01-28-2006, 08:06 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>பகுத்தறிவு
-------------------</span>
கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் !
அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.!
மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் !
பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் !
பசி
பசியென்றழுதிருக்கமாட்டோம் !
பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் !
விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்!
வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்!
கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் !
காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !
பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே..........
நிமிடத்துக்கு நிமிடம் அழுகையின் மடியில் தலை சாய்த்தே உயிர் துறக்கிறோம் !
ஒவ்வொன்றை நினைத்து......... அழுது....
இல்லை எல்லாமே எனக்காய் வேணும் என்று அழுதழுது.!!
-------------------</span>
கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் !
அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.!
மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் !
பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் !
பசி
பசியென்றழுதிருக்கமாட்டோம் !
பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் !
விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்!
வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்!
கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் !
காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் !
பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே..........
நிமிடத்துக்கு நிமிடம் அழுகையின் மடியில் தலை சாய்த்தே உயிர் துறக்கிறோம் !
ஒவ்வொன்றை நினைத்து......... அழுது....
இல்லை எல்லாமே எனக்காய் வேணும் என்று அழுதழுது.!!
<b> .. .. !!</b>

