1 week 1 day ago
இந்திய - இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 08:11 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22) காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார். இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன வரவேற்றுள்ளார். நேற்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு கடற்படையின் சம்பிரதாயபூர்வ மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, இந்திய கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன. மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு - 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார். https://www.virakesari.lk/article/225811
1 week 1 day ago
சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் - ஊழல் விசாரணை ஆணைக்குழு Published By: Vishnu 23 Sep, 2025 | 02:52 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று 2024 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர் விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஆறு பேர், முன்னாள் மாகாண ஆளுநர்கள் நால்வர், முன்னாள் தூவர்கள் 29 பேர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 2 நீதியரசர்கள் உள்ளடங்குகின்றனர். கடந்த கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறித்த காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரான (காலஞ்சென்ற)லொஹான் ரத்வத்தே, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார,காதர் மஸ்தான், பிள்ளையான் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் மாகாண ஆளுநர்களான ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க மற்றும் விலியம் கமகே ஆகியோரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225804
1 week 1 day ago
பல கட்சி முறைமையை நீக்கி தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி - பொதுஜன பெரமுன 22 Sep, 2025 | 05:00 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம். பல கட்சி முறைமையை இல்லாதொழித்து,தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. போலியான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒருவருட காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருட கால ஆட்சியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போதைப்பொருட்கள் கிலோகிராம் கணக்கில் கைப்பற்றப்பட்ட ஆனால் தற்போது கொள்கலன் கணக்கில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோடிக்கணக்கான சொத்துக்கள் தமக்கு பரம்பரை வழியில் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பிடுகிறார்கள். ஆனால் தேர்தல் காலத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை.தாம் ஏழ்மை நிலையில் வாழ்வதாகவும், மக்களுடன் மக்களாக வாழ்வதாகவுமே குறிப்பிட்டார்கள். எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. அந்த மாநாட்டில் பங்குப்பற்றிய சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்துவமான கொள்கை உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம்.பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் நிபந்தனையற்ற வகையில் ஒன்றிணைவோம் என்றார். https://www.virakesari.lk/article/225780
1 week 1 day ago
எல்லா அழிவுகளும் ஆபத்துகளும் அமெரிக்காவிலேயே ஏன் வருகிறது என்ற யோசனையோடு நித்திரை கொண்டேன். கனவில் ஒரு சாத்திரி வந்தார், தற்போது அமெரிக்கர் என்று வாழும் மக்களால் கொல்லப்பட்ட பூர்வ அமெரிக்க குடிகளின் ஆவிகள் இன்னமும் அமெரிக்காவை சுற்றி வருவதாகச் சொன்னார். இப்போது இலங்கையிலும் அடிக்கடி பூமி நடுக்கம் வருகிறதாம். ஏன்??????
1 week 1 day ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள். மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள். அறிவியல் என்ன சொல்கிறது? எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும் இது மட்டும் இல்லை. நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன. வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது. "இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன். குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன். தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார். இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும். முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும் "மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன். "ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்." இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. தூக்கத்தின் நன்மைகள் இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது. இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை. அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன? ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம். ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது. "நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன். உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது. "நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05918r470do
1 week 1 day ago
1 week 1 day ago
10) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம்(சுழிபுரம் கிழக்கு, ஏழாலை வடக்கு) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸமா றுக்மன் குடும்பம் 40000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 23/09/2025 இன்று வரை மொத்தமாக 360070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.
1 week 1 day ago
அதை விட திரள்நிதி சேர்தது அனுப்பினால் வாற கொமிசன் உபரி கூட வரும். 😂
1 week 1 day ago
அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁 அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
1 week 1 day ago
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்ற போது . ..........! 😍
1 week 1 day ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி கண்ணால என்ன நீ பார்த்தா உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா யூத்தாக மாறுவான் காத்தா பெண் : ஹோ கரும்பு உடம்பும் ருசிக்கும் எறும்பு பெண் : அய்யய்யோ பரபரப்பா குழு : ……………………. பெண் : மனசு தவிக்குதப்பா ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா உடம்ப கவ்வுறியே கரண்டா இது சரியா தப்பா மதுபோல மப்பா ஆண் : உன் நடக்காட்டி என்ன தலையாட்டி பொம்மைப்போல மாத்திப்புட்ட பெண் : நீ பலவாட்டி ஒரு படம் காட்டி என் உசுற வாங்கிப்புட்ட ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி ரசிக்க வாயேன்டி பெண் : நொறுக்குத்தீனி உன் மீச கடிக்கத்தாயேன்னா ஆண் : ஏ கஞ்சாச்செடி உடம்பழகி கஞ்சமான இடையழகி பெண் : உன் முகம் பார்த்து அட குளிர்க்காத்து தினம் சூடா மாறுதடா ஆண் : உன் நகம் பார்த்து நான் தல வாற அடி ஊரே கூடுதடி பெண் : தெருவில் நடந்து நீ போனா ஜன்னல் வெட்கப்படும் ஆண் : கோலம் போட நீ போனா புள்ளி ஜொல்லுவிடும் பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா பஞ்சமில்லா கொழுப்பழகா .......! --- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---
1 week 2 days ago
தொலைந்தது கள்ளத்தொடர்பு! அது சரி, சிறியர் ஏன் இதை இங்கு இணைத்தார்?
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 2 days ago
முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை! முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பை வழங்கும்போது, ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்துள்ளதாக நீதிபதி கோடகொட கூறினார். நாட்டின் ஒன்லைன் விசா முறையை நிர்வகிக்க VFS குளோபல் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையிலிருந்து இந்த வழக்கு உருவாகிறது. அதிகரித்து வரும் விமர்சனங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு மத்தியில், புதிய இ-விசா செயல்முறையை செயல்படுத்துவதை நிறுத்தி உயர் நீதிமன்றம் முன்னதாக ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. https://athavannews.com/2025/1448196
1 week 2 days ago
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்! சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் “ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்” என்றும் நம்புவதாகக் கூறினார். அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் அடிப்பகுதி மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் US$170 மில்லியனை செலவிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலான MV X-Press Pearl ஐ இயக்கியது. ஜூன் 2021 இல் கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு – நைட்ரிக் அமிலக் கசிவு இரண்டு வாரங்கள் நீடித்தது. அதன் சரக்குகளில் அமிலங்கள் மற்றும் ஈய இங்காட்கள் உட்பட ஆபத்தான பொருட்கள் கொண்ட 81 கொள்கலன்களும் நூற்றுக்கணக்கான டன் பிளாஸ்டிக் துகள்களும் அடங்கும். கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு முன்பு கசிந்த நைட்ரிக் அமிலத்தை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் அனுமதி மறுத்தன. கப்பலில் இருந்து டன் கணக்கில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் 80 கி.மீ நீளமுள்ள கடற்கரையை மூழ்கடித்தன. பல மாதங்களாக மீன்பிடித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இலங்கை உயர் நீதிமன்றம் ஜூலை மாதம், அந்நிறுவனம் இலங்கை அதிகாரிகளுக்கு ஒரு வருடத்திற்குள் $1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தவணையாக US$250 மில்லியன் செப்டம்பர் 23 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. https://athavannews.com/2025/1448162
1 week 2 days ago
தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபா என தகவல்! தங்காலை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 9,888 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 705.91 கிலோ கிராம் என்றும், அதில் 284.94 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோ கிராம் ஐஸ் ஆகியவை அடங்கும் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்காலை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியுடையது என்பது தற்போது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ‘உனகுருவே சாந்த’ என்ற குற்றவாளியால், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கப்பல் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது என்பது பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. நாட்டில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகவும் இது கருதப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக, ஒரு T-56 துப்பாக்கி மற்றும் 5 பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டனர். சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் 10 கிலோ கிராம் ஐஸ் என்ற போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் திடீர் சுகவீனம் காரணமாக தங்காலை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தங்கலையின் கடுருபோகுனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை சோதனை செய்தபோது, அதற்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை பொலிஸார் மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். மேலும், இதன்போது 400 கிலோ கிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போதைப்பொருட்கள், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து விநியோகிக்க தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இறந்த மூன்று நபர்களும் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முந்தைய இரவு அவர்கள் வேறொரு குழுவுடன் மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. https://athavannews.com/2025/1448147
1 week 2 days ago
24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம். கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை.பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்தார். மேலும் ”மோடி, உள்ளூர் மட்டத்தில் ஒரு கட்சி ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பாஜகவின் தேசியத் தலைவராக உயர்ந்தார். பின்னர் குஜராத்தின் முதல்வரானார். பின்னர் மிகவும் பிரபலமான பிரதமரானார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது” என்று அமித் ஷா தெரிவித்தார். https://athavannews.com/2025/1448175
1 week 2 days ago
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்! திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448085
1 week 2 days ago
உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனாவின் புதிய ‘K’ விசா” அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா குழப்பங் களுக்கு மத்தியில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்க சீனா ‘கே’ எனும் புதிய வகை விசாவை அறிமுகப்படுத்துகிறது. எச்1பி (H-1B) விசா முறை மூலம் அமெரிக்க நிறுவனம், வெளிநாட்டிலிருந்து சிறப்பு திறமை வாய்ந்த ஊழியரை சட்டபூர்வமாக அமெரிக்காவில் வேலை செய்ய அழைத்து வர முடியும். எனினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி, வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார். எச்1பி விசா வைத்துள்ளவர்களில் இந்தியாவிற்கு அடுத்து சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து, இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை தன் பக்கம் ஈர்க்க, சீனா ஒரு புதிய வகை விசாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது 12 வகை சாதாரண விசாக்கள் கிடைத்து வருகின்றன. இந்த விசாக்களுடன் கே எனும் வகை விசாவை சேர்க்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இந்த விசா மற்ற விசாக்களுடன் ஒப்பிடுகையில், எண்ணிக்கை, செல்லுபடியாகும் காலம், தங்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும். எச்1பி விசாவைப் போன்று இல்லாமல், இந்த கே விசா மிகவும் எளிமையான மற்றும் நெகிழ்வான நடைமுறைகளை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு சீனாவில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தின் ஆதரவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கான ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கான உத்தரவில் சீன பிரதமர் லி கியாங் கையெழுத்திட்டுள்ளார். இப்புதிய விதிகள் வரும், ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. கே விசாவில் சீனாவிற்கு செல்பவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும், அது தொடர்புடைய தொழில்முனைவோர் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான பரிமாற்றங்களிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர். இந்த விசாவிற்கான விண்ணப்பதாரர்கள் சீன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1448185
Checked
Thu, 10/02/2025 - 04:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed