Yarl Forum
ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு (/showthread.php?tid=1657)

Pages: 1 2 3


ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு - parisian - 01-02-2006

Please read this article.
http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html


- yarlpaadi - 01-02-2006

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு
இன்றைய ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இலங்கைப் பிரச்சனை குறித்து ஹிந்துவில் எழுதப்படும் தலையங்கங்கள் விமர்சனப் பார்வைக்கு கூட தகுதியற்ற ஒரே agenda கொண்டு எழுதப்படும் அலுப்பு தரும் விஷயம் என்பது தான் என் எண்ணம். ஆயினும் இந்தத் தலையங்கத்தை படிக்கும் பொழுது மாறி வரும் சில விஷயங்கள், குறிப்பாக இந்திய நிலைப்பாடு குறித்து ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ள கவலையும், அதனை மூடிமறைக்க ஒன்றுக்கும் உதவாத சில விஷயங்களை பெரிதுபடுத்தி பேசி இருப்பதும் நல்ல Humourக உள்ளது. இந்தத் தலையங்கத்தின் நோக்கம் தலைப்பில் தெளிவாக தெரிகிறது. LTTE is an anti-India force.

இந்தியா எங்கே இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து விடுமோ என்ற கவலை ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் Hindu is trying to make a frantic attempt to brand LTTE as an anti-India force.



மகிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதும், மாறாக இது வரையில் இல்லாத அளவு விடுதலைப் புலிகள் விஷயத்தில் இந்திய அரசு மொளனம் சாதித்ததும் "ஸ்ரீலங்கா ரத்னா" பட்டம் பெற்ற ஹிந்துவின் ஆசிரியருக்கு கவலையளித்துள்ளதாக தெரிகிறது.

ஹிந்துவுக்கு குறிப்பாக சில விஷயங்களில் கவலை ஏற்பட்டுள்ளது.

ஒன்று இலங்கை-இந்தியா கூட்டறிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களிடம் முறையிட்டப் பிறகும், அது குறித்து அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை.

ஹிந்து இது குறித்து கவலை அடைந்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.

Surprisingly, the joint statement is foggy about why the ceasefire is threatened. Instead of identifying the LTTE as the author of the escalating violence, it points to "the need for the strict observance of the ceasefire and immediate resumption of talks aimed at strengthening the ceasefire." Is the non-condemnation of the LTTE deliberate - a consequence of pro-Eelam parties in Tamil Nadu, two of which are constituents of the United Progressive Alliance, applying pressure by ratcheting up the noise against the Rajapakse Government?

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பாலியல் பாலத்காரமும், கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் நிழல் யுத்தமும் ஹிந்துவுக்கு டிசம்பர் "Fog"ல் சரியாக தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கும், இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் அது குறித்து தெரிந்துள்ளது. எனவே தான் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுவாக இரு தரப்புமே போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த உண்மை. இதைத் தான் இந்தியாவும் செய்துள்ளது. அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு தன்னுடைய Credibilityஐ உலக நாடுகள் மத்தியில் கேலி பொருளாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. எக்காரணத்தைப் பிடித்தாவது புலிகளை எதிர்த்தே தீர வேண்டிய ஹிந்துவின் Agenda இந்திய அரசுக்கு இப்பொழுது இல்லாமல் போனது மகிழ்ச்சியை அளிக்கிறது.

மற்றொன்று யாருமே எதிர்பாராதது - ஜெயலலிதா மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதா இது போன்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் இல்லாதபட்சத்தில் அவர் இம் மாதிரியான நிலையினை மேற்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் சிங்கள பேரினவாத தலைவராக, தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் ஒரு தலைவராக மகிந்தா பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவின் நிலையே இவ்வாறு இருக்கும் பொழுது மைய அரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவின் நிலை இந்திய அரசுக்கு புரிந்திருக்கும். மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க கூடாது என்று தொடர்ந்து பேசி வருகின்றன. இதனால் இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been unwaveringly clear about since May 21, 1991 என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.

மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் இரண்டு நோக்கங்களை முக்கியமாக கொண்டு இருந்தது

ஒன்று இந்தியாவை அணுசரணை செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவது. ஏற்கனவே நார்வே முக்கிய அணுசரணையாளராக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய "co-chair's" ஒன்றை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவையும் சேர்ப்பது ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.

மற்றொன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்த அத்துமீறல்கள் குறித்து ஒரு கண்டனத்தையாவது பெற்று இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.

ராஜபக்ஷ இந்த இரண்டு நோக்கங்களிலுமே வெற்றி பெறவில்லை.

இந்தியா அவரது முதல் நோக்கத்தை கண்டுகொள்ள வில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு ஒவ்வொரு முறையும் காவடி எடுக்கும் பொழுதெல்லாம், குறைந்தபட்சம் தனது கவலையையாவது இந்தியா வெளிப்படுத்தும். ஆனால் இம் முறை அவ்வாறு கூட இல்லை.

இவ்வாறு ராஜபக்ஷவின் நோக்கம் நிறைவேறாத பொழுதும் ஹிந்து தேடிக் கண்டுபிடித்து சில காரணங்கள் கூறுவது, நல்ல ஜோக்.

Of particular significance are bilateral efforts to identify joint ventures for the development of the eastern Sri Lankan port city of Trincomalee, and its surrounding region, and the agreement for a joint venture power plant in the same district. These projects will intensify India-Sri Lanka economic co-operation in a region the LTTE covets

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார உடன்படிக்கை என்பதை தவிர மேற்கண்ட உடன்படிக்கையில் எந்த முக்கியமான அம்சமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒன்றும் புதிய உடன்படிக்கை இல்லை. திருகோணமலையில் இந்தியா-இலங்கை இடையே ஏற்கனவே சில உடன்படிக்கைகள் உள்ளன. அப் பகுதியில் இருக்க கூடிய வாய்ப்புகளை கண்டறியக்கூடிய உடன்படிக்கை தானே தவிர செயல்படுத்தப்படும் என்பது நிச்சயமில்லை. செயல்படுத்த கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.

ரனிலிடம் இருந்து பாதுகாப்பு போன்ற சில பொறுப்புகளை சந்திரிகா பறித்த பொழுது அவர் கூறிய ஒரு காரணம் திருகோணமலையை சுற்றிலும் புலிகள் அரண் அமைத்துள்ளனர். போர் துவங்கும் பட்சத்தில் திருகோணமலை சில மணி நேரங்களில் புலிகள் வசம் சென்று விடும் என்பது தான். அவ்வாறான பகுதியில் இந்தியா எந்த முதலீட்டையும் செய்யாது.

ஆனால் ஹிந்து அதனை வேறு நோக்கில் பார்க்கிறது.

With this, India has forcefully made the point that it considers the North-East to be an integral part of Sri Lanka

"Forcefully" என்பது தான் கொஞ்சம் அதிகபட்சம்.

Hindu is desperate about the changing situation என்பதைத் தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் எப்பொழுதுமே புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்திய அரசியல் சூழ்நிலையும் கடந்த கால நிகழ்வுகளும் அதற்கு இடம் தராது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதும், நடுநிலைமையுடன் செயல்படுவதும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கை அரசுக்கு ஆதரவான கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து இந்தியா இம் முறை சற்றே விலகி இருப்பது, நடுநிலைமையான அணுகுமுறையின் துவக்கம் என்று நான் நினைக்கிறேன்.

நன்றி......

http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html


- Luckyluke - 01-03-2006

இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்.... இந்தியாவின் 'பிராண்ட் இமேஜ்" அது தான்... அதனால் தான் இந்தியா அணிசேரா நாடுகளுக்கு தலைமை வகிக்க முடிந்தது...


- rajathiraja - 01-03-2006

சரியாக சொன்னார் நண்பர் லக்கி லுக்.வாழ்த்துகள்


- வினித் - 01-03-2006

எழுதப்பட்டது: செவ்வாய் தை 03, 2006 8:00 am Post subject:

--------------------------------------------------------------------------------

இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்.... இந்தியாவின் 'பிராண்ட் இமேஜ்" அது தான்... அதனால் தான் இந்தியா அணிசேரா நாடுகளுக்கு தலைமை வகிக்க முடிந்தது...

எழுதப்பட்டது: செவ்வாய் தை 03, 2006 8:12 am Post subject:

--------------------------------------------------------------------------------

சரியாக சொன்னார் நண்பர் லக்கி லுக்.வாழ்த்துகள்


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckyluke - 01-03-2006

எமது கருத்துக்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் நண்பர் திரு வினித் அவர்களுக்கு நன்றி...


- Sriramanan - 01-03-2006

Quote:இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்....

இப்போது இந்தியா இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நடுநிலையாகச் செயற்படுகிறதா...? என்பது பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.


- rajathiraja - 01-03-2006

ஏதாவது உதாரணம் கூற முடியுமா?


- Luckyluke - 01-03-2006

Sriramanan Wrote:ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.

<b>புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததே.... அதைப்பற்றி கதைக்கிறீர்களா?</b>


- Birundan - 01-03-2006

Luckyluke Wrote:
Sriramanan Wrote:ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.

<b>புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததே.... அதைப்பற்றி கதைக்கிறீர்களா?</b>

அதுவும் ஒன்றுதான், பின் அதை தா என்று அடம்பிடித்து அடிவாங்கிகொண்டு போனதும் ஒன்றுதான், சிங்களத்துக்காக தமிழருடன் பொருதி அங்கவீனர்களாக தாய்நாடு திரும்பியதும் ஒருகாரணம், அதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ததும் ஒருகாரணம், ஒட்டுமொத்தமாக தனது சுயநலத்திற்காகத்தான் இந்தியா செயற்பட்டது ஒழிய, இதில் எங்கிருக்கய்யா நடுநிலைமை? :twisted:


- kurukaalapoovan - 01-03-2006

துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள். சென்னையை தளமாக கொண்டு இயங்கு ஹிந்துவின் நரசிம்மன் ராம் 2005 ஆண்டில் தலமை ஆசிரியர் என்ற தகமையில் இருந்து எடுத்த வாந்திகள் பற்றிய ஒரு சிறு ஆய்வு.
http://www.sangam.org/taraki/articles/2006...e_Ignoramus.php


- Luckyluke - 01-03-2006

kurukaalapoovan Wrote:துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள்.

ஆமாம்.... வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எல்லாம் ஈழத்தில் இருந்து தான் பிரிண்ட் ஆகி வெளிவருகிறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- rajathiraja - 01-03-2006

இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.


- Thala - 01-03-2006

rajathiraja Wrote:இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.

ஆகவே ஈழப்பிரச்சினையை நீங்கள் முக்கியமான இந்தியாவிற்கான பிரச்சினையாய் பாக்கிறீர்கள்....

அய்யா முதலில் காமடிபண்ணாமல் சர்வதேதச அரசியலையும் சேர்த்து பாருங்கள். இந்தியா இருக்கும் இடம் <b>கரணம் தப்பினால் மரணம்</b> எண்டு சர்வதேசமே உற்றுப்பார்க்கும் ஈழப்பிரச்சினையில்.... அவர்களால் கடுமைவாதி இராஜபக்சவுக்கு உதவி செய்ய முடியாது... செய்து பாருங்கள் பின்விளைவுகளை.... :wink:

அப்ப தினத்தந்தி தான் அதிகம் வாசகர் கொண்ட பத்திரிகை என்பது எப்பிடீங்க.. :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-03-2006

Luckyluke Wrote:
kurukaalapoovan Wrote:துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள்.

ஆமாம்.... வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எல்லாம் ஈழத்தில் இருந்து தான் பிரிண்ட் ஆகி வெளிவருகிறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஈழத்தவன் அறிவற்றவன் எண்ட உங்களின் நிலைப்பாடும், அவர்களின் திறனை அளவிட முடியாத உங்களின் திறன் இன்மைதான்.. ஈழப்பிரச்சினையில் உங்களால் ஒரு வல்லரசாய் நடந்து கொள்ள முடியாமைக்கு காரணம்...

ஈழத்தமிழ் அறிவாளிகள் கொல்லப் படுகிறார்கள் என்பதுகாக எல்லாரும் இறந்துவிட்டார்கள் எண்டு அர்த்தம் இல்லை....

முதலில் ஈழத்தவன் நாட்டில் என்ன நடக்கிறது எண்டு அறிந்து போசுங்கள்... இந்து ராம் மாதிரி நுணிப்புல் மேயாதீர்...


- rajathiraja - 01-03-2006

ஐயா தலை !! ஹிந்து ராம் ச்ரிலன்கா விருது வாங்கி கொண்டதில் எந்த தமிழ்னுக்கும் சந்தோசம் இல்லை. அது ஒரு மட்டமான செயல். ஆனால் அவர் பத்த்ரிகை இந்திய நாடு முழுதும் படிக்கும் ஒன்று.அதை மற்க்க வேண்டாம். விழயம் இல்லாமல் அது தேசிய பத்த்ரிக்கை ஆகாது.


- kurukaalapoovan - 01-03-2006

அந்த கட்டுரை(ஆய்வு)
-1- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல.

-2- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல.

-3- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை.

-4- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை.

<b>ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை.</b> :!:

அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் <b>ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும்.</b> :!:

இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் WallStreet Journal ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது.

இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும்.


- தூயவன் - 01-03-2006

rajathiraja Wrote:இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.

ஒ.. அது தான் சுனாமியில் தேசியத் தலைவருக்கு சோகம் நிகழ்ந்தது என்று எவரோ பீலா விட, கொட்டை எழுத்தில் தலையங்கமாகப் போட்டதோ??


- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-03-2006

rajathiraja Wrote:ஐயா தலை !! ஹிந்து ராம் ச்ரிலன்கா விருது வாங்கி கொண்டதில் எந்த தமிழ்னுக்கும் சந்தோசம் இல்லை. அது ஒரு மட்டமான செயல். ஆனால் அவர் பத்த்ரிகை இந்திய நாடு முழுதும் படிக்கும் ஒன்று.அதை மற்க்க வேண்டாம். விழயம் இல்லாமல் அது தேசிய பத்த்ரிக்கை ஆகாது.




²ý¼¡ «õÀ¢ ! §¿¡ìÌ ¦¾Ã¢Ô§Á¡ þóÐ Àò¾¢Ã¢ì¨¸ÈÐ §¾º¢Â Àò¾¢Ã¢ì¨¸ þøÄ¼¡ ! ¿õÁÅ¡ Àò¾¢Ã¢ì¨¸ ¿õÁÅ¡ ìÌ ²Ðõ À¢ÃÉÉ¡ «í¸ þÕìÌÈ Ã¡õ íÈ ¿õÁ¡òÐ ¨ÀÂý ¯¼§É §ÀɡбÎòÐñÎ §¸¡ÀÁ¡ ²Ø¾ ¯ð¸¡÷óÐÎÅ¡ý, þô§À¡ ¯¾¡Ã½òÐìÌ ´ýÛ ¦º¡ø¦Ä¡§Èý §¸ðÎ째¡ ,þó¾ ¿£º Àò¾¢Ã¢ì¨¸¸Ç¡ þÕ째¡ý¦É¡ ,«¾¡ý¼¡ «õÀ¢ þó¾ ¾¢É¾ó¾¢,¾¢É¸Ãý þÅ¡ûÄ¡õ ¦ºö¾¢ Áðξ¡ý §À¡ÎÅ¡,«Å¡ÙìÌ «ÐìÌ Áðξ¡ñ¼¡ «È¢×,¬É¡ ¿õÁÅ¡ ±ýÉ ÀýÛÅ¡ ¦¾Ã¢Ô§Á¡ ¾¨ÄÂí¸õ¸¢È §À÷Ä, ¿õÁÅ¡ Ä¡õ ±ýÉ ¿¢É츢ȡ¦Ç¡ «¾ «ó¾ «õÀ¢ ±Ø¾¢ÎÅ¡ý,þРŨà «ôÀÊ ¿¢¨É째§ÄÉ¡ þóÐÄ ±ýÉ ÅÕ§¾¡ «Ð¾¡ý ¾¡ñ¼¡ ¿õÁ ¿¢¨ÄôÀ¡Î.Òâԧ¾¡.þô§À¡ þó¾ º¢§Ä¡ý À¢ÃÉ ±ÎòÐ째¡ ¿õÁ ¨ÀÂý áõ ±ÐìÌ ¦Ã¡õ§À¡ ¬÷ÅÁ¡ þÕ측ý ¦¾Ã¢Ô§Á¡, «¾ À¡÷òÐðÎ
þí¸ þÕì¸ÈиÙõ ±í¸ÙìÌõ ¾É¢Â¡ö ¿¡Î §ÅÛõ Á¡Î §ÅÛõ §¸ð¼ÐÛ ¨Å¢ ,¿õÁ ¦À¡ÆôÒ ¿¡È¢Îõ¼¡ «¾¡ý «Åý ¦Ã¡õÀ À¢ÊÅ¡¾Á¡ «×í¸Ç ±¾¢÷òÐ ±ØÐÈ¡ý,

þô§À¡ º¡¾Ã½Á¡ ÌôÀý,ÍôÀý í¸¢È §À÷Ä Áò¾ Àò¾¢Ã¢ì¨¸ûÄ ,þó¾ Á¡¾¢Ã¢ ±í¸ ¦¾Õ×Ä ¾ñ½¢ ÅÃÄ,¨Äð ±Ã¢ÂÄýÛ ¿£ ±ØÐÉ¡ Á¾¢ôÀ¢Õ측Ð,«Ð§Å þóÐÄ letter to the editer À̾¢Ä ±í¸ ¸¡ÄÉ¢Ä þý þýÉ À¢ÃÉýÛ ±Ø¾¢ ¯ý ¦ÀÂÕìÌ «ÎòÐ ´Õ ³Â§Ã¡,þøÄ º¡Šò¾¢§Â¡ §º÷òÐñ§¼ýÛ ¨Å¢ ¸¡¨ÄÄ Ó¾ §ÅÄ «ó¾ «¾¢¸¡Ã¢Ä¡õ ´ÊÅóÐ À¡÷ôÀ¡í¸¼¡.

±ýÉ «ó¾ áÁº¡Á¢(«¾¡ñ¼ «ó¾ ¦Àâ¡÷) ¬ð¸ÙìÌ ÁðÎõ ¿õÁ º¡Âõ ¦¾Ã¢Ôõ,


- Luckyluke - 01-04-2006

இந்து ராமுக்கு வைகோவின் மதிமுக நிகழ்ச்சிகளில் மரியாதை வழங்கப்படுவதின் ரகசியம் என்ன?

உதாரணத்துக்கு நேற்றைய மதிமுகவின் ரத்ததான பிரிவு நிகழ்ச்சியில் கூட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாரே?