புதிய பதிவுகள்2

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

1 week ago
24 Sep, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை சந்தித்திருந்தார். இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

1 week ago
"இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல. பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம். மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம். எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம்"

மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

1 week ago
மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார். 24 Sep, 2025 | 05:45 PM மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும்,சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார். மன்னார் போராட்டக்களத்தில் இன்று புதன்கிழமை (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை. அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும்,அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார். எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை.பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும்,ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும்,எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம். எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல்,தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது. வாழ்வது எமது உரிமை.அதை யாரும் பறிக்க முடியாது.அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும்.மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது. நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது. இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம் அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயல்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது. குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம்.மிகவும் வேதனையான விடையமாக அமைந்துள்ளது. கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத்திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மாவட்டச் செயலகமும்,அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப்போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.மக்களை அழிக்கும்,மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற,இத்தீவை இல்லாது செய்கின்ற செயல்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா?,என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர்களின் செயல்பாடு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது மண்ணையும்,வளங்களையும்,உரிமையையும் பாதுகாக்க எமது போராட்டம் தொடரும்.இனி வரும் நாட்களில் இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதே மிகவும் கவலைக்குரிய விடயம். மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை களை எடுப்போம் என அனைத்து அதிகாரிகளும் தெரிவித் திருந்தனர்.ஆனால் ஜனாதிபதியினுடைய அறிவித்தல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அது ஜனாதிபதியின் முடிவாக இருக்கின்ற நிலையில்,எங்களுடைய முடிவு எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்ற ஒரு முடிவு தான். எனவே இந்த போராட்டக் களத்தில் இருந்து சட்டங்களை மீறாது எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். சட்ட ரீதியாக மூன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.கனிய மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம்.14 காற்றாலை திட்டங்களுக்கு எதிரான இரு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடி என்றால் எமது மண்ணை மீட்க போராடுவது எமது உரிமை ; அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் | Virakesari.lk

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏 அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்'

1 week ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 ஆலயத்தில் 'கள்வர்கள் கவனம் உங்கள் நகைகளையும், பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்ற எச்சரிக்கும் பலகை கண்ணில் தெரிந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அலங்கார கந்தனை பார்த்தான். நீ இந்த அலங்கார கோலம் எனறால், பெண்களை எப்படி குறை சொல்லுவேன்? அவர்களுக்கும் ஆசை அடிமனதில் இருக்கும் தானே?? கள்ளனையும், ஏமாற்றி பறிப்பவளையும் ... ' ... அவன் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. சனநெருக்கம் அவனை வெளியே தள்ளிவிட்டது. என்றாலும் அவன் வாய், தன் வேதனையை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசியா ? உனைப்போன்ற பெண்ணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே எனைப்போன்ற ஆணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக் கொல்லாதே! ஐயோ ஸ்வாமினி [Swamini] நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்! ஆகஸ்ட் 21, தேர்த்திருவிழா இன்று. நல்லூர் திருவிழாவின் கடைசி பெரிய நாள் இது - தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். அருண், காலையில் வெக்கை என்பதால், வேட்டி சால்வையுடன் மட்டுமே வந்தான். ஆனால் இன்று தேவையான பணம் கொண்டு வந்தான். அவன் கண்களுக்கு இன்னும் வெட்கம் இல்லை. ஆரணி அங்கு நிற்கிறாளா எனத் தேடிக் கொண்டு இருந்தது. ஆசை யாரைத்தான் விடுகுது? இன்று அவனிடம் தாராளமாக பணம் இருப்பினும், ஒரு எளிய சாலையோர விற்பனையாளரிடமிருந்து வாங்கிய ஒற்றை சிவப்பு ரோஜாவை ஏந்தி, அங்கு காத்து நின்றான். அவன் கண்கள் அன்பால் நிறைந்திருந்தன. ஆரணி தூர வருவது அவனுக்கு தெரிந்தது, ஆனால் அவள் தனியவரவில்லை. ஒரு இளம் தம்பதியாக, அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடனும் அலங்காரத்துடனும் வந்து கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு தோழியையும் காணவில்லை. அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. அவன் நெஞ்சம் நடுங்கியது, அவன் இதயம் வெறுமையாகியது. அவள், அவனை கண்டும் காணாமலும், ஒரு கேலியான புன்னகையுடன் கூட்டத்திற்குள் நழுவினாள். அருணின் கையிலிருந்து ரோஜா தூசி நிறைந்த தெருவில் விழுந்தது. அவன் மனம் வாழ்வதா சாவதா என்று காதல் மேல் கோபம் கொண்டு ஏதேதோ புலம்பத் தொடங்கியது. அவன் இப்ப தத்துவவாதி (Philosopher) ஆகிவிட்டான் தீ குச்சிகளை தேடிக்கொண்டிருக்காதீர்கள் அவளிடம் கேளுங்கள் சிரிப்பில் இருந்து நெருப்பை உண்டாக்குவது எப்படி என்று? என் கல்லறைக்கு வரும் போதாவது அவளை பார்த்து யாராவது கேளுங்கள் அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று? அருண் உயர்ந்த கோபுரத்தின் கீழ் தனியாக நின்றான். தேர் மணிகள் முழங்கின, சங்குகள் ஊதப்பட்டன, தெய்வம் தனது முழு மகிமையிலும் பிரகாசித்தது - ஆனால் அருணின் கண்கள் ஏமாற்றத்தால் நனைந்தன. அவன் திரும்பி பார்த்தான் ஆரணி ஒரு மூலையில், வெள்ளை மணலில் அந்த நபருடன் அருகில் இருந்து கடலை கொரித்துக் கொண்டு இருந்தாள். இடைக் கிடை அவர்கள் இருவரும் உரையாடுவது தெரிந்தது. என்றாலும் அவனுடன் அவள் முன்பு எப்படி அன்னியோன்னியமாக, நெருக்கமாக கொஞ்சி பேசினாலோ, அப்படி அது இருக்கவில்லை. அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒரு வயதான ஒருவர், சற்று நின்று, அவனது நெற்றியில் மெதுவாக புனித திருநீறு பூசினார். "மகனே," மெதுவாகச் சொன்னார், "உண்மையான கடவுள் ஒரு பூவைக் கூட அன்புடன் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆபரணங்களையும் தங்கத்தையும் கேட்பவர்களுக்கு அன்பு தெரியாது - அவர்களுக்கு ஆசை மட்டுமே தெரியும்." அருண், அவரின் வார்த்தைக்கு முன் தலை குனிந்தான். அந்த வார்த்தைகள் ஆழமாகத் தாக்கின. பளபளப்பை தங்கம் என்றும், கவனத்தை பாசம் என்றும், பக்திக்கான ஆசை என்றும் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்தான். வாங்கி பெறப்படும் அன்பு நிலையானதல்ல. அது ஒரு நாள் விற்கப்படும். பரிசுகள், பொருட்கள், ஆடம்பரங்கள் மூலம் கட்டப்பட்ட அன்பு, அந்தப் பரிசுகள் இல்லாமல் போனவுடன் மங்கிவிடும். ஆனால் உண்மையான அன்பு வேறுபட்டது. அது ஆபரணங்களையும் செல்வங்களையும் எண்ணாது. பொருள்களை அளவிடாது. அது உள்ளம் உள்ளத்தோடு பிணையும் உணர்வு. கைகள் காலியாக இருந்தாலும், அன்பின் தூய்மை என்றும் அழியாது நிலைத்து நிற்கும். அருண், அன்று இரவு யாழை விட்டு புறப்பட்டான். ஆனால் அந்தப் பிரிவிலும் கூட, அவன் இதயம் மேலும் ஞானம் பெற்றது. ஏனெனில் அவன் உணர்ந்தான்—பொய்யான அன்பு, அழகு மலர்கள் போலவே விரைவில் வாடிவிடும். அது இறுதியில் பணப்பையையும் இதயத்தையும் காலி செய்து விடும். ஆனால் உண்மையான காதல், சாம்பலுக்குள் மறைந்திருந்தாலும், ஒருநாள் மறுபடியும் முளைத்து மலரக் கூடிய சக்தி கொண்டது. அது அழியாதது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/31456074064041164/?

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
மேலே சிறி அண்ணாவிடம் கேட்டது உங்களுக்கும் சேர்த்தே. அந்த திரியில் பல ஆதாரங்களோடு உங்கள் இருவருக்கும் இது பச்சை பொய் என விளக்கி எழுதினேன். அதன் பின்னும் ஏன் ஒரு குடும்ப பெண்ணை பற்றி பொதுவெளியில் இப்படி அசிங்கமாக எழுதுகிறீர்கள்? ஆதாரம் (இதன் அடியில் - sources என மேலதிக ஆதாரங்களும் குறிப்பிட படுகிறன). தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Post Link | Archive Link Post Link Post Link சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்ற செய்தி உண்மையா? Fact Check/Verification ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, ராசாத்தி அம்மாளின் இளவயது படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ஏசியா நெட் நியூஸ் தமிழ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி (சிறுமியாக) இருக்கும் பழைய படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்படத்தில் இருக்கும் இளவயது ராசாத்தியம்மாளின் முகத்தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி முகத்தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், வைரலாகும் படத்திலிருக்கும் பெண் ராசாத்தி அம்மாள் அல்ல என உறுதியானது. இதனையடுத்து வைரலாகும் அப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் “‘நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டார்’னு யாரும் சொல்லிடக்கூடாது!– நடிகை கெளசல்யா” என்று தலைப்பிட்டு ஏப்ரல் 21, 2018 அன்று விகடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவுடன் கட்டுரை ஒன்றின் லிங்கும் தரப்பட்டிருந்தது. அக்கட்டுரையை வாசித்தபின் வைரலாகும் படத்திலிருக்கும் பெண்ணின் பெயர் கௌசல்யா என்பதும், அவர் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பதும் தெரிய வந்தது. சிறுவயதில் நாடக நடிகராக இருந்த கௌசல்யா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாகவும் அறிய முடிந்தது. தொடர்ந்து ‘கௌசல்யா செந்தாமரை’ என்று குறிப்பிட்டு கூகுளில் தேடும்போது இவர் குறித்த பல நேர்காணல்கள் நமக்கு கிடைத்தது. அதில் ஒன்றாக கௌசல்யாவும் அவரது மகளும் பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியின் சிறுபகுதி அந்த ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செந்தாமரை மற்றும் கௌசல்யா தம்பதியின் மகள், “என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. என் அப்பாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி, அவர்களுக்கு 3 பசங்க. இரண்டாவது மனைவி சாட்சாத் இவங்கதான் வேறு யாரும் கிடையாது. எங்க அப்பாவுக்கு எக்ஸ்ராலாம் கிடையவே கிடையாது. எங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன். அவங்களுக்கு பிறந்த ஒரே பொண்ணு நான். ஆக, என் அப்பாவுக்கு 4 பசங்க, 2 பொண்டாட்டி. தயவு செஞ்சு போடுங்க. ஏன்னா எடிட்ல நீங்க கட் பண்ணிடுவீங்க. இந்த விஷயம் மக்களுக்கு போய் சேரணும்னு நான் நினைக்கிறேன்” என்று பேசி இருப்பதை காண முடிந்தது. கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பது ராசாத்தி அம்மாள் அல்ல; அது நடிகை கௌசல்யா செந்தாமரை என தெளிவாகின்றது. அதேபோல் மறைந்த நடிகர் செந்தாமரைக்கு லட்சுமி, கௌசல்யா என இரண்டு மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர் எனவும் அறிய முடிகின்றது. Also Read: ஆ.ராசா பெண் ஒருவரை கட்டியணைத்ததாக பரவும் படம் உண்மையானதா? Conclusion ராசாத்தி அம்மாள் மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி என்று கூறி பரப்பப்படும் படம் தவறானதாகும். அப்படத்தில் செந்தாமரையுடன் இருப்பவர் தொலைக்காட்சி நடிகை கௌசல்யா செந்தாமரை ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Report from Asianet News Tamil, dated October 29, 2019 X post from Vikatan, dated April 21, 2018 Report from Vikatan, dated April 21, 2018 Facebook post from Behindwoods, dated January 15, 2025 Self Analysis https://newschecker.in/ta/fact-check-ta/rasathi-senthamarai-wife-false பிகு எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு; நிலஅபகரிப்பு, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய நுழைவு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ரவிகரன் எம்.பி எடுத்துரைப்பு

1 week ago
24 Sep, 2025 | 04:01 PM தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதிஅமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். இதன்போது ஆக்கபூர்வமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. குறிப்பாக நானும் இதன்போது பல்வேறு விடயங்கள் சார்ந்து கருத்துக்களை இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரிவித்திருந்தேன். குறிப்பாக இதன்போது மாகாணசபைகள் தொடர்பில் பேசியிருந்தேன். அந்தவகையில் மாகாணசபை முறைமையை இந்தநாட்டில் அறிமுகப்படுத்தியதே இந்தியாதான் ஆனால் தற்போது மகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தெரிவித்தேன். அத்தோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்று கூறப்பட்டு வருகின்றபோதும் நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமலுள்ளமையினையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதேவேளை தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய அதிகமான நிலப்பரப்புக்கள் சில திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தினையும் இதன்போது எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு எமது தமிழ் மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்கள் வனவளத்திணைகமகளம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர்போன்ற அரசகட்டமைப்புக்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ளதால் எமதுக்கள் விவசாயம், கடற்றொழில், கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசகட்டமைப்புக்களின் ஊடாக காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ள விதத்தை புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் இதே ஆக்கிரமிப்பு நிலமைகள் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன். இதுதவிர இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள்தொடர்பிலும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். குறிப்பாக ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்தகாலயுத்தம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கடற்பரப்புக்களில் தற்போது இந்திய இழுவைப்படகுகள் அத்தமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், வடபகுதி தமிழ் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்கூட இந்திய இழுவைப்படகுகள் தமது அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தை நான் அவதானித்தவற்றையும் எடுத்துக்கூறினேன். எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன். அதேவேளை இந்திய நிதிஉதவியில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலையில் அமைக்கப்படவிருந்த நோயாளர் விடுதி இதுவரை அமைக்கப்படாமலுள்ளமை தொடர்பிலும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். குறித்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைப்பதுதொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் சுகாதார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தநிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விரைவில் குறித்த நோயாளர் விடுதிக்கான வேலைத்திட்டங்களுக்கான நடவடிக்மைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்த விடயத்தையும் இதன்போது தெரியப்படுத்தினேன். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் போதுமான அளவில் முறையான நோயாளர் விடுதி இன்மையால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள கலைமகள்வித்தியாலயத்தில் இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்ற விடயத்தினை இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரதே கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். இவ்வாறு இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்டு, பூரணப்படுத்தப்படாமலுள்ள கட்டடத் தொகுதியிலேயே மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன். அத்தோடு குறித்த வகுப்பறைக் கட்டடத்தொகுதி அமைப்பதுடன் தொடர்புடைய சில ஆவணங்களும் இதன்போது என்னால் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு மாணவர்களின் நலன்கருதி விரைவாக முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடத்தொகுதி வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தேன். என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்த இந்திய உயர்ஸ்தானிகர், என்னால் முன்வைக்கப்பட்ட சகலவிடயங்களிலும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர்விடுதி அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாகவும், விரைவில் தாமும் இந்தவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த நோயாளர் விடுதியை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைக் கட்டடத்தொகுதி விடயத்திலும் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைகின்ற விடயத்திலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது இந்தியஉயர்ஸ்தானிகர் தெரிவித்தார். மேலும் அரசியல்ரீதியான பல்வேறு விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அந்தவகையில் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. கலந்துகொண்ட அனைத்துப் பராாளுமன்ற உறுப்பினர்களும் ஆக்கபூர்வமாக தமது கருத்துக்களை முன்வைத்தனர் என்றார். https://www.virakesari.lk/article/225962

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.

1 week ago
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! 24 Sep, 2025 | 03:41 PM முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225960

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
இது மிகவும் தவறான வதந்தி ஆகும். இதை நீங்களும் குமாரசாமி அண்ணையும் தெரிந்து கொண்டே மீள, மீள பரப்புகிறீர்கள். இன்னொரு திரியில் உங்கள் இருவருக்கும் செந்தாமரை மனைவியும், கருணாநிதி மனைவியும் வேறு வேறு ஆட்கள் என ஐயத்துக்கு அப்பலானா தரவுகள் மூலம் நான் நிரூபித்து இனி இப்படி எழுத வேண்டாம் எனவும் கேட்டு கொண்டேன். அங்கே நழுவி ஓடி விட்டு - அதே அழுக்கை இங்கே மீள காவி வருகிறீர்கள். இதில் நீங்கள் கருணாநிதியை நக்கல் அடிப்பதாக எண்ணினாலும், உண்மையில் அநியாயமாக வசவுக்கு உள்ளாக்குவது, கணவன், குடும்பம், வளர்ந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வாழும் ஒரு அப்பாவி பெண்ணை. உங்களுக்கு இப்படி எழுத. வெட்கமாக இல்லையா? நீங்களும் ஒரு பெண்பிள்ளையின் தந்தை அல்லவா? உங்களதோ, எனதோ மனைவியை பற்றி இப்படி ஒரு பச்சை அபாண்டத்தை யாரும் எழுதினால் நம் மனநிலை எப்படி இருக்கும்?

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

1 week ago
தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 24 Sep, 2025 | 03:19 PM தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/225954

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

1 week ago
பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கட்டுநாயக்கவில் கைது! 24 Sep, 2025 | 12:26 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225939

ஐநாவில் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

1 week ago
அமெரிக்க ஆதரவின்றி பாலத்தீனத்திற்கான அங்கீகாரம் ஏன் சாத்தியமில்லை? - ஐரோப்பிய நாடுகளின் முயற்சிக்கு என்ன பலன்? பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, நியூயார்க்கில் பாலத்தீனப் பிரச்னை குறித்த ஐ.நா. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கும் தலைமை தாங்கினார் கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெளியுறவு துறை செய்தியாளர், நியூ யார்க் 23 செப்டெம்பர் 2025 பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்தது, நூறாண்டு பழமையான இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் ஓர் வரலாற்று தருணமாக அமைந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தை இந்த மோதல் அடைந்துள்ளதாக, முக்கிய ஐரோப்பிய நாடுகள் எப்படி நம்புகிறது என்பதை காட்டும் ராஜீய ரீயிலான சூதாட்டமாகவும் இது உள்ளது. காஸாவில் தற்போது நடக்கும் பேரழிவுக்கு எதிர்வினையாகவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறுகையில், "வலியதை விட நியாயம் வெல்ல வேண்டும்" என தெரிவித்தார். பிரிட்டனுடன் இணைந்து, சௌதியால் ஆதரிக்கப்படும் மக்ரோங்கின் இந்த நடவடிக்கை, இரு நாடு தீர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட முறையே (இரு நாடு தீர்வு), இரு சமூகங்களுக்கு நியாயமான மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரே வழியாக அவர்கள் நம்புகின்றனர். இதற்கு மாற்றாக "ஒரு நாடு" தீர்வை நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் முன்வைத்தார். இஸ்ரேலின் ஆதிக்கத்தையும் பாலத்தீனர்கள் "அடிபணிதலையும்" "ஒரு நாடு" தீர்வு என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் பாலத்தீனர்களுக்கு எதிரான கூட்டு தண்டனை, பசி கொடுமை அல்லது எந்த விதமான இன அழிப்பையும் எதனாலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், இதற்கு எதிர்வினையாற்றும் என தெரிவித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நடவடிக்கை மற்றும் ஐநா மாநாடு ஆகியவற்றை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் பணயக்கைதிகளை பிடித்ததற்காக ஹமாஸுக்கு வழங்கிய வெகுமதியாக இஸ்ரேல் பார்க்கிறது. இஸ்ரேல் என்ன நினைக்கிறது? ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பு, இதற்கு எதிர்வினையாக இருக்க வேண்டும் என, சில இஸ்ரேலிய அமைச்சர்கள் விரும்புகின்றனர். இதன்மூலம் அப்பிராந்தியத்தில் பாலத்தீன நாட்டுக்கான சாத்தியத்தை நிரந்தரமாக நிராகரிக்க நினைக்கின்றனர். இரு நாடு தீர்வு எட்டப்படாமல் தடுப்பதே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் நோக்கமாக உள்ளது, பாலத்தீனர்களை நீக்கிவிட்டு யூத குடியிருப்புகளை அமைப்பதுதான் அவர்களின் கொள்கையாக உள்ளது. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களின் நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது, பாலத்தீன அதிகார சபை (Palestinian Authority (PA) தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. நியூ யார்க் மாநாட்டில் அவர் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது, எனினும் அவர் காணொளி வாயிலாக அதில் உரையாற்றினார். பாலத்தீன மாநாடு மற்றும் அதுகுறித்த டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலை எப்படி தீர்ப்பது என்பதில் இதுவரையில் இல்லாத அளவில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. ஆனால், களச்சூழலை பொறுத்தவரையில் தங்களுக்கு குறுகிய வாய்ப்பே உள்ளதாக, ஐரோப்பியர்கள் நம்புகின்றனர். காஸாவில் நாள்தோறும் பாலத்தீனர்கள் பலர் கொல்லப்படும் நிலையில், காஸா நகரத்தில் இஸ்ரேல் தற்போது மூன்றாவது ராணுவ பிரிவை அனுப்பியுள்ளது; ஹமாஸ் இன்னும் தன்னுடன் சுமார் 50 பணயக்கைதிகளை வைத்துள்ளது, அவர்களுள் பலரும் இறந்துள்ளனர்; இதனிடையே மேற்கு கரை இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கம் மற்றும் அதுதொடர்பான வன்முறையின் பிடியில் உள்ளது. அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டன, ஆனால் மேலதிக ராணுவ அழுத்தம் இஸ்ரேல் வலியுறுத்துவதைப் போன்று ஹமாஸ் சரணடைவதை நோக்கித் தள்ளும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மக்ரோங்கின் வியூகம் ராஜீய ரீதியிலான முயற்சிகள் நல்லதொரு மாற்றாக இருக்கும் என்பதை காட்டுவதற்கான வழியாக மக்ரோங்கின் வியூகம் உள்ளது. அதாவது, முதலில் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயல்படுத்தத்தக்க தீர்வு, அடுத்ததாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என்ற இருநாட்டு தீர்வை நீண்ட கால தீர்வாக அடைவது. இஸ்ரேலின் வியூகம் தோல்வியடைந்துவிட்டதாக கூறும் ஐரோப்பிய நாடுகள், அது பொதுமக்களை மேலும் துன்புறுத்துதல் மற்றும் மீதமுள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் தள்ளுதல் ஆகியவற்றுக்கே இட்டுச் செல்லும் என வாதிடுகின்றன. முக்கியமாக, ஐநா மாநாட்டை சௌதி அரேபியா தலைமை தாங்கி நடத்தியது, மேலும் அரபு லீக்கால் (Arab League) ஆதரிக்கப்பட்டது. இந்த மாநாட்டில், முக்கியமான அரபு நாடுகள் ஹமாஸை ஆயுதங்களை கைவிட்டு, அவற்றை பாலத்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தங்கள் ராஜீய ரீதியிலான நடவடிக்கை எத்தகைய செல்வாக்கை அந்த அமைப்பு மீது செலுத்த முடியும் என்பதையும், எதிர்காலத்தில் பாலத்தீனர்களுக்கு ஹமாஸ் தலைமை தாங்குவதை தடுக்க முடியும் என்பதையும் காட்டுவதாக பிரான்ஸ் வாதிடுகிறது. இந்த நடவடிக்கை மூலம், நெதன்யாகு மற்றும் டிரம்புக்கு அதன் நீண்ட கால இலக்கான சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்கிக்கொள்வதற்கு வழிகோலுவதால், இது இஸ்ரேலுக்கு ஓர் ஊக்கத்தையும் அளிப்பதாக மக்ரோங் நம்புகிறார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஐநா மாநாட்டுக்கு சௌதி அரேபியாவும் தலைமை வகித்தது. ஆனால், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் முடிவு, ராஜீய ரீதியிலான ஆபத்தாகவே உள்ளது. ஐநா மேடை முன்பு மக்ரோங் நின்றிருப்பதை பார்க்கும்போது, காஸாவின் "ஓர் கெட்ட கனவிலிருந்து" தப்பிக்க வழி தேடும், பகிரப்பட்ட இஸ்ரேலிய-பாலத்தீன எதிர்காலத்தைத் தேடும் ஓர் உலகத் தலைமைப் பொறுப்பை வகிக்க முயற்சிக்கும் ஓர் அதிபரை நீங்கள் காண்கிறீர்கள் என, ஐநா பொதுச் செயலாளர் விவரித்தார். ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், மக்ரோங் அதற்கானவர் அல்ல. அமெரிக்கா இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்காத வரை, அந்நாட்டால் மட்டுமே அனைத்துத் தரப்பிலிருந்தும் உருவாக்கப்படக்கூடிய அழுத்தம் ஏற்படாது. டிரம்பின் நிராகரிப்பு ஐரோப்பாவின் அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. டிரம்ப் செவ்வாய்கிழமை ஐ.நாவில் உரை நிகழ்த்தினார். இதில் பேசிய அவர் "பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது, ஹமாஸின் அட்டூழியங்களுக்கு வெகுமதி அளிப்பதாகும்" என்று பேசினார். அதன் பின் அவர் அரபு நாடுகளின் தலைவர்களை டிரம்ப் சந்திக்கிறார். ஆனால், திங்களன்று அத்தலைவர்கள் மேற்கொண்ட பணிக்கு முற்றிலும் மாறானதாக இது உள்ளது. முக்கியமான நாடுகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது அது செயலிழந்த உணர்வை அதிகரிக்கிறது, ஏனெனில் இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களை கத்தாரில் தாக்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இன்னும் கத்தார் தயங்குகிறது. கத்தார் இரு தரப்புக்கும் இடையே முன்பு மத்தியஸ்தம் செய்வதில் முக்கிய பங்காற்றியது. ஆனால், மக்ரோங் மற்றும் ஸ்டாமர் இருவரும் தங்கள் நாடுகளின் காலனிய வரலாறு குறித்து மத்தியக் கிழக்கில் பேசியுள்ளனர். 1948 ஆம் ஆண்டு பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தீனத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சர்வதேச சமூகம் இஸ்ரேல் அரசை எவ்வாறு அங்கீகரித்தது என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். தற்போது இருவரும் பாலத்தீனர்களுக்கு தங்களின் சொந்த நாட்டில் சம உரிமைகளை அங்கீகரிப்பதாக கூறுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரத்தை வரவேற்கும் பாலத்தீனர்கள், அந்நாடுகள் கடந்த காலத்தில் வல்லரசுகளாக இருந்ததை அறிந்துள்ளனர். அவர்களின் முடிவுகள் ஒரு காலத்தில் இருந்ததுபோன்று தற்போது முக்கியத்துவம் பெறுவதில்லை. மேலும், அதிபர் டிரம்பிடம் வேறு யோசனைகளும் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3w5902yvleo

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 week ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965

கிளிநொச்சி பெண் நோயியல் வைத்தியசாலை சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு

1 week ago
24 Sep, 2025 | 04:04 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி கலந்து கொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225965

கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? - ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

1 week ago
பட மூலாதாரம், TN Archaeology Department கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டன. இந்த நான்கு நூல்களில் Archaeological Excavations in Tamil Nadu: A Preliminary Report சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களைத் தருகிறது. சென்னனூர், மருங்கூர், கீழ்நமண்டி, கீழடி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை, வெம்பக்கோட்டை, திருமால்புரம் ஆகிய 8 இடங்களில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த முடிவுகளை இந்த அறிக்கை தந்திருக்கிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் கிடைத்த காலக் கணிப்புகள்தான் தற்போது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பட மூலாதாரம், TN Archaeology Department திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசியில் இருந்து தென்மேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கீழ்நமண்டி கிராமம். தற்போது கீழ்நமண்டி கிராமம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்றே கால் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலப்பரப்பு பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் சுமார் 55 ஏக்கர் தரிசு நிலப்பரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக் குழிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடத்தில் 2022-இல் இருந்து 2024 வரை இரு கட்டங்களாக தொல்லியல் ஆய்வுகள் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. கீழ்நமண்டியில் மொத்தம் 7 இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. இதில் முதல் இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் (இறந்தோரைப் புதைத்த இடங்கள்) இருந்தன. அதில் அகழாய்வுக்காக 18 குழிகள் அடையாளம் காணப்பட்டன. மற்ற ஆறு இடங்களைப் பொறுத்தவரை அவற்றிலிருந்து சில தொல்பொருட்கள் கிடைத்ததோடு, இரும்பு உலை இருந்ததற்கான அடையாளங்களும் இருந்தன. இரண்டு இடங்கள் ஈமக் குழிகளுக்காக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களாக இருந்தன. கீழ்நமண்டியில் கிடைத்த ஈமக் குழிகள் இரு வகைகளாக இருந்தன. முதலாவது வகையில், நிலத்தைத் தோண்டி நான்கு புறமும் பலகையைப் போன்ற கற்களை இறக்கி ஒரு குழி உருவாக்கப்பட்டு அதில் மண்ணால் ஆன ஈமப்பேழைகள் (sarcophagus) வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில், வெறுமனே குழியைத் தோண்டி ஈமப் பேழைகள் புதைக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம், TN Archaeology Department சில ஈமக் குழிகளில் ஒரே ஒரு சவப்பெட்டி மட்டுமே இருந்தது. சில ஈமக் குழிகளில் இரண்டு மூன்று சவப்பெட்டிகள் இருந்தன. 18 இடங்களில் மொத்தம் 27 ஈமப்பேழைகள் கிடைத்தன. இதில் எட்டு பேழைகள் மட்டுமே உடையாமல் இருந்தன. மற்ற பேழைகள், மேலே இருந்த மண்ணின் அழுத்தத்தால் சிதைந்து நொறுங்கியிருந்தன. ஒரே ஒரு ஈமப்பேழை மட்டுமே இருந்த இடங்களில் அந்தப் பேழையிலேயே மனித எலும்புகளின் எச்சங்களும் ஈமச் சடங்குக்கான பொருட்களும் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டு, மூன்று ஈமப்பேழைகள் இருந்த ஈமக் குழிகளில் ஒரு சவப்பெட்டியில் மனித எலும்பின் எச்சங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் ஈமச் சடங்குகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஈமப் பொருட்களைப் பொறுத்தவரை, உயர்தரமான கறுப்பு - சிவப்பு பானைகள், மூடியுடன் அல்லது மூடி இல்லாத சிவப்புப் பானைகள், இரும்புப் பொருட்கள், அலங்கார மணிகள் ஆகியவை இருந்தன. இந்த சவப்பெட்டிகளும் அதிலிருந்த பொருட்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் சமூகச் செல்வாக்கை குறிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது முதல் வகை ஈமக்குழிகளை உருவாக்குவதற்கு 10 - 15 பேர் சில நாட்களாவது பணியாற்றியிருக்க வேணடும். இரண்டாம் வகை மிகச் சிலரால், சில நாட்களில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, முதல் சவக்குழியில் இருந்த நபர், இரண்டாவது நபரைவிட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும். பட மூலாதாரம், TN Archaeology Department மொத்தமுள்ள 18 குழிகளில் 6 குழிகளில் மட்டுமே மனித எச்சங்கள் கிடைத்தன. இவை எல்லாமே இரண்டாம் நிலை எச்சங்கள்தான். அதாவது, இதுபோன்ற ஈமக்குழிகளை உருவாக்க நாட்கள் ஆகும் என்பதால், ஒருவர் இறந்தவுடன் அந்த நபர் தற்காலிகமாக ஒரு இடத்தில் புதைக்கப்படுவார். இந்த ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழி உருவாக்கப்பட்ட பிறகு, முதலில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டு, இந்த இடத்தில் புதைக்கப்படும். ஆகவே, ஒரு மனிதனின் எல்லா எலும்புகளும் இந்தப் பேழைகளில் இருக்காது. எஞ்சியிருந்த எலும்புகள் மட்டுமே இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த எலும்புகளோடு இறந்தவர்களுக்குத் தகுந்த ஈமப் பொருட்கள் வைத்து குழிகள் மூடப்பட்டுள்ளன. கீழ்நமண்டியில் கிடைத்துள்ள தொல் பொருட்கள் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய இரும்புக்கால குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதைக் குறிப்பதாக தொல்லியல் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கு கிடைத்துள்ள ஈமக் குழிகளை வைத்து, இந்தப் பகுதியில் வசித்தவர்களின் ஈமச் சடங்குகள் குறித்த சில தகவல்களையும் அறிக்கை தருகிறது. இங்கு வைக்கப்பட்டிருந்த ஈமப்பேழைகள் உறுதியாக இல்லாத சார்னோகைட் (charnokite) கற்களால் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே பெரும்பாலான ஈமப்பேழைகளின் மூடிகள் உடைந்திருந்தன. "இம்மாதிரி கற்களை வெட்டி எடுத்து மெல்லிய பலகைகளைப் போலச் செய்ய அவர்களிடம் தரமான இரும்புக் கருவிகள் இருந்திருக்க வேண்டும். கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மரத்தாலான உருளைகளால் இந்தக் கற்கள் இங்கே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது இந்த அறிக்கை. "3,700 ஆண்டுகள் பழமையான ஈமப்பேழைகள்" பட மூலாதாரம், TN Archaeology Department இந்த ஈமக் குழியில் இருந்து கிடைத்த கரித் துண்டும் சில இரும்புப் பொருட்களும் ஏஎம்எஸ் (Accelerator Mass Spectrometry) காலக் கணிப்புக்காக பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்படி, அந்தக் கரிமப் பொருளின் காலம் கி.மு. 1450 (3400 ± 30) எனக் கண்டறியப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட காலக் கணிப்பின்படி (Calibrated AMS) இது கி.மு. 1769ஆம் ஆண்டு முதல் கி.மு. 1615ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது. ஆகவே, சராசரியாக இந்தக் கரிமப்பொருள் கி.மு. 1692 ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம் என்கிறது அறிக்கை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதாவூர், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமப்பேழைகளின் கரிமப் பொருட்கள் காலக் கணிப்புக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு ஈமப்பேழையின் காலம் கி.மு. 1692ஐத் தொடுவது இதுவே முதல் முறை. மேலும் இந்த ஈமக் குழுயில் இருந்து கீறல்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவையும் மறைமுகமாக இவற்றின் காலத்தை கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்றே குறிக்கின்றன என்கிறது அறிக்கை. இந்த ஈமக்குழிகளில் உளி, கோடாரி போன்ற பொருட்களும் கிடைத்தன. மேலும், சில இடங்களில் வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள (carnelian) மணிகளும் கிடைத்தன. இங்கே கிடைத்த பானைகளின் விளிம்பில் சூலாயுதம், U போன்ற குறியீடுகளும் கிடைத்தன. கீழ்நமண்டிக்கு சிந்துச் சமவெளியோடு தொடர்பா? பட மூலாதாரம், TN Archaeology Department கீழ்நமண்டியில் இருந்தவர்கள் சிந்துச் சமவெளி பகுதிகளோடு தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிறார் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கே. ராஜன். "சூதுபவள மணிகளைப் பொறுத்தவரை, அவை தென்னிந்தியப் பகுதிகளில் கிடைப்பதில்லை. இந்த மணிகள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவை. இந்தப் பகுதியில் இவை கிடைக்கின்றதென்றால், அவை அங்கிருந்ததுதான் வந்திருக்க வேண்டும். இங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிகளோடு வர்த்தகத் தொடர்பில் இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த ஈமப் பேழைகளின் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. இதற்கு இணையாக வடமேற்கு இந்தியப் பகுதியில் பிற்கால ஹரப்பா (Late Harappan 1900-1300 BCE) நாகரிகமே நிலவியது. ஆகவே அதனோடு இதனை இணைத்துப் பார்க்கலாம்" என்கிறார். குறியீடுகளைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த சில குறியீடுகள், சிந்துச் சமவெளியில் கிடைத்த சில குறியீடுகளைப் போலே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் கிடைத்த கரிமப் பொருளின் காலம் ஏஎம்எஸ் காலக் கணிப்பில் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்தாலும், இங்கு கிடைத்த வேறு சில பொருட்களை OSL (Optically Stimulated Luminescence) காலக் கணிப்புக்கு அனுப்ப மாநில தொல்லியல் துறை முடிவுசெய்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1l8qqvn0r7o

அமெரிக்கா பெரும் கடனில் இருந்து தப்பிக்க கிரிப்டோ, தங்கத்தைப் பயன்படுத்துவதாக புடின் ஆலோசகர் குற்றம் சாட்டினார்.

1 week ago
Satoshi Nakamoto என்ற பூனை குட்டி வெளியில் துள்ளி குதித்து வந்து விட்டது 😁

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃 நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎
Checked
Thu, 10/02/2025 - 07:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed