| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 338 online users. » 0 Member(s) | 335 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,300
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி |
|
Posted by: கீதா - 01-02-2006, 08:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி
திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.
தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் </span>
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| உளவு நிறுவனங்கள் |
|
Posted by: வினித் - 01-02-2006, 08:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>உளவு நிறுவனங்கள்</b>
உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.
பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.
இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.
உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.
அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.
ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.
தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.
ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.
ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.
நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.
ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.
ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.
ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.
இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட
நன்றி: <b>தமிழ் சசி</b>
http://thamizhsasi.blogspot.com/2005/12/bl...og-post_29.html
|
|
|
| ஒளிக்கீற்று |
|
Posted by: iruvizhi - 01-02-2006, 08:10 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- No Replies
|
 |
<b>ஒளிக்கீற்று
ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம்.
குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
இப்படியான அரிய நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டும் தமிழ் தொலைக்காட்சி இணையத்தினை பெருமையோடு நேசித்து வாழ்த்துகின்றோம்.</b>
|
|
|
| ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? |
|
Posted by: Mathan - 01-02-2006, 08:08 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (14)
|
 |
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ?
பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான எரிவாயுவே குழாய்கள் மூலம் கிடைப்பதாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்யும் ரசிய எரிவாயு குழாய்களில் பெரும்பாலானவை உக்ரெய்ன் ஊடாகவே செல்கின்றன. இந்த குழாய்களில் இருந்து உக்ரெய்ன் எரிவாய்வை திருட ஆரம்பித்திருப்பதாலேயே ஐரோப்பிய விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா குற்றம் சாட்டியுள்ளது.
செய்தி மூலம்: பிபிசி இணையத்தளம்
மேலும் படிக்க http://news.bbc.co.uk/1/hi/world/europe/45...5726.stm[/size]
|
|
|
| இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி |
|
Posted by: வினித் - 01-02-2006, 07:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (56)
|
 |
<b>இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து</b>
திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி.
தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதிலும் மாற்றமில்லை, இலங்கைத் தமிழர்கள் எந்தத் துயரத்திற்கும் ஆட்படுத்தப்படக்கூடாது என்ற திமுகவின் கொள்கையிலும் மாற்றமில்லை என்றார் அவர்.
சில தினங்களுக்குமுன் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி, இலங்கையின் புதிய அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்தும், அந்நாட்டிற்கு ராணுவ உதவி அளிக்க்க்கூடாது எனக் கோரியும் தீர்மானம் இயற்றியது.
அக்கூட்டத்தில் திமுகவின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக, பாமக நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையிலேயே இன்றை செய்தியாளர் சந்திப்பில் கருணாநிதி ராணுவ உதவி தவறு என்ற ரீதியில் பேசியிருக்கிறார். பொதுவாகவே திமுக இலங்கைப்பிரச்சினையில் தீவிரமாகப் பேசுவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தாலும்கூட, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் விஷயங்களில், தாங்கள் ஒன்றும் அவர்கள் நலனுக்கு எதிரானவர்களல்ல என்பதை தெளிவுபடுத்தியிருக்ககிறது என்பதை நாம் இங்கே நோக்கலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட அதிபர் ராஜபக்சேயை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார். முதலில் அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயலலிதாவை சந்திப்பதாகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று அவரது வருகை ரத்தானது. காரணம் தெரிவிக்கப்படவில்லை.
சட்டமனறத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தனக்கு எதிராக பயன்படுத்தவேண்டாம் என நினைத்தே முதல்வர் ஜெயலலிதா அதிபர் ராஜபக்சவை இங்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருப்பார் என்கின்றனர் நோக்கர்கள்.
¿ýÈ¢:À¢À¢º¢தமிழோசை
|
|
|
| இராணுவத்தினர் மீது 2 பெண்கள் பாலியல் வல்லுறவு முறைப்பாடு |
|
Posted by: வினித் - 01-02-2006, 06:22 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
<b>Two Vadamaradchy women complain of sexual assault by SLA</b>
[TamilNet, January 02, 2006 15:50 GMT]
Two women from Malusanthi, a village located 3 km southeast of Point Pedro town on the Jaffna Point-Pedro, road registered complaints with the Sri Lanka Human Rights Commision (SLHRC) offices in Jaffna Monday that they were sexually assaulted by Sri Lanka Army (SLA) troopers around midnight Sunday, sources in Jaffna said.
The SLA troopers had allegedly taken the man occupant of the house outside for questioning and in the meantime other soldiers inside the house had sexually assaulted the two women, the complaint said. When the women screamed to fight back the attackers the troopers threatened to kill the man, the complaint further said. The complainants requested the SLHRC to provide adequate saftey from future attacks.
Civil society sources in Jaffna allege that SLA troops are arresting increasing number of women during middle of the night for interrogation and are sexually assaulting them.
Number of complaints registered with the SLHRC has shown alarming increase in sexual assaults in the last several weeks, according to officials of the SLHRC.
http://www.tamilnet.com/
|
|
|
| 2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், ச |
|
Posted by: கீதா - 01-02-2006, 05:54 PM - Forum: சினிமா
- Replies (9)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது.
திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
சிவாஜிகணேசன் விருது நடிகர் சரத்குமாருக்கும், எம்ஜிஆர் விருது நடிகர் கார்த்திக்குக்கும், எவர் கிரீன் ஹீரோ விருது நடிகர் சத்யராஜூக்கும் வழங்கப்பட்டது.
விருதுகள் பெற்ற பிற கலைஞர்கள் விவரம்:
சிறந்த இயக்குநர் -பி. வாசு (சந்திரமுகி).
சிறந்த தயாரிப்பாளர் -ஏ.எம். ரத்னம் (சிவகாசி).
சிறந்த இசையமைப்பாளர் -வித்யாசாகர் (சந்திரமுகி).
சிறந்த ஒளிப்பதிவாளர் -பி.சி. ஸ்ரீராம் (கண்ட நாள் முதல்).
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது -ஜெய்சங்கர் (திருபாச்சி, சிவகாசி).
சிறந்த கலை இயக்குநர் -ஜே.கே. (தவமாய் தவமிருந்து).
சிறந்த பின்னணி பாடகர் -ஸ்ரீராம் பார்த்தசாரதி (சுட்டும் விழிச் சுடரே -கஜினி).
சிறந்த இயக்குநர் (சிறப்பு விருது) -சேரன் (தவமாய் தவமிருந்து).
சிறந்த குணச்சித்திர நடிகர் -விஜயகுமார் (சந்திரமுகி).
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் -பீட்டர் ஹெய்ன்.
</span>
http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&
|
|
|
| மதுவால் அழிந்த தமிழ் வரலாறு. |
|
Posted by: நர்மதா - 01-02-2006, 05:28 PM - Forum: புலம்
- Replies (26)
|
 |
தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும்.
யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல்இ மதம்இ சாதி ஆகியன நேரடி உயிர் கொல்லிகளாக மாற பெருந்தொகையான மக்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
இவர்களுடைய புலப்பெயர்வுக்கான காரணங்களை எல்லாம் பேசி காலத்தை அழித்துக் கொண்டிருக்க கண்ணுக்குத் தெரியாத அருவமாக மதுபானமும்இ தொடர் நாடகங்களும் மக்கள் வாழ்வை கன வேகத்தில் சூறையாடிவிட்டன. உலக வரலாற்றில் போரால் சீரழிந்த இனம்இ இயற்கை அனர்த்தத்தால் சீரழிந்த இனம் என்றுஇ சீரழிந்த ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருப்பார்கள். உலகில் மதுவால் அழிந்த சமுதாயம் எதுவெனத் தேடுவீர்களானால் அது தமிழினம்தான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். அந்த நிகழ்வுகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
காதல்இ வீரம் என்று நாம் புகழ்ந்து போற்றும் சங்ககால சமுதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து ஆரியர்களின் கையில் வீழ்ந்தமைக்கு தலைமைக் காரணம் மதுபானம்தான் என்கிறது தொல்காப்பியம். பொய்யும் வழுவும் தோன்றி பின் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப என்ற பாடல் மூலம் தொல்காப்பியரே இதை உறுதி செய்துள்ளார்.
மதுவினால் ஒழுக்கம் சீரழிந்து சமுதாயமே பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது ஐயர்கள் என்னும் ஆரியர்கள் மிக இலகுவாக அவர்களை அடிமைப்படுத்தினர். திருக்குறள்இ திரிகடுகம்இ ஆசாரக்கோவைஇ இன்னாநாற்பதுஇ இனியவை நாற்பது போன்ற நீதி நூல்களால் சமுதாயத்தை திருத்துவதற்கான அத்தனை பணிகளையும் பலர் செய்தனர்இ அவைகளால். சமுதாயம் ஓரளவு காப்பாற்றப்பட்டாலும் தமிழர்கள் என்ற சுயம் அழிந்து போனதை எந்த நீதி நூல்களாலுமே மீட்க முடியாது போய்விட்டது.
இதுபோல சோழர்காலத்திற்குப் பிறகு வந்த அன்னிய ஆட்சியான நாயக்கர் காலத்திலும் தமிழ் மக்கள் மிகப்பெரிய குடிகார இனமாக இருந்திருக்கிறார்கள். மதுவின் உளவியலால் அழிந்துஇ எதிர் மறையாக சிந்தித்து ஐரோப்பியர்களின் கைகளில் அடிமையாக விழுந்தனர். அதனால் நானூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.
இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்தைஇ தமிழருக்கான தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடிய சில மன்னர்கள் இருந்ததை மறுக்க இயலாது. எல்லோரையும்இ எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நாம் குறை கூற முடியாது. தீமைகளிடையே நன்மைகளும் இருப்பது போலவே இத்தகைய தன்மான முள்ள அரசர்களும் நம்மிடையே இருந்துள்ளனர். ஆனால் இலங்கையாகட்டும்இ தமிழகமாகட்டும் இரு இடங்களிலுமே இப்படியான மன்னர்களை இவர்களோடு இருந்தவர்களே காட்டிக் கொடுத்து தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தார்கள். காட்டிக் கொடுத்த அத்தனைபேரையும் மதுவுக்கு அடிமையாக்கியே எதிரிகள் காரியம் சாதித்தார்கள்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கன் சிங்களவனல்ல தமிழன்தான். சிறந்த கூரிய புத்தியுடையவனான இவன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தான். 15 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஐரோப்பியர் 18 ம் நூற்றாண்டுவரை கைப்பற்ற இயலாதிருந்த கண்டி இராட்சியத்தை கைப்பற்ற மதுபோதையால் மழுங்கிப் போன இவனுடைய மூளையும் ஒரு காரணம். மது போதை தலைக்கேறி தனது பிரதானி ஒருவனுடைய பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டி உரலில் போட்டு இடிக்கச் செய்யுமளவிற்கு இவனுடைய அறிவு மழுங்க மதுவே பிரதான காரணம்.
யாழ். குடாநாட்டை சூரியக்கதிர் மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. குடாநாடு சென்று சகல நிலமைகளையும் ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். மதுபானம் அங்கு அரசனாக கொலுவீற்றிருப்பதைக் காண்பீர்கள். இராணுவத்துடன் இணைந்து மதுபானத்தை எடுத்துச் செல்லும் ஈழத் தமிழரையும் அங்கு காண்பீர்கள். போதைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சிங்கள இராணுவம் கணிசமான வெற்றி பெற்றிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்படி போதையூட்டியவர்களை வைத்தே சகல தகவல்களையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதையும் அங்கு நடைபெறும் சம்பவங்களால் உணர்வீர்கள்.
எப்போதுமே அன்னியர்களின் ஆட்சிஇ நம்பிக்கை வரட்சி போன்றன மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்குகிறது. இன்றுள்ள தமிழ் மக்களிடையே எதிர் காலம் என்ன என்ற கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது யாருக்குமே கடினமானதுதான். பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாராகஇ தாய் நாட்டில் அமைதி கால் நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் இழுபட்டுப்போக அந்த விடையில்லாத வெற்றிடத்தில் மதுபானமே அமர்ந்து விடுகிறது. வெளி நாடுகளில் இருபது வருடங்களாக மாடாக உழைத்து கண்ட மிச்சம் என்ன என்ற கேள்விக்கு மன அமைதி தரும் பதில் கூற முடியாத நிலையில் இருக்கும் மக்களை மதுபானம் இலகுவாக அடிமை கொண்டுவிடுகிறது.
மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதே இனிப் பொருத்தமான வாதமாகும். மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். கலைகளினூடாகவும் ஊடகங்களினூடாகவும் இந்தக் காரியத்தை திட்டமிட்டு செய்ய வேண்டும். சமுதாயவியல் அறிஞர்கள் என்று எவரும் இல்லாத பேதைச் சமுதாயமாக நாம் தொடர்ந்தும் இருந்தால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது. இருந்தால் மதுபானத்தில் இருந்து அடுத்த கட்டமான போதை வஸ்த்துக்குள் இளைய தலைமுறை வீழவதைத் தடுக்க முடியாமல் போகும். சமூகத்தைக் காக்க வேண்டிய பணிகளில் யாரும் பொறுமை காத்தல் கூடாது. காரியங்களை செய்யாமல் காத்திருப்பது நன்மைக்குரிய செயல் அல்ல அதுதான் சுடுகாட்டுக்குப் போகும் வழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மது அருந்துவோர் கூடாதவர்கள் மது அருந்தாதவர் நல்லவர் என்ற கோணத்தில் இதை அணுகுதல் கூடாது. கடந்த காலங்களில் நீதி நூல்கள் விட்ட தவறே இங்குதான் இருக்கிறது. நல்லவர் கூடாதவர் என்றது ஒரு விடயம்இ மதுபானம் அருந்துவது அருந்தாமல் விடுவது என்பது இன்னொரு விடயம். இரண்டையும் இந்த விவகாரத்தில் ஒன்றாக்கி குழப்பம் விளைவித்ததுதான் சமயவாதிகள் விட்ட தவறு. மேலைநாட்டு அரசுகள் அப்படி ஒரு கோணத்தில் மதுபானம் தொடர்பான விடயங்களை கையாளவில்லை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்றால் இந்த நாட்டில் எல்லோருமே தீயவர்கள்தான். ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எல்லோருமே மதுக்கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதை வைத்து அந்தத் தலைவர்கள் எல்லோருமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது.
நீதி நூல்களிலும்இ சமயங்களிலும் வகுக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கோணத்தில் இதைப் பார்க்க முடியாது. கி.பி 300 ம் ஆண்டில் வாழ்ந்த மனிதனை மிரட்ட பாவித்த நரகலோகத்தையும்இ கன்மக் கோட்பாடுகளையும் இன்றைய மனிதனிடம் பேச முடியாது. அவைகளின் காலம் முடிவடைந்துவிட்டது. புதிய உலகில் மதுபானம் மனிதனுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அதை நம்மால் முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஆன்மீக hPதியாக இன்றைய மனிதனுக்கு சொல்ல இயலாது. ஆகவேதான் சட்டத்தினால் அது தடுக்கப்படுகிறது. போதை வஸ்த்து கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டத்தை சிங்கப்பூர் போன்ற நாடுகள் விமானத்தில் இருக்கும்போதே அறிவித்துவிடுகின்றன. அவர்களுடைய ஆன்மீகத்தால் முடியாது என்றபடியால்தான் அவர்கள் மரணதண்டனைக்கு வந்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் குறிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு கடைகளில் மதுபானம்இ சிகரட் போன்றவைகளை விற்க முடியாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடைகளில் வார இறுதியில் மதுபானம் விற்க தடை இருக்கிறது. மதுபானம் விற்பதற்கான விசேட அனுமதிகள் எல்லாம் சட்டங்களினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. உளவியல்இ பொருளாதாரம்இ எதிர்கால சமுதாய உருவாக்கம் போன்றவற்றுக்கு அமைவாக இந்த சட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
புலம் பெயர் தமிழ் மக்களும் இந்த சட்டவிதிகளுக்குள் வந்தாலும்இ அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ் சமுதாயத்திற்குரிய அளவில் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக இருக்கின்றன. இன்று தமிழர் நடாத்தும் சகல கொண்டாட்டங்களிலுமே மதுபானம் இருக்கிறது. திருமணம்இ பிறந்தநாள் போன்ற விழாக்களில் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. கூர்ந்து கவனித்துப்பார்த்தால் தமிழ் மக்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலுமே மதுபானம் மிகக் கச்சிதமாக நுழைந்து விடுகிறது. மத ஆசாரங்களுடன் கூடிய திருமண வீட்டில் சம்பெயின் உடைப்பது கூட இன்று தமிழ் கலாச்சாரமாகிவிட்டது. இது தமிழனின் வெற்றியல்ல தமிழனை மதுபானம் வென்றதற்கான அடையாளம்.
மற்றைய சமுதாயங்களை எடுத்துக் கொண்டால் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் பெருகியபடியே இருக்கின்றன. டேனிஸ் வெளிநாட்டு அமைச்சு உலகமெல்லாம் உள்ள தனது காரியாலயங்களில் புகைத்தலை முற்றாகத் தடை செய்துவிட்டது. புகையிரதங்களில் கூட புகைத்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும் என்ற உண்மையை இப்போது வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். போதையூட்டும் சகல விடயங்களுமே வெளி நாடுகளில் சட்டங்களால் இறுக்கப்பட்டு வருகின்றன.
இதைக் கூர்ந்து பார்த்து நாமும் புதிய சமுதாய சட்டங்களை உருவாக்குதல் வேண்டும். பிள்ளைகள்இ குடும்பங்கள் ஒன்று கூடும் கொண்டாட்டங்களில் இருந்து மது பானத்தை முற்றாக அகற்ற வேண்டும். அழைப்பிதழ் தரும்போதே மதுபானம் நீக்கப்பட்ட விழாஎன்பதை கீழே அச்சடிக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வெறுப்போ இதற்குக் காரணமல்ல சமுதாயத்தின் நெறி குறித்து நாம் சிந்திப்பதால் இப்படி செய்கிறோம் என்று உண்மையைப் புரிய வைத்தல் வேண்டும்.
மேலும் இது குறித்து பலமான கருத்தாடல்களை ஊடகங்களின் மூலம் வளர்க்க வேண்டும். இலங்கையை வாலகம்பா என்ற சிங்கள அரசனிடமிருந்து கைப்பற்றிய ஐந்து தமிழர்கள் மதுவில் மூழ்கி ஆட்சிக் கதிரைக்காக ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றுஇ கடைசியில் எஞ்சிய ஒரு தமிழன் சிங்கள அரசனின் வயதான மனைவி சோமாவதியை தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு ஓடிஇ சிங்களவரிடம் மறுபடியும் ஆட்சியை ஒப்படைத்தான். இந்தக் கதையை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை என்றும் ஆளும் இனம் என்ற ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி ஆளப்படும் இனமாக வைத்திருக்கக் காரணமாயிருப்பது மதுதான் என்பதை மறந்துவிடலாகாது.
மதுவை அருந்தும் எவரையும் இக்கட்டுரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. மது அருந்த வேண்டாமெனவும் புத்திசொல்ல வரவில்லை. மதுவால் அழிந்த தமிழ் வரலாற்றை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள் என்று மட்டும் தயவுடன் கேட்கிறது.
அலைகள்
|
|
|
| Five killed, two wounded in Trincomalee grenade attack |
|
Posted by: வினித் - 01-02-2006, 05:06 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
<b>Five killed, two wounded in Trincomalee grenade attack on civilians</b>
[TamilNet, January 02, 2006 14:58 GMT]
Unidentified men riding in a three-wheeler lobbed a grenade into a group of people killing five persons and wounding two, on the Dockyard Road in Trincomalee town, Monday night around 7:50 p.m. The victims are yet to be identified, Trincomalee Police said.
The victims were seated on a bench opposite the Dutch Bay sea beach along the Dockyard Road, sources said.
Further details are not available at the moment.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16721
|
|
|
| தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற் |
|
Posted by: நர்மதா - 01-02-2006, 04:42 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நிராயுத பாணிகளாகஇ வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும்இ வெட்டியும்இ குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன.
இலங்கையில் நடைபெற்ற இனப்போர் காரணமாக இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் பலாத்காரம் உட்பட வர்ணிக்க முடியாத கொடுமைகள் எல்லாம் அங்கு நடந்தேறிவிட்டன.
உலக சமுதாயமும்இ ஊடகங்களும் ஐ.நா மன்றும்இ ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பின்னர்தான் கூலிக்கு மாரடிப்பதற்காக பாசாங்கு செய்துள்ளன. வருமுன் காப்பதற்கு உலக சமுதாயம் என்றுமேஇ எங்குமே முன் வந்ததாக இல்லை. சர்வதேச சட்டங்களின்படி ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. இப்போது பொது மக்களுக்கு நடைபெறும் தற்பாதுகாப்புப் போர்ப்பயிற்சி சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதுதான்.
1958 இனக்கலவரம்இ பின் 1978இ 1983 என்று வரிசையாக நடைபெற்ற கலவரங்கள்இ வடமராட்சி தாக்குதல்இ கொக்கட்டிச் சோலைப் படுகொலைகள்இ சூரியக்கதிர் என்று அத்தனை படுகொலைகளையும் பட்டியலிட்டால் அங்கெல்லாம் மடிந்தது அப்பாவி பொதுமக்கள்தான். இவர்கள் வரலாற்றால் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொல்லப்பட்டார்கள் என்பதை நினைத்தால் உள்ளம் கொதிக்கும். பொது மக்களாக வாழ்ந்துஇ வெறுங்கைகளை காற்றில் வீசியபடி உயிர் காக்க அவர்களோடு ஓடியிருந்தால் அந்த வேதனையின் முழுப் பரிமாணத்தை நீங்களும் உணர்வீர்கள்.
பல மானிடப் படுகொலைகள் தமிழீழத்தில் நடைபெற்ற போது அந்த இரத்தமும் சதையும் சிதறிய இடத்தில் நின்று பொது மக்களின் குரல்கள் எவ்வாறு இருக்குமென்பதைக் கேட்டவர்களர் எவரும் இந்தப் பயிற்சியை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.
வல்வையில் அப்பாவிகளை பிடித்துச் சென்ற இராணுவம் 23 பேரை ஒரு சிறிய நூல் நிலையித்தில் அடைத்து வைத்துவிட்டு அதன் கீழ் பாரிய வெடிகுண்டை வைத்துத் தகர்த்தது. அந்த நேரம் மடிந்த அப்பாவிகளின் ஒருவருடைய உடலைக்கூட முழுமையாக எடுக்க முடியவில்லை. அதில் மடிந்த அத்தனைபேரும் போர்இ ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்றாடங்காய்ச்சிகள்.
அதற்குப் பத்தாவது நிமிடம் அருகில் இருந்த தீர்த்தக் கடற்கரையில் பன்னிரெண்டு பேரை வரிசையாக விட்டு சுட்டுத்தள்ளினார்கள். அந்தப் படத்தில் ஒரு சிறுவன் பின்புறத்தை உணர்த்தியபடி குப்புறக் கிடக்கிறான். இவன் சந்தையில் வாழைக்குலை தூக்கிக் கொடுத்து சீவியம் நடாத்திய ஊமைச் சிறுவன். தமிழர் சிங்களவர் என்ற இனப் போர் இருப்பதே இவனுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. அந்தச் சிறுவனின் அவல ஒலியைக் கேட்ட இன்னொரு நண்பர் மெல்ல எட்டிப்பார்த்தார்இ அவரையும் சுட்டார்கள்இ சூடு வாங்கியபடியே ஓடிச்சென்று கடலில் விழுந்து இறந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்கள்தான் ஆகியிருந்தது.
இந்த நிகழ்வுகளும்இ வெறியாட்டுக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அந்தப் பொறிக்குள் மாட்டுப்பட்ட மக்கள் அந்த நேரம் என்ன பேசினார்கள் என்பது அவர்களோடு மாட்டுப்பட்டவர்களுக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஐ.நா மன்றின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடுகளுக்குள் இருப்போருக்கு இதன் அரிச்சுவடியும் தெரியாது.
நம்மிடம் மட்டும் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நாமும் இவர்களை சுட்டு உயிர் தப்பியிருக்கலாமேஇ இந்த ஆபத்திலிருந்து தப்புவதற்கு ஒரு தற்பாதுகாப்பு பயிற்சியைக் கூட கற்றுக் கொள்ளாமல்; போனோமே? என்று புலம்பியவர் பலர். இந்த அவலத்திற்கு முதலில் விடைகாணாமல் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வட்டுக்கோட்டையில் போய் தமிழீழம் பிரகடனம் பண்ணி என்ன பயன் என்று பலர் அங்கலாய்த்தார்கள். அடுத்த கணம் துப்பாக்கி வெடியில் சிக்குண்டு இவ்வுலக வாழ்வை நீத்தவர் பலர். துள்ளித் திரியும் வயதில் என் துடிப்படக்கி பள்ளிக்கு அனுப்ப மறந்தாயே பாதகத்தி என்று தனது தாயரை பட்டினத்தார் திட்டியது போலத்தான் மக்கள் வேதனைப்பட்டு மடிந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல புகைகுழியில் கிடக்கும் ஒரு இலட்சம் அப்பாவிகளின் ஆதங்க ஒலி இது.
இப்படிக் கூறுவதால் மக்கள் போரிட்டு அழிய வேண்டுமென நினைப்பதாக தப்பான கோணத்தில் பிழை பிடிக்க முயலக் கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் முறை கட்டாயப் பயிற்சியாக இருந்து வருகிறது. ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமிழர் என்ற ஒரே காரணத்தால் தகுதி இருந்தும் இராணுவம்இ போலீஸ் உட்பட முப்படைகளிலும் சேர்க்கப்படாது விரட்டியடிக்கப் பட்டார்கள்.
எல்லாவற்றையும் விடுங்கள் முப்படைகளிலும் தமிழர்களை எத்தனை விழுக்காடு சேர்த்தீர்கள் என்பதை சிறீலங்கா அரசிடம் விசாரித்துப் பாருங்கள். ஒரு வீதம்கூட தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. பின்னாளில் வரக்கூடிய இனப்போரினைக் கணக்கிட்டுத்தான் அவ்வாறு செய்தார்கள் என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.
இந்த நிலையில் இனியும் மக்களை வெறுங்கையோடு கும்பிட்டு மன்றாடும் பேதைகளாக வைத்திருக்க முடியாது. இன ஆக்கிரமிப்பிற்கு எதிராக மட்டுமல்ல சமுதாயத்தில் ஒழுங்குஇ ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் இது தேவைப்படுகிறது. போதைவஸ்துஇ படுகொலைஇ கொள்ளைஇ சாதி மோதல்இ கோஸ்டி மோதல் போன்றன மக்களிடையே திட்டமிட்ட முறையில் பரவ விடப்பட்டுள்ளன. மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்கும் பணி நன்கு திட்டமிட்டு அரங்கேறியுள்ளது. ஒன்றுந் தெரியாத சாதாரண குடிமகன் அச்சமின்றி வாழ அங்கு யாதொரு வழியும் இல்லை.
இப்படியான அவலங்களைத் தடுக்க பெரும் பெரும் மக்கள் விழிப்புக் குழுக்கள் இப்போது அவசியம். ஒவ்வொரு ஊரையும் அவ்வவ் ஊர் மக்கள் இரவு பகலாக தவணை அடிப்படையில் காவல் புரிய வேண்டிய நிலை உள்ளது. அப்படி செய்யாவிட்டால் லெபனான் வீதிகளாக யாழ். குடாநாடு மாறும். பிற்பொக்கற் அடிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து திருடர்கள் கொண்டுவந்து யாழ் நகரத்தில் இறக்கிவிடப்பட்ட செய்திகள் கூட அங்கு வெளிவந்துள்ளன. நல்லு}ர்இ செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் இவ்வருடம் நடைபெற்ற திருட்டுக்கள் சொல்லும் செய்திகள் பல. இவை மேலும் பல மடங்கு பெருகிச் செல்வதைத் தடுக்க மக்கள் படை அவசியம்.
நாட்டில் யாதொரு அழிவுப் போருக்கும் அவசியமில்லாமல் முழு மக்களும் பொறிஸ் ஜெற்சின் தலைமையில் களமிறங்கிய போது ரஸ்யாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு தடுக்கப்பட்டது. அனைத்து இராணுவ முகாம்களையும் மக்கள் சூழ்ந்து மூடும் நிலமை இப்படி சில நாடுகளில் ஏற்பட்டபோது சர்வதேச சமுதாயம் தலைசாய்க்க வேண்டிய நிலை உருவானது. ரஸ்யாவில் நடந்தது போல கடைசித் துணிச்சல் வராவிட்டால் இன்றுள்ள தடைகளை ஈழத் தமிழினத்தால் தாண்ட முடியாது. இதை வவுனியாவில் இருந்து ஆரம்பித்த மக்கள் எழுச்சி நிகழ்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மக்கள் களமிறங்காமல் சர்வதேச சமுதாயத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை இப்போது தமிழ் மக்கள் உணருகிறார்கள் என்பதையே இந்தத் தற்காப்புப் போர்ப் பயிற்சிகள் எடுத்துரைக்கின்றன.
மக்கள் வெற்றிக்கு போர்ப்பயிற்சி முதல் கட்டமாக அவசியமாகிறது. அதைத் தொடர்ந்து அவர்களை நவீன சிந்தனை மயப்படுத்த வேண்டிய பணி இருக்கிறது. பொருளாதாரம்இ உள்ளுர் உற்பத்திஇ மருத்துவம்இ பாடசாலைகள் உட்பட சகல பொது இடங்களிலும் ஊழியர்கள் உருப்படியாக கடமை செய்யும்படி மக்கள் அவர்களை கண்காணித்தல்இ ஊழல்இ இலஞ்சம் போன்ற சமுதாயக் குறைபாடுகளை தகர்த்தல் போன்ற அடிப்படையில் அது தெளிவான நோக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது குறித்த விரிவான வேலைத்திட்ட வழிகாட்டி சகல தமிழீழ மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இப்போது ஐ.நா மன்று தன்னுடைய 60 வது அகவையைக் கொண்டாடுகிறது. ஐ.நாவில் பல அடிப்படை மாற்றங்கள் வேண்டுமென்று பலர் கூறியிருந்தனர். அதுபற்றி ஆரம்பத்தில் உரத்துப் பேசிய ஐ.நா மன்று இப்போது அதை அப்படியே அடக்கி வாசித்துவிட்டது. ஒரு நாட்டில் இரு இனங்கள் இருந்தால்இ அங்கு உள்நாட்டு இனப் போர் ஏற்பட்டால் ஐ.நா அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் மொழிய முதலில் ஒப்புக் கொண்ட ஐ.நா இப்போது கமுக்கமாக கைவிட்டுவிட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் நாடில்லாத பெரிய இனமாக இன்று தமிழினமே இருக்கிறது. ஐ.நாவின் 60 வது அகவையிலாவது நாடில்லாத இனங்களின் கருத்துக்களுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டுமென்று ஐ.நா கருதவில்லை. நாடுள்ள இனங்களுக்கு மட்டும் ஐ.நா பாதுகாவலராக இருக்கிறது என்ற பிரேரணையை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து முன் வைக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.நாவிலும்இ உலக வங்கியிலும் நடைபெறும் சங்கதிகளை அறியாது தமக்குள்ளேயே மோதுவது ஐ.நாவிற்கு தொடர்ந்து மிகப்பெரிய வாய்ப்பாகி வருகிறது. இது குறித்தும் மக்களிடையே பேசப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற்றுவிட்ட மிகப்பெரிய மானிடப் படுகொலைகளுக்கெல்லாம் ஏது தண்டனை? கண்ணீரில் கிடக்கும் மக்களின் கேள்விக்கு சர்வதேச சமுதாயம் தரும் பதில் எதுவுமே இல்லை என்றால் மக்கள் என்ன செய்வது. ஐ.நாவும்இ சர்வதேச சமுதாயமும் திருதராட்டிரன் போல இருப்பதால் தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாக்க தர்ம வியூகம் அமைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. ஒன்று சர்வதேச சமுதாயம் முழுமையாக மனம் வைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேணடும்இ இல்லை அவர்களாக தீர்க்க இடம் விட வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத மூன்றாவது இடத்தில் ஐ.நா மதில் மேல் பூனைபோல இருந்தால் அதை மதிக்க வேண்டிய கடமை ஈழத்தமிழினத்துக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
மக்களின் சக்தி எவ்வளவு என்பது இதுவரை எந்த ஆய்வுகளாலுமே கண்டறியப்படவில்லை. ஆனால் அதை எவ்வளவு பெரியதாகவும் மாற்ற முடியும். முயன்றால் விரும்பியளவு தூரம் அது இழுபட்டுச் செல்லும். அப்படியே வளர்ந்து உலகத்தையே வெல்லும் அஸ்திரமாகவும் அது மாறும். விளக்குக் கம்பத்திற்கு குறி வைக்கும் அம்பு விளக்குக் கம்பத்தைத்தான் தொடப் போராடும். ஆனால் நட்சத்திரங்களுக்குக் குறி வைத்தால் அந்த அம்பு விளக்குக் கம்பத்தை பல மடங்கு தாண்டிச் செல்லும். குறிகளே தூரத்தையும் மக்கள் சக்தியின் அளவையும் தீர்மானிக்கும்.
இதுவரை அப்பாவிகளாக மடிந்த மக்களின் மரணமெல்லாம் நமக்கு கண்ணீரல்லஇ பாடங்கள். விளக்குக் கம்பம் போன்ற சிங்கள தேசமும்இ தென்னாசியாவும் நமது இலக்கல்ல. முழு உலகத்தின் கவனத்தையும் நோக்கி நமது இலக்குகள் இருந்தால் இந்த உழுத்துப் போன மின்விளக்குக் கம்பங்களை நாம் தாண்டி விடலாம்.
உன்னை ஒரு தடவை ஏமாற்றினால் அது ஏமாற்றியவனுக்கு அவமானம் இரு தடவைகள் ஏமாற்றினால் அது உனக்கு அவமானம் என்பது பழமொழி. ஈழத் தமிழினம் இரண்டாவது தடவையும் அப்பாவித்தனமாக ஏமாற முடியாது. கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
அலைகள்
|
|
|
|