1 week ago
பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி By ஆர். அபிலாஷ் February 03, 2026 எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது. நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு, வம்பு, கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம். அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள். ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர், பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர், அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள், அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை. இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா? இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது, கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள். குற்றங்கள் கூட அல்ல. ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்ஸ்டைன். அவரிடம் யாரோ விசாரணை செய்யும் காணொளியும் வெளியாகி இருக்கிறது. அதிலும் இப்பணம் கேள்விக்குள்ளாகிறது. உங்கள் பணம் நியாயமானதா என்பதைப் போலொரு கேள்வி. எப்ஸ்டைன் ஆமாம் அதற்கென்ன? நான் சம்பாதித்ததுதானே என்கிறார். இதனாலே பாலின பேதம், பாலின அதிகாரம் எனும் தனிமனித ஒழுக்கம், தனிமனித அதிகாரம் எனும் குறுகிய எல்லையைக் கடந்து நாம் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எப்ஸ்டைனின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவர் இளம்பெண்களை விருப்பமின்றி கடத்தி வந்து கொடுமைப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவரைக் குறித்து பின்னர் புகார் தெரிவித்தவர்களும் ஏதோ ஒரு கொடுக்கல் வாங்கலில் உள்ளே வந்தவர்கள். அல்லது தரகர்கர்களால் ‘வாங்கப்பட்டு’ கொண்டு வரப்பட்டவர்கள். அப்பெண்கள் இப்போது புகார் சொல்வதில் நிறைய நியாயம் உள்ளது. அவர்கள் முகமையற்ற ‘விற்பனைப் பண்டங்கள்’. சமத்துவத்தை நம்பும் சமூகத்தில் மனிதர்களை, அதுவும் குழந்தைகளைப் பண்டமாக்கி விற்க முடியுமா, என்பது நம்மை நடுங்கச் செய்கிறது. ஆனால் பிரச்சினை உண்மையில் எப்ஸ்டைன்கள் அல்ல, இந்த ‘தொழில்’தான். நாம் இதை நோண்டினால், அலசினால், கேள்வி கேட்டால் நிறைய நிறைய அசௌகர்யங்கள் ஏற்படும் - பாலியல் ஒழுக்கம், பாலியல் குற்றங்கள், அவை ஏன் நிகழ்கின்றன, குடும்பம், பாலியல் கட்டுப்பாடுகள், மதம் ஆகியவற்றுக்கும் ஒழுக்க மீறலுக்குமான தொடர்பு என்ன ஆகிய கேள்விகள். அடுத்து கட்டுக்கடங்காத பெருஞ்செல்வம் ஏன் எப்போதுமே மிதமிஞ்சிய போதைப் பழக்கம், பாலியல் மீறல்களுக்கு வழிவகுக்கின்றன? (நான் குடும்பத்தைப் பற்றி வேறோர் இடத்தில் பேசியிருப்பதால் இங்கு தவிர்க்கிறேன்.) அடுத்து, செல்வம் ஏன் எப்போதும் மனிதர்களை சமூக அமைப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே ‘சுதந்திரமானவர்களாக’ மாற்றுகிறது? இச்சுதந்திரம் ஏன் அறத்தினால் நெறிப்படுத்தப்படுவதில்லை? ஏன் அறம் ஒரு மத்திய வர்க்கச் சிக்கலாக மட்டும் இருக்கிறது? ஏன் பெரும் பணக்காரர்கள் அறத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை? ஏன் வணிகவியல் படிப்புகளில் அறம் சொல்லித் தரப்படுவதில்லை? ஏன் நம்மால் அத்தகைய வர்க்கத்தினரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை? ஆக ஒவ்வொரு முறை இத்தகைய குற்றங்கள் சர்ச்சையாகும்போதும் நாம் இவர்களைத் தூற்றிவிட்டு வேலையைப் பார்க்கப் போகிறோம். ஆனால் மத்திய, கீழ் வர்க்கத்தினர் இதே குற்றங்களைச் செய்ய முற்பட்டால் அவர்கள் சிதைக்கப்பட்டு எல்லாருக்கும் முன்னுதாரணமாக மாற்றப்படுவார்கள். அறத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கம் இருக்கிறதா? அவர்கள் வர்க்கப் படிநிலைக்கு அப்பாலாக இருக்கிறார்களா? பணம் எனும் தூய கருத்துரு அதைச் சாத்தியமாக்குகிறதா? அதாவது பணமே கடவுளுக்கு மாற்றாகத் தோன்றிய தூய கருத்துரு என்று மார்க்ஸ் சொல்வது சரியெனில் பணம் ஒரு வர்க்கத்தை கடவுளுக்கு இணையாகக் கொண்டு நிறுத்துகிறதா? ஒரு கடவுளைக் கீழிறக்கி சிறையில் தள்ளி சவுக்கால் அடிப்பதைப் போலத்தான் எப்ஸ்டைனை இப்போது செய்திருக்கிறார்களா? அவரது மரணம் எதைக் காட்டுகிறது? அவரது நேர்காணலில் நீங்கள் சாத்தானின் மனித உருவமா எனும் கேள்வி இதை மனத்தில் வைத்தே எழுப்பப்படுகிறதா? இதைக் குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். கடைசியாக, எப்ஸ்டைனுடையது (பிறழ்வு என்றல்லாமல்) பாலியல் வன்முறைக் குற்றம் என வகைப்படுத்தப்படும் எனில் அது உபயோகமாக இருக்கும். அது பாலியல் வன்முறை நிறுவனமயப்பட்டது, அதைப் பணம் சாத்தியப்படுத்துகிறதா எனும் கேள்விக்கு நம்மை இட்டுச் செல்லும். பாலியல் கட்டுப்பாட்டை ஒழுக்கவாதமாக அல்லாமல் சட்டரீதியான சமூகக் கட்டுப்பாடாகப் பார்த்தோமானால் இன்னும் தெளிவான பதில் கிடைக்கும். நம் சட்டம் அனைவரையும் சமமாகப் பார்த்தாலும் ஆளும் அதிகார வர்க்கம் சட்டத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கமாகவே எல்லா நாடுகளிலும் உள்ளது. அளவற்ற செல்வம் படைத்த வர்க்கமே ஆளும் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதால் அவர்களும் நீதிமன்றத்துக்கு அப்பாலான ஒரு மீ-குடிமக்களாக மாறுகிறார்கள். இதை நீதிமன்றம் இவ்வர்க்கத்தினரை நடத்தும் விதத்தைப் பார்த்தாலே புரியும். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் எந்தத் தலைவரையும் குற்றம் சாட்டி நம்மால் சிறைக்கு அனுப்ப முடியாது. அதிகாரத்தை இழந்த பின்னரே இயலும். ஒருவிதத்தில் அதிகாரத்தின் மீதான மரியாதை (மக்கள் அளிக்கும் அதிகாரத்துக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு எனும் பெயரில்) அரசை நீதிமன்றத்துக்கு அப்பால் நிறுத்துகிறது. ‘மக்களுக்காகவே நீதி, நீதிக்காக மக்கள் அல்ல’ எனும் பெயரில் நீதிமன்றத்தின் ‘நடைமுறை வரம்பிற்கு’ வராத வர்க்கமொன்று தோற்றுவிக்கப்படுகிறது. இவர்களுக்கு நிதியளிக்கும் வர்க்கமே நவீன கடவுளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறார்கள். இது ஊழலோ, எதார்த்தமோ அல்ல, இது சமூக நிறுவனங்கள் அளித்துள்ள ஒருவித அனுகூலம். எப்போதுமே நிறுவனங்கள் ‘விதிவிலக்குகளின்’ அடிப்படையிலே தோன்றுகின்றன என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நீதி விசாரணையில் இருந்தும் சமத்துவத்தில் இருந்தும் விதிவிலக்கு என்பதே ஜனநாயகச் சமூகங்களில் பணக்கார, ஆளும் வர்க்கத்தை உருவாக்குகிற ‘விதிவிலக்கு’. அவ்விதிவிலக்கு இல்லையெனில் சமூக அதிகாரக் கட்டமைப்பு சீர்குலையும் என நம்புகிறேன். பெரும்பகுதியினர் ஏன் சிறுபான்மைக்குக் கட்டுப்பட வேண்டும்? ராணுவம், போலீஸ், மூலதனம் மீதான அச்சத்தினாலா? இவை நிபந்தனைக்குட்பட்டவை. நிபந்தனைக்குட்படாத ஒன்றுதான் மக்களைக் கட்டுப்படுத்துகிறது - அதுவே ‘விதிவிலக்குகள் அற்றவர்களாக இருக்கிறோம், அவர்கள் விதிவிலக்கால் இருக்கிறோம்' எனும் நிஜம். இந்த விதிவிலக்கே உடனடியாக நம்மைப் பணிய வைக்கிறது. இந்த விதிவிலக்கின் மொழியே பாலியல் நாட்டம் / வன்முறை. கடவுளும் பணமும் இந்த விதிவிலக்கின் இலக்குகள். பணத்துக்கும் பாலியல் கட்டுப்பாட்டுக்குமான இந்த உறவு வினோதமாகவும் அதே சமயம் உண்மையாகவும் இருக்கிறது - பணம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் கட்டுப்பாடுகள் விலகிக் கொண்டே வருகின்றன. அது குறையக் குறைய கட்டுப்பாடுகளும் அதிகாரிக்கின்றன. பணமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனும்படிக்கு வறுமை தீவிரமாகும்போதும் பாலியல் கட்டுப்பாடுகள் காணாமல் போகின்றன. இதனால்தான் எப்ஸ்டைன் போன்றோரின் வீழ்ச்சியை நாம் அருவருப்புடன் காண்கிறோம், ஆனால் மனதுக்குள் கொண்டாடுகிறோம். அவர்கள் அனுபவிக்கும் விதிவிலக்கின் திளைப்பு நம்மை உலுக்குகிறது. நாம் வன்முறையை அஞ்சும் அளவுக்கு அதை நேசிக்கவும் அதற்காக ஏங்கவும் செய்கிறோம். வன்முறையின் விளிம்பிலே ஒவ்வொரு கணமும் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை நவீன மனிதர்களின் உடல்மொழி, சைகைகளைக் காண்கையில் தோன்றுகிறது (பாலியல் வன்முறையும் இதற்குள் வரும்). இந்த ‘விளிம்பு நிலை’ ஒரு தவிப்பு நிலை. இங்கிருந்து நாம் எப்ஸ்டைனைப் பார்க்கிறோம். மனிதர்கள் விலங்குகள் என்றோ அதனாலே அவர்கள் வன்முறையால் செலுத்தப்படுகிறார்கள் என்றோ நான் சொல்ல மாட்டேன். பணம் எனும் அரூபமான அதிகாரமே வன்முறையை உருவாக்குகிறது என நம்புகிறேன். கடவுளுக்கும் இத்தகைய சக்தி உண்டு. ஏனென்றால் இரண்டுமே விதிவிலக்கைத் தோற்றுவிக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் கடவுளை மையமிட்ட மதங்களின் புராணக் கதைகளைப் பாருங்கள். அவற்றில் தொடர்ந்து கடவுளுக்கும் அறத்துக்குமான முரண்பாடு பேசப்பட்டிருக்கும். கடவுள் ஏன் இப்படிக் கொடூரமாக இருக்கிறார் எனக் கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கம் அளிப்பார்கள். அது கடவுளை விதிவிலக்கானவராக்கும். பக்தி என்பதே இந்த ‘கொடூரத்தைக்’ காதலிப்பதுதான். மெல்லமெல்ல நாம் விவசாயத்தைக் கண்டுபிடிக்கிறோம், வேளாண் சமூகமாகிறோம், நிலத்தையும் அதில் பணிசெய்வோரையும் குழந்தைகளையும் நம் ‘தனிச்சொத்து’ எனும் புரிதலுக்கு வருகிறோம். வன்முறை அனைவரையும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் விதிவிலக்காக மாறியது இக்காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். அப்போதும் ஒன்று கூடாது என்றும், அதற்கு விதிவிலக்கு உண்டு எனும் இருமை இருந்திருக்கிறது. நிலத்தின் அடிப்படையிலான வளம், தங்கமாகவும் பணமாகவும் மன்னர்கள் காலத்தில் மாறுகிறது. இப்போது விதிவிலக்கை நாம் நீதி, அறம் ஆகியன குறித்த விவாதங்களால் வடிவமைத்தோம். விதிவிலக்கை எப்போது மீறலாம், எப்போது கூடாது என்பதில் வரும் சச்சரவே மகாபாரதப் போரும், விதிவிலக்கே ஆன்ம ஆற்றல் எனும் கோட்பாடே கீதைப் பேருரையும் ஆகின்றன. அதன் பின்னர் காலனிய காலம் வருகிறது, அதைத் தொடர்ந்து நவீன சமூகங்கள் தோன்றுகின்றன. நவீன பணம் வணிக வர்க்கத்தை சமூகத்தின் உச்சத்திற்கு கொண்டு வர மக்கள் அனைவரும் அதை நோக்கிப் போக விரும்புகிறார்கள். இந்த இச்சையை வடிவமைக்க நாம் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறோம். அடிப்படையில் அசமத்துவத்தை உருவாக்குகிற பொருளாதார அமைப்புக்குள் நியாயமான போட்டியும், சம வாய்ப்புகளும் உள்ளதாக ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். முதலில் நிலமும் உழைக்கிறவரின் உடலும் யார் கட்டுக்குள் இருக்கிறதோ அவரே ஒருவித மிதமான விதிவிலக்கை அனுபவித்தார். அதன்பிறகு மன்னரும் மதமும் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள, மன்னருக்கும் பூசாரிக்கும் விதிவிலக்கு கிடைக்கிறது. அவர்கள் குற்றம் செய்யலாம், தண்டனை இல்லை, அவர்கள் பிறரது குற்றங்களைத் தண்டிக்கலாம் (சாதி எனும் விதிவிலக்கை நேரடியாக நிர்வகிக்கும் சமூகவியல் அமைப்பும் தோன்ற்கிறது). அறம் இன்னும் சிக்கலாகிறது. அவர்களைத் தொடர்ந்து காலனியம் நேரடியாக உடல் மீது அதிகாரம் கொள்ளும் விதிவிலக்கையும் அடிமை விற்பனையையும் அறிமுகப்படுத்துகிறது. நவீன ஜனநாயக உலகில் வணிகச் சமூகங்களும் ஆளும் வர்க்கமும் பணத்தைக் கொண்டு விதிவிலக்கை உருவாக்கி முற்று முழுதான அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இப்படித்தான் கடவுளின் அதிகாரத்தை நாம் செல்வத்துக்குக் கொடுத்தோம். கடவுளைப் போன்றே அறத்தைக் கடந்த ஒரு மீ-இருப்பாக பணம் மாறியது. பணத்தை முழுமையாகக் கைக்கொண்டவர்கள் கடவுளாக உணர்ந்தார்கள். இந்த காலகட்டங்களில் பாலுறவு ஒரு சாதாரணமான செயல் எனும் இடத்தில் இருந்து சமூகத்தை வரையறுக்கும் அச்சமாக மாறுகிறது. அது நிலத்திலும் மனித உடல்களிலும் மன்னரின் செங்கோலிலும் வேதநூல்களிலும் காலனிய வர்த்தக நியதிகளிலும் நவீனப் பொருளாதார பரிவர்த்தனைகளிலும் புகுந்து விளையாடுகிறது. அது பாலுறுப்புகளைக் கடந்த ஒரு மகத்தான ஆற்றலாகிறது. அது இன்பத்தைத் தள்ளிப் போடுதல் அல்ல, அது அச்சத்தை விளைவிப்பதாகிறது. இந்த அச்சத்தைத் தக்க வைக்கும் நோக்கிலேயே பாலியல் ஒழுக்கம் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என நினைக்கிறேன். ஆக, நவீன முற்போக்கு தாராளவாதிகள் நம்புவது இவ்விசயத்தில் தவறு: பாலியல் வன்முறையைச் சட்டத்தினாலோ சமத்துவத்தாலோ ஒழிக்க இயலாது. சட்டமும் சமத்துவமும் ஒரு குறிப்பிட்ட வகையான வர்க்கங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவே உதவும் (அதாவது நம்மைப் போன்றவர்களை). அதுவும் நமக்குள் செல்வம் மீதான ஆசை நெருப்பாகக் கிளர்ந்தபடி இருக்கிறது. இதை நாம் பால் உடல்களில் நிகழ்த்திப் பார்க்கிறோம். ஆண்கள் பெண்களை விட வலுவானவர்கள் என்பதால் அவர்கள் பலாத்காரங்களில் அதிகமாக ஈடுபட்டு பல கொலைகளையும் செய்கிறார்கள். பாலியலின் இன்பமே உடல் அல்ல, உடலைப் மூலதனமாக மாற்றுவதுதான். ஆதிக்கப் பாலியல் இன்பம் உடலை வருத்தி மூலதனத்தைக் கைப்பற்றும் விருப்பம்தான். அதனாலே மனம் பிறழ்ந்தவர்கள், குற்றங்களால் தாம் விடுதலையானதாக உணர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களில் மிகக் கொடூரமாக ஈடுபடுகிறார்கள். பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து வீசி எறிகிறார்கள். அவர்களிடம் விதிவிலக்கின் அதிகாரம் உடனடியாக வந்து விடுகிறது. ஆனால் அரைகுறையாக, அவர்கள் மீறுவதே அதிகாரம், அந்த அதிகாரமே தனக்குள்ள விதிவிலக்கு என்று மட்டும் ஏதோ ஒரு கணத்தில் குழப்பமாகப் புரிந்து கொள்கிறார்கள். பலவீனமான யாரைக் கண்டாலும் அதை முயல்கிறார்கள், அழிக்கிறார்கள். அவர்களிடம் மிதமிஞ்சிய செல்வம் இருந்தால், பலவீனமானவர்களை அவர்களுடைய எதிர்ப்பின்றி பணத்தால் மீறுவதே அதிகாரம் எனும் புரிதல் வந்தால், அவர்கள் எப்ஸ்டைன்களாகி விடுவார்கள். மக்களைச் செலுத்துவது விதிவிலக்கின் எரிமலை. அதன் நெருப்புப் பிழம்பு வழிந்தபடித்தான் இருக்கிறது. மக்கள் இந்த எரிமலையைச் சுற்றி நின்று அச்சத்திலும் பரவசத்திலும் நடுங்குவார்கள். நாம் இதைக் குறித்துப் பேச வேண்டும். https://www.writerabilash.in/2026/02/blog-post_3.html
1 week ago
சிம்பாவே சூப்பர்8க்கு வந்தது பாராட்ட தக்கது ஆனால் வெஸ்சின்டிஸ் அணியிடம் படு தோல்வி................ சிம்பாவே இந்தியா கூட சென்னை மைதானத்தில் விளையாட போகினம் சென்னை மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.................................
1 week ago
இலங்கை அடிச்ச குறைஞ்ச ஸ்கோரை சிம்பாவே தான்டி விட்டது.................
1 week ago
செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய லட்சியம் செய்யறிவைக் கொண்டு வேலைகளை எந்திர முழுதியக்கம் (automate) செய்வது. இதனால் பல பணிகள் வேகமாக நடந்து முடியும் என்பதைவிட செலவில்லாமல் செய்ய முடியும் என்பதே அவர்கள் செய்யறிவைச் சந்தைப்படுத்த நிறுவனங்களிடம் நீட்டிய கேரட். கடந்த ஈராண்டுகளில் பல கார்ப்பரட் தலைவர்கள் செய்யறிவினால் மிகப்பெரிய வேலை இழப்பு வரும் என எச்சரித்தது இந்நோக்கில்தான். வேலையளிக்கும் நிறுவனங்களும் இதை நம்பினர். அவர்களுக்கு தமது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, லாபத்தைப் பெருக்கவும், ஏற்கனவே உள்ளவர்களை அச்சுறுத்தி அதிக வேலை வாங்கவும் இந்தப் பீதி உதவியது. இப்போது வேலையிழந்தவர்கள் சந்தையில் பெருகி விட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்படுத்துகிற மிகையால் ஒரு செயற்கையான போட்டி நிலவுகிறது என்றும், நேர்முகத்தின்போது உங்கள் வேலையை செய்யறிவே செய்துவிடும், நீங்கள் அதை நிர்வகித்தால் போதும், உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று சொல்லி மனிதவளத்துறையினர் ஊதியத்தைக் குறைத்து பேரம் பேசுவதாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு செயற்கையாக உண்டுபண்ணப்பட்ட பிரச்சினை - செய்யறிவினால் நிறுவனங்களுக்கு நட்டமே அதிகம், அவர்கள் மனித ஊழியர்களிடம் திரும்பவே விரும்புகிறார்கள், ஆனால் இப்போதைக்கு விட்டுப்பிடிக்கலாம், ஊதியத்தைக் குறைக்கலாம் எனக் கருதுகிறார்கள். இப்போது தானியங்கி செய்யறிவு (agentic AI) வந்து நம் பணிகளை அதுவே கேட்காமலே எடுத்துச் செய்யும், நம் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும், ஆவணங்களை உருவாக்கித் தொகுக்கும், நாம் அதை நிர்வகித்தால் மட்டும்போதும் என்கிறார்கள். ஆனால் இதுவும் வெற்று விளம்பரம்தானோ எனத் தோன்றுகிறது. செய்யறிவின் உண்மையான 'ஆற்றலை' நாமே நம் அன்றாடப் பணிகளில் காண்கிறோம் - அது வந்தபோது அதனால் பல புத்தகங்களை நொடிகளில் எழுத முடியும், இனி எழுத்தாளர்கள் தேவையிருக்க மாட்டார்கள் என்றார்கள். அதுவே சமூகவலைதளங்களில் எழுதும் என்றார்கள். திரைக்கதை எழுதும் என்றார்கள். இதையெல்லாம் செய்கிறதுதான் - ஆனால் தரமாக இல்லை. மாணவர்கள் இதைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் கட்டுரைகள் மேம்போக்காக, அர்த்தமற்று உள்ளன. இதனால் செய்யறிவு என்றாலே தரக்குறைவு எனும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. என் மாணவர் ஒருவர் செய்யறிவைக் கொண்டு ஏகப்பட்ட நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுச் சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நான் அவரிடம் தரமின்மையை உள்ளடக்கத்தால் ஈடுகட்ட முடியாது, அத்தகைய பண்டங்கள் மதிப்பிழக்கும் என்றேன். அவ்வாறே நடந்தது. அவர் விரைவில் சோர்வடைந்தார். என்னதான் மின்நூல், பதிப்பு நூல் சந்தையில் செய்யறிவு பங்காற்றினாலும் அதனால் தரமான வெற்றிகரமான நூல்களை உருவாக்கி பெஸ்ட் செல்லர்களாக முடியவில்லை. செய்யறிவு ஏற்கனவே உள்ளதைத் திருடி அதைப் போலச் செய்கிறது. அதனால் புதிய கருத்துக்களை, கற்பனையை உருவாக்க முடிவதில்லை. அது ஒரு மேம்பட்ட நகல் எந்திரம். தான் எதிலிருந்து நகலெடுத்தோம், திருடினோம் என்பதையும் அது ஒப்புக்கொள்வதோ மேற்கோள் காட்டுவதோ இல்லை. இது இன்னொரு அறம்சார்ந்த பிரச்சினை. நியாயமாக செய்யறிவு நிறுவனங்கள் தாம் 'பயிற்சிக்காக' திருடுகிற தரவுகள், நூல்களுக்கான ராயல்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் டயாய்க்கின்றன. இப்போதைக்கு (இலக்கியம் போன்ற சிக்கல்கள் இல்லாத) நேரடியான எளிய மொழிபெயர்ப்புகள், விளம்பர வசனங்கள், உரையாடல், குறிச்சொல் உருவாக்கம், மொழிப்பயிற்சிக்கு அது உதவுகிறது. நான் புக்காவஸ்கியின் நாவலை (Pulp) வாசித்துக் கொண்டிருக்கும்போது அதில் திடீரென ஒரு பாத்திரம் வந்தது. அப்பாத்திரம் நாவலில் மற்றொரு இடத்தில் ஒரே ஒருமுறை வந்த நினைவு. ஆனால் எங்கு எதற்காக என மறந்துவிட்டது. செய்யறிவிடம் கேட்டேன். அது ரொம்ப இலக்கியத்தனமான பதில் சொன்னது. ஆனால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. வகுப்பில் ஒன்றுமே தெரியாத மக்கு மாணவர்கள் இட்டுக்கட்டி பதில் சொல்வார்களே அப்படி ஒரு எதிர்வினை. ஏனென்றால் அப்புத்தகத்தின் தரவுகள் அதனிடம் இல்லை. என்னிடம் பி.டி.எப் இருந்தால் நான் கணநேரத்தில் கண்டுபிடித்திருப்பேன். இதனிடம் கேட்டால் இப்படி விளையாடுகிறதே என எரிச்சலாகியது. செய்யறிவின் முக்கியமான பிரச்சினை அது தனக்கு ஒன்று தெரியாது என்று ஒப்புக்கொள்ளாது என்பது. அதனாலே அதன் நம்பகத்தன்மை போய்விடுகிறது. இந்த லட்சணத்தில் இனி ஆசிரியர்களே தேவையில்லை, செய்யறிவே அப்பணியைச் செய்யும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றும் சில கல்வி நிறுவனங்களில் அதை நம்புகிறார்கள். இப்படி இட்டுக்கட்டும் ஒரு மென்பொருளிடம் மாணவர்களை ஒப்படைத்தால் அதனால் நேரும் குழப்பங்களுக்கு யார் பொறுப்பு? செய்யறிவு நம் காலத்தின் பிளாஸ்டிக் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் ஆரம்பத்தில் சந்தைக்கு வந்தபோதும் இத்தகைய மிகை எதிர்பார்ப்பும் பிரமிப்பும் இருந்தது. இன்று அது தரமின்மைக்கான குறியீடு. செய்யறிவு வளராது என்று நான் நினைக்கவில்லை. இப்போதுள்ள செய்யறிவு வேலைக்கு ஆகாது. அது அதன் முழுப்பரிமாணங்களை அடைய நேரடியாகத் தரவுகளை உள்வாங்கும், 24*7 உலகைக் கண்காணிக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். தான் உள்வாங்கும் தகவல்களைப் பரிசீலித்து சுயமாக முடிவெடுக்க இயல வேண்டும். அதுவரை அதனால் சின்னச் சின்ன வேலைகளை மட்டுமே பண்ண முடியும். நமது வேலைகள் பாதுகாப்பாக உள்ளன. https://www.writerabilash.in/2026/02/blog-post_59.html செய்யறிவு = செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)
1 week ago
வாழ்த்துக்களுக்கு நன்றி, ரசோதரன். 🙂
1 week ago
இதுக்கு முதல் நடந்த போட்டிகளில் உந்த மைதானத்தில் ரன்ஸ் பெரிசா அடிக்க வில்லை இன்று வெஸ்சின்டீஸ் வீரர்கள் ரன்ஸ் வேட்டை நடத்தி விட்டினம்......................
1 week ago
டயஸ்போரா சவால்களுக்கு மத்தியிலும் நாமல் லண்டன் பயணம்: அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தினார் இந்திக அனுருத்த 23 Feb, 2026 | 04:39 PM நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து விஜயத்தின் போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த உரைகள், அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டமையானது இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். இன்றைய தினம் பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்ஷ சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர் என்றும், எதிர்ப்புகள் எழும் என்று தெரிந்தே அந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் அவர் அங்கு சென்றார் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய எதிர்ப்புக்கள் எமது தரப்புக்கு புதியவை அல்ல என்றும், இதனை விமர்சிக்கும் 'சுத்திகரிப்புப் படையினர்' முதலில் தங்களது அரசாங்கத்தின் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் சாடினார். தற்போதைய அரசாங்கம் குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அடிமட்டம் முதல் அமைச்சரவை வரை பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். அண்மையில் மீரிகம பிரதேச சபை தவிசாளர், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் இன்று தொழில்துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார். பழைய விநியோகஸ்தர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் நெருங்கிய சகாக்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால், தற்போது நிர்மாணிக்கப்படும் வீதிகள் தரமற்று இருப்பதாகவும் அவை குழிவிழுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த மோசடியைப் பாதுகாப்பதாகத் தெரிவித்தார். தரம் குறைந்த நிலக்கரியை விலைக் குறைவு என்ற போர்வையில் இறக்கிக் கொண்டுவருவது மின் உற்பத்தி நிலையத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் உணரவில்லை என்றும், இந்தத் தவறை மறைக்க முயல்வோர் எதிர்காலத்தில் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார். அரசாங்கத்திற்கு நிதி வழங்கிய பெரும் வர்த்தகர்களின் பிடியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சிக்கியுள்ளதால், அரிசி மாஃபியா மற்றும் கொள்கலன் மோசடிகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ளதால், தங்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஊழல் தடுப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடி ஆகியன தற்போதைய அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239392
1 week ago
இது நான் விளையாட்டு தொடங்க முதல் எழுதின பதிவு குரு ஹா ஹா................பார்த்திங்களா ஜக்கம்மா சொல்லி அடிப்பா ஹா ஹா😄😛...................
1 week ago
🤣............... என்னோட சேர்ந்து அப்பாவி சிம்பாப்வேயும் ஜக்கம்மாவிடம் மாட்டுப்பட்டு விட்டதே...........
1 week ago
"சோம்பேறித்தனம்" - இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தானில் விவாதிக்கப்படுவது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் இது குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகப் பயனர்களும் இந்தப் போட்டியைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியின் சராசரி செயல்பாடு மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இப்போது நீக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவை தென்னாப்பிரிக்கா மோசமாகத் தோற்கடித்தது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது" என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சிறப்பானது என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணி ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் நாம் போராடுவதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பை முழுவதும் பேட்டிங் வரிசை தடுமாறி வருகிறது," என்று பதிவிட்டுள்ளார். ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மில்லர் 35 பந்துகளில் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தானில் என்ன விவாதிக்கப்படுகிறது? பட மூலாதாரம்,CPL T20/CPL T20 via Getty Images படக்குறிப்பு,பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார் இந்தத் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவை ஒரு 'ஸ்லாகர்' என்று அழைத்திருந்தார். ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் முகமது அமீர் கூறுகையில், "அபிஷேக் சர்மா ஒரு சரியான பேட்டர் அல்ல, அவர் ஒரு ஸ்லாகர்," என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் கூறுகையில், "அவர் பந்தின் திசையை நோக்கி விளையாடுவதில்லை, மட்டையை வெறுமனே சுற்றுகிறார். தட்டையான ஆடுகளங்களில் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பவுன்சி பிட்ச்களில் அவர் சோதிக்கப்படவில்லை. அங்கு அவர் சிறப்பாக விளையாடும்போதுதான், நான் அவரை ஒரு பேட்ஸ்மேனாகக் கருதுவேன்" என்றார். இருப்பினும், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், "நான் அபிஷேக்கை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார். நேற்றைய போட்டிக்குப் பிறகு முகமது அமீர் மீண்டும் கூறுகையில், "இந்தியா சிறப்பாக விளையாடும்போது நாம் நல்ல விஷயங்களைச் சொல்கிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வசவுகள்தான் கிடைக்கின்றன. தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாகச் செயல்பட்டது," என்றார். இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனார். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டிக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அதில், "முகமது அமீர், முதலில் நீங்கள் களத்தில் இந்திய அணியின் அதிர்ஷ்டத்தை சிதைத்தீர்கள், இப்போது ஸ்டுடியோவில் இருந்துகொண்டு அவர்களின் அதிர்ஷ்டத்தை சிதைக்கிறீர்கள். அவர்களைச் சற்று மூச்சு விட விடுங்கள். தென்னாப்பிரிக்கா கடந்த டி20 உலகக் கோப்பையை எங்கு முடித்ததோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கியுள்ளது. அது ஒரு சிறந்த அணி. டாப் ஆர்டர் தோல்வியடைந்தபோது, லோயர் ஆர்டர் அற்புதங்களைச் செய்தது மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார். இதுகுறித்து சோயப் அக்தர் கூறுகையில், "எண்ணங்களை விட ஒழுக்கமே மேலானது என்பதை தென்னாப்பிரிக்கா நிரூபித்துள்ளது. இத்தகைய இலக்குகளை வெறும் சோம்பேறித்தனத்தால் எட்ட முடியாது. இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். மில்லர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரிடமிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். சூர்யகுமார் யாதவ் பேட்டி பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images படக்குறிப்பு,நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர். போட்டிக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், "இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. எனவே சஞ்சு சாம்சன் அணிக்குள் வர வாய்ப்புள்ளதா?" என்று கேட்டார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "அப்படியென்றால் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். திலக் வர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்கிறீர்கள்" எனக் கூறிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார். நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images படக்குறிப்பு,வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை சந்திக்கிறார். ஒரு விளம்பரத்தின் காரணமாகவும் இந்த போட்டி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான அந்த விளம்பரத்தில், இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த போலி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த விளம்பரத்தில், இரு அணிகளின் வீரர்களும் ஒரு ஹோட்டலில் ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுகிறது. அப்போது இந்திய வீரர் அங்கிருக்கும் ஒரே ஒரு கப்கேக்கை நோக்கிச் செல்கிறார், ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஓடிச் சென்று அந்த கப்கேக்கை எடுத்துக்கொண்டு இந்திய வீரரிடம் "சாரி" என்று கூறுகிறார். இதற்கு இந்திய வீரர், "உங்களுக்குத் தான் சாரி!" என்று பதிலளிக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர் "ஏன்?" என்று கேட்க, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம், அதனால் சாரி என்று இந்திய வீரர் அவருக்கு நினைவுபடுத்துகிறார். தொடர்ந்து அந்த இந்திய வீரர், "நாங்கள் கோப்பையை வென்றோம், வரவிருக்கும் சூப்பர்-8 போட்டியிலும் வெற்றி பெறுவோம், எனவே இந்த கப்கேக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார். இதைக் கேட்டதும் தென்னாப்பிரிக்க வீரருக்குத் தொண்டையில் கேக் சிக்கிக்கொள்கிறது, அப்போது இந்திய வீரர் "ஓ, ஹோ! சோக்கிங்!" என்று கூச்சலிடுகிறார். (பல முக்கியத் தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதால், கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலும் "சோக்கர்ஸ்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.) சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்த உடனேயே, இந்த விளம்பரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபமும் வெளிப்பட்டது. பல பயனர்கள் இந்த விளம்பரம் தென்னாப்பிரிக்காவை 'இழிவுபடுத்துவதாக' கூறினர். விளம்பரத்தில் தென்னாப்பிரிக்கா 'சோக்கர்' என்று விவரிக்கப்பட்டது, ஆனால் இந்தியாதான் 'சோக்கர்' என்று நிரூபணமாகிவிட்டது என்று சிலர் கூறினர். "தலைக்கனம் கொள்வது சரியல்ல என்பதை இந்தச் சம்பவம் நமது விளம்பரதாரர்களுக்குக் கற்பிக்கக்கூடும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rz9gnjj11o
1 week ago
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை Published By: Digital Desk 1 23 Feb, 2026 | 12:44 PM அழுத்தங்கள் காரணமாக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரையாடல் அமர்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தில் கருத்துக்களை அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த இந்தத் தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239361
1 week ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணா ( @தமிழ் சிறி )!
1 week ago
மூன்று விக்கேட் சரி......................
1 week ago
வெஸ்சின்டீஸ் பின்னனி வீரர்களும் மலைகள் அடிச்சா சிக்ஸ் தான்........................
1 week ago
வெஸ்சின்டீஸ் வீரர்கள் சிம்பாவே சகல வீரர்களையும் அவுட் செய்யக் கூடும்............... இன்னும் சில மைச்சு தான் இருக்கு அதில் மற்ற அணிகளால் இந்த பெரிய ஸ்கோர் அடிக்க சான்ஸ் இல்லை.............. எல்லாரும் இந்தியா தான் பெரிய ஸ்கோர் அடிப்பினம் என கணித்து இருப்பினம் எங்கட கணிப்பு பொய்த்து போய் விட்டது ஹா ஹா........................
1 week ago
மொத்தமாக 19 ஆறுகளும் 16 நான்குகளுமாக 254 ஓட்டங்கள். என்ன சிம்ரன் இதெல்லாம். ஸிம்பாப்வெ சூப்பர் 8 வந்தது தப்பாய்யா.
1 week ago
போர் குற்றவாளிகளுக்கும், கள்வர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை.
1 week ago
இந்த உலக கோப்பையில் இதுவரை நடந்த போட்டியில் 254 பெரிய ஸ்கோர் இனி மற்ற அணிகளால் இந்த ஸ்கோரை அடிக்க முடியாது சிம்பாவே அணிக்கி இது அவமானம் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தவை இலங்கை மைதானம் வேறு இந்தியா மைதானம் வேறு.......................
1 week ago
ஒருத்தரை விட மற்றவர் ஒவ்வொருத்தரும் வாணவேடிக்கை காட்டுகிறார்கள் ......! 😂
1 week ago
இதோ எந்தன் தேவம் முன்னாலே ........ என்னா நடிப்புடா சாமி ......... சொல்லி வேல இல்ல .......! 🙏
Checked
Mon, 03/02/2026 - 23:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed