1 week 3 days ago
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலா தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்? ஒரு மேடையில் பேசும்போது கேள்வி கேட்க எவருமே இல்லையா?
1 week 3 days ago
புதிதாக கோயில் கட்டப்பட்டால் அதனை ஒரு அருங்காட்சியத்திற்கு போவது போல அந்த கோயிலுக்கு போக வேண்டும் என சொல்வார்கள், அந்த கோயில் எங்காவது ஒரு மூலையில் இருக்கும், அதற்கும் போகும் வழிகள் கற்களாக இருந்தாலும் அந்த கடவுளின் அருளால் வாகன சக்கரம் பழுதாவதில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களை வெளியே சொல்லும் தைரியம் இருக்காது🤣. மக்களின் நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்தவை சிலர் தம்து நம்பிக்கைக்காக பிறரின் உயிரை எடுக்கிறார்கள், சிலர் அவர்களது மூட நம்பிக்கைகளை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள், தமக்கு உவப்பான விடயங்களாக அல்லது தாம் சார்ந்த விடயங்களை கண்ணை மூடி நம்புபவர்கள் அதே நேரம் மற்ற விடயங்களில் கேள்வி கேட்டு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இங்கு படித்தவர்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தமளிக்கும் விட்யமாக இருக்கின்றது, சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய படித்தவர்கள்தான் அதிகளவில் சமூக அடக்குமுறைகளில் பலவழிகளில் பங்களிக்கிறார்கள்.
1 week 3 days ago
திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?
1 week 3 days ago
இந்த உலகம் வேறொரு ஒருங்கிணைப்பிற்குள் ஒன்று சேரவேண்டிய காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இன்றைய உலக நியதிகளுக்குள்..... ஐநா சாதித்ததென்ன? அவர்களது இதர அமைப்புகள் சாதித்தது என்ன? பல மனித/ மிருக நலன்புரி இயக்கங்கள் கூட இதுவரை எதையுமே சாதித்து காட்டவில்லை.
1 week 3 days ago
சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....
1 week 3 days ago
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க் கேடரினா டிஷ்செங்கோ — சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2025, 22:01 32645 அலாஸ்காவில் விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அலாஸ்கா சந்திப்பு மற்றும் கிழக்கு உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்த பிறகு, ரஷ்ய ஆட்சியாளர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி துறை மற்றும் பிற உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் உட்பட இராணுவ விரிவாக்கத்தைத் தொடர முடிவு செய்தார். மூலம்: ப்ளூம்பெர்க் , கிரெம்ளினுக்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி. விவரங்கள்: ஆதாரங்களின்படி, "உக்ரைனை தனது நிபந்தனைகளின் பேரில் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த இராணுவ மோதல்தான் சிறந்த வழி என்றும், டொனால்ட் டிரம்ப் கியேவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகம் செய்ய வாய்ப்பில்லை என்றும் புடின் முடிவு செய்துள்ளார்". உக்ரைனின் மின் கட்டமைப்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைக்க புடின் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தைகள், போரில் தலையிடுவதில் டிரம்ப் ஆர்வம் காட்டவில்லை என்பதை புடினை நம்ப வைத்ததாக அவர்கள் மேலும் கூறினர். ஆங்கரேஜில், கியேவ் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்களின் மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டால், தெற்கு உக்ரைனில் போர்களை நிறுத்தி முன்னணியை முடக்க புடின் முன்மொழிந்தார். உக்ரைன் அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நேட்டோவில் சேரும் இலக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர் முன்னதாகக் கோரினார். இந்த நிபந்தனைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது, மேலும் இது தனது தீவிரத்தை நியாயப்படுத்துகிறது என்று புடின் நம்புகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமானவர்கள் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தனர். உக்ரைனின் விமானப்படை கட்டளையிலிருந்து ப்ளூம்பெர்க் சேகரித்த தரவுகளின்படி, டிரம்ப் மற்றும் புடினின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் சுமார் 46% அதிகரித்துள்ளன. ப்ளூம்பெர்க்கின் மேற்கோள்: "புடின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசாவில் நடக்கும் போரை கவனித்து வருகிறார் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான இருவர் தெரிவித்தனர். காசாவில் நெதன்யாகுவின் பிரச்சாரத்தை ரஷ்யாவின் உக்ரைன் போரை விட கடுமையானதாக அவர் கருதுகிறார், மேலும் இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அரசாங்கங்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, இது மாஸ்கோ மீதான அவர்களின் விமர்சனத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்." விவரங்கள்: புடின் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார், ஆனால் தனக்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் செயல்படுவார் என்று ப்ளூம்பெர்க்கின் வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னணி: ஆகஸ்ட் 15 அன்று, டிரம்ப் மற்றும் புடின் அலாஸ்காவில் தங்கள் முதல் பேச்சுவார்த்தையை நடத்தினர் . உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து, இராஜதந்திரம் மூலம் ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, புடின் உக்ரேனிய பிராந்தியங்கள் மீது, குறிப்பாக தலைநகர் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஒரு பெரிய அளவிலான ரஷ்ய வான்வழித் தாக்குதலின் போது, ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை மீறின . உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் புடின் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் கூறினார் . செப்டம்பர் தொடக்கத்தில், ரஷ்ய-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அல்லது புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு குறித்து டிரம்ப் பெருகிய முறையில் அவநம்பிக்கையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.pravda.com.ua/eng/news/2025/09/20/7531757/ கிரெம்பிளினுக்கு நெருக்கமான ஆதாரம் எது என யாருக்காவது தெரியுமா? இந்த ஆதாரமற்ற செய்தியினை இங்கே பதிந்துள்ளேன் என என்மேல் குற்றம் சாட்டமாட்டீர்கள் என நம்புகிறேன்.🤣
1 week 3 days ago
அவர்களுக்கும் டி ஆர் பி க்கு விஜைதான் தேவைபடுகிறார் போலும் 🤣. யார் என்ன சொன்னாலும் ஈழத்தமிழர் விடயம் எப்போதும் தமிழக தேர்தல் அரசியலில் ஒரு non issue தான். 83, 2009 இல் கூட அப்படித்தான். ஆனுர ஆட்சியில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் பலருக்கு கூட இது ஒரு non issue ஆகிவிட்ட நிலையில், புலம்பெயர் திரள் நிதிக்கு ஆசைபடுபவர்கள் மட்டும்தான் புலிகள், தலைவர் என கூவி கூவி வித்து கல்லா கட்டுவார்கள். படத்துக்கு 250 கோடியை விட்டு விட்டு அரசியலுக்கு வரும் விஜைக்கு திரள்நிதி-யாசகத்தில் ஆர்வம் இல்லாதிருப்பது வியப்பல்ல.
1 week 3 days ago
அண்ணன் விஜி அண்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை போனவர், ஏன் விகடன் மேல் 1000 கோடி மானநஸ்ட வழக்கு போடவில்லை? (மானம் இருந்தால்தானே நட்டம் ஆக முடியும் என்கிறீர்களா🤣). முக முத்து இறந்தால் அவர் மகள் தேன் மொழியை அல்லவா சந்திக்க வேண்டும்? ஏன் முத்துவின் சிற்றன்னை மகன் ஸ்டாலினை இரெண்டு அரசியல் புரோக்கர்கள் சகிதம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் ஏன் திமுக மீதான விமர்சனத்தை தடாலடியாக குறைத்து, அப்படியே விஜையை பார்த்து மூர்க்கமாக குரைக்க ஆரம்பித்தார்?
1 week 3 days ago
தேசியத்தலைவர் பேரைக் கூட சொல்லத்தைரியமில்லை.இருந்தாலும் அவர் பேசியதை வரவேற்கலாம். விஜை இந்த விடயத்தைப் பேசி இருப்பதால் அது ஊடக வெளிச்சம் பெறும். காலம்கடந்தாவது ஒப்புக்கு ஒரு வரி பேசி விட்டு கடந்து போயிருக்கிறார்.இதை எல்லா அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்கள். நாளைக்கு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விகடன் வாங்கிய காசுக்கு ஒரு செய்தியை ஒரு ஓரமாகப் போட்டு விட்டு சிவனே என்று இருக்கிறது.மேற்கொண்டு அதை உறுதிப்படுத்த எந்தச் செய்தியைுயும் வெளிவிடவில்லை.சீமான் எதிர்ப்பாளர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொணடு நிற்கிறார்கள்.
1 week 3 days ago
Published By: Digital Desk 1 21 Sep, 2025 | 03:35 PM இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துநர்களாக பெண்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அந்தவகையில், அவர்களுக்கு விமானப் பணிப்பெண்களின் சீருடைக்கு போன்ற சீருடை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/225667
1 week 3 days ago
கரடிக்கு குளிர்பானம் கொடுத்த இளைஞருக்கு தண்டனை! அதிவேகத்தில் வந்த கார், நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!
1 week 3 days ago
21 Sep, 2025 | 01:39 PM யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/225662
1 week 3 days ago
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 21 Sep, 2025 | 01:39 PM தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225660
1 week 3 days ago
வடக்கன் மீடியா எல்லாம் விஜய் புலிகளுக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிவிட்டாராம்.. கதறிக்கொண்டிருக்கின்றன..
1 week 3 days ago
21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார். முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225657
1 week 3 days ago
21 Sep, 2025 | 01:36 PM ஆர்.ராம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடாபில் பரிசீலிக்க வேண்டும் என்று எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் அந்த விடயம் சம்பந்தமாக அடுத்தவாரம் இறுதி முடிவினை எடுப்போம் என்றார். முன்னதாக, எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 10ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமத்ன தனது முடிவினை அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை ஆகியவற்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அதற்கு ஆளும் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கைகளை நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம், பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த அறிக்கையை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225657
1 week 3 days ago
21 Sep, 2025 | 11:42 AM (நமது நிருபர்) நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் பிரத்தியேகமாக இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், எனக்கு மருத்துவச் சிகிச்சைகளையும் பெறவேண்டியுள்ளது. ஆகவே, தற்போதைய அரச இல்லத்தில் தங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டமை உட்பட சமகால நிலைமைகள் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1994 முதல் 2005 வரை ஆட்சி செய்த எனக்கு டொரின்டனில் அரச இல்லம் வழங்கப்பட்டது. நான் இந்த இல்லத்திற்கு வரும்போது ஒரு புல்கூட இருக்கவில்லை. நிலம் கூட நடக்க முடியாத அளவில் தான் இருந்தது. அப்பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரியபோது, அவர்கள் அதனை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். அதன்பின்னர் நான் எனது சொந்த நிதியில் இருந்து 14மில்லியன் ரூபா செலவழித்தே புனரமைப்பு பணிகளை முன்னெடுத்தேன். தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் நான் விழுந்தமையால் இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையைப் பெற்றுவருகின்றறேன். தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, இந்த இல்லத்தில் ஆயுட்காலம் வரையில் தங்கியிருப்பதற்கான அனுமதியைக்கோரி ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது ரோஸ்மீட் பிளேஸ் வீட்டை விற்ற பிறகு கொழும்பில் தனக்கு வீடு இல்லை. கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முயற்சிகளை நான் முன்னெடுத்தபோது ஜே.வி.பி-சார்ந்த ஊடக மிரட்டல்களால் அவை தடைப்பட்டன. குறிப்பாக வீட்டின் உரிமையாளர்களுடன் உரையாடி அவற்றை பெறுவதற்கான பரிவர்த்தனைகளை முன்னெடுக்க முயன்றபோது அச்செயற்பாடுகளை தடுப்பதற்காக பல்வேறு சாட்டுகள் கூறப்பட்டன. அதற்கான காரணத்தினை ஆராய்ந்தபோது, ஜே.வி.பி தங்கள் அன்பான ஊடகவியலாளர்களை நியமித்து என்னைப்பற்றி அவதூறு பேசியதாக கேள்விப்பட்டேன். இந்த நிலையில் கொழும்பில் பிரத்தியேகமாக தங்குவதற்கான சிறிய இல்லமொன்றை தற்போது பெற்றுக்கொண்டுள்ளேன். அங்கு, புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுவதால் அதுவரையில் அரச இல்லத்திலேயே தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளேன். பல நாடுகளில், இதை விட பல சலுகைகள் உள்ளன. இந்தியாவில் கூட, சிறந்த சலுகைகள் உள்ளன. ஆனால் அரசாங்கம் அதுபற்றி கவனம் செலுத்தவில்லை. எனது மகன் லண்டனில் இருந்து நாடு திரும்பியிருந்ததோடு சிறிதுகாலம் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார். அதேநேரம் ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரணைக்கு உட்படாதவொரேயொரு நபர் நான் தான். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது வெளிப்படையாகின்றது. மேலும் அரசாங்கம் நல்லாட்சியை நிலைநாட்டி முன்னெடுப்பதிலும் பார்க்கவும் ஆட்சியை விட பழிவாங்கும் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள். அவர்களுடைய சொந்த அரசாங்கத்தில் ஊழலை எவ்வாறு தடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசடி செய்பவர்களைப் கைது செய்கின்றமை பற்றி மட்டுமே அவர்கள் தொடர்ந்து கூச்சலிடுகிறார்கள். நாட்டை வளர்ப்பது பற்றி அவர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. சுகாதாரத்துறை குழப்பத்தில் உள்ளது. அவற்றை அவர்கள் கவனிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/225650
1 week 3 days ago
உடலுக்காக வாழ்வது கணையம், கல்லீரல் குறித்தெல்லாம் விவாதம் ஓடுவதால் சொல்கிறேன்: வாயைக் கட்டுப்படுத்துவதும், உடலுக்காகத் தேடித்தேடிச் சாப்பிடுவதும், அதை வலுப்படுத்த உழைப்பதும் ஒரு தனி வேலை. அதற்கு குறுக்குவழியெல்லாம் இல்லை. நல்ல உணவுகளை உண்பதை நம் கலாச்சாரம், சந்தைப் பண்பாடு, சமூகமாக்கல் நடத்தைகள் அனுமதிப்பதில்லை. அதாவது இது குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரச்சினை. லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை வலுத்து மக்களின் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டுப் பாதாளத்தில் கிடக்கிறது. ஆனால் பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் நவீன துரித உணவு நுகர்வுக் கலாச்சார சுனாமிக்குள் வந்துவிட்ட மக்களைத் தவிர பிறர் சமச்சீரான உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் நாம் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நாம் காலனிய வரலாற்றுக்குள் போனாலே பஞ்சத்திலும் பல்வேறு நோய்த்தொற்றிலும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்த சம்பங்களே கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் போனாலும் மக்கள் அதிகமாக காய்கறிகளும், புரதமும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த காலம் ஒன்று உள்ளதா, அது எப்போது எனத் தெரியவில்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகச் சான்றுகள் தொடங்கி, வேதகால, சங்க கால, ஆயுர்வேத, பௌத்தப் பிரதிகளைப் பார்க்கையில் மக்கள் சீதோஷ்ணத்துக்கும் தாம் வாழும் மண்ணுக்கும் ஏற்ற சமச்சீரான உணவுகளை உண்டு வந்தார்கள் எனத் தெரிகிறது. நமக்கு சனியன் பிடித்ததே பரங்கிகள் வந்தபோதுதான். அவர்கள் 200 ஆண்டுகள் ஆட்சியில் நம் செல்வத்தை மட்டும் சுரண்டவில்லை, நம் உணவுப் பழக்கத்தையும் மாற்றினார்கள். பணப்பயிர்களை அதிகமாக விளைவிக்க வைத்தார்கள், அதனால் உள்ளூர் பயிர்கள் அழிந்தன. வங்காளப் பஞ்சமே அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கான அரிசியை ஏற்றுமதி செய்ததால் ஏற்பட்டதுதானே. ஆனால் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் காலனியவாதிகளாக இருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாசாரம் அழியவில்லை. ஜப்பானும் பெருமளவு காலனியத்துக்கு உட்படவில்லை. நாம் ஏற்கனவே சோற்றையும் கோதுமையையும் தாம் சார்ந்திருந்தோம், பஞ்சங்கள் காரணமாக நம் மரபணுக்களும் மாறிப்போய் மாவுச்சத்து கொஞ்சம் மிகுந்தால் எடை அதிகமாகும் நிலை ஏற்பட்டது. ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் நம் உடலில் தசைகள் குறைவு என்பது ஒரு காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும் (தசைகள் குறைவான உடலுக்கு குறைவான ஆற்றலும், குறைவான சத்துணவும் போதும்.) நமக்கு நிகழ்ந்த மற்றொரு துரதிஷ்டம் 'பசுமைப் புரட்சி' - அது நம் சிறுதானியங்களையும் உள்ளூர் அரிசி வகைகளையும் அழித்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த பன்மையையும் ஒழித்து முழுமையாக மாவுச்சத்து உணவுக்கு அடிமையாக்கியது. அதை முதலாம் கட்ட மறைமுகக் காலனியவாதம் என்று சொல்லலாம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கலால் சந்தையில் வந்து குவிந்த இனிப்பும் எண்ணெய்யும் மிகுந்த துரித உணவுகளை இரண்டாம் கட்ட மறைமுக காலனியவாதம் எனக் கூறலாம். இந்தச் சூழலில் நாம் ஒழுங்காக உணவை எடுத்துக்கொள்ள தாராளமய சந்தைக்கு, மாவுச்சத்தை குறைந்த செலவில் சுவையாக உணவளிக்கும் உணவுக் கடைகளின் மலிவான மார்க்கத்துக்கு, சுவையை அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் போதையாகப் பாவிக்கும் பொதுமக்கள் பண்பாட்டுக்கு, பலவிதமான மூடநம்பிக்கைகளுக்கு (பாக்கெட்டில் கிடைப்பன, இனிப்பானவை நல்ல உணவுகள், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நிறைய சர்க்கரை சாப்பிடலாம், ஆரோக்கியமானவர்கள் குண்டாக இருப்பார்கள், நோய் வருவதைத் தவிர்க்க முடியாது) எதிராகப் போராட வேண்டும். ஒரு பண்டிகையோ, திருவிழாவோ, கொண்டாட்டமோ, சந்திப்போ இம்மாதிரி சத்தற்ற மோசமான உணவுகளை உண்ணாமல் சமூகமாக்கல் பண்ண முடியாது. முடிந்த அளவுக்கு தினசரி உணவுகளைச் சமச்சீராக வைத்துக்கொண்டு நண்பர்களுடன் உணவருந்தி சமூகமாக்கல் பண்ண பெரிதாக முயற்சி எடுக்க வேண்டும். காய்கறிகளும் புரதச்சத்து உணவுகளும் விலை அதிகம். நீங்கள் வீட்டில் சமைக்காதவர் என்றால் குப்பையைத் தான் தின்ன முடியும். நான் வீட்டில் உணவு சமைக்காத நாட்களில் என் கல்லூரி வளாகத்தில் முட்டையைத் தவிர வேறொன்றையும் தின்ன முடியாது. அதுவும் அம்முட்டையையும் ஒரே ஒரு கடையில்தான் வைத்திருப்பார்கள். கீட்டோ உணவு எடுத்துக்கொள்வோரு எதிராக 18,000 பேர்கள் இணைந்து நிற்பதாக எனக்கு அப்போது தோன்றும். ஏன் எனக்கு உள்ள கவலை இத்தனை ஆயிரம் பேர்களுக்கு இல்லை என ஆச்சரியம் ஏற்படும். நல்ல உணவு உண்டால் பல்வேறு நோய்கள், வலிகள், மனச்சோர்வு, அழுத்தம் ஏற்படாமல், பிறக்கப் போகும் குழந்தைக்கு மனநல வளர்ச்சியின்மை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாமே, அதற்காகச் செய்தாலே எவ்வளவு ஆற்றலும் பணமும் மீதமாகும் என யோசிப்பேன். ஆனால் யாருக்கும் அவகாசமோ ஆற்றலோ இல்லை. ஒரு சமூகமாகவே நாம் இன்னும் காலனிய பிரஜை மனநிலையில் இருந்து மீளவில்லை. நம் பண்பாடும் அரசியலும் கூட அதைத் தாண்டி வரவில்லை. நமது பொருளாதார வளர்ச்சி கூட நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அடிப்படை உரிமை எனக் கருதும் நிலைக்குத் தள்ளவில்லை. பஞ்சம் வந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதுக்குள், அரசின் மூளைக்குள் எங்கோ பதுங்கி இருக்கிறது. குடித்து அழிவதை விட நம் மக்கள் மோசமாக உண்டு அழிவதே இன்றுப் பரவலாக உள்ளது. இதையெல்லாம் சொல்ல எனக்கு ஒரு தகுதி உள்ளது - நான் 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளி. எனக்கு இதுவரையில் கண், சிறுநீரகம், தீராப் பசி, ஆற்றலின்மை, ஆறாத காயத்தால் உடல் உறுப்பு துண்டிப்பு என எப்பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளக எனக்கு சளி கூட வருவதில்லை. என்னைச் சுற்றி நீரிழிவே இல்லாத, பார்க்க பார்க்க ஒல்லியாக உள்ளவர்களுக்கு வரும் நோய்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் இவ்வியாதிகளைத் தம் விதியென்று ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவர்களுக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் தான் - நான் வாயைச் சுலபமாகக் கட்டுப்படுத்துகிறேன், வாரத்திற்கு மூன்று நாட்களாவது விரதம் இருக்கிறேன், நல்ல உணவுகளைத் தேடித்தேடி உண்கிறேன். இளவயதிலேயே நீரிழிவு வந்ததால்தான் நான் சுயமுயற்சியில் இதையெல்லாம் பரிசோதனைச் செய்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். நீரிழிவு அதனால் ஒரு வரமாக அமைந்துவிட்டது. எனக்கு 40-50 வயதுக்கு மேல் நீரிழிவு வந்திருந்தால் அதற்குப் பழகுவது கடினமாக இருந்திருக்கும் - என் உடல் நிலையும் அதற்கு முன் மோசமாக வீழ்ந்திருக்கும். எனக்கு என் நோயின் நிலையை, அறிவியலைப் புரிந்துகொள்ளவே பத்தாண்டுகளுக்குமேல் பிடித்தது. ஆனால் புரிந்துகொண்ட பின்னர் நான் உணவுதான் மருந்து எனக் கண்டுபிடித்தேன். நீரிழிவு நோய் அல்ல, அது ஒரு அறிகுறி எனப் புரிந்துகொண்டேன். மருத்துவர்களல் நம்மைக் காப்பாற்ற முடியாது (அவர்கள் மருந்து கம்பனிகளின் மறைமுக முகவர்கள் என்பதால்) எனத் தெரிந்துகொண்டேன். உடல் என்பது நான் அல்ல, பல கோடி அணுக்களின், குடல் நுண்ணுயிர்களின் கூட்டமைவு. உடல் என்பது ஒரு ஒப்பந்தம். ஒவ்வொரு அணுவும் எனக்காகப் பணியாற்றும்போது நான் அவற்றுக்காகவும் வேலை செய்வேன். இவ்வுடல் அவ்விதத்தில் ஒரு சிறு வனமும்தான். ஒவ்வொரு உயிரும் அங்கு முக்கிய பங்காற்றும். சூழலை நாம் கெடுத்தால் அந்த உயிரினங்கள் அழிந்து சமநிலைக் குலைந்து வனமே அழிவதைப் போலத்தான் நமக்கு நோய்கள் வந்து உடல் அழிகிறது. உடல் அழிவதானது அணுக்களும் நுண்ணுயிர்களும் கடுமையான் அழுத்தத்துக்கு உள்ளாகி துன்புற்று தம்மை அழிப்பதாகும். அவற்றுக்காக உழைக்கவும் முயற்சி செய்யவும் நான் போராடுவதே இவ்வாழ்க்கை. சமூகத்துக்காகவும் பிறருக்காகவும் இலக்கியத்துக்காகவும் தியாகம் செய்வது இரண்டாம் பட்சமே. ஏனென்றால் அவர்களும் எனக்காக வாழவில்லை. - தம்மை உருவாக்கியுள்ள எண்ணற்ற அணுக்களுக்காகவும் நுண்ணுயிர்களுக்காகவுமே வாழ்கிறார்கள். நாம் இரண்டு கால்கள் முளைத்த பல நூறு கோடி குட்டி வனங்கள். நமக்கு வெளியே உள்ள பல்வேறு உயிரினங்களும் கூட அப்படியே வாழ்கின்றன. கணையமும் கல்லீரலும் கூட நமக்கு அந்நியமான தனி உயிர்களே. அவை நமக்காகப் பணியாற்றுவதும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே - அவற்றை நாம் துன்புறுத்தினால் நீயும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் என அவை தற்கொலை பண்ணிக்கொள்ளும் (apoptosis). நாம் ஒரு உடலுடன் பிறந்திருக்கிறோம், உடல் நமக்கான கருவி என்று நினைப்பது ஒரு அபத்தம் - நாம் எண்ணற்ற உயிர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பேரணி நிர்வாகிகள், தொழிற்சாலை மேலாளர்கள் என்று சொல்லலாம். உணவுக்காக அவை நம்மைச் சார்ந்துள்ளன. சரியாக உணவளிக்காவிடில் அவை தர்கொலை பண்ணவோ அழிந்து வீணாகவோ கூடும். நாம் நமக்காக, நம் இன்பத்துக்காக வாழவில்லை - நம் பிரக்ஞையும் இன்பங்களும் கூட நுண்ணுயிர்களும் அணுக்களும் சேர்ந்து ஏற்படுத்தும் தோற்றங்களே. 'நாம்' ஒன்றுமே இல்லை, மனித நிலை, மனித உயிர் என ஒன்றுமில்லை. அணுக்களும் நுண்ணுயிர்களுமே நம் கடவுள் என ஏற்றுக்கொண்டாலே பல பிரச்சினைகள் சரியாகிவிடும். Posted 17 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_20.html
1 week 3 days ago
Published By: Vishnu 21 Sep, 2025 | 06:57 PM இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்நாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வன் டெக்ஸ்ட் இன்னிஷியேற்றிவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (21) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடமாகாண சபையில் கடந்தகால அனுபவங்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தலை வலியுறுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இந்தக்கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா, அமைச்சர்களான குருகுலராஜா, கலாநிதி.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான சபா.குகதாஸ், கேசவன் சயந்தன், கஜதீபன், ஆர்னோல்ட், சுகிர்தன், தவநாதன், கமலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற கடந்த காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராயும் சந்திப்பு ஆக்கபூர்வமானமாக இருந்தது. இதன்போது முக்கிய விடயமாக மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபையை வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்கான ஏதுநிலைகளை குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன. அந்தவகையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியாகிய நாங்கள், தமிழ் மக்களுக்கு கிடைத்த இரண்டாவது அரசியல் தளமாகவே மாகாண சபையைக் கருதுகின்றோம். அந்த வகையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார். ரெலோவின் சார்பில் கருத்து வெளியிட்ட சபா குகதாஸ் தெரிவிக்கையில், தற்போதைய ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே பார்க்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு முழுமையாக எதிரானதாகவே இருந்தது. குறிப்பாக கொள்கை ரீதியாக எதிராகவே செயற்பட்டது. அவ்வாறான நிலையில் தற்போது எல்லை மீள்நிர்ணயத்தினை காரணம் காண்பித்து தேர்தலை தாமதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தையும் கையிலெடுத்து காலத்தை தாழ்த்துவதையே இலக்காகக் கொண்டு வருகின்றார்கள். புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதென்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே தான் பழைய முறையில் தேர்தலை நடத்த்துவதே இலகுவானது. அதற்கான தனிநபர் பிரேரணை சமர்பிப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதியான தவநான் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கோரிக்கையின் முழுமையான வடிவமாக இல்லாது விட்டாலும் மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது கட்சி, மாகாண சபை முறைமையை தொடர்ச்சியாக வலியுத்தி வருகின்றவொரு தரப்பாகவே உள்ளது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தலை தாமமின்றி நடத்த வேண்டும். அதில் அக்கறை காட்டாது இருக்க முடியாது என்றார். புளொட் சார்பில் கலந்து கொண்ட கஜதீபன் தெரிவிக்கையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை சமஷ்டி முறைமையில் கோரி வருகின்றார்கள். அவர்கள் மாகாண சபை முறைமையை தமக்கான தீர்வாக கருதவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய இனத்தின் தீர்வான மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், முதற்கட்டமாக அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு செயற்பாட்டு தளமாக இருப்பது மாகாண சபை முறைமைதான். ஆகவே மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பில் கலந்து கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமையானது, அவர்களது இருப்புடன் தொடர்புடைய விடயமாகும். ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அவ்விதமான நிலைமைகள் இல்லாது இருக்கலாம். அநுர அரசங்கம் தேர்தலை நடத்த விரும்மாவிட்டால் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகம் என்று எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசாங்கமும் மாகாண சபை முறைமையையே ஐ.நாவில் வலியுறுத்துகின்றது. குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்விடயம் தற்போது சர்வதேச தளத்தில் எழுந்துள்ள குரலாகவே இருக்கின்றது. அதனால் மகாணசபை முறைமை நீக்கப்படாது இருப்ப அவசியமாகும். மேலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் ஊடாக,மாகாண சபை முறைமை நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் நிலைமையையே உருவாக்கும். அதனால் மாகணசபை முறைமையை நீக்க அரசு முயலாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார். https://www.virakesari.lk/article/225686
1 week 3 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார். புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68. மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் நயெஃப்-ஐ புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார். தனது 29 வயது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்தார். அதுவரை, முகமது பின் சல்மானின் (MBS) பெயர் செளதி அரேபியாவின் அரசியலில் ஒலித்ததில்லை. அமெரிக்க நிர்வாகத்தினருக்கு நயெஃப் பிடித்தமானவராக இருந்தார். அவர் எஃப்.பி.ஐ.யில் பாதுகாப்பு குறித்த படிப்பை படித்தவர். ஸ்காட்லாந்து யார்டில் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் பயிற்சியும் பெற்றவர். 2009-ஆம் ஆண்டில், இளவரசர் நயெஃப்பைக் கொல்ல தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சி நடந்தது, இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம், AP படக்குறிப்பு, முகமது பின் நயெஃப் செளதி மன்னரின் 'கேட் கீப்பர்' ஆக மாறிய சல்மான் "அவர் பாதுகாப்பு அமைச்சராகவும், மன்னரின் அரச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் ஆனவுடன், தனது பதவியைப் பயன்படுத்தி மன்னரின் வாயில் காவலராக மாறத் தொடங்கினார்" என்று டேவிட் ஒட்டாவே தனது 'முகமது பின் சல்மான், தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முகமது பின் சல்மான் சுருக்கமாக எம்.பி.எஸ். (MBS) என்று அறியப்படுகிறார். "பல்வேறு காரணங்களுக்காக, எம்.பி.எஸ். தனது தந்தையை குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தினார். மன்னர் சல்மான் தனது மனைவியையும், எம்.பி.எஸ்.-இன் தாயாரையும் சந்திப்பதற்குக்கூட தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது." "தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார், இந்த விஷயத்தைப் பற்றி அவர் தனது தந்தையிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தாயைப் பற்றி, தனது தந்தையும் மன்னருமான முகமது பின் நயெஃப் கேட்கும்போதெல்லாம், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாகக் கூறுவார்." பட மூலாதாரம், Lynne Rienner Publishers Inc படக்குறிப்பு, தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா புத்தகம் ஏமன் மீதான தாக்குதல் நயெஃப் பட்டத்து இளவரசரான இரண்டு நாட்களுக்குள் அதாவது 2015 ஏப்ரல் 29 அன்று, எம்.பி.எஸ்.-இன் தந்தையான மன்னர் சல்மான், நயெஃபின் அவையைத் தனது அரசவையுடன் இணைத்தார், இதனால் நயெஃபின் அனைத்து அதிகாரங்களும் முடிவுக்கு வந்தன. இந்தக் காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சராக தனது தளத்தை எம்.பி.எஸ். தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தார். ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க மார்ச் 26-ஆம் தேதி அவரது மேற்பார்வையின் கீழ் செளதி அரேபிய விமானப்படை அண்டை நாடான ஏமன் மீது தாக்குதலைத் தொடங்கியது. "முதலில், செளதி அரேபிய மக்கள் இந்தத் தாக்குதலை பாராட்டினார்கள், இரானின் விரிவாக்கத்தை எதிர்க்கும் துணிச்சலை தங்கள் நாடு இறுதியாகக் காட்டிவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் எம்.பி.எஸ்.-க்கு மாபெரும் பிரச்னையாக மாறியது. இந்தத் தாக்குதலை, அவரது வெளியுறவுக் கொள்கையில் ஒரு பொறுப்பற்ற தன்மையாக சர்வதேச சமூகம் கண்டது." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2015ல் மன்னர் சல்மான், நயெஃபின் அரசவையைத் தனது அரசவையுடன் இணைத்தார். காவலில் வைக்கப்பட்ட நயெஃப் இதற்கிடையில், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசரான நயெஃப்பை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக தனது மகன் எம்.பி.எஸ்.-க்கு அந்தப் பதவியைத் தர முடிவு செய்துவிட்டார். 2015 ஜூன் 20-ஆம் நாள் இரவு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர். அன்று இரவு, நயெஃப் தலைமையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகார கவுன்சில் கூடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பு, நயெஃப்-ஐ சந்திக்க விரும்புவதாக மன்னர் சல்மானிடம் இருந்து செய்தி வந்தது. உடனே நயெஃப் தனது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன், ஹெலிகாப்டரில் சஃபா அரண்மனைக்கு கிளம்பிச் சென்றார். 'தி ரைஸ் டு பவர், முகமது பின் சல்மான்' என்ற தனது புத்தகத்தில் பென் ஹப்பார்ட் இவ்வாறு எழுதியுள்ளார்: "நயெஃப்பும் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களும் மன்னரைச் சந்திக்க லிஃப்டில் ஏறினார்கள். முதல் மாடிக்கு சென்றதும், மன்னரின் வீரர்கள் நயெஃப்பின் மெய்க்காப்பாளர்களின் ஆயுதங்கள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துச் சென்றனர்." "அருகிலுள்ள அறை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நயெஃப் வெளியேற அனுமதிக்கப்படவில்லை, பட்டத்து இளவரசர் பதவியை ராஜினாமா செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நயெஃப் இணங்கவில்லை." பட மூலாதாரம், William Collins படக்குறிப்பு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர். ராஜினாமா செய்த நயெஃப் நயெஃப் வீட்டுக் காவலில் இருந்த அதே இரவில், ராயல் கவுன்சில் உறுப்பினர்களை அழைத்த அரசவை உயர் அதிகாரிகள், எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு அவர்கள் உடன்படுகிறார்களா என்று தொலைபேசியில் கேட்டனர். கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு, நயெஃப்புக்கு போட்டுக் காட்டப்பட்டன. இதன் மூலம் அரசரின் முடிவை அவரது உறவினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்தனர் என்பது தெரியவந்தது. "அன்றிரவு, நயெஃபுக்கு உணவு மற்றும் நீரிழிவு மருந்துகள் மறுக்கப்பட்டன. மிகவும் சோர்வடைந்திருந்த அவர், ராஜினாமா ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் காலையில், மன்னர் சல்மான் இருந்த பக்கத்து அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கேமராக்கள் நிறைந்திருந்தன" என்று பென் ஹப்பார்ட் எழுதுகிறார். "நயெஃப்-ஐ அன்புடன் வரவேற்ற மன்னர், அவரது கையில் முத்தமிட்டார். நயெஃப் தாழ்ந்த குரலில் மன்னரிடம் தனது ஒப்புதலை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் வீடியோ செளதி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அரசருடனான சந்திப்பிற்குப் பின் அறையை விட்டு வெளியேறிய நயெஃப், தனது மெய்க்காப்பாளர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு அங்கிருந்து ஜெட்டாவில் உள்ள தனது அரண்மனைக்கு வந்த அவர், மன்னருக்கு விசுவாசமான காவலர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் ஆதரவு தெரிவித்தனர். அமைதி காத்த நயெஃப் இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குப் பதிலளித்த அரசவை செய்தித் தொடர்பாளர், அன்றிரவு நடந்தது என்ன என்பது குறித்து வேறொன்றை சொன்னார். நாட்டின் நலனுக்காக நயெஃப்-ஐ கவுன்சில் நீக்கியது என்றும், அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் ரகசியமானவை என்பதால் அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதுமே அவர் சொன்ன விளக்கம். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத செளதி வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் பேசியபோது, மார்ஃபின் மற்றும் கோகைனுக்கு நயெஃப் அடிமையாகிவிட்டதால், அவரைப் பதவிநீக்கம் செய்ய மன்னர் முடிவு செய்ததாகத் தெரிவித்தது. அந்த ஆண்டின் இறுதியில் நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவர் தனது சிகிச்சை குறித்து ஒருபோதும் பகிரங்கமாகப் பேசியதில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. முகமது பின் சல்மானின் அரசியல் ஆளுமை 1985 ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறந்த முகமது பின் சல்மான் எனும் எம்.பி.எஸ்., ஆறடி உயரம் கொண்டவர். செளதி அரேபியாவின் எல்லா இடங்களிலும் அவர் இருக்கும் சுவரொட்டிகளை காணமுடியும். அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர். ரியாத்தில் உள்ள அரசு மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற அவர், செளதி ராணுவம் அல்லது விமானப்படையில் உறுப்பினராக இருந்ததில்லை. அவரது ஆங்கில ஆசிரியர்களில் ஒருவரான ரஷீத் செகாயிடம் பிபிசி பேசியபோது, "எம்.பி.எஸ். சிறுவயதில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். ஆங்கிலம் படிப்பதை விட, அரச மெய்க்காப்பாளர்களுடன் வாக்கி-டாக்கியில் பேசுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது" என்று கூறினார். 2007-ஆம் ஆண்டில் எம்.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு சாரா பிந்த் மஷூர் என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர். பாரம்பரிய பியானோ இசையின் ரசிகர் அமெரிக்காவிற்கு எம்.பி.எஸ். அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் வீட்டிற்கு இரவு விருந்துக்குச் சென்றிருந்தார். அது குறித்து பென் ஹப்பார்ட் தனது 'MBS: The Rise to Power of Mohamed bin Salman' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "எம்.பி.எஸ். மாலை நேரத்தில் கெர்ரியின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பியானோவின் மீது அவரது பார்வை சென்றது." "அதைக் கண்ட கெர்ரி, 'உங்களுக்கு பியானோ வாசிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். உடனே எம்.பி.எஸ். பியானோவில் ஒரு பாரம்பரிய பாடலை வாசித்தபோது, அறையில் இருந்த அனைவருக்கும் வியப்பு மேலிட்டது. வஹாபிகளுக்கு இசையின் மீது வெறுப்பு இருந்ததால், எம்.பி.எஸ். பியானோ வாசிப்பார் என்று கெர்ரி சற்றும் எதிர்பார்க்கவில்லை." நீதிபதியின் மேசையில் வைக்கப்பட்ட துப்பாக்கி ஆரம்பத்திலிருந்தே, முதலீடுகள் மூலம் தனது பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புவதில் இளவரசர் சல்மான் முனைப்புடன் இருந்தார். செளதி அரேபியாவின் வரலாற்றை கூர்மையாகக் கவனிக்கும் ரிச்சர்ட் லேசி, "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராவதற்கு முன்பு, அவரது தந்தை, ரியாத்தில் உள்ள மதிப்புமிக்க நிலம் ஒன்றை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், நிலத்தின் உரிமையாளருக்கு அதை விற்க விருப்பமில்லை" என்று குறிப்பிடுகிறார். "நில உரிமையாளருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நீதிபதி ஒருவரிடம் சல்மான் கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே, நீதிபதியின் மேசையில் துப்பாக்கித் தோட்டாவை வைத்த எம்.பி.எஸ்., தனது பேச்சைக் கேட்கவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என நீதிபதிக்கு சமிக்ஞை காட்டினார்." எம்.பி.எஸ்.-இன் இந்த நடத்தை குறித்து மன்னர் அப்துல்லாவிடம் நீதிபதி புகார் செய்தார். முகமது பின் சல்மான் இதனை ஒருபோதும் மறுக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு எம்.பி.எஸ்.-இன் தந்தையை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தபோது மன்னர் அப்துல்லா அவரிடம் வைத்த நிபந்தனை என்ன தெரியுமா? அவரது மகன் எம்.பி.எஸ். ஒருபோதும் அமைச்சகத்தில் நுழையக்கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும். பட மூலாதாரம், Erin A. Kirk-Cuomo படக்குறிப்பு, சல்மான் பின் அப்துல்அஜிஸ் (கோப்புப்படம்) பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை 79 வயதில் செளதி அரேபியாவின் மன்னராக இளவரசர் சல்மானின் தந்தை பதவியேற்றபோது, அவர் அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. தனது தந்தை மன்னராக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அதிகாரத்தை அவர் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். செளதி அரேபியாவின் இளம் தலைமுறையினரையும், பெண்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்ட எம்.பி.எஸ். பாடுபட்டு வருகிறார். 2018-ஆம் ஆண்டில், பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்திய அவர், பொது இடங்களில் பெண்கள் 'அபாயா' அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தார். அதே ஆண்டில், பெண்களுக்கும் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்களின் துணையின்றி வேலைக்குச் செல்வதும், தனியாக ஷாப்பிங் செல்வதும் பெண்களுக்குச் சாத்தியமானது. மார்க் தாம்சன் தனது 'Being Young, Male and Saudi' என்ற புத்தகத்தில் இந்த அனுமதியை இவ்வாறு குறிப்பிடுகிறார். "தாராளமயமாக்கலை நோக்கிய இந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்ல, பொருளாதார காரணங்களுக்காகவும் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்கள் வேலை செய்யவும், தாங்கள் சம்பாதித்தப் பணத்தை ஆண்களின் அனுமதியின்றி செலவிடுவதற்காகவுமே செய்யப்பட்டன." பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு சௌதி பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட்டனர். முடிவுக்கு வந்த 'ஷௌரா' செளதி அரேபியாவை கண்காணிக்கும் நிபுணர்கள், 'ஷௌரா' மற்றும் மூத்த இளவரசர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவுகளை எடுக்கும் மரபை எம்.பி.எஸ். கைவிட்டுவிட்டதாக நம்புகின்றனர். அவர் தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்வதற்காக, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். தனது முடிவுகளுக்கும் அரசியலுக்கும் எதிரான எந்தவொரு எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். "செளதி அரச குடும்பத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் 'ஷௌரா'வின் கருத்துகளை முழுமையாக புறக்கணிப்பதாகும்" என 1990 வளைகுடாப் போரின் போது செளதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய சாஸ் ஃப்ரீமேன் நம்புகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்ள முயலும் எம்.பி.எஸ். விலையுயர்ந்த பொருட்கள் மீது விருப்பம் பட்டத்து இளவரசராவதற்கு முன்பே, ஆடம்பரப் பிரியராகப் பிரபலமானவர் எம்.பி.எஸ். ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, 500 மில்லியன் டாலருக்கு 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார். 2017 நவம்பர் மாதத்தில், லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியமான 'சால்வேட்டர் முண்டி'யை வாங்க 450 மில்லியன் டாலர்களை செலவிட்டார் முகமது பின் சல்மான். விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, அந்த ஓவியத்தை அபுதாபியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஓவியத்தை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அது அவரது பிரபலமான சிரீன் படகில் அலங்காரமாக தொங்க விடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 500 மில்லியன் டாலர் செலவில் 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார் எம்.பி.எஸ். தொடர் கைதுகள் செளதி அரேபியாவில் குறைந்தது பத்தாயிரம் இளவரசர்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதில் சுமார் 100 பேர் மட்டுமே அரசியல் ரீதியாக தீவிரமாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகையை அரசு வழங்கிவருகிறது. குறைந்தபட்ச உதவித்தொகை $800 என்றால், அதிகபட்சம் $270,000 கொடுக்கப்படுகிறது. எம்.பி.எஸ். பட்டத்து இளவரசரானதும், இந்த உதவித்தொகைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. 2017 நவம்பர் 4-ஆம் தேதி பொது நிதியை மோசடி செய்தக் குற்றச்சாட்டில், இளவரசர்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என 380 பேர் கைது செய்யப்பட்டனர். "கைது செய்யப்பட்ட 380 பேரில் குறைந்தது 11 இளவரசர்களும் அடங்குவர். பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் அடெல் ஃபகிஹ் மற்றும் நிதி அமைச்சர் இப்ராஹிம் அப்துல் அஜீஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்" என்று பென் ஹப்பார்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "கைது செய்யப்பட்ட அனைவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன, அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ரிட்ஸ் கார்ல்டன்-க்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஊழல் மூலம் அவர்கள் சம்பாதித்ததாகக் கூறப்பட்ட பணத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். மொத்தம் ஒரு பில்லியன் டாலர் தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது." பட மூலாதாரம், AFP படக்குறிப்பு, முகமது பின் சல்மான் உடன் சாத் அல் ஹரிரி செளதி அரேபியாவில் ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் செளதி அரேபியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். காவலில் வைத்தபோது, மிகப் பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. "எம்.பி.எஸ்.-ஐ சந்திக்க வாகனங்கள் புடைசூழ லெபனான் பிரதமர் ஹரிரி வந்தார். அவர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருடன் வாகனங்களில் வந்தவர்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். லெபனான் பிரதமர் ஹரிரி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாக கூறப்பட்டது" என பென் ஹப்பார்ட் எழுதுகிறார். "லெபனான் நாட்டுக் கொடியின் அருகில் நின்றுக் கொண்டு, லெபனான் பிரதமர் ஹரிரி தனது ராஜினாமா அறிக்கையை வாசித்ததை தொலைக்காட்சி மூலம் உலகமே பார்த்தது. தனது ராஜினாமா, லெபனானை வலிமையாகவும் சுதந்திரமாகவும் மாற்றும் என்று ஹரிரி கூறிய போதிலும், ராஜினாமா அறிக்கையை வாசிக்கும்போது, அவர் பல முறை இடைநிறுத்தினார், அதுவே, அந்த அறிக்கையை அவர் சுயமாக எழுதவில்லை என்பதைக் காட்டுவதாக இருந்தது. ராஜினாமா செய்ய விரும்பியிருந்தால், ஹரிரி அதை ஏன் வெளிநாட்டு மண்ணில் அறிவிக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுந்தன." இந்த ராஜினாமா விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனையாக, சில நாட்களுக்குப் பிறகு நாட்டிற்குத் திரும்பிய லெபனான் பிரதமர், தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த விசித்திரமான சம்பவத்தைச் சுற்றியுள்ள மர்மமுடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். கைது செய்தபோது, மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் "செளதி அரசாங்கம் 2,305 பேரை ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைத்துள்ளது, அவர்களில் 251 பேர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர், ஒரு முறை கூட அவர்கள் நீதிபதி முன் நிறுத்தப்படவில்லை" என்று 2018, மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. செளதி அரேபியாவில் 26 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது சீனா மற்றும் துருக்கிக்குப் பிறகு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானது என்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டில், செளதி குடிமக்களில் ஆயிரம் பேருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது. ஜமால் கஷோகி படுகொலை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜமால் கஷோகி எம்.பி.எஸ்.-ன் விமர்சகர்களில் ஒருவரான ஜமால் கஷோகி கொல்லப்பட்டபோது எம்.பி.எஸ். அதிக விமர்சனங்களை எதிர்கொண்டார். கஷோகி, அரபு செய்திகள் மற்றும் அல்-வதன் போன்ற செய்தித்தாள்களின் ஆசிரியராக இருந்தார். இந்தக் கொலையில் எம்.பி.எஸ்.-க்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்ட போதிலும், எம்.பி.எஸ் அதனை தொடர்ந்து மறுத்தார். டேவிட் ஒட்டவே இவ்வாறு எழுதுகிறார்: "இந்தப் படுகொலை எம்.பி.எஸ்.-இன் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளின் மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, கொலைக்கு உத்தரவிட்டது எம்.பி.எஸ் தான் என சி.ஐ.ஏ. முடிவு செய்தது." "செளதி அரேபியாவுக்குத் திரும்பவில்லை என்றால் கஷோகிக்கு எதிராக தோட்டாக்களைப் பயன்படுத்தப் போவதாக எம்.பி.எஸ். ஒருமுறை பேசியிருந்தார். அந்த பழைய பதிவை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி கண்டுபிடித்தது." படுகொலைக்கு பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் 2019 செப்டம்பர் 30-ஆம் தேதி, சிபிஎஸ் (CBS) ஊடக்த்திற்கு எம்.பி.எஸ். பேட்டி அளித்தபோது, தொகுப்பாளர் நோரா டோனல் அவரிடம் கஷோகியின் கொலை பற்றிய கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டார். "கஷோகியைக் கொல்ல நீங்கள் உத்தரவிட்டீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.பி.எஸ்., "இல்லவே இல்லை, இது மிகவும் கொடூரமான குற்றம். ஆனால் செளதி அரேபியாவின் தலைவராக, நான் இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், ஏனெனில், இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் செளதி அரசாங்கத்திற்காக வேலை செய்ததால் முழுப் பொறுப்பேற்கிறேன்" என்று கூறினார். 2019 டிசம்பர் மாதத்தில் கஷோகி கொலைக்காக செளதி நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி கஷோகியின் மகன் சலே கஷோகி, தனது தந்தையைக் கொன்ற கொலையாளிகளை தான் மன்னித்துவிட்டதாக சொன்னபோது உலகமே வியப்பில் ஆழ்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce844d8587lo
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed