புதிய பதிவுகள்2

அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!

1 week 6 days ago
Published By: Vishnu 18 Sep, 2025 | 02:56 AM நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு? ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225369

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

1 week 6 days ago
அது தான் சீமான் மீதான கண்மூடித்தனமான அவர்கள் பக்தி அவர்கள் கண்ணை மறைத்து விடுகின்றது என்பதிற்கு இதுவும் ஒரு உதாரணம்.(லைக்கியவரும் வேறு இருக்கின்றார் 🤣) கீமான் திரள்நிதி ஏமாற்றி பெற்று கொள்கின்ற இரகசியமும் அது தான்.

கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையம்; தேசிய கட்டமைப்பில் இணைப்பு

1 week 6 days ago
Published By: Vishnu 18 Sep, 2025 | 02:52 AM மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மெகாவோட் 350 கொள்ளவுடன் கூடிய கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையமானது பிரதமர் தலைமையில் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இலங்கைப் பொறியியல் அறிவு, கட்டமைப்பு மற்றும் திறன்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பூர்த்தி செய்வதற்கான இலக்கிற்கு நேரடி பங்களிப்பு செய்யும். நாட்டின் ஆற்றல் துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமானதாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீத பங்கைக் பூர்த்தி செய்யக் கூடியதாகும். இதேபோன்று, இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமானது, 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு. இரண்டாம் கட்டமானது, நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து. மொத்த திறன் 350 மெகாவாட்டாக காணப்படுகிறது. இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சோபாதனவி மின்நிலையம் மூலம் தேசிய மின் அமைப்பிற்கு மேலும் 350 மெகாவாட் இணைக்கப்படுகிறது. மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது. அதன்படி, உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின் கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருப்பதைச் சொல்ல வேண்டும். நமது நாட்டில் பல தசாப்தங்களாக செயல்பட்ட தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இப்போது நாடு பின்தங்கிய பொருளாதார பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்துக்குள் செல்வதற்கான முக்கிய தடையாக தாங்க முடியாத மின்சாரச் செலவினை குறிப்பிடலாம்.இதனை கருத்தில் கொண்டு, நாங்கள் மீள்சுழற்சி ஆற்றலுக்கு எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம். இலங்கையை பிராந்தியத்தில் குறைந்த மின் விலை கொண்ட நாடாக மாற்றுவதற்காக, விலைமனு மற்றும் விலை அழைப்புச் செயல்முறைகளை செயற்படுத்தி, பாரம்பரிய எரிபொருள் அடிப்படையிலான மின்சாரத்தை மீள்சுழற்சி ஆற்றல் கொண்ட மூலங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதே எங்கள் இலக்காகும்.அதற்காக எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/225368

கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்

1 week 6 days ago
Published By: Digital Desk 1 18 Sep, 2025 | 08:01 AM கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது. 2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கனடா அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் இந்த மிரட்டல், கனடா மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/225378

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

1 week 6 days ago
திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம் திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வரைபடங்கள் மஹகனதராவ, ஹக்மான, பல்லேகல மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmfpcvz9300iho29nqldpwvnq

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

1 week 6 days ago
மேலே உள்ள விளக்கம், எழுதியவருக்கும், லைக்கியவருக்கும். 🤣🤣🤣 பொறுப்பு துறப்பு மேலே கருத்தாளரை அன்றி, வாக்கு ஒப்பீட்டு முறையையே அடிமுட்டாள்தனமானது என விளித்துள்ளேன். வாசிப்போர் எப்படி பொருள்கொள்கிறார்கள் என்பற்கு நான் பொறுப்பல்ல🤣.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 week 6 days ago
பாகிஸ்தான் அணிக்கு 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி Published By: Vishnu 18 Sep, 2025 | 02:42 AM பாகிஸ்தான் அணி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தனது 17.4 ஓவரில் சகலவிட்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. ஆகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியினர் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். https://www.virakesari.lk/article/225366

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

1 week 6 days ago
இனப்படுகொலை கடுமையான குற்றமாக இருந்தாலும் தண்டனை கிடைப்பதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் லூயிஸ் பார்ரூசோ பிபிசி 17 செப்டெம்பர் 2025 காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்ற உலகளாவிய விவாதம் எழுந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் நடுப்பகுதி வரை, இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் காஸாவில் சுமார் 65,000 பேரைக் கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கொல்லப்பட்ட 1,200 பேரில் பெரும்பாலானோரும் காஸாவுக்கு கடத்தப்பட்ட 251 பேரும் பொதுமக்கள் ஆவர். காஸாவில் நடந்த தாக்குதல் மற்றும் அழிவுகள் பரவலான கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளன. துருக்கி மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சில வல்லுநர்கள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தை 'இனப்படுகொலை' எனக் கூறியுள்ளனர். 1948 இனப்படுகொலை தீர்மானத்தை மீறியதாக இஸ்ரேலுக்கு எதிராக 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்கு தொடர்ந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு இடைக்கால தீர்ப்பு, பாலத்தீனர்களுக்கு இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை இருக்கிறது என்று கூறியது. தென்னாப்பிரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளில் சில உண்மையென நிரூபிக்கப்பட்டால், அவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையமும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், இஸ்ரேலின் செயல்களை இனப்படுகொலை என்று விவரிப்பதை பெரும்பாலும் தவிர்த்துள்ளன. பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் தலைவரின் கையில் இல்லை என்றும் "வரலாற்றாசிரியர்கள்" பொருத்தமான நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் "அப்பட்டமான பொய்கள்" என்று கடுமையாக நிராகரித்து, தனது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி வருவதாக வலியுறுத்துகிறது. இந்த வாதத்தை இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த நட்பு நாடான அமெரிக்காவும் ஆதரிக்கிறது. இனப்படுகொலை என்றால் என்ன, இது பொருந்துமா என்பதை யார் முடிவு செய்யலாம்? இனப்படுகொலை என்பதன் வரையறை என்ன? பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images படக்குறிப்பு, யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் இனப்படுகொலை மாநாட்டை உருவாக்குவதற்கு உதவினார். இந்தச் சொல் 1943இல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கினால் உருவாக்கப்பட்டது. அவர் கிரேக்க வார்த்தையான "ஜெனோஸ்" (இனம் அல்லது பழங்குடி) மற்றும் லத்தீன் வார்த்தையான "சைடு" (கொல்லுதல்) ஆகியவற்றை இணைத்தார். அவரது சகோதரரைத் தவிர அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை பயங்கரங்களைக் கண்ட பிறகு சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று லெம்கின் வலியுறுத்தினார். அவரது முயற்சிகள் 1948 டிசம்பரில் ஐ.நா. இனப்படுகொலை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. 2022-ஆம் ஆண்டு வரை, இது 153 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தீர்மானத்தின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பதை "தேசிய, இன, இனவியல், அல்லது மதக் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று" என்று வரையறுக்கிறது: குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவிப்பது குழுவின் அழிவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே மோசமான வாழ்க்கை சூழலை உருவாக்குவது குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை "தடுக்கவும் தண்டிக்கவும்" ஒரு பொதுவான கடமையை தீர்மானம் விதிக்கிறது. இனப்படுகொலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images படக்குறிப்பு, காஸா மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை இஸ்ரேல் மறுக்கிறது ஒரு சூழ்நிலை இனப்படுகொலையாக உள்ளதா என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சில வழக்குகளில் மட்டுமே இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலை, 1995இல் போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை மற்றும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கமர் ரூஜின் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை. சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை இனப்படுகொலை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற முக்கிய சர்வதேச நீதிமன்றங்களாகும். ருவாண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா. தற்காலிக தீர்ப்பாயங்களையும் அமைத்தது. சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்கும் ஐ.நாவின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும். தற்போது நடந்து வரும் இனப்படுகொலை வழக்குகளில், 2022இல் யுக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றாகும். யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் யுக்ரேன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா தவறாக குற்றம் சாட்டியதாகவும், அதை படையெடுப்புக்கு ஒரு காரணமாக பயன்படுத்தியதாகவும் யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. பட மூலாதாரம், Mahmoud Abu Hamda/Anadolu via Getty Images படக்குறிப்பு, உதவிகள் மீது விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடையை இஸ்ரேல் மே மாதத்தில் பகுதியாக தளர்த்திக்கொண்டது மற்றொரு உதாரணம், 2017இல் காம்பியா மியான்மருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, முஸ்லிம் ரோஹிஞ்சா சிறுபான்மையினருக்கு எதிராக "பரவலான மற்றும் திட்டமிட்ட அழிக்கும் நடவடிக்கைகளை" அவர்களின் கிராமங்களில் நடத்தியதாக குற்றம் சாட்டியது. 2002இல் ரோம் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), தனிநபர்களை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த 125 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாக உள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. ஆனால் 2019இல் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு பதவி நீக்கப்பட்ட சூடானின் முன்னாள் அதிபர் ஓமர் ஹசன் அஹ்மத் அல் பஷீர் மீது மட்டுமே இதுவரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவை அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் சட்டபூர்வமான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா. கூறுகிறது. உதாரணமாக, 1932-33இல் யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலினின் கூட்டுமயமாக்கல் கொள்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த 'ஹோலோடோமரை' பல அரசாங்கங்களும் நாடாளுமன்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன. தகுதியான நீதிமன்றங்களின் முடிவுகளைத் தொடர்ந்து மட்டுமே இனப்படுகொலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கொள்கை காரணமாக பிரிட்டன் இவ்வாறு அங்கீகரிக்கவில்லை. பட மூலாதாரம், Khames Alrefi/Anadolu via Getty Images படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மற்றும் பரவலான பட்டினி இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக ஐநா சொல்கிறது விமர்சனங்கள் உள்ளனவா? இனப்படுகொலை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, பல்வேறு தரப்பினரால் அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட வழக்குகளுக்கு இதை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தால் விரக்தியடைந்தவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிலர் வரையறை மிகவும் குறுகியது என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் இது அதிகப்படியான பயன்பாட்டால் மதிப்பிழந்துவிட்டது என்று கூறுகின்றனர். "இனப்படுகொலைக்கான அளவுகோலை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய இனப்படுகொலை தொடர்பான நிபுணர் திஜ்ஸ் பவுக்னெக்ட் ஏஎஃப்பிக்கு அளித்த பேட்டியில் கூறினார். "நோக்கம் இருந்தது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுடன் நடந்தவற்றுக்கு அந்த நோக்கமே ஒரே சாத்தியமான விளக்கம் என்றும் நிரூபிக்கவேண்டும்," என அவர் மேலும் கூறினார். மற்ற சில பொதுவான விமர்சனங்களில், சில அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்காதது மற்றும் எத்தனை இறப்புகள் இனப்படுகொலைக்கு சமமாகும் என்பதை நிறுவுவது ஆகியவை அடங்கும். இனப்படுகொலை நடந்ததா என ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று பவுக்னெக்ட் குறிப்பிட்டார். ருவாண்டாவின் வழக்கில், ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் இனப்படுகொலை நடந்ததாக முறையாக முடிவு செய்ய கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எடுத்தது. மேலும் 1995இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் கிட்டத்தட்ட 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதை 2017-ஆம் ஆண்டு வரை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கவில்லை. யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ், மிகக் குறைவான குற்றவாளிகளே தங்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். "ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் கம்போடியாவில் உண்மையான குற்றவாளிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஒருசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்." ஒரு சூழல் சட்டரீதியாக இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டவுடன், தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு ராஜீய, தடைகள் அல்லது ராணுவ தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ருவாண்டா இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, தீர்மானத்தின் கீழ் சட்ட மற்றும் அரசியல் கடமைகளைத் தவிர்க்க, அமெரிக்க அதிகாரிகள் "இனப்படுகொலை" என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருந்ததாக அமெரிக்காவின் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின. "ஐ.நா. வரையறையுடன் கூட, வரையறை செய்யத் தவறுதல், செயல்படத் தவறுதல் மற்றும் விசாரணை செய்யத் தவறுதல் ஆகியவை இன்னும் உள்ளன," என்று பர்ன்ஸ் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddmz0vv2eyo

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week 6 days ago
ஒரு வாகனத்தில் ஏற்றியே மண் குன்றுகளுக்கு கொண்டு சென்றார்கள். செல்லும் போது சில சிறு மண் குவியல்களைத் தாண்டியே வாகனம் ஏறி இறங்கிச் சென்றது. அப்போது வல்லிபுரக் கோவில் பகுதிகளே நினைவில் வந்தன. வல்லிபுரத்தில் மண் குவியல்கள் இப்போது இல்லை. வெறும் மண் தானே என்று அள்ளி முடித்துவிட்டார்கள்.............🫣. மேற்கத்தைய நாடுகளில் வெறும் மண் தானே என்று அள்ளி விடாமல், அந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற வேறு ஏதாவது வழிகள் இருக்கின்றதா என்று பார்க்கின்றார்கள். ஆனால் இதே மண் குவியல்கள் ஆபிரிக்காவிலோ அல்லது ஆசியாவிலோ இருந்தால், அதே மேற்கு நாடுகள் அங்கு அரிய உலோகங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்து, அரிய உலோகங்கள் அங்கு இருந்தால் அந்த மண் குவியல்களை இல்லாமலும் ஆக்கிவிடக் கூடியன. அங்கு நான் பார்த்த இன்னொரு விடயம் மணல் மேடுகளில் ஏறிச் செல்லும் கனரக வாகனங்கள் மிட்சுபிசி (Mitsubishi) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனத்தின் இப்படியான கனரக வாகனங்களை நான் முன்னர் கண்டிருக்கவில்லை. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒரு முடிவுக்கு வந்தது போன்ற ஒரு நிலையே அமெரிக்காவில் இருக்கின்றது. இதே போலவே அங்கே பலரும் மிட்சுபிசி அவுட்லாண்டர் போன்ற வாகனங்களையும் தங்களின் தேவைகளுக்கு வைத்திருக்கின்றார்கள்.

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

1 week 6 days ago
பரவாயில்லை, இப்போதாவது மலசலம் கலக்காமல் எழுத முயன்றுள்ளீர்கள். வாத்தியார் குட்டு வேலை செய்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் அடி முட்டாள்தனமான வாக்கு எண்ணிக்கை ஒப்பீட்டுக்கான பதில் கீழே. 36 இலட்சம் எடுத்தது 234 சட்டமன்ற தொகுதிகளில் 39 பாராளுமன்ற வேட்பாளர்கள் சேர்ந்து 🤣. சுமன் எடுத்தது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும். யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம். தமிழ் நாட்டின் மொத்த (234 தொகுதி) - ஆறு கோடி முப்பத்தாறு இலட்சம். பிகு மேலே உள்ள தரவுகளை உள்வாங்கினால் (முடிந்தால்)…. ஒரு தனி வேட்பாளர் 5.4 இலட்சம் வாக்காளரிடம் பெற்ற வாக்குகளையும்… 234 தொகுதியில் 39 வேட்பாளர் 6.3 கோடி வாக்காளரிடம் பெற்றதையும் ஒன்றென்ன எண்ணி ஒப்பிடுபவரின் அதி, அதி புத்திசாலிதனத்தை விளங்கி கொள்ளலாம். *2021 இல் திருவெற்றியூரில் சீமான் எடுத்தது 48,000 சொச்சம்.

பிரித்தானியாவில் ட்ரம்புக்குப் பிரமாண்ட அரச விருந்து

1 week 6 days ago
பிரித்தானியாவில் ட்ரம்புக்குப் பிரமாண்ட அரச விருந்து 18 Sep, 2025 | 06:32 PM பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர். விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், 155 அடி நீளமுள்ள மேசை அமைக்கப்பட்டது. இந்த மேசை முழுக்க, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நிறத்திலான பொருட்கள், மற்றும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. விருந்திற்காக பிரிட்டன் இராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர், அரண்மனையின் ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அமெரிக்கா - பிரிட்டன் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225456

ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!

1 week 6 days ago
பேரூந்துகளிலும் இலவசம். முன் இருக்கைகளில் யாரும் இருந்தால் உடனடியாக எழும்ப வேண்டும். இதுவே தொடரூந்தில் அவர்களைக் கண்டதும் சிங்கள மக்களே முகத்தை சுழித்துக் கொண்டு எழும்பியதைப் பார்த்திருக்கிறேன்.

திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!

1 week 6 days ago
திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்! 18 SEP, 2025 | 05:39 PM திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/225445

சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு

1 week 6 days ago
சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு adminSeptember 18, 2025 யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்றைய தினம் அதன் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://globaltamilnews.net/2025/220534/

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை

1 week 6 days ago
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை adminSeptember 18, 2025 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம். அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது https://globaltamilnews.net/2025/220495/
Checked
Wed, 10/01/2025 - 22:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed