ஊர்ப்புதினம்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!

1 month ago

1755077153-Bribery-Com-6.jpg?resize=650%

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது!

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, 1,500,000 ரூபா கோரப்பட்டதோடு, அதில் 300,000 ரூபாவை அவர் இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) காலை புறக்கோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார்.

https://athavannews.com/2025/1442930

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்

1 month ago

WhatsApp-Image-2025-08-13-at-06.42.11.jp

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” யாழ்தேவி ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ் நோக்கி பயணம்.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் க்ளீன் ஸ்ரீலங்கா செயலக அலுவலகத்தினால் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம்”எனும் தொனிப்பொருளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

WhatsApp-Image-2025-08-13-at-06.42.21.jpeg?resize=600%2C338&ssl=1

இந்த திட்டமானது இன்று முதல் ஒருவார காலத்திற்கு செயற்படுத்தப்படவுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் பொதுச்செயலகத்தின் தலைவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவ}ஸ்வராவின் தலைமையில் இன்று காலை கோட்டை ரயில்நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரயில்வே திணைக்களத்தி;ன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்

ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று காலை 6.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடைந்த யாழ்தேவி ரயில் காலை 6.40க்கு “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான பயணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது.

குறித்த ரயில் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தினை சென்றடையவுள்ளது

WhatsApp-Image-2025-08-13-at-07.06.20.jpeg?resize=600%2C338&ssl=1

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ் பீ சுவஸ்வர “யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறைகள் மற்றும் தேசியமட்டத்திலான அர்ப்பணிப்புக்கள் மற்றும் முயற்சிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்நோக்கமாகும்”

https://athavannews.com/2025/1442868

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

1 month ago

IMG-20250812-WA0112.jpg?resize=750%2C375

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ள அவர் நேற்று 12காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொண்டைமானாறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் தந்தை மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன்
மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1442905

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

1 month ago

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

August 13, 2025 9:59 am

காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணை தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது.

அவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும், தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க தமிழகம் வருவது என அந்தப் பெண் முடிவெடுத்து உள்ளார்.

இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இரண்டு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார்.

அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.

https://oruvan.com/woman-who-left-sri-lanka-for-love-detained-in-refugee-camp/

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை!

1 month ago

250607chemmani2.jpg?resize=750%2C375&ssl

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை!

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் , நாளைய தினம்(14) நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1442859

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

1 month ago

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

Published By: Rajeeban

13 Aug, 2025 | 10:25 AM

image

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில்  அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

2024 ம் ஆண்டு சர்வதேச அளவில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த வருடம் முழுவதும் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

பொலிஸாரின் பிடியிலிருந்தவேளை பலர் கொல்லப்பட்டனர். விசாரணைகளிற்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் கொண்டுசென்றவேளையிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றன.

விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் தங்களை தாக்கினார்கள் அல்லது தப்பியோட முயன்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ஏழுபேர் பொலிஸாரினால் கைதுசெய்ய்ப்பட்டிருந்தவேளை உயிரிழந்தனர் என தெரிவித்தது.

கடந்த வருடம் முழுவதும் 103 இலக்குவைக்கப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.2023 இல் இது 120 ஆக காணப்பட்டது , 2024 இல் குறைவடைந்துள்ளது.

மல்வத்துகிரிப்பிட்டிய என்ற இடத்தில்  பௌத்தமதகுருவொருவரை கொலை செய்தமைக்காக  முன்னாள் இராணுவ கொமாண்டோ கலகர டில்சான் என்பவர் கடந்த வருடம் மார்ச் பத்தாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக தாங்கள் அந்த நபரை அழைத்து சென்றவேளை அவர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்;கியால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார். ,  பொலிஸார் திருப்பி தாக்கியவேளை காயமடைந்த அந்த நபர் வத்துபிட்டிவல மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சிவில் சமூகத்தினர் இவ்வாறான மரணங்கள் பொலிஸாரின் சட்டவிரோத படுகொலைகள் என்பதற்குள் பொருந்துகின்றன என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பல சம்பவங்கள் காரணமாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு 2023 டிசம்பர் மாதம் பொலிஸாரிற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது.

https://www.virakesari.lk/article/222458

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

1 month ago

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

13 Aug, 2025 | 10:49 AM

image

மன்னார்  மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை  (12) இடம்பெற்றுள்ளது.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்   ஆண்டகையின் பங்குபற்றுதலுடன்  மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாயத்த நடவடிக்கைகள் வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.

இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்  ஆண்டகை, குரு முதல்வர்  அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர்   அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் அருட்தந்தை, இராணுவம், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_


https://www.virakesari.lk/article/222459

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

1 month ago

Kumara-Jayagody-DailyCeylon.png?resize=6

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442800

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

1 month ago

bimal-1.jpg?resize=750%2C375&ssl=1

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட தூர பேருந்துகளில் AI கமரா அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன் பல டிப்போக்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அமைச்சர் நிலைமைகளை ஆராயந்துள்ளார்.

அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், பேருந்து சாரதியின் நடத்தைகளை கண்காணிக்கவும், தேவைப்படும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் 40, AI கெமராக்கள் பேருந்துகளில் முதற்கட்மாக நிறுவப்படவுள்ளன.

இந்த அமைப்பு மூலம் சாரதியின் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து விதிகள் மற்றும் ஆசனப்பட்டி பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் மூலம் சாரதிகளுக்கு சமிக்ஞைகளை வழங்கப்படும் என்றும் மற்றும் பேருந்தை கட்டுப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1442838

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

1 month ago

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

13 August 2025

1755052597_5061117_hirunews.jpg

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். 

காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். 

அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். 

அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

1 month ago

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

adminAugust 12, 2025

veera-sooroya.jpg

புதிய  காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா்.  காவல்துறை மா  அதிபா் பிரியந்த வீரசூரியவை  நியமிக்குமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு  அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில்   பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219167/

இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி

1 month ago

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கப்பல்

Published By: VISHNU

12 AUG, 2025 | 02:06 AM

image

(எம்.மனோசித்ரா)

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ. ஸ்ரீசன் பணியாற்றுகின்றார்.

WhatsApp_Image_2025-08-11_at_16.51.12.jp

இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள், அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இக்கப்பல் வியாழக்கிழமை (14) நாடு திரும்பவுள்ளது.

https://www.virakesari.lk/article/222362

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

1 month ago

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன்.

நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.

இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்‌ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார்.

https://akkinikkunchu.com/?p=336592

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!

1 month ago

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!

Vhg ஆகஸ்ட் 12, 2025

AVvXsEiZEJ1wrdCIOnXzo8Iz-DEpDmtxjbkTRx55WEqkgYCx3Zyhh9hQafBJjPtJzyKav7l7Ir6cGGQjSPQnEzzsrERxoU5wYp5-v4z4GqcdDpT2j1mvqIOcx2fipmWQDh8xfqjjohuGnVAVm4Afc5H1u4XpdtMAVGDe-h-AMHWpPunQKEsiqasQ4qDMzilLEkFW

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

AVvXsEgKzIbNtAGt0r7ILa0GZARkgK5aJ0npBIoWp8bPq9M2l0U51wJVg_0dOXm6FCUt5Xu4PE6tq3U5_tZHJJP-6R6Yi49ualShyg-hu9_fSGK5l_QgZ3tghLMnMLWlH-2GNOj7YQYasW-zp3JH37O6fwLf4Eu1gC7ddAQC8TqJxP7y-AFiG6XuNKAAkOFNKOdK

AVvXsEgtR2u-dQyVjqXzzI1XlxY9gFladgQ8bLWrkzDfgFNZRoFRjFG-bBl6YJXnyenUuhlcbtY1QNoQ-a4JjFL8WrW2M0f9s1VHHocf2DRIGHqTd_ZyW8L-OGexTrr6ocGjYHOZQ48M7irp5idk54fcpnkcdVdz8dIAGCHa9vHmQinTq-raoziIT_pJmQltcU1x

https://www.battinatham.com/2025/08/26.html

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்

1 month ago

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்

Published By: RAJEEBAN

12 AUG, 2025 | 10:51 AM

image

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்  தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார்.

அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள்.

அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது.

இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை.

இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது. 

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம்.

இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது.

இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள்.

எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது.

ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள்.

இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை.

ஒன்பது மாத குழந்தை  தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை.

வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன்.

தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்?

இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது  அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது.

ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல்  என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/222376

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1 month ago

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

1189889692.jpg

யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.  

இவ் விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். 

https://newuthayan.com/article/மட்டுவிலில்_அமைந்துள்ள_பொருளாதார_மத்திய_நிலையத்தை_பார்வையிட்ட_அமைச்சர்!

சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!

1 month ago

சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!

கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

https://www.samakalam.com/சைபர்-குற்ற-மையங்கள்-பாத/

மழையால் யாழில் 32 பேர் பாதிப்பு!

1 month ago

Published By: DIGITAL DESK 2

11 AUG, 2025 | 08:26 PM

image

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை பெய்த கனமழையால், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/351, ஜே/363, ஜே/364 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜே/393 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/222348

உயர்தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

1 month ago

11 AUG, 2025 | 05:23 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222329

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

1 month ago

Published By: Digital Desk 2

11 Aug, 2025 | 05:46 PM

image

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவை இலாப நோக்கமின்றிக் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தினோம். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பே இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களை ஊக்குவித்தது" என்றனர்.

உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் பன்மொழிப் பதிப்பகங்களைக் காணவும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசவும், புத்தக வெளியீடுகளில் பங்குபெறவும், நாடக நிகழ்வுகளைக் காணவும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சிக்கு அப்பால் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025! | Virakesari.lk

Checked
Tue, 09/16/2025 - 01:39
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr