புதிய பதிவுகள்2

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
அது தான் தீரப்பு,..சிறந்த நீநியான. சட்டப்படியான தீர்ப்பு ஆனால் இங்கே சீமான் வழக்கில் வழங்கும் தீர்ப்பென்பது சீமான் எந்தவொரு பெண்ணையும். அவரது விருப்பம் போல் கசக்கி பிழியாலாம் என்ற சட்டத்தின்படி வழங்கப்படுகிறது .....இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா இந்தியாவில் என்ற ஐயப்பாட்டை. எனக்கு எற்படுத்துகிறது ......ஒரு வழக்கின் தீர்ப்பை அது சரியான தீர்ப்பு தானா என்று 7. பேர்கள் கொண்ட குழு ஆராய்ந்து 4. பேருக்கு மேல் ஒத்துக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும் அதாவது சரியான தீர்ப்பு ஆகும் இலங்கையில் இப்படி இருந்தது, .இந்தியாவில் இப்படி இல்லையா?????

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
தகவலுக்கு நன்றிகள் பல. எனக்கு இது தெரியாது அவர் தான் இணைத்தது உண்மை என்றும் இணைத்து இருக்க வாய்ப்புகள் உண்டு .....ஆனால் இப்போது பொய் என்று தெரிந்த பின்னர் அதை அது பொய் என்று எற்றுக்கொண்டு வாபஸ் பெற வேண்டும் இது யாழ் களத்தின். வளர்ச்சிக்கும். அவரது வளர்ச்சிகும். அவசியமாகும் 🙏

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
ஓம்…மத்திய அரசின் கீழ் இருந்தாலும் தமிழ் நாட்டு நீதிபதிகள் முற்போக்கானவர்கள்… வடக்கே போக, போக கோமிய பாவனை காரணமாக மூளை மாட்டு மூளை போல் மாறிவிடும். நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மத்திய பாடத்திட்டத்தில் இப்போ புட்பகவிமானம், அனுமன் சஞ்சீவியை தூக்கியதை எல்லாம் வரலாறு என சேர்க்கப்போகிறார்களாம். வரும் காலத்தில் மாட்டு மூளை, அமிபா மூளையாக வாய்புண்டு.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 week ago
ரசோதரன் கதை. உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது. “டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
இனி வேலைக்கு என்ன செய்யலாம்? ஏதாவது கட்சி தொடங்கி, புலம்பெயர் முட்டகோசுகளிடம் திரள்நிதி திரட்டலாம் என யோசிக்கிறேன்😂 பிகு விஜி அண்ணிக்குத்தான் வாய்பூட்டு 😂. சீமானை தொடர்ந்தும் செ.சை என அடையாளப்படுத்த தடை ஏதும் இல்லை.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
ஊகங்களுக்கும் கிசு கிசு களுக்கும் உலக சினிமாவும், உலக அரசியலும் கூட விதிவிலக்கல்ல. அண்மையில் பிரெஞ் அதிபர் தன் மனைவி(அவரின் முன்னாள் ஆசிரியை) ஒரு ஆணாக இருந்து மாறிய பெண் அல்ல என அமெரிக்க நீதிமன்றில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இதே போல் மிஷேல் ஒரு ஆண், ஒபாமா ஓரினசேர்க்கையாளர், ஹிலரி கிளிண்டன் ஏலியன் என பல பக்கோடாக்கள் இன்றளவும் விற்பனையில் உண்டு. ஆனால் இவற்றை எண்ணத்தில் சிறியோர் பேசி/எழுதி இன்புற்றாலும், எண்ணத்தில் பெரியோர் வெறும் ஊகங்கள் என கடந்து போவதே வழமை. இதுவும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியை பற்றி, அவரின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு எழுதலும் ஒன்றல்ல. பிகு நீங்கள் கூட ஸ்டாலின்- செய்தி வாசிப்பாளர் என்ற கதையை காவி திரிகிறீர்கள். குறிப்பிட்ட செய்தி வாசிப்பாளர், ஜெயிற்கு நெருக்கமானவர், பகிரங்கமாக இப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்த போதும்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
சீமான் தான் கூறிய கிலோ கணக்கான போய்களை அவை படு பொய்கள் என்று ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்ட பின்பு கூட வருத்தம் தெரிவிப்பதில்லை அதற்கு பதில் கூட கருத்தியல் ரீதியாக தெரிவிப்பதில்லை. நைசாக நழுவி விடுவார். பின்னர் சில காலத்தின் பின்னர் அதே பொய்யை மீண்டும் வெட்கமில்லாமல் மீண்டும் கூறுவார். அண்ணன் எவ்வழி தம்பி அதே வழி. இருந்து பாருங்கள், இதே பொய்யை தமிழ் சிறீ சில காலத்தின் பின்னர் மீண்டும் வெட்கமில்லாமல் இணைப்பார். தமிழ் சிறி பொய்செய்திகளை பரப்புவது இது முதல் முறையுமல்ல.

பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

1 week ago
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1448513

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 week ago
தற்சார்பு வாழ்கை eotSsondrplg1m7hc92mllh0im23ai0fcttam5676mu710i06u2itf905 gg · பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர். முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன. ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர். விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது. இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.......! 😃

ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!

1 week ago
ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…! Vhg செப்டம்பர் 22, 2025 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி இராஜசிங்கம் 1989ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், கூடவே யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார். 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாட்களும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் மீது சேறடிப்பதற்காக இச்சம்பவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசு. பேரினவாதத்தின் ஏவலைத் தலைமேல் ஏற்று இயங்கும், “சொந்த நலன்களுக்காகவும், அற்பமான விருப்பு வெறுப்புகளுக்காகவும், குறுகிய பழிவாங்கல்களுக்காகவும் சேர்ந்த சிறு கும்பலொன்று ” அயர்ச்சி கொள்ளாமல், “ராஜினியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்” என்று ஒரு தலைமுறைக்கே பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், இன்று இந்த சிறு கும்பலின் நவதூவாரங்களிலும் சுண்ணாம்பை வைத்து அடைத்தது போன்றதொரு வேலையைச் செய்துவிட்டது சிங்கள பேரினவாத அரசு. 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த தினமுரசு பத்திரிக்கை ஒன்றில் அற்புதன் என்பவர் , ராஜினி இராஜசிங்கத்தை இந்திய அமைதிப்படையும், ஈபிஆர்எல்எப் அமைப்பும் இணைந்து படுகொலை செய்ததை அம்பலப்படுத்தி எழுதிய, அந்தக் கட்டுரையை கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியான சிங்கள அரசின் அதிகாரபுர்வ பத்திரிகை, “சிலுமின”வில், 23 ஆம் பக்கத்தில் மொழிபெயர்த்து பிரசுரித்திருந்தார்கள். அதே பக்கத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் யாழ் சுதுமலை அம்மன் கோயில் வளாகத்தில் ஆற்றிய உரை தொடர்பாகவும் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கின்றது. பல வருடங்களுக்குப் பிறகு சிறிலங்கா அரசு இந்த விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட காலப்பகுதியின் அரசியல் நிகழ்வுகளைப் படிக்க வேண்டும். கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுப்பது தொடர்பான பிரச்சினை நடந்து கொண்டிருந்த காலம் அது. சனாதிபதி கோட்டபாய துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அரசாங்க தரப்பின் பிறிதொரு தரப்பு அதை எதிர்த்து கொண்டிருந்த து. குறிப்பாக மகிந்த இராசபக்சவே எதிராக நின்றார். எதிர்ப்புகள் காரணமாகத் திட்டத்தை கைவிட்டார் கோட்டபாய. பதிலடியாக இந்தியா கொடுத்திருந்த கடன் ஒன்றை உடனடியாக திருப்பி தா எனக் கேட்டது. இந்திய அழுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே மேற்படி கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கை நிர்வாகத்திற்கு மகிந்தவின் புதல்வர் ஒருவர் நேரடி அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றார். இலங்கையுடனான இராசதந்திர உறவுகளில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய விரோத உணர்வாகும். சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பதற்காகப் பலத்த முயற்சி செய்து வருகின்றது இந்தியா. அதிலொன்றாக இந்திய மொழி திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. இதற்காக இந்திய மொழித்திரைப்படங்களை சிங்கள உபதலைப்புகளுடன் இருவெட்டுகளில் தெரு தெருவாக விற்கப்படுகின்றது. இருவெட்டு தயாரிக்கும் வேலைகள் இந்தியத் தூதரகத்தின் அனுசரணையுடன் புறக்கோட்டை மற்றும் தெகிவளை பிரதேசங்களில் இயங்கும் இரண்டு தொழில் இடங்களில் நடந்து வருகின்றது. தொடர் நாடகங்கள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தியா இப்படி முயற்சிகள் செய்து வரும் நிலையில், தம் மீது அழுத்தங்களைக் கொடுத்தால் இந்திய விரோதத்தை மக்கள் மத்தியில் வளர்த்து விடுவோம் என்ற செய்தியைச் சொல்லவே மேற்படி கட்டுரைகளை அரச பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தார்கள். இதற்குப் பதிலடியாகத் தான், லொகானி எனும் சிங்கள பாடகியின் பாடல், இந்திய நடிகரும், இந்திய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரின் கணவருமான அமிதாப்பச்சன் மூலம் இந்தியாவில் பிரபலமாக்கப்பட்டது. இதனால் இந்தியா தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்.... இந்தியாவுக்குச் சேதி சொல்லப் போய், நீண்டகாலம் பொத்தி வைத்துக் கொண்டிருந்த உண்மையை அவிழ்த்து விட்டு விட்டார்கள். மேற்படி கட்டுரையில் ராஜினி இராஜசிங்கம், இந்திய அமைதிப் படையின் கோரமுகங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த காரணத்தால், அவரை முடக்கும் நோக்கில் இந்திய அமைதிப் படையே ஈபிஆர்எல்எப் அமைப்பை ஏவி கொலை செய்தது என கூறப்படுகின்றது. அடுத்த கட்டுரையில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலையை புலிகள் மற்றும் சிங்கள தரப்பின் விருப்பு இன்றி இந்திய அரசு தனது ஏதேசதிகாரத்தை நிலைநாட்டியது என்ற கருத்துச் சொல்லப்படுகின்றது. இந்த விடயத்தை அரச பத்திரிக்கை ஒன்றின் மூலம் அதுவும் இவ்வளவு காலம் கடந்து வெளியிடுவது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். உண்மை எவ்வளவு தாமதமாக வெளியே வந்தாலும் சுடும். ராஜினி இராஜசிங்கம் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பை உருவாக்கி இந்திய அமைதி படையினரின் அயோக்கிய செயல்களை வெளிப்படுத்தி வந்திருந்தார். மேலும், இது தொடர்பான விபரங்கள் அடங்கிய “முறிந்த பனை“ எனும் நூலை, ஆங்கில மொழியில் சக விரிவுரையாளர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஊள், சிமாறிதரன் ஆகியோருடன் இணைந்து வெளியிட இருந்த தறுவாயில் படுகொலை செப்பப்பட்டிருந்தார். இந்நூலில் 1948 இல் மலையக தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், 1987 இல் அமைதியை காக்கின்றோம் என்ற பெயரில் இந்தியப் படை தமிழ் பகுதிகளில் செய்த அட்டூழியங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்த து. குறிப்பாக இந்திய அமைதிப்படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மட்டத்திலிருந்து இவ்வாறான விடயங்கள் ஆங்கில மொழியில் வெளிவருவது சர்வதேச கவனத்தைப் பெறும், அத்துடன் அமைதிப் படை என்ற பெயரில் இந்தியா செய்யும் கோரச் செயல்களை உலகின் முன் அம்பலப்படுத்தி விடும் என்ற பதற்றமே, ராஜினியின் படுகொலைக்குப் பிரதான காரணம் என்பதை, 22 வருடங்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசே இன்று உறுதிப் படுத்தி இருக்கின்றது. தமிழ்ச் சூழலில் புதிதாக எழுத வருபவர்கள், முற்போக்கு , இடதுசாரி அரசியலில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எல்லாம் அலேக்காக அள்ளிக் கொண்டு சென்று மூளைச் சலவை செய்ய இலக்கியம் - இடதுசாரியம் - முற்போக்கு அரசில் என இயங்கும் கும்பலொன்று இருக்கின்றது. இவர்களின் சூத்திரக் கயிறு சிறிலங்கா பேரினவாத அரசு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மெல்ல மெல்லவோ, அல்லது எந்த நாடகம் போட்டே தமிழர்கள் சுயமரியாதை, அந்தஸ்துடன் வாழ்வதற்கான உரிமையைக் கோருவதை மடைமாற்றுவது. இந்த இடுபணியை செய்ய கையிலெடுத்திருக்கும் பிரதான ஆயுதம் விமர்சனம் என்ற பெயரில் புலிகள் மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவதூறு பரப்பி வருவது. புதியவர்கள் இவர்களது வலையில் விழுவது தவிர்க்க இயலாத நிர்ப்பந்தம். ஏனெனில், இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாப்பியத்தனத்தை மீறி இங்குத் தடம் பதிப்பது இலகுவான காரியம் அல்ல. ஒரு உதாரணம் இதை விளங்கப்படுத்தும். சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வருடாந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளிலிருந்து ஈழத்து சூழலின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான தீபச்செல்வன் ஒதுக்கப்பட்டிருந்தார். இத்துணைக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் எழுத்தாளர் தீபச்செல்வன் வசிக்கின்றார். காரணம், தீபச்செல்வன் தமிழின விடுதலையை மூச்சாக கொண்டு எழுதி வருபவர். நன்கு அறியப்பட்ட தீபச்செல்வனுக்கே இந்த நிலைமை என்றால்….? இந்த மாபியா கும்பலின் ஒரு தரப்பு தான் ராஜினி இராஜசிங்கத்தை “விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள்“ என்பதைப் பிரச்சாரம் செய்து வருபவர்களும். தமிழ்ச் சூழலில் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் காலடி எடுத்து வைக்கும் புதியவர்களை எந்த கேள்வியுமின்றி புலி எதிர்ப்பை ( மறைமுகமாகத் தமிழின விடுதலை எதிர்ப்பு அரசியல் ) ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது தான் இவர்களது வேலை. இல்லையெனில் அங்கீகாரமும், வாய்ப்பும் இங்கு மறுக்கப்படும். இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களில் எந்த நேர் விளைவுகளும் இருப்பதில்லை. வெறுமனே காழ்புணர்வு மாத்திரமே இருக்கும். ராஜினி இராஜசிங்கம் முறிந்த பனை புத்தகத்தை எழுதியதற்காக விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகச் சொன்னார்கள். ஆனால், புத்தகத்தை வாசித்தால் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளும், இந்தியா அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய கொடூரங்களும் தான் அம்பலமாகி இருந்தது. விடுதலை இயக்கங்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் , குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவர்களது இராணுவ செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியவை அல்ல. அவை சரி செய்து கொள்ளப் பட வேண்டிய கருத்துகளாகவே இருந்தது. முறிந்தபனை நூல், முதலில் ஆங்கிலத்தில் தான் வெளிவந்தது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ராஜினி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் புத்தகம் வெளியே வந்திருக்கின்றது. தமிழ் மொழி பதிப்பு 1996 ஆம் ஆண்டு தான் வந்தது. ஆக, இங்கும் இந்த புத்தகம் விடுதலைப் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது எனச் சொல்வது அர்த்தமில்லாதது. புத்தகத்தில் கட்டுரை எழுதுவதற்காக தகவல் திரட்டிய விரிவுரையாளர் ஒருவர் , தான் இந்தியப் படை அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். அச்செய்திகள் அப்போதைய பத்திரிக்கையிலும் வெளி வந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படை யாழ் வைத்தியசாலையில் நடத்திய படுகொலைகள் மிகமிலேச்சத்தனமானவை. இந்த விடயம் வெளியே அதிகமாக கதைக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கே இருக்கின்றது. இன்றுவரை அதை அவர்கள் செய்கின்றார்கள். ராஜினி இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில் உள்ளூர் இராணுவ அதிகாரிகள் தன்னை பழிதீர்க்க முயல்வதாக எழுதி இருக்கின்றார். பொதுவாக விடுதலைப்புலிகள் தங்கள் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அவசியம் ஏற்படும் இடங்களில் மாத்திரமே மறுப்பு சொல்வார்கள். அதுவும் பிறர் மீது பழிகள் போடுவதில்லை. ஆனால், ராஜினி படுகொலை விவகாரத்தில் மறுப்பு சொல்லியதோடு, ஈபிஆர்எல்எப் ம், அவ்வமைப்பின் சார்பில் அப்போது வடகிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து இந்திய அமைதி படையுடன் இணைந்து செயற்பட்ட வரதராஜபெருமாளும் தொடர்பு பட்டதைச் சொல்லி இருக்கின்றார்கள். வரதராஜபெருமாள், இந்திய அமைதிப்படையுடனும், தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டும் செய்த அட்டூழியங்களை ராஜினி அம்பலப்படுத்தி இருந்தார். படுகொலைக்குப் பின்னர், தியாகி திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறுவது தொடர்பாக ராஜினியுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என வரதாராஜன் சொல்லி இருந்தார். ( தியாகி திலீபன் விரும்பியபடி விடுதலை புலிகளே அவரது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கொடுத்தனர்) இப்படி எழும் கேள்விகளும், ராஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் நிரூபிக்க வாய்ப்பிருந்தும் செய்யாமையும், இந்த படுகொலையை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்வது மூலம் இந்திய தரப்பு தப்பித்து கொள்ள முயல்வதும். ராஜினியை புலிகள் கொன்றார்கள் என பிரச்சாரம் செய்து நினைவு கூர்ந்து வருபவர்கள் ஒருபோதும் அவர் முறிந்த பனை நூல் மூலம் சொல்லிய விடயங்கள் தொடர்பாகக் கதைக்க விழையாமையும் உண்மை என்ன என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது. இன்று சிறிலங்கா பேரினவாத அரசே அந்த உண்மையை அம்பலப்படுத்தி உதவி இருக்கின்றது https://www.battinatham.com/2025/09/blog-post_480.html

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்

1 week ago
முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️

வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

1 week ago
வெனிசுவெலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 25 Sep, 2025 | 11:27 AM வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. https://www.virakesari.lk/article/226033

7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம்

1 week ago
7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 25 Sep, 2025 | 12:15 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2007இல் 7 வயது சிறுமியினது தந்தையின் சகோதரனான 32 வயதுடைய சித்தப்பா, அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில், அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு இடம்பெற்று வந்துள்ளது. குறித்த நபர், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்றமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டு, அந்த நபர் குற்றவாளியாக கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை இனங்காணப்பட்டார். இதனையடுத்து, இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/226041

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

1 week ago
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு துறவிகள் வசித்து வருவதாகவும் ஊடகப் பிரிவு கூறுகிறது. துறவிகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பன்சியாகம போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1448454
Checked
Thu, 10/02/2025 - 10:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed