புதிய பதிவுகள்2

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks ago
படம் என்ன படம் . ..... அது என்ன செய்யும் உண்மையான அழகைக் காட்டும் . ......அது எங்களுக்குப் பிடிக்காது ......... அது கிடக்கட்டும் விடுங்கோ ............மிகவும் ரசனையான எழுத்து உங்களுடையது . ..... அதில் குறைவில்லாமல் தொடருங்கள் . .......! 😃

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks ago
அவுஸ்ரேலியா அப்படி தான். தாங்கள் மட்டும் ஐரோப்பாவுக்குள் சென்று விசா இல்லாமல் இறங்குவார்கள் அவர்களுக்கு அந்த சலுகை உள்ளது ஆனால் அவுஸ்ரேலியாவுக்குள் மற்றவர்கள் வந்தால் விசா கோட்பார்கள். பாதிக்கபட்டவர்கள் ஏசினார்கள்.

சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

2 weeks ago
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம் எப்படித் துவங்கியது? இந்த இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? தமிழ்நாட்டின் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. வாழ்வின் எல்லா தளங்களிலும் சுயமரியாதையை முன்னிறுத்திய இந்த இயக்கம், அதற்குப் பிந்தைய பல தசாப்தங்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகே பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே இதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. தனது சிந்தனைகளை பரப்புவதற்காக குடிஅரசு என்ற இதழை அதே ஆண்டு மே மாதத்தில் பிரசுரிக்க ஆரம்பித்தார் பெரியார். "அந்த காலகட்டம் வரை பெரியார் காங்கிரசின் கருத்தையே எதிரொலித்துவந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவருடைய சிந்தனைகளுக்கு, எண்ணங்களுக்கு காங்கிரஸ் சார்பான இதழ்களில் இடம்கிடைக்கவில்லை. ஆகவேதான் தனக்கென ஒரு இதழை அவர் துவங்க வேண்டியிருந்தது. அப்படி அவர் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் "நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்" நூலை எழுதியவரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஆ. திருநீலகண்டன். 1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். "ராஜீய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதர், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது" என்றது அந்தத் தீர்மானம். ஆனால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, "காங்கிரஸால் பிராமணரல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை" எனக் கூறிவிட்டு அந்த மாநாட்டை விட்டு வெளியேறினார் பெரியார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் 'சுயமரியாதை இயக்கம்' என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் "சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது. பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது போன்ற விஷயங்களை தொடர்ந்து பேசிவந்தார். இதற்குப் பிறகு, 1926ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பட்டியலிட்டார். "மனிதர்களிடம் ஏற்றத் தாழ்வு கூடாது, தீண்டாமை - சேர்க்காமை போன்றவற்றுக்கு இடமேயில்லை, மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சடங்குகளும் ஜாதிகளும் வேறோடு களையப்பட வேண்டும். தன்மான உணர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் ஒவ்வொருவருக்கும் வேண்டும், எதிர்காலம் அறிவியலுக்கு உரியதே அல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல" உள்ளிட்டவை அந்தக் கொள்கைகளாக இருந்தன. பெரியாரின் பேச்சும் செயல்பாடுகளும் ஒரு இயக்கமாக மாறியதை இந்த மாநாடு குறித்தது. காங்கிரசைவிட்டு வெளியேறியிருந்தாலும் 1925-26 காலகட்டத்தில் காந்தியின் கொள்கைகளையும் பெரியார் ஆதரித்துவந்தார். "நூல் நூற்றல், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகியவற்றை காந்தி வலியுறுத்துவது ஊக்கமூட்டுவதாக இருந்ததாக பெரியார் கருதினார்" என 'அயோத்தி தாசிலிருந்து பெரியார் வரை பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி' (Towards a non-Brahmin millennium from Iyothee Thass to Periyar) என்ற நூலில் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும் குறிப்பிடுகின்றனர். அதே காலகட்டத்தில் நீதிக் கட்சிக்கும் ஆதரவு காட்டினார் பெரியார். இந்த நிலையில், 1927ல் பெங்களூரில் மகாத்மா காந்தியை பெரியார் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராமணர்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பெரியார் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்கவில்லை. இந்தக் கட்டத்திலிருந்து காந்தியிடமிருந்து விலக ஆரம்பித்தார் பெரியார். இதற்குப் பிறகு தொடர்ந்து சுயமரியாதைக் கொள்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல சிறு கூட்டங்களில் பேச ஆரம்பித்தார் பெரியார். பல இடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே சில மாவட்ட மாநாடுகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தான் மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. "அதுவரை சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றுவந்த பணிகளை மதிப்பீடு செய்யும் ஒரு மாநாடாகவும் சட்டதிட்டங்கள், கொள்கை, குறிக்கோள்கள், நிர்வாக அமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் மாநாடாகவும் இது அமைந்தது" என்கிறது கி. வீரமணி எழுதிய திராவிடர் கழக வரலாறு நூல். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவற்றில் பணியாற்றிய பலரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கொள்கை தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த மாகாண மாநாடு கூடும்வரை இந்த இயக்கத்திற்கு டபிள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டியன் தலைவராகவும் பெரியாரும் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது மாநாடுகள் ஈரோட்டிலும் விருதுநகரிலும் நடைபெற்றன. 1932ல் பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளையும் பரப்ப விரும்பினார். 1932 டிசம்பர் 17, 18-ல் கூடிய மாநாட்டிற்கு ம. சிங்காரவேலர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் சமதர்மக் கொள்கையும் முக்கியமான ஒன்று என தீர்மானிக்கப்பட்டது. இயக்கத்தைச் சேர்ந்த சிலர், சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து சமூகச் சீர்திருத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாலும் இறுதியில் அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த, இயக்கத்தின் பெயர் 'சுயமரியாதை சமதர்ம இயக்கம்' என பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையில் குடியரசு இதழில் இடம்பெற்ற கட்டுரைகளுக்காக அந்த இதழ் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1933ல் புரட்சி என்ற புதிய இதழ் துவக்கப்பட்டது. பிறகு அதுவும் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1934ல் பகுத்தறிவு என்ற புதிய இதழ் துவங்கப்பட்டது. இந்த நிலையில், 1933ல் குடியரசில் இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதற்காக சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் அங்கு அடைக்கப்பட்டிருந்த ராஜாஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அப்போது, அவர் பெரியாரை மீண்டும் காங்கிரசிற்குத் திரும்ப வேண்டுமென அழைத்தார். பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam ஆனால், பெரியாரின் செயல்திட்டத்தை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில், பொப்பிலி அரசர் போன்றவர்கள் அவர் நீதிக்கட்சிக்கு வர வேண்டுமென்றும் கூறிவந்தனர். இந்த நிலையில், 15 செயல்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலை அளித்த பெரியார், அந்தச் செயல்திட்டத்தை ஏற்கும் கட்சியில் இணைவதாகக் கூறினார். நீதிக் கட்சி அதனை முழுமையாக ஏற்றது. இருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் அதனை ஏற்கவில்லை. நீதிக் கட்சி பணக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்றாரின் ஆதிக்கம் நிரம்பிய கட்சி எனக் கருதினர். இதனால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் அதிலிருந்து விலகி காங்கிரசில் சேர முயன்றனர். ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் 1934-ல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பலர் விலகினர். 1937ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பதவியேற்ற ராஜாஜி, எல்லா உயர் நிலைப்பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து பெரியார் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்பு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். இந்த காலகட்டத்தில்தான் ஈ.வெ. ராமசாமிக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து நடத்திய நிலையில் பெரியார் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட நடராஜனும் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார்கள். 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜாஜி பதவி விலகினார். இதற்குப் பிறகு பம்பாய் (தற்போது மும்பை) சென்ற பெரியார், அங்கே அம்பேத்கர் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகும் பல ஊர்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார் பெரியார். 1943ஆம் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் நடந்த நீதிக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை, தென்னிந்திய திராவிடர் கழகம் என மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். அடுத்த மாநாட்டில் பெயரை மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் நீதிக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஏ.பி. பத்ரோ, பி. பாலசுப்ரமணியம், சுந்தர்ராவ் நாயுடு ஆகியோர் இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தனித்தும் செயல்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில், 1944 ஆகஸ்ட் 27ஆம் தேதி சேலத்தில் 16வது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் பெயர் மாற்றத் தீர்மானம் சி.என். அண்ணாதுரையின் பெயரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகும் நீதிக் கட்சியைச் சேர்ந்த சிலர், நீதிக் கட்சி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டனர். சிலர் சுயமரியாதை சங்கம் என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட்டனர். "நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1944-ல் ஒன்றாக இணைந்தன. அதற்குப் பிறகும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் நீடித்தன என்றாலும்கூட, சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் மிகத் தீவிரமாக பெரியார் இயங்கிய காலகட்டமாக இந்த இரு தசாப்தங்களைக் குறிப்பிடலாம்" என்கிறார் ஆ. திருநீலகண்டன். பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக உருவான தருணத்தில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் அந்த காலகட்டத்தில் விடுதலை இயக்கமும் உச்சத்தில் இருந்தது. ஆகவே, அப்போது தமிழ்நாட்டில் அரசியல் விடுதலையும் பூகோள விடுதலையுமே மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலகட்டமாக இருந்தது. "இந்த காலகட்டத்தில் பெரியார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் சேர்த்துப் பேச ஆரம்பித்தார். பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்கும்போதே, தமிழர்கள் தங்களுக்கான அரசியல் - பூகோள விடுதலையைப் பெற வேண்டும் என அவர் கூறிவந்தார். எல்லோரும் இந்திய தேசிய விடுதலையைப் பேசியபோது, இவர் அதற்கு எதிர் திசையிலான அரசியல் - பூகோள விடுதலையைப் பேசினார்" என்கிறார் அவர். காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கி நூறாண்டுகள் ஆகிவிட்டன. பெரியார் மறைந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? "சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கம் இல்லாத மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். வட இந்திய மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல சாதி சார்ந்த வன்முறைகள் கிடையாது. காரணம், யாரும் அங்கே சாதி கட்டமைப்பைக் கேள்வி கேட்பதே கிடையாது. ஆனால், இங்கே சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிரான குரல்கள் எழுகின்றன. அதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அடுத்ததாக, இங்கே சாதிமறுப்புத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நடக்கின்றன. அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், ஆதிக்க சக்திகளுக்கு அவை கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதற்கு பெரியாரின் சிந்தனைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அது சமூக தளத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்" என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam வேறு சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஆ. திருநீலகண்டன். "இந்த இயக்கத்தின் காரணமாகவே தமிழ்நாடு சமூக - பண்பாட்டு விடுதலையில் மிக முக்கியமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. சாதிப் பட்டம் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ந்திருக்கிறது. பெரியார் தமிழ் மீது வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. பகுத்தறிவு சார்ந்த நவீன இலக்கியம் வெளியாகத் துவங்கியது. அம்பேத்கரின் எழுத்துகள் தமிழில் வெளியாயின. சுயமரியாதை இயக்க காலகட்டத்தில்தான் பெரியார் தன் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கினார். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான முதல் இதழ் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற பெயரும் வெளியானது. அதற்கு அடுத்த இதழில் வெறும் ஈ.வெ. ராமசாமி என்று மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றது. அதேபோல, 1929-ல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் சாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்படி சாதிப் பட்டத்தை ஒழித்தவர்களின் பெயர்கள் அடுத்த குடிஅரசு இதழில் வெளியாயின. 1929லேயே பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றும்வரை, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகள் பெரும்பாலும் வைதீகம் சார்ந்தவையாகவே இருந்தன. இவற்றையெல்லாம் அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்கினார். அவர் எழுப்பிய எதிர்ப்புகள்தான் எதிர் வைதீக நூல்கள், அவைதீக ஆராய்ச்சிகள், எதிர் பண்பாட்டு நூல்கள் வர வழிவகுத்தன. தமிழைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கு பண்பாட்டு நகர்வை செய்தார். அடிப்படையில், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத சாதியினரை முற்போக்கு திசையில் நகர்த்தியது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பே வள்ளலார், வைகுண்டர், சென்னை வியாக்கியான சங்கம் ஆகியோர் முற்போக்கு சிந்தனை மரபை உருவாக்கினார்கள். பெரியார் ஐரோப்பிய நவீன சிந்தனையை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்வைத்தார் என்பதுதான் முக்கியம்" " என்கிறார் ஆ. திருநீலகண்டன். சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பாக, இந்தியாவில் அதுபோன்ற இயக்கங்களுக்கு மிகச் சில உதாரணங்களே இருந்தன என்கிறார்கள் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும். அவர்களது பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி (Towards a Non - Brahmin Millennium) என்ற நூலில் இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பைப் பற்றிக் கூறும்போது, "மகாத்மா ஜோதிபா பூலே ஒரு முன்னோடிதான்; ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற தேசம் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. ஆனால், சுயமரியாதைக்கார்களைப் பொறுத்தவரை அவர்கள், தேசியவாத அரசியலின் உச்சகட்டத்தில் செயல்பட வேண்டியிருந்தது. அவர்கள் காந்தியை எதிர்த்து நின்றது மட்டுமல்ல, உரிமை, அதிகாரம், நீதி ஆகியவற்றை பற்றிய தனித்துவமான ஒரு சிந்தனைக் கட்டமைப்பையும் முன்வைத்தனர். சுயமரியாதை என்ற லட்சியத்தால் மட்டுமே பிணைக்கப்பட்ட புதிய வரலாற்றுப் பொருளை உருவாக்கினர்" என்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg2rg9eqrlo

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

2 weeks ago
இலங்கை மீதான புதிய பிரேரணை: சீனா, பாகிஸ்தானின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்தது Published By: Vishnu 17 Sep, 2025 | 03:45 AM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. அதுமாத்திரமன்றி அங்கு கருத்துரைத்த இலங்கை பிரதிநிதி, நாட்டில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தீர்ப்பதற்கு சிறப்புப் பொறிமுறைகள் எவையும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையில் ஏற்கனவே காலநீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்த 57ஃ1 தீர்மானம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இலங்கை நேரப்படி பி.ப 1.00 மணிக்கு ஜெனிவாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரிட்டன், வட அயர்லாந்து, கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகளும், பேரவையில் அங்கம்வகிக்கும் இலங்கைக்கு ஆதரவான மற்றும் எதிரான சில நாடுகளின் பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகளும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட வதிவிட அலுவலகப் பிரதிநிதி, இலங்கையில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறப்புப் பொறிமுறையொன்று அவசியமில்லை என்றும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் நீதிக்கட்டமைப்பின் ஊடாகவே இதற்குத் தீர்வுகாணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்தல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தைத் திருத்தியமைத்தல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். இக்கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் இணையனுசரணை நாடுகளிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக தாம் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோராதிருப்பதாக 'பேரம் பேசியதாகவும்', இருப்பினும் அதனை பிரிட்டன் மறுத்துவிட்டதாகவும் அறியக்கிடைத்தது. அதேபோன்று நேற்று முன்தினம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரிட்டன் மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது. இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு தற்போது சமர்ப்பித்திருக்கும் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதில் தாம் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை வாக்கெடுப்பைக் கோரினாலும், புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான வாக்குகள் தம்வசம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளன. மேலும் இக்கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/225270

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகள் உண்மைக்கு புறம்பானவை - மைத்திரிபால சிறிசேன

2 weeks ago
16 Sep, 2025 | 12:00 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் எனத் தெரிவித்த அவர், பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்யதாகவும் குறிப்பிட்டார். இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனது ஆட்சி காலத்தில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட முக்கிய பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை. நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225217

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

2 weeks ago
லண்டன் போராட்டங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது? பட மூலாதாரம், EPA / Shutterstock படக்குறிப்பு, 'ஸ்டாண்ட் அப் டு இனவெறி' பிரச்சாரக் குழுவின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்டுரை தகவல் Nadia Suleman South Asia Regional Journalism 3 மணி நேரங்களுக்கு முன்னர் லண்டனில் தொடங்கிய மற்றொரு தீவிர வலதுசாரி கூட்டம், பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத வகையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக மாறியது. 2025 செப்டம்பர் 13-ஆம் தேதி, தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த "யுனைட் தி கிங்டம்" பேரணிக்காக 1,10,000-க்கும் மேற்பட்டோர் மத்திய லண்டனில் கூடினர். யூனியன் ஜாக், பிரிட்டனின் செயின்ட் ஜார்ஜ் கிராஸ், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக சோதித்தனர். முதலில் "சுதந்திர பேச்சு விழா"( "festival of free speech") என்று அறிவிக்கப்பட்ட இந்தப் பேரணி, விரைவில் இனவாத சதிக் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரமாக மாறியது. மிகப்பெரிய அளவில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், வன்முறை வெடித்தது. அதில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த நிகழ்வு, குடியேற்றம் எவ்வளவு தூரம் ஒரு பிரச்னையாக மாறியுள்ளது என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது. இது அடையாளம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த ஆழமான முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது. பட மூலாதாரம், Christopher Furlong/Getty Images படக்குறிப்பு, செப்டம்பர் 13, 2025 அன்று, மத்திய லண்டனில் குறைந்தது 110,000 பேர் கூடி 'யூனைட் தி கிங்டம்' பேரணியை நடத்தினர். வார இறுதியில் லண்டனில் ஏன் 110,000 பேர் அணிவகுத்துச் சென்றனர்? குடியேற்றம் மீதான கோபம் மற்றும் நாட்டின் எல்லைகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்ற கருத்தின் மீதான நம்பிக்கையால், லண்டனில் பெருமளவில் மக்கள் திரண்டனர். பல ஆர்ப்பாட்டக்காரர்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து, அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் விதிகளை கடுமையாக்குவதன் மூலம், பிரிட்டன் தனது "கட்டுப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்" என்று கூறினர். பிரித்தானிய கலாசாரம் அழிந்து வருவதாகவும், அதைப் பாதுகாக்கவே தாங்கள் வந்ததாகவும் சிலர் தெரிவித்தனர். பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. குடியேற்றத்திற்கு எதிராகப் பேசும் சாதாரண மக்களுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்று பலரும் குறிப்பிட்டனர். பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்து, கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் பெரிய அரசியல் மாற்றத்திற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. ராபின்சனைத் தவிர, அமெரிக்க கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் காணொளி மூலம் பங்கேற்றார். பட மூலாதாரம், Mark Kerrison/In Pictures via Getty Images படக்குறிப்பு, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெற்காசிய சமூகம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். பிரிட்டனில் குடியேறிய தெற்காசிய சமூகத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிரிட்டனில் தெற்காசிய மக்கள் இரண்டாவது பெரிய இனக்குழுவாக உள்ளனர். இதில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், சிங்களர்களும் நேபாளிகளும் சிறிய அளவில் உள்ளனர். போராட்டங்கள் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளுக்கு தஞ்சமளிக்கும் கொள்கைகளை நோக்கி இருந்தாலும், பல தலைமுறைகளாக பிரிட்டனில் வாழும் இந்த தெற்காசிய சமூகங்கள் இதன் தாக்கத்தை உணர்கின்றன. குறிப்பாக இஸ்லாம் மற்றும் சீக்கிய சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2024-ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் புதிய உச்சத்தை எட்டியதாக 'டெல் மாமா' அமைப்பு அறிக்கை வெளியிட்டது. கடந்த வாரம், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் இளம் சீக்கிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை காவல்துறை "இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்" எனக் கருதுகிறது. கடந்த சில மாதங்களாக, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், சமூகத்தில் பயத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன. கடந்த வார இறுதி போராட்டங்களில், "வீட்டிற்கு திரும்புங்கள்", "சட்டவிரோதமாக வந்தவர்களை நாடு கடத்துங்கள்" என்ற பதாகைகள், வெறுப்பு மற்றும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் தூண்டுவதாக இருந்தன. பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவது ஏன் ? புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரிட்டனின் மக்கள் தொகை, கலாசாரம் மற்றும் பொருளாதார அடையாளத்தை தகவமைத்து வருகின்றனர். ஆனால், பிரெக்ஸிட்-க்குப் பிறகு, தீவிர வலதுசாரி குழுக்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான விரோதப் போக்கை அதிகரித்துள்ளன. ரிஷி சுனக் அரசாங்கத்தின் கீழ் நிகர இடப்பெயர்வு புதிய உச்சத்தை எட்டியது, இது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் படி, 2022-ல் நிகர இடம்பெயர்வு (சட்டப்பூர்வமாக வருவோருக்கும் வெளியேறுவோருக்கும் இடையிலான வித்தியாசம்) 7,45,000 ஆக இருந்தது. இது பிரெக்ஸிட்-க்கு முந்தைய அளவை விட மூன்று மடங்கு அதிகம். மார்ச் 2025-ல் முடிவடைந்த ஆண்டில், 1,09,343 பேர் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர், இது சமீப ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கைகளில் ஒன்று. விண்ணப்பதாரர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர், பின்னர் ஆப்கானியர்கள், பாகிஸ்தானியர்கள், இரானியர்கள் மற்றும் வங்கதேசத்ததவர். பட மூலாதாரம், Rasid Necati Aslim/Anadolu via Getty Images படக்குறிப்பு, காவல்துறையினரின் கூற்றுப்படி, போராட்டத்தின் போது வன்முறை வெடித்து, அதில் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர். வளங்களின் பங்கீடு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த கவலைகளை தூண்டியுள்ள தவறான தகவல்கள், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளன. லண்டன், பர்மிங்காம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 40% புலம்பெயர்ந்தவர்கள். இதனால், அவர்கள் வாய்ப்புகளையும் வளங்களையும் கைப்பற்றுவதாக ஒரு உணர்வு பரவியுள்ளது. தீவிர வலதுசாரிகள் இதை நாடு "முற்றுகையில்" இருப்பதற்கான அடையாளமாக சித்தரிக்கின்றனர். அதேநேரம், பொருளாதார அழுத்தங்கள், அதிகரிக்கும் செலவுகள், வீடுகள் பற்றாக்குறை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை குடியேற்றத்தை எளிதாக குற்றம் சாட்டக்கூடிய இலக்காக மாற்றியுள்ளன. தெருக்களில் வரையப்பட்ட யூனியன் ஜாக் கொடிகள், லண்டனில் நடைபெறும் அணிவகுப்புகள் போன்ற தேசியவாத சின்னங்கள் இந்த பதற்றங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. பட மூலாதாரம், Vuk Valcic/SOPA Images/LightRocket via Getty Images படக்குறிப்பு, ஸ்டாண்ட் அப் டு ரேசிசத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி சுமார் 5,000 மக்களை ஈர்த்தது, இந்த சூழல் இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதா ? மிகப் பெரிய பிளவுகளையும், பதற்றமான கட்டத்தையும் நோக்கி பிரிட்டன் செல்கிறது என்பதை வார இறுதி நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 'ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுமார் 5,000 மக்களை ஈர்த்தது. இது ராபின்சன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஒரு சிறிய பகுதி தான். இனவெறி எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்பிடுகையில், குடியேற்ற எதிர்ப்பு இயக்கம் வேகமாக வலுவடைவதை இந்த வித்தியாசம் வெளிப்படுத்துகிறது. லண்டனில் இவ்வளவு பெரிய பேரணி நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதில், 26 அதிகாரிகள் காயமடைந்தனர், 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பல போராட்டங்களால், புகலிட விடுதிகளை விரைவாக மூடும் திட்டங்களை வேகப்படுத்துமாறு பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. மறுபுறம், புகலிட விடுதிகள் மூடப்படும் போது, தொடர்பில்லாத குழுக்கள் ஒரே வீட்டில் வசதிகளைப் பகிர்ந்து கொள்ள நேரிடலாம். இது புதிய எதிர்வினையைத் தூண்டலாம் என்ற கவலை நிலவுகிறது. பிரிட்டனின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு, குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் வெறும் குரலாக இல்லாமல், முக்கிய அரசியல் பாதையாக மாறிவரும் சூழலைச் சமாளிப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89dp8q3qqxo

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

2 weeks ago
தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கபட்ட சீமானுக்கு என்றால் நீதி சாஸ்திரங்கள் எல்லாம் ... சாப்பிட சென்றுவிடும்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 weeks ago
நேற்றும் ஒரு நண்பர் பிரயாண காணொளி ஒன்று அனுப்பியிருந்தார் பார்த்த போது அது சுவிட்ச்சலாந்தா இல்லது இலங்கையா என்று இருந்தது

இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினர்!

2 weeks ago
Published By: Priyatharshan 17 Sep, 2025 | 10:15 AM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை (Peace Corps) வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மூன்று மாத காலப் பயிற்சிக்குப் பிறகு சேவை செய்ய உள்ளனர். இந்த அமைதிப் படையினர், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்காக, மூன்று மாதங்களுக்கு முன்-சேவை பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். பயிற்சிக்குப் பின்னர், அவர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சமூகங்களுடன் இணைந்து, ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் சமூக வாழ்க்கையின் அங்கமாகச் செயல்படுவார்கள். அமெரிக்காவின் மதிப்புகளான சேவை, அமைதி மற்றும் நட்பு ஆகியவற்றை இந்தத் தன்னார்வலர்கள், நட்புறவை வளர்ப்பதன் மூலமும், உண்மையான அயல் வீட்டாராக வாழ்வதன் மூலமும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அமைதிப் படையினரின் வருகை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மக்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். https://www.virakesari.lk/article/225284

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!

2 weeks ago
இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1447484

இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்!

2 weeks ago
இங்கிலாந்து சென்றடைந்தார் டெனால்ட் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் கலவையாக இந்த விஜயம் அமைகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க ஜனாதிபதி லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது, அவரை இங்கிலாந்தின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா புதன்கிழமை (17) லண்டனுக்கு அருகிலுள்ள வின்ட்சர் கோட்டைக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பையும், முதல் பெண்மணியையும் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் விருந்துபசாரத்தில் பங்கெடுப்பார்கள். அநேரம், வியாழக்கிழமை (18) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை அவரது அதிகாரப்பூர்வ நாட்டு இல்லமான செக்கர்ஸில் சந்திப்பார். இதன்போது, உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்தியா – சீனா மீதான வரிகளை உயர்த்துவதில் ஜி7 நாடுகளும் நேட்டோ உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் இதன்போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1447479

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 weeks ago
நீங்கள் கூறுவது தவறு. புலம் பெயர் உறவுகளின் தொகையை விட வெளிநாட்டவரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். புலம் பெயர் இரண்டாம் தலைமுறை பிள்ளைகள் கூட சுற்றுலா தளங்களையே விரும்புகிறார்கள்.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 weeks ago
அவர் எவர் என்று நீங்களே குறிப்பிட வேண்டியது. வி. முரளி, பகிரங்கமாக கூறியது. தலைவர் ஒரு சர்வாதிகாரி, தான், ஆயதப்போராட்டம் தவறானது என திருந்தி ஜனநாயகத்துக்கு திரும்பினேன் என்று பலதடவை கூறியுள்ளான். சரி, ஜனநாயகத்துக்கு திரும்பி என்ன சாதித்தார்? கோடீஸ்வரர். அது எங்கிருந்து வந்தது? பல கொலைக்குற்றச்சாட்டுகள் இவர்மேல். அத்தனையும் புலிகளிலிருந்து பிரிந்து, அப்பாவி மக்களை, அரசியல் பழிவாங்கல், பணத்துக்காக செய்யப்பட்டவை. ஜனநாயகம் நாட்டில் இருந்திருந்தால்; ஏன் புலிகளில் இணைந்தார் என்றொரு கேள்வியுண்டு. போராளிகள் மூடன்கள், என்னைப்போல் நக்கிப்பிழைத்திருக்கலாம் என எண்ணியிருப்பான்.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 weeks ago
ஐயா! நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை, அதனால் அது ஏற்படுத்தும் காயங்கள் எப்படிப்பட்டது என தெரியாமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்தின் வலி, இடப்பெயர்வு, பசி, இல்லாமை, உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம், ஒழிந்த மறைவிடங்கள், கண்ணெதிரே உறவுகளின் உயிரற்று சரிந்த உடலங்கள், அழிவுகள், இழப்புகள், துயர்கள் போராளிகளின் வீரம், மனவுறுதி அனைத்தையும் நேரடியாகவே கண்டு அனுபவித்த நபர். பல போராளிகளை கட்டி வைத்து வெட்டி அந்தகாயத்திலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து ரசித்த கூட்டம் இது. பல அப்பாவிப்பெண்களை துகிலுரித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து ரசித்த இனமிது, மணலாற்றில் மரணமடைந்த பெண்போராளிகளின் அந்தரங்க பகுதியில் வெடிகுண்டுகளை வைத்து ரசித்த கூட்டம் இது. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் பிணைத்து, கண்களை கட்டி, முட்டிக்கால் போட வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உடலை காலால் உதைத்து வீழ்த்தி வீரம் காட்டிய வீரர்கள் இவர்கள், அப்பாவிகளை விரட்டி விரட்டி கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை அழித்தேன் என்று முரசு கொட்டிய கூட்டமிது. இதற்கு பெயர் மனிதாபிமானப் போர், வீரர்கள். தங்களுக்குத்தாங்களே கொடுத்துக்கொள்ள வேண்டிய பட்டம். அதன் தண்டனை என்னவென்று தானே தன் வாயால் கூறிக்கொள்கிறார். மின்சாரக்கதிரை! அவரே, அது தான் தனக்குரிய தண்டனையென்கிறார். ஒருவேளை தலைவர் தன்னைத்தானே சுட்டுதற்கோலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மாபெரும் வீரன், தான் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு அவமானப்படுவதையோ, அல்லது அடிமை வாழ்வு, சுகபோக வாழ்வு எதையோ வாழ்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. என் தலைவர் இறந்தபின்பு இராணுவமும், அரசியல், போர் கதாநாயகர்களும் நடந்து கொண்ட விதம், சொல்லப்பட்ட முரண்பாடான கதைகள், இந்தியவுக்கு சொல்லப்பட்ட கதை, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட ஏமாற்றமான கருத்து, அதையே எனக்கு உணர்த்துகிறது. இந்தியாவும் இலங்கையும் எதிர்பார்த்த குறிக்கோளை அடைய என் தலைவன் அனுமதிக்கவில்லை. நெற்றியில் சூடு. ஒன்று, வேறொருவர் நேருக்கு நேர் நின்று அவரை சுட்டிருக்க வேண்டும். அது ஒரு போராளியால் அவரின் வேண்டுகோளுக்கமைய, அல்லது அவரே தன்னைத்தான் சுட்டிருக்க வேண்டும்! ஒரு போராட்ட களத்தில், அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போராட்டம். நெற்றி தவிர வேறெங்கும் காயமில்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு ஆயுதங்கள், இராணுவம். ம் .... கதையெழுதுகிறோமென உண்மையை ஒப்புக்கொள்கிறார்களா இவர்கள்?

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

2 weeks ago
இருபகுதியும் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையிலுள்ளனர். சரிந்து போகும் தங்கள் மதிப்பை உயர்த்திக்காட்ட இப்படியான சந்திப்பு தேவைப்படுகிறது. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று எதையோ பேசுவார்கள், தமிழ் இனத்தின் அழிவின் லாப நட்ட கணக்கு பார்ப்பார்கள், எப்படி மீண்டும் ஆட்சியை பிடித்து சுடுகாடாக்குவது என்று யோசிப்பார்கள். இவர்களின் சந்திப்பு நாட்டுக்கு நல்லதை கொண்டு வராது. அழிவைப்பற்றியே யோசிப்பார்கள், பேசுவார்கள். மறைந்தவர்களும் அதையே செய்து காட்டினார்கள். இருப்பவர்களும் தொடர்கிறார்கள். இவர்கள் விரட்டப்பட வேண்டியவர்கள்

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை.

2 weeks ago
இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறை வளர்ச்சி எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை உலக வங்கியின் துணைத் தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டியுள்ளார். மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். https://tamilwin.com/

அவுஸ்திரேலியாவில் இந்திய கடைக்கு எதிராக இலங்கையர் எடுத்த அதிரடி நடவடிக்கை

2 weeks ago
அந்த சிங்களவரே அந்த நாட்டிக்கு வந்தேறு குடி நாளை அங்குள்ள வெள்ளைகள் கறுப்பர் களை தேடி அடிக்கும் போது அவரின் தோல் கடைசி மட்டும் வெள்ளை ஆகாது என்பதை மறந்து ஆட்டம் ஆடுகிறார் .
Checked
Wed, 10/01/2025 - 19:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed