| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 319 online users. » 0 Member(s) | 316 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,283
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| விடியும் மலையகம் |
|
Posted by: Mathuran - 01-31-2006, 12:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் கூட்டாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது.
ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவினருக்கும் பெ.சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் குழுவினருக்கும் இடையே திங்கட்கிழமை நுவரெலியாவில் நடந்த 2 ஆம் சுற்றுப் பேச்சுகளில் இதற்கான இணக்கம் காணப்பட்டது.
கொழும்பில் சனவரி 26 ஆம் நாளன்று முதல் சுற்றுப் பேச்சுகள் நடந்தன.
"மலையகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ள என்று பெ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இ.தொ.க. குழுவில் சச்சிதானந்தன், வி.ராதாகிருஸ்ணன், நடராஜபிள்ளை, துரை மதியுகராஜா ஆகியோரும் மலையக மக்கள் முன்னணியின் குழுவில் லாரன்ஸ், எஸ். விஜயகுமாரன், சரத் அத்துகோரல, விஜயசந்திரன், இராஜகுலேந்திரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணியினருடன் உள்ளுராட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுகளை நடத்த உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமது கட்சியினரது கருத்தை அறிந்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் இணைவது தொடர்பாக முடிவெடுக்க இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
நன்றி: புதினம்
|
|
|
| அன்புத்தோழி |
|
Posted by: Mathuran - 01-30-2006, 11:49 PM - Forum: சினிமா
- Replies (6)
|
 |
அன்புத்தோழி
<img src='http://img357.imageshack.us/img357/9409/tiruma3755zr.jpg' border='0' alt='user posted image'>
திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி.
|
|
|
| சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு |
|
Posted by: கீதா - 01-30-2006, 11:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டது
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமைமாவை திருட்டுத்தனமாக விற்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை கல்முனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைதாகியுள்ளனர். கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உலக உணவுத்திட்டத்தின் கீழ் அம்பாறை அரச அதிபரால் வழங்கப்பட்ட மாமூடைகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை அடுத்துள்ள பெரிய நீலாவணைக்கு லொறியொன்று சென்றுள்ளது.
அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அதே லொறி கல்முனையை நோக்கி திரும்பிச் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து கல்முனைப் பெ?994;ிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உஷாரான பொலிஸார் பாண்டிருப்பு வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து லொறியை மடக்கிப் பிடித்தனர். கல்முனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமூடாக பெரிய நீலாவணை ப. தோ. கூ. சங்கக்கிளைக்கு 260 மூடைமா கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் 100 மூடையை கல்முனை வர்த்தகர் ஒருவருக்கு விற்றதாகவம் அதனைக் கையளிக்க கொண்டு செல்கையிலேயே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கல்முனை தலைமைப் பொலிஸ் அதிகாரி விஜயதிலகவின் கட்டளையின் பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே. இப்னு அசார் தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி அதிரடி நடவடிக்கையிலீடுபட்டு லொறியை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் லொறியின் சாரதி, நடத்துனர், நாட்டாமை ஆகியோரும் மாவை விற்ற பெரிய நீலாவணை ப. நோ. கூ. கிளை முகாமையாளர், வாங்கிய கல்முனை வர்த்தகர் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். முதல் மூவரும் சிங்களவர். ஏனைய இவரும் முஸ்லிம்களாவர். சனிக்கிழமையன்று கல்முனை மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். ஜெமீல் முன்னிலையில் சந்தேக நபர்கள் ஐவரும் ஆஜர் செய்யப்பட்டதாக பதில் நீதிவான் சந்தேக நபர்களை தலா 20 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் மேலதிக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளார்.
மாவும் லொறியும் நீதிமன்றில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : : kugan
Mon, 30 Jan 2006, 18:13:22 GMT
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
|
|
|
| தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல் |
|
Posted by: வினித் - 01-30-2006, 09:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (28)
|
 |
வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல்
[செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்]
மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.
வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம் தரித்த கடத்தல்காரர்கள், பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி 5 பேரைக் கடத்திச்சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறியபோதும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றித் தாக்கப்பட்டு கண்களைத் துணிகளால் மூடி கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றனர்.
அவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள், கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பி வந்தவர்களால் தெரிவிக்கப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விவரம்:
1) சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)
2) செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளார்
3) இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
4) வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)
கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் தெரியவில்லை.
நன்றி:புதினம்
|
|
|
| India's CIA spy scandal |
|
Posted by: narathar - 01-30-2006, 08:47 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
India's CIA spy scandal
India's external intelligence service, the Research and Analysis Wing (RAW) has launched a major internal investigation for possible moles following the apparent defection of a senior officer recruited by the US Central Intelligence Agency (CIA).
The Indian government fears that the defection of Rabinder Singh, who held the senior rank of joint secretary and who headed the agency's Southeast Asia department, is only the tip of the iceberg in a possible infiltration operation by the CIA and Mossad, Israel's foreign intelligence service.
The focus of the investigation will be RAW, as well as the Intelligence Bureau, which handles counterintelligence and the Defence Intelligence Agency. The mole hunt is expected to extend to Indian embassies around the world where RAW personnel operate under diplomatic protection, particularly those who liaise with foreign intelligence agencies.
According to informed intelligence sources, several Indian operatives have already been suspended pending investigation. One senior intelligence official committed suicide on 13 June in New Delhi, although it is not yet clear whether this incident was linked to the current Singh investigation.
The scandal, which broke on 5 June, risks damaging India's post-11 September 2001 strategic alliance with the USA and an earlier one with Israel, Washington's key ally in the Middle East. It is also likely to result in New Delhi placing limitations on intelligence sharing with both the USA and Israeli, which could impact on the US-led 'war on terrorism'.
India has decades of experience in combating such militants based in Pakistan and Afghanistan. There is speculation that the current scandal, which could extend throughout the Indian intelligence establishment, will also result in a wide ranging shake-up and reorganisation of the Indian intelligence agencies.
Predictably, Indian security authorities are saying little about the Singh case, but domestic sources report that counterintelligence became suspicious of Singh about six months ago, putting him under surveillance and tapping his telephones. It is not clear what alerted security authorities, but he was confronted by counterintelligence officials on 19 April (shortly after he had been in the USA) and questioned about 'sensitive files' he had allegedly removed from RAW's headquarters in south New Delhi.
http://www.janes.com/security/internationa...40701_1_n.shtml
|
|
|
| மீண்டும் பகுத்தறிவு!! |
|
Posted by: Rasikai - 01-30-2006, 07:55 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (21)
|
 |
[b]இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன்.
மீண்டும் பகுத்தறிவு!!
மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்...........
ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ...........
உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!..........
கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்.....
கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று..
ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்!
ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............
எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்.........
மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில..........
"மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேடி...........
தங்கத்தால் கொலுசு அவளுக்கு வேண்டியலைந்து - நீ
தரங்கெட்டு போயிருப்பாய்!
பட்டினியோடு உன் தாய் குடலெரிந்து குமுறியழுவாள் அங்கே-நீயோ.....
இங்கு... விஜய் படத்துக்கு சென்று விசில் அடித்து மகிழ்ந்திருப்பாய்!
இனம் .. இனம் என்று எழுத்தில் மட்டும் வீரம் கொள்வாய்....
எடுத்துச்சொல்லி வந்து யாரும் உதவி கேட்டால்...........
கதவை இழுத்துச் சாத்தி அவர் மனசை கொல்வாய்....
பழம் கிடைத்தால் போதும்...
தாயை வெட்டி வாழை கன்றின் காலடியில் புதைப்பாய்
பட்டாம் பூச்சி சிறகில் நூல் கட்டி..
அது பதைப்பதை பார்த்து ..பட்டம் விட்டேன் என்பாய்!
உயிர்களை வதைப்பதை ஒரு பொழுதுபோக்காய் கொள்வாய்...
உருப்படாத இந்த அறிவுக்கு... பகுத்தறிவென்று பதிலும் வேறு சொல்வாய்!
ஆற்றில் அள்ளுண்டு செல்லும் புள்ளிமான் பற்றி கவலை கொள்ளாய்...........
கரையில் இருந்துகொண்டு புல்லாங்குழலிசைத்தபடி அதை ரசிப்பாய்....!
கற்றால் என்ன கனவானென்று ஆனால்தானென்ன.........
உன்னையே நீயறியாவிடில்.... நீ திரியை தொலைத்த தீபமென்றாவாய்!
அலரிப்பூக்கள் கொண்டு அலங்கரித்த மகுடம் யாருக்கு வேண்டும்?
கறையான் புற்றை அலங்கரித்த கனகாம்பர மலரானாய் .. நீ
போ நீயும் உன் பகுத்தறிவும்....!!!
|
|
|
| பூமி வெப்பமடைதல் - Global Warming |
|
Posted by: Mathan - 01-30-2006, 06:14 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (9)
|
 |
புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு அறிக்கை
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41271000/gif/_41271012_icecapsindex203.gif' border='0' alt='user posted image'>
<b>சுற்றுச்சூழல் கவலைகள்</b>
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அவற்றின் ஆபத்தான மட்டத்துக்கு கீழே வைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டன் அரசாங்கத்தின் அனுசரணையுடனான அறிக்கை ஒன்று கூறுகிறது.
பனிப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் உலகெங்கும் கடல்களின் நீர்மட்டம் உயரும் நிலையை நோக்கிய ஒரு பாதையில் உலகம் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்று பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை கூறியுள்ளது.
பனிப் பாறைகளை உருகாமல் வைத்திருக்க கரியமில வாயுவின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவது தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும், ஆனால் ஆனால் அதன் மூலம் எரிசக்தி நிலையங்கள் மூடப்படும் நிலையே உருவாகும் என்பதால் அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானியான டேவிட் கிங் தெரிவித்துள்ளார்.
BBC Tamil
|
|
|
|