1 week ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே பெண் : ஹா……ஆ…..ஆ…. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பெண் : பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே பெண் : அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே……சுல்தானே…..சுல்தானே….. சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் பெண் : ஹா…..ஆஅ……ஆ….. புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா ........! --- தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ---
1 week ago
சிம்பிளான சிக்கன் பிரியாணி .........! 😂
1 week ago
அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார். லோகன் ஹிட்ச்காக் செப்டம்பர் 9, 2025 2 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : ஜிசி=எஃப் -0.15% DX-Y.NYB (டிஎக்ஸ்-ஒய்.என்ஒய்பி) +0.19% ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆலோசகர் ஒருவர், அமெரிக்கா தனது பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ மற்றும் தங்கத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று கூறினார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற இறுதி செய்தியாளர் சந்திப்பில் , மன்றத்தின் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவரும் புடினின் ஆலோசகருமான அன்டன் கோப்யகோவ், அமெரிக்கா "உலகின் செலவில்" தனது கடன் சுமையைக் குறைக்க முயற்சிக்கிறது என்று கூறினார். சிறந்த அடமான விகிதங்களை வாங்கவும் நிமிடங்களில் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணங்கள் மேலும் அறிக நிதி சுதந்திரத்திற்கான விரைவான பாதை மேலும் அறிக http://s.yimg.com/cv/apiv2/default/share-new-american-funding.png வீட்டு உரிமைக்கான உங்கள் பாதை மேலும் அறிக MoneyMoney – Finance News & Advice Since 1972Money has been helping people enrich their lives for over 50 years. We provide news, educational resources and tools to achieve financial success. ஆல் இயக்கப்படுகிறது - மேலே உள்ள இணைப்புகளிலிருந்து Yahoo கமிஷனைப் பெறலாம். "அமெரிக்கா இப்போது தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சி சந்தைகளின் விதிகளை மீண்டும் எழுத முயற்சிக்கிறது. அவர்களின் கடனின் அளவு - 35 டிரில்லியன் டாலர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரண்டு துறைகளும் (கிரிப்டோ மற்றும் தங்கம்) அடிப்படையில் பாரம்பரிய உலகளாவிய நாணய முறைக்கு மாற்றாகும்," என்று ரஷ்யா டைரக்டின் மொழிபெயர்ப்பின்படி கோப்யகோவ் கூறினார். "இந்தப் பகுதியில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன: டாலரின் மீதான குறைந்து வரும் நம்பிக்கையை அவசரமாக நிவர்த்தி செய்வது." கோப்யகோவின் கூற்றுப்படி, அமெரிக்கா இறுதியில் அதன் கடனை ஸ்டேபிள்காயின்களில் முதலீடு செய்து பின்னர் அதன் மதிப்பைக் குறைக்கும். "எளிமையாகச் சொன்னால்: அவர்களிடம் $35 டிரில்லியன் நாணயக் கடன் உள்ளது, அவர்கள் அதை கிரிப்டோ மேகத்திற்கு நகர்த்தி, அதன் மதிப்பைக் குறைத்து - புதிதாகத் தொடங்குவார்கள்," என்று அவர் கூறினார். "கிரிப்டோவைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இதுதான் உண்மை." டிக்ரிப்ட் அமெரிக்க வர்த்தகம் மற்றும் வெளியுறவுத் துறைகளை அணுகியது. வளர்ந்து வரும் அமெரிக்க கடன் நெருக்கடி இறுதியில் சொத்து வகுப்பிற்கு பயனளிக்கக்கூடும் என்று கிரிப்டோ ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளனர், ஜூன் மாதத்தில் Coinbase தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது பிட்காயின் உலகளாவிய இருப்பு நாணயமாக மாற வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தார் . அமெரிக்கா கிரிப்டோவுடன், குறிப்பாக ஸ்டேபிள்காயின்களுடன் அதிகரித்து வரும் பிணைப்பைச் சுற்றியுள்ள சந்தேகம் ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் பொதுவாக ஃபியட் நாணயங்களின் மதிப்புடன் இணைக்கப்படும் இந்த டிஜிட்டல் சொத்துக்களுடன் மிகவும் வசதியாகிவிட்டனர். ஜூலை மாதம் டிரம்ப் GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார், இது அமெரிக்காவில் ஸ்டேபிள்காயின்களை வெளியிடுவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கியது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், கிரிப்டோ அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நிலைநாட்ட உதவும் என்று நம்புவதாகவும் , அதைக் குறைக்க அல்ல என்றும் கூறினார். கோபியாகோவின் கருத்துக்கள் இருந்தபோதிலும், ரஷ்யா ஸ்டேபிள்காயின்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ஜூலை மாதம், ரஷ்ய அரசு ஊடகங்கள், அரசுக்குச் சொந்தமான ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் ட்ரானில் தொடங்கப்படும் ரூபிள் ஆதரவு ஸ்டேபிள்காயினில் பணியாற்றி வருவதாக செய்தி வெளியிட்டன. https://finance.yahoo.com/news/putin-advisor-accuses-us-using-214522644.html இவ்வாறு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என நான் நம்புகிறேன், யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை கூறவும். சாத்தியமான ஒன்றாக இருந்தாலும் இது ஒரு பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டாக இருப்பதாக எனதளவில் கருதுகிறேன், இந்த விடயத்தில் பெரிதாக புரிதல் குறைவாக உள்ளது அதனால் இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் என கருதுகிறேன் , தங்கம், கிப்டோ மற்றும் அமெரிக்க பணமுறிகள் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தவென இவ்வாறான குற்றச்சாட்டினை வெளியிடுகிறார்களா?
1 week ago
ஏன் சும்மா இதுகளுக்கு சண்டை பிடிப்பான்? கொஞ்சம் பொறுங்கோ. ரஜனி, கமல், விஜய் இந்த வரிசை அடுத்த தேர்தலில் இன்னும் ஒரு நடிகருடன் தொடரும். ஒரு அரசும் அதனை சார்ந்து இயங்குகின்ற உளவுத்துறையும் சும்மாவே! 🤣
1 week ago
நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.
1 week ago
Thava Arumugam · Suivre rpdetsooSnm3m82uh95911ah0ali1m 2u29mahh3017m65itg19901f20c50 · ஊருக்குப் போய் கலியாணம் கட்டின நம்ம பயல் ஒருத்தன் மனைவி வந்ததும் அவள் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுறாள் என்று ஆங்கில வகுப்பிற்கு அனுப்பி வைத்தான். கொஞ்சநாள் கழிய ஒருநாள் மனுசன் வேலையால களைத்து விழுந்து வர வீட்டம்மா தான் படிச்ச ஆங்கிலத்தை மனுசனுக்கு கதைத்துக்காட்டி பேர்வாங்கனும் என்றிட்டு அவன் வீட்டவர அவள் : Welcome home, Are you tired darling? அவன் : Today I am so tired ... அவள் : Ok...Rest in Peace !!! கிழிஞ்சுது போ😂"
1 week 1 day ago
Isai Sangamam · Nandha Kumar ·odtopenSsr8cs7 2e9tip 42ub0tgu08em27mc0h1r,94ue0ltg2063781:4 · 🌹எம்ஜிஆர்.., ஜெமினி கணேசன்.., சாவித்ரி எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் 📷" Voir la traduction
1 week 1 day ago
புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. CID அதிகாரிகள் தெரிவித்ததாவது, மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட 6,000 பொருட்கள் எடை மற்றும் கலவை விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், அந்தத் தங்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஒப்படைத்தவை என நீதிமன்றத்தில் முன்பு வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/50707
1 week 1 day ago
மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/421865/president-directs-to-continue-progressing-the-mannar-wind-farm-project
1 week 1 day ago
1 week 1 day ago
பதில்கள் அனைத்தும் பச்சையில் மின்னுது . ......! 👍
1 week 1 day ago
https://www.youtube.com/watch?v=wLcddb8O4M4 எங்கே நான் வாழ்ந்தாழும் என்னுயிரோ படம் கல்லும் கனியாகும்
1 week 1 day ago
வருந்தாதே மனமே படம் போட்டர் கந்தன்
1 week 1 day ago
இது நான் முன்பும் படித்தது தான் ஆனாலும் மறந்து விட்டேன் ...என்ன இதே நினைப்பில் இருக்க முடியுமா???? ...🤣 இவ்வளவு ஞாபகத்தில் வைத்து அறியத் தந்ததிற்க்கு மிக்க நன்றிகள் தமிழ் சிறி. ஐயா
1 week 1 day ago
https://youtu.be/oG0BMyTwW5o?si=BBzF3ucsuyB0NDW5 https://www.youtube.com/watch?v=oG0BMyTwW5o
1 week 1 day ago
இது .....இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு . ......! 👍
1 week 1 day ago
தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு September 24, 2025 10:48 am இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது. அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும். இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது. https://oruvan.com/typhoon-ragasa-hits-taiwan-hard-14-dead/
1 week 1 day ago
1 week 1 day ago
இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfxgot3u00mpo29n2uhbmlnw
1 week 1 day ago
செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு - பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் - என்றனர். https://newuthayan.com/article/செம்மணி_வளைவில்_சர்வதேசத்திடம்_நீதிகோரி_உணவுத்_தவிர்ப்புப்_போர்;
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed