6 days 13 hours ago
மக்கள் கிளர்ச்சியா? ☹️ஜெ.வி.பி என்ற இடதுசாரி கும்பலின் நீண்ட நாள் வன்முறை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியா? உலக ,பிராந்திய வல்லர்சுகளின் துணையுடன் (யூ ரியுப்.மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்)
6 days 13 hours ago
சீமான் - ரோ - முத்துக்குமார் அனைத்தும் தங்களுடைய ஊகங்களாகவே உள்ளன.மன்னிக்கவும் நான் தங்களை தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியராகவோ / செய்தியாளராகவோ கருத இயலவில்லை மேலதிகமாக தெரிந்து கொள்ள செய்தி தளங்களை தாருங்கள்.. இங்கு நற்குடி என்பது கஞ்சா கடத்துதல் /கொலை / ஊழல் இதில் ஈடுபடாது இருத்தல் ஆகும்
6 days 13 hours ago
இதற்கு முன் பல பெண் நீதிபதிகள் இதே மல்லாக்கத்தில், யாழ் உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றி இருக்கிறார்கள். அப்போ ஒரு முறைப்பாடும் அவர்களுக்கு எதிராக எழவில்லை. உதாரணமாக உதயநிதி என்று நினைக்கிறன், பெயர் மனதில் சரியாக இல்லை. யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றியவர், இவர் இராணுவத்தினரின் மக்களுக்கெதிரான கெடுபிடிகளை கண்டித்தவர், இந்த ஒரு காரணத்தினாலேயே இடம் மாற்றப்பட்டவர், மஹிந்த ஆட்சியில். நம்ம ஆட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை அதையும் ஒத்துக்கொள்கிறேன்
6 days 13 hours ago
ஆஹா…அண்ணன் சீமானின் “குடி தேசியம்”. குடி என்றால் சாதிதானே? நல்லது (என சொல்லிகொள்ளும்) சாதியில் பிறந்தால்தான் நல்லியல்புகள் பொருந்தும் என்கிறீர்களா?
6 days 14 hours ago
எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது? Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?
6 days 14 hours ago
புலிகளுக்கும் அவருடன் முரண்பாடு இருந்தது எனவே அவர்கள் தான்.....??? நல்ல ஆழமான ஆனால் விரும்பும் கோமா....
6 days 14 hours ago
அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
6 days 16 hours ago
திரு ராமசந்திரனின் இன்னொரு முகம் எல்லோருக்கும் தெரியும் தோழர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். தங்கவேலு கதைத்தது உண்டு குணம் நாடி குற்றம் நாடி என்ற குறளுக்கு ஏற்ப குற்றத்தை விட குணம் அதிகமாக ...யாரும் குறைகளை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை அதுதான் உண்மை . அதற்காக செய்தது எல்லாம் சரி என்று ஆகாது..
6 days 16 hours ago
ஆதாரம். ? ஆதாரம் பிளீஸ்
6 days 16 hours ago
இந்த லிஸ்டில்… சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த… நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.
6 days 16 hours ago
காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள். ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது. கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை. எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா? பிகு இந்தியன் என சொல்லி கொள்ளும் உங்களுக்கே இந்திய வரலாற்றை பாடம் எடுக்க கூடாது, ஆனாலும் தரவு பிழை என்பதால் சொல்கிறேன் - காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தண்டி யில் நடந்தது. வேதாரணயத்தில் அதன் ஆதரவு போராட்டம் ராஜாஜி நடத்தியது. வாரும்…இரும்…படியும்…😂
6 days 17 hours ago
காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..? இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் . அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!! இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ? சாட்சிகள் நிலவரம் .. மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்? நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.
6 days 17 hours ago
என்னைத் தூங்க வைத்ததற்கு ரொம்ப நன்றி தம்பி. இருந்தாலும் முதலே சொல்லியிருந்தால் இவ்வளவு இழுபறி இருந்திருக்காதில்ல.
6 days 17 hours ago
100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
6 days 18 hours ago
கொமட்டிற்குள் நாகம்!
6 days 18 hours ago
குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி Published By: Vishnu 25 Sep, 2025 | 03:52 AM குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/226011
6 days 18 hours ago
வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தரவுகளில் 50 சதவீதமானவை மாத்திரமே துல்லியமானவை : பிரதி அமைச்சர் Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 01:32 PM அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானது என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வழங்கினார். உணவுப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அடையாளம் காணவும், அவற்றை முறையாக ஆய்வு செய்யவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நோக்கமாகக் கொண்டு, 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நாடு முழுவதும் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களினால் குரங்குகள், மக்கா குரங்குகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில் போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் வழங்கிய தரவுகளில் 50 சதவீதமானவையே துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், தரவுகள் சரிபார்ப்பின் போது, குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் அளித்த தகவல்களில் 50சதவீதமானவை துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, உணவுப் பயிர்களுக்கு வனவிலங்கு சேதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்குப் பொறுப்பான குழு, கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலங்கு எண்ணிக்கையையும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, மக்கா குரங்குகள்– 5,197,517 குரங்குகள்– 1,747,623 முள்ளம்பன்றிகள் – 2,666,630 ராட்சத அணில்கள் – 4,285,745 யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226045
6 days 18 hours ago
25 Sep, 2025 | 06:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226043
6 days 18 hours ago
பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க, நூர் ஜஹான் தனது உடலில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய அனுமதிக்கிறார். "என் குழந்தைகள் இரவில் பசியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்கிறேன்" என்று அவர் கூறினார். மூன்று மாத கால மருத்துவ பரிசோதனைகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, தனது மகளின் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வருகிறார் நூர் ஜஹான் நூர் ஜஹான் தற்போது மூன்று மாத கால மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார். பரிசோதனைகளுக்காக அவர் தொடர்ந்து ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும். மருத்துவ பரிசோதனையின் முடிவில், அவருக்கு 51,000 ரூபாய் வழங்கப்படும். பிபிசி அவரை நேர்காணல் செய்தபோது, அவர் ஏற்கனவே ரூ.15,000 பெற்றிருந்தார். அடுத்து பெறப்போகும் 36,000 ரூபாயை தனது மகளின் திருமணத்திற்குப் பயன்படுத்த இருப்பதாக நூர் ஜஹான் கூறினார். "நாங்கள் ஏழைகள். எப்படியும் இந்த சிறிய குடிசையில் நாங்கள் இறக்கப் போகிறோம். நான் என் ரத்தத்தைக் கொடுத்து பணம் பெறுகிறேன். நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. மீதமுள்ள பணத்தைப் பெற்ற பிறகு, என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன்" என்று நூர் ஜஹான் பிபிசியிடம் கூறினார். ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட ஒரு குடியிருப்பான கணேஷ் நகரில் நூர் ஜஹான் வசிக்கிறார். அருகிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளில் இந்தப் பகுதியிலிருந்து பங்கேற்கும் நூற்றுக்கணக்கான மக்களில் இவரும் ஒருவர். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா தன் உடலில் உள்ள தழும்புகளைக் காட்டுகிறார் நூர் ஜஹானைப் போலவே, 60 வயதான ஜாசிபென் சுனாராவும் மருத்துவ பரிசோதனைகளில் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மகனை இழந்த அவர் ஆமதாபாத்தின் ஜமால்பூரில் உள்ள காய்கறி மற்றும் பூ சந்தைக்கு அருகில் வசித்து வந்தார். "நான் ஜமல்பூரில் வசித்தபோது, எனக்கு ஒருபோதும் பணக் கஷ்டம் ஏற்பட்டதில்லை. வியாபாரிகள் வேண்டாம் என ஒதுக்கும் காய்கறிகளை சந்தையில் இருந்து எடுத்து வந்து, விற்பேன்" என்று ஜாசிபென் கூறினார். "இப்போது நான் கணேஷ்நகருக்கு மாறியதால், எனக்கு வருமானத்திற்கு வழி இல்லை. மருத்துவ பரிசோதனையில் சேருவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை." என்கிறார். ஒரு சிறிய குடிசையில் அவர் வசிக்கிறார். "இப்போது என்னால் காய்கறிகளை விற்க முடியாது. என் உடல்நிலை சரியில்லை. என் கைகள் வலிக்கின்றன. ஆனாலும் பட்டினி கிடக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்கிறேன்" என்று ஜாசிபென் சுனாரா கூறுகிறார். ஆமதாபாத்தின் புறநகரில் உள்ள பிரனா குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள கணேஷ்நகரில் சுமார் 15,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள். இவர்களில் பலர் ஆற்றங்கரைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்தனர். அதேசமயம், ஆகமதாபாத்தின் சந்தைகளில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பெண்கள் சந்தைகளில் வேலை செய்தனர் அல்லது வீடுகளில் பணியாளர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 முதல் 400 ரூபாய் வரை சம்பாதித்தனர். வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்ட பிறகு அவர்களில் பலர் வேலை இழந்துவிட்டனர். பிஸ்மில்லாவின் கதை பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, நிறுவனங்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பவர்களுக்கும் இடையே முகவர்கள் ஒரு முக்கிய இணைப்பாக உள்ளனர். ஆமதாபாத் மாநகராட்சியின் அறிக்கையின்படி, சுபாஷ் பாலம் முதல் வாஸ்னா தடுப்பணை வரையிலான ஆற்றங்கரைப் பகுதியில் வசித்த 12,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 29 அரசு குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் முன்பு வசித்த பகுதிகளில் இருந்து இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 48 வயதான பிஸ்மில்லா கோலா, கணேஷ்நகருக்கு இடம்பெயர்வதற்கு முன்பு விவாகரத்து பெற்றார். ஒரு காலத்தில், அருகிலிருந்த குடியிருப்புகளில் வீட்டு வேலைகள் செய்து வந்த அவர், அவரது மகன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு அந்த வேலையை இழந்தார். பின்னர் பிஸ்மில்லா மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்கத் தொடங்கினார். "நான் தனியாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லை. என் மகனின் வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லை. என் வீட்டை பழுதுபார்க்க கூட என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ பரிசோதனைகளில் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று ஒருவர் சொன்னபோது நான் அதில் சேர்ந்தேன்" என்று அவர் கூறினார். பிஸ்மில்லா பல மருத்துவ சோதனைகளில் பங்கேற்றுள்ளார். கணேஷ்நகரின் உள்ளூர்வாசிகள் இதுபோன்ற மருத்துவ பரிசோதனைகளை 'STD'-கள் என்று அழைக்கிறார்கள். 'Study' (ஆய்வு) என்பதையே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "நான் குறைந்தது ஏழு முதல் பத்து ஆய்வுகளில் பங்கேற்றுள்ளேன், ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதித்துள்ளேன். நான் மூன்று நாட்கள் ஆய்வகத்தில் தங்க வேண்டும். மருந்து எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் என் ரத்தத்தை தொடர்ந்து எடுத்து பரிசோதிப்பார்கள்" என்று பிஸ்மில்லா கூறுகிறார். பரிசோதனைகள் தொடர்பான விதிகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, கணேஷ்நகரில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. உள்ளூர் முகவர்கள் மூலம் பிஸ்மில்லா இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முகவர்கள், அவர்கள் அழைத்து வரும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். "பொதுவாக ஆய்வகங்கள் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக எங்களைத் தொடர்பு கொள்கின்றன. அவர்களிடம் எங்கள் எண் இருக்கும். அவர்கள் எங்களை அழைப்பார்கள்," என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு முகவர் பிபிசியிடம் கூறினார். "நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருக்கிறோம், அங்கு இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் நாங்களே மக்களை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்கிறோம், சில நேரங்களில் அவர்களை நேரடியாகவே அங்கு செல்லுமாறு கூறுகிறோம்." என்கிறார் அவர். இந்த முகவரே மருத்துவ சோதனைகளில் பங்கேற்றவர்தான். இப்போது அவர் பிஸ்மில்லா, நூர் ஜஹான் மற்றும் ஜாசி பென் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை நடத்தி வருகிறார். "இதில் என்ன தவறு? ஆராய்ச்சி நிறுவனங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்வதில்லை. அவை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் காணொளி பதிவு மூலமாகவும் ஒப்புதல் பெறப்படுகிறது" என்று அந்த முகவர் கூறுகிறார். "மருந்து மற்றும் அதன் பக்க விளைவுகள் பரிசோதிக்கப்படுவதாக பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பங்கேற்பாளர்கள் வீடு திரும்பிய பிறகும் மருத்துவரிடம் உதவி பெற முடியும்." என்கிறார் அவர். ஆனால் உள்ளூர் சமூக ஆர்வலர் பினா ஜாதவ், "முன்னதாக, ஒன்று அல்லது இரண்டு முறை என அவ்வப்போது இந்த மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக சோதனைகளில் சேர்ந்தனர், ஆனால் இப்போது அது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். ஆனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாததால், இதில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று கூறுகிறார். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பினா ஜாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பக்க விளைவுகள் குறித்து மக்களை எச்சரிக்க முயற்சிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்களின்படி இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய பிபிசி ஒரு முக்கிய நிறுவனத்தின் ஆய்வகத்தைத் தொடர்பு கொண்டது. மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள், "அத்தகைய தொகை பொதுவாக ஆய்வின் நன்மைக்காக அல்லாமல் ஆட்சேர்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது" என்று கூறுகின்றன. "நிச்சயமாக, ஐஇசி- ஐஆர்பி (IEC - IRB) செலுத்தப்படும் தொகை மற்றும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வற்புறுத்தல் அல்லது தேவையற்ற அழுத்தம் காரணமாக மக்கள் இதில் பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மக்கள் இந்த ஆய்வுகளில் சேர அல்லது தொடர்ந்து பங்கேற்க ஊக்குவிக்கும் அளவுக்கு ஊதியம் அதிகமாக இருக்கக்கூடாது." உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் இந்த நடைமுறையை "மனித உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயல்" என்று விவரிக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "இந்த சோதனையின் தீய விளைவுகள் பற்றி அறியாதவர்களைக் குறித்து நாங்கள் பேசுகிறோம். சட்டப்படி, அவர்களின் சம்மதத்தை தகவலறிந்த சம்மதமாகக் கருத முடியாது" என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 'ஸ்வஸ்த் அதிகார் மன்ச்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சஞ்சய் பாரிக் அந்த அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்தூரில் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான பல இறப்புகளுக்குப் பிறகு, அந்த அமைப்பு மனு தாக்கல் செய்தது "இது குஜராத்தில் மட்டும் நடப்பதில்லை. மும்பை, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஆய்வகங்களும் மக்களை 'சோதனை எலிகளாகப்' பயன்படுத்துகின்றன" என்று அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமுல்யா நிதி கூறுகிறார். மருத்துவ சோதனைகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கும் ஒரு நாடாளுமன்றக் குழுவும், நாட்டின் அடித்தட்டு மக்களைக் குறிக்க 'கினி எலி' என்ற வார்த்தையை பயன்படுத்தியது. "தன்னார்வலர்களின் ஆட்சேர்ப்பு முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வரை ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்க ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதுவரை, பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள். சோதனைகளின் குறிப்பிட்ட முடிவுகளைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்" என்று சஞ்சய் பரிக் கூறுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த 'கிராண்ட்வியூ ரிசர்ச்சை' மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 'இந்தியாவின் மருத்துவ பரிசோதனை சந்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 1.51 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சோதனைகள் தோல்வியுற்றாலும் அதிக செலவு கிடையாது என்பதால், நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. "ஒருபுறம், மக்களுக்கு பணம் தேவை, மறுபுறம், நிறுவனங்களுக்கு மருந்துகளை சோதிக்க தன்னார்வலர்கள் தேவை. எல்லாம் சட்டம் மற்றும் அரசாங்க தரநிலைகளின்படி செய்யப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை," என்று காமன்வெல்த் மருந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் ராவ் வி.எஸ்.வி. வட்லமுடி பிபிசியிடம் தெரிவித்தார். "இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நாம் யாரைப் பாதுகாக்கிறோம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மருந்து உற்பத்தி ஒரு உன்னதமான தொழில், சமூகம் பெரிய அளவில் பயனடைய மனித தன்னார்வலர்கள் தேவை, ஆனால் அனைத்து தரநிலைகளும் பின்பற்றப்பட வேண்டும்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dx9gqvd92o
6 days 18 hours ago
வட்ட வடிவில் வானவில் நாயின் வித்தியாசமான செயல்
Checked
Thu, 10/02/2025 - 10:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed