01-02-2006, 05:28 PM
தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும்.
யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல்இ மதம்இ சாதி ஆகியன நேரடி உயிர் கொல்லிகளாக மாற பெருந்தொகையான மக்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
இவர்களுடைய புலப்பெயர்வுக்கான காரணங்களை எல்லாம் பேசி காலத்தை அழித்துக் கொண்டிருக்க கண்ணுக்குத் தெரியாத அருவமாக மதுபானமும்இ தொடர் நாடகங்களும் மக்கள் வாழ்வை கன வேகத்தில் சூறையாடிவிட்டன. உலக வரலாற்றில் போரால் சீரழிந்த இனம்இ இயற்கை அனர்த்தத்தால் சீரழிந்த இனம் என்றுஇ சீரழிந்த ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருப்பார்கள். உலகில் மதுவால் அழிந்த சமுதாயம் எதுவெனத் தேடுவீர்களானால் அது தமிழினம்தான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். அந்த நிகழ்வுகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
காதல்இ வீரம் என்று நாம் புகழ்ந்து போற்றும் சங்ககால சமுதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து ஆரியர்களின் கையில் வீழ்ந்தமைக்கு தலைமைக் காரணம் மதுபானம்தான் என்கிறது தொல்காப்பியம். பொய்யும் வழுவும் தோன்றி பின் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப என்ற பாடல் மூலம் தொல்காப்பியரே இதை உறுதி செய்துள்ளார்.
மதுவினால் ஒழுக்கம் சீரழிந்து சமுதாயமே பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது ஐயர்கள் என்னும் ஆரியர்கள் மிக இலகுவாக அவர்களை அடிமைப்படுத்தினர். திருக்குறள்இ திரிகடுகம்இ ஆசாரக்கோவைஇ இன்னாநாற்பதுஇ இனியவை நாற்பது போன்ற நீதி நூல்களால் சமுதாயத்தை திருத்துவதற்கான அத்தனை பணிகளையும் பலர் செய்தனர்இ அவைகளால். சமுதாயம் ஓரளவு காப்பாற்றப்பட்டாலும் தமிழர்கள் என்ற சுயம் அழிந்து போனதை எந்த நீதி நூல்களாலுமே மீட்க முடியாது போய்விட்டது.
இதுபோல சோழர்காலத்திற்குப் பிறகு வந்த அன்னிய ஆட்சியான நாயக்கர் காலத்திலும் தமிழ் மக்கள் மிகப்பெரிய குடிகார இனமாக இருந்திருக்கிறார்கள். மதுவின் உளவியலால் அழிந்துஇ எதிர் மறையாக சிந்தித்து ஐரோப்பியர்களின் கைகளில் அடிமையாக விழுந்தனர். அதனால் நானூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.
இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்தைஇ தமிழருக்கான தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடிய சில மன்னர்கள் இருந்ததை மறுக்க இயலாது. எல்லோரையும்இ எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நாம் குறை கூற முடியாது. தீமைகளிடையே நன்மைகளும் இருப்பது போலவே இத்தகைய தன்மான முள்ள அரசர்களும் நம்மிடையே இருந்துள்ளனர். ஆனால் இலங்கையாகட்டும்இ தமிழகமாகட்டும் இரு இடங்களிலுமே இப்படியான மன்னர்களை இவர்களோடு இருந்தவர்களே காட்டிக் கொடுத்து தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தார்கள். காட்டிக் கொடுத்த அத்தனைபேரையும் மதுவுக்கு அடிமையாக்கியே எதிரிகள் காரியம் சாதித்தார்கள்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கன் சிங்களவனல்ல தமிழன்தான். சிறந்த கூரிய புத்தியுடையவனான இவன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தான். 15 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஐரோப்பியர் 18 ம் நூற்றாண்டுவரை கைப்பற்ற இயலாதிருந்த கண்டி இராட்சியத்தை கைப்பற்ற மதுபோதையால் மழுங்கிப் போன இவனுடைய மூளையும் ஒரு காரணம். மது போதை தலைக்கேறி தனது பிரதானி ஒருவனுடைய பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டி உரலில் போட்டு இடிக்கச் செய்யுமளவிற்கு இவனுடைய அறிவு மழுங்க மதுவே பிரதான காரணம்.
யாழ். குடாநாட்டை சூரியக்கதிர் மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. குடாநாடு சென்று சகல நிலமைகளையும் ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். மதுபானம் அங்கு அரசனாக கொலுவீற்றிருப்பதைக் காண்பீர்கள். இராணுவத்துடன் இணைந்து மதுபானத்தை எடுத்துச் செல்லும் ஈழத் தமிழரையும் அங்கு காண்பீர்கள். போதைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சிங்கள இராணுவம் கணிசமான வெற்றி பெற்றிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்படி போதையூட்டியவர்களை வைத்தே சகல தகவல்களையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதையும் அங்கு நடைபெறும் சம்பவங்களால் உணர்வீர்கள்.
எப்போதுமே அன்னியர்களின் ஆட்சிஇ நம்பிக்கை வரட்சி போன்றன மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்குகிறது. இன்றுள்ள தமிழ் மக்களிடையே எதிர் காலம் என்ன என்ற கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது யாருக்குமே கடினமானதுதான். பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாராகஇ தாய் நாட்டில் அமைதி கால் நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் இழுபட்டுப்போக அந்த விடையில்லாத வெற்றிடத்தில் மதுபானமே அமர்ந்து விடுகிறது. வெளி நாடுகளில் இருபது வருடங்களாக மாடாக உழைத்து கண்ட மிச்சம் என்ன என்ற கேள்விக்கு மன அமைதி தரும் பதில் கூற முடியாத நிலையில் இருக்கும் மக்களை மதுபானம் இலகுவாக அடிமை கொண்டுவிடுகிறது.
மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதே இனிப் பொருத்தமான வாதமாகும். மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். கலைகளினூடாகவும் ஊடகங்களினூடாகவும் இந்தக் காரியத்தை திட்டமிட்டு செய்ய வேண்டும். சமுதாயவியல் அறிஞர்கள் என்று எவரும் இல்லாத பேதைச் சமுதாயமாக நாம் தொடர்ந்தும் இருந்தால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது. இருந்தால் மதுபானத்தில் இருந்து அடுத்த கட்டமான போதை வஸ்த்துக்குள் இளைய தலைமுறை வீழவதைத் தடுக்க முடியாமல் போகும். சமூகத்தைக் காக்க வேண்டிய பணிகளில் யாரும் பொறுமை காத்தல் கூடாது. காரியங்களை செய்யாமல் காத்திருப்பது நன்மைக்குரிய செயல் அல்ல அதுதான் சுடுகாட்டுக்குப் போகும் வழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மது அருந்துவோர் கூடாதவர்கள் மது அருந்தாதவர் நல்லவர் என்ற கோணத்தில் இதை அணுகுதல் கூடாது. கடந்த காலங்களில் நீதி நூல்கள் விட்ட தவறே இங்குதான் இருக்கிறது. நல்லவர் கூடாதவர் என்றது ஒரு விடயம்இ மதுபானம் அருந்துவது அருந்தாமல் விடுவது என்பது இன்னொரு விடயம். இரண்டையும் இந்த விவகாரத்தில் ஒன்றாக்கி குழப்பம் விளைவித்ததுதான் சமயவாதிகள் விட்ட தவறு. மேலைநாட்டு அரசுகள் அப்படி ஒரு கோணத்தில் மதுபானம் தொடர்பான விடயங்களை கையாளவில்லை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்றால் இந்த நாட்டில் எல்லோருமே தீயவர்கள்தான். ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எல்லோருமே மதுக்கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதை வைத்து அந்தத் தலைவர்கள் எல்லோருமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது.
நீதி நூல்களிலும்இ சமயங்களிலும் வகுக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கோணத்தில் இதைப் பார்க்க முடியாது. கி.பி 300 ம் ஆண்டில் வாழ்ந்த மனிதனை மிரட்ட பாவித்த நரகலோகத்தையும்இ கன்மக் கோட்பாடுகளையும் இன்றைய மனிதனிடம் பேச முடியாது. அவைகளின் காலம் முடிவடைந்துவிட்டது. புதிய உலகில் மதுபானம் மனிதனுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அதை நம்மால் முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஆன்மீக hPதியாக இன்றைய மனிதனுக்கு சொல்ல இயலாது. ஆகவேதான் சட்டத்தினால் அது தடுக்கப்படுகிறது. போதை வஸ்த்து கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டத்தை சிங்கப்பூர் போன்ற நாடுகள் விமானத்தில் இருக்கும்போதே அறிவித்துவிடுகின்றன. அவர்களுடைய ஆன்மீகத்தால் முடியாது என்றபடியால்தான் அவர்கள் மரணதண்டனைக்கு வந்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் குறிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு கடைகளில் மதுபானம்இ சிகரட் போன்றவைகளை விற்க முடியாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடைகளில் வார இறுதியில் மதுபானம் விற்க தடை இருக்கிறது. மதுபானம் விற்பதற்கான விசேட அனுமதிகள் எல்லாம் சட்டங்களினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. உளவியல்இ பொருளாதாரம்இ எதிர்கால சமுதாய உருவாக்கம் போன்றவற்றுக்கு அமைவாக இந்த சட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
புலம் பெயர் தமிழ் மக்களும் இந்த சட்டவிதிகளுக்குள் வந்தாலும்இ அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ் சமுதாயத்திற்குரிய அளவில் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக இருக்கின்றன. இன்று தமிழர் நடாத்தும் சகல கொண்டாட்டங்களிலுமே மதுபானம் இருக்கிறது. திருமணம்இ பிறந்தநாள் போன்ற விழாக்களில் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. கூர்ந்து கவனித்துப்பார்த்தால் தமிழ் மக்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலுமே மதுபானம் மிகக் கச்சிதமாக நுழைந்து விடுகிறது. மத ஆசாரங்களுடன் கூடிய திருமண வீட்டில் சம்பெயின் உடைப்பது கூட இன்று தமிழ் கலாச்சாரமாகிவிட்டது. இது தமிழனின் வெற்றியல்ல தமிழனை மதுபானம் வென்றதற்கான அடையாளம்.
மற்றைய சமுதாயங்களை எடுத்துக் கொண்டால் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் பெருகியபடியே இருக்கின்றன. டேனிஸ் வெளிநாட்டு அமைச்சு உலகமெல்லாம் உள்ள தனது காரியாலயங்களில் புகைத்தலை முற்றாகத் தடை செய்துவிட்டது. புகையிரதங்களில் கூட புகைத்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும் என்ற உண்மையை இப்போது வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். போதையூட்டும் சகல விடயங்களுமே வெளி நாடுகளில் சட்டங்களால் இறுக்கப்பட்டு வருகின்றன.
இதைக் கூர்ந்து பார்த்து நாமும் புதிய சமுதாய சட்டங்களை உருவாக்குதல் வேண்டும். பிள்ளைகள்இ குடும்பங்கள் ஒன்று கூடும் கொண்டாட்டங்களில் இருந்து மது பானத்தை முற்றாக அகற்ற வேண்டும். அழைப்பிதழ் தரும்போதே மதுபானம் நீக்கப்பட்ட விழாஎன்பதை கீழே அச்சடிக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வெறுப்போ இதற்குக் காரணமல்ல சமுதாயத்தின் நெறி குறித்து நாம் சிந்திப்பதால் இப்படி செய்கிறோம் என்று உண்மையைப் புரிய வைத்தல் வேண்டும்.
மேலும் இது குறித்து பலமான கருத்தாடல்களை ஊடகங்களின் மூலம் வளர்க்க வேண்டும். இலங்கையை வாலகம்பா என்ற சிங்கள அரசனிடமிருந்து கைப்பற்றிய ஐந்து தமிழர்கள் மதுவில் மூழ்கி ஆட்சிக் கதிரைக்காக ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றுஇ கடைசியில் எஞ்சிய ஒரு தமிழன் சிங்கள அரசனின் வயதான மனைவி சோமாவதியை தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு ஓடிஇ சிங்களவரிடம் மறுபடியும் ஆட்சியை ஒப்படைத்தான். இந்தக் கதையை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை என்றும் ஆளும் இனம் என்ற ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி ஆளப்படும் இனமாக வைத்திருக்கக் காரணமாயிருப்பது மதுதான் என்பதை மறந்துவிடலாகாது.
மதுவை அருந்தும் எவரையும் இக்கட்டுரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. மது அருந்த வேண்டாமெனவும் புத்திசொல்ல வரவில்லை. மதுவால் அழிந்த தமிழ் வரலாற்றை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள் என்று மட்டும் தயவுடன் கேட்கிறது.
அலைகள்
யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல்இ மதம்இ சாதி ஆகியன நேரடி உயிர் கொல்லிகளாக மாற பெருந்தொகையான மக்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
இவர்களுடைய புலப்பெயர்வுக்கான காரணங்களை எல்லாம் பேசி காலத்தை அழித்துக் கொண்டிருக்க கண்ணுக்குத் தெரியாத அருவமாக மதுபானமும்இ தொடர் நாடகங்களும் மக்கள் வாழ்வை கன வேகத்தில் சூறையாடிவிட்டன. உலக வரலாற்றில் போரால் சீரழிந்த இனம்இ இயற்கை அனர்த்தத்தால் சீரழிந்த இனம் என்றுஇ சீரழிந்த ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருப்பார்கள். உலகில் மதுவால் அழிந்த சமுதாயம் எதுவெனத் தேடுவீர்களானால் அது தமிழினம்தான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். அந்த நிகழ்வுகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
காதல்இ வீரம் என்று நாம் புகழ்ந்து போற்றும் சங்ககால சமுதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து ஆரியர்களின் கையில் வீழ்ந்தமைக்கு தலைமைக் காரணம் மதுபானம்தான் என்கிறது தொல்காப்பியம். பொய்யும் வழுவும் தோன்றி பின் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப என்ற பாடல் மூலம் தொல்காப்பியரே இதை உறுதி செய்துள்ளார்.
மதுவினால் ஒழுக்கம் சீரழிந்து சமுதாயமே பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது ஐயர்கள் என்னும் ஆரியர்கள் மிக இலகுவாக அவர்களை அடிமைப்படுத்தினர். திருக்குறள்இ திரிகடுகம்இ ஆசாரக்கோவைஇ இன்னாநாற்பதுஇ இனியவை நாற்பது போன்ற நீதி நூல்களால் சமுதாயத்தை திருத்துவதற்கான அத்தனை பணிகளையும் பலர் செய்தனர்இ அவைகளால். சமுதாயம் ஓரளவு காப்பாற்றப்பட்டாலும் தமிழர்கள் என்ற சுயம் அழிந்து போனதை எந்த நீதி நூல்களாலுமே மீட்க முடியாது போய்விட்டது.
இதுபோல சோழர்காலத்திற்குப் பிறகு வந்த அன்னிய ஆட்சியான நாயக்கர் காலத்திலும் தமிழ் மக்கள் மிகப்பெரிய குடிகார இனமாக இருந்திருக்கிறார்கள். மதுவின் உளவியலால் அழிந்துஇ எதிர் மறையாக சிந்தித்து ஐரோப்பியர்களின் கைகளில் அடிமையாக விழுந்தனர். அதனால் நானூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.
இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்தைஇ தமிழருக்கான தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடிய சில மன்னர்கள் இருந்ததை மறுக்க இயலாது. எல்லோரையும்இ எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நாம் குறை கூற முடியாது. தீமைகளிடையே நன்மைகளும் இருப்பது போலவே இத்தகைய தன்மான முள்ள அரசர்களும் நம்மிடையே இருந்துள்ளனர். ஆனால் இலங்கையாகட்டும்இ தமிழகமாகட்டும் இரு இடங்களிலுமே இப்படியான மன்னர்களை இவர்களோடு இருந்தவர்களே காட்டிக் கொடுத்து தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தார்கள். காட்டிக் கொடுத்த அத்தனைபேரையும் மதுவுக்கு அடிமையாக்கியே எதிரிகள் காரியம் சாதித்தார்கள்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கன் சிங்களவனல்ல தமிழன்தான். சிறந்த கூரிய புத்தியுடையவனான இவன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தான். 15 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஐரோப்பியர் 18 ம் நூற்றாண்டுவரை கைப்பற்ற இயலாதிருந்த கண்டி இராட்சியத்தை கைப்பற்ற மதுபோதையால் மழுங்கிப் போன இவனுடைய மூளையும் ஒரு காரணம். மது போதை தலைக்கேறி தனது பிரதானி ஒருவனுடைய பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டி உரலில் போட்டு இடிக்கச் செய்யுமளவிற்கு இவனுடைய அறிவு மழுங்க மதுவே பிரதான காரணம்.
யாழ். குடாநாட்டை சூரியக்கதிர் மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. குடாநாடு சென்று சகல நிலமைகளையும் ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். மதுபானம் அங்கு அரசனாக கொலுவீற்றிருப்பதைக் காண்பீர்கள். இராணுவத்துடன் இணைந்து மதுபானத்தை எடுத்துச் செல்லும் ஈழத் தமிழரையும் அங்கு காண்பீர்கள். போதைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சிங்கள இராணுவம் கணிசமான வெற்றி பெற்றிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்படி போதையூட்டியவர்களை வைத்தே சகல தகவல்களையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதையும் அங்கு நடைபெறும் சம்பவங்களால் உணர்வீர்கள்.
எப்போதுமே அன்னியர்களின் ஆட்சிஇ நம்பிக்கை வரட்சி போன்றன மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்குகிறது. இன்றுள்ள தமிழ் மக்களிடையே எதிர் காலம் என்ன என்ற கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது யாருக்குமே கடினமானதுதான். பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாராகஇ தாய் நாட்டில் அமைதி கால் நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் இழுபட்டுப்போக அந்த விடையில்லாத வெற்றிடத்தில் மதுபானமே அமர்ந்து விடுகிறது. வெளி நாடுகளில் இருபது வருடங்களாக மாடாக உழைத்து கண்ட மிச்சம் என்ன என்ற கேள்விக்கு மன அமைதி தரும் பதில் கூற முடியாத நிலையில் இருக்கும் மக்களை மதுபானம் இலகுவாக அடிமை கொண்டுவிடுகிறது.
மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதே இனிப் பொருத்தமான வாதமாகும். மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். கலைகளினூடாகவும் ஊடகங்களினூடாகவும் இந்தக் காரியத்தை திட்டமிட்டு செய்ய வேண்டும். சமுதாயவியல் அறிஞர்கள் என்று எவரும் இல்லாத பேதைச் சமுதாயமாக நாம் தொடர்ந்தும் இருந்தால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது. இருந்தால் மதுபானத்தில் இருந்து அடுத்த கட்டமான போதை வஸ்த்துக்குள் இளைய தலைமுறை வீழவதைத் தடுக்க முடியாமல் போகும். சமூகத்தைக் காக்க வேண்டிய பணிகளில் யாரும் பொறுமை காத்தல் கூடாது. காரியங்களை செய்யாமல் காத்திருப்பது நன்மைக்குரிய செயல் அல்ல அதுதான் சுடுகாட்டுக்குப் போகும் வழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மது அருந்துவோர் கூடாதவர்கள் மது அருந்தாதவர் நல்லவர் என்ற கோணத்தில் இதை அணுகுதல் கூடாது. கடந்த காலங்களில் நீதி நூல்கள் விட்ட தவறே இங்குதான் இருக்கிறது. நல்லவர் கூடாதவர் என்றது ஒரு விடயம்இ மதுபானம் அருந்துவது அருந்தாமல் விடுவது என்பது இன்னொரு விடயம். இரண்டையும் இந்த விவகாரத்தில் ஒன்றாக்கி குழப்பம் விளைவித்ததுதான் சமயவாதிகள் விட்ட தவறு. மேலைநாட்டு அரசுகள் அப்படி ஒரு கோணத்தில் மதுபானம் தொடர்பான விடயங்களை கையாளவில்லை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்றால் இந்த நாட்டில் எல்லோருமே தீயவர்கள்தான். ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எல்லோருமே மதுக்கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதை வைத்து அந்தத் தலைவர்கள் எல்லோருமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது.
நீதி நூல்களிலும்இ சமயங்களிலும் வகுக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கோணத்தில் இதைப் பார்க்க முடியாது. கி.பி 300 ம் ஆண்டில் வாழ்ந்த மனிதனை மிரட்ட பாவித்த நரகலோகத்தையும்இ கன்மக் கோட்பாடுகளையும் இன்றைய மனிதனிடம் பேச முடியாது. அவைகளின் காலம் முடிவடைந்துவிட்டது. புதிய உலகில் மதுபானம் மனிதனுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அதை நம்மால் முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஆன்மீக hPதியாக இன்றைய மனிதனுக்கு சொல்ல இயலாது. ஆகவேதான் சட்டத்தினால் அது தடுக்கப்படுகிறது. போதை வஸ்த்து கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டத்தை சிங்கப்பூர் போன்ற நாடுகள் விமானத்தில் இருக்கும்போதே அறிவித்துவிடுகின்றன. அவர்களுடைய ஆன்மீகத்தால் முடியாது என்றபடியால்தான் அவர்கள் மரணதண்டனைக்கு வந்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் குறிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு கடைகளில் மதுபானம்இ சிகரட் போன்றவைகளை விற்க முடியாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடைகளில் வார இறுதியில் மதுபானம் விற்க தடை இருக்கிறது. மதுபானம் விற்பதற்கான விசேட அனுமதிகள் எல்லாம் சட்டங்களினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. உளவியல்இ பொருளாதாரம்இ எதிர்கால சமுதாய உருவாக்கம் போன்றவற்றுக்கு அமைவாக இந்த சட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
புலம் பெயர் தமிழ் மக்களும் இந்த சட்டவிதிகளுக்குள் வந்தாலும்இ அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ் சமுதாயத்திற்குரிய அளவில் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக இருக்கின்றன. இன்று தமிழர் நடாத்தும் சகல கொண்டாட்டங்களிலுமே மதுபானம் இருக்கிறது. திருமணம்இ பிறந்தநாள் போன்ற விழாக்களில் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. கூர்ந்து கவனித்துப்பார்த்தால் தமிழ் மக்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலுமே மதுபானம் மிகக் கச்சிதமாக நுழைந்து விடுகிறது. மத ஆசாரங்களுடன் கூடிய திருமண வீட்டில் சம்பெயின் உடைப்பது கூட இன்று தமிழ் கலாச்சாரமாகிவிட்டது. இது தமிழனின் வெற்றியல்ல தமிழனை மதுபானம் வென்றதற்கான அடையாளம்.
மற்றைய சமுதாயங்களை எடுத்துக் கொண்டால் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் பெருகியபடியே இருக்கின்றன. டேனிஸ் வெளிநாட்டு அமைச்சு உலகமெல்லாம் உள்ள தனது காரியாலயங்களில் புகைத்தலை முற்றாகத் தடை செய்துவிட்டது. புகையிரதங்களில் கூட புகைத்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும் என்ற உண்மையை இப்போது வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். போதையூட்டும் சகல விடயங்களுமே வெளி நாடுகளில் சட்டங்களால் இறுக்கப்பட்டு வருகின்றன.
இதைக் கூர்ந்து பார்த்து நாமும் புதிய சமுதாய சட்டங்களை உருவாக்குதல் வேண்டும். பிள்ளைகள்இ குடும்பங்கள் ஒன்று கூடும் கொண்டாட்டங்களில் இருந்து மது பானத்தை முற்றாக அகற்ற வேண்டும். அழைப்பிதழ் தரும்போதே மதுபானம் நீக்கப்பட்ட விழாஎன்பதை கீழே அச்சடிக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வெறுப்போ இதற்குக் காரணமல்ல சமுதாயத்தின் நெறி குறித்து நாம் சிந்திப்பதால் இப்படி செய்கிறோம் என்று உண்மையைப் புரிய வைத்தல் வேண்டும்.
மேலும் இது குறித்து பலமான கருத்தாடல்களை ஊடகங்களின் மூலம் வளர்க்க வேண்டும். இலங்கையை வாலகம்பா என்ற சிங்கள அரசனிடமிருந்து கைப்பற்றிய ஐந்து தமிழர்கள் மதுவில் மூழ்கி ஆட்சிக் கதிரைக்காக ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றுஇ கடைசியில் எஞ்சிய ஒரு தமிழன் சிங்கள அரசனின் வயதான மனைவி சோமாவதியை தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு ஓடிஇ சிங்களவரிடம் மறுபடியும் ஆட்சியை ஒப்படைத்தான். இந்தக் கதையை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை என்றும் ஆளும் இனம் என்ற ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி ஆளப்படும் இனமாக வைத்திருக்கக் காரணமாயிருப்பது மதுதான் என்பதை மறந்துவிடலாகாது.
மதுவை அருந்தும் எவரையும் இக்கட்டுரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. மது அருந்த வேண்டாமெனவும் புத்திசொல்ல வரவில்லை. மதுவால் அழிந்த தமிழ் வரலாற்றை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள் என்று மட்டும் தயவுடன் கேட்கிறது.
அலைகள்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&