2 weeks 1 day ago
சிறிதரன் இப்போ பதவிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுள்ளார், அவருடன் யாராவது சந்திப்புக்கு போயிருந்தால் கூடபோனவர்களின் பதவியும் பறிக்கப்படும், சிறி நேசனுக்கு என்ன நடந்தது என்பது சிலர் அறியாதது ஆச்சரியமே. ஆனால் சுமந்திரன் யாரையும் கூப்பிடுவதில்லை. அதற்கு வேறு காரணம் கூறுவார். சிறிதரன் என்ன கதைக்கிறார் என்பதை அறிய பிரதேச சபையினர் சாட்சியாக உள்ளனர், அவர் அதைவிட இரகசியமாக என்ன கதைக்கப்போகிறார்?
2 weeks 1 day ago
அரசியல் ஊழல் பெருச்சாளிகளை அழிக்காமல், தண்டனை வழங்காமல் அரசியலில் அனுராவால் ஓரடி கூட நகர முடியாது. அனுராவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்நடவடிக்கை தயாராகி, மக்களை குழப்பும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது, வேண்டுமானால் இன்னொரு குண்டுத்தாக்குதல் நடத்தப் பாதாளக் குழுவினரை பயன்படுத்தக்கூடும், எதுவும் செய்வார்கள் தம்மை பாதுகாக்க. இல்லையேல் மக்களே இவர்களை அடித்துக்கொன்று விடுவார்கள்.
2 weeks 1 day ago
ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.
2 weeks 1 day ago
இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார். இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார். தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள். இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை. பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.
2 weeks 1 day ago
என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்? Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST] கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது. Also Read களத்தில் குறைந்த வேகம்? வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். ஆனால், இந்த முறை 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததைத் தாண்டி, சீமான் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களையோ அல்லது மக்கள் சந்திப்புகளையோ (Makkal Sandhippu) இன்னும் தீவிரப்படுத்தவில்லை. வழக்கம் போல தங்களது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதிலும், அதில் 50% பெண்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்தது. இந்த முறையும் வேகமாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது கட்சியின் தேர்தல் வேலைகளில் பழைய வேகம் இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், சமூக வலைதளங்களில் தொண்டர்களின் தீவிரமான செயல்பாடுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். ஆனால், தற்போது பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் பெரிய அளவில் வேகம் எடுக்காமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது. சீமான் எப்போதும் டிரெண்ட் செட்டர், நர்ரேட்டிவ் செட்டர் ஆக இருப்பார். ஆனால் இந்த முறை சீமான் கடுமையாக அமைதி காத்து வருகிறார். Recommended For You அமைதிக்கான காரணங்கள்:அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு சீமானின் இந்த "அமைதியான" ஆட்டத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்: விஜய் காரணி (The TVK Factor): நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதுவரை சீமானிடம் இருந்த "மாற்று அரசியல்" வாக்குகள் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பை உற்று நோக்கி, தனது அடுத்த கட்ட நகர்வை சீமான் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. You May Also Like உள்கட்சி சீரமைப்பு:பொதுவெளியில் சத்தமாக கூட்டம் போடுவதை விட, இந்த முறை பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதிலும், வேட்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவதிலும் (சென்னை-போரூர் ஆலோசனைக் கூட்டங்கள் போல) அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனித்து போட்டி - 50:50 முறை: இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் தனித்து போட்டி மற்றும் "ஆண்-பெண் சம பிரதிநிதித்துவம்" என்பதில் அவர் உறுதியாக இருப்பது அவரது பலமாகப் பார்க்கப்படுகிறது. காத்திருக்கும் புயல்? சீமானின் அமைதி குறித்து அவரது தம்பிகள் (கட்சித் தொண்டர்கள்) கூறுகையில், "அவர் அமைதியாக இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார். விஜய் மீடியாவால் பெரிதாக்கப்படுகிறார். மக்கள் என்னவோ சீமானுக்கே அதிக மதிப்பு தருகிறார்கள். நாங்கள் தேர்தலை வைத்து மட்டும் அரசியல் செய்ய மாட்டோம். அப்போது மட்டும் நாங்கள் அரசியல் பேசுபவர்கள் அல்ல, அதனால் நாங்கள் செய்வதை அமைதி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்" என்று கூறுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/the-quiet-before-the-storm-naam-tamilar-seeman-s-strategic-silence-in-the-2026-race-772597.html
2 weeks 1 day ago
ம்ம்ம்… ஆனால் பார் சிறி கூப்பிட்டும் போக ஆளில்லை போலும்? அதான் பிரதேசசபை உறுப்பினரை எல்லாம் கூட்டி போயுள்ளார்😂
2 weeks 1 day ago
தனது பதவியை தக்க வைக்க, பொலிசாரின் அராககத்தையும் கண்டும் காணாமல் விடும் அற்பனா அனுர?
2 weeks 1 day ago
போலீசார், இராணுவம், ஒட்டுக்குழுக்களை வைத்து தமது அரசியல் எதிரிகளை அடக்கவும் தமது அரசியலை, அடாவடிகளை தக்க வைக்கவும் ஆய்தப்படைகளுக்கு வரம்புக்கு மீறிய அதிகாரகங்களை வழங்கி, அவர்களது அதிகார துஸ்பிரயோகங்களுக்கு தண்டனை விலக்களித்து பாதுகாத்தது முன்னைய அரசாங்கங்கள். நம்மவர்களும் சிலர் தமது களவுகள் அடாவடிகளை மறைக்க இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து பழக்கியிருக்கிறார்கள். இது உடனடியாக களையக்கூடியது அல்ல, புரையோடிப்போன ஒன்று. இப்போ அனுராவை தனிமைப்படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்னைய ஜானாதிபதிகளால் போஷிக்கப்பட்டவர்களுக்கு நீதியாக நிஞாயமாக வேலைசெய்ய முடியவில்லை, தண்டனை அனுபவிக்கவும் விருப்பமில்லை. அதனால் ஒவ்வொருவரும் தம் பழைய நிலையை மாற்ற தயாராக இல்லை. அனுரா எடுக்கும் நடவடிக்கை எல்லாம் அவரை நோக்கி எதிராக திருப்பப்படுகிறது. ஒன்று, அவரும் பழைய முறைக்கு செல்ல வேண்டும் இல்லையேல் பழையவற்றை சுத்தமாக அழித்து புதியதை உருவாக்க வேண்டும். அது சாதாரண விடயமல்ல. இருந்தாலும் அநுர பாத்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை. மஹிந்த, ரணில் செய்த ஊழல் அநிஞாயாயங்களுக்கு தண்டனை அளிக்க காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும் அனுராவுக்கு எதிராகவே மாறும்.
2 weeks 1 day ago
தலைப்பில் உள்ளது போல் உண்மையில் புலி காசை கொள்ளை அடித்த கள்ளர் பெயர் விபரம் வீடியோவில் உள்ளதா? சும்மா கவர்சிக்கா வைத்த தலைப்பு போல் உள்ளது. 2 நிமிடம் பார்த்தேன் - நான் புலிக்காசு 300,000 டொலரைத்தான் அடித்தேன், நீ புளொட் காசு 500,000 அடித்தாய் என கதை நீளுது😂. புலிக்காசை அடித்தாயா? என கேட்டால், கேட்பவரை நீ புளொட் என திசை திருப்பி விடும் பழைய உத்தியோ? வீடியோவை பார்த்தவர்கள் யாரும் இருந்தால் உண்மையில் கள்ளர் விபரம் உள்ளதா என சொல்லவும்.
2 weeks 1 day ago
பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார். டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு… ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.
2 weeks 1 day ago
🤣............... மேலே பத்து, கீழே பன்னிரண்டு என்று எங்கேயோ போய் கூட்டத்தோட கூட்டமாக நிற்கின்றேன்.................... இடையிடையே நாங்கள் நினைக்கிறதையே தெய்வமும் நினைத்தால் நாங்கள் என்ன செய்யிறதாம்.....................🤣.
2 weeks 1 day ago
இது நான் முதல்வராக வந்த பிற்பாடு என நினைகின்றேன்....இது அர்ஜூன் ரேஞ்சாக்கும்
2 weeks 1 day ago
சுமந்திரன் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதுகூட எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் அழைத்துச்செல்லவில்லை. அண்மையில் சாணக்கியனை அழைத்துச் செல்வார், அதற்கு முதல் இது, இரகசியமான கூட்டம் யாரையும் அழைத்து வராதீர்கள் என்று தனக்கு மட்டும் அழைப்பு வைப்பார்களாம். அப்படியெனில் அவர்கள் என்னத்தைப்பற்றித்தான் இரகசியமாக பேசியிருப்பார்கள்? அவர்கள் இரகசியமாக சந்தித்ததை, பேசியதை தான் மற்றைய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வாராம், படத்தையும் பகிரங்கப்படுத்துவாராம். இதிலென்ன இரகசியம், அதற்கு அவர்களில் ஒருவரை அழைத்துச்செல்லலாமே, ஏன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால்; என்ன பேசினர் என்பதை மற்றவர் நேரில் அறிந்துவிடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார் தில்லு முல்லு சுமந்திரன்.
2 weeks 1 day ago
நீங்களும் ஒரு மார்க்கமாத்தானிருக்கிறியள்.🤣
2 weeks 1 day ago
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது! https://www.facebook.com/share/v/182Qk3e9jm/
2 weeks 1 day ago
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? written by admin February 13, 2026 பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர். இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு. ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது. எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும். இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது. தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே. கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? - Global Tamil News
2 weeks 1 day ago
உலகக்கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
2 weeks 1 day ago
ஏதோ சொல்லுறதை கேட்டு வாங்கு மாறி இருக்கிறார்.
2 weeks 1 day ago
சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
2 weeks 1 day ago
ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed