புதிய பதிவுகள்2

ஒரு கட்சி ஆட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி; அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

1 week 2 days ago
Published By: Vishnu 22 Sep, 2025 | 05:11 AM அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை,கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். தற்போது சுயாதீன சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் கூட அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன. சகல கட்சிகளினது உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இதில் வேலை செய்தனர். இன்று சிவில் பாதுகாப்பு குழுவிற்கான நியமனப் பட்டியல்களை ஜேவிபி எம்.பி.க்களே நியமிக்கின்றனர். கிராமத்தில் நல்லதொரு அமைப்பு இருந்தால் இதுபோன்ற நியாயமற்ற நியமனங்களைத் தடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இடத்தில் அரசாங்கத்தின் சூட்சும முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/225700

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 week 2 days ago
இந்தியா மீண்டும் வெற்றி: விவாதத்தை கிளப்பிய 'கன்ஷாட்' - தோற்ற பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 22 செப்டெம்பர் 2025, 01:39 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று இந்த தொடரின் முன்னணி அணியாக திகழ்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் பலவீனமாக உள்ள சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியது. கைகுலுக்குவதை மீண்டும் தவிர்த்த சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை போலவே, நேற்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார். ஆட்டத்துக்கு முந்தைய நாள், துபையில் ஈரப்பதம், பனிப்பொழிவு நிலவியதால், பந்துவீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார். முன்னதாக, துபையில் பனிப்பொழிவு (dew) ஒரு பிரச்னை அல்ல என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறைவான வேகம் கொண்ட மைதானம் என்பதால், குல்தீப்–அக்சர்–வருண் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் அடங்கிய முதன்மை அணியுடன் இந்தியா களமிறங்கியது. ஓமனுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ராணா நீக்கப்பட்டு, பும்ரா, வருண் மீண்டும் அணிக்கு திரும்பினர். பட மூலாதாரம், Getty Images யூஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அக்சர் அணிக்கு திரும்பியது, இந்திய அணியின் சமநிலை குலையாமல் பார்த்துக்கொண்டது. சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆல்ரவுண்டர்கள் பஹீம் அஷ்ரஃப், ஹுசைன் டலாட் ஆகியோர் சேர்க்கப்பட்டு, ஹசன் நவாஸ், குஷ்டில் ஷா நீக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டாகி சொதப்பிய சைம் அயூபிற்குப் பதிலாக பர்ஹானுடன் அனுபவ வீரர் ஃபகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கேட்ச்சை தவறவிட்ட அபிஷேக்; அதிருப்தியில் வெளியேறிய ஜமான் ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, பர்ஹான் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தேர்ட்மேன் திசையில் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டார். வழக்கம் போல முதல் ஓவரில் மிக மெதுவான தொடக்கத்தை (6 ரன்கள்) பாகிஸ்தான் பெற்றது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், கால்பக்கம் வீசப்பட்ட பந்தை லெக் சைடில் அழகாக ஃபிலிக் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஜமான். அடுத்த பந்தில் இறங்கிவந்து மிட் ஆஃப் திசையில் மேலும் ஒரு பவுண்டரி விளாசி, பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதற்குள் விரைவாக ரன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் திட்டமாக இருந்தது. பும்ராவை திறம்பட எதிர்கொண்ட நம்பிக்கையில், பாண்ட்யாவின் அடுத்த ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரியை ஜமான் விளாசினார். அடுத்த பந்தை பாண்ட்யா கொஞ்சம் குறைவான வேகத்தில் வீச, விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜமான் நடையைக் கட்டினார். குறைந்த உயரத்தில் கிடைத்த கேட்ச்சை, மிகத் திறமையாக சாம்சன் பிடித்தார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் தனக்கு திருப்தியில்லை என்பதை ஜமான் வெளியேறும் போது வெளிப்படுத்தினார். பட மூலாதாரம், Getty Images ஃபர்ஹானால் தலைநிமிர்ந்த பாகிஸ்தான்; தடுமாறிய பும்ரா மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சைம் அயூப், சந்தித்த இரண்டாவது பந்திலேயே பாண்ட்யா பந்தில் ஒரு புல் ஷாட் அடித்து அசத்தினார். முதல் ஓவரில் பொறுமையாக இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசி, ரன் ரேட்டை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களை மிகவும் அநாயாசமாக பாகிஸ்தான் பேட்டர்கள் எதிர்கொண்டனர். இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பும்ரா நோ பால் உடன் சேர்ந்து இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், ஐந்தாவது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். வருணும் தன் பங்குக்கு நான்காவது பந்திலேயே விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். வருணின் ஆஃப் ஸ்பின் பந்தில் சைம் அயூப் ஸ்வீப் அடிக்க , அது டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் பைன் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ் கைகளுக்கு சென்றது. ஆனால், எளிதான கேட்ச் வாய்ப்பை குல்தீப் தவறிவிட்டார். பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்ற அழுத்தத்தில், இந்திய பீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளை பதற்றத்தில் தவறவிடுகிறார்களோ என்று தோன்றியது. வழக்கத்துக்கு மாறாக நோ பால்கள் வீசுவதையும் பார்க்க முடிந்தது. கடந்த ஆட்டங்களைப் போல, தொடக்க கட்டத்திலேயே மூன்று ஓவர்களை வீசிய பும்ரா, பவர்பிளேவின் கடைசி ஓவரில் 13 ரன்களை வாரி இறைத்தார். 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி, 55 ரன்களை எடுத்தது. இந்த தொடரில், இதுதான் பாகிஸ்தான் அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் ஆகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவர்பிளே பந்துவீச்சு இது. பர்ஹான் 'கன்ஷாட்' கொண்டாட்டம் கடந்த ஆட்டங்களில் கணிசமாக ரன் குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக விமர்சிக்கப்பட்ட பர்ஹான், இந்தமுறை புயல் வேகத்தில் விளையாடினார். அடுத்தடுத்த ஓவர்களில் வருண், குல்தீப் பந்துகளில் இறங்கிவந்து லாங் ஆன் திசையில் சிக்சர்களை விளாசினார். கடந்த ஆட்டங்கள் போல ஆபத்தான கிராஸ் பேட் ஷாட்கள் ஆடாமல், முடிந்தவரைக்கும் சுழற்பந்து வீச்சை நேராக எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது. அக்சர் படேலின் முதல் ஓவரில், லெக் சைடில் அபாரமாக ஒரு சிக்சரை மடக்கியடித்து அரைசதத்தை எட்டினார் சாஹிப்ஜதா பர்ஹான். அரைசதம் அடித்ததும் கன் ஷாட் (Gun shot) முறையில் கொண்டாடி, கவனத்தை ஈர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 91 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம், Getty Images ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய ஷிவம் துபே முன்னணி வீச்சாளர்களின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாததால், 11–வது ஓவரில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். கேப்டன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிய துபே, சைம் அயூப் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். முதல் ஓவரில் கேட்ச் விட்டதற்கு பரிகாரமாக அபாரமாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார் அபிஷேக் சர்மா. சைம் அயூப் விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தானின் ரன் வேகம் மட்டுப்பட்டது. 21 பந்துகளாக பவுண்டரி இல்லாத நெருக்கடியில், குல்தீப் யாதவ் பிளாட் செய்து வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று டாலாட் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெரிய ஷாட்களை முயன்றுகொண்டே இருந்தது. 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஃபர்ஹான் விக்கெட்டை ஆஃப் கட்டர் பங்கில் துபே கைப்பற்றினார். ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் சல்மான் அகா களமிறங்கினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான், மிடில் ஓவர்களில் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஒற்றை, இரட்டை ரன்களை எடுக்க இயலாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறுவதை காண முடிந்தது. பட மூலாதாரம், Getty Images கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடி கடைசி 4 ஓவர்களில் மீண்டும் அதிரடியை கையிலெடுத்தது பாகிஸ்தான். குல்தீப் வீசிய 17–வது ஓவரில் சல்மான் அகா சிக்சர் அடிக்க, துபேவின் கடைசி ஓவரில் 18 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. 19–வது ஓவரில் பும்ரா நன்றாக வீசிய போதும், மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை இந்தியா (கில்) தவறவிட, முகமது நவாஸ் ரன் அவுட்டான போதும் 11 ரன்கள் கிடைத்தது. நவாஸ் பொறுப்பின்றி ரன் அவுட்டான விதம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் பஹீம் அஷ்ரஃப் சிக்சர், பவுண்டரி விளாச, பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துபே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images கில்–அபிஷேக் அபார தொடக்கம்; ஹாரிஸ் ராஃப் வாக்குவாதம் 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அப்ரிடி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார் அபிஷேக் சர்மா. வழக்கமாக முதல் பந்தை முழு நீளத்தில் அல்லது யார்க்கராக வீசும் அப்ரிடி, பவுன்சர் வீசி அதிர்ச்சியளிக்க பார்த்தார். ஆனால், சிரமமின்றி எதிர்கொண்ட அபிஷேக், பைன் லெக் திசையில் சிக்சருக்கு அனுப்பினார். முதல் ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரை சைம் அயூப் வீச, அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து தன் கிளாஸ் என்னவென்பதை கில் காட்டினார். சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறும் ஆடுகளத்தில், சைம் அயூபை பவர்பிளேவில் பந்துவீச அழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது அடுத்த ஓவரில் அப்ரிடி ஷார்ட் பந்தின் மூலம் விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் மிட் விக்கெட் திசையில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை நவாஸ் தவறவிட்டார். அதே ஓவரில், மிட் ஆஃபிலும் கவர் திசையிலுமாக இரு அட்டகாசமான பவுண்டரிகளை கில் விளாசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். நான்காவது ஓவரை இந்த தொடரில் 4 ரன்னுக்கும் குறைவாக எகானமி ரேட் வைத்துள்ள அப்ரார் அஹமது வீச, அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அபிஷேக் விரட்டினார். பந்து வீச்சாளர்கள் மாறிய போதும், இந்திய பேட்டர்களின் வாண வேடிக்கை குறையவில்லை. ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரி அடிக்க, 28 பந்துகளில் கில்–அபிஷேக் ஜோடி 50 ரன்களை கடந்தது. ராஃப், அபிஷேக் இடையிலான வாக்குவாதம், ஆட்டத்துக்கு மேலும் பரபரப்பை கூட்டியது. பட மூலாதாரம், Getty Images இந்தியாவுக்கு செக் வைத்த ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ராஃப் வேகப்பந்து வீச்சை விரும்பி விளையாடுகிறார்கள் என்று மீண்டும் சைம் அயூபிடம் சல்மான் அகா பந்தை கொடுக்க, அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை கில்–அபிஷேக் ஜோடி அடித்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 69 ரன்களை குவித்தது. இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை 30 ரன்களை கடந்த அபிஷேக், பவர்பிளேவுக்கு அடுத்த அப்ரார் அஹமதுவின் ஓவரில் லெக் சைடில் இரு இமாலய சிக்சர்களை விளாசினார். அபிஷேக் சர்மா ஆஃப் சைடில் அதிரிபுதிரியான ஷாட் மூலம் அரைசதத்தை கடக்க, மறுபுறம் அவருக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரியமான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே அதே வேகத்தில் ரன்களை குவித்தார் கில். 8.4 ஓவர்களில் இந்திய அணி எவ்வித சிரமமின்றி 100 ரன்களை கடந்தது. துபே பாணியிலான மிதவேகப் பந்துவீச்சு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், 10–வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரஃபை அழைத்தார் சல்மான் அகா. பட மூலாதாரம், Getty Images சல்மான் அகாவின் நம்பிக்கை, உடனடியாக கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த கில்லை பவுல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ஃபஹீம் அஷ்ரஃப். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராஃப் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் தனக்கு பிடித்தமான ஷாட் விளையாட முயன்று, லீடிங் எட்ஜாகி தேர்ட்மேன் திசையில் அப்ராரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தில் மீண்டும் சுறுசுறுப்பை கொண்டுவந்தன. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதும் அபிஷேக் சர்மா அதிரடியை நிறுத்தவில்லை. ஃபஹீம் அஷ்ரஃப் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசியவர், அப்ரார் பந்தில் சிக்சர் அடித்து அசர வைத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அவர், இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். டாப் ஆர்டர் வீரரான சஞ்சு சாம்சன் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் அட்டகாசமான கவர் டிரைவ் அடித்த போதும், சாம்சனின் பேட்டிங்கில் வழக்கமான டைமிங் இல்லை. அப்ரிடி ஓவரில் திலக் வர்மா பவுண்டரி அடிக்க, கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகும் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் பந்துவீசவில்லை. இவருக்குதான் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், உலகின் தலைசிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர் என்று புகழாரம் சூட்டியிருந்தார். வலது–இடது பேட்டர்கள் இருக்கும்படி பேட்டிங் வரிசையை இந்தியா வடிவமைத்தது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப், தனது கடைசி ஓவரில் சாம்சன் (13) ஸ்டம்புகளை தகர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாண்ட்யா பவுண்டரி அடித்தார். திலக் வர்மா சிக்சர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பட மூலாதாரம், Getty Images ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அபிஷேக் சர்மா இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பிய போதும் கேட்ச்களை தவறவிட்ட போதும் எளிதான வெற்றியை பதிவுசெய்துள்ளது. ராஃப், அஷ்ரஃப் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய போதும், போதுமான ரன்கள் கைவசம் இல்லாததால் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்த நிலையில், மிடில் ஓவர்களில் அதை அடித்தளமாக கொண்டு பெரிய ஸ்கோரை பதிவுசெய்திருக்க வேண்டும். குறிப்பாக சமீப காலமாக அதிரடியாக பேட்டிங் ஆடிவரும் அப்ரிடியை பேட்டிங் வரிசையில் முன்னதாக கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த ஆட்டத்தை போலவே ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்கவில்லை. அதிரடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 24) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. நாளை (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார் பாகிஸ்தான் ஒரு வார இடைவெளியில் மீண்டும் வீழ்த்திய மகிழ்ச்சியில் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை இந்திய கேப்டன் சூர்யகுமார் எதிர்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி முடிவு 7-7 அல்லது 8-7 என இருந்தால், அதை நீங்கள் நல்ல கிரிக்கெட் என்று அழைக்கலாம், நீங்கள் அதை போட்டி என்று அழைக்கலாம். அது 13-0, 10-1 என இருந்தால், புள்ளிவிவரம் என்னவென்று எனக்கு துல்லியமாக தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டி அல்ல. நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம், சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்," என்றார். பட மூலாதாரம், Getty Images இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி சொந்த நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினருக்கு சூர்யகுமாரின் கருத்துகள் உவப்பானதாக இருந்திருக்காது. கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் சந்தித்த 31 போட்டிகளில் 23 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கன்ஷாட் கொண்டாட்டம் பற்றி விமர்சனம் பாகிஸ்தான் வீரர் பர்ஹான் தனது அரைசதத்திற்குப் பிறகு கன்ஷாட் முறையில் கொண்டாடியது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கேள்வி எழுப்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சபாஷ் மோடி ஜி! பார்க்க மீதமிருந்த ஒரு விஷயம் இதுதான், இதற்காகத்தான் அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அவர் இதை எப்படிச் செய்யத் துணிந்தார்? நரேந்திர மோடி ஒரு பலவீனமான பிரதமர்" என்று எழுதினார். சிவசேனா (UBT) தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்தப் படங்கள் உங்களைப் போதுமான அளவு திருப்திப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான 'ஒலிம்பிக்' உணர்வைப் பாதிக்காது என்றும் நம்புகிறேன். இது தொந்தரவாக இருக்கிறது. ஆனால் இரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பவர்களுக்கு இது பொருந்தாது" என்று எழுதினார். அரசியல்வாதிகளைத் தவிர, பிற சமூக ஊடக பயனர்களும் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதை காண முடிந்தது. ஜிதேஷ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சாஹிப்சாதா பர்ஹான் தனது அரை சதத்தைக் கொண்டாடியது இப்படித்தான். மோடி ஜி, இது போர் இல்லையென்றால், என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வீரர் கன்ஷாட் முறையில் கொண்டாடியது இதுவே முதல் முறை அல்ல. முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்த முறையில் கொண்டாடியுள்ளனர். ஒரு ஐபிஎல் போட்டியின் போது, தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் ரூஸோவும் பர்ஹானைப் போலவே கொண்டாடினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y88np8evzo

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 2 days ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் ஆண் : உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் ஆண் : நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் ஆண் : நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது .......! --- உறவுகள் தொடர்கதை---

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு

1 week 2 days ago
Published By: Vishnu 22 Sep, 2025 | 01:53 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2021.12.20 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, 2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற 08 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திசை;சாட்டி சின்னத்தில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42,31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 சதவீத வாக்குகளையும்,புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 சதவீத வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளைப் பெற்று 2.57 சதவீத வாக்குகளையும் முறையே பெற்றுக்கொண்டனர். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள் வருமானம் மற்றும் அரச செலவுகளுக்கான பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு இக்காலப்பகுதிக்குள் அரச வருமானம் 3221 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக்கொள்ளப்பட்டது. இக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் சுங்க வருமானம் அதிகரிப்பு விசேடமானதாக கருதப்படுகிறது.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் தனது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டின் 08 மாதகாலத்துக்குள் சுற்றுலாத்துறை கைத்தொழிலில் 2290 மில்லியன் ரூபாய் வருமானம் திரட்டப்பட்டுள்ளதுடன்,அத்துடன் 2025 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் புதிதாக 40 அபிவிருத்தி கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முதலீடாக 4,669 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்றுமதி வருமானம் 10,000 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதுடன்,சுங்க வருமானம் 1,271 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அரச செயற்திட்டங்களை வலுப்படுத்தும் கொள்கைக்கமைய துறைமுக கண்காணிப்புக்கள் ஊடபக பெற்றுக்கொண்டுள்ள வருமானம் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 18 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளதுடன்,பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. மொழி சமவுரிமையை மேம்படுத்தல்,போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒழித்தல்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண காணி விடுவிப்பு,வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதியின் ஒருவருட பதவி காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225694

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி

1 week 2 days ago
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை; இறுதி முடிவு எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் Published By: Vishnu 22 Sep, 2025 | 01:36 AM (இராஜதுரை ஹஷான்) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கும்,ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் முற்றிலும் விரோதமானது. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அவர் பாதுகாப்பதில்லை. ஆளும் கட்சிக்கு சார்பாகவே செயற்படுகிறார். சபாநாயகர் தனது பதவிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்பினை அறியாமல் உள்ளரா என்பது சந்தேகமாகவுள்ளது. சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவே சபாநாயகரை இயக்குகிறார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை முறையற்ற வகையில் சபாநாயகரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு சபாநாயகர் குறிப்பிட்ட காரணிகள் நடைமுறைக்கு பொறுத்தமற்றது. சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.இவ்வாரம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/225693

தனியாக வாழ்ந்து 29 வயதில் மறைந்த 'சங்கர்'; ஆப்ரிக்க யானையின் சோகக் கதை

1 week 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று. கட்டுரை தகவல் அபிஷேக் டே பிபிசி நியூஸ், டெல்லி 21 செப்டெம்பர் 2025 இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர். டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 24 ஆண்டுகளாக, சங்கர் ஒரு தனிமையான வாழ்க்கையை அனுபவித்தது - இதில் குறைந்தது 13 ஆண்டுகள் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டிருந்தது. அதன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. "மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் சஞ்சீத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார். ஜிம்பாப்வேயிலிருந்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மாவுக்கு இராஜதந்திரப் பரிசாக 1998-ல் வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றுதான் சங்கர். ஆனால், சங்கரின் துணையான மற்றொரு யானை 2001-ல் இறந்துவிட்டது என்று குமார் கூறினார். பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் மிருகக்காட்சிசாலை அதிகாரி ஒருவர், அதன் துணையின் மரணத்திற்குப் பிறகு, சங்கர் தற்காலிகமாக மிருகக்காட்சிசாலையில் உள்ள ஆசிய யானைகளுடன் தங்கவைக்கப்பட்டது, ஆனால் அந்தத் திட்டம் பலனளிக்கவில்லை என்றார். "அவை ஒன்றுக்கொன்று மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன" என்று அவர் கூறினார். மேலும், சங்கர் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். "அதன் துணை இருந்தபோது சங்கர் மிகவும் விளையாட்டாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவை மிருகக்காட்சிசாலை பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. உடனிருந்த ஆப்பிரிக்க யானை இறந்த பிறகு சங்கரின் நடத்தை மாறியது. சங்கர் வேறு எந்த யானையின் துணையையும் ஏற்கவில்லை, மற்ற யானைகளும் சங்கரை ஏற்கவில்லை. அது நண்பனற்றதாக விடப்பட்டது" என்று அந்த முன்னாள் அதிகாரி கூறினார். 2009-ல், ஆறு மாதங்களுக்கு மேல் யானைகளைத் தனியாக வைத்திருப்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை மீறி, சங்கர் 2012-ல் ஒரு புதிய அடைப்புக்கு மாற்றப்பட்டது, அது கிட்டத்தட்ட அதை தனிமையில் அடைத்தது. அது இறக்கும் வரை அங்கேயே இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கரின் துணை 2001-ல் இறந்துவிட்டது, இதனால் டெல்லி மிருகக்காட்சிசாலையில் அதுவே ஒரே ஆப்பிரிக்க யானையாக இருந்தது. பல ஆண்டுகளாக, விலங்கு ஆர்வலர்கள் சங்கரை மிருகக்காட்சிசாலையிலிருந்து அகற்றி, மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். 2021-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் சங்கரை மற்ற ஆப்பிரிக்க யானைகள் உள்ள ஒரு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, மிருகக்காட்சிசாலைகளிலிருந்து காட்டு விலங்குகளை மாற்றுவதைக் கையாளும் குழுவை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. புதன்கிழமை வரை, இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளில் இருந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் சங்கரும் ஒன்று. வயது வந்த மற்றொரு ஆண் யானை கர்நாடகாவின் மைசூர் மிருகக்காட்சிசாலையில் வாழ்கிறது. இரண்டு ஆப்பிரிக்க ஆண் யானைகளுக்கும் துணையைத் தேடுவதில் மிருகக்காட்சிசாலைகள் நீண்ட காலமாக சிரமப்பட்டு வருகின்றன. அதிக செலவுகள், ஒழுங்குமுறை தடைகள், பல ஒப்புதல்கள் மற்றும் விலங்கு நலன் குறித்த கவலைகளால் இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி மிருகக்காட்சிசாலையில் சங்கர் வைக்கப்பட்டிருந்த நிலைமைகளையும் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். அதன் அடைப்பு இருட்டாகவும், போதுமானதாக இல்லாமலும் இருந்ததாக அவர்கள் விவரித்துள்ளனர். "அது இப்படி இறந்ததை காண்பது மனதை உடைக்கிறது," என்று 2021 நீதிமன்ற மனுவைத் தாக்கல் செய்த லாப நோக்கற்ற அமைப்பான 'யூத் ஃபார் அனிமல்ஸ்' (Youth For Animals) நிறுவனரான நிகிதா தவான் கூறினார். "இதை எளிதாகத் தடுத்திருக்கலாம். அதற்கு (சங்கருக்கு) எந்த கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் இல்லை. அது மிகவும் இளமையாக இருந்தது." ஆப்பிரிக்க யானைகளின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். புதன்கிழமை காலை வரை சங்கரின் விஷயத்தில் "நோய் அல்லது அசாதாரண நடத்தை" குறித்த எந்த அறிக்கையும் இல்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் குமார் கூறினார். விலங்கு நல ஆர்வலர் கவுரி மௌலேகி, சங்கரின் மரணம் "பல ஆண்டுகளின் நிர்வாக அலட்சியம் மற்றும் கவனக்குறைவை" பிரதிபலிப்பதாகக் கூறினார். மேலும், இது ஒரு அமைப்புத் தோல்வி என்றும், இதற்குப் பொறுப்பு கேட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஒரு உள் விசாரணை மட்டும் போதாது," என்று மௌலேகி பிபிசியிடம் கூறினார். "இது ஒரு அமைப்புத் தோல்வி. இதற்கு உண்மையான பொறுப்பு தேவை. மேலும், இது நமது மிருகக்காட்சிசாலைகளில் யானைகள் மற்றும் பிற ஒன்றாக கூடி வாழும் விலங்குகளைத் தனிமையில் அடைத்து வைக்கும் கொடுமையான நடைமுறைக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவதற்கு ஒரு முக்கிய தருணமாக அமையவேண்டும்." அலட்சியம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, குமார், "அனைத்து கவனிப்பு, பராமரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன" என்று கூறினார். ஆனால், குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். 2024 அக்டோபரில், உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கம், சங்கரின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த கவலைகள் காரணமாக டெல்லி மிருகக்காட்சிசாலையை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது. அது சங்கிலியால் பிணைக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த உலகளாவிய அமைப்பு டெல்லி மிருகக்காட்சிசாலைக்கு சங்கரை இடமாற்றம் செய்ய அல்லது அதன் பராமரிப்பை மேம்படுத்த 2025 ஏப்ரல் வரை அவகாசம் அளித்தது. காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், அதன் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்றும் அது எச்சரித்தது. இந்த இடைநீக்க அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, ஒரு மத்திய அமைச்சர் சங்கரின் அடைப்பைப் பார்வையிட்டார். அதன் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு ஒரு பெண் துணையை கொண்டுவரத் திட்டமிடுவதாக அக்டோபர் 15 அன்று அரசு அறிவித்தது. ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆர்வம் காட்டியுள்ளன என்றும், அதற்கான நடைமுறைகள் நடந்து வருகின்றன என்றும் அது கூறியது. உலக மிருகக்காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களின் சங்கத்திடமிருந்து தங்களுக்கு வேறு எந்த அறிவிப்புகளும் வரவில்லை என்று டெல்லி மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு துணை ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பே சங்கர் இறந்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c930ddp1zdko

மாகாணசபைத் தேர்தலை அவசரமாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வட மாகாண முன்னாள் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

1 week 2 days ago
ஆங் அப்படியொரு நிலை இருக்கா? இல்லை வருமா? சர்வதேச அளவில் இந்தியாவின் இருப்பு தளர்ந்து வருகிறது, அதில இவர்கள்தான் இந்தியாவை தூக்கி நிலைநிறுத்துகிறார்கள். இத்தனை தமிழரை அழித்து தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கியதே இந்தியாதான், அதை அனுரா வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவருக்கு இவை இந்தியாவை கதாநாயகனாக காட்ட வேண்டிய தேவை.

நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர் - இந்திக உடவத்த

1 week 2 days ago
22 Sep, 2025 | 11:43 AM நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225732

அநுரவின் அரசு பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை : சந்திரிகா விசனம்

1 week 2 days ago
சுடலை ஞானம் பேசுகிறார் அம்மணி. இவர் ஆட்சி நடத்தும்போது தமிழரை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்காமல் நல்லாட்சி நடத்தியிருக்கலாம். அன்று விதைத்ததை இன்று அறுக்கிறார் கவலையோடு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோசனம். "ஏழை அழுத கண்ணீர் ஏழு தலைமுறைக்கு." "ஏழையின் கண்ணீர் கூரிய வாள் போன்றது." அறுத்தே தீரும். ம், வைத்தியசாலை, ஆலயம் என்று பாராமல் விரட்டி விரட்டி அடித்தீர்களே. இப்போ உங்களுக்கு சிகிச்சை. உங்களுக்கும் சந்தர்ப்பம் உண்டு கவலைப்படாதீர்கள். இந்த குற்றங்கள் எல்லாம் இன்று நேற்று நடந்தவையல்ல, உங்கள் ஆட்சி காலத்திலும் நடந்தவையே, நீங்களும் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக நீங்களும் பொறுப்புக்கூறவேண்டும். யாருமே ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப விரும்பவில்லை. ஊழலிலேயே வாழ்ந்து, ஊக்குவித்து வளர்த்து விட்டவர்கள். அதற்காக நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஊழலை ஒழிக்காமல் எப்படி நல்லாட்சி செய்வது என்றும் சொல்லலாமே. பிச்சைக்காரரெல்லாம் ஆட்சி நடத்திய நாடு இதுவாகத்தான் இருக்கும். எல்லா ஜனாதிபதிகளும் வீடு இல்லை, வாழ வழியில்லை என்கிறார்கள். ஆனால் ஆட்சியை பிடிப்போமென்றும் சூழுரைக்கிறார்கள்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்

1 week 2 days ago
பலி அல்லது காயம் ஏதாவது போட்டு நிரப்பிக் கொள்ளலாம். இவ்வளவு தான் மனித உயிருக்கு இவ்வுலகு வைத்திருக்கும் மதிப்பு.😭

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week 2 days ago
அவர்களிடம் கேட்டு பலனில்லை ஏன்னென்றால் இந்த பாரிய மீன்வள கொள்ளை சுரண்டல் இரு நாட்டு அரசுகளின் ஆதரவுடன் தான் நடை பெறுகிறது மன்னார் வளைகுடா பகுதியில் ஐ நாவால் பாதுகாக்கப்பட்ட பவள பாறை தொகுதிகளை இந்த உலகில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை வைத்து இருக்கும் ரோலர்கள் சத்தம் சந்தடி அற்று அழிக்க தொடங்கி விட்டன இதற்க்கு பல அரசியல் பின் புல காரணிகள் உள்ளன அதே வேளை இலங்கை சிங்கள அரசோ உடனடியாக நடவடிக்கைக்களை எடுக்காமல் வட கிழக்கில் தமது நீண்ட கால சிங்கள அரசியல் நலனை பேணுவதிலேயே குறியாக உள்ளது . அத்து மீறி இயற்கையான பவள பாறைகளை அழித்து நாசம் பண்ணும் கடல் கொள்ளையர் மீது மென்மையான அணுகுமுறையை கையாண்டு கொண்டு இலங்கையின் வடகிழக்கு எங்கும் விரைவான கடவு சீட்டுகளை இலகுவாக கிடைக்கும் வண்ணம் பல அலுவலங்களை திறந்து வைக்கின்றது அதனால் பல்லாயிர கணக்கான இளையோர்கள் மாற்று வழி தேடி செல்கின்றனர் .

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week 2 days ago
ஓம் நீங்கள் எழுதியதை யாழ்களத்தில் கண்டுள்ளோம். இலங்கை கடல் வளங்களை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை ஈழ தமிழர்களை பேய்காட்டுவதற்காக தொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்வோம் என்பது அனைத்து தமிழ்நாட்டு கட்சிகள் ஊடகங்களின் கொள்கையாகும்.

டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க்

1 week 2 days ago
மேற்கு / us நினைப்பது மற்றவர்கள் பேயர்கள் என்று. ரஸ்சியாவின் (புட்டினின் அல்ல, அனல் மேற்கின் / us குழப்பம் இதுவே, புட்டினின் பிரச்சனையாக பார்ப்பது) இதுவே பொதுவான அணுகுமுறை இங்கே எதிர்வு கூறப்பட்டது தானே. புட்டினை அடிப்படையாக கொண்டே, புட்டினை இல்லாமல் ஆக்குவது பற்றி வெளிப்படையாகவே கதை க்கப்பட்டது. ருசிஷ்யவின் பார்வையில் - ஒடத்த்தொடங்கியது, எதிர்பகுதி யுத்தநிறுத்ததை கோரும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு இருப்பது. இரானுக்கு வேண்டும் என்றே பிரித்தானிய, பிரான்ஸ் வாலுகள், பாதுகாப்பு சபையில் snap back ஐ தாளில் மட்டும் நிறைவேற்றி இருப்பது, US ஐ உக்கிரைனில் இருந்து விலத்தாமல் வைத்து இருக்க. (ருசியா, சீன நடைமுறை படுத்துவதை தடுத்து விட்டன, விடும்)

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய இளைஞர்கள்

1 week 2 days ago
காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஹோட்டலில் விருந்தில் இருந்த 2 இலங்கையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது. சுற்றுலா பயணிகள் இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் ஒரு காரில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களின் தடுத்து, பின்னர் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட ஜெர்மன் பிரஜைகள் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்களும் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். இலங்கையர்கள் கைது சந்தேக நபர்களும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 26 வயதுடைய ரூமஸ்ஸல பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்கள் சுற்றுலா தொழிலிலும் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் தாக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். https://tamilwin.com/https://tamilwin.com/

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

1 week 3 days ago
இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்

1 week 3 days ago
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துக்கல் நாடுகள் பாலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அல்லற்படும் மக்களுக்கு நிம்மதியான. அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed