புதிய பதிவுகள்2

அன்பு ௐ

1 week 3 days ago
மிக்க நன்றி சகோ உங்கள் அன்பு வரவேற்புக்கும் வாழ்த்துகளுக்கும். வாழ்க வளமுடன் 🙏🏽 🙏🏽 நமசிவாயம் அன்பு உறுப்பினர். உங்கள் நல்வரவேற்றுக்கு நன்றி அன்பு சகோ. உங்களை வாசிக்கும் பொலுது நான் மகிழ்ச்சி ஆகிறேன். வாழ்க வளமுடன்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

1 week 3 days ago
ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார். தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா? சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
நான் நினைத்த‌தை விட‌ மூன்று ர‌ன்ஸ் கூட‌ அடித்து விட்டின‌ம் ஹா ஹா 178ர‌ன்ஸ்😄😛 சிம்பாவே அணியால் இந்த‌ ஸ்கோரை அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது...................................

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

1 week 3 days ago
2006–2009 காலகட்டத்தில், குறிப்பாக இறுதி கட்டத்தில் நடைபெற்ற Sri Lankan Civil War ன் போது, அமெரிக்காவைவிட ரஷ்யா இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவியை அதிகமாக வழங்கியது. ஆனால் முழுப் படம் சற்று விரிவானது. 🇷🇺 ரஷ்யா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது. United Nations இல் இலங்கைக்கு தூதரக ஆதரவு வழங்கியது, குறிப்பாக இலங்கை மீது மேற்கத்திய நாடுகள் முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டது. சீனாவுடன் சேர்ந்து, இந்தப் போர் ஒரு உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தது. 🇺🇸 அமெரிக்கா Liberation Tigers of Tamil Eelam (LTTE) அமைப்பை 1997 முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் சில பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் நுண்ணறிவு ஆதரவும் வழங்கியது. ஆனால் போரின் இறுதி கட்டத்தில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து பொதுவாக விமர்சித்தும், தற்காலிக சமாதானம் மற்றும் விசாரணைகளை வலியுறுத்தியும் இருந்தது. மொத்த மதிப்பீடு 2008–2009 இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது நேரடி இராணுவ உதவி என்ற கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவைவிட ரஷ்யா (மேலும் சீனாவும்) அதிக ஆதரவு வழங்கியது. மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மிகவும் தாக்கம் செலுத்தியவை. 2022 முதல் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் முதன்மையாக ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க எடுத்த முடிவின் விளைவாகும். 2022 பிப்ரவரியில் Russia, Ukraine மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாடே அதனால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகளுக்கும் கட்டமைப்பு சேதங்களுக்கும் நேரடி காரணங்களாக உள்ளன. அமெரிக்காவின் பங்கு என்ன? United States உக்ரைனை ஆக்கிரமிக்கவில்லை. இராணுவ உதவி (ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவு தகவல்) நிதி உதவி ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் (sanctions) தூதரக ஆதரவு ஆகியவற்றினை அது வழங்கியது இந்த உதவி உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறம், நேட்டோ விரிவாக்கமும் அமெரிக்காவின் புவியியல்-அரசியல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது: புவியியல்-அரசியல் பதற்றங்கள் சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால் போர் தொடங்கும் இறுதி முடிவு ரஷ்யா தலைமையால் எடுக்கப்பட்டது. நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியதாக யாராவது நினைத்தாலும், அதனால் தாக்குதலைத் தொடங்கிய நாட்டின் பொறுப்பு வேறு நாட்டிற்கு மாற்றப்படாது. “அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக உக்ரைன் விலை செலுத்துகிறதா?” உக்ரைன் ஒரு மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறது, காரணங்கள்: அது ஒரு சுயாட்சியுடைய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கியிருப்பது ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கியமான நிலைப்பகுதியாக இருப்பது வரலாற்று தொடர்புகள் ரஷ்யாவுடன் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது ஆனால் உடனடி மற்றும் நேரடி அழிவுகளுக்கான காரணம் ரஷ்யா தொடங்கிய போரே — அமெரிக்காவின் “ஆதிக்கம்” அல்ல.

அன்பு ௐ

1 week 3 days ago
வணக்கம் அன்பு உறுப்பினர். உருத்திரன் ஒரு தமிழ் நாமம் ஆகும். எல்லாரும் தான் அன்பு சிவபெருமான். அதேதான் நமசிவாயம். அப்பன் திரு தாள் வாழ்க. அம்மன் திரு தாள் வெல்க. திருச்சிற்றம்பலம்.

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

1 week 3 days ago
கல்விசார் சமூக அளவில் அதிகளவில் சர்ச்சைக்குள்ளான கன்ஸின் மனித இயல்பு யதார்த்த கொள்கை இரஸ்சிய உக்கிரேன் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அது இலகுவாக பாமரர்களிடையே கருத்துருவாக்கம் ஏற்படுத்த உதவுவதாக இருப்பதே.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு

1 week 4 days ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வியாழன், 19 பெப்ரவரி 2026 06:52 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகை தந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர். இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://jaffnazone.com/news/55070

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

1 week 4 days ago
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு February 19, 2026 9:45 am ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார். தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன. விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார். மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார். ராஜபக்‌சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/

நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி!

1 week 4 days ago
நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239034

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம்

1 week 4 days ago
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம் 19 Feb, 2026 | 11:20 AM வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239032
Checked
Mon, 03/02/2026 - 08:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed