ஊர்ப்புதினம்

இந்தியாவின் அடுத்த மாநிலமாக மாறும் இலங்கை - மோடியின் விஜயத்தில் அம்பலமான உண்மை

2 weeks 6 days ago

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தது.

தனக்கான வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் தனது சமூக வலைத்தளமான எக்ஸில் குறிப்பிட்டிருந்தார்.

மகத்தான வரவேற்பு

இந்நிலையில் கொழும்பை வந்தடைந்த இந்திய பிரதமருக்கு இலங்கை வாழ் இந்தியர்கள் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர்.

இந்திய மாநிலம் ஒன்றுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுவதை போன்று, பிரதமர் கொழும்பில் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார்.


அந்தக் காட்சிகளை பார்க்கும் போது இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதா என சிந்திக்கும் அளவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஏற்கனவே இந்தியாவின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள இலங்கையை மற்றுமொரு இந்தியாவின் மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் நாணயத்தையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், இந்திய பிரதமரின் வருகையின் போதான வரவேற்பும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

https://tamilwin.com/

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான்!

2 weeks 6 days ago

05 APR, 2025 | 05:28 PM

image

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. 

அதன்படி,

01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால  மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.  

02- டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர்  வருண ஸ்ரீ தனபால மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

03- திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால,  இந்தியவெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.

04- - பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்.  சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

05- இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

06- மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஔடதங்கள்  ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான  புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

07- கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான  "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்   உள்ளிட்ட இந்தியக் தூதுக்குழு  இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-04-05_at_16.55.30.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.29.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.28.jp

WhatsApp_Image_2025-04-05_at_16.55.27__1

WhatsApp_Image_2025-04-05_at_16.55.27.jp

https://www.virakesari.lk/article/211247

முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி

2 weeks 6 days ago

05 Apr, 2025 | 02:13 PM

image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (04) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மீனவர்கள் பன்நெடிங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர்.

அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகு தொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டதுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்  தெரிவித்தார்.

அத்தோடு அனுமதி பெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகு தொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று கிராமங்களிலும் வாழும் தமிழ் மக்களின் ஒரேயொரு மீன்பிடித்துறையாக இந்த புலிபாய்ந்தகல் பகுதியே காணப்படுகின்றது.

இந்நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய அத்துமீறல், அடாவடித்தனமான முயற்சிகளை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது. ஓரளவிற்குத்தான் நாமும் பொறுமையாக இருக்கமுடியும் என்றார்.

இதன்போது கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் ந.மதியழகன், தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச உபசெயலாளர் கி.சிவகுரு ஆகியோரும் குறித்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

486553044_989792216675290_72954469256240

487856873_1074894331073361_2354951438582


முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி | Virakesari.lk

கொழும்புஇளைஞன் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளோம்

2 weeks 6 days ago

05 Apr, 2025 | 04:32 PM

image

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது

சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது

கொழும்பில் 22 வயது முகமது ருஸ்டி மார்ச் 25ம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை சர்வதேச மன்னிப்புச்சபை பார்வையிட்டுள்ளது.

இலங்கையின் புதிய தலைமை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அதன் அரசாங்கம் வாக்குறுயளித்துள்ள போதிலும்,அதிகாரிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்.

ருஸ்டியை தடுத்துவைப்பதற்கான உத்தரவில்,அவர்தீவிரவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்டு,சமூகங்களிற்கு இடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படுவது மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அத்தகைய தகவல்களை தெரிந்தே மறைப்பது குறித்து சந்தேகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருஸ்டி கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களான பின்னரும்,அவரை கைதுசெய்தமை அல்லது தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை  ஆகியவற்றை நியாயப்படுத்தக்கூடிய குற்றவியல் செயற்பாடுகள் எவற்றிற்குமான ஆதாரங்களை வெளியிடக்கூடிய நிலையில் இலங்கை அதிகாரிகள் இல்லை.

இலங்கை அதிகாரிகள் உடனடியாக ருஸ்டிக்கான நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவேண்டும்,அவர் தனது குடும்பத்தவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும்.

மேலும் அவர் சர்வதேச அளவில் குற்றம்  என கருதக்கூடிய எவற்றிலாவது ஈடுபட்டார் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யவேண்டும்.

கொழும்புஇளைஞன் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளோம்- பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது ஏமாற்றமளிக்கின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

2 weeks 6 days ago

image

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல் | Virakesari.lk

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடி

2 weeks 6 days ago

05 APR, 2025 | 01:36 PM

image

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு  'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில், 

மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

2019 பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் தொற்று, சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம். 

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/211213

ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற தினத்தில் 'இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை’ – குமார் குணரட்ணம்

2 weeks 6 days ago

Published By: RAJEEBAN 05 APR, 2025 | 12:39 PM

image

ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்பிரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என முன்னிலை சோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

சோசலிஸத்திற்காக குரல்கொடுத்த ஜேவிபியின் உறுப்பினர்கள் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திடுவதை வேடிக்கை பார்க்ககூடாது என முன்னிலைசோசலிஸ கட்சியின் குமார் குணரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர் மோடி ஜயஸ்ரீமகாபோதிக்கு விஜயம் மேற்கொள்வார் மன்னார் மருத்துவமனைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

மோடி இதன் மூலம் என்ன எதிர்பார்க்கின்றார், அவர் இலங்கையின் துறைமுகங்களை திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றார்என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன, இது இந்து சமுத்திரத்தில் இன்று காணப்படும் புவிசார் அரசியல் நிலவரம் தொடர்பானது, உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது புவிசார் அரசியலில் தேவையற்ற விதத்தில் சிக்குப்படும்.

இந்த உடன்படிக்கையில் கைசாத்திடுவது வரலாற்று தவறாக அமையும்.

சமீபகாலத்தில் உலகின் எந்த நாடும் வேறு ஒரு நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடவில்லை, ஆனால் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் சில நாடுகளுடன் புரிந்துணர்வினை ஏற்படுத்தியது, இன்று கைசாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் பின்னால் அரசியலே உள்ளது.

ராஜபக்சாக்களோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ நாட்டிற்கு துரோகம் இழைப்பது புதிய விடயமல்ல.

மாறாக இவ்வாறான உடன்படிக்கைகளிற்கு எதிராக வீதியில் இறங்கிய அரசாங்கம் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றது, ஜேவிபி தன்னை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது. ஜேவிபி தனது பழைய கொள்கைகளை கைவிட்டுவிட்டது போல தோன்றுகின்றது.

இது ஜேவிபியின் உறுப்பினர்களின் மனச்சாட்சியுடன் தொடர்புடைய விடயம், இந்த அரசாங்கம் சோசலிஸ ஆட்சிமுறையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தது, ஆனால் கல்வி வரி போன்றவை தனியார் மயப்படுத்தப்படுவது குறித்து அக்கறையற்றதாக காணப்படுகின்றது.

ஜேவிபியின் நீண்டகால உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களும் இந்த தருணத்தில் வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போகின்றார்களா என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.

ஒப்பந்தங்களில் கைசாத்திட்டு இவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அவரின் விஜயத்தின் நோக்கம். 1971 ஏப்பிரல் ஐந்தாம் திகதி ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்ற தினத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படுவது விதியின் திருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/211209

இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!

2 weeks 6 days ago

623a9664-fe91-47a6-8220-94b62a19ac43.jpg

இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்  தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்   தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

2550337e-3042-4c3e-a07f-2d24d7da518d.jpg

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X  தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ”இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் எனவும், பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் தான்  அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் எனவும்  பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இச்சந்திப்பின் மூலம்,   ”ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும், தனது  விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது  சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1427606

பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி [காணொலி]

2 weeks 6 days ago

பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி

5 ஏப்ரல் 2025, 04:12 GMT

கருணா அம்மான், பிள்ளையான் நேர்காணல் - பிபிசி தமிழ் எக்ஸ்க்ளூசிவ்

இலங்கையின் இன்றைய அரசியல் களம் குறித்தும், கடந்து வந்த தங்களின் பாதைகள் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளும் அந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) மற்றும் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) கூறுவது என்ன?

போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் அனைவரின் மனதிலும் எழும் ஒரு கேள்வியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எங்கே? அவரின் உடல் எப்படி அடையாளம் காணப்பட்டது என்ற கேள்வி பிபிசி தமிழால் முன்வைக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் தன்னிடம் கேட்கும் முக்கியமான கேள்வி இதுவென்று கூறிய கருணா அம்மான், பிரபாகரனின் உடலை அடையாளப்படுத்தும் பணிக்காக சென்றிருந்தேன் என்று தெரிவித்தார். அடையாளம் காட்டிவிட்டு வந்த பிறகு, என்ன நடந்தது என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை என்று பதில் அளித்தார்.

"அவரின் உடலை அடையாளப்படுத்தி உலகுக்கு அவர் மரணித்த செய்தியை தெரிவித்தேன். உடல் எங்கே என்பதை அறிந்து கொள்வதற்கான அதிகாரம் கொண்டு செயல்படும் சூழலும் அன்று இல்லை. ராணுவ மேலாதிக்கம் அங்கே மேலோங்கி இருந்தது. அந்த ராணுவ கட்டமைப்பை உடைத்துவிட்டு ஆராய்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவில்லை என்பது தான் உண்மை," என்று கூறினார் அவர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், பலர் அவர்களின் வீடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு இருந்தது என்பதை பல இடங்களில் இயக்கம் ஒப்புக் கொண்டது. ஆயுத இயக்கத்தில் விரும்பி இணைந்தவர்களும் உண்டு. வயதில் சிறியவர்கள் இணைந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு வந்த போது, அவர்களை நாங்கள் தேடிக் கண்டறிந்து வீட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளோம். ஆனால் அது தொடர்பான முறையான தகவல்களை போலீஸுக்கு அவர்கள் வழங்கியதில்லை," என்று பிள்ளையான் பதில் கூறினார்.

ஒரு சூழ்ச்சி மூலமாக இருவரையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து முன்னாள் அதிபரும், பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே பிரித்து வந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ்.

"சூழ்ச்சி மூலம் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறுவது மிகவும் தவறானது. போராளிகளும் தளபதிகளும் உண்மையில் இயக்கத்தின் மீது வெறுப்படைந்திருந்தனர். தலைவருக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் எங்களின் அணி தான் அவரை காப்பாற்றியது. மெய்க்காவலர்களைக் கூட நாங்கள் தான் தேர்வு செய்து அனுப்புவோம். 25-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை இயக்கம் கொண்டிருந்தாலும் கிழக்கு மாகாண பொறுப்பாளர்கள் இல்லை. இந்த சமமற்ற சூழலை நான் வேலுப்பிள்ளையிடம் நான் அடிக்கடி சுட்டிக்காட்டினேன். ஆனால் என்னைத் தவிர முக்கியப் பொறுப்பில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் இடம் பெறவில்லை.

மேலும் தளபதி மாத்தையா பிரபாகரனை கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பிறகு, தலைமைக்குழுவில் இருந்த சந்தேகம் காரணமாக பிரபாகரன் யாரையும் வளர விரும்பவில்லை. மேலும் கிழக்கு மாகாண 'ஜெயந்தன் படை' மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பைப் இயக்கத்தில் பலரும் விரும்பவில்லை. அவர்கள் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை காரணம் காட்டவே நாங்கள் அப்படியே இயக்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது," என்று கருணா அம்மான் தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்திருந்த இருவரும் இணைய காரணம் என்ன? இது குறித்து கருணா அம்மானும், பிள்ளையானும் கூறுவதும் என்ன? முழு விவரம் காணொளியில்...

https://www.bbc.com/tamil/articles/cqj4zpxy8yyo

இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி!

2 weeks 6 days ago

24-67515a499c2b7.jpg?resize=600%2C375&ss

இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்துபார்க்கும்போது இது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார்.

இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1427519

இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!

2 weeks 6 days ago

Sri-Lanka-Fishermans.jpg?resize=649%2C34

இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!

இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள்  விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக்  கடலுக்கு சென்ற இரு இலங்கை  மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மீனவர்கள் இருவரும் மிக விரைவில் விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1427583

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்

2 weeks 6 days ago

05 APR, 2025 | 10:54 AM

image

இந்திய கடற்படைக் கப்பலான 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

https://www.virakesari.lk/article/211200

சூரியன் இன்று முதல் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது!

2 weeks 6 days ago

05 APR, 2025 | 06:42 AM

image

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ, மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தென் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நீர்கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.  

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/211188

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை

2 weeks 6 days ago

04 APR, 2025 | 05:29 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும்.

இலங்கை பிளவுபடாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும். குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/211170

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்

2 weeks 6 days ago

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும்.

இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுக்க முடியாத ஒன்று.

எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும்.

அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது,

'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://adaderanatamil.lk/news/cm93qe3th00kp10a6avxuhx2z

மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை!

2 weeks 6 days ago


மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  

நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

https://seithy.com/breifNews.php?newsID=331588&category=TamilNews&language=tamil

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

3 weeks ago

04 APR, 2025 | 08:56 PM

image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு பிரதமர் மோடியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. 

பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு' என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைந்துள்ளது. .

இதன்போது வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மற்றும்  இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்ந்நிகர் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் அதிகபட்ச பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை (04) மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதியை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சனிக்கிழமை (05)  காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை அபேகம ஆகிய பகுதிகளையும் அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (06) காலை 07.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அநுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் ஸ்ரீ மகாபோதியை அண்மித்த பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/211185

நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!

3 weeks ago

யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்;

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார்.

உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

2085292781.jpg

1264749537.jpg


இது குறித்து மேலும் தெரியவருகையில்;

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார்.

உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன. இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!

யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன

3 weeks ago

04 Apr, 2025 | 01:21 PM

image

சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.

400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club"  அங்கத்தவர்களால்  சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.

இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையை வந்தடைந்த பாய்மரக் கப்பலில் இருந்த பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், சுற்றுலா துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

IMG-20250404-WA0078.jpg

IMG-20250404-WA0082__1_.jpg

IMG-20250404-WA0088.jpg

IMG-20250404-WA0081.jpg

IMG-20250404-WA0072__1_.jpgIMG-20250403-WA0132.jpg

IMG-20250403-WA0130.jpg

IMG-20250403-WA0127.jpg

IMG-20250403-WA0122.jpg


யாழ். காங்கேசன்துறைக்கு வந்த பாய்மரப்படகுகள் நாகபட்டினம் நோக்கி புறப்பட்டன | Virakesari.lk

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு

3 weeks ago

பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

எமது பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த சுங்க வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும்.

இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இது மொத்த ஏற்றுமதிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மாத்திரம் ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

இந்த  வரி மாற்றம் காரணமாக இலங்கை ஏற்றுமதிகளுக்கு உடனடியாகவும் கடுமையாகவும் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக, அமெரிக்க சந்தைக்கான நமது ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு போட்டிச் சந்தைகளுக்கு மாற்றப்படுவதை நாம் காணலாம். எனினும், அமெரிக்காவில் நாம் ஈட்டியிருந்த சந்தைப் பங்கை மற்ற சந்தைகளில் ஈடுசெய்ய முடியாது.

இந்த நிலைமைக்கான பொருத்தமான நடவடிக்கைகளை தீர்மானிக்க, இலங்கை அரசு ஏற்கனவே தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்தாலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைக் தவிர்க்க அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள நாணய திட்டத்தின் வரம்புகளுக்குள் இருக்கும்போது, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட இந்த சிக்கலுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கண்டறிய தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம்.

இந்த சவால்கள் இடையேயும், இலங்கையின் ஆடைத்துறை வெளிப்படைத்தன்மை, நெறிமுறைபூர்வமான உற்பத்தி மற்றும் நிலைத்தன்மைக்கான மதிப்புகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

தற்போது நாங்கள் தொழில்துறையின் உற்பத்தித் திறன், செயல்திறன் மற்றும் நம்பகமான மூலப்பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இது ஒரு மிகவும் கடுமையான நெருக்கடியாகும், இதை ஒரு அவசர தேசியப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு | Virakesari.lk

Checked
Sat, 04/26/2025 - 00:24
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr