெடிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது.

[size=18]யாழ்ப்பாணத்தில் பரவலாக நடந்து வரும் தாக்குதல்களை நிழல் யுத்தத்திற்கு எதிரான பதிலடியாக மட்டும் எவரும் கருதவில்லை. அதன் பின்னணியில் பாரிய தாக்குதலுக்கான திட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. </span>

இராணுவத்தினர் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலம் படிப்படியாக புலிகள் அவர்களை முகாம்களுக்குள் முடக்க முயற்சிக்கின்றனர். இதன் பின் முகாம்கள் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து அவற்றை கைப்பற்ற திட்டமிடுகின்றனர் என்பது புதிய இராணுவத் தளபதியின் கருத்தாகும்.

அரசாங்கத்தினதும், இராணுவத்தினரினதும், சில ஆய்வாளர்களினதும் கருத்தும் இதுவாகவே இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் திட்டம் குறித்த தனது மதிப்பீட்டுக்கு அமைய இராணுவம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் முகாம்களுக்கு முடக்க முனைகின்றார்கள் என கருதும் அது படைகளை முகாம்களில் இருந்து பரப்புகின்றது.

உண்மையில் விடுதலைப் புலிகளே பின்னணியில் உள்ளதாக இராணுவம் கூறும் தாக்குதல்கள் படையினரை முகாம்களுக்குள் முடக்குவதற்காக நடத்தப்படுகின்றனவா? அல்லது அவர்களை முகாம்களில் இருந்து பரப்புவதற்காக நடத்தப்படுகின்றனவா என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

விடுதலைப் புலிகளின் யாழ் குடா நாட்டு மீட்பு நடவடிக்கையில் இராணுவத்தின் விநியோகப் பாதையை துண்டிப்பதே ஒரு திருப்பு முனையான நிகழ்வாக இருக்கும். விநியோகப் பாதையை துண்டித்தால் அது இராணுவத்திற்கான விநியோகங்களை தடை செய்வதுடன் மட்டும் நின்று விடாது; ஏற்கனவே மக்கள் படையின் நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் இராணுவத்தின் உள நிலையை முற்றாக சிதைத்துவிடும். இவ்வாறான கட்டத்தில் புலிகளின் வெற்றி இலகுவானதாகிவிடும்.

<b>விடுதலைப் புலிகள் இரண்டு வழிமுறைகளில் குடா நாட்டு படையினருக்கான விநியோகங்களை துண்டிக்க முடியும்.</b>

பலாலி, காரைநகர் கடற்தளங்கள் மீது பாரிய தரையிறக்கத்தை மேற்கொண்டு அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு வழிமுறையாகும். இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு அம்முகாம்களில் உள்ள படையினரின் செறிவை குறைப்பது முக்கியமானதாகும். அதற்கு தற்போதைய இராணுவம் மீதான பரவலான தாக்குதல்கள் உதவக் கூடும். பலாலி, காரைநகர் தளங்கள் மீது தரையிறக்கத் தாக்குதல்களை ஆரம்பிக்கும் அதேவேளை, தரையிறக்கப் படையணிகளுக்கான விநியோகப் பாதையை ஏற்படுத்த நாகர் கோவிலிலிருந்து வடமராட்சியை கைப்பற்றும் பெரும் படை நகர்வையும், மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்துறை என்பவற்றைக் கைப்பற்றும் பெரும் கடல் நடவடிக்கையையும் புலிகள் மேற்கொள்ளலாம்.

வடமராட்சி கைப்பற்றப்பட்டால் அது தொண்டமானாறு, வளலாய் பகுதிகளினூடு பலாலிக்கான தரைத் தொடர்பை ஏற்படுத்திவிடும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குப் பகுதியிலமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்காவற்றுறை, மண்டைதீவு மற்றும் காரைநகர் போன்ற தீவுகளும் கிழக்குப்புறமாய் அமைந்த வடமராட்சியிலும் அதனூடாக பலாலி விமானப் படைத் தளம், காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பன அமைந்துள்ள வலிகாமம் வடக்கும், புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின் குடா நாட்டுப் படையினருக்கு புலிகளிடம் சரணடைவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

இரண்டாவது வழிமுறையாக விடுதலைப் புலிகள் திருகோணமலையையும் மன்னாரையும் கைப்பற்றுவதன் மூலம் குடாநாட்டுப் படையினருக்கான விநியோகத்தினை மிகப் பெருமளவுக்கு கட்டுப்படுத்தலாம். வன்னியிலுள்ள புலிகளென்னும் பெருவெள்ளத்தை தடுக்கும் அணைக்கட்டாக மணலாறு படைத் தளமே காணப்படுகின்றது. மணலாற்றுப் படைத் தளம் புலிகளிடம் விழுமாயின் திருகோணமலை மாவட்டம் இலகுவாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். திருகோணமலைத் துறைமுகமே குடாநாட்டுப் படையினருக்கான முக்கிய விநியோகத் தளமாக உள்ளது. அது இழக்கப்படுமாயின் குடாநாட்டு விநியோகத்திற்கு இராணுவத்தினர் கொழும்பு அல்லது காலித் துறைமுகத்தையே நம்பியிருக்கும் நிலை ஏற்படும். அத்துடன் மன்னாரும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்படுமானால் கொழும்பிலிருந்து மேற்கு கடல் வழியாக குடாநாட்டிற்கு செல்வதென்பது பாரிய நெருக்கடிக்குள்ளாகும். இவ்வாறான கட்டத்தில் குடா நாட்டின் மீது புலிகள் பெரும் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும். இரண்டாவது வழி முறையைப் புலிகள் மேற்கொண்டால் அதுவேறும் கடும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்தும்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள குடியேற்ற வாசிகள் வெளியேறுவர். இவர்களை புதிய இடங்களில் குடியமர்த்தும் பராமரிப்புக்கு பெரும் சுமை கொழும்பிற்கு ஏற்படும். அத்துடன், மன்னார் மாவட்டம் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் புலிகளின் நகர்விலிருந்து புத்தளம் மாவட்டத்தையும் தென் பகுதியையும் பாதுகாக்க அப்பகுதிகளில் புதிதாக பெரும் படைத்தளங்களை அமைக்கும் நிலையும் படைக்குவிப்பை மேற்கொள்ளும் நிலையும் ஏற்படும்.

இதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள படையினரையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமென்பதால் வடக்கு, கிழக்கு இராணுவ நிலைகள் மேலும் பல வீனமடையும்.

யாழ் குடா தாக்குதல்கள் படைகளை முடக்கும் நடவடிக்கை என்று கருதும் படைத்தரப்பு புலிகளின் வலைக்குள் சிக்கும் வகையில் படைகளை அங்கு பரப்புகின்றதா என்பதற்கு இப்புத்தாண்டில் பதில் கிடைத்துவிடும்.

நன்றி தினக்குரல்

Print this item

  போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா:புலிகள் கேள்வி
Posted by: வினித் - 01-02-2006, 10:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>போர் நிறுத்தம் அமுலில் இருக்கிறதா கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி</b>

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதா என போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப்புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர் ஆதர் சந்தித்த போதே எழிலன் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது குறித்து எழிலன் அங்கு கூறுகையில்;

அரசும் புலிகளும் இணக்கம் தெரிவித்தே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது இரு தரப்பினதும் கடமை.

ஆனால், இன்றோ படைத்தரப்பு அதனை முற்றுமுழுதாக மீறி வருகின்றது. ஒப்பந்தத்திற்கு மாறாகவே அனைத்தையும் செய்கிறது.

உடன்பாட்டிலுள்ள அனைத்தும் மீறப்பட்டுள்ளன. கைதுகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், புதிய முகாம்கள், காவலரண்கள் அமைக்கப்படுவதுடன் அப்பாவி மக்களையும் சுட்டுக்கொல்கிறது.

சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், கைதுகளெல்லாம் தமிழ் மக்களை மட்டுமே இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது. வேறு எந்தச் சமூகத்தையும் விட தமிழ் மக்கள் இந்த உடன்பாட்டின் பேரில் மிக மோசமாகத் துன்புறுத்தப்படுகின்றனர்.

படையினரின் யுத்தநிறுத்த மீறல்கள் நாளுக்கு நாள் மிக மோசமாக அதிகரித்து வருகிறது. நிழல் யுத்தத்தால் கிழக்கில் தினமும் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவற்றையெல்லாம் செய்ய முடியுமென்றால் போர்நிறுத்த உடன்பாடு எதற்காக?

ஒரு தரப்பின் கைகளைக் கட்டிவிட்டு மற்றத் தரப்பு செய்யும் அட்டகாசங்களுக்கு அளவேயில்லாது போய்விட்டது. போர்நிறுத்த உடன்பாடு அமுலிலில்லையென்றால் கூறுங்கள் நாம் எமது வழியைப் பார்த்துக் கொள்வோம்.

இதைவிட, தற்போது ஊர்காவல் படையென்ற பெயரில் திருகோணமலையில் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

கந்தளாய் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளை மையமாக வைத்து முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இருவார ஆயுதப் பயிற்சியின் பின்னர் இந்த ஊர்காவல் படைக்கு ஆயுதங்களைக் கையளிப்பதன் மூலம் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் கபட நோக்கமுள்ளது. இது குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் எழிலன் கண்காணிப்புக் குழுவினரைக் கேட்டுள்ளார்.


நன்றி:தினக்குரல்

Print this item

  சைக்கிள்
Posted by: aathipan - 01-02-2006, 10:14 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (14)

<img src='http://img455.imageshack.us/img455/4863/500287514fw.jpg' border='0' alt='user posted image'>

ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில
சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள்

சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது
அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம். அவரும் இந்தா அந்தா என்று எங்களை நல்லா
ஏமாத்துவார்.


அப்ப "சொப்பர்" சைக்கிளுக்குத்தான் நல்ல மரியாதை. அதுக்கு முன் சில்லு சின்னன். பின் சில்லு பெரிசு. முன்னால ஒரு சின்னக் கூடை இருக்கும். வேகத்தை மாற்ற கியர் கூட இருக்கும். சீட் மற்ற சீட் போல இல்லை சைக்கிள் ஓடுறவவை பின் பக்கம் சாயக்கூடிய மாதிரி இருக்கும். அந்தச் சைக்கிள் ஓடுற பெடியள் பெட்டையளை எல்லாம் ஏக்கமா பாப்பம். வாழ்நாளில ஒருக்கா அதை ஓட வேண்டும் என்று சரியான ஆசை. ஆனா அது கடைசிவரை நிறைவேற வில்லை.

பிறகு ஒரு சைக்கிள் வந்தது அது "பறக்கும் புறா" அதுகும் நல்ல வடிவான சைக்கிள். வெள்ளை நிறம். நல்லூர்த்திருவிழாக்காலத்தில நல்லூர் கல்யாண மண்டபத்தில அதை லொத்தர்ல போடுவார்கள். கடைசி நாள்
தான் குலுக்கல். ஒரு ரூபா டிக்கெட் வாங்கிட்டு தினமும் கோவில் போகேக்கையும் வரேக்கையும்
அதைப்பாத்துக்கொண்டு நிப்பம். முருகனிட்டை அது எங்களுக்கு விளவேண்டும்என்று கந்தஸஷ்டி கூட படிச்ச
ஞாபகம். ஆனா எங்களுக்கு முருகன் கடைசி வரை கண்திறக்க வில்லை.

யாழ்ப்பாணம் டவுனுக்குப்போனா சைக்கிள் விக்கிற கடையள் கஸ்தூரியார் ரோட்டில இருக்கும். ஒவ்வொன்றா தொட்டு விலை கேட்டுபோட்டுதான் வருவம்.

எங்கடை அப்பாட்டை ஒரு பழைய ரலி சைக்கிள இருந்தது அதை அப்பா மத்தியானம் சாப்பிட வாற நேரத்தில
எடுத்து ஓடுவம். சிலவேளை விழுத்தி காண்டிலை நெளிச்சு வைப்பம் இல்லை என்றா செயின் கவரை நெளிச்சு
வைப்பம். அப்பா வந்து அவசரமா சைக்கிள எடுக்கேக்கை செயின் களன்றிருக்கும் காண்டில் நெளிஞ்சிருக்கும்.
கோவத்தில அப்பா பேசுவார்.

சைக்கிள் பெரிசா இருக்கிறதால பாறுக்கால காலைவிட்டுதான் ஓடுவம். சில சின்னன்கள் முழுசா பெடல் போட கால்
எட்டாம பாதி மட்டும் உளக்குவினம். ஒருகை சீட்டை பிடிச்சு இருக்கும் ஒரு கை காண்டில பிடிச்சு இருக்கும்.
முன்னால வாறவை எல்லாம் பயப்பிடுவினம். பாறுக்கால காலைவிட்டு ஓட்டி ஒரு கிழமை கழிச்சுத்தான் பாறுக்கு
மேலால காலைவிட்டு ஓட்டுவம். சீட்டில இருந்தா பெடல் காலுக்கு எட்டாது. கால் வலிச்சா பார்ல இருப்பம் இல்லை
எண்டா நல்லா வேகமா ஓடிட்டு சீட்டில இருப்பம். அவசரத்துக்கு நிறுத்த முடியாது வேலில போய் மோதி விழுவம். முள்ளுக்கம்பி வேலி இல்லை என்டா கள்ளிச்சொடிப்பத்தைல விழுந்தா அவ்வளவுதான். இதுல நாய் துரத்தினா சொல்லவேண்டாம்.

வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு சைக்கிள் கடையில சின்னச்சைக்கிள் வாடைக்கு குடுப்பார்கள். ஒரு மணித்தியாலத்தி;ற்கு ஒரு ரூபாதான். ஆனா அதை எடுத்து ஓட்டுவது பெரிய விசயம். தனியாப்போனக் குடுக்க மாட்டாங்கள். அப்பாவை இதுக்காக கூட்டிட்டுப்போக வேண்டும்;. இரண்டு தடவைதான் ஓட்டியிருப்பன்.

பிறகு எங்கடை உறவினர் ஒருவர் வெளிநாடு போக முயற்சிச்சார். அவர் தன்னோட சைக்கிளை எனககுத்தந்தார்.
அது அவரொட அப்பா பயன்படுத்திய ராலி சைக்கிள். இரும்பு கலர்லதான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா காசு
சேத்து ஒவ்வொன்றா திருத்தினன். என்ட கஸ்ட காலம் அவர் அடிக்கடி கொழும்பு வைரக்கும் போட்டு திரும்பிடுவார். ஒவ்வோருக்காவும் வந்து வாங்கிட்டுப்போயிடுவார். இருந்தாலும் நான் மண் எண்ணையில கலந்து கறுப்புப்பெயிண்ட்
அடிச்சு, சீட் கவர் போட்டு, முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் கலர்ப்புூ போட்டு வைத்திருந்தன். முன்பக்க பாறுக்கு வயர் சுற்றி வடிவா இருந்தது. பிறகு அவர் ஒருமாதிரி வெளிநாடு போய்சேர அந்தச்சைக்கிள் என்ர கைக்கு முழுசா வந்து சேர்ந்துது.

அதுக்குப்பிறகு எப்பவும் அந்தச்சைக்கிள் கூட வரும். வீட்டுக்கையும் சைக்கிள் ஓடுறன் என்று அம்மா பேசுவா. அதை அலங்கரிச்சு துடைச்சுக்கழுவி அதோடைதான் வாழ்க்கை போச்சு. எத்தனையோ முறை இடம்பெயரேக்கையும் அதில தான் போவம். சிலவேளைகளில் அம்மாவை முன்னுக்கும் அக்காவைப் பின்னுக்கும் வைத்துக் கூட்டிட்டுப்போவன். எப்பவும் ஒரு காத்துப்;பம்பையும் எடுத்துட்டுப்போவம். டயர் தேஞ்சு போன காலத்தில ரெண்டு ரயர் போட்டு அதை ஓடியிருக்கிறன்.

நான் இந்தியாவிற்கு அகதியா போகேக்கை அதை வாங்கி ஓட அங்கை யாருமே இல்லை. எங்கடை வீட்டில
என்னோட அறையில விட்டுட்டு போயிட்டன். பதினஞ்சு வருசத்திற்குப்பிறகு அப்பாவும் அம்மாவும் வீட்டைப்பாக்கப்போனவை. டெலிபோன்ல கதைக்கேக்கை அம்;;;;மா சொன்னா செல் விழுந்து அந்தச்சைக்கிள் நசிஞ்சு
போயிருக்க வேண்டுமாம். பின்னால உடைஞ்ச சாமான்களோட அதுகும் கறல்கட்டிக்கிடக்;கிதாம்.

Print this item