Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 223 online users.
» 0 Member(s) | 221 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  அறிமுக வணக்கம்
Posted by: thenisai - 01-01-2006, 05:22 PM - Forum: அறிமுகம் - Replies (33)

நான் தேனிசை.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் அறிமுகமாவதில் இனிய மகிழ்ச்சி!

Print this item

  நில நடுக்க எதிர்வு கூறல்
Posted by: kurukaalapoovan - 01-01-2006, 04:35 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (19)

சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் புவியல் பகுதி ஆய்வாளர் 02 தை 2006 உலகின் பல பாகங்களில் பாரிய நிலநடுக்கம் பூமியதிர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்வு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி மேலதிகச் செய்தி தெரிந்தவர்கள் இணைக்கவும்.

Print this item

  உருவாகிவரும் மூன்றாவது சதி வலை
Posted by: வினித் - 01-01-2006, 04:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>உருவாகிவரும் மூன்றாவது சதி வலை</b>

கிரிஜா

"[b]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு சர்வதேசப் போராட்டம்" என பல பத்தாண்டுகளுக்கு முன்பே இவ்விடுதலையுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்த மார்க்சிய தேசியவாதிகள் சிலர் `எதிர்வு' கூறினர். அன்று இதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வழி நடத்துதலின் கீழ் தமிழ் தேசம் இதன் அர்த்தத்தை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது.

தேச விடுதலைப் போராட்டம் கருநிலையிலிருந்த போது மக்கள் உட்பட போராட்ட அமைப்புகள் இந்தியாவை முழுமையாக நம்பினர். தமிழீழத்தை மீட்கவும் தேசத்தை மீள் நிர்மாணம் செய்யவும் இந்தியா பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கை ஆழமாகக் காணப்பட்டது. இதை நம்பி `பெரிய' இயக்கங்கள் அனைத்துமே இந்தியாவின் கால்களில் சரணடைந்தன. எண்ணிக்கை ரீதியாக சிறிதாகவும் போர்க் குணாம்சத்தில் திடமாகவும் இருந்த புலிகள், "அரசியல் இல்லாதவர்கள்" என சக அமைப்புகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்த புலிகள் இந்தியாவின் உதவிகளைப் பெற்றாலும் அரசியல் விழிப்புடன் இருந்ததால் இந்தியாவின் நகர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதனால் தான் பலவந்தமாக தமிழீழத்தின் மீது திணிக்கப்பட்ட இந்திய-சிங்கள உடன்படிக்கையின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவும் ஆக்கிரமிப்புப் படைகளை மண்ணிலிருந்து துரத்தியடிக்கவும் முடிந்தது.

பிராந்திய வல்லாதிக்கத்துக் கெதிரான மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் அனுபவத்தால் புலிகளின் சர்வதேச அரசியல் கண்ணோட்டம் புதிய வளர்ச்சியை கண்டது. அது மாத்திரமல்ல, உலகெங்கும் புலிகள் உருவாக்கியிருக்கும் வலைப் பின்னல்கள் உலக ஏகாதிபத்தியத்தினதும், சர்வதேச சமூகத்தினதும், உலக நாடுகளினதும் அரசியல் பண்பைப் புரிந்து கொண்டு ஆழமான சர்வதேச அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதில் புலிகளுக்கு உதவி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆனையிறவு படைத்தள தகர்ப்புடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் அரங்குக்கு வருகின்றன. இந்த இரண்டாவது கட்ட சர்வதேச உறவை தமக்கு சாதகமாக திருப்புவதில் புலிகள் கடினமாக உழைத்தாலும் எந்த நாட்டிடமும் ஏமாறவில்லை. மாவீரர் தின உரை அதை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் புலிகளை அரவணைத்து பணிய வைக்க திட்டமிட்ட இணைத் தலைமை நாடுகள் தற்போது பயணத் தடை, விமர்சனங்கள், கண்டனங்கள் மூலம் அழுத்தங்களை ஏற்படுத்தி பணிய வைக்க முயல்கின்றன.

எனினும், தேசிய விடுதலையின் சுயாதீனத்தைக் காப்பதில் உறுதியுடன் செயற்படும் புலிகள் சர்வதேச அழுத்தங்களைக் கடந்து தேச அரசியலை முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் மூன்றாவது கட்ட ஆக்கிரமிப்பு வலைப் பின்னலொன்று பின்னப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. தற்போதைய இணைத் தலைமை நாடுகளையும் இந்தியாவையும் உள்ளடக்கி ஒரு கூட்டு உருவாகும் சாத்தியம் அதிகமாய்த் தென்படுகிறது. இந்தியா, இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருக்கும் வரையில் அதன் பிராந்திய அரசியல் ஆதிக்கம் முழுமை பெறாது. தனது அரசியல், பொருளாதார,இராணுவ நலன்களை இந்து சமுத்திர பிராந்தியத்தில் மீளப் புனரமைத்திட வேண்டுமானால், இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து தனக்குரிய வகிபாகத்தை ஆற்றிட வேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டுள்ளது.

இணைத் தலைமை நாடுகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் மீது உளவியல் போர் தொடுப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக அவை இந்தியாவைக் காண்கின்றன. இந்தியாவைப் பயன்படுத்தி சில காய் நகர்த்தல்களை அவை செய்ய முனையலாம். அதனால் இந்த நாடுகள் இந்தியாவை தமது கூட்டுக்குள் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டலாம்.

இந்நிலையில் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய ஆதிக்க சக்திகளின் கண்டனங்கள் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் போட்டா போட்டி அரசியல், அதன் விளைவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை, தமிழ் மக்களுக்கு விரைவில் ஏற்படலாம். மறுபுறம் உள்நாட்டில் அதிகரித்து வரும் அரச பயங்கரவாதம்.

இந்தப் புறக்காரணிகள் யாவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தப் போவதில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுயாதீனத் தன்மை மேலும் புடம் போடப்பட்டு வலுப்பெறும். தமிழ் மக்கள் தமது சொந்தக் கால்களால் தமது வரலாற்றை எழுதுவார்கள்
நன்றி:தினக்குரல்

Print this item

  தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள்
Posted by: வினித் - 01-01-2006, 03:00 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (93)

தினமும் ஒரு பதிவு

<b>வாகனங்களில் சிங்கள சிறீ பொறிக்கப்பட்ட நாள்.(1958)</b>

<b>இனைந்திருந்த வடகிழக்கு தமிழர் மாகாணம் பிரிக்கப்பட்ட நாள்.(01.01.1883)</b>



கியூபா, கெயிற்றி, சூடான் சுதந்திர தினம்.

நன்றி: <b>தமிழ்த்தாய் நாட்காட்டி</b>

Print this item

  விடுதலைக்கான யுத்தம்
Posted by: kuloth - 01-01-2006, 02:48 PM - Forum: தமிழீழம் - Replies (3)

எமது விடுதலைக்கான கடைசி யுத்தம் வேண்டுமா..இந்தயுத்தம் தான் தமிழினத்தின் வாழ்வா சாவா என்பதை நிர்னயிக்கும். இந்த ஆண்டுகட்டாயம் எமக்கு நாடு கிடைக்கும் எனநாம் நம்புவோம். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். ஈழத்தின் விடுதலைக்கு தொடர்ந்தும் கை கொடுப்போம்

Print this item

  வா..வா!!
Posted by: Rasikai - 01-01-2006, 02:24 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

<b>வா..வா!!
-----------------------

<img src='http://www.squaredanceland.de/images/happynewyear.jpg' border='0' alt='user posted image'>

கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே
2005 போய்வா தோழா!

சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை
கொன்று தொலைத்தாய்!

என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி?
இருந்தாலும் போய்வா!

2006 ஏ வா வா !
வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா?

வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை..
பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா?

கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை
எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!

வாய் மூடிபோன பீரங்கி வாய்களை
ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்!

அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும்
எரித்திடாதே.. அணைத்திடாதே!

தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்..
ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்!

தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்?

போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த
மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்!

சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..
செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..
வா வா 2006 ஆண்டே!!</b>

Print this item

  அர்த்தமுள்ள காதல்.......
Posted by: jcdinesh - 01-01-2006, 10:07 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

அர்த்தமுள்ள காதல்.......

பெண்ணே..........

நீ... என் இதயத்தில்
இல்லாமல் போயிருந்தால்
உறக்கம் என் உயிரை
உருவிக்கொண்டு போயிருக்கும்......

நீ....என் உணர்வில்
உதிக்காது போயிருந்தால்
காற்று என் உடலை
கரைத்துக் கொண்டு போயிருக்கும்....

நீ.... என்னோடு
வாழாமல் போனால்
நான் வாழ்வதில் அர்த்தமே
யாருக்கும் தெரியாமல் போய் விடும்........


>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<

Print this item

  பேசிக் கொள்வதே &quot;பாட்டு பாஷை'யில் தான்
Posted by: Vaanampaadi - 01-01-2006, 09:33 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இவர்கள் பேசிக் கொள்வதே "பாட்டு பாஷை'யில் தான் : அட்ரஸ் கேட்டாலும், பாடித்தான் சொல்றாங்க
ஷில்லாங்: இந்த கிராம மக்கள், மூச்சு விட்டாலே, பாட்டு தான் வருகிறது. யார், எது பேசினாலும், "பாட்டு பாஷை' தான். யாராவது முகவரி கேட்டாலும், பாட்டு பாடியே விவரம் சொல்கின்றனர். பிறந்தது முதல் இறக்கும் நொடி வரை, இவர்கள் வாழ்நாளில், பாட்டுப் பாடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.

நமக்கு தெரியாமல், எங்கோ ஒரு அமைதியான கிராமமே, காலை விழித்தெழுவது முதல் துõங்குவது வரை பாடுகிறது என்றால், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வது போலத்தான் உள்ளது இல்லையா? இந்த "பாட்டு' கிராமம், வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் காஷி மலையில், கிழக்குப்பகுதியில், கடார் ஷ்னாங் என்ற இடத்தில் உள்ள "காங்தாங்' என்ற அமைதியான கிராமம் தான் பாட்டு கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மலை கிராமத்துக்கு போவது சுலபமே அல்ல. சாதாரணமாக நடந்து போய்விட முடியாது.

செங்குத்தான மலைப்பாறைகளின் இடுக்குகளில் நுழைந்து, செல்ல வேண்டும். இங்கு மொத்த கிராமவாசிகள் எண்ணிக்கையே 500 தான். மலை கிராமத்தில் நுழைந்ததுமே, முகவரி கேட்டால், அசந்து விடுவீர்கள். பாடிக்கொண்டே இருப்பர். "என்னது முகவரி தானே கேட்டோம், அதற்கு இப்படியா பாடுவது?' என்று நினைத்து, மீண்டும் குறிப்பிட்டவர் பெயரை சொல்லி கேட்டால், மீண்டும் பாட்டு தான் வரும்.

சரி, இன்னொருவரை கேட்கலாம் என்று தேடிப்போய் கேட்டால், அவரும் பாடுவார். "என்னடா சாமி இது, ஏதோ சங்கீத வித்வான்கள் பிறந்த ஊர் போலிருக்கிறதே என்று நினைப்போம். ஆனால், காலம்காலமாக இந்த கிராமத்தில் "பாட்டு பாஷை' தான் பேச்சாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல், முதியவர்கள் வரை, பாட்டுப் பாடியபடி தான் பேசிக் கொள்கின்றனர்.

இரண்டு பேருக்கு இடையே கோபம் வந்தாலும், பாட்டில் தான் மோதிக் கொள்வர்களாம். குழந்தையிடம் பாடலில் பேசிப்பேசி, அதற்கு தொற்றிக் கொள்கிறது. அது வயதாக வயதாக, இந்த "பாட்டு பாஷை' அதிகமாகி விடுகிறது. கிராமத்தில் யாரிடம் எது கேட்டாலும், பாட்டு பாஷை யில் பதில்கள் வரும் என்றால், யார் தான் பாடாமல் இருக்க முடியும்.

"இதெல்லாம் எங்களுக்கு எப்போது வந்தது என்பதே தெரியவில்லை. என் மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த தாத்தா, பாட்டி பாடித்தான், எதையும் பேசுவர் என்று சொல்லிக்கேட்டு இருக்கிறேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே, பாட்டுபாடியே பழக்கப்படுத்துவதால், யாருக்கும் இந்த பாட்டு பாஷை பெரிய கஷ்டமாக இல்லை. எங்களில் சிலர் அழகாக பாடுவர். அவர்கள் பேசுவதை, அதான் பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்' என்கிறார் கிராம பஞ்சாயத்து தலைவர் கைர்டெய்டு மஜாவ்.

"எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்களின் பெயர்கள், இகைருவிகளின் பெயர்களை ஒட்டித்தான் இருக்கும். சிலர் தான் இப்போதுள்ள தலைமுறையினர், பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். எந்த கூட்டத்தில் இருந்தாலும், எங்கள் கிராமத்து மக்களை எளிதாக அடையாளம் காணமுடியும். பாட்டுப்பாடி பேசுவதை பலரும் இன்றும் அதிசயமாக பார்க்கின்றனர்' என்று கிராம சபை செயலர் கமிங்கோம் பினாங்க் கூறினார்.

என்ன இப்படியும் கூட இந்தியாவில் ஒரு ஓரத்தில் மக்கள் இருக்கின்றனரா? உச்சகட்ட வியப்பு தான் இல்லையா?

Dinamalar

Print this item

  தமிழீழம் வாழ்க: வாக்கி டாக்கி பரபரப்பு
Posted by: Vaanampaadi - 01-01-2006, 09:27 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

'தமிழ் ஈழம் வாழ்க': போலீஸ் 'வாக்கி டாக்கி' ஏற்படுத்திய பரபரப்பு
ஜனவரி 01, 2006

சென்னை:

போலீஸ் வாக்கி டாக்கியில் தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் ஒலித்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல், புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரின் வாக்கி டாக்கி ஒன்றிலிருந்து தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் கேட்டது. இதைக் கேட்டதும் ரயில்வே போலீஸார் பீதியடைந்தனர். பரபரப்பு ஏற்பட்டது.

இதே போன்ற கோஷம் சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின் வாக்கி டாக்கிகளில் கேட்டதாக தெரிகிறது. இதில் பேசியது யார் என்ற விவரம் போலீஸாருக்குத் தெரியவில்லை.

தமிழ்த் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த யாராவது இப்படிப் பேசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Thatstamil

Print this item

  ஊரெழுவில் இப்படிச் சோதனை
Posted by: Vaanampaadi - 01-01-2006, 08:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

வீட்டுக்குள் புகுந்து அறைகளை
கொத்திக் கிளறிய படையினர்!
ஊரெழுவில் இப்படிச் சோதனை
ஊரெழுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்கு மண்வெட்டி கள், பிக்கான்கள், அலவாங்குகளுடன் சென்ற படையினர் அறைகளுக்குள் புகுந்து கொத்திக்கிளறிச் சோதனையிட்டிருக்கின்றனர்.
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
வீட்டினுள் தேடுதல் நடத்தப்போவதாக வீட்டு உரிமை யாளரிடம் கூறிய படையினர், அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களின் கண்முன்னாலேயே சகல அறைகளையும் கொத்திக் கிளறி நாசப்படுத்தினர். வீட்டு முற்றத்தையும் பிக்கான்களால் உழுது பிரட்டி அசிங்கப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
அதற்குப் பிறகு கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த வீட்டுக்குள் மீண்டும் வந்த படையினர் அங்கிருந்த இளைஞர்கள் இருவரை மிரட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த கைத்தொலைபேசிகளைப் பறித்துச்சென்றனர் என்று கூறப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலீஸ் நிலையத்திலும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


uthayan

Print this item