1 week 1 day ago
இலங்கையின் முன்னனி வீரர்கள் அவுட் நான் நினைக்கல இலங்கை அணி வெல்லும் என்று..........................
1 week 1 day ago
SL 35/5 நானும் இங்கு சுகமே… நீ(ங்கள்) அங்கு சுகமா? 😂
1 week 1 day ago
34-5
1 week 1 day ago
இதுக்கு முதல் நடந்த போட்டியில் கூட இங்லாந் குறைந்த ரன்ஸ் அடிச்சு இலங்கையை வென்றவை இதே மைதானத்தில் அதே நிலை இன்றும்...................... இலங்கையின் முன்னனி வீரர்கள் அவுட் நான் நினைக்கல இலங்கை அணி வெல்லும் என்று..........................
1 week 1 day ago
சிறிலங்கா 22-4
1 week 1 day ago
ENG 146 / 9 /..........20 ஓவர் ......! 😂
1 week 1 day ago
எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!
1 week 1 day ago
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு adminFebruary 22, 2026 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2026/229553/
1 week 1 day ago
இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை adminFebruary 22, 2026 இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது. இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் https://globaltamilnews.net/2026/229548/
1 week 1 day ago
ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது. கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு "தன்னிறைவு பெற்ற நகரங்கள்" போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண்டுக்கு சுமார் $43.8 பில்லியன் டொலர் மதிப்பிலான வருவாயை ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ஆள் கடத்தல் முறையில் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர். அங்கு அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, கம்பிவேலிகளால் சூழப்பட்ட வளாகங்களுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இலக்குகளை எட்டத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவியல் மாநாட்டை குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் நபர்களைக் கண்டறியவும், போலி உரையாடல்களை உருவாக்கவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இந்தக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவது கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த மோசடி மையங்கள் அரசு அதிகாரிகளின் பின்னணியுடன் செயல்படுவதால், சட்ட அமுலாக்கத் துறையினரால் இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. தவிர்க்க மேற்கொள்ளப்படும் பல சோதனைகள் வெறும் "கண் துடைப்பு" நடவடிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் குற்றவியல் மாநாட்டை (UN Crime Congress) முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்குப் தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. https://tamilwin.com/article/cyber-fraud-hubs-in-southeast-asia-un-report-1771740898
1 week 1 day ago
யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு adminFebruary 22, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்றைய தினத்துடன் நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு மொத்தம் 12 அமர்வுகளாக நான்கு நாட்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி அமர்வுடன் இனிதே நிறைவுற்றது. இம்முறை சாதனை அளவாகப் பெருமளவிலான மாணவர்கள் தங்களது கல்வித் தகமைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.மொத்தமாக 3,252 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனா். இதில் கலாநிதி (PhD), முதுகலை (Masters), இளங்கலை (Bachelor’s) பட்டங்கள் மற்றும் டிப்ளோமா தகமைச் சான்றிதழ்கள் உள்ளடங்குகின்றன. ஒவ்வொரு நாளும் பட்டதாரிகள் ஊர்வலமாக அழைத்து வரப்படும்போது, நாதஸ்வர மற்றும் மேள வாத்தியங்களுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த 40-ஆவது பட்டமளிப்பு விழா, கோவிட் காலத்திற்குப் பிந்தைய கல்விச் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இம்முறை விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களின் சாதனைகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/229562/
1 week 1 day ago
ENG 51 / 3 ......8.3 ஓவர் .....!
1 week 1 day ago
LIVE ENG (7.5/20 ov) 49/3 SL Sri Lanka chose to field. CRR: 6.25 • Last 5 ov (RR): 34/3 (6.80)
1 week 1 day ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார். பயணிகள் குழப்பம் தனது மனைவியை மதிக்காமல் கணவன் நடந்துகொள்வதாக அங்கிருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதன் போது கணவன் தான் அணிந்திருந்த பெரிய கோட்டைக் கழற்றியுள்ளார். அப்போது இயந்திரத்தில் சிக்கி அவரது இடது கை முழங்கையோடு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. நாட்டை விட்டு போகும்போது ஒரு முழு மனிதனாகப் போனேன், ஆனால் இன்று ஒரு ஊனமுற்றவனாகத் திரும்புகிறேன். எனக்கு இப்போது வேலையில்லை, நான் உனக்கு ஒரு சுமை. என்னை விட்டுவிடு” என கணவர் கீழே அமர்ந்து கதறி அழுததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கணவனின் நிலையைக்கண்டு அவரது மனைவி மற்ற கையைப் பற்றிக்கொண்டுள்ளார். நான் உங்கள் கைகளை திருமணம் செய்யவில்லை, உங்களைத்தான் திருமணம் செய்தேன். உங்களால் வேலை செய்ய முடியாவிட்டாலும், நான் கூலி வேலை செய்தாவது உங்களை பார்த்துக்கொள்வேன். என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டாம் என கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/emotional-incident-at-bia-1771635198
1 week 1 day ago
உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்பு மீது ரஷ்யா பெரியளவிலான ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் - கீவ் தெரிவிப்பு Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 03:15 PM உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில், ரஷ்யா டஜன் கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தலைநகர் கிவ், கருங்கடல் துறைமுக நகரான ஒடெசா மற்றும் உக்ரேனின் மத்தியப் பகுதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன. ரஷ்யா ஒரே நேரத்தில் ஏராளமான தாக்குதல் ட்ரோன்கள், பொலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. கிவ் பிராந்தியத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் மைகோலா கலாஷ்னிக் தெரிவித்தார். பிராந்தியத்தின் எரிசக்தி உட்கட்டமைப்பில் இரவு நேரத்தில் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக ஒடேசா ஆளுநர் ஓலே கிப்பர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். "இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது அந்தத் தீ அணைக்கப்பட்டுள்ளது என ஒடெசா ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்துள்ளார். ரஷ்யா கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் விநியோக மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. உக்ரேனின் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடுத்து, அந்நாட்டின் பாதுகாப்புத் திறனை முடக்குவதே ரஷ்யாவின் நோக்கம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/239306
1 week 1 day ago
இங்கிலாந்து கொஞ்சம் கஷ்டப்படுகிறது போல இருக்குது. 6.4 ஓவரில் 43-2
1 week 1 day ago
வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி 22 Feb, 2026 | 02:45 PM (நா.தனுஜா) முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, சட்டத்தரணி கௌதமன், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நபீலா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அவற்றிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள், சிறுபான்மையின மக்களின் உரிமைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்டுள்ள புதிய வரைவு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் காலதாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் நிலவும் பின்னடைவு, முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களின்போது வடக்கில் காலூன்றுவதற்கு வழிகோலிய காரணிகள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனை அவ்வப்போது கேள்விகள் எழுப்பி ஆர்வத்துடன் கேட்டறிந்த பிரதி பிரதமர் டேவிட் லமி, இம்மாற்றத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார். https://www.virakesari.lk/article/239301
1 week 1 day ago
இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சந்தேகநபர் பத்தேகமவைச் சேர்ந்த 46 வயதானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் சந்தேகநபர் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்றில் முன்னிலை இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அக்குரேகொட பகுதியில் காரில் வைத்து சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பாக்கிதாரி என கூறப்படும் சந்தேகநபர் அம்பலாங்கொடவில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/akkuregodda-shooting-incident-suspect-1771730111
1 week 1 day ago
அதுசரி, ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் தூசு தட்டப்படும்போது மட்டும் ஏன் இந்தபிக்குகள் புத்தரை தூக்கிக்கொண்டு குதிக்குதுகள்?
1 week 1 day ago
டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் 22 Feb, 2026 | 12:51 PM (நா.தனுஜா) இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்த்லை விரைந்து நடாத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிக் கருத்துரைத்த சுரேஷ் பிரேமசந்திரன், வழமையாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது அழுத்தமாகவும், அன்றேல் மேலோட்டமாகவேனும் இவ்விடயங்கள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், இம்முறை இதுபற்றிப் பேசப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்கக்கூடும்? என சந்தேகம் வெளியிட்டார். அதேவேளை டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் இந்தியாவே பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்விடயத்தில் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், பிரயோகிக்காவிட்டாலும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239282
Checked
Mon, 03/02/2026 - 17:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed