| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 445 online users. » 0 Member(s) | 442 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,467
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை :கூறுவது ஜே.வி.பி |
|
Posted by: வினித் - 01-29-2006, 09:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
விட்டுக்கொடுப்பு!
<b>சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலோ அன்றி ஒஸ்லோவிலோ நடத்தக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத சுவிற்;சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஜே.வி.பி எதிர்க்காது என்பதே ஜெனீவா பேச்சுவார்த்தை குறித்து ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடாகும்.</b>
வேறொரு விதத்தில் கூறுவதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கம் போட்ட நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துள்ளது போன்றும் அரசாங்கத்திற்கு இவ் வெற்றியானது ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது போட்ட அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என்பது போன்றதுமே ஜே.வி.பி.யின் நிலையாகக் கொள்ளத்தக்கது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒஸ்லோவில் இருந்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டமைக்குப் பலர் தாமே காரணம் என திருப்திப்பட்டும் கொள்ளலாம். பெருமைப்பட்டும் கொள்ளலாம். அதாவது விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர்கள்; ஒருவகையில் மிரட்டும் தொனியில் பேசியவர்கள் தமது நடவடிக்கைகளே காரணம் எதையும் கூறிக்கொள்ளவும், திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடும்.
இதேவேளை சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஒஸ்லோவிற்கு வரப்போவதில்லை எனப்பிடிவாதமான போக்கைக் கடைப்பிடித்ததன் காரணமாக விடுதலைப் புலிகள் இணங்கி வரவேண்டியதாயிற்று என்றும் ஜே.வி.பி போன்ற பௌத்த-சிங்கள பேரினவாத சக்திகள் விடுதலைப் புலிகள் பணிந்து போய்விட்டதாகவும் கூறிக்கொள்ள முடியும்.
ஆனால் அடிப்படையில் நிகழ்ந்ததென்னவெனில் சிறிலங்கா அயுதப் படைத்தரப்பு அப்பாவித் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை காரணமாகவும் சமாதானத்தின் மீது விடுதலைப் புலிகள் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிப்படுத்தும் வகையிலுமே புலிகள் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தனர் என்பதே உண்மையாகும்.
இதனைத் தவிர சர்வதேச சமூகம் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் காண வேண்டும் எனக் கொண்டிருந்த அபிப்பிராயம்- குறிப்பாக சமாதான முயற்சிகளில் நோர்வே அரசு எடுத்துக் கொண்டிருந்த கரிசனை என்பனவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டனர் என்பதே நிதர்சனமானதாகும்.
இதனைவிடுத்து ஜே.வி.பி.யினரோ அன்றி சில பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளோ பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் சிறிலங்கா ஆயுதப் படையினருக்குப் பயந்தோ அன்றி சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைக்கக்கூடியதான இராணுவ உதவிகள் குறித்து கலக்கமடைந்தோ புலிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
விடுதலைப் புலிகளின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் எவருமே விடுதலைப் புலிகள் அச்சத்தின் காரணமாக விட்டுக் கொடுப்புக்கள் எதையும் செய்யும் இயக்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த கால வரலாறானது அச்சமூட்டிப் புலிகளைப் பணிய வைக்க முடியாது என்பதை எவருக்குமே தெளிவுபடுத்தத்தக்;கதாகும்.
இது ஒருபுறம் இருக்க ஜே.வி.பி கூறுவது போன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவதையே தாம் எதிர்த்ததாகக் கூறுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. அதாவது ஆசியாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுதல் வேண்டும் என்றே அது வலியுறுத்தி வந்தது. தற்பொழுது அதனை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெறாத நாடொன்றில் பேசுவதற்குத் தாம் எதிர்ப்பில்லை எனக் கூற ஆரம்பித்துள்ளனர். அதாவது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் உள்ளது ஜே.வி.பி.யின் விளக்கம்.
ஆனால் ஜே.வி.பி.க்கு ஒன்று தெரியாது போல் உள்ளது. ஐரோப்பாவில் இலங்கைத் தமிழ் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் சுவிற்;சர்லாந்தும்; ஒன்று என்பது. சிறப்பாகக் கூறுவதானால் நோர்வேயை விட சுவிற்;சர்லாந்திலேயே அதிக இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது.
இதனைத் தவிர ஜே.வி.பி.யின் மற்றொரு சிறுபிள்ளைத்தனமான பேச்சும் உள்ளது. அதாவது ஜெனீவா செல்லும் புலிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அது கோருகிறது. அதாவது சுவிஸ் செல்லும், விடுதலைப் புலிகள் அங்குள்ள தொண்டர் அமைப்புக்களுடன் இணைந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே ஜே.வி.பி.யினரின் கோரிக்கை ஆகும். இது அவர்களின் விளங்காத்தனத்தைக் காட்டுகின்றது என்பதைத் தவிர வேறு எதையும், கூறி விட முடியாது. ஏனெனில் சுவிஸ் செல்லும் விடுதலைப் புலிகள் யாருடன் பேசுகின்றார்கள், கதைக்கின்றார்கள் என்பதை சிறிலங்கா அரசாங்;கத்தால் தீர்மானிக்க முடியும் எனக் கோருவது அரசியலில் அரிச்சுவடி புரியாதவர்களின் பேச்சாகும்.
இந்த ரீதியில், ஜே.வி.பி கூறுவது போன்று ஜெனீவா செல்ல விடுதலைப் புலிகள் உடன்பட்டமையானது ஜே.வி.பி. போன்ற அமைப்புகளுக்குக் கிடைத்த வெற்றியல்ல. சமாதானத்தில் விடுதலைப் புலிகள் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிப்படுத்தும் ஒன்றே ஆகும். அது மாத்திரமன்றி ஒஸ்லோவில் இருந்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டமை விட்டுக்கொடுப்பே ஒழிய இறங்கி வந்தமையல்ல. இதனை உணர்த்தத்தக்கதே ஆரம்பப் பேச்சுவார்த்தைகள்; யுத்த நிறுத்த அமுலாக்கம் பற்றியதாக இருக்கும் என்பது. நன்றி: தமிழ்நாதம்
|
|
|
| புதிய முகம் தேவை |
|
Posted by: ஊமை - 01-29-2006, 05:28 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
புதிய முகம் தேவை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Kofi Annan, the seventh Secretary General of the United Nations, will demit office on December 31. The race for his job has started. Three distinguished Asians from Sri Lanka, South Korea, and Thailand have already started lobbying for the job. They believe, following an informal tradition, that it's now Asia's turn. "Not so fast,'' says the US ambassador to the UN, John Bolton. "We don't believe that the next secretary general belongs to any particular region,'' he informs.
The truth is that there has been an informal geographic rotation for the top diplomatic post at the United Nations. To date three secretaries-general have come from Europe, two from Africa, one from Latin America, and one from Asia. According to the Sri Lankan candidate, "We are not asking for affirmative action for Asia But there has been a tradition of rotation; this is why there is a widespread consensus that the next secretary general should come from Asia.''
The United States has identified characteristics of the sort of individual who will get its nod. A US official said that Washington seeks a "strong manager who's comfortable making tough decisions.'' Decoded, that would mean: one who believes that the US is above the UN; one who would act to tailor UN's actions to conform with US policy; one who is a lukewarm multilateralist but believes US interests best serve the world; and one who would not dare to call any US actions "illegal,'' as Kofi Annan did.
As a rule, the prospective secretary general is nominated by the Security Council after which the name is submitted to the General Assembly for a vote. Before Kofi Annan assumed office in 1997, three women were in the running: Norway's Prime Minister, Gro Harlem Brundtland, the UN High Commissioner for Refugees, Sadako Ogata, and Mary Robinson, former President of Ireland. Definitely out of the running is any individual from the Big Five on the Security Council: China, France, Russia, the United Kingdom, and the United States. This is an attempt to prevent the over-concentration of power in any country's hands.
Any candidate who wishes to be successful must have the support of the permanent members of the Security Council who can veto any nominee. Among the Big Five, it is obvious that it is the United States that holds the most influence as the world's only superpower. In other words, among equals some are more equal. That's precisely why it was a US official who stepped up to state the requirements for the job and to pooh pooh the ambitions of the Asian candidates. Wherever one finds the United States these days, one can be almost certain to find the British in tow. "We are looking for the best person capable of meeting the demands of the job,'' echoes Britain's ambassador to the UN.
The appointment of top diplomat at the UN is as political as it comes. This was emphasised from the outset because the first appointment came after World War II when the Cold War was beginning to heat up and each of the major protagonists, the United States and the Soviet Union, wanted to corral votes at the UN. Today, the Cold War is over but some residual effects persist. Furthermore, which top dog wants to lose its spot!
The superpower wants to ensure that the UN serves as an extension of US foreign policy. For this, Bolton, George W Bush's man at the UN, is the perfect advocate.
John R Bolton, in whom US President Bush has expressed "complete confidence,'' is a neocon, Republican loyalist, a hawk on US foreign policy, and a most strident opponent of the United Nations. An avowed anti-multilateralist, he believes that international law has no validity, that " There is no such thing as the United Nations,'' and " If the UN secretary (sic) building in New York lost ten stories, it wouldn't make a lot of difference.'' After the UN voted not to authorise the administration's planned invasion of Iraq, Bolton saw the decision as "further evidence to many why nothing should be paid to the UN system.'' To say that Bolton is in New York to do a hacking operation on the UN is an understatement. It is not difficult to see why his nomination was stalled in Congress for five months and GW was forced to bypass Congress and make a recess appointment. We will follow the appointment of the next Secretary General with interest.
ஆதாரம்
|
|
|
| FBI ம் SCOTLAND YARD உம் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை |
|
Posted by: ஊமை - 01-29-2006, 04:20 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (11)
|
 |
FBI ம் SCOTLAND YARD உம் தமிழருகு எதிராக நடவடிக்கை
Foreign investigation agencies such as the US Federal Bureau of Investigation (FBI) and Britain`s Scotland Yard have set up special units to crack down on Sri Lankans who are involved in financial crimes as most of the cases are connected to the funding of the LTTE.
There have been several reports by the FBI and Scotland Yard of Sri Lankans migrating to the US and UK and laundering money for the LTTE which is listed as a terrorist organisation.
The Sunday Times learns that now the FBI is keeping a close watch on Sri Lankans who use their credit card to purchase goods worth over US $150 since there have been several cases in the US where the LTTE had purchased several items from stolen credit cards and forged credit cards. These items range from laptop computers, electronic items and even material to make explosives. The Sunday Times also learns that there had been over 200 such cases during last year alone and most of them had not been taken into serious consideration since the US had mainly focused its attention on terror organisations the US is waging war against.
The recent focus on the LTTE came after Foreign Minister Mangala Samaraweera`s visit to the US where he had talks with US Secretary of State Condoleezza Rice.
However LTTE gangs in the UK are thriving and there have been reports where some LTTE members had been extorting money from Tamil expatriates who had migrated to the UK due to the ethnic conflict. There have been several reports filed in Scotland Yard where the LTTE had torched houses and caused damage to property belonging to Sri Lankan Tamils in the UK when they refused to fund the organisation. The move to have a specialised unit to crack down on LTTE gangs involved in several crimes during the past in London came in the wake of the arrest of six former LTTE cadres in East London when Scotland Yard in a special operation raided the house they were living in. The police found several computer hardware devices as well as fourteen stolen credit cards and six forged ones.
However Sri Lanka`s Interpol sources told The Sunday Times that even though the LTTE carries out several financial crimes Sri Lanka is not advanced enough to track them down.
Central Bank authorities have suggested having a Financial Investigation Unit, which will work in collaboration with Interpol and other international investigation organisations to reduce financial crimes and to freeze the funding of terrorist organisations such as the LTTE.
ஆதாரம்
|
|
|
| வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் |
|
Posted by: தூயவன் - 01-29-2006, 03:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
<b>வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் </b>
இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர்.
தகவல்: சங்கதி
|
|
|
| உதவி |
|
Posted by: நர்மதா - 01-29-2006, 01:52 PM - Forum: இணையம்
- No Replies
|
 |
yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை
இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும்
இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள்
நன்றி
|
|
|
| கடவுளுக்கு கண் இல்லை... |
|
Posted by: Vishnu - 01-29-2006, 01:21 PM - Forum: நகைச்சுவை
- Replies (4)
|
 |
<b>கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் )
நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை...
நிறுவல்:-
அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது )
சிவம் கடவுள்
ஆகவே அன்பு = கடவுள்
அன்பும் காதலும் ஒன்று
அன்பு = கடவுள் என்பதால்
ஆகவே காதலும் கடவுளும் ஒன்று
காதல் = கடவுள்
காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது)
காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது )
காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:</b>
|
|
|
| புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு |
|
Posted by: வினித் - 01-29-2006, 12:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!
*<b> போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்</b>
நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார்.
புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாதிபதி மகிந்தவைச் சூழ இருக்கின்றனர்.
ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், யுத்தம் மூலமான தீர்வுக்கு இந்த அரசுக்கு பெரும் தடையாக இருப்பதால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தும் அதேநேரம், தீர்வொன்றை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து அரைகுறைத் தீர்வை திணித்து விடலாமெனவும் புதிய அரசு கருதுகிறது.
முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்றே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட முனைகின்றார். சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை வெளியுலகுக்குக் கேட்கச் செய்யாது, இந்தத் தடை மூலம் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுகளைப் பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாமெனவும் இந்த அரசு கருதுகிறது.
ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள மிகப்பெரும் செல்வாக்கு சர்வதேச ரீதியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்துவரும் அங்கீகாரங்களெல்லாம், சாணேற அரசுக்கும் முழம் சறுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.
ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் இன்று வடக்கு வரை வந்துவிட்டது. இது பெரும் போர்ச் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே, போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பாக ஜெனிவாவில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களாகும்.
இந்தப் பேச்சுக்கான இடத் தெரிவிலும் இந்த அரசு ஒரு அரசியலை நடத்த முயன்றது. இலங்கையில் அல்லது, ஆசியாவில் எங்காவது ஒரு நாட்டிலேயே பேசுவோமென உறுதிபடக் கூறியது. ஒஸ்லோவில் பேசலாமென்ற புலிகளின் கோரிக்கையையும் நிராகரித்து வந்தது.
புலிகள் மீது கடந்த வருடம் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலம் புலிகளுக்கு தடை விதித்துவிட வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், சர்வதேச மயப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதற்கு புலிகள் மீதான ஐரோப்பியத் தடையும் இலங்கை அரசுக்கு அவசியம் தேவை. இதனாலேயே புலிகளுடனான பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றில் நடத்தாது ஆசியாவில் எங்காவது ஓரிடத்தில் நடத்திவிடவேண்டுமென இலங்கை அரசு பெரும் முனைப்புக் காட்டி வந்தது.
ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகளைத் தடைசெய்ய முடியாததொரு நிலை ஏற்படலாம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்கள் நடைபெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சர்வதேச மயப்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு விரும்பவில்லை.
புலிகள் மீது ஐரோப்பா தடை விதித்துவிட்டால் அங்கு புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படுவதுடன், அவர்களது நிதி சேகரிப்பு மற்று பிரசார நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்ட அதேநேரம், சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையை ஆசிய மயப்படுத்தவேண்டிய அவசரமும் இலங்கைக்குள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போன்று ஐரோப்பிய நாடுகளில் மகிந்தவுக்கு செல்வாக்கில்லை. அதேநேரம், ஐரோப்பிய தலைவர்களை தம்வசப்படுத்திய ஆற்றல் அப்போதைய அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கும், ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிருந்தது. ஆனால், தற்போது மகிந்த ராஜபக்ஷவுக்கோ, ஐரோப்பிய தலைவர்களை நெருங்கும் ஆற்றல் மிகமிகக் குறைவு. புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் நிலைமை அதுதான்.
அமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொன்றார்களெனக் கூறுவோர், கதிர்காமரைக் கொல்வதற்கு புலிகள் சிந்தித்தபோதே ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷவை வெற்றபெறச் செய்யவேண்டுமெனவும் புலிகள் திட்டமிட்டு விட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மகிந்தவின் தொடர்புகளெல்லாம் இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசியாவுக்குள்ளேயே இருப்பதால், சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதன் மூலம் ஆசியத் தலைவர்களின் உதவிகளைப் பெற்று புலிகளை மடக்கிவிடலாமெனவும் மகிந்த சிந்திப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால்தான் ஐரோப்பாவிலோ அல்லது நோர்வேயிலோ பேச்சுக்களை நடத்தப்போவதில்லையென மகிந்தவும் அவரைச் சார்ந்தவர்களும் அடித்துக்கூறி வந்தனர்.
ஆனாலும், ஐரோப்பிய நாடுகளில் எங்காவது பேச்சுக்களை நடத்துவோமெனக் கூறுமளவிற்கு புலிகள் மகிந்தவுக்கு ராஜதந்திரமாக அழுத்தம் கொடுத்துவிட்டனர். இதற்கெல்லாம் அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில்தான் பேச்சு இல்லையேல், பேச்சே இல்லையெனத் திரும்பத் திரும்ப கூறிவந்தனர்.
வடக்கு - கிழக்கில் தங்கள் மீதான நிழல் யுத்தத்திற்கு கடுமையாகப் பதிலடி கொடுத்து, படைத்தரப்புக்கு பெரும் அச்சமூட்டி வந்த அதேநேரம், ஒஸ்லோவில்தான் பேச்சு என புலிகள் மறுபுறம் கூறிவந்தபோது, புலிகளின் இந்தக் கோரிக்கைக்கு அடிபணியக்கூடாதென ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அரசும், புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்கப்போவதில்லையென அடித்துக் கூறிவந்தது.
நோர்வேயை அனுசரணையாளராக ஏற்க முடியுமென்றால், ஏன் நோர்வேயில் பேசமுடியாதெனவும் புலிகள் கேள்வி எழுப்பியபோது, நோர்வேயில் பேச்சுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லையெனக் கூறி, ஐரோப்பாவில் எங்காவது பேசலாமென ஜனாதிபதி மகிந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளின் பெயரையும் சிபார்சு செய்திருந்தார். அத்துடன், இந்த ஐந்து நாடுகளில் ஒன்றைத் தவிர, வேறெங்கும் பேசப்போவதில்லையெனவும் அடித்துக் கூறியிருந்தார்.
ஆனால், புலிகளை எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தபோது எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளாது சுவிற்சர்லாந்தில் பேச புலிகள் இணக்கம் தெரிவித்தனர். இதன்மூலம், ஒஸ்லோவில்தான் பேச வேண்டுமென்ற புலிகளின் கோரிக்கையை நிராகரித்து, தான் கூறிய ஐந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிலேயே பேச்சை நடத்த ஜனாதிபதி மகிந்த வைத்துவிட்டாரென அவரை சார்ந்தவர்கள் மார்த்தட்டினர்.
ஆனால், எந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் புலிகளைத் தடைசெய்து ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தாது இந்தப் பிரச்சினையையும் சர்வதேச மயப்படுத்துவதை தடுக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்தவும் அவரைச் சார்ந்தோரும் கங்கணம் கட்டினார்களோ, அதே மகிந்த மூலமே ஐரோப்பிய நாடொன்றில்தான் பேசுவோம் வேறு எங்கும் (ஒஸ்லோவில்) பேசமாட்டோமெனக் கூறச் செய்தது மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடொன்றில் பேச்சுக்களுக்கான திகதியையும் நிர்ணயித்ததன் மூலம் இந்த விவகாரத்தில் புலிகள் ராஜதந்திர ரீதியில் பெருவெற்றி பெற்றுவிட்டனர்.
நிழல் யுத்தம் வடக்கிலும் பரவி நிஜ யுத்தம் பாரிய அளவில் வெடிக்கப் போகின்றது என்ற அச்சம் எழுந்தபோது, போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாகக் கடைப்பிடித்து போரைத் தவிர்க்குமாறு உலக நாடுகளெல்லாம் வற்புறுத்தின. போர் நிறுத்த உடன்பாடு முறிவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும் போர் நிறுத்த உடன்பாட்டை உடனடியாக முற்று முழுதாக அமுல்படுத்துவதன் மூலமே பெரும் போரை தவிர்க்க முடியுமெனவும் இந்த உலக நாடுகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தின.
இதில், அமெரிக்கா ஒரு படிமேல் சென்று புலிகளை மிகக் கடுமையாக எச்சரித்தது. போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி புலிகள் மீண்டும் போருக்குச் சென்றால், அதற்காக அவர்கள் மிகப் பெரும் விலையைச் செலுத்த வேண்டி வருமெனவும் அவ்வாறு போர் தொடங்கினால் மிகவும் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தையே சந்திக்க வேண்டியிருக்குமெனவும் அதற்கேற்ப இலங்கை படைகளுக்கு அமெரிக்கா உதவி வழங்குமெனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கையும் சர்வதேச நாடுகளின் கரிசனையும், போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குங்கள் என்பதற்காகவேயாகும். 2002 இல் செய்யப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை மீற வேண்டாமெனவும் வற்புறுத்துகின்றன.
புலிகளும் ஆரம்பம் முதல் இதனைத்தான் வற்புறுத்தி வருகின்றனர். 2002 இல் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதல் கடந்த நான்கு வருடங்களாக அதனைத்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனைப் புலிகள் இவ்வளவு காலமும் கூறியபோது கேட்காத சர்வதேச சமூகம், இதனை இப்போது புலிகளுக்கு திருப்பி கூறுவதுதான் வேடிக்கையானது.
வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கி சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண்டுமாயின் போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனாலும், இந்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதாகக் கூறி உடன்பாட்டில் கைச்சாத்திட்ட அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அதன் பின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி சந்திரிகாவோ இந்த உடன்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை.
இன்று புதிய ஜனாதிபதி மகிந்தவும் இதனைக் கடைப்பிடிக்காத அதேநேரம் அவரது ஆட்சியில்தான் உடன்பாடு முழுமையாக மீறப்பட்டு நிழல் யுத்தம் உச்சக்கட்டத்திற்குச் சென்று பெரும் போர் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதனைத் தடுக்கவே போர் நிறுத்தம் முழுமையாக அமுலாக்கப்படுவது குறித்து ஜெனிவாவில் பேச்சுகள் நடைபெறவுள்ளன.
இந்தப் பேச்சுகளுக்கு இணங்கியதற்காக இரு தரப்பையும் முழு உலகமும் பாராட்டுகின்றன. போர் நிறுத்த உடன்பாட்டிலுள்ள அம்சங்களை முழுமையாக அமுல்படுத்தி இயல்பு நிலையை விரைவாக உருவாக்கி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுகளை ஆரம்பியுங்களெனவும் சர்வதேச சமூகம் கூறியுள்ளது.
இதன் மூலம், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களைவிட போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பான பேச்சுகள் முக்கியத்துவமடைந்துள்ளன. உடன்பாட்டை முழுமையாக அமுலாக்குவதற்காக முழு உலகமும் இரு தரப்பையும் கடுமையாக வற்புறுத்தியுள்ளதால் இந்த உடன்பாட்டை அமுலாக்கத் தவறும் தரப்புக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த உடன்பாட்டை இலங்கை அரசு ஒரு போதும் முழுமையாக அமுலாக்கமாட்டாதென்ற உண்மையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதற்கான மிகப் பெரும் வாய்ப்பு புலிகளுக்கு கிடைத்துள்ளது.
இயல்பு நிலையை உருவாக்கி யுத்த நிலைமையை தவிர்ப்பதற்கு மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இந்த உடன்பாட்டிலுள்ளன. அவற்றை அமுல்படுத்தும் பட்சத்தில் யுத்த சூழ்நிலை இல்லாது போய் விடும். ஆனாலும், அந்த மூன்று முக்கிய அம்சங்களையும் அமுல்படுத்த கடந்த நான்கு வருடங்களாக மறுத்து வரும் அரசுக்கு ஜெனிவா பேச்சுகளின் மூலம் அவற்றை அமுல்படுத்த புலிகள் குறுகிய கால அவகாசம் கொடுப்பார்களெனக் கருதப்படுகிறது.
அதாவது, *அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாது செய்து அந்தப் பகுதிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.*மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து படையினர் விலக வேண்டும். *தமிழ் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய மூன்று அம்சங்களாகும்.
இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த இலங்கை அரசு சம்மதிக்காவிடின், போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வரலாம். புலிகளும் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவும் கூடும்.
ஏனெனில், இந்த மூன்று அம்சங்களையும் அமுல்படுத்த அரசு தவறுமானால், அவர்கள் வடக்கு-கிழக்கில் இயல்பு நிலையை உருவாக்கத் தயாரில்லையென்பதும் யுத்த சூழ்நிலையை தவிர்க்க அரசு விரும்பவில்லை என்பதுமே அர்த்தமாகும்.
போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கலை வற்புறுத்தி வரும் சர்வதேச சமூகம், இவ்வாறான தொரு நிலையில் என்ன செய்யப்போகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்த உடன்பாடு அமுல் படுத்தப்படாது அது ஒரு தரப்பால் கடுமையாக மீறப் பட்டதாலேயே நாட்டில் இன்று பெரும் போர்ச் சூழல் ஏற்பட்டதை ஏன் இது வரை உலக நாடுகள் உணரத் தவறின என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிலையில் ஜெனிவா பேச்சுகள் மிக மிக முக்கியமானது. போர் நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்த தடையாக இருப்பவர்கள் யார்? இயல்பு நிலை உருவாகுவதை தடை செய்பவர்கள் யார்? பேச்சுகள் நடைபெறுவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் யார்? என்பது தெளிவாகத் தெரிய வருவது மட்டுமல்லாது, இதற்கெல்லாம் தடையாக இருக்கும் தரப்பிற்கு எதிராக இந்த சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது என்பது தெரிந்து விடும்.
http://www.thinakural.com/New%20web%20site...ry/29/index.htm
|
|
|
| காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ |
|
Posted by: Danklas - 01-29-2006, 11:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (86)
|
 |
மும்பையில் காத்திருந்த பயங்கரம்!
<b>* பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள்
* யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள `றோ' புலனாய்வு அதிகாரிகள்...
* `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்'
தாயகன்</b>
<b>இலங்கைத் தமிழரென்றால் அவன் புலி, பாகிஸ்தான் முஸ்லிமென்றால் அவன் அல் - ஹைடா தீவிரவாதி என்னும் இந்திய புலனாய்வுத்துறையின் அணுகுமுறையினால் பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கும், சிறை வாழ்க்கைக்கும் உட்பட வேண்டிய அபாயமானநிலை இந்தியாவிலுள்ளது.
இந்திய விமான நிலையங்களில் காத்திருக்கும் புலனாய்வுத்துறையினர் தமது பயணத் தேவைகளுக்காக அங்கு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களை குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழ் இளைஞர்களை இலக்கு வைக்கின்றனர். ஏதோவொரு பொய்க் காரணம் கூறி கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களுக்கு உடனடியாகவே புலிச்சாயம் பூசும் புலனாய்வுத்துறையினர் அந்த இளைஞர்களிடமிருந்து பல விடயங்களை அறிந்து கொள்ளத் துடிக்கின்றனர்.
இதேவேளை, இவ்வாறு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வடக்கு, கிழக்கு பகுதிகள் குறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர்களாகவும் அங்குள்ள சிறு இடங்கள், வீடுகள், குச்சொழுங்கைகள், வர்த்தக நிலையங்களைக் கூட துல்லியமாகக் குறிப்பிட்டு கூறுமளவுக்கு அப்பகுதிகளை அறிந்து வைத்துள்ளனர்.
இப்பகுதிகளில் குறிப்பிட்ட காலத்துக்கு நடமாடித் திரியாமல் இவ்வாறான இடங்களை அடையாளப்படுத்தி கூறுவதென்பது இலகுவான காரியமல்ல. கைதான இளைஞர்களிடம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைகளை நோக்கினால் அந்த அதிகாரிகள் குறிப்பிட்ட காலம் வரையாவது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தங்கியிருந்திருப்பார்கள் என்பது தெளிவாகும்.
தம்மால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் கூட அவர்கள், `கடந்த மாதம் கூட நாம் உங்கள் பகுதிக்கு சென்று வந்தோம்' எனக் குறிப்பிடுமளவுக்கு இப்பகுதிகளில் இந்திய புலனாய்வுத்துறையினரின் நடமாட்டங்கள், அவதானிப்புகள் இருந்திருக்கின்றன.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி மும்பை விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.
டிசம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவ்விளைஞன் 23 நாட்கள் மும்பை விமான நிலையச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு புலனாய்வுத்துறையினரின் கொடூர சித்திரவதைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மும்பை சிறையில் 23 நாட்களை நரக வேதனையுடன் கழித்த அவ்விளைஞர் தனது திகில் அனுபவங்களையும், வியப்பூட்டும் விசாரணைகளையும் தான் அனுபவித்த சித்திரவதை அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இனி அவர் கூறுவார்.......</b>
நான் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவன். சில பாதுகாப்புக் காரணங்களால் எனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கு வயது 25. யாழ் நகரிலுள்ள பிரபல தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தேன்.
இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பொன்று எனக்குக் கிட்டியதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தேன். கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தேன். நான் செல்ல வேண்டிய நாடான பிரான்ஸுக்கு இந்தியா சென்றே செல்ல வேண்டியிருந்ததால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு மாத விசாவைப் பெற்றுக் கொண்டேன்.
சென்னை பயணம்
விசா கிடைத்ததையடுத்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மாலை கட்டுநாயக்க விமான நிலையமூடாக சென்னைக்கு பயணமானேன். கட்டுநாயக்க விமான நிலையத்திலோ அல்லது சென்னை விமான நிலையத்திலோ எனக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை. சென்னையை சென்றடைந்த நான் அங்குள்ள ஹோட்டலொன்றில் தங்கினேன். அங்கு தங்கியிருந்த சில நாட்களில் நான் பிரான்ஸ் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகின.
சென்னை எனக்குப் புதிய இடமென்பதால் நான் எங்குமே வெளியே செல்லவில்லை. பெருமளவான நாட்களை ஹோட்டல் அறையிலேயே கழித்தேன்.
மும்பை பயணம்
வெளிநாடு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் சென்னையிலிருந்து டிசம்பர் 28 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் விமானம் மூலம் மும்பையை நோக்கிப் புறப்பட்டேன். ஏனெனில், எனக்கு பிரான்ஸ் செல்வதற்கு டிசம்பர் 29 ஆம் திகதி காலை 6 மணிக்கு விமான டிக்கட் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மும்பையை வந்தடைந்த நான் அங்கிருந்த ஹோட்டலொன்றில் தங்கினேன். காலை 6 மணிக்கு பிரான்ஸுக்கு விமானம் என்பதால் அவசரஅவசரமாக தயாரானேன். அதிகாலை 3 மணியளவில் மும்பை விமான நிலையத்துக்கு சென்று விட்டேன். இந்த விமான நிலையத்தினுள் எனக்கு பயங்கர அனுபவமொன்று காத்திருப்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனது எண்ணம் முழுக்க பிரான்ஸுக்கு எப்போது போய்ச் சேருவேன், அங்கே என்னை வரவேற்க யார் யார் வந்திருப்பார்கள் என்பதிலேயே லயித்திருந்தது.
சோதனை நடவடிக்கை
விமான நிலையத்தினுள் வழமையான சோதனை
நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டேன். ஆவணங்களைச் சோதித்த அதிகாரிகள் அவற்றை சரியெனக் கண்ட பின்னர் என்னை பயணத்தைத் தொடர அனுமதித்தனர். நான் பயணிக்கவிருந்த விமானம் கட்டார் ஊடாக பிரான்ஸுக்கு செல்வது. அந்த விமானத்திற்கான பயணிகளுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருந்தனர். எனது சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்ட நான் "போர்டிங் கார்ட்" எடுப்பதற்காக ஒரு கருமபீடத்திற்கருகே சென்றேன். அங்கே தான் எனது சோதனைக்காலம் ஆரம்பித்தது.
யாழ்ப்பாணப் புலியா எனக் கேட்ட அதிகாரி
`போர்டிங் கார்ட்' எடுப்பதற்காக இந்த கரும பீடத்திற்கு சென்ற நான் எனது கடவுச் சீட்டையும் விமான ரிக்கட்டையும் அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்தேன். கடவுச் சீட்டையும் ரிக்கட்டையும் வாங்கிப் பார்த்த அந்த அதிகாரி `நீ ஷ்ரீலங்காவா' எனக் கேட்டார். ஆமென்றேன். `அப்போ நீ யாழ்ப்பாணப் புலி தான்' என்று கூறிவிட்டு என்னை தன்னுடன் அழைத்துச் சென்று ஒரு தனியறையில் தடுத்து வைத்தார். அதன் பின் அவர் யார் யாருடனோவெல்லாம் ஹிந்தி மொழியில் ஏதோ கதைத்தார். ஆனால், எனக்கு ஷ்ரீலங்கா, யாழ்ப்பாணம், புலி என்ற சொற்கள் மட்டுமே விளங்கின.
300 யூரோக்களைப் பறித்த பொலிஸார்
இதே நேரம் என்னை பிடித்த அந்த அதிகாரி என்னைப் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்து கொண்டார். அப்போது என்னிடமிருந்த 900 யூரோ நாணயங்களை எடுத்துக் கொண்ட அதிகாரி பதிவில் என்னிடம் 600 யூரோக்களே இருப்பதாக பதிவு செய்தார். நான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அப்போது அவர் நீ பெரிய சிக்கலில் மாட்டியுள்ளாய் மிகுதி யூரோக்களையும் தந்தால் உன்னை பத்திரமாக வெளியே அனுப்பி வைப்பேன் என்றார். அதற்கு நான் என்னை வெளியே கொண்டு போய் விட்டால் தருகிறேன் என்றேன். அதற்கு மறுத்த அவர் உன்னை அவர்களிடம் கொடுப்பது தான் சரி என்று கூறினார்.
தனியறையில் வைத்து விசாரணை ஆரம்பம்
அதிகாலை 3.45 மணியளவில் என்னை அந்த அறைக்குள் தடுத்து வைத்த அந்த அதிகாரி பின்னர் 4.20 மணியளவில் வேறு ஒரு அறைக்கு கூட்டிச் சென்றார். அந்த அறையைப்பார்த்தவுடனேயே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்டேன். அது ஒரு சித்திரவதைக் கூடமென்பதும் அங்கிருந்த கருவிகள், பொல்லுகள், ஆங்காங்கே சிதறிக் காய்ந்து போயிருந்த இரத்தக் கறைகள் மூலம் துல்லியமாகத் தெரிந்தது. அந்த அறைக்குள் என்னை அமர வைத்த பின்னர் அங்கு மேலும் சில அதிகாரிகள் வந்தனர்.என்னை முதலில் பிடித்தவர்கள் விமான நிலையப் பொலிஸார் எனவும் இப்போ வந்திருப்பவர்கள் புலனாய்வுத் துறையினர் என்பதும் அவர்கள் உரையாடியதிலிருந்து என்னால் அறிய முடிந்தது.
அந்தப் பயங்கரமான அறைக்குள் வைத்து அதிகாலை 4.30 மணியளவில் என்னை விசாரணை செய்யத் தொடங்கினர். விசாரணையின் போது அவர்கள் கேட்ட கேள்விகள் குறிப்பிட்ட இடங்கள் பற்றிய விளக்கங்கள், அடையாளங்களைக் கேட்டு நான் நிலை குலைந்து போனேன்.
தமிழ் தெரிந்த விசாரணை அதிகாரி
முதலில் என்னிடம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக விசாரித்தார்கள். நான் இந்த மொழிகளில் கேட்டால் என்னால் சரியாக பதிலளிக்க முடியாதெனக் கூறினேன். அப்போது திடீரென அங்கே ஒருவர் வந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த மரியாதையைப் பார்த்த போது அவர் ஓர் உயரதிகாரி என்பதைப் புரிந்து கொண்டேன்.
அவர் என்னிடம் நீ யாழ்ப்பாணத் தமிழனா என சுத்தத் தமிழில் கேட்டார். நான் ஆமென்றேன். `அப்போ நீ புலி தான். உன்னிடம் நிறைய விடயங்கள் பெற வேண்டியுள்ளது எனக் கூறிவிட்டு பல கேள்விகளைக் கேட்டார். நான் கூறிய பதிலை அவர் ஹிந்தியில் சொல்ல அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் அவற்றை ஹிந்தியில் எழுதிக் கொண்டனர்.
ஹிந்தியில் எழுத வேண்டாமெனக் கூறிய நான் எனது பதில்களை தமிழில் எழுதினால் தான் நான் சொல்வதைத் தான் நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை என்னால் அறிய முடியுமெனக் கூறினேன். அப்போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிய அந்த தமிழ் தெரிந்த அதிகாரி வாக்கு மூலங்களை ஆங்கிலத்தில் பதியுமாறு மற்றவர்களிடம் கூறினார்.
இடுப்புப் பட்டியால் கடுமையான தாக்குதல்
என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தவரின் பெயர் முருகன் என அங்கிருந்தவர்கள் அழைத்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். என்னிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் என்னை திடீரென இடுப்புப் பட்டியால் கண்மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார். உடம்பு முழுவதும் எனக்கு இரத்தம் கசிந்தது. அவ்வளவு பயங்கரமான அடி. சில நிமிடங்களில் தனது தாக்குதலை நிறுத்திய அவர் இனித் தான் உன்னிடம் முக்கியமான கேள்விகளைக் கேட்கப் போகின்றேன். பொய் கூறினால் உனது ஊருக்கு `பொடி' கூடப் போகாது என மிரட்டிவிட்டு கேள்விகளைக் கேட்டார்.
அவர் யாழ்ப்பாணத்தை அங்குள்ள வீதிகள், கட்டிடங்கள், வீடுகள், பேக்கரிகள், எதற்கு பக்கத்தில் என்ன இருக்கிறது. எந்தப் பக்கத்தால் போனால் எந்தப் பக்கத்தால் வரலாம் என விலாவாரியாக எனக்கு விளக்கிய போது அந்த தமிழ் பேசும் அதிகாரியிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டுமென்ற நிலை எனக்கு ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தை அக்குவேறு ஆணிவேறாக குறிப்பிட்ட அதிகாரி
மீண்டும் என்னிடம் சொந்த இடம் யாழ்ப்பாணமா என்றார். ஆம் என்றேன். யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்றார். எனது ஊரைக் குறிப்பிட்டேன். அப்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிய அவர். அந்த ஊர் தென்மராட்சியில் புலிகளின் பகுதியில் இருக்கிறது. நீ யாழ்ப்பாணமென பொய்யா கூறுகிறாய் எனக் கேட்டு கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்.
அடுத்ததாக அவர் கேட்ட கேள்வி நீ புலிதானே என்பது தான். இல்லை. நான் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன் எனக் கூறினேன். எங்கே எனக் கேட்டார். யாழ் நகரில் என்றேன். யாழ் நகரில் என்றால் எந்த வீதி எனக் கேட்டார். வீதியைக் குறிப்பிட்டேன். உடனே அவர் அந்த வீதியில் உள்ள பேக்கரி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அதற்கு பக்கத்திலா எனக் கேட்டார். பின்னர் அவ்வீதியிலுள்ள எனக்கு கூட தெரிந்திராத பல அடையாளங்களை குறிப்பிட்டு எனது அலுவலகம் அமைந்துள்ள இடத்தை சரியாக தெரிவித்தார்.
அந்த அதிகாரி கூறிய அடையாளங்கள், விளக்கங்கள் கேள்விகளைப் பார்த்த போது அவர் யாழ்ப்பாணத்துக்கு நன்கு அறிமுகமானவர் என்பது தெட்டத் தெளிவாக விளங்கியது.
<b>யாழ்நகருக்கு அடிக்கடி செல்வதாக கூறிய அதிகாரி</b>
எனது ஆச்சரியம் அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். ஏனெனில், அவர் என்னிடம் உன்னிலும் விட யாழ்ப்பாணத்தை எனக்கு நன்றாகத் தெரியும். யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, அங்கிருக்கும் புல் பூண்டுகளைக் கூட எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நீ ஒரு புலி. ஏனென்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அனைவரும் புலிகள் தான்.
நான் சென்ற மாதம் கூட யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்கேயிருக்கும் நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும். தமிழர்கள் முழுப்பேரும் புலிகள் தான். புலிகள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுக்கிறார்கள். எம்மை முட்டாள்கள் என்று நினைக்காதீர்கள். எமக்கு அனைத்து விடயங்களும் நன்றாகத் தெரியும் என்று கூறிவிட்டு என்னை மறுபடியும் தாக்கத் தொடங்கினர்.
[u]விமான நிலையத்திலுள்ள சிறையில் தடுத்து வைப்பு
என் மீதான விசாரணைகள் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து காலை 10.30 மணியளவிலே தான் முடிந்தது. அதுவரைக்கும் யாழ்ப்பாணத்தைப் பற்றியும் அங்குள்ள ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள தொடர்புகள் ஆதரவாளர்கள் பற்றியும் தான் கேள்விகள் கேட்டனர். தெரியாது எனக் கூறிய போதெல்லாம் மிருகத் தனமாகத் தாக்கினார்கள்.
விசாரணை முடியும் வரை தண்ணியோ உணவோ எதுவும் கிடைக்கவில்லை. என்னை அந்த அறைக்குள் வந்து பல உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.ஹிந்தியில் ஏதேதோ உரத்துப் பேசினர். சிலர் தாக்கவும் முயன்றனர். பின்னர் என்னை அங்கிருந்து இழுத்து வந்து விமான நிலையத்திலுள்ள சிறைச்சாலைக் கூண்டுக்குள் போட்டனர். அப்போது எனக்கு பசியாலும் அடிபட்ட வேதனையாலும் மயக்கம் வருவது போலிருந்தது.
சிறுநீர் போத்தலில்தான் எடுக்க வேண்டும்
அரைமயக்கத்திலிருந்த என்னை அந்த சிறைக் கூண்டுக்குள் தள்ளி பூட்டி விட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். அந்த சிறைக் கூண்டு 7 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்டது. கொஞ்சம் கூட காற்றோட்டமில்லை. இரு ரியூப்லைட்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. ஒரே துர்நாற்றமாகவிருந்தது.
மலம், சலம் கழிப்பதுதான் அங்கு பெரும் பிரச்சினை. இயற்கை உபாதை ஏற்பட்டால் கதவைத் தட்ட வேண்டும். அப்படியானால்தான் திறப்பார்கள். ஆனால், அநேக நேரங்களில் எவ்வளவு தூரம் கெஞ்சினாலும் திறக்கமாட்டார்கள்.
பல தடவைகள் நான் சிறுநீரைப் போத்தலிலே எடுத்து வைத்து விட்டு பின்னர் தான் வெளியே கொண்டு செல்வது. என்னுடன் அந்த சிறைக் கூண்டுக்குள் இரு நேபாளிகளும் ஒரு நைஜீரியக்காரரும் இருந்தனர். அவர்களும் என்னை விரோதியைப் பார்ப்பது போலவே பார்த்தனர். சிலவேளைகளில் தாக்கவும் செய்தனர்.
உணவுக்காகச் சண்டை
சிறையில் உணவு தரமாட்டார்கள். வெளியே `ஓடர்' கொடுத்தே உணவு எடுக்க வேண்டும். அதற்காக ஒரு சாப்பாட்டுக் கடைக்காரரை சிறைக்கு உணவு கொடுப்பதற்காக நியமித்திருந்தனர். அவரிடமே எமக்கு என்ன உணவு வேண்டுமெனக் கூறி பணமும் நாமே கொடுக்க வேண்டும். நாம் நல்ல உணவுக்கு ஓடர் கொடுத்தோமென்றால், அதனை வாசலில் வைத்து சோதனையிடும் பொலிஸார் எடுத்துவிட்டு வெள்ளைச் சோறும் `டால்' என்று கூறும் பருப்பும் வைத்து அனுப்புவார்கள். எமது உணவை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.
வெள்ளைச் சோறும் பருப்பும் வந்தால் கூட அதனை நிம்மதியாக சாப்பிட முடியாது. என்னுடன் இருந்த சக கைதிகள் பறித்து விடுவார்கள். பல தடவைகள் உணவுக்காக அவர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டேன். சோறு போட்டு சாப்பிட `கடதாசித் தட்டு' ஒன்றே தருவார்கள். அதில் வைத்து சாப்பிடும்போது தான் மற்றவர்கள் தட்டிப்பறிப்பார்கள். அதனால் நான் பொலித்தீன் பை ஒன்று எடுத்து அதனுள் சோற்றையும் பருப்பையும் போட்டு விட்டு சாப்பிடுவேன். இவ்வாறு செய்தால்தான் மற்றவர்களால் பறிக்க முடியாது.
அடிக்கடி சக கைதிகள் என்னைத் தாக்குவார்கள். நான் அது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்களும் சேர்ந்து என்னைத் தாக்குவார்கள். தினமும் எனது கூண்டுக்குள் புதுப் புது கைதிகள் வந்து கொண்டே இருப்பார்கள். என்னை சிறையிலடைத்து ஒருவாறு மூன்று தினங்கள் கழிந்தன.
றோ அதிகாரிகள் மீண்டும் விசாரணை
தை மாதம் 3 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் தமிழ் தெரிந்த அதிகாரியொருவர் வந்து என்னை அந்த சிறைக் கூண்டுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் சென்று வேறு ஒரு அறையில் வைத்து விசாரிக்கத் தொடங்கினார். அவருடன் வேறு இரு அதிகாரிகளும் வந்திருந்தார்கள். அவர்கள் உரையாடியதன் மூலம் அவர்கள் `றோ' அதிகாரிகள் எனப் புரிந்து கொண்டேன்.
அந்த அதிகாரிகளும் முன்னர் கேட்ட அதிகாரியைப் போலவே சகல கேள்விகளையும் கேட்டனர். யாழ்ப்பாணத்தின் குச்சொழுங்கையைக் கூட அவர்கள் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர்.
குடாநாட்டின் குச்சொழுங்கையைக் கூட தெரிந்த அதிகாரிகள்
எனது ஊரைக் கேட்டனர் கூறினேன். தொழில் புரியும் இடத்தைக் கேட்டனர் அதனையும் கூறினேன். யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியா நாவலர் வீதியா, யாழ். நகர் கே.கே.எஸ். வீதியா எனக் கேட்டனர். வீதியைக் குறிப்பிட்டேன். அந்த வீதியிலுள்ள பேக்கரியைக் குறிப்பிட்டு அதற்குப் பின்னாலா எனக் கேட்டனர். ஆமென்றேன். அங்கே தற்போது புதிய வீடொன்று கட்டப்பட்டுள்ளது. அந்த இடமா அல்லது பழைய வீடா எனக் கேட்டனர். நான் பழையது என்றேன். அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புலிகளின் தளபதிகள் குறித்து விசாரணை
என்னைப் பற்றிய விசாரணைகள் முடிந்தவுடன் புலிகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியைத் தெரியுமா? எனக் கேட்டனர். தெரியும் ஆனால் கதைத்ததில்லையென்றேன். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கும் கேணல் தீபன் என்பவருக்குமிடையேயுள்ள வித்தியாசம் என்ன? இவர்களில் யார் பெரியவர்? எனக் கேட்டனர். நான் தெரியாதென்றேன்.
அடுத்ததாகக் கேட்ட கேள்வி என்னை தூக்கி வாரிப் போட்டது.
புலிகளுக்கு ஆதரவு வழங்கும் முக்கியமானவர்கள் யார்?
வன்னிக்குப் போய் வருவதா எனக் கேட்டனர். நான் இடையிடையே தொழில் நிமித்தம் சென்று வருவதாகக் கூறினேன். அடுத்த கேள்வி மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. அதாவது மக்களுக்குள் இருந்தவாறு புலிகளுக்கு ஆதரவு வழங்கும் முக்கியமானவர்கள் யார்? அவர்களைப் பற்றிய விபரங்கள் தெரியுமா? எனக் கேட்டனர். தெரியாதென்றேன். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி என்னைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். அவரின் தாக்குதலை தாங்க முடியாது நான் நிலத்தில் வீழ்ந்து விட்டேன்.
வாய்க்குள் பேப்பரை திணித்துவிட்டு தாக்குதல்
என்னை மிக மோசமாக தாக்கிய அந்த அதிகாரி நான் நிலத்தில் வீழ்ந்தவுடன் வெளியே சென்று மேலும் இருவரை அழைத்து வந்து என்னை தூக்கி நிறுத்தி விட்டு மூவருமாக தாக்கினார்கள். சிறிது நேரத்தின் பின் எனது ஆடையை கழற்றி விட்டு மேசை மீது குப்புற படுக்க வைத்து விட்டு கால்களை மடக்கி வைத்து உள்ளங் காலில் பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கினார்கள்.
வேதனை தாங்க முடியாமல் நான் கதறினேன். பெரிதாகக் கத்தினேன். அப்போது அவர்கள் பேப்பரை எனது வாய்க்குள் திணித்துவிட்டு மேலும் மேலும் மோசமாகத் தாக்கினார்கள். கைகளையும் கட்டிவிட்டனர். எனக்கு அடி தாங்க முடியாமல் மயக்கம் ஏற்பட்டது. பின்னர் கண் விழித்தபோது அந்த அதிகாரிகள் அங்கேயே காத்திருந்தார்கள்.
சென்னைக்கு எத்தனை புலிகள் வந்துள்ளனர்
நான் மயக்கம் தெளிந்தவுடன் என்னிடம் மீண்டும் விசாரணைகளை தொடங்கினர். அவர்களின் பிரமாதமான கேள்வி சென்னைக்கு எத்தனை புலிகள் வந்துள்ளனர்? அவர்கள் எங்கெங்கே தங்கியுள்ளனர்? என்பதாகவே இருந்தது. நான் தெரியாதென்று சொன்னபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கடுமையாகத் தாக்கினார்கள்.
இவ்வாறு இரண்டரை மணிநேரம் விசாரணையும், சித்திரவதைகளும் தொடர்ந்தன. பின்னர் என்னை இழுத்துச் சென்று அதே கூண்டுக்குள் போட்டுப் பூட்டினர். அந்தக் கூண்டுக்குள் இருள்வதும் தெரியாது விடிவதும் தெரியாது. இவ்வாறு இன்னும் சில நாட்கள் நகர்ந்தன.
கொல்லப் போவதாக மிரட்டினர்
ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அதே அதிகாரி வந்து விசாரணைகளை மேற்கொண்டார். அதே கேள்விகள், அதே பதில்கள். இதனால் சினமடைந்த அந்த அதிகாரி என்னைக் கொல்லப் போவதாக மிரட்டினார். அடித்து சித்திரவதை செய்வதிலும் விட என்னை ஒரேயடியாகக் கொன்று விடுமாறு அவரிடம் கூறினேன். உண்மையைக் கூறாவிட்டால் எத்தனை வருடம் சென்றாலும் இந்த சிறையை விட்டு வெளியே செல்ல முடியாதெனக் கூறிய அந்த அதிகாரி உண்மையைச் சொன்னால் பல உதவிகள் புரிவதாகவும் கூறினார்.
இவ்வாறு அரைமணிநேரம் விசாரணை இடம்பெற்றது. எனது நண்பர்கள் யாராவது சென்னையில் இருந்தால் அவர்களின் முகவரியை தருமாறும் அந்த அதிகாரி கேட்டார். எனக்கு சென்னையில் ஒருவரையும் தெரியாதென்றேன். இதனால் கடுப்படைந்தவர் என்னை மீண்டும் கூண்டுக்குள் போட்டுப் பூட்டினார்.
என்னால் அவர்களின் சித்திரவதைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தோடு அந்த நரக சிறை வாழ்க்கையையும் ஜீரணிக்க முடியவில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள என்னை எவரும் பார்க்கக் கூட முடியாது. அவ்வாறு வசதியிருந்தால் கூட என்னைப் பார்ப்பதற்காக அங்கு வர எனக்கு தெரிந்தவர்கள் எவரும் இந்தியாவில் இருக்கவும் இல்லை.
நாளுக்கு நாள் சித்திரவதைகளும், விசாரணைகளும் அதிகமாகிக் கொண்டே சென்றன. இதனால் மன ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளானேன். அவ்வேளையில் தான் தற்கொலை எண்ணம் தலை தூக்கியது.
தற்கொலை செய்வதற்கான வழிவகைகள் கூட அந்த சிறைக் கூடத்துக்குள் இருக்கவில்லை. என்ன செய்யலாம் என யோசித்த நான், சிறைக்கு வெளியேயிருந்து உணவு கொண்டு வருபவரை பயன்படுத்த முடிவு செய்தேன். அவரிடம் எனக்கு இரவில் நித்திரை வருவதில்லையெனவும், அடி காயங்களால் உடம்பு வலிப்பதால் நித்திரை கொள்ள முடியவில்லையெனவும் கூறி வெளியே மருந்துக் கடையில் நித்திரைக் குளிகைகள் வேண்டித் தருமாறு கேட்டேன்.
அவரும் எனது பரிதாப நிலையைப் பார்த்து முதலில் கொஞ்ச குளிகை வாங்கித் தந்தார். அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த நான், சில தினங்களின் பின்னர் மீண்டும் நித்திரை குளிகை கேட்டேன். அவரும் வாங்கித் தந்தார். அவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒருநாள் விழுங்கி விட்டேன்.
ஆனால், எனது நல்ல காலமோ, கஷ்டகாலமோ தெரியவில்லை நான் மருந்துக் குளிகைகளை ஒன்றாகப் போட்டதைக் கண்டு விட்ட என்னுடன் சிறையிலிருந்த நேபாளிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டி கொடுத்து விட்டனர். இதனால் எனது தற்கொலை முயற்சி கைகூடவில்லை. தற்கொலை முயற்சி செய்ததற்குக் கூட பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.
வேலைக்காரப் பெண்ணின் அடாவடித்தனம்
அந்த சிறைக் கூண்டுக்குள் எப்படிப் புரண்டு படுத்தாலும் நித்திரையே வராது. எம்மை அறியாமலே சிலவேளைகளில் அதிகாலையில் தூங்கிவிடுவோம். ஆனால், அதற்குக் கூட துப்புரவுப் பணிக்காக வரும் வேலைக்காரப் பெண்ணினால் இடையூறுகள் ஏற்படும்.
நாம் காலையில் சிலவேளைகளில் 8 மணிக்கு கூட எழுந்திராமல் தூங்குவோம். பசிக்களையும், அடி வேதனைகளும் எம்மை எழும்பவிடாது. அவ்வேளையில் காலையில் துப்புரவுப் பணிக்கு வரும் பெண் எம்முடன் தகராறு பண்ணுவார். சிலவேளைகளில் நாம் எழும்ப மறுத்தால் தண்ணீர் ஊற்றுவார். அதிகாரிகளிடம் சொல்லி எம்மைத் தாக்குவார். அந்தப் பெண்ணிற்கு 30 வயதுக்குள் தான் இருக்கும். மிகவும் அழகானவர். அவரைக் கண்டுவிட்டால் அதிகாரிகள் எல்லாம் பல்லைக் காட்டிக் கொண்டு திரிவார்கள்.
சிலவேளைகளில் அந்தப் பெண் ,அதிகாரியின் ஆசனத்தில் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து யாருடனோ தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவார். அந்தப் பெண்ணுக்கு சிறைச்சாலை அதிகாரிகளிடையே தனியான மதிப்புண்டென்பதை அவரின் அதிகார தோரணை நன்கு புலப்படுத்தியது.
சிறைக் கூண்டுக்குள் தமிழ் வாசகங்கள்
அந்த சிறைச்சாலையில் பல நாட்டவர்களும் இருந்தனர். இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலரும் இருந்தனர். என்னை அடைத்து வைத்திருந்த கூண்டுக்குள் நான் மட்டுமே தமிழன். ஆனால், அந்த சிறைக் கூண்டு சுவர்களில் முன்னர் இருந்த தமிழர்களால் பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் என் மனதில் பதிந்த சிலவற்றைக் கூறுகின்றேன்.
`அன்பான இலங்கைத் தமிழர்களே, நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். என் பெயர் ஜோசப். உண்மையே பேசுங்கள். இங்கே உண்மையைப் பேசாவிட்டால் உங்களால் ஒருபோதும் வெளியே வர முடியாது.
இன்னொரு வாசகம், `அன்புக்கும் பாசத்திற்குமுரிய இலங்கை நண்பர்களே, வேலை தேடி வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கு வணக்கம். எமது நாட்டில் என்ன வளம் இல்லை. எமது அம்மா, அப்பா, தங்கை, தம்பிகளை விட்டு அந்நிய தேசம் சென்று கைகட்டி வேலை செய்ய வேண்டுமா? இலங்கையில் ஓர் இனம் அடக்க முற்படுகின்றது. தமிழராகிய எம்மை சிங்கள தேசம் அடிபணிய வைக்கின்றது. அதனை உடைத் தெறிவதற்கான போராட்டத்திற்கு கைகொடாமல் ஏன் ஓடுகிறீர்கள். இதுதான் எனது கடைசிப் பயணம். நான் விடுதலையானவுடன் சொந்த ஊர் போகிறேன். நீங்களும் இதைப் பின்பற்றுவீர்கள் என நினைக்கிறேன். இவ்வாறு பல புரட்சிக் கவிதைகள், இந்தியர்களைத் திட்டும் தூஷண வாசகங்கள் போன்றனவும் சுவர்களை அலங்கரித்திருந்தன.
இவ்வாறு நரகலோகமாக நாட்கள் நகர்ந்து சென்ற நிலையில் 23 ஆம் நாள் நான் கொடுத்த வாக்கு மூலங்கள் சரியானவை என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனவரி 20 ஆம் திகதி என்னை மும்பை விமான நிலையத்தில் வைத்து இலங்கை விமானக் கப்டனிடம் என்னை கட்டுநாயக்கா விமான நிலைய புலனாய்வுத் துறையினரிடம் கையளிக்குமாறு கூறி மும்பை புலனாய்வுத்துறையினர் ஒப்படைத்தனர்.
கட்டுநாயக்காவில் தீவிர விசாரணை
அன்று மும்பை விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்து வந்த இலங்கை விமான கப்டன் கட்டுநாயக்க குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் என்னை ஒப்படைத்தார். அவர்கள் எனது பயண ஆவணங்களை ஆராய்ந்ததுடன் என்னை தீவிர விசாரணைக்குட்படுத்தினர்.
எனது பயண ஆவணங்களும் நான் கூறிய பதில்களும் அவர்களுக்குத் திருப்தியாகவிருந்ததால் என்னை உடனடியாக விடுதலை செய்தனர். நான் தற்போது கொழும்பில் தான் நிற்கின்றேன். இங்கும் சோதனைக் கெடுபிடிகள், சுற்றிவளைப்புகள், கைதுகள் என மாறி மாறி நடப்பதால் கொழும்பும் ஒரு சிறை வாழ்க்கையென்றே தோன்றுகின்றது.
எனது சொந்த மண்ணில் மட்டுமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமென்பதுதான் எனது பயண அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட பட்டறிவாகவுள்ளது.
நன்றி தினக்குரல்...
[size=18]யாழ்ப்பாணத்தில வைச்சு வெட்டி அனுப்பனும்,,,,, :evil: :evil: :evil:
|
|
|
| திறக்கப்பட்ட கதவுகளின் வழியே... |
|
Posted by: sooriyamuhi - 01-29-2006, 11:06 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>திறக்கப்பட்ட கதவுகளின் வழியே...</span>
<span style='font-size:25pt;line-height:100%'>கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக
திறக்கப்பட்ட
கதவுகள் மூடப்பட்டும்
மூடப்பட்ட கதவுகள்
மறுபடி திறக்கப்பட்டும்
சிலவேளைகளில் மட்டும்
காற்று வருமென்ற
எண்ணங்களோடுதான்
காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...!
எங்களின் எதிர்காலம் குறித்த
பேச்சுக்களை விட்டால்
நிகழ்காலம் குறித்த
நாற்காலிகளின் கனவுகள்
வெறும்...
கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...!
இதனால்தான்
அன்போடு பேசலாமென
அக்கறையோடு அவர்கள்
இடைக்கிடையே வருவார்கள்...!
வாருங்கள்
ஊரெல்லாம் ஓடித்திரியலாமென
அழைத்துப்போவார்கள்
சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம்
நெஞ்சிலே சுமந்துகொண்டு
அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம்
கடைசியாகக்கூட அவர்கள்
ஒன்றிலிருந்து ஆறுதடவைகள்
நாடுநாடாய் அழைத்துப்போனார்கள்.
இருப்பினும்...
ஒரே ஒரு அதிருப்திதான்
அவர்களிகன்மீது எங்களுக்கு...!
ஆறுதடவைகள் பேசலாமென
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!!</span>
த.சரீஷ்
27.01.2006 (பாரீஸ்)
|
|
|
| 'தீவிர மதுபானக் கொள்முதலில்' சந்திரிகா |
|
Posted by: adsharan - 01-29-2006, 10:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இங்கிலாந்து உல்லாச பயணத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அங்காடியில் மதுபானக் கொள்முதலில் தீவிரமாக ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கைத் தீவு மட்டுமின்றி உலகமே கடந்த புதன்கிழமை வரை யுத்தம் வருமோ என்கிற அச்சம் கலந்த சூழலில் கொழும்பையும் கிளிநொச்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் இங்கிலாந்தின் ஹர்ட்போர்ட்சைருக்கு அருகாமையில் உள்ள டெஸ்கோ அங்காடிக்குச் சென்ற சந்திரிகா வாழைப்பழங்கள், பியர் மற்றும் மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார். சந்திரிகாவுடன் வந்த ஆண் ஒருவர் இதற்கான தொகைகளை செலுத்தியுள்ளார்.
இந்தச் செய்திகளினால் அதிர்ச்சியடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியினர், நாடு எப்போதும் யுத்தத்துக்கு போகலாம் என்ற நிலையில் அமைதிக்காக யுத்தம் நடத்தி வேடிக்கை பார்த்த சந்திரிகா இப்போது உல்லாசத்தின் சொர்க்கத்தில் இருப்பதா?" என்று குமுறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
www.eelampage.com/
|
|
|
|