| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 443 online users. » 0 Member(s) | 440 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,467
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| ஆயுதமேந்துவோம்: முஸ்லிம்கள் எச்சரிக்கை! |
|
Posted by: vasanthan - 01-29-2006, 04:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தனித்தரப்பு அளிக்காவிட்டால் ஆயுதமேந்துவோம்: முஸ்லிம்கள் எச்சரிக்கை!</b>
ஞாயிற்றுக்கிழமை 29.01.006
இலங்கை அமைதி முயற்சிகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்காவிட்டால் ஆயுதமேந்துவதை எவராலும் தடுக்க முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
முஸ்லிம்களை அரசாங்கம் தனித்தரப்பாக அங்கீகரிக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடத்த நேரிடும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர முஸ்லிம் கட்சிகளால் அதைத் தடுக்க இயலாது.
எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. இதை மகிந்த ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டும்.
போலியான முஸ்லிம் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் முஸ்லிம்கள் பிரதிநிதிகள் பங்கேற்பதாக அர்த்தம் ஆகாது.
நோர்வேயும் சர்வதேச சமூகமும் முஸ்லிம்கள் தனித்தரப்பை அங்கீகரித்துள்ளனர். தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
http://www.eelampage.com/?cn=23812
|
|
|
| காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? |
|
Posted by: SUNDHAL - 01-29-2006, 03:52 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (138)
|
 |
ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?
இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லுõரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர்.
மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர்.
அதுபோல, "உங்கள் தோழி ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?' என்று கேட்டதற்கு மாணவர்களில் கணிசமான பேர், "அர்த்தமிருந்தால் ரசிப்போம்' என்றனர்.
"ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்.
வெப்சைட்டில், சில மாணவர்கள் படங்களை போட்டு, அவர்கள் அடித்த ஜோக்குகளையும் போட்டிருந்தனர். அதை பார்த்து கருத்து சொல்ல மாணவிகள் கேட்கப்பட்டனர். பலரும் "கடி' ஜோக்ஸ் தான் அனுப்பியிருந்தனர். மாணவிகள் பெரும்பாலோர், அவற்றை நிராகரித்தனர்.
"மாணவிகள், தங்கள் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலரும் நினைக்கின்றனர். ஆனால், தாங்கள் சிரிக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக ஜோக் அடிக்க வேண்டும் என்று மாணவிகள் விரும்புகின்றனர். மாணவர்களை பொறுத்தவரை, தாங்கள் "ஜொள்ளாக' பேசினாலும், ஜோக் என்று சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அது கிடைக்காததால் பிடிவாதமாகின்றனர்' என்றும் சர்வேயில் தெரியவந்தது.
Thanks inamalar...
|
|
|
| ரா...ரா.. |
|
Posted by: SUNDHAL - 01-29-2006, 03:17 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
தமிழ் சினிமாவான "சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற தெலுங்குப் பாடலான "ராரா... சரசுக்கு ராரா...' என்ற பாடலைப் பாடியவர் மலையாள பாடகியான பின்னி. கேரள பல்கலை கழகத்தின் மூலம் கர்னாடக சங்கீதத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள பின்னி, முதல் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடலே "ராரா...' பாடல்தான். இவர் பிரபல இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை என்பது கொசுறு செய்தி.
|
|
|
| விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள் |
|
Posted by: மேகநாதன் - 01-29-2006, 01:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்: க.வே.பாலகுமாரன் </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 22:25 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
விடுதலைப் பயணத்தில் இசைப்பாடல்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற போராளி இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் உருவான ஈரமில்லாப் பேரலை மற்றும் மூடிசூடும் தலைவாசல் இசைப் பேழைகளின் வெளியீட்டு மற்றும் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் க.வே. பாலகுமாரன் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இசையரங்கத்தை விடுதலையரங்கமாக்கி இந்த மேடையை விடுதலை மேடையாக்கி ஒரு விடுதலை வேள்வியை ஒரு இசையாக படைத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
இன்று அதன் தொடர்ச்சியாக இம்மேடையிலே எங்களுடைய தேசத்தின் தேசிய சொத்தான பாடகர்களைப் பார்க்கிறோம். கூடவே ரி.எல். மகாராஜனையும் பார்க்கிறோம்.
இந்நேரம் பேசுவதற்கான நேரமல்ல. பேச்சுக்களும் இசையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.
பேச்சினுடைய நீட்சியாக இசையரங்கங்கள் அமையும்.
இசையுனுடைய நீட்சியாக பேச்சுக்கள் அமையும்.
அதனுடைய தொடச்சியாகவே பேச்சுக்கள் நடக்கும்.
பேச்சுக்களின் நிறைவிலேயே போர் நடக்கும்.
இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவை.
தமிழ் மக்கள் நீண்ட விடுதலைப் பயணத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். அப்பயணத்தில் தமிழ்மக்கள் வெறுமையையும் சூனியத்தையுமே சந்தித்துள்ளனர் என்றார் அவர்.
தமிழீழ கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச் சுடரினை தமிழகப் பாடகர் ரி.எல். மகாராஜன் ஏற்றிவைத்தார்.
ஈரமில்லா பேரலை இசைப் பேழையினை தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் அறிமுகம் செய்து வைத்தார்.
மூடிசூடும் தலைவாசல் இசைப் பேழையினை க.வே. பாலகுமாரன் வெளியிட்டார்.
இசைப்பேழை உருவாக்கித்தில் பங்களித்த கலைஞர்களுக்கு சோ.தங்கன், க.வே. பாலகுமாரன், கிளிநொச்சி வணிக ஒன்றியத் தலைவர் சொ. வெற்றியரசன் ஆகியோர் பரிசில்களை வழங்கினர்.
தொடர்ந்து தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்வு நடைபெற்றது.
puthinam.kom
|
|
|
| தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள் |
|
Posted by: மேகநாதன் - 01-29-2006, 01:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது.
மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான உறவு சீர்குலையும் என்றும் புலிகள் தரப்பு சுட்டிக்காட்டியது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு மூதூர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இரு தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இருதரப்புக் குழுக்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் சொர்ணம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் சி.எழிலன் மற்றும் மூதூர், தோப்பூர், ஜின்னா நகர், ஆசாத் நகர் முஸ்லிம் மதத் தலைவர்களும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
|
|
|
| தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி |
|
Posted by: வினித் - 01-28-2006, 11:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி புலித்தேவன் தெரிவிப்பு
<b>தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய மறுதினமே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அஞ்சலி நிகழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவியும் பிள்ளைகளும் பயணித்த வாகனத்தை குறிவைத்து கிளைமோர் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களாலேயே விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு புலித்தேவன் தெரிவித்துள்ளார். இது குறித்து புலித்தேவன் மேலும் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சமாதான முன்னெடுப்புகளுக்கு வலுச்சேர்க்கப் போவதில்லை. இத்தகைய தாக்குதல்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வன்முறைகளை நிறுத்துவதாக வழங்கிய உறுதி மொழிகளுக்கு மாறாக இரட்டை வேட அணுகுமுறையை இலங்கை அரசு கைக்கொள்கிறது. சமாதான நல்லெண்ண சமிக்ஞையாக தடுப்புக் காவலில் இருந்த பொலிஸார் ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்திருந்த நிலையிலேயே தென் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் மீது படையினர் மோட்டார் எறிகணை வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெறும் சமாதான முன்னெடுப்புகளுக்கான பற்றுறுதியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அதேவேளை விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் ஜெனீவாவில் இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பேச்சுக்களுக்கு நம்பிக்கையான சூழ்நிலையைக் கட்டியெழுப்பாது என்றார். இதேவேளை விடுதலைப் புலிகளின் தலைமையை எரிக்சொல்ஹெய்ம் சந்தித்த பின்னர் இருதரப்பும் போர்நிறுத்தம் குறித்த பேச்சுக்கு தயாராகிவரும் நிலையில் யாழ். குடாநாட்டிலும் கிழக்கிலும் இராணுவ நெருக்குவாரங்கள் குறையவில்லை என்று பல்வேறு தரப்புகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளன. குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்தும் பதற்ற நிலையே காணப்படுவதாகவும் பொதுமக்களும் பொது அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. </b>
http://www.virakesari.lk/VIRA/html/head_vi...iew.asp?key=312
|
|
|
| பகுத்தறிவு..... |
|
Posted by: Rasikai - 01-28-2006, 08:06 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>பகுத்தறிவு
-------------------</span>
கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் !
அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.!
மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் !
பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் !
பசி
பசியென்றழுதிருக்கமாட்டோம் !
பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் !
விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்!
வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்!
கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் !
காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !
பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே..........
நிமிடத்துக்கு நிமிடம் அழுகையின் மடியில் தலை சாய்த்தே உயிர் துறக்கிறோம் !
ஒவ்வொன்றை நினைத்து......... அழுது....
இல்லை எல்லாமே எனக்காய் வேணும் என்று அழுதழுது.!!
|
|
|
| ஒளிவு மறைவின்றி |
|
Posted by: வினித் - 01-28-2006, 12:53 PM - Forum: புலம்
- Replies (19)
|
 |
ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார்.
இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள்.
"மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம்.
இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது!
வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம்.
ஏழைப் பெண்ணுக்கு உதவப் போய் உபத்திரவத்தைத் தேடிக் கொண்டேன் என்று பிரலாபிக்கிறார் அந்த நல்ல மனிதர்.
<b>எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டம்தான்!</b>
http://www.thinakural.com/New%20web%20site...nuary/28/DR.htm
பின் குறிப்பு: இதை நீக்க விட்டால் ஒவரு நாள்ளும் தொடரலாம் எண்டு நினைக்கிறேன்
|
|
|
|