1 week ago
வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது... தமிழர் பண்பாடு சாத்தான். 😄 வாழ்த்துக்களுக்கு நன்றி, இணையவன். 🙏
1 week ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி.
1 week ago
அப்பாடா ஒருவாறு எல்லோருக்கும் நன்றி சொல்லி முடித்தாயிற்று.
1 week ago
ஆம் அவர் விக்கேட் கீப்பர் தான் தொடக்க வீரராய் விளையாட விட்டால் நல்ல தொடக்கம் கொடுப்பார் இந்த உலக கோப்பையில் ஒரு விளையாட்டில் தான் விளையாடி இருந்தார்.................நம்பீயா அணிக்கு கூட....................
1 week ago
பழைய நண்பர்கள் லிஸ்டில் சுமந்திரனை சேர்த்தேன். பின் நீக்கி விட்டேன்….. யாழில்….திரிகளுக்கு கவனத்தை ஈர்க்க என சில பொது உத்திகள் உண்டு…. அவற்றில் ஒன்று சுமந்திரனை இழுக்க வேண்டிய இடத்தில் இழுக்காமல் விடுவது 😂. யாழ் களத்தில் சுமந்திரன் உப்பு மாரி… கூட போட்டாலும், குறைய போட்டாலும், அளவா போட்டாலும், போடாமல் விட்டாலும் எதிர்வினை வரும்😂. இதில் நான் சுமந்திரனை போட்டு இருந்தால் எக்ஸ்ராவா ஒரு லைக் கிடைச்சிருக்கும்… ஆனா இப்போ 3 கொமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு… இனி வியூசும் எகிறும்…. இதெல்லாம் #தொழில் ரகசியம்😂
1 week ago
ஹா ஹா.................
1 week ago
தலைக் கனம் சுத்தமாய் இல்லை பெடியன் தானும் தன்ர பாடும்.............இந்தியா அணி போன வருடம் இங்லாந் சென்று விளையாடின போது வஸ்சின்டன் சுந்தர் தான் அணிய கரை சேர்த்தவர் இல்லையேன் இங்லாந் டெஸ்ட் தொடரை வென்று இருக்கும்................... 2ஓவர் போட்டு 17ரன்ஸ் ஒவருக்கு கிட்ட தட்ட 8ரன்ஸ் படி கொடுத்து இருக்கிறார்.............. இந்தியாவின் மட்டையடி வீரர்கள் ஆரம்பம் முதலே சுதப்பல்...............இந்த இடத்தில் கோலி இல்லை என்றது வெளிப்படையாய் தெரிந்தது..............கோலி தனி ஒருவனாய் அணிய வெல்ல வைச்சவர்.............அவரின் இடத்தை இப்போது உள்ள இந்திய வீரர்களால் நிரப்ப முடிய வில்லை....................
1 week ago
ASWASUMA · Stepy Guna ·roesoSdnptgg5fr7c15f,é0t1553t5avie6i g08i29g5t:50c23 fm0rafu · எனக்கு இன்று தான் தெரியும் இந்த தகவல்....முன்பே தெரிந்திருந்தால் எனது அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி இறந்திருக்க மாட்டார்... நீங்கள் யாரும் என்னைப்போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பதிவிடுகிறேன். ஜனாதிபதி நிதியம் என்றால் என்ன?? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அதனால் மக்களுக்கு என்ன பயன்??? வாருங்கள் பார்க்கலாம்.... இலங்கையில் பல குடும்பங்களுக்கு மருத்துவச் செலவு உண்மையிலேயே மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் President’s Fund (ஜனாதிபதி நிதியம்) வழங்கும் மருத்துவ நிதி உதவி பலருக்கு ஆதரவாக உள்ளது. President’s Found – ஜனாதிபதி நிதியம் இந்த நிதியம் என்ன செய்கிறது? விசேட மருத்துவ சிகிச்சைகளுக்கான நிதி உதவி சிகிச்சைக்கு முன் (advance) பணம் பெறும் வசதி சிகிச்சைக்குப் பிறகு reimbursement ஆக விண்ணப்பிக்கலாம் பிரதேச செயலகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கடந்த காலங்களில் கடினமான அறுவை சிகிச்சைகள், cancer சிகிச்சைகள், இதய சிகிச்சைகள் போன்றவற்றிற்காக ரூ. 10 லட்சம் வரை நிதி வழங்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன. தற்போது உதவி தொகையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மருத்துவர் பரிந்துரை கடிதம் மருத்துவ செலவு மதிப்பீட்டு கடிதம் வருமான சான்றிதழ் (Divisional Secretariat / Grama Niladhari மூலம்) தேசிய அடையாள அட்டை (NIC) நகல் வங்கி கணக்கு விவரங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது: இது கடன் அல்ல திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை தகுதியுள்ளவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவி ஒரு உயிரைக் காப்பாற்ற பணம் தடையாக இருந்தால், அந்த தடையை உடைக்க இந்தநிதி பயன்படலாம். .....இந்த தகவலை ஏனையோரும் பயனடைய அதிகமாக பகிருங்கள்.......!
1 week ago
அது சட்டப் பிரச்சினை ஆகிவிடும் கோடு, கச்சேரி, வழக்கு, நட்ட ஈடு என்று அலைய… கோசானுக்கு என்ன விசரே… 😂 இழகின இரும்பை கண்டால்… கு*டியை தூக்கி தூக்கி… குத்திப் போட்டு போக வேண்டியதுதான். 🤣
1 week ago
1 week ago
இந்த வார முடிவில் எனக்குத் தெரிந்தவர்களின் ஆலோசனை உடன் வருகிறேன்
1 week ago
நல்ல விடயங்களின் அடக்கம் .......பயனுள்ளவை . ........! நேரம் கிடைக்கும்போது வாசிக்க வேண்டும் ..........! நன்றி கிருபன் ......! 👍
1 week ago
அருமையான நடப்பு அரசியல் அலசல் .........! 😂
1 week ago
நல்ல செயல் + முன்னேற்றம் ......! 👍
1 week ago
தமிழ் மக்களுக்கு ஒரு நல்லது நடக்க தமிழனே விடமாட்டான் ........ அவ்வளவும் கூடைக்குள் இருக்கும் நண்டுகள் .......! ஒரு ஊர் கதை .......ஒரு அதிகாரியிடம் கையொப்பம் வாங்க ஒருத்தர் போனார். அந்த அதிகாரியும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் போகிற ஒருத்தர் இவரிடம் ஒரு அரைபோத்தலோடு முடிகிற அலுவலுக்கு நீ நீதி நேர்மை என்று அல்லாடுகிறாய் என்று .......! 🙃
1 week ago
1 week ago
அர்ச்சுனா mp யின் காணிகளால் அவதியுறும் மக்கள் ! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறும் உள்ளது. அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர். வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ யாரும் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அருகில் உள்ள ஆலயத்துக்கு, அருகில் உள்ள கடைக்கு கூட செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது. காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அந்த காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன. அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே? அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர். புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கூறுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.. அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்து பரீட்சித்து, அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் இருக்கின்றார்களா என பரீட்சித்து பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம். இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர். https://athavannews.com/2026/1465888
1 week ago
தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு. தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 5.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை 15,000 மில்லியன் ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்துக்கு 27 மில்லியன் ரூபா செலவில் 209 பாதுகாப்பு கெமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கணினி மயமாக்கல் திட்டத்தில் 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டப்லெட் கணினிகளுக்காக 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் வரவைப் பதிவு செய்ய 657 கைரேகை இயந்திரங்களை 31 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு, பொலன்னறுவை, தபால் தலைமையகம் மற்றும் மத்திய தபால் பரிமாற்றம் ஆகிய கட்டடங்களில் 24 மில்லியன் ரூபா செலவில் சூரிய சக்தி மின்சாரத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இப்பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1465881
1 week ago
தொல்பொருள் திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை, பொலிஸ், இராணுவம் போன்றவை... தமிழர் பகுதிகளில்தான்... தமது அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழனுக்கு ஆப்பு அடிக்கும் செயல்களை செவ்வனே செய்கின்றார்கள். வைக்கோல் பட்டடை 🐕🦺கள்.
1 week ago
வாழ்த்துக்களுக்கு நன்றி, எப்போதும் தமிழன். 🙏
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed