ஊர்ப்புதினம்

மண்டைத்தீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை - யாழ். மாவட்ட செயலர்

3 weeks 4 days ago

21 AUG, 2025 | 06:08 PM

image

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது.  அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது.  மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். 

தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். நிசாந்தன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறது. சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைத்தீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளார். மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

மேலும், இந்த சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும். எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம்பெற்று வருவதும் பாராட்டத்தக்க விடயம்.

உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும். மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும்.

இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வழி ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும்  தெரிவித்தார்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் மாவட்ட செயலரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள்,  துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

2__5_.jpg

2__4_.jpg

2__1_.jpg

https://www.virakesari.lk/article/223039

செம்மணி மனிதப் புதைகுழி : பன்னாட்டு நீதி விசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்ஷவும் விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் - ரவிகரன்

3 weeks 4 days ago

21 AUG, 2025 | 03:50 PM

image

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில்  இன்று (21)  உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை பற்றி பேசினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப் பணிகளுக்குரிய தொழில்நுட்பம் சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்து விதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனித உரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மை மிக்க பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரிய சபையினைக் கோருகின்றேன்.

குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப் பணியாக 9 நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. 

அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 06.08.2025 அன்று 32ஆவது நாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. 

அந்த வகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தம் 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மேலும் இந்த அகழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள் என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது. 

மேலும் இதுவரை இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவை என கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாகவே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகிறது.

வாக்குமூலம் வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களை அளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

படுகொலைகளோடு தொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை

கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகிய நால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210 பக்கங்களைக் கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு  முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்

கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச்சாவடியில்

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரண தண்டனை வழங்கியிருந்தது. 

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன்.

இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப் பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம் பற்றிய விபரங்கள், மணியம் தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட தரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன்.

அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஒரே மார்க்கமாக அமையும்.

அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள் பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கும் பன்னாட்டு நீதி விசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/223022

வன்னியில் விசேட தேவையுள்ள மாணவர்களுடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்

3 weeks 4 days ago

விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்

21 AUG, 2025 | 02:40 PM

image

வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று புதன்கிழமை (20) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நான் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அந்த வகையில் விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் உள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 53 விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் காணப்படுகின்றனர். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் வலயம் மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அதிகளவான விசேட கல்வித் தேவையுள்ள மாணவர்கள் காணப்படுகின்றனர்.

யுத்த காலப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள விசேட கல்வித்தேவையுடைய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவே உணர்கின்றோம்.

தற்போதும் விசேட கல்வி மாணவர்களுக்கான தேவைப்பாடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை.

குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் விசேட கல்வி போதிப்பதற்கு  27 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனினும் 13 விசேட கல்வி ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேநிலை தான் வன்னியின் ஏனைய பாகங்களிலுள்ள கல்வி வலயங்களிலும் காணப்படுகின்றது. இலங்கை பூராகவும் இக்குறைபாடுகள் இருப்பதையும் அறியக்கூடியதாக உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.

அந்த வகையில் விசேட கல்வி ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படவேண்டும். விசேட கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். விசேட கல்விக்கான பௌதீக வளங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். விசேட கல்விக்கான வகுப்பறைகள் உறுதிசெய்யப்படவேண்டும்.

விசேட கல்விக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சமத்துவ அடிப்படையிலான வளப்பங்கீடும், சமத்துவ அடிப்படையிலான வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற விசேட தேவையுடைய மாணவனான ஜெபாலன் பூந்தமிழ் என்ற மாணவன் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

கல்வி கற்பதற்கு பல்வேறு பற்றாக்குறைகள் காணப்பட்டபோதும், வசதிவாய்ப்புக்கள் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் அளவிலே அந்த மாணவன் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். ஆசிரியர்களும் மிகச் சிறப்பான முறையில் கற்பித்தால் செயற்பாட்டினை முன்னெடுத்ததாலேயே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அந்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு ஏனைய விசேட தேவையுடைய மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும். எனவே விசேட கல்விக்கான வசதி வாய்ப்புக்களையும், முறையான வளப்பங்கீடுகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

IMG-20250820-WA0129.jpg

https://www.virakesari.lk/article/223010

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 வீதமானவற்றுக்கு தொற்றா நோய்களே காரணம் - இலங்கை மருத்துவ சங்கம்

3 weeks 4 days ago

21 AUG, 2025 | 12:40 PM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும்  மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். 

இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொள்கின்றனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. 

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவற்றுக்கு தொற்றா நோய்கள் மற்றும் அதனையொட்டிய நோய்களே பிரதான காரணியாக உள்ளன. இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பிரதான மூலக் காரணி சீனியாகும். குறிப்பாக மது பாவனை பழக்கமுடையவர்களே இதில் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.

எவ்வாறிருப்பினும் தற்போது சிறிதளவும் மதுப் பழக்கம் அற்றவர்களிலும் இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதிகளவு சீனி எடுத்துக்கொள்வது இதயத்தில் கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது. 

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனியை எடுத்துக்கொள்கின்றனர். உலகில் அதிகளவில் சீனி பயன்படுத்தும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/223003

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு

3 weeks 4 days ago

Published By: VISHNU

21 AUG, 2025 | 08:08 PM

image

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும்  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

WhatsApp_Image_2025-08-21_at_18.00.32_81

மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

WhatsApp_Image_2025-08-21_at_18.00.33_d2

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அந்தக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை  ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தற்பொழுது வழங்கப்படும் சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-08-21_at_18.00.31_c6

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும்  ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் ஜயமாலி.சி. விக்ரமாரச்சி மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/223055

யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன்

3 weeks 4 days ago

20 AUG, 2025 | 04:03 PM

image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும்  எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20)  நடைபெற்ற  அமர்வின் போது  நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம்  மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு - கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. 

அதன் பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

போருக்குப் பின்னரான  காலப்பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை தருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள்  கொண்டுவரக் கூடிய பொதிகளின் அளவு 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு - கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமானநிலையமே முன்னுரிமை பெறும். 

இதன்மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்றுத் தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறான பின்னணியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன? மேற்குறித்த அடிப்படையில் விமான நிலையத்தின் சேவைப்பரப்பை விரிவாக்குவதன் மூலம் புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா? அமைச்சர் கடந்த 2025.03.30ஆம் திகதி தாங்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதந்த போது, ஆறுமாத காலத்திற்குள் இவ்விமானநிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்படும் என உறுதியளித்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறித்தர முடியுமா?

வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய நாட்டின் உதவியுடனேயே இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பதையும், இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவிப்பாரா?, அவ்வாறு எந்தத் தடைகளும் இல்லையெனில் பலாலி விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட  அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவுறுத்தப்படும் என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாமா? ஆமெனில், இதுவரை எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்றார்.

https://www.virakesari.lk/article/222946

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

3 weeks 4 days ago

10757a7e-b3c8-415f-96a5-23eaa0b32086.jpg

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

1f2b4cca-f040-4fc5-83b7-3b6cdfc8515e.jpg?resize=600%2C338&ssl=1

இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

ff92ddfa-f045-4cab-a9da-f4e15bcd196a.jpg?resize=600%2C338&ssl=1

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0b51a3b4-c102-4d1b-8e78-463a01999d50.jpg?resize=600%2C338&ssl=1  8c43f42a-6248-48ff-999c-a27a64d30e28.jpg?resize=600%2C338&ssl=1 10ff8c3b-dc8c-40af-97ee-ce0ade4ec72d.jpg?resize=600%2C338&ssl=1 61ec75cb-e1af-4412-a36c-aeb558b5c02c.jpg?resize=600%2C338&ssl=1 69ace9ed-e409-4aaf-bbcf-a339799a5475.jpg?resize=600%2C338&ssl=1 176d7dab-3033-4e86-9ff3-580e5b6fecfc.jpg?resize=600%2C450&ssl=1 824dbb50-3a62-419d-838b-23a966de242e.jpg?resize=600%2C338&ssl=1 850d3db2-7ff9-40dd-b45e-bf0647eeba76.jpg?resize=600%2C338&ssl=1 874e445a-fdc2-462d-a829-a0856b2c912b.jpg?resize=600%2C338&ssl=1 1781edb2-642a-498f-91fb-e2bc093bbb30-600x450.jpg?resize=600%2C450&ssl=1 10757a7e-b3c8-415f-96a5-23eaa0b32086.jpg?resize=600%2C338&ssl=1 51954c05-9ba0-41fe-93ab-ae69212c27f4.jpg?resize=600%2C338&ssl=1 ab0d6c28-2228-48d2-9304-086df18b7c22.jpg?resize=600%2C338&ssl=1 b5a83443-370a-4755-a616-af6aa3c11c26.jpg?resize=600%2C338&ssl=1 cda8e03d-1d67-4bac-bb9d-722dc777f64c.jpg?resize=600%2C338&ssl=1 d46ea017-5728-423f-a420-5cda33434f86.jpg?resize=600%2C450&ssl=1 da86fdee-e5d1-4103-8eed-cfeb3ffe611a.jpg?resize=600%2C338&ssl=1 e09d142a-035f-41dd-a156-40f39ed68422.jpg?resize=600%2C338&ssl=1 e2403d06-80b1-4c47-b11a-af14e972570b.jpg?resize=600%2C338&ssl=1 fa3af240-df4e-4396-9a46-b67c8ff02bf3.jpg?resize=600%2C338&ssl=1 fe51eccc-bcaa-4865-97de-13da87e697a1.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1443995

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

3 weeks 4 days ago

Sri-Lanka-Police-.jpg?resize=650%2C375&s

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது.

அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார்  கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள்  வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்த மூவரின் தகவல்களையும் புலனாய்வு பிரிவு தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த  மூவர்  பற்றிய தகவல்  தெரிந்தால்   0718591966 அல்லது 0718596150 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக  தொடர்பு கொண்டு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள்  தொடர்பான விபரங்கள் பின்வருமாறு 

சந்தேக நபர்களின் விவரங்கள் ஜீவராசா சுஜீபன் (30 வயது) முகவரி – காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா, N.A. இலக்கம் – 950554215V இளங்கோ இசைவிதன் (வயது – 27) முகவரி – எண். 379, பிளாக் 03, மானிக் பண்ணை, செட்டிகுளம், N.H. இலக்கம் – 199836210402 மகேந்திரன் யோகராசா (வயது – 27) முகவரி – அராலி மேற்கு, வடுக்கோட்டை NIC இலக்கம் – 981633881V தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் OIC – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966 OIC புலனாய்வுப் பிரிவு 071-8596150 https://athavannews.com/2025/1444048

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்

3 weeks 4 days ago

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும்

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள்.

இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.

இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன்.

இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர்.

பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்‌ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர்.

இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம்.

அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை.

இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்.

எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

https://akkinikkunchu.com/?p=337765

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை

3 weeks 4 days ago

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை

21 Aug, 2025 | 11:37 AM

image

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின்  14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை  மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன.

யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “Clean Sri Lanka”  வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான  மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/222993

கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு

3 weeks 4 days ago

கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmekrzab80002qpu752l58f74

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

3 weeks 4 days ago

கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

adminAugust 20, 2025

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற  விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது  வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர்.

அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.

மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள்.

பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

https://globaltamilnews.net/2025/219495/

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால

3 weeks 4 days ago

20 AUG, 2025 | 05:45 PM

image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர்,

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது.

இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாணசபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாணசபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து – லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும்.

இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள்.

சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது.

சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்.

போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார்.

https://www.virakesari.lk/article/222971

யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 weeks 5 days ago

20 AUG, 2025 | 12:54 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என  துறைமுகம்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம்  இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில்  32 விமானங்கள், 2022ம் ஆண்டில்   383 விமானங்கள்,  2023 ம் ஆண்டில்   864 விமானங்கள், 2024 ம் ஆண்டில்   1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன.

அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும்,  2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும்,  2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.

இந்த  சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது.   

2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. 

இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222928

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு - வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு!

3 weeks 5 days ago

20 AUG, 2025 | 04:55 PM

image

1990 களில் இடம்பெற்ற  இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார்  தலைமையில்  காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.

இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக  இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.

இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/222963

உப்பு விலை குறைந்தது

3 weeks 5 days ago

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 04:18 PM

image

லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்புப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை,  1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக,  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை சதோசா விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கு கிடைக்கும் என நந்தன திலக்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222948

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

3 weeks 5 days ago

நல்லூர் தேர்த்திருவிழாவினையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை 

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 01:52 PM

image

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை  நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222936

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

3 weeks 5 days ago

vlcsnap-2025-08-20-19h09m48s671.png?resi

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்ததாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒருங்கிணைப்புடன் இயக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காரணத்தால் அங்கு ஒரு பாதாள உலகத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டாலும், அவை மிகவும் தீவிரமாக இருக்கவில்லை. இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு God father இருந்தமையே இதற்குக் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பாதாள உலகத்திற்குப் பொறுப்பான அந்தந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறினார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது, தொடர்புடைய அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு அவ்வாறு எந்தவொரு பாதாள குழுக்கழுடனும் டீல் அரசியல் செய்யவில்லை இதனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் தற்போது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தொகுதிகள் பகிரப்பட்டதால் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1443954

முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயால் அழைக்கப்பட்டுள்ளார்

3 weeks 5 days ago

Published By: VISHNU

20 AUG, 2025 | 03:17 AM

image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222911

யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

3 weeks 5 days ago

யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

Published By: Vishnu

20 Aug, 2025 | 09:21 AM

image

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. 

குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்

https://www.virakesari.lk/article/222908

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr