புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ர‌ன்ஸ் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியாக‌ தான் இருக்க‌ முடியும்................ 250ர‌ன்ஸ்ச‌ தான்ட‌ போகுது வெஸ்சின்டிஸ் அணி..................

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week ago
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்........! --- இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ---

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
இவ‌ரின் விளையாட்டு இந்த‌ உல‌க‌ கோப்பையில் விய‌க்க‌ வைக்குது த‌லைவ‌ரே வான‌ வேடிக்கை காட்டுகிறார்...................ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தான் அணி வீர‌ர்க‌ள் மூன்று பேர் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌வை ஹா ஹா.....................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
hetmyer ரின் அடியைப் பார்த்து அப்பிடி சொல்லக்கூடாது பையா ....... கிறிஸ்கெய்ல் லுக்கு அடுத்து நான் ரசிப்பது ஹெட்மயரைத்தான் .......! ஒரு கட்ச் தவறி விட்டது .......அதனால் என்ன கண்ணுக்கு விருந்து இன்றைய அடி ......!

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

1 week ago
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை Feb 23, 2026 - 12:29 PM பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கரீதியான வாதங்கள் மூலம் அணுகுவதும் சமூகத்திற்கு முக்கியமானது என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தமக்கு அழைப்பு விடுத்தமைக்காக இரு சங்கங்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் சங்கம் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், புத்திசாலித்தனமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களுக்கு முன்னிலையில் கடினமான கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்றும், தமது கருத்துக்களைப் பாதுகாப்பதோடு மாற்றுக் கருத்துக்களுடன் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழுமியங்களுக்கு மதிப்பளித்தே தாம் இந்த அழைப்பை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தத்திற்குரியது. இடையூறு விளைவிப்பதை விட கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை முன்வைப்பதும், அச்சுறுத்தல் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கம் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் சமூகத்திற்கு மிக முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. பயனுள்ள நல்லிணக்கமும் முன்னேற்றமும் திறந்த உரையாடல்கள் மூலம் வெவ்வேறு பார்வைகள் சந்திக்கும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே, எனது கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உட்பட அனைத்து விமர்சகர்களையும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன். இத்தகைய தொடர்புகளையும் வாய்ப்புகளையும் நிராகரிப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. விவாதம் இன்றி பிளவுகள் மூலம் உறவுகளைக் கையாள்வது பலவீனமான செயலாகும். இரு சங்கங்களும் விடுத்த அழைப்பிற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எதிர்காலத்தில் உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன். நாமல் ராஜபக்‌ஷ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmlytrmar0007356py8sjusxx

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week ago
@vasee @ரசோதரன் ஜ‌க்க‌ம்மா சொல்லிட்டா இண்டைக்கு வெஸ்சின்டீஸ் வெல்லுது என்று................ ஜ‌க்க‌ம்மாவை அக்க‌ம்மா என்று சொன்ன‌ குருவின்ட‌ மூஞ்சையில‌ ஜ‌க்க‌ம்மா இன்று க‌ரிய‌ பூசுவா ஹா ஹா😄..........................

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

1 week ago
பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை Published By: Digital Desk 1 23 Feb, 2026 | 11:42 AM பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கையின் நிலையான தொலைபேசி எண்களை ஒத்த வெளிநாட்டு எண்களிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைத் தொடர்பு கொள்கின்றனர். ஆரம்பத்தில் வங்கி அதிகாரிகள் போலப் பேசி, உங்கள் கணக்கு தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறி பயமுறுத்துகின்றனர். பின்னர், சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகள் போன்ற ஆடை அணிந்த நபர்களுடன் வட்ஸ் ஊடாக வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தாங்கள் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கி, பொதுமக்களை விசாரணை செய்வது போலவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது போலவும் நடித்து அவர்களை நம்ப வைக்கின்றனர். உங்களது வங்கி கணக்கைப் பாதுகாப்பதாகவோ அல்லது சரிபார்ப்பதாகவோ கூறி, அவர்கள் வழங்கும் பல வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணம், பின்னர் இடைத்தரகர்கள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், வங்கி விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்களை எவருக்கும் பகிர வேண்டாம். இலங்கை பொலிஸார் ஒருபோதும் வட்ஸ் வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்தி பணப் பரிமாற்றங்களைக் கோருவதில்லை. இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்த மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், இவ்வாறான நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/239356

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

1 week ago
அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்! அக்குரெகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள் இருவரையும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற கொட்டாவையைச் சேர்ந்த ஜனக என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் ‘மல்வானே டுடு’ என்ற குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நபரே துப்பாக்கிதாரிகளை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து வந்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபர் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமையான இவர், மல்வானே டுடுவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு துப்பாக்கிதாரி உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட, தெல்துவ பகுதியில் உள்ள கறுவாத் தோட்ட காணி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சுனில் ரஞ்சித் என்ற துப்பாக்கிதாரி, விசாரணைகளின் போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். தாம் இராணுவத்தில் இருந்த காலத்தில் கரந்தெனிய சுத்தாவை அடையாளம் கண்டதாக அவர் கூறியுள்ளார். அக்காலகட்டத்தில் கரந்தெனிய சுத்தாவும் இராணுவப் பயிற்சியில் இருந்துள்ளார். இந்நிலையில் இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருந்தபோது, கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்த கரந்தெனிய சுத்தாவை மீண்டும் சந்தித்து நண்பராகியுள்ளார். இதன்போது, சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி இப்போது எனது வழக்குகளுக்காக ஆஜராவதில்லை, அவர் ‘லோகு பெட்டி’யின் வழக்குகளுக்கே ஆஜராகிறார். எனவே அவரை முடிக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தா தம்மிடம் கூறியதாக துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார். சட்டத்தரணியை மாத்திரமன்றி அவரது மனைவியையும் கொலை செய்யுமாறு கரந்தெனிய சுத்தா தமக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்னரும் தாம் ஹெரோயின் உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிதாரிகள் இருவரும் சாரதியும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கொலையின் பின்னர் துப்பாக்கிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. கொலைக்குப் பின்னர் கொட்டாவையிலிருந்து பேருந்தில் தெஹிவளைக்குச் சென்று, அங்கிருந்து அம்பலாங்கொடவுக்கு தப்பிச் சென்றுள்ளார். தாம் எங்கு மறைந்திருக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தாவிடம் கேட்டபோது, சரியான இடம் இல்லை, எங்காவது ஓரிடத்தில் இரு என அவர் பதிலளித்துள்ளார். இதனையடுத்தே அவர் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார். சந்தேகநபரான துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். https://athavannews.com/2026/1465944

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

1 week ago
தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் – கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை! வன்முறை அதிகரித்து வருவதால், தென்மேற்கு மெக்ஸிகோ முழுவதும் பல நகரங்களில் குற்றவியல் குழுக்கள் சாலைத் தடைகளை அமைத்துள்ளதாக குளோபல் அஃபேர்ஸ் கனடா எச்சரித்துள்ளது. புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் ஒரு தங்குமிடம் ஒழுங்காக உள்ளது, அங்கு கனடியர்கள் குறைந்த சுயவிவரத்தை வைத்திருக்கவும், ஊடக அறிக்கைகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார், மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் இருப்பதாகவும் கூறுகிறார். ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல்லின் தலைவரான ‘எல் மென்சோ’ இன்று இராணுவ சிறப்புப் படைகளுடனான மோதலின் போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை தூண்டப்பட்டது. மத்திய அரசு நிலைமையை ‘உற்று கண்காணித்து வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கனடாவிலிருந்து புவேர்ட்டோ வல்லார்ட்டா செல்லும் பல விமானங்கள் பயணத்தின் நடுவில் திரும்பிவிட்டதாக ஒரு ஆன்லைன் விமான கண்காணிப்பு காட்டுகிறது. https://athavannews.com/2026/1465967

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

1 week ago
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது 23 Feb, 2026 | 09:47 AM அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கியுள்ள மிக மோசமான பனிப்புயல் காரணமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9:00 மணி முதல் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பிரிவினரின் வாகனங்களைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகர மேயர் சொஹ்ரான் மம்தாணி விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, மக்கள் அனைவரும் தங்களது பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பனிப்புயல் இன்று திங்கட்கிழமை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்திற்குப் பனிப்பொழிவு இருக்கும் என்றும், இத்தகையதொரு பாரிய பனிப்புயல் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/239349

மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

1 week ago
மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது 23 Feb, 2026 | 04:26 PM (நெவில் அன்தனி) ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது. பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது. தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தேஜல் ஹசாப்னிஸ் 51 ஓட்டங்களையும் ராதா யாதவ் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஷமிமா சுல்தான மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ரேமா ராவத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோனியா மெந்தியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: தேஜல் ஹசப்னிஸ். https://www.virakesari.lk/article/239384

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

1 week ago
மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை - விமானங்கள் ரத்து பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது. கட்டுரை தகவல் ஒட்டிலி மிட்செல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் "எல் மெஞ்சோ", கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறையும் ஈடுபட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது. மெக்சிகோவில் மிகவும் அஞ்சப்படும் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) எனப்படும் போதைப்பொருள் கும்பலின் தலைவர் "எல் மெஞ்சோ" என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ். ஞாயிற்றுக்கிழமை அவருடைய ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் படுகாயமடைந்த "எல் மெஞ்சோ" உயிரிழந்தார். மெக்சிகோவின் மத்திய-மேற்கு ஜலிஸ்கோ மாநிலத்தில்(state) உள்ள தபல்பா நகரத்தில் நடைபெற்ற நடவடிக்கையின்போது ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) உறுப்பினர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது. "எல் மெஞ்சோ" கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அந்த போதைப்பொருள் கடத்த கும்பல் பல இடங்களில் சாலைகளை மறித்ததுடன், வாகனங்களையும் எரித்தது. இந்த வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜலிஸ்கோ மற்றும் மற்ற பகுதிகளில் தெருக்களில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வலம் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபிஃபா உலகக் கோப்பை நடக்கும் நகரங்களில் ஒன்றான குவாடாலாஜரா உட்பட பல நகரங்களில் இருந்து புகை கிளம்பியதை நேரில் கண்டவர்கள் வீடியோக்களாக எடுத்துள்ளனர். ஜலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமுஸ் நவரோ பொது போக்குவரத்து நிறுத்தம், பெருந்திரளானோர் கூடும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி வகுப்புகளை ரத்து செய்வதற்கான உத்தரவை (code red) வெளியிட்டுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சுற்றுலா பயணிகள், ஜலிஸ்கோவில் உள்ள ரிசார்ட்டுகளின் நகரமான புவெர்டோ வல்லார்டா (Puerto Vallarta) "போர் மண்டலமாக" காட்சியளிப்பதாக தெரிவித்தனர். இந்த வன்முறையின் போது நாடு முழுவதும் 250 இடங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வன்முறையில் ஈடுப்பட்டதாக 11 பேரும் சூறையாடல் மற்றும் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது. வன்முறையின் போது கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் சுமார் 20 வங்கி கிளைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,புவெர்டோ வல்லார்டா கடற்கரையில் புகை மூட்டங்கள் எழுந்தன. வன்முறைக்கு எதிர்வினையாற்றுவது தொடர்பாக மாநில (state) மற்றும் பெடரல் அதிகாரிகள் இடையே "முழு ஒத்துழைபபு" இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பௌம் தெரிவித்துள்ளார். மக்கள் "அமைதி காத்து, விழிப்புடன் இருக்குமாறும்" அவர் வலியுறுத்தியுள்ளார். "நாட்டின் பல பகுதிகளில் அனைத்தும் வழக்கம் போலவே செயல்படுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். ஏர் கனடா, யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஜலிஸ்கோவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன. ஜலிஸ்கோ, தமாலிபாஸ் மற்றும் மிசோகன், குவெர்ரெரோ மற்றும் நுவெ லியோனின் சில பகுதிகளில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேபோன்று, ஜலிஸ்கோவில் "தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்கள்" நடந்திருப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கம், "மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் எனவும் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "ஃபென்டனைலை நம் நாட்டுக்குள் கடத்தி வருபவர்களில் முக்கிய நபரான எல் மெஞ்சோ மெக்சிகோ மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு முக்கிய இலக்காக இருந்தார்" என தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின்போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உளவுத்தகவலை வழங்கியுள்ளது. 59 வயதான காவல்துறை முன்னாள் அதிகாரியான எல் மெஞ்சோ, அதிகளவிலான கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபென்டனைல் ஆகியவற்றை கடத்தும் குற்றப் பின்னணி கொண்ட பெரிய கும்பலை நடத்திவந்தார். எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருந்தது. நாட்டின் சிறப்புப் படையினரால் இந்த நடவடிக்கை "திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாக" மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v7dgw4zewo

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

1 week ago
நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை. மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான எல்க் மென்சோவைப் பிடிக்க அமெரிக்கா 15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்கு தேவையான முக்கிய தகவல்களை வழங்கி உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிக்கோவின் 8 மாநிலங்களில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் குழுவினர் பேருந்துகளை எரித்தும், வீதிகளை மறித்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது https://athavannews.com/2026/1465949
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed