| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 385 online users. » 0 Member(s) | 382 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,281
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி |
|
Posted by: வினித் - 02-01-2006, 01:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி
`அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்;
வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர்.
இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென இந்தக் கட்சியில் இணையவுள்ள தமிழ்க் குழுவொன்றின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
http://www.thinakural.com/New%20web%20site...ry/01/index.htm
|
|
|
| சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! |
|
Posted by: வினித் - 02-01-2006, 01:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:
தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.
நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது என்றார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:
சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்கு ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</b>
www.puthinam.com
|
|
|
| Tamil community appeals for the release of abducted humanita |
|
Posted by: நர்மதா - 02-01-2006, 10:48 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
From : USA <trotamil@yahoo.com>
Reply-To : USA <trotamil@yahoo.com>
Sent : February 1, 2006 1:21:18 AM
To : narmatha34@hotmail.com
Subject : Urgent appeals to Denmark
Tamil community appeals for the release of abducted humanitarian aid
workers
The Tamil community from the world over joined a chorus of voices calling
for the immediate release of ten (10) employees of the Tamils
Rehabilitation Organisation (TRO), who were abducted by 'government backed'
paramilitaries on Tuesday, 31 January 2006, in eastern Sri Lanka.
The TRO is a registered including most of the European and Scandinavian
Country as a Non-Governmental Organization (No. L 50706) and is registered
with the Consortium of Humanitarian Agencies (CHA), in Sri Lanka. As of 26
December 2004 TRO has been rendering urgent humanitarian assistance to all
those in the coastal areas of the North-East of the country who have borne
the brunt of the Tsunami disaster.
TRO was originally set up to provide relief, rehabilitation and development
to the war affected people of North-East Sri Lanka. The organization has
been in dedicated service to the people of the region for the last 20 years
and possesses exceptional knowledge of the grassroots reality, culture,
values, and aspirations of the people of the North-East. The organization
has approximately 3,500 local paid personnel across its 10 districts
offices, along with 16 international offices and several hundreds of
thousands of local and international volunteers. Further, TRO has strong
partnership arrangements with key UN and multilateral agencies,
international and local organizations and the Government of Sri Lanka.
Meanwhile a prominent paramilitary’s Official News website, neruppu.com,
has featured a news article that claims the kidnapped were all members of
the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The Denmark based website,
operated by Mr. Mathi Kumarathurai, has been long known to be a base for
Sri Lankan paramilitary propaganda. 'The fact the website was able to
publish such an article is clear evidence pointing to the association of
the particular website with the paramilitaries,' a prominent Tamil activist
said. Several Tamil organisations, and the Diaspora Tamil population from
around the world have joined a chorus of voices calling for the Co-Chairs
of the Sri Lankan peace process, International Community and Humanitarian
Organisations to exert maximum pressure on the Danish authorities, to
approach the individuals operating the website and work for the release of
the humanitarian workers.
Terrorist Denmark Coordinator
Mathi Kumarathurai or Mathivathanan Muthukumarapillai
Stjærten 13
8800 Viborg
Denmark.
Please all of you send one request to Denmark Government.
Ministry of Foreign Affairs
Address: Asiatisk Plads 2
DK-1448 Copenhagen K
Denmark
Phone: 0045 33 92 00 00
Fax: 0045 32 54 05 33
E-mail: um@um.dk
http://www.um.dk/en/
http://www.um.dk/en/servicemenu/Contact/
jm@jm.dk
inm@inm.dk
fsk@fsk.dk
sm@socialministeriet.dk
skm@skm.dk
fmn@fmn.dk
|
|
|
| கவி சுவைகள் |
|
Posted by: starvijay - 02-01-2006, 09:08 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
[b]குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள் இருக்கக்கூடாதென்று
அவனை பள்ளிக்கு அனுப்பினேன்..
அவனை ஆசிரியர் அனுப்பினார்
டீ வாங்கி வர..
[b]கோபம்
எப்ப வரும் என்று தெரியாது
வந்தா என்ன நடக்கும் என்று தெரியாது
எச்சரிக்கை..
|
|
|
| தமிழன் ............ |
|
Posted by: வர்ணன் - 02-01-2006, 04:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<b>தமிழன் - யாரோ?
கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் -
ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு
பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்!
தமிழன் என்றால் யாரோ- ?
முயற்சி செய்பவருக்கு தடையாய்-
இலாபம் இல்லை என்று தெரிந்தும்.....
ஏட்டிக்கு போட்டியாய்
ஏதும் செய்ய நினைப்பவன்!
தமிழன் எவரோ-
தாயை தவிக்க விட்டு -
பாயை சுருட்டி கொண்டு
பரதேசம் ஓடுபவன்!
தமிழன் என்ன செய்வானோ?
உப்பு யாரும் அள்ளினால்-
சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்!
உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்!
தமிழன் இன்னும் என்ன செய்வானோ-?
கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் எழுதுவான் -
கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்-
தானும் மூக்கை இடையில் நீட்டுவான்!
தமிழனுக்கு வீரம் உண்டு-
அவனுக்கு விவேகம் உண்டு-
தமிழனுக்கு வேகமும் உண்டு-
இருந்தும் என்ன...
தமிழனுக்கு பல இடங்களில்
விவஸ்தை மட்டும் தான் இல்லை!!!</b>
|
|
|
| ஆப்பிள் சாப்பிடுங்க |
|
Posted by: starvijay - 02-01-2006, 03:40 AM - Forum: மருத்துவம்
- Replies (10)
|
 |
<b>ஆப்பிள் எனும் அருமருந்து</b>
ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம்.
ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.
பயன்கள்
கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.
ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' (ளூரநசஉநவin) அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.
குறைகள்
ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு
ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது.
ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.
ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது.
From:webulagam.com
|
|
|
| ஃபீனிக்ஸ் தேசத்தில் நான் |
|
Posted by: kanapraba - 02-01-2006, 03:11 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ.
http://www.kanapraba.blogspot.com
-கானா பிரபா-
|
|
|
| யாழில் மாணவரைக் காணவில்லை |
|
Posted by: mayooran - 01-31-2006, 07:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு!
யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தும்பளை புனித மரியாள் கத்தோலிக்க தேவாலயப் பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு வீடாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதி மக்கள் எவரையும் வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கவில்லை. அப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த போக்குவரவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடை செய்து இந்தத் தேடுதலை மேற்கொண்டனர்.
ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையால் ஜெனீவா பேச்சுக்கள் பாதிக்கக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று பொங்கியெழும் மக்கள் படை அறிவித்திருக்கும் நிலையில் இத்தகைய காணாமல் போகும் நிகழ்வுகளும் இராணுவ வன்முறைகளும் நீடித்து வருவது தொடர்பில் யாழ். பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே வடமராட்சி கிழக்கில் உள்ள நடு குடத்தனை பகுதியைச் செய்த 150 குடும்பத்தினரில் 140 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேபோல் யாழ். ஊர்காவற்றுறை பகுதியின் தோப்புக்காடு கிராமத்தின் அனைத்து மக்களும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
[size=7]puthinam
|
|
|
|