புதிய பதிவுகள்2

நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!

1 week 5 days ago
நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை! நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் தவிசாளரினால் நேற்றையதினம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதேசசபையின் வியாபார பதிவுச்சான்றிதழ்பெறாத நுண்கடன் நிறுவனங்களை முடிய தவிசாளர் பிரதேசசபையின் அனுமதியைப்பெற்ற பின்னரே நிறுவனங்களை திறக்கமுடியும் என தெரிவித்தார். அத்துடன் நிதி நிறுவனங்களை அழைத்து சில விதிமுறைகளை வழங்கியதாகவும் அந்த விதிமுறைகளை மீறிய வகையில் செயற்படும் நிதி நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1447771

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

1 week 5 days ago
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பெண் உரிமை, பாலினம் உள்ளிட்டவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள், பல்கலைக்கழக பாடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் அவை நீக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புதிய கல்விச்சட்டத்தின்படி தலிபான்கள் கொள்கைகள் மற்றும் ஷரியா சட்டத்திற்கு எதிராக இருப்பதால் பெண்கள் எழுதிய 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என 680 புத்தங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக்கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 6 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447794

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 week 5 days ago
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. கம்பித் திருடர்களைக் கண்டுபிடித்து மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும். இலங்கையில் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சை அரசு உருவாக்கவேண்டும்.

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

1 week 5 days ago
நாமல், நூறு மில்லியன் சொத்து காட்டியுள்ளார். காட்டாதது, மறைத்தது, பதுக்கியது எவ்வளவோ? அவர் என்ன தொழில் செய்தார்? பதிலில் உண்மையில்லை சொதப்புகிறார். மனைவியின் சொத்து, அதை பிரித்து அறியதெரியாதவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்கிறார். தன் பெயரில் உள்ள சொத்து என தானே அறிவித்துவிட்டு, பிரித்தறியதெரியாதவர்கள் என்கிறார். இப்போ மனைவியின் சொத்து விசாரணை செய்துவிட்டால் தெரிந்து விடும். நாமலே மனைவியின் சொத்தை பிரித்தறிய அழைப்பு விடுகிறார். இது இருக்க, அவரின் தம்பி புலம்புகிறார், மற்றவர் நினைப்பதுபோல் மஹிந்த குடும்பத்திடம் ஒன்றுமில்லையாம். மற்றவர், இவர்களிடம் இருப்பது எது என்று சொன்னார்களா? அவர்களுக்கு வீடு வழங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள். இவர், கார் இல்லையாம், வீடு இல்லையாம், அரசாங்க கார் அல்லது வேறு யாரிடமாவது தானாம் இரவல் கார் வாங்குவார்களாம். அம்மா மோசடி செய்து நிலங்களை கொள்வனவு செய்து இப்போ முழிக்கிறார். தனது தந்தை எப்போதும் சொல்வாராம், பிறர் உழைப்பில் நாம் வாழக்கூடாது, உழைத்து வாழ வேண்டுமென்று. அப்போ, காலம் பூராவும் மக்கள் பணத்தில் சுகபோகம் வாழவேண்டுமென்று அடம்பிடிப்பதும் கோரிக்கை வைப்பதுமேன்? தனக்கு வாழ வழியில்லையாம், படிப்பு சொல்லிக்கொடுக்கிறாராம் அதுவும் சும்மாவாம். எந்தப்பாடசாலையில் என்று சொல்லவில்லை. வாழ வழியில்லாதவர் சும்மா கற்பிக்கிறாராம். பகிடியாய் இல்லை? இவர்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு கோடி, எவ்வளவு கோடி சொத்து, எத்தனை கோடி மதிப்புள்ள கார்கள் வெளிவராமலா போகும்? அப்போ என்ன சொல்லப்போகிறார் இவர்? இவர்களை வெளியில் விட்டு வைத்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்? தானாக வந்து பொறியில் தலை மாட்டும்வரை அனுரா பொறுத்திருக்கிறாரா அல்லது பொறி வைத்து காத்திருக்கிறாரா? ஏதோ ஒன்று வெகு சீக்கிரம் நடைபெற போகிறது. மின்சார சபை ஊழியரை யாரோ இயக்குகிறார்கள். அந்த இயக்குனரை கைது செய்தால், பின்னால் இயங்குபவர்கள் வெளியில் வருவார்கள். மக்களுக்கு இவர்களின் சொத்துக்களையும் பினாமிகளையும் விரைவில் வெளியிடுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் சாதகமாக்கிக்கொள்வார்கள்.

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 week 5 days ago
தலைவர் சூரியதேவன். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார். கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌

சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

1 week 5 days ago
அந்த மண்ணில் பிறந்ததால் தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது என்று சொல்கின்றீர்களா? அல்லது வசதி இருந்தால் மட்டுமே சுற்றாடலையும் கழிவறையையும் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்று கூற வருகின்றீர்களா? கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது அவ்வளவு செலவு கூடிய செயற்பாடா? அல்லது எமது மண்வாசனை என்பது இப்படி நாற்றம் பிடித்த வாசனையுடன் கழிவறையை வைத்திருப்பது தான் என்பதால் அதில் குறை காண்பது அபத்தம் என்று கூற வருகின்றீர்களா?

நாமலின் 100 மில்லியன் வீடு - கார் இல்லாத மகிந்த! வெளிவராத அதிர்ச்சி இரகசியங்கள்..

1 week 5 days ago
ஒரு கள்ளனை கைது செய்தால், பல கள்ளர் பதறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி கதறுகிறார்கள், வாழ வழியில்லை என்று பிச்சைப்பாட்டு பாடுகிறார்கள், மக்களை கூட்டுகிறார்கள், சட்டத்தை நீதிமன்றத்தை விமர்ச்சிக்கிறார்கள் ஏன்? ஒரு கள்ளனுக்கு பின்னால் பல கள்ளர் மறைந்திருக்கிறார்கள். அந்தக் கள்ளனை பாதுகாத்தால் தாம் அகப்படப்போவதில்லை பாதுகாப்பாக இருக்கலாமென நினைக்கிறார்கள். சூழ்ச்சி செய்து அரசை கவிழ்க்க முயற்சிப்பார்கள். முடியாவிட்டால், தாம் அரச சாட்சிகளாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தம்மை காப்பாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் தலைவன் நிலை என்ன?

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

1 week 5 days ago
இந்திய பி ஜே பி ஆதரவாளர்கள், பிரதமர் மோதிக்கெதிராக அமெரிக்க உளவுத்துறை மற்றும் டீப் ஸ்ரேர் இயங்குவதாகவும் 12 மாதகால திட்டத்துடன் ஒரு தலமை மாற்றத்தினை கட்சிக்குள் ஏற்படுத்துதல் அல்லது ஆட்சிமாற்றத்தினை நோக்காக கொண்டு ஆழும் எதிர்கட்சிகளினூடாக அதனை செயற்படுத்தவுள்ளதாகவும் கூறுகிறார்கள் (ஆதாரமற்ற). நேப்பாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றம் சாட்டுபவர்கள் அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 2022 ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகிறார்க்கள், இவை எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் பல அமைதியின்மை இந்திய உபகண்டத்தில் அதிகரித்துள்ளது, ஆனால் இந்த அமைதியின்மையின் விளைவாக ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் போது உயிரழப்புக்களை தவிர்ப்பதற்காக தாமாகவே பதவி விலகினால் இலகுவாக முடிந்துவிடும், அது இந்தியாவில் நிகழ வாய்ப்பிருக்குமா என தெரியவில்லை. அத்தோடு கனடாவிலும் அமெரிக்காவிலும் உளவு சார் சட்ட விரோத கொலைகளிலும், கொலை முயற்சியிலும் ஈடுபடும் இந்திய உளவுத்துறையினரை மீறி ஒரு அட்சி மாற்ற சதி எனும் புகாரே நம்பிக்கை தன்மை குறிவாக இருக்கின்றது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? அவுஸ்திரேலியா 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது?வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா, இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்)அவுஸ்திரேலியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்?மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்?கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது?அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது?வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா?இல்லை 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா?இல்லை 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?அவுஸ்திரேலியா

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 week 5 days ago
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இடிந்த யாழ் மந்திரிமனையை பார்வையிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க - ஜே.வி.பி நியூஸ்

"போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ.

1 week 5 days ago
உக்கிரேனிய முன்னால் தளபதி உக்கிரேனின் தோல்விக்கான காரணங்கள் பலவற்றை கூறுகிறார், இவை எத்தனை சதவிகிதம் உண்மை என தெரியவில்லை, குறிப்பாக உளவுத்தகவலற்ற நிலையில் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். ஆனாலும் சில நிர்வாக ரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுகிறார், பயிற்சியில் தகமைகளினடிப்படையில் (கற்கை ரீதியானதல்ல) வேலை வழங்கப்படவேண்டும், மற்றும் ஒரு குறித்த நாட்டுப்படையினருக்குள் வெவ்வேறு அதிகாரிகளின் சகாக்கள் அடிப்படையில் தரங்கள் வழங்கப்படக்க்கூடாது. அரசியல்வாதிகளினது தலையீடுகள், போருக்கான மூலோபாயத்தினடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்படவேண்டும், வேலையின் ஆபத்தினடிப்படையில் ஊதியம், ஆட்பிரச்சினைகள், கல்வித்தகமையினடிப்படையினால் தெரிந்தெடுக்கப்படும் தரமற்ற அதிகாரிகளும் பட்டறிவு கொண்ட வீரர்கள் அதிகாரிகள் நிலை புறக்கணிப்பு, பூகோள சாதகங்களை விரயமாக்குதல், மேலிருந்து கீழான கட்டளை அமைப்புக்கள், தற்காப்பு பொறிமுறையற்ற படை முயற்சிகள், தற்காப்பு போருக்கான தேவையான கட்டமைப்புகளில் கவனம் செலுத்தாமை என பல காரணங்களை கூறுகிறார். ஒரு தசாப்பத்திற்கு மேலாக மேற்கினால் தயார்ப்படுத்தப்பட்ட உக்கிரேனின் பல குளறுபடிகளிற்கு வெறுமனே உக்கிரனை குற்றம் சாட்டும் வழமையான ஒரு பேட்டியாக இருப்பதோடு, முற்று முழுதான மேற்கின் தவறான திட்டமிடல், குறுகிய பயிற்சி (10 நாள்கள்) என பெரும் தொகையான உக்கிரேனியர்களின் உயிர்களை காவு வாங்கிய, வாங்குகின்ற போரினை தொடருவதன் மூலம் வெற்றியடையலாம் என உக்கிரேனிலும் உதவி வழங்கும் நாடுகளின் மக்களிடமும் நம்பிக்கையினை ஊட்டுவதன் நோக்கமாகவும் இந்த கட்டுரை உள்ளது, ஒட்டு மொத்த உக்கிரேனியர்களையும் போரின் ஏதோ ஒரு வகை பங்கு தாரர்களாக்கும் திட்டங்களையும் கூறுகிறார். இந்த போரில் இரஸ்சியா வென்றாலும் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு என பல மட்டங்களில் நிச்சயமாக தோல்வியுறும், மறுவளமாக உக்கிரேன் போரை நிறுத்துவதற்கு கூட பணம் கொடுத்தாலே போர் நிறுத்தம் சாத்தியமாகுமோ என அண்மையில் உக்கிரேன் அதிபரி கருத்துள்ளது. கீழே உள்ள செய்தியில் செலன்ஸ்கியின் கருத்து! ஜெலென்ஸ்கி: ஒரு வருடப் போருக்கு கிட்டத்தட்ட 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும், பாதியை வேறு எங்காவது கண்டுபிடிக்க வேண்டும். Tetyana Oliynyk — புதன், 17 செப்டம்பர் 2025, 19:17 14850 பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 2026 ஆம் ஆண்டில் போருக்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியிருக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மூலம்: ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவுடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி மேற்கோள்: "இந்தப் போரின் தற்போதைய செலவு எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. ஒரு வருடத்திற்கான விலை [USD] 120 பில்லியன். அறுபது பில்லியன் உக்ரைனிய பட்ஜெட்டில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திற்கு நான் 60 [பில்லியன்] கண்டுபிடிக்க வேண்டும்." விவரங்கள்: போரை முடிவுக்குக் கொண்டுவருவது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். மேற்கோள்: "எப்படியிருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதே திட்டம் A, திட்டம் B 120 பில்லியன். இது ஒரு பெரிய சவால். அமைதிக் காலத்தில் நமக்கு [இவ்வளவு பணம்] தேவைப்படும் என்று நான் கூறவில்லை - போர் நிறுத்தம் அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்களின் கீழ் - 10 ஆண்டுகளுக்கு இவ்வளவு பெரிய தொகைகள் நமக்குத் தேவைப்படும். ஆனால் எப்படியிருந்தாலும், இந்தப் பிரச்சினையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

1 week 5 days ago
இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்! இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயற்படும் மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மொடர்ன் டெக்னாலஜிஸின் (Arthur C. Clarke Institute for Modern Technologies) வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொறியியலாளர்கள் குழுவால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘BIRDS-X DRAGONFLY’ என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று நாசாவினால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் இந்த செயற்கைக்கோள் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு ISS இலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கை 2019 இல் அதன் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 யும் இரண்டாவது செயற்கைக்கோளான KITSUNE 2022 இலும் ஏவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447717

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 week 5 days ago
மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! -பிமல் ரத்நாயக்க. இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ”இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. எனவே இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி அழித்தார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது. இதனை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துல ஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447731

வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை

1 week 5 days ago
வொஷிங்டனில் ஜனாதிபதி ட்ரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை. அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள பார்லிமென்டுக்கு வெளியே, நேஷனல் மால் பகுதியில் கையில் பிட்காயின் ஏந்தியபடி இருக்கும் ட்ரம்பின் 12 அடி உயர பொன்நிற சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் வங்கி, கடந்த 2024 டிசம்பருக்கு பின் தற்போது அதன் வட்டி விகிதத்தை 25 சதவீத அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தது. அறிவிப்பு வந்த அதே நேரத்தில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், இச்சிலைக்கு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதி சந்தைகளில் அரசின் பங்களிப்பு குறித்த விவாதத்தை தூண்டும் நோக்கத்துடன் இச்சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447726

வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

1 week 5 days ago
வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர். போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர். அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்தின் நிதித் திட்டங்களைக் கைவிட வேண்டும், பொது சேவைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும், செல்வந்தர்கள் மீது அதிக வரிகள் விதிக்க வேண்டும், ஓய்வூதியம் பெற மக்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும் ஒரு பிரபலமற்ற மாற்றத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அந்த எண்ணிக்கையில் பாதியாக இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அதேநேரம், லியோன் மற்றும் நான்டெஸ் நகரங்களில் மோதல்கள் நடந்ததாகவும், பாரிஸில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில போராட்டக்காரர்கள் வணிகங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியதை அடுத்து, கலவரத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தலைநகரின் மையத்தில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கேடயங்களைப் பயன்படுத்தினர். முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நெருங்கிய நண்பரான செபாஸ்டியன் லெகோர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களால் வியாழக்கிழமை பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பாரிஸில் பல மெட்ரோ பாதைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்தனர். தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் மாணவர்கள் கூடி, நுழைவாயில்களைத் தடுத்து, கோஷங்களை எழுப்பினர். ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் வெளிநடப்பு செய்தனர். மருந்தாளுநர்களும் கூட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 98% மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சேவைகளுக்கான செலவுகளை அதிகரிக்கவும், செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிக்கவும், குறுகிய கால பேய்ரூ அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை குறைக்கவும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. https://athavannews.com/2025/1447732

ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி!

1 week 5 days ago
போலந்தில் உள்ள அரசியல்வாதிகள் ரஷ்ய ஆதரவு உணர்வை நிறுத்த வேண்டும் என்று போலந்து பிரதமர் வலியுறுத்துகிறார். Ulyana Krychkovska , Tetyana Oliynyk — ஞாயிறு, 14 செப்டம்பர் 2025, 15:18 17668 ஆம் ஆண்டு டொனால்ட் டஸ்க். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், நாட்டில் "ரஷ்ய ஆதரவு உணர்வு அலை" வளர்ந்து வருவதாகவும், அதைத் தடுப்பது அரசியல்வாதிகளின் பங்கு என்றும் கூறியுள்ளார். மூலம்: டஸ்க் ஆன் எக்ஸ் (ட்விட்டர்) , ஐரோப்பிய பிராவ்தாவால் தெரிவிக்கப்பட்டது. விவரங்கள்: செப்டம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை, போலந்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ஆதரவு உணர்வு மற்றும் விரோத அலை தற்போது வளர்ந்து வருவதாக டஸ்க் கூறினார். இந்த அலை "உண்மையான அச்சங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் கிரெம்ளினால் உருவாக்கப்பட்டது" என்று அவர் கூறினார். "அரசியல்வாதிகளின் பங்கு இந்த அலையை நிறுத்துவதே தவிர, அதற்கு அடிபணிவது அல்ல. இது முழு போலந்து அரசியல் வர்க்கத்திற்கும் தேசபக்தி மற்றும் முதிர்ச்சிக்கான ஒரு சோதனை" என்று போலந்து பிரதமர் வலியுறுத்தினார். பின்னணி: குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வாரம், பல ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தின. கூடுதலாக, செப்டம்பர் 12 அன்று, ரஷ்யாவும் பெலாரஸும் Zapad-2025 (West-2025) என்ற கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கின . இந்த நிகழ்வுகள் போலந்து அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ரஷ்ய நடவடிக்கைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன. இந்தக் கவலைகளுக்கு மத்தியில், போலந்து செப்டம்பர் 11 ஆம் தேதி மாலை பெலாரஸுடனான தனது எல்லையை முற்றிலுமாக மூடியது , இருப்பினும் இந்த முடிவு ரஷ்ய ட்ரோன்கள் சம்பந்தப்பட்ட சம்பவத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது. சமீபத்திய தரவுகளின்படி, போலந்து மாகாணங்களில் உள்ள ஐந்து குடியிருப்புகளில் 17 குடியிருப்புகளில் ரஷ்ய ட்ரோன்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன , அவற்றில் பெரும்பாலானவை - 10 - லுப்ளின் வோய்வோட்ஷிப்பில் உள்ளன. இந்தப் பின்னணியில், வடக்கு அட்லாண்டிக் கூட்டணி அதன் கிழக்குப் பகுதியை வலுப்படுத்த கிழக்கு சென்ட்ரி என்ற நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தது.
Checked
Thu, 10/02/2025 - 01:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed