1 week 1 day ago
இதுகளையெல்லாம் சட்டம் போட்டு திருத்த முடியாது, அதுகளாய் திருந்தினாலொழிய. சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுங்கள்.
1 week 1 day ago
வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் சண்டியர்களை இழுத்து வருகிறார்கள், இவர் இவ்வளவு காலமும் ஒளித்திருந்துவிட்டு இந்நேரம் பார்த்து கிளம்புகிறார். தலைவனே கிளம்பும்போது, இவர்கள் கூலிகள் என்ன செய்வது?
1 week 1 day ago
1 week 1 day ago
கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது. ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை. ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு. அதை விஜை நிறைவேற்ற கூடும். ஆகவே வரவேற்கிறேன். அவரும் சீமான் போல் பெட்டி… அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன். பிகு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.
1 week 1 day ago
இந்த்த தேர்தலில் விஜை வெற்றி பெறுவார். தோற்றாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும்.கவலை வேண்டாம்.அடுத்த கமல்.
1 week 1 day ago
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தமிழ்த்தேசியம்.மரங்கள்>மலைகள்>இயற்கைவிவசாயம்>ஆடுமாடுவளர்ப்பு நீர்லோண்மை>ஆண்பெண்சமத்துவம்>கோவில்களில் தமிழில் குடமுழுக்கு>அனத்து இடங்களிலும் தமிழுக்கு முன்னுரிமை>ஆரியம்திராவிடத்தித்தின் முகமூடியைக் கிழித்தல்.வாக்குக்கு பணம்கொடுக்காமை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டிஎன்று விஜை உட்பட எந்த அரசியல்வாதிகளும்பேசாத விடயங்களை நாதகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்கின்றனர்.அதை விட்டவிட்டு விட்டீர்கள்.கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த கட்சியும் அதற்கு மெளனமாக சம்மதம் கொடுத்த கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். நீட்டுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு விட்டோட் ஆட்சிக்கு வந்ததும் முதல்கையெழுத்து நீட்டை விலத்துவதற்கு என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது. அரசியல் மேடைகளில் கவர்ச்சிப் பெண்களின் குத்தாட்டம்> காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது.குடும்ப அரசியல்>இப்படித்தில்லுமுல்லுகள்>எதிர்க்கட்சிகள் மீது ஊடகங்களை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தல். எதிர்க்கட்சிகளுக்கு ஊடக இருட்டடிப்பு.
1 week 1 day ago
6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
1 week 1 day ago
கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே
1 week 1 day ago
1 week 1 day ago
அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!
1 week 1 day ago
நிச்சயமாய் ஒருத்தரின் உதவி இன்றி இவ்வளவு தூரம் பயணிப்பது என்பது அதிசயம் .
1 week 1 day ago
டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் - பிமல் ரத்நாயக்க 23 Sep, 2025 | 03:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) காதர் மஸ்தான் எம்.பி. 27 2இன் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான வசதிகள்செய்துகொடுக்கப்படும். அதேபோன்று பாடசாலை வாகனங்கள், காரியாலய வாகனங்கள், பஸ் வண்டிகளை பரிசோதனை செய்யுமாறு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பரிசோதகருக்கு ஆலாேசனை வழங்க இருக்கிறோம். எல்லையில் இடம்பெற்ற மோசமான பஸ் விபத்தின் விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறோம். அதனை யாருக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மலையக பகுதிகளில் வளைவு பாதைகளில் அங்கு பாதுகாப்பு வெலி அமைப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறோம். அதேபோன்று அனைத்து புகையிரத நிலையங்களிலும் விசேட தேவையுடையவர்கள் பயணிப்பதற்கு வசதி செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுதொடர்பில் நாங்கள் எமது கொள்கையை நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம். அதன் பிரகாரம் புகையிரத நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட தேவையுடைவர்கள் பயணிக்க முடியுமான வசதிகளை மேற்கொள்வோம். அதேவேளை, 2020 ஆம் ஆண்டும் 5.2 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பபடடுள்ளன. அதன் மூலம் மொத்த வருமானம் 3.0 பில்லியன் ரூபாவாகும். 2021இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மொத்த வருமானம் 3.2 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று 2022இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அதன் மொத்த வருமானம் 3.3 பில்லியன் ரூபாவாகும். 2023இல் 5.7 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற மாெத்த வருமானம் 4.3 பில்லியன் ரூபா. 2024இல் 5.799 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் 4.8 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. அத்துடன் வாகன புகை வெளியேற்ற பரிசோதனைகளின்போது அரச வாகனம் தனியார் வாகனம் என பிரித்து கணக்கிடப்படுவதில்லை, பொதுவாக வாகனங்களின் எண்ணிக்கையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024இல் 4565 இராணுவ வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225860
1 week 1 day ago
இது தான் செய்தி கண்ணில் பட்டதும் நினைவுக்கு வந்தது. (மறுவளமாக, அமெரிக்காவின் கபட தாக்கும் / குண்டுவீச்சு விமானங்கள் குறிப்பிட்ட உயரத்துக்கு கீழ் இறங்குவதை தவிர்ப்பது, ஏனெனில் அந்த உயரத்துக்கு மேல் உள்ள மிக குறைந்த வெப்பநிலை (குளிர்), ராடார் ஐ உறுஞ்சும் மற்றும் தெறிக்க வைக்கும் பூச்சை பாதுகாப்பதால். ரேடார் அலைகளின் சக்தியை உறுஞ்சுவது பூச்சில் உள்ள மூலக கூறுகள் ரேடார் அலையை வாங்கி அதிர்ந்து, ரேடார் அலை சகத்தியை வெப்பசக்தியாக மாற்றுவதால், அனல் சுற்றுப்புறசூழலின் விவெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது , ரடர் அலையினால் விமானத்தில் அதன் சுற்றுப்புறத்தில் உருவாகும் வெப்பமமும் தணிக்கப்படும், அதனால் பூச்சை ரேடார் அலை பாதிப்பது மிக குறைந்த சாத்தியக்கூறுகள். அது குறிப்பாக, வெப்பரேகை ( heat signature) உருவாகுவதை தவிர்க்கும், இது முக்கியம் ஏனெனில் , வெப்பரேகை உருவாக்கினால் , அப்படியான heat signature தேடி வரும் ஏவுகணையால் விமானம் குறிவைக்கப்படலாம்) இதை சொல்வதன் காரணம், அவ்வளவு வெப்பநிலை மிக குறைவு (அதாவது குளிர்). எவ்வாறு சிறுவன் குளிரில் உறையாமல் இருந்தது என்பது ஆச்சரியம். மற்றது உயரத்தில் ஒட்ஸிசன் பற்றாக்குறை.
1 week 1 day ago
23 Sep, 2025 | 05:00 PM காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க பிரான்ஸ் தனது ஆதரவை முறையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரான்ஸும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு நாடுகள் தீர்வு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்றார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்று ஈடுபாடாக இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பது, இஸ்ரேல் அமைதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்றும், இது ஹமாஸ் அமைப்புக்கான தோல்வியாகும் என்றும் மக்ரோன் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை சர்வதேச நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஐ.நா.வில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான முன்மொழிவு வந்தபோது, கனடா முதலில் ஆதரவு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தும் ஆதரவு அளித்தன. இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஜி7 மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இந்த முடிவு, பாலஸ்தீன தனிநாட்டுக்கான சர்வதேச ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/225878
1 week 1 day ago
ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று விஜய் சொல்வதும் அதை இங்கே பலரும் ஆமோதிப்பதும் தமிழகத்தில் தலைவருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் சொல்கிறது.
1 week 1 day ago
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார். இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் பயணத்தின்போது டிரம்ப் இதேபோன்ற கருத்தை வெளியிட்டபோது, தாலிபன் அரசு கடுமையாக எதிர்வினையாற்றியது. தாலிபன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஜாகிர் ஜலாலி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "ஆப்கானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டதில்லை. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் போது இந்த சாத்தியக்கூறு முழுமையாக நிராகரிக்கப்பட்டது, ஆனால் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன" என்று கூறினார். 2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எந்த தூதரக உறவுகளும் இல்லை. டிரம்ப் சமீபத்தில் தனது பிரிட்டன் பயணத்தின்போது பக்ராம் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்ட பின் இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், "பக்ராம் உலகின் மிகப்பெரிய விமானத் தளங்களில் ஒன்றாகும், அதை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலிருந்து அது ஒரு மணிநேர தூரத்தில் உள்ளது என்பதால் இப்போது அந்தத் தளத்தை மீண்டும் பெற விரும்புகிறோம்," என்று கூறியிருந்தார். இந்த ராணுவத் தளத்தைப் பற்றி அவர் பேசும் ஒவ்வொரு முறையும், சீனாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களிலும் அவர் இதைப் பற்றிப் பேசியுள்ளார். பக்ராம் விமானத் தளத்தைச் சீனா ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் பேசினார். இந்த விமானத் தளம் பல காரணங்களுக்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. தாலிபனுக்கு எதிரான போரில் இது 20 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான படைகளின் மையமாக இருந்தது. அமெரிக்க ராணுவம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியபோது, பெரிய அளவிலான ராணுவ உபகரணங்கள், ராணுவ வாகனங்கள் மற்றும் வெடிபொருட்கள் அங்கேயே விடப்பட்டிருந்தன. பக்ராம் விமானத் தளத்தை யார் கட்டியது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, சோவியத் ஒன்றியம் ஒன்பது ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது, 1988 இல் தனது படைகளைத் திரும்பப் பெற்றது பக்ராம் விமானத் தளம் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்டது. 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அது அவர்களின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது. 2001-ல் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, அது இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது. அப்போது பக்ராம் இடிபாடுகளாக மாறியிருந்தது. ஆனால் சுமார் 30 சதுர மைல்கள் (77 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் விரிவடைந்துள்ள அந்த தளத்தை அமெரிக்க ராணுவம் மீண்டும் கட்டியது. கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பக்ராம் தளம், அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமானத் தளங்களில் ஒன்றாக இருந்தது. இது பல கிலோமீட்டர் நீளமுள்ள வலுவான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அதன் சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பாக இருந்தது. எந்த வெளியாட்களும் அதற்குள் நுழைய முடியாது. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்கள் உள்ளன. பக்ராமின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று இரண்டரை கிலோமீட்டருக்கும் மேல் நீளமானது. டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, "இந்தத் தளத்தில் வலிமையான மற்றும் மிக நீளமான கான்கிரீட் ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதையின் தடிமன் சுமார் இரண்டு மீட்டர் ஆகும்." சீனாவின் அணுசக்தி மையத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, டிஎஃப்-61 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செப்டம்பர் 3, 2025 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் காணப்பட்டன. ஜூலை 2025-ல் பிபிசி ஆப்கன் சேவையால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, இந்த பெரிய ராணுவத் தளத்தில் சீனா இருக்கிறதா என்பதை கண்டறியச் செயற்கைக்கோள் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முந்தைய மற்றும் பிந்தைய செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு ராணுவ நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருப்பதும், போர் விமானங்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது. பக்ராம் ராணுவத் தளத்தில் பெரிய அளவிலான உத்தி ரீதியான மாற்றம் எதுவும் இல்லை என்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது. சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ், ஏப்ரல் 2025-ஆம் ஆண்டுப் படங்கள் இரண்டு ஓடுபாதைகளும் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக பிபிசி குழுவிடம் தெரிவித்தார். ஆனால் 2025-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் படங்களில் எந்த விமானமும் காணப்படவில்லை. பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள 'லோப் நூர்' என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பல மணிநேரம் ஆகலாம். ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒரு மணிநேரத்தில் கடந்துவிட முடியும். இந்த விமானத் தளத்தின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாலிபன் வீரர்கள் பக்ராம் விமானத் தளத்தில் அணிவகுப்பு நடத்தினர். இருபது ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் என மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்த ராணுவ தளத்திற்கு வருகை தந்ததிலிருந்தே இந்த ராணுவத் தளத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜோ பைடன் 2011-ல் பக்ராம் விமான நிலையத்திற்குச் சென்றார். ஆனால் அப்போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தார். ஏர் கால்குலேட்டர் வலைத்தளத்தின்படி, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் அணுசக்தி திட்டம் தொடர்பாக பதற்றம் உச்சத்தில் உள்ள இரானில் இருந்து இந்த விமான தளத்தின் வான் வழி தூரமும் சுமார் 1644 கிலோமீட்டர் ஆகும். அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது உச்சத்தில் உள்ளது. மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்துக்கும் இந்த விமானத் தளம் முக்கியமானது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, பக்ராம் விமானத் தளத்தில், அமெரிக்க வீரர்கள் விட்டுச் சென்ற ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்தித் தாலிபன் படைகள் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. சீனாவின் பதில் என்ன? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, டிரம்பின் கருத்துக்கு சீனாவின் பதில் மிகவும் நிதானமாக இருந்தது. பக்ராம் விமானத் தளம் குறித்த டிரம்பின் கருத்துக்கு கடந்த சனிக்கிழமை சீனாவிடம் இருந்தும் ஒரு பதில் கிடைத்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், "ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீனா மதிக்கிறது, அதன் எதிர்காலம் ஆப்கானிஸ்தான் மக்களின் கைகளில் இருக்க வேண்டும்" என்று கூறினார். அவர், "பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவைப் பெறாது என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார். தற்போது, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு ரஷ்யாவைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால், சீனாவுக்கும் தாலிபனுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறலாம். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான நாடுகளுக்கு தூதரகங்கள் இல்லை, ஆனால் சீனா தனது தூதரை இங்கு அனுப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு தாமிர சுரங்கத்தின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர். சீனாவுக்கு இது ஏன் ஒரு பதற்றமான விஷயம்? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விடப்பட்டிருந்தன. சர்வதேச விவகார நிபுணரும், டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியருமான ரேஷ்மா காசி, பிபிசி நிருபர் மான்சி தாஷிடம் ஒரு பிபிசி நிகழ்ச்சியில், உத்தி ரீதியாக இது மிகவும் முக்கியமானது என்று கூறினார். அவர், "இது உத்தி ரீதியாக ஒரு முக்கியமான மையம் மட்டுமல்ல. இங்கிருந்து ஒரு மணிநேர தூரத்தில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதன் அணுசக்தி மையங்கள் உள்ளன. அதன் கண்காணிப்புக்கும் இது மிகவும் முக்கியமானது. இந்தத் தளத்திலிருந்து இரான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளைக் கண்காணிக்க முடியும்" என்றார். அவர் கூற்றுப்படி, தற்போது பக்ராம் விமானத் தளம் உலகளாவிய புவிசார் அரசியலின் ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டது. அவர், "சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் மிகவும் அதிநவீனமானவை. அது இந்தத் திசையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2030-க்குள் சீனாவிடம் 1000 அணு ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை எடுத்துச் செல்வதற்கான அதிநவீன ஏவுகணை அமைப்புகளும் அதனிடம் உள்ளன" என்றார். "ஒரு எதிரி நாட்டின் விமானத் தளம் இவ்வளவு அருகில் இருப்பது சீனாவுக்கு ஒரு கவலைக்குரிய விஷயம். அணு ஆயுதங்களின் போக்குவரத்து, பராமரிப்பு, அவற்றின் பயன்பாடு அல்லது வேறு நாட்டுக்கு அவற்றைக் கொடுக்கும் நடவடிக்கை ஆகியவை கண்காணிப்பில் வரலாம்," என்கிறார் ரேஷ்மா காசி. பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் 'பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்' (BRI) திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ykv5xxdko
1 week 1 day ago
உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥) நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து. உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல். நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டையை உடைத்துக் கொள்கின்றோம். பிழைகளும் வழுக்களுமாக, சென்று சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேரமுடியவில்லை. காரணம், எண்ணங்கள் பல வாக்கில். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் கூடச் செலவு செய்திருப்போம். வேலைக்காகவில்லை. எழுந்து காலார ஒரு நடை போய்விட்டு வந்தானதும், பிழை தென்படுகின்றது. ஐந்து மணித்துளிகளில், வேலை முடிவுக்கு வருகின்றது. என்ன காரணம்? தனிமையில் நடந்து செல்லும் போது, நடப்புக்கு வருகின்றோம். எல்லாத் தளைகளிலும் இருந்து விடுபட்டு, மனம் ஒருமுகம் கொள்கின்றது. தெளிவு பிறக்கின்றது. மனமார்கின்றோம். பிழை எளிதில் தென்படுகின்றது. சரி செய்கின்றோம். நிரலோட்டம் வெற்றி அடைகின்றது. இதுதான் உளமார்ந்திருத்தல். தற்காலத்தில் மனம்கொள்தல் முன்முடிவுகளின்றி இருத்தல் சலனமற்றுத் தெளிந்திருத்தல் பரிவுடன் இருத்தல் உணர்ந்திருத்தல் இவையாவும் மனமேயாக இருப்பதுதான் உளமார்ந்திருத்தல். இதனால், மனநலமும் மெய்நலமும் சமூகநலமும் மேம்பட்டே தீருமென்பதுதான் அறிவியலாய்வுகளின் அடிப்படை. இத்தகு துறையில், பேராசிரியராக, ஆய்வறிஞராக, நம்மவர் ஒருவர் இருக்கின்றாரென்பது நமக்கெல்லாம் பெரிய பெருமை. நிமிர்வு கொள்ள வேண்டும். டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள், புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல், சமூக வர்க்கம் ஆகியவற்றை, விமர்சனக் கலாச்சார உளவியல் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றார் (www.mindfuldignity.com). அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினரான டாக்டர். மகாலிங்கம் அவர்கள், தனது கற்பித்தல், ஆராய்ச்சி, வழிகாட்டுதலுக்காக பல விருதுகளைப் பெற்றதோடு, “தமிழ் அமெரிக்கன் முன்னோடி (𝑻𝒂𝒎𝒊𝒍 𝑨𝒎𝒆𝒓𝒊𝒄𝒂𝒏 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓 𝑨𝒘𝒂𝒓𝒅)” விருதையும் பெற்றவர். https://youtu.be/rSJ6Rb3VYW4 அன்றாடம் கவிதை, கதை, ஏன் டைரியில் ஒரு பக்கம் எழுதுவது கூட, நம்மை மனமார்தலுக்கு இட்டுச் செல்லும். இது போன்ற நுண்ணிய தகவல்களையும் பயிற்சிகளையும் நமக்குத் தருகின்றார் பேராசியர் அவர்கள். மாணவர்கள், இளையோர், அலுவலர்கள், ஏன் நாம் எல்லாருமே நுகர்ந்து பயன்பெற வேண்டிய தருணம். மிச்சிகன் பல்கலைக்கழகச் சான்றிதழுடன் கூடிய 10 மணி நேர வகுப்பு: https://www.coursera.org/learn/mindfulness-dignity-and-the-art-of-human-connection நாளொரு மணி நேரமாகக் கூட பயின்று பயன் கொள்ளலாம்! "𝗕𝗲 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗲𝗲𝘁 𝗮𝗿𝗲, 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗺𝗶𝗻𝗱𝗳𝘂𝗹𝗻𝗲𝘀𝘀." 🧘♂️✨ -பழமைபேசி. https://maniyinpakkam.blogspot.com/2025/07/blog-post_31.html
1 week 1 day ago
ஹெச்1பி விசா கட்டண உயர்வு: இந்தியாவை விட அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும் என்று கருதப்படுவது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் டிரம்ப் தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் நிகில் இனாம்தார் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பயம், குழப்பம், பின்னர் வெள்ளை மாளிகையின் விளக்கம் என ஹெச் 1-பி விசாவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான வார இறுதியாக இருந்தது. வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்மிகு தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி 100,000 டாலராக அறிவித்தார். இது தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தன, ஹெச்1பி விசா வைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் விமான டிக்கெட் தேடி அலைந்தனர், உத்தரவை புரிந்துகொள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சனிக்கிழமை, வெள்ளை மாளிகை இந்தக் குழப்பத்தைத் தணிக்க முயன்று, கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதுவும் ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், நீண்ட காலமாக இருந்த ஹெச் - 1பி திட்டத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது. இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒன்றாக கருதப்பட்டது. இந்த மாற்றங்களுடனும், மூன்று தசாப்தங்களாக இந்தியர்களின் "அமெரிக்க கனவை" நனவாக்கி, அமெரிக்க தொழில்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கிய ஹெச்1பி திட்டத்தை இந்தக் கொள்கை பெருமளவு தடுக்கிறது. இந்த ஹெச் - 1பி திட்டம் இந்தியாவையும் அமெரிக்காவையும் மாற்றியமைத்தது. பட மூலாதாரம், Getty Images இந்தியர்களுக்கு, இது ஒரு கனவு பயணமாக மாறியது. சிறு நகரங்களைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் டாலர்களில் சம்பாதிக்க ஆரம்பித்தனர், குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்தன, விமான நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல துறைகள் உலகம் சுற்றும் இந்தியர்களுக்காக உருவாயின. இந்தத் திட்டம் ஆய்வகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய நிறுவனங்களை நிரப்பும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. இன்று, இந்திய வம்சாவளியினர் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். அமெரிக்க மருத்துவர்களில் சுமார் 6% இந்தியர்கள். ஹெச் -1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், சமீப ஆண்டுகளில் 70% க்கும் மேல் விசாக்கள் இந்தியர்களுக்கு கிடைத்தன. (சீனா இரண்டாவது இடத்தில், சுமார் 12%) தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களின் பங்கு இன்னும் பெரியது. 2015-ல் கிடைத்த தகவலின்படி, 80% க்கும் மேற்பட்ட "கணினி" வேலைகள் இந்தியர்களுக்கு சென்றன. அந்த நிலை இப்போதும் பெரிதாக மாறவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். மருத்துவத் துறையிலும் இது தெளிவாகிறது. 2023-ல், 8,200-க்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்தியா, சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக உள்ளது. (பொதுவாக ஹெச் - 1பி விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) அவர்களில் 22% இந்தியர்கள். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் கால் பங்கு வெளிநாட்டவர்கள் என்ற நிலையில், ஹெச் - 1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் மொத்தத்தில் 5-6% இருக்கலாம். டிரம்பின் புதிய 100,000 டாலர் கட்டணம் நடைமுறையில் முற்றிலும் செயல்படுத்த முடியாதது. 2023-ல் புதிய ஹெச்-1பி ஊழியர்களின் சராசரி சம்பளம் 94,000 டாலர் மட்டுமே. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு 129,000 டாலர். இந்தக் கட்டணம் புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கே மட்டுமே பொருந்துவதால், பலர் இதை செலுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். "புதிதாக ஹெச் -1பி விசா பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால், உடனடி பாதிப்பு இல்லாமல், நடுத்தர மற்றும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம்," என்று நிஸ்கனென் மையத்தின் குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் கில் குவேரா பிபிசியிடம் கூறினார். இந்தியா முதலில் பாதிக்கப்படலாம், ஆனால் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் ஆழமாக இருக்கலாம். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் முன்பிருந்தே இதற்கு தயாராகி வருகின்றன. புள்ளிவிவரங்கள் இதுகுறித்த புரிதலை தருகின்றன. ஹெச்-1பி விசா பெறுபவர்களில் 70% இந்தியர்கள். ஆனால், 2023-ல் முதல் 10 ஹெச்-1பி வேலை அளிக்கும் நிறுவனங்களில் மூன்று மட்டுமே இந்தியாவுடன் தொடர்புடையவை, 2016-ல் இது ஆறாக இருந்தது என்று பியூ ஆய்வு கூறுகிறது. இருந்தாலும், 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, தனது வருவாயில் பாதிக்கு மேல் அமெரிக்காவுக்கு திறமையான ஊழியர்களை அனுப்புவதை நம்பியுள்ளதால், பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விசா கட்டண உயர்வு அமெரிக்காவிலுள்ள சில "திட்டங்களின் வணிகத் தொடர்ச்சியை பாதிக்கலாம்" என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் எச்சரிக்கிறது. இந்த சட்டம் குறித்த தெளிவு கிடைக்கும் வரை, வாடிக்கையாளர்கள் திட்டங்களுக்கு புதிய தொகை நிர்ணயம் செய்யவோ அல்லது தாமதிக்கவோ வலியுறுத்தலாம். நிறுவனங்கள் தங்கள் பணியாளர் முறையை மாற்றலாம், அதாவது வேலையை வெளிநாடுகளுக்கு மாற்றுதல், அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளை குறைத்தல், ஸ்பான்சர்ஷிப் வழங்கும் போது மிகவும் தேர்வு செய்து செயல்படுதல் போன்றவை. இந்திய நிறுவனங்கள் கூடுதல் விசா செலவுகளை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று முன்னணி பணியாளர் நிறுவனம் CIEL HR-இன் ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகிறார். "முதலாளிகள் அதிக செலவு தேவைப்படும் விசா ஸ்பான்சர்ஷிப்பை ஏற்க தயங்குவதால், தொலைதூர ஒப்பந்தங்கள், வெளிநாட்டு சேவைகள், தற்காலிக பணியாளர்களை அதிகம் நம்பலாம்," என்று அவர் விளக்குகிறார். அமெரிக்காவுக்கு இதன் தாக்கம் கடுமையாக இருக்கலாம். மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், ஸ்டெம் (STEM-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை ஒருங்கிணைக்கும் துறை) மாணவர்களை ஈர்க்க முடியாமல் தவிக்கும் பல்கலைக்கழகங்கள், கூகுள் அல்லது அமேசான் போன்ற பெரிய செல்வாக்கு இல்லாத புதிய நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம். "இந்த விசா கட்டண உயர்வு அமெரிக்க நிறுவனங்களை தங்கள் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றவும், பல வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் கட்டாயப்படுத்தும். அமெரிக்காவில் நிறுவனங்களை நடத்த வரும் தொழில்முனைவோர் மற்றும் தலைமை நிர்வாகிகளையும் தடுக்கும். இது அமெரிக்காவின் புதுமை படைத்தல் மற்றும் போட்டித்திறனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கேட்டோ இன்ஸ்டிட்யூட்டின் குடியேற்ற ஆய்வு இயக்குநர் டேவிட் பியர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், San Francisco Chronicle via Getty Images படக்குறிப்பு, ஹெச் - 1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதில் பயன் பெறுபவர்களில் 70% க்கும் அதிகமானோர் உள்ளனர். இந்த கவலை மற்ற நிபுணர்களாலும் பகிரப்படுகிறது. "அமெரிக்காவில் தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகள் மிகவும் முக்கியமானவை என்பதால், சில ஆண்டுகள் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை அமெரிக்க பொருளாதாரத்தையும் நாட்டின் நலனையும் கடுமையாக பாதிக்கலாம்," என்று குவேரா கூறுகிறார். "இது திறமையான இந்தியர்களை வேறு நாடுகளில் கல்வி கற்கத் தூண்டலாம். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்படலாம்." உண்மையில், இதன் தாக்கத்தை மிகவும் நேரடியாக உணரப் போகிறவர்கள் இந்திய மாணவர்கள் தான். அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். 120 பல்கலைக்கழகங்களில் 25,000 மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட அமெரிக்க இந்திய மாணவர் சங்கத்தின் நிறுவனர் சுதான்ஷு கௌஷிக், செப்டம்பர் மாத சேர்க்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததால் புதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்கிறார். "இது நேரடி தாக்குதல் போல் உணரப்பட்டது. மாணவர்கள் ஏற்கனவே 50,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை செலவு செய்துவிட்டனர். ஆனால் அமெரிக்க வேலைவாய்ப்புக்கான முக்கிய பாதை இப்போது மூடப்பட்டுவிட்டது," என்று கௌஷிக் பிபிசியிடம் கூறினார். பல இந்திய மாணவர்கள் நிரந்தரமாக குடியேறக்கூடிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால், அடுத்த ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழக சேர்க்கைகள் பாதிக்கப்படலாம் என்று அவர் கணிக்கிறார். இந்த கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்பின் இந்த நடவடிக்கை விரைவில் சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். "புதிய ஹெச்1பி கொள்கை அமெரிக்காவுக்கு பல எதிர்மறை விளைவுகளைத் தரலாம். ஆனால் அவை எப்படி இருக்கும் என்பது தெரிய சிறிது காலம் ஆகும்," என்று குவேரா குறிப்பிடுகிறார். "உதாரணமாக, நிர்வாக உத்தரவு சில நிறுவனங்களுக்கு விலக்கு வழங்க அனுமதிக்கிறது. அதனால் அமேசான், ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற அதிக அளவில் ஹெச்1பி பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறக்கூடும். ஆனால் அவர்கள் அனைவரும் விலக்கு பெற்றால், அந்தக் கட்டணத்தின் நோக்கமே வீணாகிவிடும்." இந்த ஹெச்1பி மாற்றம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரி போல் இல்லாமல், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக தோன்றுகிறது. ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களும் அவர்களது குடும்பங்களும் ஆண்டுக்கு சுமார் $86 பில்லியன் பங்களிக்கின்றனர், இதில் $24 பில்லியன் பெடரல் வரிகளாகவும், $11 பில்லியன் மாநில மற்றும் உள்ளூர் வரிகளாகவும் செல்கின்றன. நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்து, அமெரிக்கா புதுமையிலும் திறமையிலும் முன்னிலை வகிக்குமா அல்லது மற்ற நாடுகளுக்கு வாய்ப்பளிக்குமா என்பது தீர்மானிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6xndpl65ro
1 week 1 day ago
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் 23 Sep, 2025 | 03:50 PM போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் துரைசார் அதிகாரிகள் ஆகியோருடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கடற்றொழிலாளர்களை, போதைப்பொருள் கடத்தலுக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது பற்றி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்தது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோன்று இது பற்றி கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்திகளை பெருக்குவது பற்றி நெக்டா நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன. https://www.virakesari.lk/article/225857
1 week 1 day ago
எனக்கு… 🚰 தண்ணியிலை கண்டம் இருக்கு என்று சிவன் கோயில் சாத்திரியார் சொன்ன படியால், மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் 🛀🏾 🪣ஒரு வாளி தண்ணீரில் குளிப்பேன். 😂
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed