1 week 4 days ago
நெதர்லாந் அணியின் பந்து வீச்சு அருமை............................
1 week 4 days ago
தன்னை விட அதிகம் கற்றுவிட்டார், உழைக்கின்றார் என புருசுவுக்கு தன் பொண்டாட்டி மீது பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மை பிரச்சனையோ?
1 week 4 days ago
இப்போது எமது காலத்தைய அரைச்சுவர் வகுப்பறைகள் கட்டப்படுவது இல்லை போல. அரை சுவர் என்றாலும் இரும்பு நெட் எல்லாம் அடித்து சிறை போல் உள்ளது. ஒரு விதத்தில் பாதுகாப்பு என பார்த்தாலும் இன்னோர் விதத்தில் அவசரம் ஆபத்திற்கு வெளியேற முடியாது.
1 week 4 days ago
இவரது தொலைபேசி இலக்கம் புதுக்குடியிருப்பு ·என்ற ஒரு பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.இப்போதும் அந்தப் பக்கத்தில் வேலை தேவைப்படுவோருக்காக இணைப்புக்கள் குடுக்கப்பட்டு இருக்கிறது.தப்பான இடம் என்று தெரிந்தும் உடல் உறுப்பை கூட இழக்கும் அளவுக்கு போனவர்களுக்காக என்ன செய்வது..மன்னார் பகுதிக்கு அரசாங்கத்தின் உதவி தொகை போய் உள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது என்றும் எழுதுகிறார்கள்.அந்த துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் அழுத்தம் குடுத்தால் மட்டுமே பணத்திற்கு என்ன நடந்தது என்பது வெளி வரும். சிலரோடு தொடர்பு வைத்தால் அனுப்பும் பணம் முடிந்ததும் மீளவும் தொடர்பு கொண்டு உதவி கேட்பார்கள் கவனம்.தொலைபேசி இலக்கம் - 077 763 2388.
1 week 4 days ago
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்! Feb 18, 2026 - 03:43 PM கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார். தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlrvh2eh0004356n6qsq4di6
1 week 4 days ago
நல்ல தகவல்கள் ......நன்றி யாயினி ......! 👍
1 week 4 days ago
வெனிசூலாவில் நடந்தது போல தாக்குதல் திட்டங்கள் திட்டமிடும் வரை பேச்சு வார்த்தை என்று காலம் கடத்தப்படும்.
1 week 4 days ago
எனக்கும் தான் நண்பா புள்ளி போச்சுது இந்த முறை யாரும் 100புள்ளிய தாண்ட மாட்டினம்...................கணித்த கணிப்பை விட எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கு.................குண்டக்கா மண்டக்கா கேள்வியில் பல போட்டியில் புள்ளிய அள்ளினான் இந்த முறை நல்ல படியா அமைய வில்லை.........................
1 week 4 days ago
இந்தியா .... 69/3 = 9 ஓவர் .....!
1 week 4 days ago
காயத்திலிருந்து 'விரைவில்' மீள ரிஷப் பண்ட் எடுத்து வரும் சிறப்பு சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், 'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது. ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images ஹைப்பர்பேரிக் என்ற சொல், சாதாரண அளவை விட அதிகமான என்ற பொருள் கொண்ட 'ஹைப்பர்' மற்றும் அழுத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் 'பேரிக்' ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும். ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, சாதாரண அளவை விட அதிகப்படியான ஆக்சிஜனை வழங்கி, உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும். அறிவியல் ரீதியாக, நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இதில் சிசிச்சை பெறும் நபருக்கு 100% சுத்தமான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் ஒரு சிறப்பு அழுத்த கேபினில் வழங்கப்படுகிறது, அங்கு காற்றின் அழுத்தம் சாதாரண நிலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிசிச்சை பெறும் நபரின் நுரையீரல்கள் சாதாரண நிலையை விட மிக அதிகமான ஆக்சிஜனை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்தக் கூடுதல் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக உடலில் காயம், புண் அல்லது தொற்று உள்ள பகுதிகளை சென்றடைகிறது. '' திசுக்கள் அல்லது காயமடைந்த பகுதிகள் அதிக ஆக்சிஜன் பெறுவதால் வேகமாக குணமடைகின்றன. இதன் மூலம் உடலில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை மேலும் விரைவாகிறது.'' என்கிறார் சௌரப் சிங். மேற்கத்திய நாடுகளில் இது ஆரம்பத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கே பயன்படுத்தப்பட்டது. "ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்பட்டு வருகிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்த இதன் பயன்பாடு, தற்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவர்களும் நோயாளிகளும் இந்தத் தெரபியைத் தேர்வு செய்யும் அளவில் மேம்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் சௌரப் சிங். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு, ரிஷப் பண்ட் ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்தார். எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? டாக்டர் சௌரப்பின் கூற்றுப்படி, இந்தத் தெரபி மிகவும் நல்ல பலன்களை வழங்கி வருகிறது. குறிப்பாக செல்கள் வேகமாக உருவாகி அழியும் பகுதிகளில், குணமடைய அதிக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் இந்த சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார். "பார்வை இழப்பு, கதிர்வீச்சினால் ஏற்படும் திசு சேதம், கடுமையான ரத்த சோகை, தோல் ஒட்டுதல் அதாவது 'ஸ்கின் கிராஃப்டிங்' எனப்படும் உடலின் ஒரு பகுதியில் உள்ள தோலை நீக்கிவிட்டு மற்றொரு பகுதியின் தோலைப் பொருத்தும் முறை, பலத்த காயம், எலும்பு அல்லது தோலில் ஏற்படும் தீவிரத் தொற்றுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்" என்று கூறுகிறார். "அதேபோல், தீக்காயங்களால் தோல் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, 'ஆஸ்டியோமைலிடிஸ்' எனப்படும் எலும்பில் ஏற்படும் தீவிரத் தொற்று, கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும் பிரச்னைக்கும் தற்போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது," என்று டாக்டர் சௌரப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்தியாவில் இந்த சிகிச்சையை வழங்கும் மையங்கள் அல்லது நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அரசு மையங்களில் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்தில் ஒரு அமர்வுக்கு நோயாளியிடமிருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.'' என்கிறார் சௌரப் சிங். அதே நேரத்தில், தனியார் மையங்களில் ஒரு அமர்வுக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது உங்கள் காயம் அல்லது உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தது. சராசரியாக ஒவ்வொரு அமர்வும் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும். அழகுக்கலையில் பயன்பாடு வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காகவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காகவும் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி பயன்படுத்தப்படுவதாக இணையதளங்களில் பார்க்கமுடிகிறது. பல அழகு நிலையங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த சிகிச்சை உண்மையிலேயே பாதுகாப்பானதா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சௌரப், "உண்மையில், இந்தத் தெரபியை எடுத்துக்கொள்வதால் சருமம் இளமையாக மாறும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் முகம் பொலிவு பெற்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவை தனிப்பட்ட அனுபவங்களே தவிர, இதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இல்லை" என்று கூறுகிறார். விடாமுயற்சி ரிஷப் பண்ட் மற்றும் அவரைப் போன்ற மற்ற வீரர்கள் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு வர இந்த சிகிச்சைமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். 2022-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையானவை. பண்ட் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், மிகவும் அதிரடியாகத் தனது வருகையைப் பதிவு செய்தார். இருப்பினும், விளையாட்டின் போது அவருக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்களில் இருந்து வெளிவர அவர் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியை மேற்கொள்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg15gdjvx7o
1 week 4 days ago
போன வருடம் நடந்த ஜபிஎல்ல கூட ஆரம்பத்தில் வருவதும் போவதுமாய் இருந்தார் 4அல்லது 5விளையாட்டு சரியா அமைய வில்லை அதன் பின் விளையாடின விளையாட்டுக்கள் பாராட்டும் படியாய் இருந்தது இந்த அணிக்குள் விளையாட பல திறமையான வீரர்கள் காத்து இருக்கினம் சர்மா கிடைச்ச சர்ந்தப்பத்தை இனி சரியா பயன் படுத்தனும் இல்லையேன் இவரின் இடத்தை இன்னொரு வீரர் பிடித்து விடுவார்.............................
1 week 4 days ago
ஆஹா எனக்கு புள்ளிகள் போச்சே! ஓமானை விட நமீபியா குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டதே!!
1 week 4 days ago
உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் அடிச்ச அணி எதுக்கான கேள்விக்கு நம்பீயா அணி இடம் பிடித்து விட்டது ஹா ஹா..................................
1 week 4 days ago
Pakistan vs Namibia, 35th Match, Group A at Colombo, T20 World Cup, Feb 18 2026 - Match Result RESULT 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup PrevNext Pakistan 199/3 Namibia (17.3/20 ov, T:200) 97 Pakistan won by 102 runs
1 week 4 days ago
பாக்கிஸ்தான் அணி பெரிய வெற்றிய நோக்கி.................
1 week 4 days ago
இப்ப தான் தூக்கத்தால எழுந்தேன் பாக்கிஸ்தான் ரென்சன் இல்லாம வெல்ல போகுது ஹா ஹா...................
1 week 4 days ago
பாகிஸ்தான் 199 = 20 ஓவர் .......!
1 week 4 days ago
சிங்களவன்…. விகாரை கட்டுறான், சோனகன்…. அரபு கல்லூரி கட்டுறான், தமிழன்… நண்டு மாதிரி, தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு இருக்கிறான். எப்பதான் திருந்தப் போகுதுகளோ….
1 week 4 days ago
இது வரவேற்கத்தக்க செயல். இதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம். கள்ள மண் ஏற்றிக் கொண்டு… அசுர வேகத்தில் செல்லும் பார ஊர்திகளால், விபத்து ஏற்பட்டு தினமும் பலர் சாகின்றார்கள். இதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 week 4 days ago
Live 35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup Pakistan (14/20 ov) 121/3 Namibia Pakistan chose to bat. Current RR: 8.64 • Last 5 ov (RR): 44/2 (8.80) Live Forecast: PAK 188 போற போக்கில நமீபியா நாமம் போடுமோ?!🤣
Checked
Mon, 03/02/2026 - 05:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed