2 weeks ago
நன்றி கிருபஜி......நீங்கள் போட்ட படத்தின் பிரகாரம் ...இந்த முட்டுக்கொடுப்பவர் எப்ப கவிழ்ப்பாரோ என்று பயந்தபடிதான் ..இன்றும் முதலமைச்சர்...பதவியில் அமர்கின்றேன்....நன்றி கோசாஜி
2 weeks ago
சுட்டது. பிழை. காரணம். சுட. முதல். அவன். குற்றவாளி இல்லை. தெரியாது. சுட்ட. பின்னர் தான் அவனைப் பற்றி. விபரங்கள். தெரிகிறது. இலங்கை. பொலிஸசாருக்கு. மோட்டர். சைக்கில். கார். வான். போன்றவற்றால். அவனை. துரத்தி. பிடிக்க. முடியாத. ? நிறுத்தமால். ஒடுபவனுக்கு. மரணத் தண்டனையா ? கள்வனுக்கு. மரணத்தண்டனையா? சாரதி அனுமதிப் பாத்திரமின்றி. வாகனம். ஒட்டுபவனுக்கு. மரணத் தண்டனையா. ? பொலிஸ. தண்டனையை. தீர்மானிக்க. முடியாது. குற்றவாளியை. நீதிமன்றில் நிறுத்தத் தான். முடியும். நீதிமன்றம். தண்டனையைத். தீர்மானிக்கும்.
2 weeks ago
ரசனிக்கு... கட்டிய கோயிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை செய்த ரசிகர். காணொளி: 👉 https://www.facebook.com/reel/2564899520615829 👈
2 weeks ago
இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி Feb 14, 2026 - 07:10 PM உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் (Richie Berrington) 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதற்கமைய 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. https://adaderanatamil.lk/news/cmlmd4zgm000a356nxtd8nmzt
2 weeks ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத விளாசலான 35 (09 பந்துகள்) ஓட்டங்களோடும் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இதுவே அணியொன்றின் தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் ஆமிர் கலீம் அதிரடியாக 50 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஹம்மாட் மிர்ஸா 46 (37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்றையோர் வேகமாகப் பின்தொடர நிலைத்து ஆடமுடியாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. முடிவு: அயர்லாந்து அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் அதிரடியான 49 (32 பந்துகள்), மைக்கல் ஜோன்ஸின் விரைவான 33 (20 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேக்கப் பெத்தெல்லின் நிதானமான 32 (28 பந்துகள்) ஓட்டங்களோடும் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, மார்க் சப்மனின் அதிரடியான 48 (26 பந்துகள்) ஓட்டங்கள், டரைல் மிற்செல்லின் விரைவான 32 (24 பந்துகள்) ஓட்டங்கள், பின் அலெனின் வேகமான 31 (17 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்கோ ஜன்சன் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்கம் முதலில் இருந்தே பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தொடர்ச்சியாக அடித்தவண்ணம் இருந்ததாலும், மற்றையோரும் தமது பங்களிப்பாக விரைவாக அடித்ததாலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர். இறுதியில் எய்டன் மார்க்கத்தின் மரண அடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 86 (44 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,
2 weeks ago
நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி Feb 14, 2026 - 04:24 PM 2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது இது 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.838 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சியாகும். எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் வரை 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாதத்தில் உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் இவ்வாறு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmlm76q240004356nvkz1cns2
2 weeks ago
வடகொரியாவின் அடுத்த தலைவர் இவரா? Feb 14, 2026 - 02:05 PM வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார். அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சமீபத்திய இராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரச கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது நடந்தால், 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல்முறையாக கிம் ஜு யே பெண் அதிபராக பொறுப்பேற்பார். தென்கொரிய உளவு அமைப்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இது குறித்து வடகொரியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன் கடந்த 2011 டிசம்பரில் தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் வட கொரிய அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlm294nz0000356nud9fder9
2 weeks ago
தென் ஆபிரிக்கா நியுசிலாந் விளையாட்டில் விறுவிறுப்பே இல்லை சின்ன நெருக்கடி கூட நியுசிலாந் வீரர்கள் கொடுக்க வில்லை................................................
2 weeks ago
இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Christian Petersen படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும். இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 6, இத்தாலியில் நடைபெற்ற 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஆரிஃப் முகமது கான் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றார். பட மூலாதாரம்,Elsa படக்குறிப்பு,தொடக்க விழாவில் அமெரிக்க இசைக் கலைஞர் மரியா கேரி பட மூலாதாரம்,Matthias Hangst படக்குறிப்பு,இத்தாலியின் சான் சிரோவில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் வளையங்களிலிருந்து வெடித்த பட்டாசுகள். பட மூலாதாரம்,David Ramos படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் மொகல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஜகாரா அந்தோணி. (பிப்ரவரி 7) பட மூலாதாரம்,Getty Images பட மூலாதாரம்,Jared C. Tilton படக்குறிப்பு,மிலானோ சாண்டா கியுலியா ஐஸ் ஹாக்கி அரங்கில், கனடாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆலோசனையில் அமெரிக்காவின் ஐஸ் ஹாக்கி அணி. (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Hector Vivas படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை ஸ்லோப்ஸ்டைல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நார்வேயின் பிர்க் ரூட் (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Alex Slitz படக்குறிப்பு,பிரிடாஸ்ஸோ ஸ்கை ஜம்பிங் ஸ்டேடியத்தில் கலப்பு அணி சோதனைச் சுற்றில் போட்டியிட்ட சீனாவின் கிவு சாங் (பிப்ரவரி 10) பட மூலாதாரம்,Michael Reaves படக்குறிப்பு,லிவிக்னோ ஸ்னோ பார்க்கில் அமெரிக்காவின் குளோய் கிம்மிற்கு ஆதரவாக ஜாக்கெட் அணிந்து, ராப்பர் மற்றும் அமெரிக்க அணியின் கௌரவ பயிற்சியாளர் ஸ்னூப் டாக், பெண்கள் ஸ்னோபோர்டு ஹாஃப்-பைப் இறுதிப் போட்டியைப் பார்க்கிறார். (பிப்ரவரி 12) பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தன்னுடைய பிரத்யேக தலைக்கவசத்தை அணிய அனுமதிக்கப்பட்டால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியதை அடுத்து, விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Richard Heathcote படக்குறிப்பு,தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பயிற்சியில் யுக்ரேனின் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் (பிப்ரவரி 11) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly0kp38y9do
2 weeks ago
காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்! 14 Feb, 2026 | 11:59 AM காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும் வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் இதனால் பூக்களை வாங்குவதைத் தவிர்க்கின்றனர். நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதித்தது இதில் மண்சரிவு ,வெள்ளம் உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பூக்கள் அழிவடைந்தது இதனால் பூக்களின் வரத்தும் குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை அதிகரித்து உள்ளது இதனால் விற்பனை சற்று இம்முறை மந்தமாகவே உள்ளது. குறிப்பாக ஜனவரி மாதம் முழுவதும் நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது எனவும் விலை உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றன. மேலும் மலையகத்தில் இருந்து புகையிரம் இயங்காது உள்ளமையால் தலைநகர் உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. கூடுதலாக தற்போது செயற்கை மலர்களைப் பரிசளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் "மொத்த விலையில் பூக்களை வாங்கி வந்துள்ளோம், ஆனால் சில்லறை விலையில் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள் இன்று முழுமையாக விற்பனை ஆகவில்லை என்றால் பூக்கள் வீணாகிவிடும்" எனவும் கவலை தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/238634
2 weeks ago
பொன்னியின் செல்வன் பாடல் - உச்சநீதிமன்ற உத்தரவால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிக்கல் அதிகரிப்பா? பட மூலாதாரம்,BBC Asian Network 14 பிப்ரவரி 2026, 13:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 'பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜ வீர' பாடலின் இசை தாகர் சகோதரர்களால் இயற்றப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அங்கீகரிக்குமாறு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. என்ன வழக்கு? இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர், கடந்த 2023-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், 'மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல், எனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலின் இசையில் இருந்து நகலெடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறியிருந்தார். 'இருவரும் இறந்ததை தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சமரசம் மூலமாக தனக்கு காப்புரிமை வழங்கப்பட்டதாக', வசிஃபுதின் தாகர் மனுவில் தெரிவித்துள்ளார். 'வீர ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழு அளிக்கவில்லை என மனுவில் கூறியுள்ள அவர், 'படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு கூறியது என்ன? வழக்கின் விசாரணையில் வசிஃபுதின் தாகர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார். 'துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசையாக 'சிவ ஸ்துதி' உள்ளது. 'வீர ராஜ வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது' என ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்தப் பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதியன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், 'வீர ராஜ வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும், ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளது' என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images மேல் முறையீடு "ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுகிறது" என தனது தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, 'அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும்' எனவும் உத்தரவிட்டார். அந்தவகையில், 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என கிரடிட் ஸ்லைடை மாற்ற வேண்டும்' என, நீதிபதி தெரிவித்தார். உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகையை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த வேண்டும் எனவும் இந்தத் தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடர்ந்த வசிஃபுதின் தாகருக்கு வழக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வசிஃபுதின் தாகர் மேல்முறையீடு செய்தார். 'ராகத்துக்கு உரிமை கோரவில்லை' இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வீர ராஜ வீர பாடல் தாகர்வாணி இசை பாரம்பரியத்தைச் சேர்ந்தது என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக் கொண்டதாகக் கூறிய நீதிபதிகள், 'அந்தவகையில், இந்தப் பாடலை முதலில் பாடியது மனுதாரரின் முன்னோடிகள் தான் என்பதை ஒப்புக் கொள்ள முடியுமா?' என, ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சில தகவல்களைத் தெரிவித்தார். "1991 ஆம் ஆண்டில் குண்டேச்சாவும், 2015 ஆம் ஆண்டில் உதய் பாவல்கரும், 2017 ஆம் ஆண்டில் நிர்மலா டேவும், 2023 ஆம் ஆண்டில் கபீரி கரும் இதே இசையைப் பயன்படுத்தியபோது மனுதாரர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை," என வாதிட்டார். அப்போது வசிஃபுதீன் தாகர் தரப்பில், 'ராகத்துக்கு உரிமை கோரவில்லை. இசை அமைப்புக்கு மட்டுமே உரிமை கோருகிறோம்' எனத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாக்சி, "இது நிபுணர்களுக்கு இடையிலான சண்டை அல்ல. உங்கள் மனுதாரர் தொழில்முறை இசைக் கலைஞராக இருக்கிறார். அவர்களோ பாரம்பரிய இசையை பின்பற்றுபவர்களாக உள்ளனர். அவர்கள் சற்று மரியாதை மற்றும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனர்" எனக் கூறினார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் 2 கோடி ரூபாயை ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளிப்பதற்கு அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். பட மூலாதாரம்,Ilaiyaraaja official facebook page காப்புரிமை சர்ச்சை தொடர்வது ஏன்? "தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன," என சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன் முன்பு பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார். 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார். '2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூன்று பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். பட மூலாதாரம்,Facebook/Saravanan படக்குறிப்பு,வழக்கறிஞர் சரவணன் 'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார். காப்புரிமை தொடர்பாக முன்பு பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், "இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்," எனக் கூறினார். இவர் இளையராஜா தொடர்ந்துள்ள காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறார். "ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம். அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்," என்கிறார் சரவணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1m5x137ko
2 weeks ago
அப்ப இனி எங்கட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் கனவெல்லாம் வேஸ்ட்டா சார்? பிரான்ஸிலையும் சொத்துப்பிரிப்பு பிரச்சனையில் கார்னல் ஒருவரும் கொல்லப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட கார்ன்ல் பதவியும் வேஸ்டா சார்? 🙋
2 weeks ago
நாம ..இன்றைக்கும் ஜெயிச்சிட்டோம் மாறா... பவர் பிளேஒவர் முக்கியமானது ..இதில் இன்று சவுத் அப்பிரிக்கா நிறைய ரன் அடித்துவிட்டது ..விக்கட் இழப்பின்றி.. அட ராமா..கண்ணுக்கு எண்ணெய் விட்டுத்தான் தேடியிருக்கோணும் ....பரவாயில்லை ...நாள் இருக்குத்தானே..
2 weeks ago
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 14 Feb, 2026 | 12:26 PM கடந்த ஆண்டு இந்தியாவின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டதல்ல; மாறாக, எரிபொருள் வழங்கல் கைமுறையாக நிறுத்தப்பட்டதன் (Intentional Manual Fuel Cut-off) விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) நாளிதழ், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை; அது ஒரு “திட்டமிட்ட செயல்” (Intentional Act) ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததுடன், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியிருந்தார். இது இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இதுவரை தனது இறுதி விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை கண்டுபிடிப்புகள் 2025 ஜூன் மாதம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே, போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தின் மீது விழுந்து நொறுங்கியது. விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) 2025 ஜூலை மாதம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சில தருணங்களுக்குள், அதன் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் “Run” நிலையிலிருந்து “Cut-off” நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. கொக்பிட் குரல் பதிவில் (Cockpit Voice Recorder – CVR), ஒரு விமானி மற்றவரிடம் “ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?” என்று கேட்க, அதற்கு பதிலாக “நான் அவ்வாறு செய்யவில்லை” என மற்ற விமானி பதிலளித்தது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்கள், விபத்து குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. விமானியின் மனநிலை தொடர்பான சந்தேகங்கள் விசாரணை வட்டாரங்கள், விமானத்தின் கமாண்டர் சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal) மீது சந்தேகத்தைத் திருப்பியுள்ளன. அவர் மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் – குறிப்பாக விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் அவரை பாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், அவரது தந்தை இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்து, அவர் ஒரு பொறுப்பான மற்றும் அனுபவமிக்க விமானி என வலியுறுத்தியுள்ளார். எதிர்பார்க்கப்படும் பரிந்துரைகள் இந்த விபத்தின் இறுதி அறிக்கையில், விமானிகளின் மனநல பரிசோதனைகளை கட்டாயமாக்குதல், காலமுறை உளவியல் மதிப்பீடுகள் மற்றும் மனநல கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப திறனை மட்டுமல்லாது, மனித உளவியல் நிலைத்தன்மையையும் உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிடும் வகையில், இந்த விபத்து சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என விமான பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/238639
2 weeks ago
இது கூட நல்ல ஆலோசனையாக தான் உண்டு. எனினும் புலிகள் தரநிலை வழங்குவதை நிறுத்திய திகதியோடு நாமும் நிறுத்துவது என்பது நனிநன்றாக இருக்கும். ஏனெனில் அதுவே அதிகாரப்பூர்வ நிறுத்தம் ஆகும். அத்திகதி தெரிந்தால் அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட எதனையும் பாவிக்கவேண்டியதில்லை. பகரத்திற்கு மாவீரர் என்றோ இல்லை நடைமுறையரசால் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியில் பொதுவாக எழுதப்படும் "வீரவேங்கை" என்ற சொல்லையோ பாவிக்கலாம். வந்தவன் போனவனுக்கெல்லாம் மாமனிதரும் நாட்டுப்பற்றாளரும் கொடுப்பதற்கு இதுவொன்றும் சத்திரத்தில் போடும் சாப்பாடல்ல. எமது தேசத்தின் மதிப்புமிக்க விருதுகள். இவற்றில் விளையாட எவருக்கும் உரிமையில்லை, எமக்கென்றொரு அரசு அ (புலிகள் போன்று) மக்கள் ஆணை கிடைத்த அமைப்பு அமையும்வரை. குறிப்பு: 14ம் திகதியோடு போராளிகள் அனைவரையும் தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2 weeks ago
உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப உத்தரவிட்ட டிரம்ப் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை மத்திய கிழக்குப் பகுதியில் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) டிரம்ப் இதை உறுதிப்படுத்தினார். “விமானம் தாங்கி கப்பல் மிக விரைவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும். இரானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு தேவைப்படும்” என்று அவர் கூறினார். பிபிசி பாரசீக சேவையின்படி, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியன் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி நகர்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. இரானில் அதிகார மாற்றம் குறித்தும் டிரம்ப் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகார மாற்றம் 'இரானில் நடக்கக்கூடிய சிறந்த விஷயம்' என்று கூறினார். டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படையின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கிற்கு வந்த ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதன் பணிக்குழுவுடன் இணையும். ஜெரால்ட் ஆர். ஃபோர்டு கப்பல் அணு உலை மூலம் இயங்குகிறது மற்றும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் மற்றும் A-2 ஹாக் ஐ விமானங்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அக்கப்பலால் சுமந்து செல்ல முடியும். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வழிசெலுத்தலுக்கான மேம்பட்ட ரேடார்களையும் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/live/cgrzjlepkpgt?post=asset%3A1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f#asset:1f3b2ce7-6b48-4f60-976f-55f9fcd4619f
2 weeks ago
செத்த பிறகு அவரை மாவீரர் என்றெல்லாம் போட்டு அஞ்சலி செலுத்தி என்னை வெறுப்பேற்றினார்கள்.
2 weeks ago
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 ஒரு முறை, அவன் அவள் முகத்தைப் பார்த்து சொன்னான்: “இன்றைக்கு எல்லாருக்கும் காதல் வேணும். ஆனா அதை நிரந்தரமாக்க யாருக்கும் பொறுமை இல்லை.” “சங்கக்காலத்துல காதலர்கள் ‘உறுதி’யை வாக்கியமாக எதிர்பார்க்கல. நடத்தையில்தான் பார்த்தாங்க.” அவன் நினைவில் ஒரு வரி எழுந்தது: “அறம் இனிது ஆயினும் காதல் இனிது.” அதாவது— அறம் உயர்ந்தது. ஆனால் மனம் இணையும் காதல் அதையும் தாண்டி இனிமை தரும். “அறம் காக்கணும்னு சொல்லி காதலை கொல்லல. காதல் காக்கணும்னு சொல்லி அறத்தை மறக்கல.” அவள் மெதுவாகச் சொன்னாள்: “நீ சொல்றதெல்லாம் அழகா இருக்கு. ஆனா இன்றைக்கு—” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அந்த சொல்லப்படாத வார்த்தை யாழினியனின் நெஞ்சில் கேள்வியாக நின்றது. அவன் அவள் தோளருகே சற்றே நகர்ந்து அமர்ந்தான். “எனக்குத் தெரியல நாளை என்ன ஆகும்னு,” என்றான். “ஆனா இன்னைக்கு நீ இங்கே இருக்கிறதுல நான் உண்மை.” அவன் அவளை நீண்ட நேரம் பார்த்தான். அவள் எதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள். 2025 ஆம் ஆண்டு இறுதி நாளில், மத்திய லண்டன் ஒரு மென்மையான மழையில் நனைந்து கொண்டிருந்தது. குளிர் கடுமையாக இல்லை; ஆனால் காற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தாண்டு—2026—பிறக்க இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே. இரவு பன்னிரண்டு மணிக்கு, தேம்ஸ் நதிக்கரையிலும் லண்டன் ஐயின் [Thames River & London Eye] அருகிலும் வானவேடிக்கை வெடிக்கப் போகிறது என்று நகரமே அறிந்திருந்தது. வழக்கமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் அந்த இடத்திற்கு அவர்கள் போகாமல், சனநெரிசல் இல்லாமல், சத்தமில்லாமல், நீரின் ஓசையோடு புத்தாண்டை வரவேற்க விரும்பி, வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்— தேம்ஸ் நதியில் ஒரு படகுச் சவாரி. படகு மெதுவாக நகர்ந்தது. விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் குலுங்கியது. மழைத் துளிகள் தேம்ஸுடன் கலந்தன; அவள் மூச்சு அவன் அருகில் கலந்தது. அவள் மெதுவாகக் கேட்டாள்: “நாம் இப்படியே இருக்கலாமா?” சிறிது இடைவெளியின் பின் மீண்டும் கேட்டாள்: “ஒருவரை ஒருவர் மாற்ற முயலாமல்…” அவன் பதில் சொல்லவில்லை. தலையசைத்தான். அந்த மௌனம் தான் அவன் சம்மதம். அவன் அவள் நெற்றியில் மென்மையாகத் தொட்டு நின்றான். அது உரிமை அல்ல. அது உறுதி. பன்னிரண்டு மணி அடித்தது. வானம் ஒளியால் பிளந்தது. லண்டன் ஐ [London Eye] சுற்றிக்கொண்டே இருந்தது— ஆனால் அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. 2026 தொடங்கியது. புத்தாண்டு விடியலில், அவள் அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னாள்: “அடுத்த காதலர் தினத்தில்…” சிறிது தயக்கம்.“எமது நட்பின் முதல் ஆண்டு நினைவில் … நம் நண்பர்கள் முன்னாடி … நமது காதலை அதிகாரப்பூர்வமாக்கலாமா?” அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் பதில் சொன்னது. அவன் தலையசைத்தான். எதற்காக இதுவரை காத்திருந்தானோ — அது தேனாக அவள் வாயிலிருந்து வந்தது. “நீ எனக்கு இப்பவும், எப்பவும் ஒருத்திதான்.” , அவளை அவன் முதல் முறையாக ஆரத்தழுவினான். அந்த அணைப்பு ஆசை அல்ல. அது அவன் மனம் நிரந்தரமாக விரும்பிய உணர்வு. அவள் சொன்னாள்: “நானும்.” ஆனால்… 14.02.2026க்கு ஒரு வாரம் முன்பு, அவள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தாள். அவள் சிரிப்பு குறைந்தது. அவள் வரவு எப்போதாவது ஒருக்க என ஆகியது. பேசும் வார்த்தைகள் கூட குறுகின. “நீ மாறிட்ட மாதிரி இருக்கு,” என்றான் அவன். “இல்ல,” என்றாள். ஆனால் அவள் குரல் நடுங்கியது. அன்று அவள் அவன் கையை வழக்கத்தைவிட நீண்ட நேரம் பிடித்திருந்தாள். அந்தப் பிடிப்பு பாதுகாப்புக்கானது அல்ல விடை சொல்லும் பிடிப்பு என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை. சங்கக் கவிதை எச்சரித்தது: “பிரியும்நாள் அணைதல் அதிகம்.” அவன் அந்த வரியை மனதிலிருந்து தள்ள முயன்றான். ஏனெனில் அவன் காதலை நம்பினான். வாக்குறுதிகளைவிட, நடத்தை மீது. 14.02.2026. காதலர் தினம். அவன் நேரத்துடன் வந்தான். தேர்ந்தெடுத்த உடை—அவள் ஒருநாள் “உனக்கு இது நல்லா இருக்கு” என்று சொன்ன அதே நிறம். முகத்தில் மகிழ்ச்சி. கண்களில் எதிர்பார்ப்பு. நேரம் ஓடியது. நிமிடங்கள் மணிநேரங்களாக மாறின. அவள் வரவில்லை. போன் பண்ணினான் — பதில் வரவில்லை என்றாலும் மனம்—இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தான் .“Girls are always late,” [“பெண்கள் எப்போதும் தாமதமாகத்தான் வருவார்கள்,”] என்று நண்பன் நகைச்சுவையாகச் சொன்னான். அவன் சிரிக்கவில்லை. காதல் நகைச்சுவை அல்ல. அப்போது அவள் வந்தாள். அவனின் முகம் மலர்ந்தது. அடுத்த நொடியில் — அந்த மலர் உதிர்ந்தது. அவள் அவன் கையைப் பிடிக்கவில்லை. வேறு ஒருவனின் கையைப் பிடித்தபடி வந்தாள். பணம் தெரிந்த உடை. அதிகாரம் பழகிய நடை. கண்களில் —திட்டமிட்ட வாழ்க்கையின் அமைதி. “யாழினியன்…” அவ்வளவுதான். “இவன்?” அவன் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனத்தில் ஒரு சங்க வரி அவன் உள்ளத்தை கிழித்தது: “அறத்தொடு நிற்றல் காதல்.” “நான் உனக்கு என்ன குறை செய்தேன்?” அவன் கேட்டான். அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. கண்கள் தரையில் இருந்தன. உண்மை மேலே வர தயங்கும் போது கண்கள் எப்போதும் கீழே தான் பார்க்கும். அது அவனுக்கு நன்றாகப் புரியும் “இது… practical,[நடைமுறை] ” அவள் மெதுவாகச் சொன்னாள். அந்தச் சொல்லே— காதலின் மரணம். சங்கத் தலைவி இப்படி சொல்லியிருப்பாளா? இல்லை. அவள் சொல்லியிருப்பாள்: “உயிரினும் சிறந்தது காதல்.” அவள் தொடர்ந்தாள்: “Feelings are fine. But life needs stability.” [உன்னுடன் என் காதல் உணர்வுகள் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை தேவை.] அவன் சிரித்தான். அது மகிழ்ச்சி அல்ல. புரிதலின் கசப்பு. “Stability-யை [ஸ்திரம்] வாங்கலாம்,” “ஆனா காதலை வாங்க முடியாது.” என்றான். அவளுடன் வந்த அவளின் இன்றைய காதலன் சொன்னான்: “Love is good. But marriage needs sense.” [காதல் நல்லதுதான். ஆனால் திருமணத்திற்குப் புத்தி தேவை.] அதில் இன்றைய உலகத்தின் குரல் இருந்தது. அவன் காதலை அவமதிக்கவில்லை. ஆனால் காதலை வாழ்க்கையின் மையத்திலிருந்து மெல்ல நகர்த்தினான். எனினும் யாழினியின் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு அவனுக்கு அவசியமும் இல்லை. ஏனெனில் சில உண்மைகள் வாதத்தில் வாழ்வதில்லை. அந்த இரவு அவன் தனியாக நடந்தான். காதல் தோற்றதா? இல்லை. காதல் அவனை விட்டு போகவில்லை. அதைப் பயன்படுத்தியவர்கள் விலகினார்கள். அவ்வளவுதான்! அப்போது அவனுக்குப் புரிந்தது — சங்கக் காலத்தில் காதல் ஒரு வாழ்க்கை. இன்றைய காலத்தில் அது ஒரு நிகழ்ச்சி. அப்போது காதல் உயிரோடு இணைந்தது. இன்று வசதியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. காதலர் தினம் ரோஜா வாங்கும் நாள் அல்ல. அது — நீ உன் நெஞ்சத்தோடு உண்மையாக நிற்கிறாயா என்று நீயே உன்னை கேட்கும் நாள். சிலர் கொண்டாடுவார்கள். சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் — கைவிடப்பட்டாலும் காதலை கைவிடமாட்டார்கள். அவர்கள்தான் சங்கக் காலமும் இன்றைய காலமும் ஒரே சொல்லில் சொல்லும் உண்மையான காதலர்கள். போகும் வழி எனக்கு நீண்டது போனவள் நினைவு நெஞ்சை நெருங்குது விலகிய கைதான் இன்று காலியானது விலகாத காதல் இதயத்தில் நின்றது! வாங்கிய வசதி அவளோடு சென்றது வாழும் உண்மை என்னோடு இருந்தது உலகம் பகட்டில் பணத்தில் வாழுது உயிர் மட்டும் அன்பால் துடிக்குது! இலாபநஷ்டம் எழுதப்பட்ட புத்தகங்கள் போல இவளில் மறந்திருந்த உண்மை தெரியுது மனித வாழ்வை உயிரோடு வைக்கும் மங்காத உறவின் சுடர் காதலாகட்டும்! மாற்றம்தேடி மாறும் காதல் உலகில் தோற்றம்தேடி அலையும் காதல் தினத்தில் கண்ணுக்குத் தெரியாத கருணை எங்கே பெண்மையில் வாழும் அமைதி எங்கே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 2035 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33809788578669689/?
2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 103 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தைக் குறிக்கும் இந்தக் கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், பண்டைய இலங்கையில் பேசப்படும் ஒரு தனித்துவமான பிராகிருத பேச்சு வழக்கைக் குறிக்கின்றன என்று பரணவிதான கூறினார். [He stated that these inscriptions were written in Brahmi script but represented a distinct Prakrit dialect spoken in ancient Sri Lanka.] இந்த எழுத்துமுறை சிங்கள மொழிக்கு மட்டும் தனித்துவமானது அல்ல - அது அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அதே பிராமி எழுத்துமுறையாகும். பின்னர், இந்த எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக பரிணமித்தது, ஆனால் அது மிகவும் பின்னர் (கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டு வாக்கில்) நடந்தது. எனவே, இவை இலங்கையில் உள்ள ஆரம்பகால கல்வெட்டுகள் என்றாலும், மேலே கூறிய காரணங்களால், அவை இன்னும் சிங்கள எழுத்துக்களில் எழுதப்படவில்லை - பிராமியில் மட்டுமே என்பதே வரலாற்று உண்மை ஆகும்!. அதாவது அவையை சிங்கள கல்வெட்டுக்கள் என்று எந்த அடிப்படையிலும் கூற முடியாது? இன்னும் ஒன்றையும் நான் கட்டாயம் சொல்லவேண்டும். அதாவது தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது. கி.பி முதல் மில்லினியத்தில் சிங்கள இன அடையாளம் இன்னும் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. [These all suggests that the Sinhala ethnic identity was still forming during the first millennium CE.] எனவே, ஒற்றை "சிங்கள" அடையாளத்திற்குப் பதிலாக, ஆரம்பகால இலங்கையில் பல்வேறு இந்தோ-ஆரிய மற்றும் திராவிடக் குழுக்கள் இணைந்து வாழ்ந்திருக்கலாம்? [Instead of a single "Sinhala" identity, there may have been various Indo-Aryan and Dravidian groups coexisting in early Sri Lanka.] இராசவலியவில் முதல் பதின்மூன்று பக்கங்கள் இலங்கையின் மனித வரலாற்றுக்கு நேரடி தொடர்பு இல்லாததால், அவையை நாம் புறக்கணிக்கலாம். இது பக்கம் 14 இல் இருந்து இலங்கையைப் பற்றியது ஆகும். சுத்தோதனா (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னரான இவருக்கு அமிதோதனா [Amitodana] மற்றும் புஷ்போதனா [Pushpodana ] என்ற இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர் என இராசவலிய கூறும் அதே சமயத்தில், சுத்தோதனா மன்னருக்கு நான்கு இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர் என மகாவம்சம் கூறுகிறது. 2-20 இன் படி, சகோதரர்களின் பெயர்கள்: தோதோதனா, சக்கோதனா, சுக்கோதனா, அமிதோதனா மற்றும் இரு சகோரிகள், அ மி தா, பமிதா ஆகும். [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana. sisters - Amita and Pamita.]. தீபவம்சம் கூட, , 3 - 44 முதல் 46 வரை, அதே பெயர்களைக் கொடுக்கின்றன. அத்துடன் இராசவலியத்தில் உள்ள புஷ்போதனா மகாவம்சம் மற்றும் தீபவம்சம் இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் இராசவலியத்தில் தோதோதனா, சக்கோதனா மற்றும் சுக்கோதனா இல்லாதது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முரண்படுகிறது. பிற்கால புத்தரான சித்தார்த்தரின் மாமாக்கள் பற்றிய இந்த முரண்பாடுகளைக் இது கொண்டு இருப்பதால், கதையின் முழு அல்லது பகுதியும் ஒரு புனையப்பட்ட கதையாக இருக்க வேண்டும்? இந்திய வரலாற்று ஆதாரங்கள் (அசோகரின் ஆணைகள், ஆரம்பகால பௌத்த சூத்திரங்கள் அல்லது ஜாதகக் கதைகள் போன்றவை / such as Ashokan edicts, early Buddhist sutras, or Jataka tales) சுத்தோதனரின் உடன்பிறப்புகள் பற்றியோ அல்லது அவர்களின் சந்ததியினர் ஒரு சிலர் இலங்கைக்கு குடிபெயர்ந்தது பற்றியோ அதாவது, புத்தரின் தம்பி, அமிதோதனாவின் [Amitodana] பேத்தி, கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, இலங்கைக்கு வந்து அரசன் பண்டுவாசுதேவாவை திருமணம் செய்ததைப் பற்றியோ, அல்லது அமிதோதனாவின் பேரன்களும், சகோதரியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து குடியேறியது பற்றியோ குறிப்பிடவில்லை. மேலும், ஆரம்பகால பௌத்த நூல்கள் புத்தரின் உடனடி குடும்பத்தை (பெற்றோர், மனைவி, மகன் மற்றும் உறவினர் ஆனந்தா) மையமாகக் கொண்டு உள்ளத்துடன், அவரின் தந்தையின் சகோதரங்கள் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்கள் பற்றியோ ஒன்றுமே விவாதிக்கவில்லை. உதாரணமாக, இந்த விவரங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், கட்டாயம் ஆரம்பகால இந்திய பௌத்த நூல்களில் இந்த விபரங்களை எதிர்பார்க்கலாம், ஏனென்றால் அவர்கள் பிறந்து வாழ்ந்தது இந்தியாவே, இலங்கை அல்ல. ஆனால் அவை ஒன்றுமே அங்கு இல்லை. எனவே, இலங்கை நூல்களில் மட்டுமே காணப்படும் விரிவான குடும்ப தொடர்புகள் ஆரம்பகால பௌத்த மரபின் ஒரு பகுதியாக இல்லாமல், பிற்கால சேர்த்தல்களாகத் தோன்றுகின்றன. Part: 103 / APPENDIX – "Summary of Rajavaliya" The first thirteen pages may be ignored as having no direct relevance to the human history of Lanka. It is about Lanka from the page 14 only. King Suddhodana had two younger brothers called Amitodana and Pushpodana (P14) whereas King Suddhodana had four younger brothers and two sisters as per the Mahavamsa, 2-20:- Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana are the younger brothers. The Dipavamsa, 3 – 44 to 46, also give the same names. Pushpodana in the Rajavaliya is not mentioned in both the Mahavamsa and the Dipavamsa. Similarly the absence of Dhotodana, Sakkodana and Sukkodana in the Rajavaliya is also in conflict with other two chronicles. The whole or part of the story must be an invented story to have these discrepancies about the uncles of Siddhartha, the later Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 104 தொடரும் / Will follow துளி/DROP: 2034 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 https://www.facebook.com/groups/978753388866632/posts/33792470820401465/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 104 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் இலங்கையின் அரச பரம்பரையை மகிமைப்படுத்தவும், அதை பௌத்தத்துடன் இணைக்கவும் மகாவம்சம் (கி.பி. 5 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! அது மட்டும் அல்ல, அதுவே மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிப்பது [“ that this chapter is compiled for the serene joy and emotion of the pious”], அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். இதன் மூலம், மகாவம்சம் இலங்கை மன்னர்களை புத்தரின் இரத்த உறவினர்களாக சட்டப்பூர்வமாக்கியது. எனவே, புத்தரின் சொந்த உறவினர்கள் அங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், இலங்கை புத்த மதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்ற கூற்றையும் இது வலுப்படுத்தியது. எனவே, புத்தரின் குடும்பத்தைப் பற்றிய மகாவம்சத்தின் பதிப்பு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, புத்த மதத்தின் சரியான பாதுகாவலர் என்ற இலங்கையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக, கற்பனையாக எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலை ஆகிறது! . என்றாலும் இதனால், புத்தரின் நேரடி குடும்பம் இலங்கையில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது என்ற கருத்து வலுப்படுத்தப்படுகிறது. அது மட்டும் அல்ல, பின்னர், மற்றொரு, புத்தரின் தந்தையின் இளைய சகோதரரின் பேரன், திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி], இலங்கை இளவரசி சித்ராவை [அல்லது உன்மாதசித்திராவை] மணந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் புத்தருக்கும் இலங்கையின் அரச குடும்பத்திற்கும் இடையிலான வம்ச தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. இன்னும் ஒன்றையும் மறக்கவேண்டாம், புத்தரின் மூன்று முறை இலங்கை விஜயம்? கற்பனைகளுக்கு எல்லை உண்டோ ? என்ற கேள்விக்கு இவை சரியான பதில்கள் ஆகின்றன! எனவே, இந்த முழு கதைக்களமும் புத்தருக்கும் இலங்கை மன்னர்களுக்கும் இடையே ஒரு இரத்த வம்ச தொடர்பை நிறுவுவதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கை முடியாட்சியின் சட்டபூர்வமான தன்மையையும், புத்த மதத்தின் பாதுகாவலர் என்ற அதன் உரிமையையும் மேம்படுத்துவதே குறிக்கோளாக இங்கு இருக்கிறது எனலாம்? வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, அதன் தலையை வங்க நாட்டு அரசனுக்கு கொடுத்தான். அதன் பின், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு புதிய இராச்சியத்தை உருவாக்கி, அந்த லாலா நாட்டுக்கு [Lala Desa / Lata region, Gujarat / Maharashtra area of India] அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து பதினாறு இரட்டையர்களைப் [32 மகன்களைப்] பெற்றெடுத்தான். விஜயன் எல்லாவற்றிலும் மூத்தவன். அவர் ஒரு வியாழக்கிழமை பிறந்தார். [ஏழு நாள் வாரம் பண்டைய கலாச்சாரங்களில் வேர்களைக் கொண்டுள்ளது, பாபிலோனிய வானியல் மற்றும் சந்திர சுழற்சிகளைக் கவனிப்பதன் மூலம் இதற்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன] ஆனால் இந்த வியாழக்கிழமை என்ற தகவல் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. அங்கே அதே நாட்டில், அதே நாளில் எழுநூறு ஆண்கள் பிறந்தனர் [Be it known that, on the day of Vijaya’s birth, 700 males were born in the same city]. விஜயனின் மோசமான நடத்தை காரணமாக, அவனின் தந்தையுமான மன்னர், இளவரசர் மீது கோபமடைந்தார்; மேலும், மூன்று உலகங்களுக்கும் ஆசிரியரான, நமது புத்தர் இறந்த ஏழாவது நாளில், இளவரசர் விஜயனும், அவனது பிறந்தநாளில் பிறந்த, விஜயனின் உதவியாளர்களான, எழுநூறு போர்வீரர்களும், ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, கடலில் அலைய விட்டனர். அவர்கள் தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota or Tammannava, Tambapanni-tota, தம்மன்னா-தோட்டா என்பது "தம்மன்னா / தம்பபன்னி துறைமுகம்" என்று பொருள்படும், இது விஜயன் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த கடலோரப் பகுதியைக் குறிக்கிறது] தரையிறங்கினர். இந்த இடம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில், இன்றைய மன்னார் அல்லது புத்தளத்தைச் சுற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், விஜயனும் அவனது தோழர்களும் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த அதே நாளில், அதாவது புத்தர் மரணித்த அதே நாளில், இலங்கையில் தரையிறங்கியதாக தீபவம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. என்றாலும் புத்தர் இறந்த பல நாட்களுக்குப் பிறகு இராசவலியவின் படி அவர்கள் இலங்கையில் தரையிறங்கியிருக்க வேண்டும். எனவே இது மற்ற இரண்டு நாளாகமங்களுடனும் முரண்படுகிறது. விஜயன் மோசமான நடத்தைகளைக் கொண்டு இருந்தாலும், அவன், மறுபிறப்பு இல்லாத ஒரு மரணம் அடைந்து, நேராக சொர்க்கம் சென்றான்? நம்பினால் நம்புங்கள்? சொர்க்கம் எங்கே நானும் தேடுகிறேன்? மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகிய இரண்டு வரலாற்று நூல்களுக்கு மாறாக, இராசவலியவில் விஜயன் மற்றும் அவரது தோழர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இராசவலியவின் படி விஜயனும் அவரது தோழர்களும் தம்மண்ண-தோட்டாவிற்கு நேரடியாக வந்தனர். இருப்பினும், தீபவம்சத்தின்படி, அவர்கள் முதலில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள இன்றைய சூரத் என்று நம்பப்படும் சுபாராவை [Suppara, believed to be the present day Surat in Gujarat, India] அடைந்து, அங்கேயும் தவறாக நடந்து கொண்டு, தப்பி ஓடி, பின்னர் அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள இன்றைய பருச் என்று நம்பப்படும் பாருகாச்சாவை [Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra] அடைந்து, தங்கள் தீய நடத்தையை மீண்டும் செய்தனர். இருப்பினும், மகாவம்சத்தின்படி, அவர்கள் பருகாச்சாவில் தரையிறங்காமல் சுப்பராகாவிலிருந்து தம்பபன்னியை அடைந்தனர். பாருகாச்சா மற்றும் சுபாரா இரண்டும் இந்தியாவின் மேற்கு கடல் கரையில் உள்ள பண்டைய வர்த்தக கடல் துறைமுகங்கள் என்பதை இங்கே கவனிக்கலாம். இராசவலிய இராவணனின் போரைப் பற்றி குறிப்பிடுகிறது, ஆனால் மற்ற இரண்டு வரலாற்று நூல்களும் இராமன் - இராவணன் போரைப் [Rama-Ravana war] பற்றி குறிப்பிடவில்லை. தீபவம்சத்தில் கிரிதீபா [Giridipa] இராசவலியத்தில் யக்-கிரி [Yak-giri] என்று விவரிக்கப்பட்டுள்ளது. இராசவலியத்தின்படி புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார். முதல் வருகை அவர் நிர்வாணம் [Nirvana] அடைந்த ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு. இரண்டாவது வருகை அவர் நிர்வாணம் அடைந்த ஆறாவது ஆண்டில். ஆனால், நிர்வாணம் அடைந்த ஐந்தாவது ஆண்டில் இது நடந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மூன்றாவது வருகை நிர்வாணம் அடைந்த ஒன்பதாம் ஆண்டு நிறைவில் நடந்துள்ளது. ஆனால், தீபவம்சம், 2 - 52, இந்த வருகை எட்டாம் ஆண்டில் நடந்ததாக கூறுகிறது. ஆகவே இங்கும் நாளாகமம்களுக்கு [chronicles] இடையில் வேறுபாடு காண்கிறோம்? Part: 104 / APPENDIX – "Summary of Rajavaliya" The king of Wangu married the daughter of Kalingu king, and a daughter was born to them. The daughter when grown up united with a lion and gave birth to a twin, a son, Sinhaba, and a daughter, Sinhawalli. Sinhaba killed the father lion and presented the head of the killed lion to the king of Wangu country. Sinhaba created a new kingdom and married his sister, and she gave birth to sixteen twins. Vijaya was the eldest of all. He was born on a Thursday, and this information is not in the other two chronicles. There were born seven hundred males at the same time in the same country. Vijaya and his seven hundred warriors were forced to drift, on the seventh day after the death of the Buddha, in the sea because of their bad behavior, and they landed in Tammanna-tota. The Dipavamsa and the Mahavamsa say Vijaya and his companions landed in Lanka on the very same day the Buddha attained Mahaparinirvana, the death of the Buddha. They must have therefore landed in Lanka as per the Rajavaliya many days after the death of the Buddha. This is in conflict with the other two chronicles. Vijaya died with no possibility of rebirth; went to heaven. There is no mention of the wives and the children of Vijaya and his companions in the Rajavaliya, contrary to the other two chronicles, the Mahavamsa and the Dipavamsa. Vijaya and the companions came direct to Tammanna-tota as per the Rajavaliya. However, as per the Dipavamsa, they first reached Suppara, believed to be the present day Surat in Gujarat, India, misbehaved there too, and made to flee. Then they reached Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra, and repeated their evil behavior. However, as per Mahavamsa, they reached Tambapanni from Supparaka without landing at Bharukaccha. It may be noted here that both Bharukaccha and Supparaka are ancient trading seaports on the western seaboard of India. The Rajavaliya mentions of the war of Ravenna, but the other two chronicles do not mention about Rama-Ravenna war. Giridipa in the Dipavamsa is described in the Rajavaliya as Yak-giri. The Buddha visited Lanka, as per the Rajavaliya too, three times. First visit is on the completion of the nine months of his attaining Nirvana. The second visit is in the sixth year after he attained Nirvana. The Mahavamsa says it took place on the fifth year of Buddhahood. The third visit is on the completion of the ninth year after attaining Nirvana. The Dipavamsa, 2 – 52, says this visit took place in the eight year. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 105 தொடரும் / Will follow துளி/DROP: 2036 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 https://www.facebook.com/groups/978753388866632/posts/33810221221959758/?
2 weeks ago
நியுசிலாந் வீரர்கள் பவர் பிலே ஓவருக்கை அவுட் ஆனதால் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பில்லை....................
Checked
Sun, 03/01/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed