| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 137 online users. » 0 Member(s) | 135 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,230
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,290
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,629
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,054
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,024
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| பொங்கல் - சசிகலா - ஜெயலலிதா |
|
Posted by: Luckyluke - 01-04-2006, 08:39 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள தனது தனி பங்களாவில் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தேசித்துள்ளார்.
இப்போதெல்லாம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது பங்களாவில் பெரும்பாலும் தங்குவதில்லை. மாமல்லபுரத்திற்கு அருகே சிறுதாவூரில் பல ஏக்கர் பரப்பளவில் மிக மிக பிரமாண்டமாய் எழுப்பப்பட்டுள்ள பங்களாவில் தான் தங்குகிறார்.
[b]சசிகலா சகிதமாய் அடிக்கடி இங்கு போய்விடுகிறார்.
டிசம்பர் 27ம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இந்த பங்களாவிலேயே புத்தாண்டை ஜெயலலிதா கொண்டாடினார்.
தொடர்ந்து இதே வீட்டிலேயே தங்கியிருக்கும் ஜெயலலிதா, பொங்கல் பண்டிகையையும் இங்கேயே கொண்டாட முடிவு செய்துள்ளாராம். அடுத்த வாரம் ஹைதராபாத் செல்லும் ஜெயலலிதா சென்னை திரும்பி சிறுதாவூருக்குச் செல்கிறார்.
அங்கு பொங்கலைக் கொண்டாடிவிட்டு போயஸ் கார்டனுக்குத் திரும்புவார் எனத் தெரிகிறது.
கிராமிய முறைப்படி சூரியனுக்குப் பொங்கலிட்டு, படையலிட்டு கொண்டாட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த புதிய பங்களாவில் தொடர்ந்து ஏதாவது யாகம் நடந்தவண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
|
|
|
| 'புருடா விட்ட' சு.சுவாமிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் |
|
Posted by: Luckyluke - 01-04-2006, 08:35 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (10)
|
 |
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்களுக்காக வாதாடுகிறார் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சுவாமிக்கு எதிராக ஜேத்மலானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
ஜேத்மலானி பணம் வாங்கினார் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறு சுவாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆதாரம் எதையும் சுவாமி தாக்கல் செய்யவில்லை.
மேலும், தான் கூறிய கருத்தில் மாற்றம் இல்லை என்றும் இதற்காக வருத்தமோ, மன்னிப்போ கோர முடியாது என்றும் சுவாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தனது புகாருக்கான ஆதாரத்தை சுவாமி சமர்ப்பிக்காத காரணத்தால், ஜேத்மலானிக்கு சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
|
|
|
| நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் |
|
Posted by: Snegethy - 01-04-2006, 06:37 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (32)
|
 |
<b>நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்</b>
-சினேகிதி-
அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன்
படை சேர்ந்தாய் அண்ணாவே
பூநகரி மணலாறு கிளிநொச்சி
எனக்களம்பல கண்டாய்
இன்று நீயும் மாவீரன்
வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய்
உள்ளம் வலிக்கத்தான் செய்தது
உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா
அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று
யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்
அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்
அழுது ஆற்றாமை தீர்த்தால்
இராணுவ இராஜமரியாதையையும்
ஏற்கவேண்டி இருக்குமே
ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ
சிதறிப்போன சந்தில்
எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான்
உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று
இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும்
உங்கள் கனவுகள் நனவாகவில்லை
ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?
உங்கள் நாமகரணங்களை தகர்க்க
சில புல்லுருவிகள் - பணத்துக்காகப்
பதவிக்காகப் பல்லிளித்துப் பறந்தாலும்
பற்றுறுதி கொண்ட வேங்கைகளுக்குப்
பக்கபலமாகத் திரளும் பல வேர்களாய்
மாணவர் சக்தி உலகெங்கும் திரள்கிறதே
அதை நீங்கள் அறிவீர்களா?
அதனால்தான் சொல்கிறேன்
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"
(நான் எழுதிய முதல் கவிதை.2004 மாவீரர் நாளில் எழுதியது.)
|
|
|
| மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி |
|
Posted by: நர்மதா - 01-04-2006, 02:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி
இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:
தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக.
தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
தமிழ் பேசும் மக்கள் மீதான உயிர் வாழ்தலுக்கான தகுதி மறுப்பு என்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் குறிப்பாக மகிந்த ராஜபக்சஇ சிங்களக் குடியரசின் தலைவரான பின்னர் அதி தீவிரம் பெற்றுள்ளது.
சுருக்கமாக வெளிப்படுத்துவதானால் இலங்கைத் தீவு முழுமையும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மரணத்திற்குள்ளும் மரண பீதிக்குள்ளும் தினம்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.
புரிந்துணர்வு உடன்பாடு என்பது தற்பொழுது பெயரளவில் நடைமுறையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்பாடு என்பது சிங்கள அரசால் சாகடிக்கப்பட்ட வெற்று ஆவணமாகவே சமகாலத்தில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
சிங்கள அரசின் கட்டுப்பாட்டு பிராந்தியங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் படுகொலைகள்இ கொலை வெறித்தனங்கள்இ பாலியல் வல்லுறவுகள் ஆட்கடத்தல்கள்இ காணாமற் போதல்கள்இ சித்திரவதைகள்இ சுற்றிவளைப்புக்கள்இ தேடுதல்கள்இ அச்சுறுத்தல்கள்இ கைதுகள்இ குடிப்பெயர்வுகள் என வகை தொகையின்றி சிங்கள ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளன.
தமிழ் சிவில் மூகம் மீது சிங்களப் படைகள் சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுகின்றன. ஒவ்வொரு நாள் விடியற்பொழுதுகளும் பிணவாடை வீசவே மலர்கின்றது. மனித நேயத்தையே மரணிக்கச் செய்யும் சிங்கள நாசிவாதிகளின் ஆட்சி பிராந்தியமாக தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மலையகம்இ கொழும்பு போன்ற பிரதேங்கள் மாற்றம் பெற்றுள்ளன.
இங்கு தமிழர் மீது பிரகடனம் செய்யாத பாசிச வெறித்தனம் சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிங்கள அரசு தலைவரும் அவரது சகாக்களும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வரட்டுத்தனமும் வக்கிரபுத்தியும் கொண்ட பௌத்த சிங்கள அரசுகளின் புதிய வடிவமாகவே உள்ளனர்.
இத்தகைய கொடூர வல்லாட்சிக்கு உட்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் தாங்கள் நிச்சயம் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வகுத்திருந்த தெளிவான அரசியல் அணுகுமுறை எமது தாயக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இலட்சியங்களுடன் தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கும் தாங்களும் புரட்சித்தலைவர் அவர்கள் பின்பற்றிய கொள்கைகளை தீவிரமாக தாங்கள் நடைமுறைக்கு இட வேண்டும் என்று அவாவுகிறோம்.
அந்த வகையில் இலங்கை அரச தலைவர்இ பாரத தேசம் வந்திருந்த போது ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழக சகோதரர்களின் உணர்வு வெளிப்பாடாக இலங்கை அரச தலைவரை அனுசரிக்க தாங்கள் விரும்பவில்லை எனும் செய்தி அறிந்து நாங்கள் உணர்வு மேலிடப் பெற்றோம்.
பிரிக்க முடியாத இன உறவும் இனத்துவ அடையாளமும் உடைய தமிழீழமும் தமிழகமும் இணைந்தும் பிணைந்தும் செயல்புரிய வேண்டிய வரலாற்றின் தார்மிகப் பொறுப்பினை எமது விடுதலைக்காக தாய்த் தமிழகம் சார்பில் தாங்கள் ஆற்ற வேண்டும் என அன்புரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.
உலகின் ஈழதேசத்தின் வரைபடம் என்பது சிங்கள அரசாங்க இரத்தமும் வியர்வையும் வதையும் மிகுந்த ஒன்றாக வரையப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற பிராந்தியங்கள் பெற்றுள்ள சுய நிர்ணயம்இ தன்னாட்சிஇ இறைமை என்பவற்றைப் பெற்று நிம்மதியாக வாழ்வதே ஈழத்தேசத்தவரின் ஆழ்மன அரசியல் அபிலாசை ஆகும்.
இத்தகைய உயரிய இலட்சியத்தை அடைவதற்காக ஈழ மக்கள் எடுக்கும் எல்லா அரசியல் முயற்சிகளுக்கும் தாங்களும் தாய்த்தமிழகத்தின் சகோதரர்களும் அனைத்து தார்மீக ஆதரவினையும் தர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தங்கள் நல்லாட்சியும் ஈழ விடுதலைக்கான பணியும் சிறக்க எமது வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்
|
|
|
| கொழும்பு மாநகரின் பாதுகாப்பு |
|
Posted by: ஊமை - 01-04-2006, 12:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிஉயர் பட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். </b>
எனவே கொழும்பு மாநகரின் பாதுகாப்பு குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் நோக்கம் எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை முன்னிட்டு எந்நேரமும் விழிப்புடன் உள்ளதாகவும் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவ புலனாய்வுத் துறையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் பலவற்றில் விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் உடைகளிலும் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். இதேவேளை தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
பூச்சி(த) பகல் கனவு காணுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: |
|
Posted by: தூயவன் - 01-03-2006, 04:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்!</b>
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது.
மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் விடுத்த செய்திக்குறிப்பு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன் இன்று (03.01.2006) சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகிய வவுனியாஇ வலையன்கட்டு- முள்ளிக்குளம் வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவித் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தில் இவருடன் கூடப்பணித்த இவரது உதவியாளராகிய நாட்டுப்பற்றாளர் தேவராசா வினோதன் என்பவரும் வீரச்சாவடைந்துள்ளார்
தகவல்: புதினம்
|
|
|
| உண்மை உறவுகள்..! |
|
Posted by: kuruvikal - 01-03-2006, 04:00 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (5)
|
 |
சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள்.
"இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்து முடித்திருந்தாள்.
இரண்டு ஆண்களும் ஒரு தாதியும் அம்புலன்சில் வந்து இறங்கினார்கள். தாதியாக வந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்ன நடந்தது என்று கேட்க, கலா நடந்ததை சொல்ல முன்னர். " ஒரு சிறிய விபத்து" என ஆங்கிலத்தில் கூறிமுடித்தான் சரவணன். சரவணனைப் பார்க்க கலாவிற்கு பாவமாய் இருந்தது. ஏன் பொய் சொல்கிறான் என்னைக்காக்கவா இல்லை தன்னைக்காக்கவா? என்ற கேள்வி அவளிற்குள்.
போதையில் வந்து கலாவிடம் வாலாட்டிய சரவணனிடம் இருந்து தன்னக்காக்க நடந்த கெடுபிடியில்.. அவள் அவனைத் தள்ளியபோது அருகில் இருந்த நிலையுடன் அவன் மோதியதால் ஏற்பட்ட காயம். அதில் இருந்து தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உண்மை தெரிந்தால் பொலிஸ் கேசாக் கூட மாறலாம்.
பிரயாணத்தின் நடுவே "கலோ றூபி... நான் அண்ணி கதைக்கிறன். அண்ணாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறன், உனக்கு நாளைக்கு ஏதாவது சோதினை இருக்கோடா இல்லை எண்டா ஒருக்கா வா. இதில கை கில் யெனரல் கொஸ்பிரல் என்று தான் நினைக்கிறன். எதுக்கும் போன உடனை போன் பண்ணிறன். வண்டியைப் பாத்து ஓட்டு அவருக்கொண்டும் இல்லை சரியேடா.. பிறகு உன்னை தனிய வாட்டில பாக்க முடியாது " ... " சரி அண்ணி வந்திடிறன் பதட்டப்படாதேங்கோ இப்ப எனக்கு ஒரு சோதினையும் இல்லை சும்மா தான் நிக்கிறன். " அவன் ரூபன் சரவணனின் தம்பி படிப்பதற்காய் வந்தவன் விடுதி ஒன்றில் தங்கி நின்று படிக்கிறான்.
வைத்தியசாலைக்கு வந்த ரூபன் நேரடியாகச் சென்று அண்ணன் சரவணனை சந்தித்தான், அவனுடன் காரசாரமான வாக்குவாதம். " அம்புலன்ஸைக்' கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சு இனி வக்கிலக் கூப்பிட்டு கோட்டுப்படி ஏறுவது எப்பண்ண?.. பாவம் அண்ணி
உன்னை கலியாணம் செய்ததைவிட என்ன தம்புச்செய்தவா?.. உன்ர வாழ்க்கையையும் அழிச்சு அவவின்ர வாழ்க்கையையும் அழிச்சு என்னையும் அநாதையா நடுத்தெருவில நிக்கவிட்டிட்டியே.. இதை நினைச்சா உனக்கு வெட்கமாய் இல்லையே??" ஆத்திரம் தீரக்கத்தி விட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த கலாவிடம்.
" என்ன அண்ணி செம போடு போட்டிருக்கிறயள் போல கிடக்கு இழைப் போட்டிருக்கு... அண்ணா மன்னிப்பெல்லாம் கேக்கிறார்.. நீங்கள் பாவமாம் நிறைய கஸ்டப்படுத்திப் போட்டாராம்.. நினைக்க வெட்கமாயக்கிடக்காம்.. கதையைப்பாத்தா அடிபலமாய் விழுந்திட்டுது போல கிடக்கு?? இதை முதலிலையே செய்திருந்தால் நான் ஏன் கடைச்சாப்பாட்டில கிடந்து காயிறன். உங்களோடயே இருந்திருப்பன் எல்லே. அவற்ற தொல்லை தாங்காமல் தானே என்னை விடுதிக்கணுப்பினியள். போங்கண்ணி உங்களில எனக்கு கோவமும் தான்" மெல்ல சலுத்துக் கொண்டான் ரூபன்
"எட விசரா நான் ஒன்டும் செய்யேல்லை. உன்ர கொண்ணனோட சரியாக்கதைச்சு இரண்டு கிழமையாச்சு. தினமும் சரியான வெறி. நான் வேலையால வந்து என்ரபாடு.. பத்துப்பதினொன்டுக்குப் பிறகு வருவார். நான் சாப்பாட்டைப் போட்டா போய் படுத்திடுவார்.
நான் இல்லாட்டாப் போட்டுச் சாப்பிடுவார். இப்படி தினம் விளையாடிக் கொண்டிருந்தார். இண்டைக்கு வேலையால வந்து களைப்பில படுத்திட்டன் சமைக்க நேரம் போட்டு. அறக்க பறக்க என்டு சமைச்சுக் கொண்டிருக்கிறன் அடுப்படிக்க வந்து ஏதோ தனகிக்கொண்டு நிண்டார். பேசாமல் நான் என்ர பாட்டில வேலை செய்திட்டிருக்க. என்ன உம்.. என்றிருக்கிறாய் கதையன் என்டு அடிக்க வந்தார். தடுத்துப்போட்டு தள்ளிவிட்டன் நிலையில போய் மோதினார், அதில கிடந்த ஆணி ஒன்று கிழிச்சுப்போட்டுது, அது தான் கொண்டந்தனான்" என்று விரக்தியோடு சொல்லி முடித்தாள் .
"நல்ல வேலை செய்தியள் அண்ணி.. நீங்களும் பாவம் அண்ணாவை என்ன செய்யிறது எனக்குத் தெரியேல்லை. பாப்பம் இனிக் குடிக்கமாட்டன் என்றார்" ஏக்கத்தோடு கூறினான் ரூபன்.
கலா துடுக்கோடு சுத்தித்திருந்த ஒரு சிட்டு. இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று ஒரு நொடி கூட கற்பனை பண்ணியிருக்கமாட்டாள். உயர்தரம் முதலாவது முறை எழுதி பெறுபேறு காணாதென்று இரண்டாது தடவை தோற்றுவதற்காய் விண்ணப்பித்துவிட்டு படித்துக் கொண்டிருந்தவள். திடீரென கூடிவந்த திருமணம். லண்டன் மாப்பிளை சரவணன். 10ப்பொருத்தமும் பொருந்திச்சாம் நல்லாய் இருப்பாளாம். பெற்றார்களின் ஆவல் அவளை சம்மதிக்க வைத்தது.
லண்டன் குடியுரிமை பெற்ற சரவணன் அவளை இலங்கைக்கு வந்து மணம் முடித்து வர எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. திருமணமான புதிதில் சரவணன் இலங்கையில் இருந்த ஒரு சில வாரங்களில் இருவரைப்பற்றியும் பேசி தாங்களே அறிந்து கொண்ட நேரம். குடி புகை பற்றி கலா கேட்டபோது முன்பு பழக்கம் இருந்ததாகவும் பின்னர் நிறுத்திவிட்டதாகவும் சரவணன் கூறினான். நேர்மையாக உண்மையைக்கூறிய அவனை அவளிற்கு அந்தக்கணங்கள் மிகவும் பிடித்திருந்தது. " எல்லாம் அளவோட இருந்தால் நல்லது தானே... இதில மற்றவைக்கு இடையூறுகள் வராமல் இருக்கவேணும்.... நீங்கள் இப்ப விட்டிட்டியள் என்றதில மகிழ்ச்சி.." அவனைப் பாராட்டினாள்.
திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களின் பின்னர் சகல சம்பிரதாயங்களையும் சட்டரீதியாக முடித்து லண்டன் வந்து சேந்தாள் கலா.
புதிய நாடு, புதிய சூழல் வாழ்க்கை மாற்றம், பிடித்த கணவன் என்று இடர்களிற்குள்ளும் சிறிதுகாலம் ஆனந்தமாய் போனது வாழ்க்கை.
அவர்களது மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நிகழ்வாய் ஒரு அழைப்பு. திருமண விருந்து என்று இருவரையும் உறவினர்கள் அழைக்க அங்கு சென்ற சரவணனிற்கு மறுபடி அரங்கேற்றம். மெல்ல மெல்ல கைவிட்டவற்றை எல்லாம் கையில் எடுத்தான். ஆரம்ப நாட்களில் அளவோடு நின்றான். அதால் அவளிற்கு எந்தப்பிரச்சனைகளும் இல்லை. சிறு வருத்தம் இருந்தாலும் அதை அவள் சரி செய்து கொண்டாள்.
நாளாக நாளாக நிலமை முற்றியது சரவணன் மறுபடி மதுவிற்கு தன்னை முற்றாக அடிமையாக்கிக்கொண்டான். அது மட்டுமல்ல கலாவை தாக்கவும் செய்தான். முதன்முறை எதுவும் அறியாமல் அவனிடம் அடிவாங்கிய கலா என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றாள். அதன் பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டாள் அவனை எதிர்கொள்ளத் தயாரானாள். இப்படித்தான் ஒருநாள் முழுப்போதையில் வந்து அவளை அடிக்க முயன்றவனை தும்புத்தடியால் விளாசு விளாசென விளாசிவிட்டு கட்டிக்கட்டிலில் போட்டுவிட்டாள். இவற்றை எல்லாம் பார்த்திருந்த ரூபன் சற்று குழப்பமடைந்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியாது தவித்தான். சரவணனின் கூத்து அப்போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் தினமும் வீட்டில் கலகத்தையே கொண்டு வந்தது. அதனால் தான் கலா ரூபனை விடுதியில் தங்க வைத்தாள். எப்பாவது ஒருநாள் இவர்களை ரூபன் வந்து பார்த்துச்செல்வதுண்டு. அன்பான அண்ணி அண்ணன் அருகில் இருந்தும் அநாதையாய் தனியாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ரூபன்.
சரவணனிற்கும் கலாவிற்குமிடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது. சரவணனது குடிப்பழக்கத்தை கண்டிக்கும் தகப்பனும் கலா அவனை அடித்தாள் என்பதைக்கேட்டு கலாவிற்கு சாபமழை பொழியும் தாயும் என்று சரவணன் குடும்பம் ஒருவிதமாக இருந்தது.
தானாக வேலையைத்தேடி தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க தொடங்கிவிட்டாள் கலா. குடிவெறி அதனால் அவளிடம் சச்சரவு இதைவிட குறை சொல்லும்படி சரவணனிடம் எதும் இல்லை. ஆனால் அவனது போதைக்கு அவள் காயங்களைச்சுமக்க முடியாது என்ற முடிவோடு அதன் வலியை அடிக்கடி அவனிற்கு உணர வைத்தாள் கலா இன்றும் கூட அப்படித்தான். அழகாய் பூத்துக்குலுங்க வேண்டிய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படி விடையின்றி விரிந்து சென்றது.
பாவம் சரவணன் இப்படி படுக்கவைத்து விட்டோமே என்ற கவலை அவளினுள். அவளது வாழ்க்கை நாலுபேர் சிரிக்கிற நிலையில் இருக்கிறதே என்று வருத்தம். அவர்களிற்குள் உள்ள விரிசலை சரி செய்ய முனையாத உறவுகள் விடுப்புப் பார்ப்பதில் துடியாய் நின்றார்கள். அதனால் உறவுகள் மேலும் அவளிற்கு வருத்தம். தான் உண்டு தன்ர பாடு உண்டு என்று ஒதுங்கியே இருந்தாள். அவர்களது வெற்றிலை வாய்க்கு இவள் அவலாக விரும்பவில்லை.
இன்றைய பிரச்சனை கொண்டு வந்த தீர்வு. இனிமேல் குடிப்பதில்லை என்ற முடிவுக்கு சரவணன் வந்திருந்தான். தான் செய்த தவறுகளுக்காய் கலாவிடமும் ரூபனிடமும் அழுது மன்னிப்புக்கேட்டான். இதை எந்த அளவு நம்புவது கலாவிற்கு சிறிய தடுமாற்றம் நடப்பதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அவனை துண்டு வெட்டி வீட்டிற்கும் கூட்டி வந்து விட்டார்கள்.
சரவணன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மண்டை உடைந்ததையும் அறிந்த சரவணனின் பெற்றோர் துள்ளிக்குதித்தார்கள். " ஒரு பொடிச்சி மண்டையை அடிச்சு உடைச்சு ஆஸ்பத்திரில போடுவாள் அதைப்பாத்திட்டு சும்மா இருக்கவேணுமே.. அப்பவே சொன்னான் உந்த புத்தகம் தூக்கினதுகளை கட்டாதேங்கோ.. என்னை மாதிரி ஒன்டைக்கட்டியிருந்தால் அடிச்சா என்ன பிடிச்சா என்ன அழுதுபோட்டு அமைதியா இருந்திருக்கும்.. இது நாலு எழுத்துப்படிச்சதை கட்டிவைச்சு அது வேலை வெட்டி செய்யிறன் என்ட உடனை அவன்ர மண்டையை உடைச்சுப்போட்டுது. அங்க ஒருத்தன் பாத்துக்கொண்டிருக்கிறான். அண்ணனுக்கு அடிச்சவளை வெட்டிப்போட்டு ஜெயிலுக்குப் போக வேண்டாமே..?? " அறியாமை நிறைந்த ஒரு அப்பாவித் தாயின் ஏக்கங்கள் அப்படி வெளிப்பட்டன... அவள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்றதை உணர அவர்கள் தயாராக இல்லை.
கலாவிற்கு சிரிக்கிறதா அழுகிறதா தெரியவில்லை. சரவணனைப் பார்த்தாள் அவன் தெளிந்திருந்தான், தனது தவறிற்கு தக்க தண்டனை தன் மனைவி கொடுத்திருந்தாள் அதை அவனும் ஏற்றிருந்தான் தாயிடம் கூறினான். "அம்மா உன்ர பிள்ளை நான் குடிச்சு கொண்டு என்னையே நான் அழிச்சுக்கொண்டிருந்தா நீ பாத்திட்டு சும்மா இருப்பியா..?? உன்னை மாதிரித்தானே கலா என்னை திருத்தியிருக்கிறாள். ஏன் பேசிறாய்?? இனியாவது நாங்கள் வாழலாம் மகிழ்ச்சியாய் மூன்று வருசங்கள் வீணாய் போயிட்டுது இனி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டன். சும்மா கத்தாதையணை." உறுதியோடு அழைப்பைத் துண்டித்தான்.
கலாவின் மகிழ்ந்தாலும் சற்று கனத்தது வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா?? அவளது மனதில் பெரிய கேள்வி?.
பெட்டி படுக்கைகளுடன் ரூபனும் வாசலில் நின்றான். " அண்ணி இனி நீங்கள் அடிச்சுக் கலைச்சாலும் நான் போகமாட்டன். நேரத்திற்கு நேரம்.. படம் பாத்தது காணும் புத்தகத்தை எடுடா என்ற அந்த அன்பான அதட்டலும் அடிக்கடி என்னை மேற்பார்வை செய்யும் அண்ணாவின் அன்பும் எனக்கு வேணும். அநாதையா என்னால வாழமுடியாது" ஓடிச்சென்று இருவரையும் அணைத்துக்கொண்டு.. அவனும் குதூகலத்தில் பங்கெடுத்தான். கலாவிற்கு சரவணன் மேல் நம்பிக்கை மறுபடி சற்று அதிகரித்திருந்தது.
<i>ஆக்கம் - கயல்விழி.</i>
|
|
|
|