| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 127 online users. » 0 Member(s) | 124 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் |
|
Posted by: மேகநாதன் - 02-03-2006, 07:27 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (10)
|
 |
<b><span style='font-size:30pt;line-height:100%'>சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் </b></span>
<b> எஸ்.கே</b>
பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும்இ துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும்இ விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.
காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.
ஒட்டுமொத்தத்தில் அன்புஇ பண்புஇ பாசம்இ அடக்கம்இ அறிவுஇ வீரம்இ விவேகம்இ விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்லஇ தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.
தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.
கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்புஇ பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.
மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை)இ மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமிஇ சின்னவத்தை)இ 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்இ செட்டிபாளையம்)இ மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்லஇ சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.
போர் நிறுத்தம்இ சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன்இ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள்இ தளபதிகள்இ போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.
ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.
இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.
எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.
இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.
ஆண்டு ஒன்றாகிறது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
|
|
|
| ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! |
|
Posted by: ஜெயதேவன் - 02-03-2006, 03:02 AM - Forum: புலம்
- Replies (44)
|
 |
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்.
ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல.
உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை.
அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள்.
நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள்.
அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம்.
உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது.
இப்படிக்கு
சபேசன்
http://www.webeelam.com/Jeyathevan.htm
|
|
|
| பேச்சுக்களின் பெயரால் புலிகளைச் சிதைக்க தீட்டிய திட்டங்கள் |
|
Posted by: கந்தப்பு - 02-03-2006, 12:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பேச்சுக்களின் பெயரால் புலிகளைச் சிதைக்க தீட்டிய திட்டங்கள் என்ன?: ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது 'சிங்கள' நாளேடு!!
சிறிலங்கா அரசாங்கங்கள் பேச்சுக்கள் என்ற பெயரால் விடுதலைப் புலிகளைச் சிதைக்கத் தீட்டிய திட்டங்கள் என்ன என்பதை முன்னணி சிங்கள நாளேடான 'லங்காதீப' ஆதாரங்களோடு அம்லப்படுத்தியுள்ளது.
இன்றைய 'லங்காதீப' நாளேடு வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையின் சில விடயங்கள் வழமையான அவதூறுகளானாலும் திரைமறைவுச் சதிகளை அம்பலப்படுத்தியிருப்பதால் அதை புதினம் படிப்பாளர்களுக்கு தருகிறோம்.
கட்டுரையின் முழு வடிவம்:
வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் கருணையை இழந்த பின்னர் கருணாவிற்கு கருணை காட்டியது சிறிலங்கா அரசாங்கம் என்றொரு கருத்து உள்ளது. ஆனால் இப்போது அந்தக் கருணையும் இல்லாது போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தை கருணா குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல சிறிலங்கா அரசாங்கம் கருணாவைக் குற்றம் சாட்டியது. சிறிலங்கா அரசாங்கம் தன்னை ஓரங்கட்டிவிட்டு விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளது என்று கருணா குற்றம் சாட்டியிருந்தார்.
விடுதலைப்புலி முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட அதன் உறுப்பினர்களைப் படுகொலை செய்து அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான இணக்கப்பாட்டை கருணா சிதைக்க முற்படுகிறார் என்றே கருணா மீது அரசாங்கம் குற்றம் சாட்டியது.
இவ்விரு குற்றச்சாட்டுக்களிலும் ஒன்று தெளிவாகிறது. அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இருசாராரும் இணைந்து கருணாவின் கழுத்தில் கத்தியை வைக்கப் பார்க்கின்றனர்.
விடுதலைப் புலிகள் ஜெனீவாவிற்குச் செல்வது கருணாவின் கழுத்தைக் கேட்பதற்கே. கருணா இதனை அறிவார். இதனால்தான் அவர் முதல் முறையாக அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீண்டும் யுத்தத்திற்குப் போவதை தவிர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு கருணாவின் கழுத்தைக் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை அரசாங்கமும் அறியாமல் இல்லை. அரசாங்கமும் விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்தமை தொடர்பாக முதல் முறையாகக் கருணாவைக் குற்றம் சாட்டியது அந்த வேலைக்கான வழியை அமைத்துக் கொள்வதற்காக இருக்கலாம்.
இப்போது கருணா தனது தலையைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார். அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து விடுதலைப் புலிகளுடன் கருணா யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டது தனது கழுத்தைக் காப்பதற்கு வேறு மார்க்கம் இல்லை என்பதாக இருக்கலாம்.
கருணாவிற்கு வேறு யாரின் கருணை உள்ளது?
ரணிலின் பயங்கரமான குள்ளநரித்தனத்தினாலேயே பிரபாகரன் கருணாவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கடந்த மாவீரர் நாள் உரையின் போது அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
ரணில் எங்களை பாங்கொங்கிற்கு அழைத்துச் சென்று கனவுலகொன்றை காண்பித்து எங்களை அழிக்கப்பார்த்தார். கருணா அதில் சிக்கிக் கொண்டார். நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துகையில் அவர் சொப்பிங் சென்றார். பாங்கொக்கில் விலை மாதர் பின்னால் சென்றார்... .. இவ்வாறு பாலசிங்கம் கூறினார். 2005 நவம்பர் மாதம் 27 ஆம் நாள் பாலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையிலான மோதல்கள் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்திலேயே வெடித்தது. ஆனால் பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2003 ஆம் ஆண்டிலேயே ரணில் அரசாங்கம் அறிந்திருந்தது.
அந்தப் பிரச்சனை உச்சக்கட்டத்தையடைந்து பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரையே ரணில் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் தயாரித்த இடைக்கால நிர்வாக சபை யோசனை பேச்சுவார்த்தைக்கு எடுக்கப்படும் நேரத்திலேயே இந்தப் பிரச்சனை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவிருந்தது.
வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஒரு இடைக்கால அதிகாரம் சபை என்பது முடியாது. கிழக்கிற்கென எனக்கு தனியாகவொரு அதிகார சபை தேவை. இதற்கு எனது தலைவர் விரும்பாவிடில் நான் தலைவரிடமிருந்து விலகி கிழக்கிற்குத் தலைமை தாங்குவேன். பேச்சுவார்த்தை மேசையில் இப்படிக் கூறுவதற்காக கருணா காத்திருந்தார்.
அப்படி நிகழ்ந்திருந்தால் முழு உலகத்தின் முன்பாக பேச்சுவார்த்தை மேசையில் விடுதலைப் புலிகள் இரண்டாக பிளவுப்பட்டிருப்பார்கள்.
எம்மால் இதற்கு இணங்க முடியாது. கருணாவைப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து நீக்க வேண்டும். அவர் இனிமேலும் எங்களின் பிரதிநிதியல்ல. இந்தப் பிரச்சனை எழுந்திருந்தால் பாலசிங்கத்தினால் முன்வைக்கக்கூடுமாகவிருந்த வாதம் இதுதான்.
ஆம். நான் இனிமேலும் உங்களின் பிரதிநிதியல்ல. நீங்கள் பிரதிநிதித்துவம் செய்வது வடக்கை. நான் பிரதிநிதித்துவப்படுத்துவது கிழக்கை. அதன் தலைவராக நான் இந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பேன். இது கருணாவினால் முன்வைக்கப்படவிருந்த வாதம்.
உங்களின் இயக்கம் உடைந்து போயுள்ளது தெளிவாகிறது. நீங்கள் வடகிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிழக்கின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்காகவே நாம் ரவூப் ஹக்கீமை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தோம். ஆனால் கிழக்கின் தமிழ் பிரதிநிதித்துவமாக நீங்கள் நியமித்த பிரதிநிதி இப்போது உங்களிடமிருந்து பிரிந்து கிழக்கிற்கு புதிய தலைமையைக் கொடுத்துள்ளார்.
நாம் அவரின் தலைமைத்துவத்தைக் கருத்தில் எடுக்காவிட்டால் அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்காது கிழக்கிற்காக போர் தொடுப்பார். அப்படி நிகழாதென்ற உறுதிமொழியை உங்களால் தர முடியுமா? அதனால் எமக்கு அவரைப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இது கருணாவை பேச்சுவார்த்தை மேசையில் வைத்துக்கொள்வதற்காக ரணில் அரசாங்கத்தினால் முன்வைக்க வேண்டியேற்படும் வாதமாகும்.
இந்த வாதப்பிரதிவாதங்களின் முடிவானது விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அவர்களாகவே கைவிடுவதாகும்.
பேச்சுவார்த்தை மேசையில் புதிய தரப்பாக இணைந்துள்ள கருணா தரப்பினதும் யோசனைகளைக் கருத்தில் எடுத்தே ரணில் அரசாங்கத்திற்கு புதிய இடைக்கால நிர்வாக சபைக்கான யோசனைகளை தயாரிக்க வேண்டியேற்படும்.
கருணா பேச்சுவார்த்தை மேசையில் இருக்கும் வரை கருணாவைக் கொல்வதற்கான வாய்ப்பு பிரபாகரனுக்குக் கிடைக்காததால் கிழக்கின் பலத்தைப் பெருக்கிக் கொண்டு கருணா கிழக்கிற்கென புதிய இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக முடியுமாகவிருந்தது.
இதுதான் நடக்கவிருந்தது. எனினும் அது நடக்கவில்லை. ஏன்?
காரணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பியுடன் கூட்டுச் சேர்ந்து ரணிலின் அரசைக் கவிழ்த்துப் பொதுத் தேர்தலுக்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டதால் ஆகும்.
அதனால் உள்வீட்டுப் பிரச்சனையை உலகத்தார் முன் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு செல்லாது வீட்டிற்குள்ளேயே தீர்த்துக் கொள்வதற்கு பிரபாகரனுக்கு வாய்ப்புக்கிடைத்தது.
ரணிலின் அரசாங்கத்தை தோற்கடித்து 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி - ஜே.வி.பி. கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடனே அந்த அரசாங்கத்திடம் பிரபாகரன் வேண்டுகோளொன்றை விடுத்தார். இராணுவத்தினரை முகாம்களுக்குள் வைத்துவிட்டு கருணாவைத் துப்பரவு செய்வதற்கு இடமளிக்குமாறே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்டணி அரசாங்கம் அந்த கோரிக்கைக்கு இடமளித்தது. அரசாங்கப்படைகள் முகாம்களில் இருந்துகொண்டு இதனைக் கண்டும் காணாமல் இருந்த போது கருணாவை பிரபாகரன் விரட்டியடித்தார். கடைசியில் கருணாவின் உயிரைக் காக்க முன்வந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவாகும்.
கருணாவைக் கொலை செய்ய பிரபாகரன் தேடுகையில் மௌலானா அவரைக் கொழும்பிற்குக் கொண்டுவந்தார்.
அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஜே.வி.பி. கூட்டமைப்பு பிரபாகரனின் ஆணைக்கு எவ்வளவு கீழ் படிந்தார்களென்றால் கருணாவைக் கொல்வதற்குப் பிரபாகரனுக்கு இடமளித்துவிட்டு கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டார்கள்.
கொழும்பிற்கு வந்த கருணாவின் உயிர் எந்நேரம் பறிபோகுமோவென்ற நிலை.
இந்த வேளையில் கருணாவிற்கு உதவியது விசத்தால் விசத்தை முறிப்பது போல தமிழர் ஒருவராலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என நம்பிய அதற்காகவே பாடுபட்ட தமிழரான கூட்டணி அரசாங்கத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமராகும்.
சமாதான நடவடிக்கைகளுக்காக கருணாவின் கழுத்தில் கத்தியை வைக்காது பிரபாகரனை அழிக்க கருணாவைப் பயன்படுத்தலாமென அவர் எண்ணியிருக்கலாம். அதிலிருந்து கருணா நாளாந்தம் 2, 3 விடுதலைப் புலிகளை கொல்லவும் விடுதலைப்புலி முக்கிய உறுப்பினர்களை இலக்கு வைக்கவும் ஆரம்பித்தார்.
கருணாவின் இந்தத் தாக்குதல் பிரபாகரனுக்கு சரியாகப்படவில்லை. கருணாவை நிராயுதபாணியாக்கும் வரை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என்று பிரபாகரன் அப்போதிருந்த அரச தலைவர் சந்திரிகாவை பயமுறுத்தினார்.
கருணாவுடன் தனக்கோ அரசாங்கத்திற்கோ எவ்விதத் தொடர்ப்பும் இல்லையென்பதைக் காண்பிப்பதற்காக சந்திரிகா செய்யாதது எதுவுமில்லை. முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்லவிற்கும் கருணாவிற்கும் இடையில் தொடர்ப்பிருப்பதாக பிரபாகரன் சுமத்திய குற்றச்சாட்டிலிருந்து சந்திரிகாவும் அரசாங்கமும் தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக எடுத்த நடவடிக்கையினாலேயெ பலகல்ல பதவியை விட்டுச் செல்லவேண்டியேற்பட்டது.
கருணாவுடன் தொடர்பில்லை என்பதைக் காட்டுவதற்காக சந்திரிகா எடுத்த தீர்மானத்தினால் கருணாவிற்கு உதவிய கதிர்காமரும் அசௌகர்யத்திற்கு உள்ளானார். அந்த அசௌகர்யத்திலிருந்து விடுபடுவதற்காக அவர் ஜே.வி.பியின் உதவியை நாடினார். கருணா குழுவையும் ஈ.பி.டி.பி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி குழுவையும் இணைத்து விடுதலைப் புலிகளுக்கெதிராக புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயன்றது.
அந்த கூட்டணியினாலேயே கருணா பாதுகாப்புப் பெற்றார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கருணாவை நிராயுதபாணியாக்க வேண்டும் என சந்திரிகாவிற்கு அழுத்தம் கொடுத்த அவரின் சமாதானத் தூதுவர்களையும் அழித்து கருணாவை பாதுகாத்தது அந்த கூட்டணியே.
சமாதான நடவடிக்கைகளை தொடங்குவதற்காக கருணாவைப் பலியிடக்கூடாதென்ற நிலைப்பாட்டில் இருந்தமையினால் சந்திரிகாவிடமிருந்தும் அவரின் சமாதான தூதுவர்களிடமிருந்தும் ஓரங்கட்டப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமர், பாதுகாப்புத் தேடியதும் அந்தக் கூட்டணியிடமே.
அதேபோல விடுதலைப் புலிகளுக்குத் தேவையானவாறு அல்லாமல் அரசாங்கத்திற்குத் தேவையானவாறே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கதிர்காமரின் நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவைக் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்பை அவர் வேண்டியதும் இந்த கூட்டணியிடமே.
ஐரோப்பாவில் சமாதானப் பேச்சுக்களை நடத்தாமலும், பேச்சுவார்த்தைகளுக்கான விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணியாது இறுதித்தீர்விற்காக மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவை இணங்கச் செய்வதற்கும் அவர் இந்தக் கூட்டணியின் உதவியையே நாடினார்.
இந்தக் கூட்டணியை அமைத்து கதிர்காமருக்கு அவரின் நிலைப்பாட்டை சந்திரிகாவிலும் நாட்டிலும் பலப்படுத்திக் கொள்வதற்கு சக்தியைக் கொடுத்தது ஜே.வி.பி.யாகும்.
கதிர்காமரின் நிலைப்பாட்டிற்கு எதிராக எவ்வாறேனும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு அந்த நிலைப்பாட்டிற்கு சந்திரிகாவை தள்ளிய அப்போதைய சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தித் தாக்கி கதிர்காமரைப் பாதுகாத்ததும் ஜே.வி.பியாகும்.
ஜே.வி.பி, கருணா, ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி கூட்டணியின் பலத்தில் நடந்த கதிர்காமரின் பயணமானது விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்ததுடன் முடிவடைந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கென கருணாவின் தலையைப் பலிகொடுக்க இடமளிக்காத கதிர்காமரைப் புலிகள் பலியேடுத்தது இப்படித்தான்.
2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜே.வி.பி, கருணா, ஈ.பி.டி.பி. ஆகியன மகிந்தருக்கு ஆதரவளித்தது என்பது கதிர்காமர் சென்றப் பாதையில் அவரும் செல்வதற்காகவே.
மகிந்த அரச தலைவரானார்.
இன்று ஜயந்த தனபால, மகிந்தவின் சமாதான ஆலோசகராவார். அவர் அன்றிலிருந்து இருக்கும் நிலைப்பாடான எந்த வகையிலேனும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கமைய சமாதான செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
அதன்படி சமாதான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலின் முதலாவது விடயம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதாகும்.
விடுதலைப் புலிகள் சொல்லப்போவது அதெல்லாம் செய்வதற்கு முன்னர் கருணாவை நிராயுதபாணியாக்குங்கள் என்பதையாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் கருணாவின் கழுத்து தேவையென்பதாகும். விடுதலைப் புலிகள் கதிர்காமரின் தலையைப் பலியெடுத்தது கருணாவின் தலையை பலி கேட்கவே. அரசாங்கம் கருணாவின் தலையைப் பலிகொடுக்குமா?
அரசாங்கம் எவ்வாறு செயற்படுமென இப்போதைக்கு கூறமுடியாதுள்ளது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதினம்
|
|
|
| அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம் |
|
Posted by: sanjee05 - 02-02-2006, 11:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 6 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Interfaith International, Switzerland; International Movement Against All Forms of Discrimination and Racism – IMADR, Japan; International League for the Rights and Liberation of Peoples – LIDLIP, Switzerland; Liberation- United Kingdom; International Educational Development IED, USA; International Association of Democratic Lawyers – IADL, Switzerland ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் நத்தார் நாளில் புனித மரியாள் ஆலயத்தில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை காப்பாளருமான ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி எம்மை அதிர்ச்சியடைய வைத்தது. இந்தக் கொடூரப் படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அந்த புனிதமான நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜோசப் பராராஜசிங்கத்தின் துணைவியாரும் துப்பாக்கிக் குண்டுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் சுகுணம் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாரிய அச்சுறுத்தல்கள் இருந்த போதும் அமைதிக்காகவும் நீதிக்காகவும் எதுவித அச்சமுன்றி போராடியவர் 71 வயது நிரம்பிய ஜோசப் பராஜசிங்கம். இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செயற்பட்டவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் மனித உரிமை மீறல்களை ஆவணங்களோடு நாடாளுமன்ற அமர்வுகளில் அம்பலப்படுத்தியவர். இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டு அவர் வாய்மூடி மவுனியாக இருக்கவில்லை. அந்தப் பகுதிதான் அவரது வாழ்விடம் ஆகும்.
தமிழ் மக்களுக்கு எதிராகவே சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையும் விசாரணைகளும் இருப்பதால் சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறைகளை சர்வதேச மனித உரிமைகள் பேராயத்திற்கு கொண்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம். பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தெற்காசிய நாடுகள் அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பிலும் பணியாற்றியவர் ஜோசப் பரராஜசிங்கம். வடக்கு கிழக்கில் சர்வதேசப் பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்கிறபோது அந்தப் பயணங்களில் பங்கேற்றவர் ஜோசப் பரராஜசிங்கம்.
அவரது சிறந்த ஆங்கிலப் புலமை மூலம் சர்வதேச சமூகத்தின் கண்களைத் திறக்கச் செய்தவர்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் தேவாலயம், சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ளது. சிறிலங்கா அரச படைகளின் சேர்ந்தியங்குகிற "அடையாளம் தெரியாத ஆயுததாரிகள்" எனப்படுவோர் கிழக்குப் பகுதின் பல இடங்களிலும் இயங்கி வருவது இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.8ஆம் சரத்தை மீறுகிற செயலாகும்.
இந்த சரத்தின் படி வடக்கு கிழக்கில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தினராகிய நாம் இந்த விடயத்தை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கொண்டு செல்வோம்.
சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள் தொடர்பில் நாங்கள் கடும் வருத்தமடைகிறோம்.
மிகச் சிறந்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் பாதுகாப்பாளருமான குமார் பொன்னம்பலத்தை சிறிலங்கா அரச தலைவரின் பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினர்கள் 2000ஆம் ஆண்டு சனவரி 5ஆம் நாள் பகலில் சுட்டுக்கொன்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர்கள் மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரெட்ணம் சிவராம் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது படுகொலைகளும் ஒரே முறையில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் படுகொலை வழக்குகளில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு குற்றவாளி கூட சிறிலங்காவின் நீதித்துறை முன் நிறுத்தப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட அனைவருமே மனித உரிமைப் பாதுகாவலர்கள்.
சர்வதே மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஜோசப் பராஜசிங்கம் படுகொலையைக் கண்டிக்க வேண்டும்; ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குறித்து சுயாதீன ஆணைக் குழு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| வெண்புறா |
|
Posted by: Rasikai - 02-02-2006, 10:48 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (2)
|
 |
<b>வெண்புறா </b>
<img src='http://img80.imageshack.us/img80/7596/lady27zz.gif' border='0' alt='user posted image'>
எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி.
அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம்.
கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே. போகும் வழிதோறும் குழந்தைகளின் அழுகுரல்கள் ஓயவேயில்லை. குழந்தைகள் வயோதிபர்கள் இவர்களால் இந்தப் பயணத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிலேயே தங்கள் உறவினர்களை இழந்தாலும். எஞ்சியோர் பயணத்தைத் தொடர்ந்தனர். அதில் பயணஞ் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கத்தான் செய்தது. இப்படிப் பல விபரிக்க முடியாத அல்லோல கல்லோலங்களினூடே அவர்கள் பயணம் தொடர்ந்தது.
ரம்யாவும் ஒரு நடைப்பிணமாக அவர்கள் பின்னே போய்க்கொண்டிருந்தாள்.
ரம்யா இப்போ ஓர் இளம் விதவை. ராட்சதரின் குண்டு அவள் கணவனின் உயிரைக் குடித்து உடலைச் சிதறடித்திருந்தது. அவன் இறந்தபின் அவன் உடல் மீது விழுந்து கதறி அழுதிருந்தாலாவது அவளுக்குச் சிறிது ஆறதலாயிருந்திருக்கும். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை. இவ்வளவு சனத்திரளுக்குள்ளும் அவளுக்கென்று அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் பயணத்தைத் தொடர்ந்தாள். ஏன்? எதற்காக? அது அவளிற்கே விளங்கவில்லை.
பாடசாலையிற் படிக்கும் போது அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு அவளிற்கிருந்தது. மிகவும் துடிப்பானவள். அவள் பின்னே எத்தனை ஆடவர்கள் படையெடுத்தனர்? அவள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர் எத்தனை பேர்?
ஆனால் அவள் மனம் சேகரிடம் மட்டுமே பறிபோனது. சேகரும் ரம்யாவும் மதத்தால் வேறுபட்டிருந்தனர். ரம்யாவின் வீட்டிலே மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. கடைசியில் இருவருமே தங்கள் வாழ்க்கையை நிச்சயிக்க வேண்டி ஏற்பட்டது. திருமணம் முடித்து இரண்டே வாரங்களில் தனக்கு இக்கதி நேருமென அவள் கனவிலும் எண்ணவில்லை. சேகரின் இழப்பு அவளை மிகவும் பாதித்திருந்தது. வாடிய பயிராய்த் துவண்டுவிட்டாள். வெள்ளைச் சேலைக்குள் புகுந்துகொண்டாள். இடிமேல் இடிபோல அவள் இப்போ இப்படிப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம். என்ன செய்வது? புறப்பட்டுவிட்டாள்.
ரம்யாவின் மனமும் உடலும் நன்கு சோர்ந்துவிட்டிருந்தன. நீண்ட தூரம் நடந்தார்கள். ஏதேதோ ஊர்களின் பெயர் சொன்னார்கள். அவை அவளிற்குப் புதிய பெயர்கள். ஏதோ எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது அவளிற்கு. பொழுது மெல்ல மெல்லப் புலர ஆரம்பித்தது. இப்படிக் கதிரவனின் வரவை விழித்திருந்து அவள் பார்த்தது கிடையாது. சேகர் இருந்திருந்திருந்தால் இதற்கிடையில் எத்தனை கவிதைகள் பிறந்திருக்கும். அவன் ஒவ்வொரு விடயங்களையும் ரசித்து ரசித்து கவிதை சொல்லும் அழகே தனி அழகு.
குழந்தைகளின் அழுகுரல்கள் மட்டும் ஓயவேயில்லை. வெய்யோனின் வெங்கதிர்கள் அக்காலை வேளையில் சிறிது இதமாக இருந்தது. ஆயினும் நேரஞ் செல்லச் செல்ல அவ்வெம்மை யாவரையும் சுட்டெரித்தது. யாவரும் நிழல்களைத் தேடி சிறிது இளைப்பாறினர். ரம்யாவும் ஓரிடத்தில் தனியாகக் குந்தியிருந்தாள். முழங்கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அதற்கிடையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது. திடீரென மழை பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை விட்டு வெயில் எறித்தது. பெருந்திரளாக புறப்பட்ட மக்களில் பலரை இறைவன் தன்னிடம் அழைத்துவிட்டிருந்தான். பலர் வெவ்வேறு பாதைகளில் தங்கள் தங்கள் உறவினர் வீடுகளிற்குச் சென்றிருந்தனர். ரம்யா இறுதியாக ஒரு பாடசாலை அகதி முகாமில் தங்கினாள். அவளிற்கு மிகவும் களைப்பாக இருந்தது. தன் தாய் தந்தையரை நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தவள். இன்று இந்நிலை அவளுக்கு. மயக்கம் வருவது போல உணர்ந்தாள். அப்படியே சரிந்து படுத்துவிட்டாள்.
கண் விழித்தபோது அவள் முன்னே ஒரு சிறுமி நின்றிருந்தாள். ஓரு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தானிருக்கும். "அக்கா சாப்பிட்டிங்களா? ஏன் பேசாம இருக்கிறீங்க. கொஞ்ச நேரத்திற்கு முதல் சாப்பாடு கொஞ்சம் கொடுத்தார்கள். என்னட்ட கொஞ்சம் இருக்கு. உங்கள எழுப்பி எழுப்பி பாத்தன் நீங்க எழும்பேல்ல அது தான் எழும்பும் வரைக்கும் பாத்துக் கொண்டிருந்தன்" என்றவள் ரம்யாவின் பதிலையும் எதிர்பாராமல் சிறிது கஞ்சியைக் கொடுத்தாள்.
சுய நினைவிற்கு வந்தவளாக தன்னருகேயிருக்கும் அச்சிறுமியைப் பார்த்தாள். அவள் தன் ஊரில் வசிப்பவள்தான். அதன் பின் ரம்யாவும் அபர்ணா என்னும் அச்சிறுமியும் நண்பிகளானர்கள். அபர்ணா அடிக்கடி சொல்வாள். "எனக்கு இயக்கத்திற்குப் போகோனும் என்று சரியான ஆசை ஆனால் அம்மாக்குத் துணையா ஒருத்தருமில்ல. அத நினைச்சுப்போட்டுத்தான் பேசாம இருக்கிறன் . இந்த ஆமியை எல்லாம் கலைச்சுப் போட்டு நிம்மதியா இருக்கோனும். நான் செத்தாலும் மற்றச் சனமாவது நிம்மதியா இருக்குங்கள் தானே. அம்மாவ நினைச்சாத்தான் கவலை. பாவம் அம்மா. அவவிற்கு நான் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறன். என்ட அப்பா அக்கா தங்கச்சியாட்களும் உங்கட சேகர் அங்கிளோட போட்டினம்." என்றாள் கலங்கிய கண்களுடன்.
அவளை அப்படியே இறுக அணைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரம்யா.
ரம்யாவின் மனதில் இப்போதெல்லாம் இந்தப் போராளிகளின் ஞாபகம் தான் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அவளுக்குள் ஒருவிதமான உணர்வு ஒரு தாகம் மேலிடுவது போல உணர்ந்தாள். நான் யாருக்காக வாழ்கின்றேன். என் சேகரைக் கொன்ற அவர்களை நான் பழி வாங்க வேண்டும். என் தமிழ் மக்களை காப்பாற்ற என்னால் இயன்றதை நான் செய்ய வேண்டும். அதற்கு இது நல்ல தருணம். சேகர் அடிக்கடி சொல்வான் "ரம்யா நான் உன்னைக் கண்டிருக்காட்டி நிச்சயமா ஒரு போராளியாகியிருப்பன்". சேகர் உங்கட ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும். அப்பத்தான் உங்கட ஆத்மா சாந்தியடையும். எனக்கு இப்போ பத்தொன்பது வயது. வெள்ளைப் புடைவைக்குள் இருக்கும் என்மீது இவர்கள் வீசும் சொல்லடிகள் மிகவும் கொடியவை. இவற்றை நான் எவ்வளவு காலத்திற்குத் தாங்க முடியும்.
ரம்யா தனக்குள் ஒரு உற்சாகம் எழுவதை உணர்ந்தாள் அவளுள் ஏற்பட்ட அந்த எண்ணங்கள் மெல்ல மெல்ல விசுவரூபமெடுத்தன. இனிமேலும் காலந் தாழ்த்துவதில் பயனில்லை என உணர்ந்தாள். அங்கிருக்கும் அகதிகளைப் பார்த்தாள் வாய் திறந்து தூங்கும் ஒரு வயோதிபரின் வாயைச்சுற்றிலும் இலையான்கள் அமர்ந்திருந்தன. அவை வாயாலும் மூக்குத் துளையாலும் உட் செல்ல முயன்றுகொண்டிருந்தன. ஓ! எம் தமிழினம் எவ்வளவு கொடுமை. என்ன அநியாயம். என்ன பாவம் பண்ணினோம். நான் என்னால் இயன்றதைச் செய்யத்தான் வேண்டும். ஆப்போதான் என் சேகரின் ஆத்மா சாந்தியடையும். உணர்ச்சி மேலிட ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்தாள் தன் சேலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டி விட்டாள். கூந்தலை அவிழ்த்து தன் கைகளினால் கோதி உயர்த்தி ஒரு கொண்டை போட்டாள். அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
அபர்ணாவின் தாயாரிடம் தன் மனக் கிடக்கைகளைக் கொட்டினாள். "துப்பாக்கிச் சத்தங்கள் தூரத்தில் கேட்கின்ற போது உயிர் துடித்து உடல் நடுங்கி நாவறண்டு செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா? தப்பேதும் செய்யாத போதினுலும் அவன் தமிழன் என்றால் விடுவானா? பிஞ்சுப் பாலகன் முதல் பல் விழுந்த தாத்தா வரை அவர்கள் பார்வையில் பயங்கரவாதியாமே. அதுதான் அரக்கரவர் அகராதி. எம்மினப் பெண்கள் கற்பெல்லாம் சூறையாடி அவர் வாழ்க்கை கதையான பின்னே அழுதென்ன லாபம். கொலைகாரர் கோரப்பிடியிலகப்பட்டு அவர் காலில் நாம் நசிவதா? இல்லவேயில்லை. என்னுயிர் பிரியுமுன் அவ்வரக்கர்களை அழிக்க நான் என் பங்களிப்பைச் செய்தே தீருவேன். என் கண்களைத் திறந்தவள் அபர்ணாதான். நான் இழந்துவிட்ட என் சேகரையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டேன். ஆனால் இப்போ தான் எனக்குப் புரிகின்றது நான் நிலையானது என நினைத்த பாசம் பந்தம் எல்லாம் நீராவியாகிவிட்டதென்று". ரம்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் உயிர்த் துடிப்பிருப்பதை அபர்ணாவின் தாய் உணர்ந்தாள். கண்ணீர் மல்கிய கண்களுடன் அவள் தலையைத் தடவி நெற்றியிலே முத்தமிட்டாள்.
ரம்யா அபர்ணாவைப் பார்த்தாள். பூமியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலென அவளுள் ஒரு பாச உணர்வு பளிச்சிட்டு மறைந்தது. பின் மெல்ல அவ்விடம் விட்டகன்றாள். அவளுக்குள் ஒருவித புத்துணர்ச்சி பரவியிருந்தது. தன்னிடமிருந்த நகைகளை விற்றுக் காசாக்கினாள். மிகவும் ஏழை எனத் தென்பட்டவர்களுக்கு அதைப் பகிர்ந்து கொடுத்தாள். இப்போ அவளுக்கென்று எதுவுமே கிடையாது. அந்தத் தூய வெள்ளைப் புடவை மட்டுமே அவள் சொத்து. அங்கிருந்தவர்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். சிலர் வினோதமாகப் பார்த்தனர். சிலரோ பாவம் மூளையில தட்டிப்போட்டுதாக்கும் என்றனர். ஓரு பெரியவர் அவளருகில் வந்தார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்க இப்படி இருக்கவேண்டி வருமோ யாருக்குத் தெரியும் ஏன் அவசரப்பட்டு என்று இழுத்தார். அவள் யாரையும் பொருட்படுத்துவதாக இல்லை. அவள் தன்னை இம்மண்ணுக்கு அர்ப்பணிக்கத் துணிந்துவிட்டாள்
சின்னச் சின்ன ஆசைகளிலே சிம்மாசனமிட்டு காதலிற்காய்ப் போராடி வெற்றி கண்டவள் தான் ஆயினும் ஆண்டவனிடம் தோற்றவள். தாலி தொங்கிய வெண் சங்குக் கழுத்தினிலே நஞ்சுமாலையை ஏற்று பாசறைப் பயிற்சி பெற்று எதிரிகளுடன் போராடி எம்மினத்தின் விடியலுக்காய் பூக்கவுள்ள பூ அவள். காதலால் வாடிய வெண் புறா இப்போ சுதந்திர தாகங் கொண்ட சுதந்திரப் பறவையாக மாறவென விரைகின்றாள்.
எழுதியவர்-நளினி மகேந்திரன்
நன்றி எழில்நிலா
|
|
|
| புளுடோ - பனிக்கட்டி கிரகம்!!! |
|
Posted by: Rasikai - 02-02-2006, 10:33 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (14)
|
 |
<b>புளுடோ - சூரியனை சுற்றி வரும் நவக்கிரகங்களில் கடைசியாக இருக்கும் பனிக்கட்டி கிரகம்.</b>
<img src='http://img138.imageshack.us/img138/5200/vinkalam4ws.gif' border='0' alt='user posted image'>
சூரிய குடும்பத் திலுள்ள கிரகங்களில் நாம் மிகவும் குறைவாக அறிந்து வைத்திருக்கும் குட்டி கிரகம். புளுடோவை பற்றி நாம் அறிந்த அனைத்து தகவல்களையும் ஒரு சிறிய போஸ்ட் கார்டில் அடக்கி விடலாம். ஆனால் இந்த நிலை இனி தொடரப் போவதில்லை புளுடோவை நோக்கி பயணிக்க இதோ தயாராகிவிட்டது நாசாவின் புதிய நியூ ஹாரிசான் விண்கலன்.
பலவிதங்களில் புளுடோ ஒரு வித்தியாசமான கிரகம்தான். மற்ற கிரகங்கள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் புளுடோ மட்டும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓவேர் டேக் செய்தபடி சுற்றி வருகிறது.
1979 முதல் 1999 வரை 20 ஆண்டுகளுக்கு புளுடோ கிரகம் நெப்டியுனுக்கு முன்பாக குறுக்கே வந்திருந்தது. 1989முதல் புளுடோ அதன் நீள்வட்டப்பாதையில் சூரியனை விட்டு தொலைவில் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் அது சூரியனை நெருங்கு வதற்குள் 2230ஆம் வருடம் வந்துவிடும். புளுடோவில் ஒரு நாள் என்பது பூமியை பொருத்தவரை 6 நாட்கள் 9 மணி நேரத்திற்கு சமம். ஒரு வருடம் என்பது நம்மை பொறுத்தவரை 248 வருடங்கள். அடேங்கப்பா... இதுபோக புளுடோவிற்கு 3 நிலவுகள் உண்டு. அதன் அளவில் பாதியளவுள்ள சாரன் எனப்படும் நிலவோடு தற்போது புதிதாக மேலும் 2 நிலவுகள் (இன்னும் பெயரிடப்பட வில்லை) 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அளவில் பார்த்தால் புளுடோ நமது பூமியின் நிலவான சந்திரனை விடவும் சிறியதுதான். எனவே புளுடோவை ஒரு கிரகமாகவே கருதக்கூடாது அது ஒரு பெரிய விண்கல்லே என்று சில விஞ்ஞானிகள் போர்க்கொடி உயர்த்தினாலும் பெரும்பாலானவர்கள் புளுடோவை ஒரு கிரகமாக ஒப்புக்கொள்ளலாம் என்று ஓட்டு போடுகின்றனர்.
பூமியிலிருந்து புளுடோவிற்கு செல்லக்கூடிய இந்த பயணத்தின் தூரம் எவ்வளவு தெரியுமா வெறும் 500 கோடி கிலோ மீட்டர்கள்தான். இந்த தூரத்தை கடக்க நமது விண்கலத்திற்கு 13 வருடங்களாகும். ஆனால் நாம் சரியான சமயத்தில் விண்கலனை செலுத்தினால் பயணத்தின் இடையில் குறுக்கிடும் ஜுபிடர் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி எல்லைக்கு அருகில் சென்று அதன் உதவியால் விண்கலனின் வேகத்தை அதிகரிக்கலாம்.
ஜனவரி 11க்கும் பிப்ரவரி 2க்கும் இடைப்பட்ட நாட்களுக்குள் விண்கலன் விண்ணில் ஏவப்பட்டால் ஜுபிடர் கிரகத்தின் உதவியோடு ஒன்பதரை வருடங் களுக்குள்ளேயே (2015இல்) புளுடோ கிரகத்தை அடைந்து விட முடியும். முதல் காரியமாக புளுடோ விலிருந்து 1 கிலோ மீட்டர் வரையும் அதன் நிலவான சாரனுக்கு அருகே 27000 கிலோ மீட்டர் வரையும் சென்று புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். சாதாரணமாகவே புளுடோ கிரகத்தில் வெப்பம் மைனஸ் 300 டிகிரிக்கும் கீழே குளிர்ந்து விறைத்திருக்கும். விஷயம் இப்படியிருக்க நமது விண்கலம் புளுடோவை நெருங்கும் சமயத்தில் அது சூரியனை சுற்றி வரும் நீள் வட்டப் பாதையிலிருந்து அதிக தொலைவில் இருக்குமென்பதால் அதீத குளிரிருக்கும். (நல்ல வேளை இந்த விண் கலத்தில் மனிதர்களை அனுப்பப் போவதில்லை).
ஒருவேளை புளுடோ பயணத்தின் முடிவில் ஏதேனும் எரிபொருள் மிச்சமிருந்தால் - விண்கலனை மேலும் தொடர்ந்து செலுத்தி புளுடோவை தாண்டியிருக்கும் குயிப்பர் பெல்ட் எனப்படும் பகுதியில் ஏராளமாக மிதந்து கொண்டிருக்கும் ராட்சத விண் கற்களை பற்றி ஆராய அனுப்பலாம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஏதோ விண்வெளிப்பயணம் என்றால் சும்மா என்று நினைத்து விட்டீர்களா... தற்போதுள்ள பட்ஜெட்டின்படி நியூ ஹாரிசான் விண்வெளிப்பயணத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பின்படி 3000 கோடி ரூபாய்கள் செலவாகும். அதில் இங்கிருந்து ராக்கெட் _லம் பூமியின் புவியீர்ப்பு சக்தியை தாண்டுவதற்கே 900 கோடியை ஏப்பம் விட்டுவிடும்.
இத்தனை செலவு செய்து இந்த பயணம் தேவை தானா என நம் மனதில் கேள்வி எழலாம். தற்போது நமக்கு பூமி என்பது பாதுகாப்பானதாக தோன்றினாலும் வருங்காலத்தில் என்றாவது ஒருநாள் மனித குலம் பூமியை விட்டு குடி பெயர வேண்டிய ழே;நிலை ஏற்படலாம். அந்த சமயத் தில் நாம் இப்போது மேற்கொள்கிற இந்த பயணங்களின் _லம் பெறப்பட்ட தகவல்கள் பேருதவியாக இருக்கும்.
புளுடோ கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் இல்லை. ஆனால் சூரியன் உருவான கால கட்டத்தில் அங்கு நிலவிய தட்பவெப்ப நிலையை பற்றியும் வருங்காலத்தில் அங்கு என்னென்ன மாற்றங் கள் நிகழக்கூடும் என்பதையும் இந்த பயணத்தின் _லம் அறிய முடியும்.
நீள்வட்டப்பாதையில் தற்போது சூரியனை விட்டு புளுடோ விலகிச்சென்று கொண்டிருப்பதால் இப்போது இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் புளுடோவை ஆராய்வதற்கு 200 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
இந்த நியூ ஹாரிசான் பயணம் வெற்றிகரமாக முடிந் தால் நவக்கிரகங்களை பற்றிய அனைத்து தகவல்களை யும் ஓரளவிற்கு தெளிவாக அறிந்தவர்களாகிவிடுவோம். ஆனால் இந்த பயணம் நம் தேடலுக்கு ஒரு முடிவாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சூரிய குடும்பத்தை தாண்டிய நமது தேடலுக்கு இந்தப் பயணம் ஒரு ஆரம்பமாகவே இருக்கும்.
-பாலாஜி
dinakaran.com
|
|
|
| சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார் |
|
Posted by: நர்மதா - 02-02-2006, 09:54 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
சினிமாவுக்காக காதலியை இழந்தேன்: ஆர்யா மனம் திறக்கிறார்
உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் ஆர்யா.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடிப்பில் வெளிவந்த `அறிந்தும் அறியாமலும்' படம் இவருக்கு தனி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
`ஒரு கல்லூரியின் கதை'யில் வித்தியாசமான வேடம் ஏற்றார். அடுத்து `கலாபக்காதலன்', `பட்டியல்', படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. கவுதம் மேனன், ஜீவா போன்ற பிரபல டைரக்டர்களே இவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்ப்பட உலகின் முக்கிய கதாநாயகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஆர்யாவிடம் அவர் கடந்து வந்த பாதை பற்றி கேட்டபோது...
"என் அப்பா ஓட்டல் வைத்து நடத்துகிறார். படிப்பதற்காக கேரளாவில் இருந்து வந்தேன். ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் தெரியாது. உலகம் அறியும் விளையாட்டு வீரனாக பெயர் வாங்கவேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது.
விளையாட்டில் நான் காட்டிய ஆர்வம் காரணமாக இத்தாலியில் நடந்த `அதலெட்டிக்' பயிற்சியில் கலந்து கொள்ள தேர்ந்து எடுக்கப்பட்டேன். 10-வது வகுப்பு படிக்கும் போதே, `பாக்கெட் மணி'க்காக மாடலிங் செய்யத் தொடங்கி னேன்.
கல்லூரியில் படித்தபோது, `மாடலிங்'கில் தனி கவனம் செலுத்தினேன். என்றாலும், அப்போது எனக்கு சினிமா பற்றி எந்த எண்ணமும் இல்லை. என்னுடன் `மாடலிங்' செய்த பெண்கள் அனைவரும் சினிமா கனவுகளுடனேயே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால் எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.
இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு `சாப்ட்வேர்' நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது இடை இடையே சினிமா கம்பெனிகளுக்கு சென்று நடிக்க சான்ஸ் கேட்டேன். டைரக்டர் ஜீவாவை சந்தித்தேன். அவர் 100 பேருக்கு `ஸ்கரீன் டெஸ்ட்' நடத்தினார். அதில் நான் தேர்வு பெற்றேன்.
6 மாதத்தில் முடிய வேண்டிய எனது முதல் படம் 3 வருடங்களாக வெளி வரவில்லை. இந்த நேரத்தில், எனக்கு வேலைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் நான் நடித்த படத்தை முடித்து கொடுக்காவிட்டால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அமெரிக்கா போகவில்லை.
கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் அனுபவம் ஏற்பட்டது. என்னை ஒரு பெண் விரும்பினாள். நானும் காதலித்தேன். படிப்பு முடிந்த பிறகு கிடைத்த வேலைக்கு சரியாக செல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தள்ளி வைத்து விட்டு முதல் படம் வெளிவருவதை எதிர்பார்த்து அந்த கனவிலேயே இருந்தேன். எத்தனை வருடங்கள்தான் அவள் எனக்காக காத்திருப்பாள். என் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். காதலையும், காதலியையும் தியாகம் செய்து விட்டு சினிமாவில் நல்ல நேரத்துக்காக காத்திருந்தேன். அது வீண் போகவில்லை.
`கலாபக் காதலன்' படப்பிடிப்பின்போது, நடிகர் விக்ரம் தனது குழந்தைகளுடன் அங்கு வந்தார். `என் குழந்தைகள் உங்கள் விசிறிகள்' என்று சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. இப்போது அதை கொடுத்து விட்டேன். பழைய வீட்டில் தான் வசிக் கிறேன். இன்றும் என் நண்பர் களை மறக்கவில்லை. இப் பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் `புட்பால்' ஆடுகிறேன். தியேட்டரில் நண்பர்களுடன் சென்று படம் பார்க்கிறேன்.
ரசிகர்களிடம் நல்ல நடிகன் என்று பெயர் வாங்க முடிந்த வரை உழைக்கிறேன். நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ...என்றார் ஆர்யா.
maalaimalar.com
|
|
|
|