புதிய பதிவுகள்2

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!

1 week 3 days ago
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு! Published By: Vishnu 19 Feb, 2026 | 06:58 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர். https://www.virakesari.lk/article/239088

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 3 days ago
பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை பெருகிவரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை

1 week 3 days ago
பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து உயர்மட்ட சந்திப்புகள் – அமெரிக்க கடற்படை தளபதி இலங்கை வருகை Published By: Priyatharshan 19 Feb, 2026 | 04:54 PM ( வீ. பிரியதர்சன் ) உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். இவ்விஜயத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடனும், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனும் அட்மிரல் கேலர் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டு இணைந்து இயங்கும் திறன் (Interoperability), மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் கூட்டாண்மை ஆகிய விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/239027 https://www.virakesari.lk/article/239066

டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?

1 week 3 days ago
செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார் - AI Impact மாநாட்டில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 19 Feb, 2026 | 03:42 PM எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று வியாழக்கிழமை (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact 2026' மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுடன் இணைந்ததாக புதுடில்லி பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் அரச தலைவர்கள் பார்வையிட்டனர். அத்துடன், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர். AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு: செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது. எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம். AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும். இந்த முயற்சி, AI இன் நன்மைகளை பரந்த மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமையில், தேசிய மற்றும் பிராந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறனுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை இலங்கை ஆராய்ந்து வருகிறது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் ம் கவனத்தில் கொண்டு, புது டில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்'' எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239059

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

1 week 3 days ago
சுமார் ஒருவருடம் முடிவடைந்த பின்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற நண்பனான பிரபாகரனையும் அவ்வேலைத்தளத்தில் இணைத்துவிட்டேன். இயல்பாகவே அதிகம் பேசத் தயங்கும் அவன், அத்தொழிற்சாலையில் எவருடனும் அதிகம் பேச்சுக்கொடுப்பதில்லை. தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவிடுவான். இதனாலேயே அவன் மீது அங்கு பணியாற்றிய சில சிங்களப் பொறியியலாளர்களும், பெரும்பாலான தொழிலாளர்களும் சந்தேகப் படத் தொடங்கினர். அவனது பெயரும் பிரபாகரன் என்று தெரிந்துவிடவே ஏதோ விடுதலைப் புலிகளின் தலைவரே அங்கு வேலைக்கு வந்து இணைந்திருப்பதாக அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ? அவன் குறித்து என்னிடம் தொடர்ச்சியாக கேள்விகேட்கத் தொடங்கினார்கள். அவனை எப்படி உனக்குத் தெரியும்? ஏன் எம்முடன் பேசமாட்டேன் என்கிறான்? ஏன் எப்போது பார்த்தாலும் கண்களை முழுசுவது போல வைத்திருக்கிறான்? இவனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பதே அவர்களின் கேள்விகளாக இருந்து வந்தது. சிலர் வெளிப்படையாகவே அவனைக் கொட்டியா என்று அழைக்கத் தொடங்கினார்கள். சிலவேளைகளில் மனமுடைந்து பேசுவான். எதுக்கடா இங்கே வந்தேன் என்று இருக்கிறது என்றும் கூறுவான். அந்தச் சூழலில் அவனால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உனக்குச் சிங்களம் தெரியும், அதனால சமாளிக்கிறாய், என்னால முடியாது" என்று சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவனது சகோதரியொருவர் ஜேர்மனியிலிருந்து அவனை அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். சில மாதாங்களிலேயே அவனுக்கான விசா கிடைத்தவுடன், எதுவுமே கூறாது வேலையை விட்டு விட்டுச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு வேலையினை உதறித்தள்ளிவிட்டுச் சென்றமையானது நிர்வாகத்தில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக எனது நண்பன் என்றபடியினால் என்மீதே அவர்களின் கேளவிக்கணைகள் வந்து வீழ்ந்தன. சிலர் அவனைப் புலிகளின் உறுப்பினர் என்று நம்புமளவிற்கு வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 week 3 days ago
ஷிவம் டுபேயின் சகலதுறை ஆட்டம், வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு என்பன இந்தியாவை வெற்றி பெறச் செய்தன Published By: Vishnu 18 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி முடிவுடன் தென் ஆபிரிக்காவைத் தொடர்ந்து நான்கு வெற்றிகளுடன் இணை வரவேற்பு நாடும் நடப்பு சம்பியனுமான இந்தியா சுப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளது. ஷிவம் டுபேயின் அதிரடி அரைச் சதத்துடன் கூடிய சகலதுறை ஆட்டமும் வருண் சக்ரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. நெதர்லாந்தின் பந்துவீச்சில் திக்கமுக்காடிய இந்தியாவின் ஆரம்ப விரர்கள் அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமலும் அதிரடி வீரர் இஷான் கிஷான் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து திலக் வர்மா 31 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 34 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறந்த நிலையில் இட்டனர். ஷிவம் டுபே 31 பந்துகளில் 4 பவுண்டறிகளையும் 6 சிக்ஸ்களையும் விளாசி அடித்து 66 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 52 ஓட்டங்கள் பத்து பந்துகளில் பவுண்டறிகள் வாயிலாக பெறப்பட்டது. ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லோன் வென் பீக் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரியன் டட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் ஆறு வீரர்கள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று பலம்வாய்ந்த இந்தியாவுக்கு ஒரளவு ஈடுகொடுக்க முடியம் என்பதை நிரூபித்தனர். பாஸ் டீ லீட் (33), ஸக் லயன்-கெச்சட் (26), நோவா க்ரோஸ் (25 ஆ.இ.), மைக்கல் வெலிட் (24), கொலின் அக்கமன் (23), மெக்ஸ் ஓ'தௌத் (20) ஆகியோர் துடுப்பாட்டத்தில் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷிவம் டுபே 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிவம் டுபே. https://www.virakesari.lk/article/239005

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு

1 week 3 days ago
இந்த பரதேசிக்கு வாக்களிக்க சொல்லி மக்களுக்கு வழிகாட்டிய "அவியல் அரசியல் வியாதிகளை" என்ன சொல்லலாம்.

தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம் : அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்

1 week 3 days ago
தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம் : அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம் 19 Feb, 2026 | 05:48 PM துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் (Jetty) தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்வதற்கும் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அமைச்சருடன் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். தலைமன்னார் இறங்குதுறையானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே நீண்டகாலமாக வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பைப் பேணி வந்த ஒரு முக்கிய தளமாகும். முன்னதாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே வாரத்திற்கு மூன்று முறை பயணிகள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்று வந்தபோதிலும், 1984ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இந்தப் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போதுள்ள இறங்குதுறையின் கான்கிரீட் தூண்கள் மற்றும் உருக்குக் கட்டமைப்புகள் மிகவும் சிதைவடைந்து காணப்படுவதுடன், அதன் மரப்பலகை நடைபாதைகளும் பாவனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன. இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள புவியியல் ரீதியான முக்கியத்துவம் காரணமாக, தலைமன்னார் பிரதேசம் குறைந்த செலவில் பயணிகள் மற்றும் பொருட்களைப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு சிறந்த நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளமையால், நாட்டிற்குள் சரக்குக் கையாளுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மிகவும் இலகுவாகவும் குறைந்த செலவிலும் முன்னெடுக்க முடியும். இலங்கை துறைமுக அதிகார சபையினூடாக இங்கு மீளவும் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் பாரிய பொருளாதார வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு இறங்குதுறையை பல கட்டங்களாக நவீனமயப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 310 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, பிரதான வீதியிலிருந்து கப்பல்கள் நங்கூரமிடும் பகுதி வரை பயணிகள் மற்றும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். அத்துடன், இரவு நேரப் போக்குவரத்துக்கான நவீன மின்விளக்கு வசதிகள், பயணிகள் முனையக் கட்டிடங்கள் மற்றும் வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதன் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் (Feasibility Study) தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239074

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அப்கானிஸ்தான் அமோக‌ வெற்றி க‌ன‌டா அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்தி வ‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை...............க‌ன‌டாவின் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் விளையாட‌ வில்லை................................

அன்பு ௐ

1 week 3 days ago
வணக்கம், வருகைக்கு நன்றி. மங்களகரமாக வந்துள்ளீர்கள். மங்களமற்ற சொற்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இன்றைக்கு இன்னும் சிறப்பாகவே விளையாடினார்கள் போல் உள்ளது. போட்டியைப் பார்க்கவில்லை. இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இன்று ஓய்வு. ஆனால் அதைத் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல முடியாது. பதும் நிசங்க இன்றும் ஒரு அகோரப் பிடி ஒன்று எடுத்திருக்கிறார் போல.

அன்பு ௐ

1 week 3 days ago
பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா ௩௰௯ என்பது தமிழெண் முறையில் 39 (முப்பத்தி ஒன்பது) ஆகும். இது திருக்குறளின் 4-வது அதிகாரமான அறன்வலியுறுத்தலில் உள்ள 39-வது குறளைக் குறிக்கிறது. இக்குறள், அறநெறியில் வாழ்வதன் மூலம் வரும் இன்பமே உண்மையானது, மற்றவை இன்பம் தராது மற்றும் புகழும் இல்லை என்று கூறுகிறது. எனது மகனின் வயதைவிட குறைவாக இருக்கிறாரே.

அன்பு ௐ

1 week 3 days ago
அதேதான் விசயம் ஐயா. சுருக்கமாக 39 சரி இல்லை. கணிதத்துக்கு சுத்தமும் சுகமும் சுதந்திரமும் சுத்த தமிழ் எண்கள் முட்டும். அசுத்த 1 சுத்த ௧ (க) ஆகும். அசுத்த 2 சுத்த ௨ (உ) ஆகும். அசுத்த 3 சுத்த ௩ (ங) ஆகும். அசுத்த 9 சுத்த ௯ (கூ) ஆகும். அசுத்த 10 சுத்த ௰ (ய) ஆகும். அசுத்த 100 சுத்த ௱ (ள) ஆகும். அசுத்த 1000 சுத்த ௲ (சூ) ஆகும். இதுதான் தமிழ் விஞ்ஞானம். உங்கள் விளக்கத்துக்கு நன்றி அன்பு தமிழர்கள். நமசிவாயம் ௐ முருகா

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இதை மிஞ்சிய பைத்தியகாரத்தனம் இருக்க முடியாது. குறிப்பாக கிரிகெட் போல form ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில், சுற்று போட்டி ஆரம்பிக்க முன்பே இப்படி 2ம் சுற்றை தீர்மானிப்பது எவ்வளவு உசிதமானது? இங்கிலாந்து தொத்துபறியில் சூப்பர் 8 வந்தது. இப்போ உள்ளதில் 3 தரம் இல்லா அணிகளுடன் சூப்பர் 8 விளையாட போகிறது. இப்படியே செமிக்கு போய்விட்டால், அடுத்து இரெண்டு கேம் சரியாக விளையாடினால் உலக சாம்பியன் 🤦‍♂️. இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதை தவிர்க்க என்ன கோக்குமாக்கு வேலை எல்லாம் செய்யவேண்டி உள்ளது.

அன்பு ௐ

1 week 3 days ago
பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா… 🙂
Checked
Mon, 03/02/2026 - 08:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed