புதிய பதிவுகள்2

குட்டிக் கதைகள்.

1 week 4 days ago
கதையைப் படிக்காத ஓவியரும் காசுக்காக வரைந்திருக்கலாம் கதாசிரியர் கூட கூகுளில் சுட்டுப் போட்டிருக்கலாம் எப்படியோ அவுஸ் போல் ஹவுசுக்கு போகாமல் சிம்பாவே 8 க்குள் போவது போல் ஏதோ எமக்கொரு கதையும் படமும் கிடைத்திருக்கு அது போதும்........! 😂

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

1 week 4 days ago
உதவி செய்யாவிட்டாலும் சமூக அமைப்புகள் இவரைச் சட்டவிரோத வட்டிக் கும்பலிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

1 week 4 days ago
பகிடி வதை செய்வதே தவறு. அதை பல்கலைக்கழத்தில் சிறிய அளவில் செய்தாலும் கடந்து போய் விடலாம். ஆனால் பல்கலைக் கழகத்திற்கு வெளியே… புதிய மாணவர்களை தமது தங்கும் விடுதிக்கு அழைத்து… பாலியல் சீண்டல் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

இனித்திடும் இனிய தமிழே....!

1 week 4 days ago
பெரியவா திருவடிகள் சரணம் vous invite à rejoindre ce groupe. Suryamoorthy Swaminathan ·odpsnteoSr7g39g u53lhc5m0ff871fuualfh5gt0m34442u7855l665t4lc · 🌸""தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி .தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக் கூடாது."🌸" சொன்னவர்- ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் நடு வயதுத்தம்பதிகள்.நான்கு குழந்தைகள் எல்லாம் நவீன ஆடை-அலங்காரம், நவீனத் தோற்றம்.பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டுமே கூந்தல். எல்லையோரச் செடிகளை,இடுப்பளவு உய்ரத்துக்கு மேல் வளராதபடி கத்தரிக்கோலால் வெட்டி விட்ட மாதிரி , நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு. பெரியவா,அந்தக் குழந்தைகளைத் தன் அருகில் வரச் சொன்னார்கள்.-வந்தன "பேரென்ன? எங்கே படிக்கிறே" என்று விசாரணையாய் உரையாடல். குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன: உற்சாகமாக,தயக்கமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தன. அருகிலிருந்த பழத் தட்டைக் காட்டி, "யாருக்கு என்ன பழம் வேணுமோ, எடுத்துக்கலாம்" என்று சொன்னார்கள். குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம். Thanks - என்று சொல்லிவிட்டுப் பழங்களை எடுத்துக் கொண்டன. பெரியவா சொன்னார்கள் : "ஒரு request நான் சொன்னா, கேட்பேளா?" ஒரே குரலில்,"Oh Yes! certainly we will do" என்று குழந்தைகள் கூறின. "வெளி இடத்திலே,பள்ளிக்கூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்திலே பேசறபோது இங்கிலீஷ்லே பேசு, உங்க வீட்டிலே, அப்பா - அம்மா, சுவாமிகளா இருக்கிற நான்; அப்புறம்,பகவான் இவாளிடம் தயவு பண்ணி,தமிழிலே தான் பேசணும்.தமிழ் தாய்மொழி,தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக் கூடாது." குழந்தைகள், "இனிமே, அப்பா -அம்மா-குரு தெய்வத்துக்கிட்டே தமிழிலேயே பேசறோம் Promise என்றன. பெரியவா முகத்தில் கோடி சூர்யப் பிரகாசம் பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியைக் காட்டிலும் நூறு மடங்குப் பிரகாசம். Jaya Jaya Shankara Hare Hare Shankara.....! 🙏

குட்டிக் கதைகள்.

1 week 4 days ago
தமிழ் மொழியின் பெருமை a une nouvelle photo. Suivre osorendtpSfaa67uihlt9a91c1lt5c17g2079m801u112h3c07t8hf i3c50 · சன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன். ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது. முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன். “இருக்கு ராசா. முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி. “எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன். “நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.” “நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன். அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது. “இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி. பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும். “பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம். வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது. அடுத்த வெள்ளிக்கிழமை சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது. “வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள். “மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள். “டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன். “வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.” இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும். அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள். “அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன். “அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது? நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார். எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள். “அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது. பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள். “என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.” “ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன். “அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள். பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது. “கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன். அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள். “கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன். “பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன். பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது. அடுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன். நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே. யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.” பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன். “எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள். “பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.” பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை. காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்". கல்கியில் வந்த புனைவு கதை. #தமிழ்_வரிகள் #சிறுகதைகள் #தமிழில்பகிர்வோம் #அறிந்து_கொள்வோம் பாட்டி ஏன் மஞ்சள் ஜாக்கட் போட்டிருக்கு என்று யாராவது கேட்டால் அவர்கள் கதையை ஊன்றிப் படித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி . .........! 😀

ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு

1 week 4 days ago
ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 11:57 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில், "வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்." ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் 'பார்வையாளர்களாக' மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன. காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238937

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

1 week 4 days ago
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர் 18 Feb, 2026 | 12:25 PM யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238939

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

1 week 4 days ago
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை adminFebruary 17, 2026 வடக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கென (Management Service Officers) புதிய மற்றும் தனித்துவமான இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்திய கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இச்சந்திப்பு, மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் பல முக்கியமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. தற்போது முகாமைத்துவ அலுவலர்களுக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே நடைமுறையில் உள்ளது. இனிவருங்காலங்களில் அதிசிறப்பு தர (Super Class) முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கெனப் பிரத்தியேகமான கொள்கை ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு உத்தியோகத்தருக்குமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் இனி தெளிவாக வரையறுக்கப்படும். சில திணைக்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் தமது விடுமுறை கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிக்க அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/229226/

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

1 week 4 days ago
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்! மன்னார் மூர் வீதியில் அரங்கேறும் கந்துவட்டி அராஜகம்: அதிகாரிகளின் நடவடிக்கை கோரி கதறும் குடும்பம். adminFebruary 18, 2026 யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ (Siddu) முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும் ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார். தீராத கடன் சுமை சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் “இன்னும் வட்டி மீதமுள்ளது” எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். சமூகத்தின் குரல் மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். “என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?” என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா? பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2026/229246/

இலங்கை தெற்காசியாவில் முதன்முதலாக சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது

1 week 4 days ago
இலங்கை தெற்காசியாவில் முதன்முதலாக சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது Published By: Vishnu 18 Feb, 2026 | 05:27 AM சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது. சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது. இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும். இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்: "சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டார். யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238924

எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது; சமத்துவம் எப்போது? – வன்னி எம்.பி. ரவிகரன்

1 week 4 days ago
எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது; சமத்துவம் எப்போது? – வன்னி எம்.பி. ரவிகரன் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:49 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது? துறைதோறும் புரையோடிப்போயுள்ள சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வன்னி மண் வஞ்சிக்கப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடளாவிய வகையில் வடமாகாணம் புறக்கணிக்கப்படுவதையும் வடமாகாணத்திற்குள் வன்னிப்பெருநிலப்பரப்பு புறக்கணிக்கப்படுவதையும் மீள மீள சுட்டிக்காட்டுவதிலேயே எமது பெருங்காலம் கழிகிறது.வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரச கொள்கையின் அடிப்படையில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் சேவை பிரமாணக்குறிப்பு வலுப்பெறும் திகதி 2011.08.01 வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவிப்பெயர்களின் கீழ் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகை மதிப்பு ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் எம்ஏ-4-2006(ஏ) சம்பள அளவுத்திட்டம் வழங்கப்பட்ட அலுவலர்கள் பின்னர் 2012.02.14ஆம் திகதிய 1745/11 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சேவையில் உள்வாங்கப்பட்டனர். பின்னர் 2012.09.07 ஆம் திகதிய 1774/31ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பெயர் மாற்றம் பெற்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனும் அடையாளத்துடன் பணிபுரியும் இவ்வகுதியினருக்கு முறையான இடமாற்றக் கொள்கை ஏன் இன்றுவரை வகுக்கப்படவில்லை.5,6,7 ஆண்டுகள் கடந்தும் ஒரே சேவை நிலையத்தில் பணியாற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரின் பதில் என்ன? ஓர் ஊழியர் ஓரே சேவை நிலையத்தில் பத்தாண்டுகள் கடந்தும் சேவையாற்ற உங்கள் நிருவாக ஒழுங்கு இடமளிக்கிறதா? ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தில் மிகையாக இருப்பதை தங்கள் அமைச்சு இன்னமும் இனங்காணவில்லையா? வடமாகாணத்தில் மேற்படியான சமச்சீரற்ற வள ஒதுக்கம் தங்கள் அரசாங்கத்தில் சீராக்கப்படுமா என்பதை பாதிக்கப்படும் வன்னிப்பெருநிலத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற அமைச்சரிடம் வினவுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238921

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

1 week 4 days ago
அரபுக்கல்லூரி பதிவு தடைகளை நீக்க சட்டமூலம், பாடத்திட்டம் விரைவில் நிறைவு – அமைச்சர் சுனில் செனவி 17 Feb, 2026 | 03:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரபுக்கல்லூரிகளுக்கான சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என பெளத்த மற்றும் மத நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில், மத்ரசா மற்றும் அரபுக்கல்லூரிகளை பதிவுசெய்ய முடியும். தற்போது குர்ஆன் மத்ரசாக்களை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. குர்ஆன் மத்ரசா என்பது பாடசாலை மாணவர்கள் அல் குர்ஆனை ஓதுவதற்கு கற்றுக்கொள்ள அமைக்கப்பட்டதாகும். அதில் எந்த பிரநச்சினையும் இல்லை. அரபுக்கல்லூரிகள் தொடர்பிலேயே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. 2024,ஏப்ரல் 1ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டத்தை கோரி இருந்தார். அதன்போது அந்த நடவடிக்கை எடும்பெற்றிருந்தது. அதன் பின்னர் 2025, ஒக்டோபர் 13ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் அழைத்து இதுதொடர்பில் கலந்துரையாடி இருந்தார்.அரபுக்கல்லூரி உள்ளிட்ட ஏனைய மத பாடசாலைகளை பதிவு செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னரே அரபுக்கல்லூரிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டது. அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம் இதுவரை 321 அரப்புக்கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேநேரம் 82 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றன. அதனால் இந்த நடவடிக்கையை விரைவு படுத்துவதற்கு ஜனாதிபதி மீண்டும் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலாேசனை வழங்கி இருந்தார். அத்துடன் இந்த நடவடிக்கை தாமதிப்பதற்கு காரணம், அரபுக்கல்லூரிகளுக்கான பாட்த்திட்ட தயாரிப்பு இன்னும் முடிவுறுத்தப்படாமல் இருப்பதாலாகும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகிறது.மத்ரசா பாடசாலை சட்டமும் பாடத்திட்டமும ஒன்றுக்காென்று சம்பந்தமாகிறது. அதனால் இந்த சிக்கல்களை நீக்கிக்கொண்டு விரைவாக அரபுக்கல்லூரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியுமாகும். அத்துடன் அரபுக்கல்லூரிகளை முறைப்படுத்தும் சட்டமூலம் தயாரிப்பதற்காக 9பேர்களை உள்ளடக்கிய 3 மீளாய்வு குழுக்கள் செயற்பட்டு வருக்கின்றன. அதனால் மத்ரசா பாடசாலை தொடர்பான சட்டமூலமும் பாடத்திட்டம் தயாரிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விடயங்களை ஒன்றாக ஆராய்ந்து பார்த்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றே பிரதமரும் ஆலாேசனை வழங்கி இருக்கிறார். அதேபோன்று அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களில் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த நடவடிக்கை பிற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த விடயம் தொடர்பில் எனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி, இறுதிக்கட்டத்தில் இருக்கும் சட்டமூலம் தயாரித்தல் மற்றும் பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அரபுக்கல்லூரிகளை பதிவு செய்ய இருக்கும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/238866

இந்தியாவுடன் கனிம வளம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 week 4 days ago
இந்தியாவுடன் கனிம வளம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு Published By: Vishnu 18 Feb, 2026 | 04:23 AM (எம்.மனோசித்ரா) கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவினால் எந்தவொரு முன்மொழிவும் எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கனிம வளங்கள் குறித்து தேசிய கனிம வள கொள்கைக்கமையவே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அது 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அவ்வாறு எந்தவொரு ஒப்பந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவுமில்லை. அது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுமில்லை. இதுபோன்று பல்வேறு பழைய ஒப்பந்த முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் எமது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பால் உற்பத்தி தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நாம் தேசிய கனிம வள கொள்கையொன்றை வகுத்திருக்கின்றோம். அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்துள்ளது. நாம் அதனை பின்பற்றி அதற்கமையவே கனிம வளங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/238917

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

1 week 4 days ago
பாராளுமன்ற ஓய்வூதிய நீக்கம்: யாரையும் அசௌகரியப்படுத்த அல்ல - அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்தை இல்லாதொழிப்பதானது எவரையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்டம் மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் என நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள இந்த முறைமையை இல்லாதொழிப்பது அவசியமாகும்.இந்த ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்படும் போது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாட்டில் ஊழல்,மோசடி பாரியளவில் காணப்பட்டது. அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் அது தெளிவுபடுத்தப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்த நாட்டில் இனவாத பிரச்சினை காணப்படுகிறது. நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் அந்த கோணத்தில் பார்க்கப்பட்டு அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நாட்டு மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்கள் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா? அல்லது அவர்கள் நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும். நாட்டு மக்களின் வரிப்பணத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாக இதுவே இடம் பெற்றுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238916

வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம்

1 week 4 days ago
வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம் Published By: Vishnu 18 Feb, 2026 | 04:13 AM (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நிலைமைகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதி உதவியை, 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் தமது குடியிருப்புக்களை இழந்தனர். அவ்வாறு குடியிருப்புக்களை இழந்தவர்களுக்காக பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு முதல் 2025-12-31 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 நபர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி நிலைவரத்தின் படி, அந்த மாகாணங்களில் இன்னும் தமக்குரிய ஒரு வீட்டைக் கொண்டிருக்காத 13,069 இடம்பெயர்ந்த குடும்பங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வீடற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 340 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 9 இலட்சம் ரூபாவும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் நிதியுதவியாக வழங்க இதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற முற்போக்கு ஆய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருப்பதையும், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டன. அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் குறித்த வீடுகளை அமைக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருதாது, 550 சதுர அடி வீட்டிற்காக 2026ஆம் ஆண்டு முதல் 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டது. அதற்கமைய, இத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238915

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

1 week 4 days ago
80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். அதனால் பதிவுக்காக காத்திருக்கும் 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2020ஆம் ஆண்டு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் புத்தசாசன திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரிவெனாக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அறநெறி பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மிஷனரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன் அது மிகவும் சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமிருந்து பதிவிற்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும், மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக, குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வருடங்கள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு உரிய சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் தவிப்பதோடு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்கப் பயிற்சி மற்றும் சமுக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்கக் கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு, சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது. அத்துடன், பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுவதால், வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. நமது நாடும், முழு உலகமும் வேண்டி நிற்கின்ற நல்லொழுக்கங்களையும் உயரிய பண்புகளையும் கற்றுக் கொடுக்கின்ற இம் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி . எனவே, மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவாக தெளிவுபடுத்தி, பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதல்களை வழங்க தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதனால் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்ய முடியுமா?மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/238910
Checked
Mon, 03/02/2026 - 02:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed