1 week 2 days ago
மூன்று வண்ணங்களில் எதிலும் நிற்காத ஒருவர் என்று நான் எழுதியதை "One who doesn't stop for any of the three colours" என்று எடுத்துக் கொண்டதால் போக்குவரத்து சமிக்ஞையாக (traffic signal) நண்பர் ஈழப்பிரியன் நினைத்திருக்கலாம். "One who doesn't stand by any of the three colours" என்று கொள்ளவும். மேலும் நான் குறித்த வண்ண அரசியலை ஏராளன் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். அவருக்கு என் நன்றி.
1 week 2 days ago
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் நடக்க இருந்தது. பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
1 week 2 days ago
கடலடி மலைகள் பற்றி சிறப்பான தகவல்கள் ..........! 😀
1 week 2 days ago
கிடைக்க இருந்த இரண்டு புள்ளியும் போச்சே ஹா ஹா இப்ப என்ர குரு சந்தோசப் படுவார் லொள்😄...........................
1 week 2 days ago
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 2 பாகம் – 2 / “பெயர் மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கை” இலங்கையின் சிலாபம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை, புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். மத்திய அரசின் நேரடி மேற்பார்வையின் கீழ் வரும் மாவட்டத்தில் உள்ள ஒரே சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமும் இதுவாகும். மாலைக் கதிரவன் சிலாபம் தென்னை மரங்களுக்குள் மேற்கில் இறங்கி தன்னை மறைத்துக் கொள்ள, அதன் பொன்னிறக் கதிர்கள் மற்றும் அந்த நேரத்தின் அமைதியான அழகு, மனதிற்கு ஓவியம் போன்ற ஒரு உணர்வுகளை அள்ளித் தந்து, மருத்துவமனைக்குள் இரவு புகுந்தது. அப்பொழுது, அந்த அமைதியில், சிலப்பம் அரசு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரங்களில், மின்சார விளக்குகள் மட்டுமே விழித்திருந்தன - ஒரு காலத்தில் தூக்கமில்லாமல் இருந்த பல தலைமுறைகளின் நினைவுகளை அவை கவனித்துக் கொண்டிருப்பது போல் ஆதன், தன் வார்ட்டில் [ward] படுக்கையில் இருந்தபடி உணர்ந்தான். ஆதன் 17வது படுக்கையில் படுத்துக் கிடந்தான். அவனது கால் விபத்தினால் அசைக்க முடியாமல் இருந்தது, ஆனால் அதற்கும் மேலாக, அவனது மனம் கூட சுதந்திரமாக நகர முடியவில்லை. அப்பொழுது அவன் கேட்ட முதல் தமிழ், ஒரு செவிலியரிடமிருந்து வந்தது. அது வழக்கமான "எப்படி இருக்கிறீர்கள்?" என்ற குரல் போன்று அவனுக்குத் தோன்றவில்லை. மாறாக, - அதில், ஒரு ஊர் இருந்தது. ஒரு பாட்டி இருந்தாள். ஒரு இழந்த காலம் இருந்தது. "நீங்க தமிழ் பேசுவீர்களா?" அவன் கேட்ட போது, அது ஒரு கேள்வி அல்ல—அது ஒரு உறுதிப் படுத்துதலுக்கான கேள்வி. சமந்தி சில கணங்கள் பதிலளிக்கவில்லை. மௌனமாக நின்றாள். அவளது அடையாள அட்டையில் "சமந்தி பெரேரா" [samanthi Perera] என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவளுக்குள் யாரோ மெதுவாகக் கிசுகிசுத்தார்கள்: “செந்தூரி...” அவள் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து குரலைத் தாழ்த்திக் கொண்டாள்: "எனக்குப் பேசத் தெரியும் ... பாட்டி, நான் குழந்தையாக இருக்கும் பொழுது தமிழில் என்னுடன் பேசுவாள், ஆனால் பேசக் கூடாது என்று சொன்னார்கள்." ஆதன் அவளைப் பார்த்தான். அவன் பார்வையில் காதல் இல்லை. ஆச்சரியமில்லை. ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை மட்டுமே தெரிந்தது. “அப்படின்னா, நீங்க அதை இழந்துவிடல… உங்களுக்கு அதை மறக்கச் சொல்லியிருக்காங்க.” அவன் வார்த்தைகள் சமந்தியின் - இல்லை இல்லை, செந்தூரியின் - நெஞ்சில் ஆழமாக ஏதோ ஒன்றைத் தாக்கின. அடுத்த நாள் காலை, அவள் மருந்துகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அவனுடைய விவரக்கோப்பை [file] பார்த்தாள். பெயர்: ஆதன் சிவநாதன் முகவரி: உடப்பு பணி: பட்டதாரி ஆசிரியர் – தமிழ் மொழி “தமிழ் ஆசிரியர்…” அவள் தனக்குள் சிரித்தாள். அது மகிழ்ச்சிச் சிரிப்பு அல்ல. “தமிழ் கற்றவன் இங்கு விபத்துக்குள்ளாகிறான். தமிழ் மறந்தவள் அவனை காப்பாற்றுகிறாள்.” எப்படியோ, வரலாறு கூட சில நேரம் கசப்பான நகைச்சுவை செய்து விடுகிறது. மதியம் நேரம். ஆதன் அவளிடம் கேட்டான்: “சிலாபத்தில பிறந்த உனக்கு எது மிகவும் பரிச்சயமானது - பாறை, பவளப்பாறை, கரை மீன் [shore fish] அல்லது கடல்?" அவள் சிறிது தாமதித்து சொன்னாள்: "அனைத்தும்... ஆனால் முழுமையாக எதுவும் இல்லை." அதுதான் உண்மையில் அவளின் வாழ்க்கை. வீட்டில், அவளுடைய பாட்டி முருகனைப் பற்றியும், பழைய கோவிலைப் பற்றியும், எரிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட சிலைகள் அல்லது விக்கிரகங்கள் பற்றியும் பேசுவாள். அவளுடைய அம்மா, அதற்கு முற்றிலும் முரணாக: “அதெல்லாம் பழைய கதைகள் குழந்தாய். இப்போது நம் மதமும் இனமும் வேறு.” என்பாள். அவளுடைய அப்பா: “தேவாலயம் இருந்தா பாதுகாப்பு இருக்கும்.” என்பார். பள்ளியில்: “தமிழ் தேவையில்லை. ஆங்கிலம் + சிங்களம் = எதிர்காலம்.” என்பர். ஆதன் மெதுவாகக் கேட்டான்: "நீங்கள் உங்கள் நம்பிக்கையினாலோ ... அல்லது பயத்தினாலோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினீர்கள்?" சமந்தி திடீரென்று மௌனமாக நின்றாள். அவள் குரல் இலேசாக நடுங்கியது: "இது நம்பிக்கை அல்ல, ஐயா. அது... உயிர்வாழ்வதற்கான ஒப்பந்தம்" என்று தான் நான் பாட்டி மூலம் அறிந்தேன் என்றாள். அப்படியே சிங்கள மொழியும். அந்த ஒற்றை வரி ஒரு நூற்றாண்டு வலியைச் சுமந்தது. 1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal] , “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப் பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார். அதே போல, 1977, 1981 ,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese] உதாரணமாக, சிங்கள இனம், அவ்வப்போது தென் இந்தியாவில் இருந்து படை வீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களாலோ இலங்கையில் குடியேறிய தென் இந்தியா திராவிடர்களை உள்வாங்கி பல்கிப் பெருகின என்பதற்கு, அண்மைய உதாரணமே நீங்கள் என்று, வெளியே சொல்லாமல், தன் மனதில் சொல்லிக்கொண்டான். ஆனால் அது உங்கள் பிழை இல்லை, அந்த சூழ்நிலையில் நீங்க மாட்டிக் கொண்டதே காரணம் என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தான். மாலையில், ஒரு வயதான நோயாளி தமிழில் அழைத்தார்: "அம்மா... தண்ணீர்." மற்ற செவிலியர்கள் அதைக் கவனிக்கவில்லை, ஆனால் சமந்தி உடனடியாக சென்றாள். ஆதன் அந்தக் காட்சியைப் பார்த்து, அவனுக்குள் ஒரு உறுதியான உணர்வு தோன்றியது: "இது ஒரு பாசம் அல்லது அன்பு அல்ல. இது அவளின் சுயத்தின் மீட்பு அல்லது மீள்வருகை." அவள் திரும்பி வந்ததும், அவன் கேட்டான்: "செந்தூரி... அது உன் உண்மையான பெயரா?" அவள் நடுங்கினாள். "உனக்கு யார் சொன்னது?" அவன் சிரித்தான்: "உன் தமிழ் எனக்கு ஒரு முறை சொன்னது, " முதல் முறையாக, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது - பயத்தால் அல்ல, ஆனால் சுதந்திரமான, பயமற்ற கண்ணீராக! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 03 தொடரும் துளி/DROP: 2049 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/33928967036751842/?
1 week 2 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 111 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 111 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் கி.பி 170 முதல் கி.பி 190 வரையான காலத்தில், இலங்கையில் ஒரு இராட்சதன் இருந்தாரா? வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசனின் [Vankanasikatissa] மகன் முதலாம் கஜபாகு அல்லது கஜபாகுக காமணி, சோழ மன்னனின் செயலுக்குப் பழிவாங்க விரும்பி, ஒரு ராட்சத நிலாவுடன் [giant Nila] யாப்ப பட்டுனாவிலிருந்து [Yapapatuna or Yapa Patuna ], அதாவது இன்றைய யாழ்ப்பாணத்தில் இருந்து சோழ நாட்டிற்குச் சென்றார். இது நடந்த காலம், இந்த கதையின் படி, கி.பி 170 முதல் கி.பி 190 வரைக்குள் ஆகும். இராசாவலியத்தின் ஆசிரியர், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு ராட்சதன் இருந்ததாக கூறி, அதை வாசகர்கள் நம்ப வேண்டும் என்றும் விரும்புகிறார்! இப்படியான கதைகள் ஒரு தீவிர வரலாறாக இருக்காது, குழந்தைகளுக்கான கதைகளைப் போல மட்டுமே இது இருக்கிறது? இருப்பினும், கி.பி 170 முதல் கி.பி 190 வரையான காலத்திலேயே யாப்ப பட்டுனா, அதாவது யாழ்ப்பாணம் படடணமாக வளர்ந்த நிலையில் இருந்ததை, மறைமுகமாக ஏற்றுக் கொள்ளுகிறது என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. ஆசிரியரின் கற்பனைத் திறன் அத்துடன் அங்கு நிற்கவில்லை! இராட்சத நிலா இரண்டு யானைகளைப் பிடித்து, ஒன்றையொன்று மோதி இரண்டையும் கொன்றார் என்றும் கூறுகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட அதை நம்புவானா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! மேலும் அந்த ராட்சதன் அல்ல, கஜபாகுவே மணலில் இருந்து தண்ணீரைப் பிழிந்தார் என்றும் மேலும் கூறுகிறது. அது மட்டும் அல்ல, மீண்டும் தனது இரும்புக் கதாயுதத்திலிருந்தும் தண்ணீரைப் பிழிந்தான்! அதனால், சோழ மன்னன் பயந்து தான் முன்பு கைதியாக பிடித்த பன்னிரண்டாயிரம் கைதிகளுடன் கூடுதலாக மேலும் பன்னிரண்டாயிரம் தமிழர்களையும் சேர்த்து திருப்பி அனுப்பினான். அது மட்டும் அல்ல, பத்தினி தேவியின் கால் சலங்கை, நான்கு தேவதைகளின் சின்னம், மற்றும் வலகம்பன் மன்னனிடமிருந்து [king Valagamba] பறிக்கப்பட்ட கிண்ண நினைவுச்சின்னம் [Anklet of the Goddess Pattini, insignia of the gods of the four devala, and the bowl-relic ] ஆகியவற்றையும் கஜபாகு எடுத்துக் கொண்டு திரும்பினான். இது இராசாவலியத்தை எழுதியவரின் வக்கிர மனதை எடுத்துக் காட்டும் கதை என்று எண்ணுகிறேன். கஜபாகு இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். ஆனால், உண்மையில், கஜபாகு மன்னருக்கும் அக்கால தமிழ் மன்னர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவு தான் இருந்தது. கஜபாகு பின்னர் பத்தினி தெய்வமான கண்ணகியைப் பற்றி கேள்விப்பட்டு, அவளுக்கு காணிக்கைகளை வழங்கினார். பின்னர் காவிய சிலப்பதிகாரத்தின்படி நாட்டில் மழை பெய்தது. அந்தக் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தமிழ் மன்னன் சேரன் செங்குட்டுவன் (இன்றைய கேரள நாட்டின் அன்றைய மன்னன்). கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் கஜபாகு, ஜூலை மாதத்தில் பத்தினி தெய்வம், கண்ணகிக்கு விழா நடத்தியதாக தமிழ் காவியம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த விழா கி.பி 1775 வரை சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக சிங்கள மன்னர்களாலும் மக்களாலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பின்னர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை [Malwatta and the Askiriya chapters] உருவாக்கிய சியாமிலிருந்து [Siam] புதிதாக வந்த துறவிகள் அதை எதிர்த்தனர். மற்றும் அதை புத்தரின் பல் நினைவுச்சின்ன விழாவான, பெரஹரா விழாவாக மாற்ற மன்னரைக் கட்டாயப்படுத்தினர். தங்கள் சொந்த சுயநல நலன்களால் உந்தப்பட்ட ஒரு சிறிய குழு மக்கள், இருந்த நல்ல, நட்பு உறவை முறிக்க விரும்பினர். எனவே அவர்கள் வெவ்வேறு வழிகளில் பிரச்சினைகளையும் பிளவுகளையும் உருவாக்கினர். அப்படியான ஒன்றுதான் இந்த எதிர்ப்பு செயலாகும். தமிழ் காப்பியமான சிலப்பத்காரம் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பெரஹரா விழாவைப் பதிவு செய்துள்ளது. 'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985' for the discussion on the Kandy Perahera festival. என்ற குறிப்பின் 142 முதல் 152 வரையிலான பக்கங்களைப் பெரஹரா பற்றி அறிய பார்க்கவும். கஜபாகுவின் மரணத்திற்குப் பிறகு, அவரது மைத்துனர் மஹாலு மனா [Mahalu Mana] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் பதியதிஸ்ஸா அல்லது பதிக திச்சன் [Bhatiyatissa or Bhatika Tissa] இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது தம்பி குடனா [Kudana] இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் வீரதிஸ்ஸா [Veratissa] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் அபா சென் [Aba Sen] இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வீரதிஸ்ஸாவின் மகன் சிரி நா [Siri Na] இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் விஜயிந்து [Vijayindu] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் சங்கதிஸ்ஸா [Sanghatissa] நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் ஸ்ரீ சங்கபோ [Siri Sangabo] இரண்டு ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தார், என்றாலும் கோலு அபா [Golu Aba] அரியணையைக் கைப்பற்றினார். மேலும் சங்கபோவின் தலையைக் கொண்டுவருபவருக்கு மகத்தான செல்வம் வழங்கப்படும் என்பதையும் அவர் முரசுகள் முழங்க மக்களுக்குத் தெரிவித்தார். சங்கபோ இதைப் பற்றி அறிந்து, அந்த பரிசு பணத்தை பெற, தனது தலையை ஒரு ஏழைக்குக் கொடுத்தார். மேலும் அங்கு கதையில் அற்புதங்கள் உள்ளன. ஆனால் அது நடுநிலையானது மற்றும் இங்கே நாம் அதை விவரிக்கவில்லை. கோலு அபா பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் கலகண்டேது திஸ்ஸா [Kalakandetu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது தம்பி மகாசேனா [Mahasena] இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்து தெய்வீக உலகத்திற்குச் சென்றார். மற்ற இரண்டு வரலாற்றுக் கதைகளுக்கு நேர்மாறாக, மன்னன் மகாசேனனைப் பற்றி இராசாவலிய மிகவும் மகிழ்ச்சியான ஒரு பதிவை அல்லது அவனைப்பற்றிய ஒரு விம்பத்தை தருகிறது. ஆனால், மகாவம்சம்: 'இவ்வாறு அவர் தனக்குள் நிறைய தகுதிகளையும் குற்ற உணர்ச்சிகளையும் சேகரித்தார்' என்று கூறுகிறது. அதே போல, 'அந்தத் தீயவர்களுடன், தீய மற்றும் நல்ல செயல்களுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக, இந்த மன்னன் மகாசேனன் தனது செயல்களுக்கு ஏற்ப (வேறொரு வாழ்க்கைக்கு அல்லது பிறவிக்கு) இறந்தார் என்று தீவவம்சம் கூறுகிறது. இராசாவலிய அவரை, பிறவிகள் அற்ற, சொர்க்கத்தில் காண்கிறது , ஆனால் மற்ற இரு நூல்களும் அவரது தீய செயல்களின் விளைவை அனுபவிக்க இந்த உலகில் அவரை மீண்டும் காண்கிறது. Part: 111 / APPENDIX – "Summary of Rajavaliya" His son Gajaba wanted to avenge the act of the Soli king, and went to Soli country from Yapapatuna (present day Jaffna) with one giant Nila. The time is about 170 A. D. to 190 A. D. The author of the Rajavaliya wanted the readers to believe that there was a giant in Lanka one thousand nine hundred years ago! This can only be for kindergarten kids, and not good to be serious history. There is, however, an indirect acceptance that Yapapatuna (Jaffna) was there during that time, about 170 A. D. to 190 A. D. The author’s flight of fancy does not stop there! The giant Nila seized two elephants and killed both by striking one against the other. Wonder whether a fifth grade student would believe it! Gajaba himself, not the giant, squeezed water out of sand. He again squeezed water from his iron mace! Soli king scared and returned the twelve thousand prisoners with an additional twelve thousand Tamils. He also took the Anklet of the Goddess Pattini, insignia of the gods of the four devala, and the bowl-relic which taken away from the king Valagamba. This is the narration of the perverted mind of the author of the Rajavaliya. Gajaba ruled for twenty-four years. In fact, there was cordial relationship between the king Kajavaghu and the Tamil kings of that time. Kajavaghu heard of Kannaki, later Pattini Goddess, and made offerings to her. Then rain fell in the country as per the Epic Silappathikaram. The most powerful Tamil king of that time was Seran Senguttuvan (the king of present day Kerala). It says in the Tamil Epic Silappathikaram that the king Kajavaghu of Lanka which is surrounded by sea conducted festival for Kannagi, the Goddess Pattini, in the month of July. This festival is continued by the Singhalese kings and the people till 1775 A. D., for about one thousand five hundred years. Then the newly arrived monks from Siam, who formed the Malwatta and the Askiriya chapters, objected and forced the king to make it the Buddha’s tooth relic festival, Perahara festival. The stake of the few wanted to destabilize the existed cordial relationship and created rift in many ways. The Tamil epic Silappathkaram records Perahera festival about one thousand five hundred years ago. Refer the page 142 to 152 of the Reference 20 for the discussion on the Kandy Perahera festival. After Gajaba’s death, his brother in law, Mahalu Mana, ruled for six years. Then his son, Bhatiyatissa, reigned for twenty-four years. His younger brother, Kudana, reigned for twenty years. Then his son Veratissa ruled for twenty-two years. His son Aba Sen ruled for two years. Then Veratissa’s son Siri Na ruled for two years. Then Vijayindu ruled for six years. Then Sanghatissa reigned for four years. Then Siri Sangabo was ruling justly for two years, and Golu Aba usurped the throne. He also made it known to the people by beat of drums that whoever brings the head of Sangabo would be given immense wealth. Sangabo came to know about and gave his head to a poor so that he could collect the money. There are miracles in the story, but it is of neutral nature and not narrated here. Golu Aba reigned for thirteen years. Then his son Kalakandetu Tissa ruled for ten years. His younger brother Mahasena ruled for twenty-four years and went to the divine world. Rajavaliya gives a very rosy picture of the king Mahasena in contrast to the other two chronicles. The Mahavamsa says that: ’Thus did he gather to himself much merit and much guilt’. The Dipavamsa says: ‘in consequence to his intercourse with those wicked persons, evil as well as good deeds, this king Mahasena passed away (to another existence) according to his actions. The Rajavaliya finds him in the heaven, but the other two find him in this world to enjoy his merit and suffer the consequence of the evil deeds. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 112 தொடரும் / Will follow துளி/DROP: 2050 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 111 https://www.facebook.com/groups/978753388866632/posts/33929626556685890/?
1 week 2 days ago
டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள் பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு, கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 21 பிப்ரவரி 2026, 13:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் கடந்த ஆண்டு உலகளாவிய வரிகளை விதித்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. IEEPA என அழைக்கப்படும் 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி, அதிபர் டிரம்ப் வரிகளை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பு, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு வரிகளால் ஏற்பட்ட 130 பில்லியன் டாலருக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. ஆனால் நீதிமன்றம் இதில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் இவை மற்றொரு நீதிமன்றப் போராட்டத்தின் மூலம் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான சற்று நேரத்திலேயே அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வர உள்ளது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? நீதிமன்றம் விதித்த தடை எதற்கெல்லாம் பொருந்தாது? இதுவரை வசூலிக்கப்பட்ட வரிகள் திருப்பி அளிக்கப்படுமா? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். எந்த வரிகள் சட்டவிரோதமானவை? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, டிரம்ப் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதித்த வரிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் சட்டம் அவசரகாலத்தில் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது. டிரம்ப் முதன்முதலில் பிப்ரவரி 2025-ல் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதற்கு அந்த நாடுகளிலிருந்து ஃபெண்டனில் கடத்தலுக்கு எதிரான அவசரநிலை என்று அவர் கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு, டிரம்ப் "விடுதலை நாள்" என்று அழைத்த, ஏப்ரல் 2ம் தேதி தனது வரிகளை விரிவுபடுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது "பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிப்பு" - இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் ஐபிஎல் எல்லையைத் தாண்டுகிறதா? புனித தீவில் கிடைத்த கூழாங்கல்லில் பதிந்திருந்த 'சிரிக்கும்' உருவம் பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது? நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு புதிதாக 10% வரி விதித்த டிரம்ப் - இந்தியாவுக்கு எவ்வளவு வரி? End of அதிகம் படிக்கப்பட்டது தனது நடவடிக்கை வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றும் அமெரிக்காவுக்கான வருவாயை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறினார். ஆனால், புதிய வரிகளை விதிக்கும் அரசமைப்பு அதிகாரம் அதிபருக்கு இல்லை, நாடாளுமன்றத்துக்கே உள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் நோக்கம் வருவாயை அதிகரிப்பது அல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டில் டிரம்ப் விதித்த பல வரிகள், இந்த சட்டத்தின் கீழ் அவர் அறிவித்த அவசரநிலைகளின் ஒரு பகுதியாக இல்லை, எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவை தொடரலாம். அதாவது எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகள் மீதான தொழில்துறை சார்ந்த வரிகள் இதில் அடங்கும், இவற்றை 1962ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்க சட்ட பிரிவு 232 இன் கீழ் தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி டிரம்ப் விதித்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு, புதிய வரியை எதன் அடிப்படையில் டிரம்ப் விதித்தார்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புதிய 10% வரியை விதிக்க 1974 ஆம் ஆண்டு Trade Act-ன் பிரிவு 122-ஐ டிரம்ப் பயன்படுத்தினார். இது அதிகம் அறியப்படாத பிரிவாகும். இந்தப் பிரிவு அதிபருக்கு 150 நாட்களுக்கு 15% வரை வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கிறது, அதன் பிறகு நாடாளுமன்றத்தால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். அதாவது இந்தத் தீர்வும் தற்காலிகமானது. அதே நேரம், நாடாளுமன்றத்தை தவிர்ப்பதற்கான வழியை டிரம்ப் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். வலதுசாரி சிந்தனைக்குழுவான கேட்டோ இன்ஸ்ட்டிட்யூட்டின் கூற்றுப்படி, புதிய அவசரநிலையை அறிவித்து மீண்டும் 150 நாட்களுக்கு வரி விதிப்பதை இந்தப் பிரிவு தடுக்கவில்லை. வெள்ளை மாளிகை கூற்றுப்படி, டிரம்ப் பிரிவு 122 ஐ "அடிப்படை சர்வதேச கொடுப்பனவு சிக்கல்களைத் தீர்க்க" மற்றும் "அமெரிக்க வர்த்தகத்தை மறுசீரமைக்கப் பயன்படுத்துகிறார்" , அதே நேரத்தில் 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் அவர் வரிகளை விதிக்க முடியுமா என்பதையும் ஆராய்கிறார் என்றது. அந்தச் சட்டம், ஜேமிசன் கிரேர் தற்போது வகிக்கும் "அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி" ( USTR ) பதவியின் மூலம், நாடுகளின் வர்த்தக நடைமுறைகளை விசாரிக்க அனுமதிக்கிறது. பின்னர், நடைமுறைகள் பாரபட்சமானதாகவோ அல்லது நியாயமற்றவையாகவோ இருந்தால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி வரிகளை விதிக்கலாம் என்று சொகிறது. 1962 ஆம் ஆண்டு வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் நிர்வாகம் தொடர்ந்து வரிகளை விதிக்க முடியும், இதை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் பெரிதும் பயன்படுத்தினார். இது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் இறக்குமதிகள் மீது வரிகளை விதிக்க நிர்வாகத்தை அனுமதிக்கிறது, ஆனால் விசாரணைக்குப் பிறகுதான் இதனை செய்ய முடியும் என்பதால், இது நேரம் எடுக்கக் கூடியது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு, சட்டவிரோத வரிகள் திரும்பப் கிடைக்குமா? இந்த வரி அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் இதுவரை பில்லியன் கணக்கான டாலர்களை வசூலித்துள்ளதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. இந்தத் தொகை சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் வசூலித்த தொகையை திருப்பி அளிப்பது குறித்து எதுவும் விளக்கவில்லை. செய்தியாளர்களிடம் பேசும் போது பணத்தை திருப்பித் தரும் விவகாரம் பல ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் சிக்க கூடும் என டிரம்ப் கூறி இருந்தார். அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஸ்காட் பெசண்ட் கூறும் போது இந்த விவகாரம் பல ஆண்டுகளுக்கு இழுக்கப்படலாம் என்றார். ஏனெனில், வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம், பணத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவிடப்பட்டால் அவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களுக்கே செல்லும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய நிறுவனங்களிடம் இந்த சிக்கலான செயல்முறையை முடிக்க திறன் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு, இப்போது நடைமுறையில் உள்ள வரிகள் என்ன? பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 12:01 EST மணிக்குத் தொடங்கி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும், அவை எங்கிருந்து வந்தாலும், புதிய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகள், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, முன்னர் பேச்சுவார்த்தை நடத்திய வரி விகிதத்திற்குப் பதிலாக, பிரிவு 122 இன் கீழ் உலகளாவிய 10 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் அவர்கள் ஒப்புக்கொண்ட சலுகைகளை அந்த நாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். "அமெரிக்க பொருளாதாரத்தின் தேவைகள் காரணமாக" சில பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவை முக்கிய வகைகளின் கீழ் வருகின்றன, இதனால் சில முக்கியமான கனிமங்கள், உலோகங்கள், எரிசக்தி பொருட்கள், இயற்கை வளங்கள், உணவுப் பயிர்கள், மருந்துகள், மின்னணுவியல், கார்கள் மற்றும் லாரிகள் மற்றும் விண்வெளிப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும். மேலும், "புத்தகம் உள்ளிட்ட தகவல் பொருட்கள் , நன்கொடைகள் " ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகையின் உண்மைத் தகவல் தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட பல வகைப் பொருட்களுக்கு, இந்தப் பிரகடனம் விரிவானது, ஆனால் எந்தெந்தப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்பதை குறிப்பாகக் கூறவில்லை. மற்றொரு முக்கியமான விலக்கு யூஎஸ்எம்சிஏ-வின் ஒரு பகுதியாக இருக்கும் பொருட்கள் - அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இடையேயான வர்த்தக ஒப்பந்தம். அந்தப் பொருட்களுக்கும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது, மேலும் USMCA விலக்கு காரணமாக உலகின் மிகக் குறைந்த வரி விகிதத்தைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இதேபோல், கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைகள் டொமினிகன் குடியரசு-மத்திய அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதே நேரத்தில், குறைந்த விலை பொருட்களுக்கான வரிகளைத் தொடர்ந்து விதித்து வருவதாக டிரம்ப் கூறினார். கடந்த ஆண்டு, 800 டாலர் அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருட்கள் எந்த வரியும் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்த டி மினிமிஸ் விலக்கு என்று அழைக்கப்பட்டதை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24r8ygm0do
1 week 2 days ago
நானும் சிம்பாவ்வே ஆட்டங்களில் மழை வரவேண்டினேன். கோஷானாக இருந்து கொண்டு இதுக்கெல்லாம் ஆசைபட்டிருக்க கூடாதுதான்😂
1 week 2 days ago
பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்" பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 50 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா? மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரியம் ஒன்றுமல்ல. அவர்களின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டுனித் வெல்லாலகே, தஷுன் ஹேமந்தா போன்ற ஸ்பின்னர்கள் ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் சமீராவும் சிறப்பாக பந்துவீசிவருகிறார். முன்னணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றிரண்டு பௌலர்கள் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி விடுகிறார்கள். அதனால், என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். அதிலும் குறிப்பாக பிராகசமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பதும் நிசங்காவின் ஆட்டம் இந்தப் போட்டிகளில் எப்படி இருக்கிறதோ அதன்படியே அவர்களின் வாய்ப்பு இருக்கும். இந்த 27 வயது வலது கை பேட்டர் என்னை நன்கு கவர்ந்துவிட்டார். அவரது ஆட்டத்தை ஒவ்வொரு முறையும் நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அவர் சீராகக் கொடுத்து அசத்திக்கொண்டே இருக்கிறார். வெற்றிடத்தை நிரப்பும் நிசங்கா 1990-களின் பிற்பகுதிக்குப் பிறகு இலங்கை அணி பல தரமான பேட்டர்களை உருவாக்கியது. அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மார்வன் அட்டபட்டு, குமார் சங்கக்காரா, மஹேலா ஜெயவர்தனா, திலகரத்னே தில்ஷன், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல் என பல தரமான பேட்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மட்டாக இருக்கட்டும் அதில் சிறப்பாக செயல்படக்கூடிய பல பேட்டர்கள் வந்தனர். 1996 உலகக் கோப்பை ஃபைனலில் டி சில்வா அடித்துத் தொடங்கிவைத்தார்.... அதன்பிறகு அவர்கள் ஓயவேயில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர்களால் அப்படி தரமான பேட்டர்களை உருவாக்க முடியவில்லை. நிறைய திறமையான வீரர்களைப் பார்த்தோம். ஆனால், அவர்களால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை. இப்போது பதும் நிசங்கா அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். அவர் அனைத்து ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். எளிதாக ரன் சேர்க்கிறார். வழக்கமான பாணியில் தான் பேட்டிங் செய்கிறார். நல்ல ஸ்டைல் இருக்கிறது. அற்புதமான டெக்னிக் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அடுத்த சில ஆண்டுகளில் அவர் மிகப் பெரிய பேட்டராக வரப்போகிறார். ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தப்போகிறார். அதற்கு ஏற்ற சுபாவம் அவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. நல்ல 'கிளாஸான' வீரராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பொறுப்புணர்வோடு ஆடுகிறார். அணிக்காக ஆட்டத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு முழுமையான வீரராக அவர் இருக்கிறார். இப்பொழுதே அவர் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு ஜாம்பவானாகவே மாறியிருப்பார் என்பது என் கருத்து. பட மூலாதாரம்,Getty Images விழிப்புணர்வு நிறைந்த ஆட்டம் கடந்த சில ஆண்டுகளாக ஒரு விஷயத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டில் சோபிக்கவேண்டும் என்பதால், அதற்கேற்ப வீரர்கள் தங்கள் ஆட்ட முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், நிசங்காவிடம் அவ்வளவு மாற்றங்கள் இல்லை. வழக்கமான, சரியான கிரிக்கெட் ஷாட்கள் ஆடுகிறார். கிரீஸில் அதிகம் அவர் நகர்வதில்லை. இடைவெளிகளை சரியாகப் பிடித்து அதைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். இந்த முறையில் விளையாடியே டி20 கிரிக்கெட்டில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடுகிறார். இந்த ஃபார்மட்டில் நீங்கள் சுழன்று சுழன்று ஆடவேண்டிய அவசியம் இல்லை என்பதை இது சொல்கிறது. பவர்பிளேவில் ஃபீல்டர்கள் 30 யார்ட் வட்டத்துக்குள் நிற்கும்போது சரியான ஷாட்களை, சரியான இடைவெளியைப் பார்த்து அடிக்கும்போது நிச்சயம் ரன் சேர்க்க முடியும். ஆனால், டி20 என்று வரும்போது இதையெல்லாம் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால், களத்தில் இருக்கும்போது பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஆனால், அந்த மனநிலையை அடக்கி ஒரு நிலைத்தன்மையை தன் ஆட்டத்தில் நிசங்கா காட்டுகிறார். ஒருசில வீரர்கள் பவர்பிளேவில் அதிரடி காட்டுவார்கள். ஆனால், அவர்களால் மிடில் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஆனால், நிசங்கா அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிறார். பவர்பிளேவில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடுபவர், மிடில் ஓவர்களில் நீட்டித்து நிற்கிறார். அதிகம் ஓடுகிறார். அப்படியும் 130 - 140 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிடுகிறார். அதனால், விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ரன்ரேட்டையும் அவர் சீராக வைத்திருக்க உதவுகிறார். கிரீஸில் அவருடைய கால் உறுதியாக இருக்கிறது. தலை உறுதியாக இருக்கிறது. நல்ல 'பேலன்ஸ்' இருக்கிறது. அதேபோல், ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, எதிரணி பௌலர்கள் யார் என்பதை அறிந்து அதற்கேற்றதுபோல் தன் அணுகுமுறை அவர் தேர்வு செய்கிறார். மிகச் சிறந்த பேட்டர்கள் அதைத்தான் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் எப்போதுமே ஒரு படி முன்னே இருப்பார்கள். பதும் நிசங்கா தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அதைக் காட்டியிருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images பொறுப்பை உணர்ந்து ஆடும் திறன் அவருக்குத் தன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. 'நான் தான் இன்னிங்ஸை ஓப்பன் செய்கிறேன். நல்ல தொடக்கமும் கொடுக்கவேண்டும், வேகமாகவும் ஆடவேண்டும், அதேசமயம் நிலைத்தும் நிற்கவேண்டும்' என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அது மிகவும் கடினமான விஷயம். ஆனால், தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே அவர் அதை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் (டி20 ஃபார்மட்) இந்தியாவுக்கு எதிராக நிசங்கா ஒரு சதம் அடித்தார். அந்தப் போட்டி கூட டை ஆகி, சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெறும். அந்த ஆட்டம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது. துபையில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து இந்தியா 202 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியின் வர்ணனையில் இருந்த நான், அந்த ஆடுகளத்தில் அந்த ஸ்கோரையெல்லாம் சேஸ் செய்யவே முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால், நிசங்கா வந்து ஆடிய விதம் பிரம்மிப்பாக இருந்தது. தொடக்க வீரராக இறங்கிய அவர், கடைசி வரை போராடி இலங்கையை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, இலங்கையும் 202 ரன்கள் தான் எடுத்தது. ஒருவேளை நிசங்கா ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவர் இலங்கையை வெற்றி பெறவே வைத்திருக்கலாம். அது ஏதோ ஒருநாளோடு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக பல சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் நிசங்கா. அதை தற்போது இந்த உலகக் கோப்பையிலும் அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார். பட மூலாதாரம்,Getty Images பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சற்று கடினமானவை. பந்து பேட்டுக்கு நன்கு வரும். பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். பவுண்டரி எல்லையும் சற்று சிறியது தான். பவர்பிளேவில் அடித்து நொறுக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படியில்லை. ஆடுகளங்கள் சற்று ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். பந்து நின்று வரும். அங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருக்கும். பிரேமதேசா போன்ற மைதானமெல்லாம் மிகவும் பெரியது. அங்கு ஸ்கோர் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், நிசங்கா அதை செய்திருக்கிறார். அவர் ஃபிட்னஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால் ஓடியும் அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார். நான் முன்பே ஆட்ட விழிப்புணர்வு பற்றி சொல்லியிருந்தேன்... மைதானம் பெரிதாக இருந்தால் அதற்கேற்ப ஆடுகிறார். சிறிதான மைதானம் என்றால் எதிரணி பௌலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். தன் அணியின் மிகமுக்கிய பேட்டராக விளங்குகிறார். நிசங்காவுக்கு உறுதுணையாக இருக்கப்போவது யார்? என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கு நிசங்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் என சவால் கொடுக்கக்கூடிய அணிகளோடு இலங்கை விளையாடப்போகிறது. அவர் கொடுக்கக்கூடிய தொடக்கம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியம். அதேசமயம் அவர் ஒருவரையே பெரும்பாலும் சார்ந்திருப்பது அவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அதனால் அவருக்கு உறுதுணையாக மற்ற வீரர்களும் பங்களிக்கவேண்டும். பவன் ரத்நாயகே இந்த உலகக் கோப்பையில் நன்றாக ஆடுகிறார். அச்சமில்லாமல் அதிரடியைக் காட்டுகிறார். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்தும் அந்த பங்களிப்பு வரவேண்டும். குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் அந்த உறுதுணையான ஆட்டத்தைக் கொடுக்கவேண்டும். எல்லோரும் 20-30 ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக அவர்கள் மாற்றத் தொடங்கவேண்டும். அப்படிச் செய்யும்போது அது நிசங்காவின் நெருக்கடியைக் குறைத்து, இன்னும் சிறப்பான செயல்பாட்டை அவரிடத்திருந்து கொண்டுவரும். அது அணிக்கும் பேருதவியாக மாறும். இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கை வீரர்கள் பெரிதாக யோசிக்காமல் அச்சமற்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இலங்கை அரையிறுதியைப் பற்றி கனவு காணலாம். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crrx741l8lyo
1 week 2 days ago
வழமையிலேயே இப்படி கூட்டம் வருகிறது. ஆனாலும் அது வாக்காக மாறுவதில்லை.
1 week 2 days ago
ஆஆஆஆஆஆஆஆஆஆ வடை போச்சே. கண் காணாத இடத்தில் மச்சம் இருந்து வேலையைக் காட்டுது.
1 week 2 days ago
அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி - இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார் Published By: Priyatharshan 21 Feb, 2026 | 02:32 PM ( வீ. பிரியதர்சன் ) அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் தலைமையிலான குழுவினருக்கும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கும் இடையில் இடம்பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வின் போது இரு தரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது, இலங்கைக் கடற்படைக்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட DECISIVE P628 (ex-USCG Cutter) கப்பலின் கட்டளை அதிகாரி கயான் விக்கிரமசூரியவுக்கு வீடியோ அழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. துறைமுகத்திலிருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கவிருந்த கப்பலின் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் “நல்ல காற்று, பின்தொடரும் கடல் அலைகள் மற்றும் பாதுகாப்பான தாயகம் திரும்பும் பயணம் அமையட்டும்” என கப்பல் கட்டளை அதிகாரிக்கும் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இலங்கைக் கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கடந்த 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், நேற்று வெள்ளிக்கிழமை ( 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். அதன்படி, அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கு பாரம்பரிய கடற்படை மரியாதை அளிக்கப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கும் அட்மிரல் ஸ்டீவ் கேலருக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து மூலோபாய அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல்சார் மண்டலத்தை உறுதி செய்வதற்கான இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் தயார்நிலை குறித்தும், கடலின் சட்டபூர்வ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு குறித்தும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதிக்கு விளக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் கடற்படை தலைமை அதிகாரி உட்பட கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன. https://www.virakesari.lk/article/239229
1 week 2 days ago
இது போன்ற ஒரு மது வாடைகூட இல்லாத ஒழுக்கமான மாநாட்டை இந்திய வரலாற்றில் இதுவரை எங்கேயும் நடந்ததில்லை . நடக்க போறதும் இல்லை..நாம் தமிழர். -செல்வம்.-
1 week 2 days ago
இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣. @கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்......... கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.
1 week 2 days ago
புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது! Feb 21, 2026 - 08:51 PM புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlwfhu1d000r356pfkjmlmwo
1 week 2 days ago
மழை தொடர்ந்து பெய்யுது போட்டி நடக்க வாய்ப்பில்லை................முக்கியமான விளையாட்டில் மழை..............................
1 week 2 days ago
போட்டி நடக்காது. கடையை பூட்டுங்கோ.
1 week 2 days ago
சில நாட்களுக்கு முன் டி.ராஜேந்தர் பேசிய ஒரு காணொலி வைரலாயிட்டு இருந்துச்சு. அதில அவர் விரக்தியான புன்னகையுடன் கூறியது... “என்னுடைய மியூசிக்ல உயிருள்ளவரை உஷா படத்தில் வந்த பாடல்களை ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்துக்கு ராயல்டி பேஸிஸ்ல கொடுத்தோம். இது வரைக்கும் சிங்கிள் பைசா எனக்கு கொடுக்கல. இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கறை காத்தே நில்லு பாடல்கள் எல்லாம் எவ்வளவு வியூவ்ஸ் வந்து நிறைய காசு பார்த்திருப்பாங்க. இந்த ராயல்டி வருமானத்தை ஏ.வி.எம் எங்களுக்கு எதுவுமே கொடுக்காம வேற யாருக்கோ வித்துட்டாங்க. இப்ப நான் உயிருள்ளவரை உஷா பட பாடல்களை என்னுடைய யூ டியூபில் அப்லோட் பண்ணினால் காப்பிரைட்னு வருது. இப்ப தான் எனக்கு ஒரு உணர்வு வருது. என்னுடைய பாடல்களின் காப்பிரைட்டை நான் எப்படி காப்பாத்தி வெக்கணும்னு” ஒரு இசையை படைத்த ஒரு படைப்பாளிக்கே அந்த பாடலை பயன்படுத்த உரிமை இல்லையாம்... ஆனால் இடைத்தரகராக அதை வாங்கி இன்னொருவருக்கு வித்தவர் அவரும் சம்பாரிச்சு அதை வாங்கிய கார்பரேட் நிறுவனமும் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை... இது தான் சமீபத்திய சரிகம நிறுவனம் பற்றிய சம்பவமும்... ஒரு விவசாயி தன்னுடைய விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்பதற்கும், அதையே கார்பரேட் கம்பெனிகள் விற்பதற்கும் உண்டான வித்தியாச அளவுகோல் தான் இந்த சம்பவத்தின் விபரீதமான எதிரொலி. இசைஞானி மட்டும் தன்னுடைய பாடல்களுக்கு காசு வாங்குவதாகவும், அதை கார்பரேட் கம்பெனிகள் என்னமோ சும்மா தூக்கி இலவசமாக மக்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியும் பேசறாங்க... இதில வேற காப்பிரைட்டுக்கும் ராயல்டிக்கும் உண்டான வித்தியாசம் கூட தெரியாம கம்பு சுத்தறது தான் காலத்தின் கொடுமைன்னு சொல்லனும்.... அதாகப்பட்டது பார்த்தீங்கன்னா, 134 படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு இசைஞானி உரிமை கோரவோ அல்லது நியாயமான பணத்தை கேட்கவோ வாங்கவோ முடியாது.. ஆனால் அந்த 134 படங்களுக்குமான காப்பிரைட் வாயிலாக கார்பரேட் நிறுவனம் மக்களிடம் யூடியூப் உள்ளிட்டவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராளிகள் கம்பு சுத்தவோ அல்லது அட்டகத்தியை வெச்சிகிட்டு ஆட்டவோ முடியாது... காரணம் கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இசைஞானி போல் ஏமாளிகள் அல்ல... அவர்களது நோக்கங்கள் முழுக்க வணிகமும் பணமும் தானே தவிர கலையோ கலாச்சார முன்னெடுப்போ அல்ல என்பதை புரிந்து கொண்டால் நலம்.... இதில ஒரு சேனல்காரர் கொடுத்த தலைப்பை பார்த்தவுடன் நிஜமாகவே என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது... நன்றி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு பதிவு
1 week 2 days ago
1 week 2 days ago
https://www.facebook.com/share/1CFM3Zj8aW/?mibextid=wwXIfr
Checked
Mon, 03/02/2026 - 17:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed