புதிய பதிவுகள்2

நீ இயந்திரம் நான் பிரேக்

2 months 4 weeks ago
இரட்டையர்களில் அனேகமானோர் அழகாகவும் ஒரே மாதிரியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். இறப்பு ஒன்றாக நடந்திருப்பது புதுமை தான். காரணம் வேறு தெரியவில்லை.

நீ இயந்திரம் நான் பிரேக்

2 months 4 weeks ago
நீ இயந்திரம் நான் பிரேக் அவர்கள் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். பிறந்த நாளிலிருந்தே பிரிக்க முடியாதவர்கள், அலிஸ் (Alice) மற்றும் எலன் (Ellen). ஒருகாலத்தில் “உலகின் மிக அழகான பெண்கள்” என்று புகழப்பட்ட இந்த இருவரும், இன்று இல்லை. எப்படி ஒன்றாக உயிர் பெற்றார்களோ, அவ்வாறே ஒன்றாக உயிர் பிரிந்தும் விட்டார்கள். இருவரும் ஜெர்மனியின் மூனிச் மாநிலத்திலுள்ள கிரூன்வால்டில் 89 வயதில் மரணமடைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. வெளிப்புறக் காரணமில்லை என்ற அறிவிப்புடன் அந்தச் செய்தி முடிந்து விட்டது. அவர்கள் இயல்பாகச் சென்றார்களா? தற்கொலையா? யாருக்கும் தெரியவில்லை. “நாங்கள் இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் என்பதற்கும் மேலாக, எங்களது தந்தையின் பயங்கரமான கோபத்தின் பயம் எங்களை ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டபடி வாழ கற்றுக் கொடுத்தது. வேறு யாரையும் முழுமையாக நம்ப முடியாத நிலை, எங்கள் இருவரையும் இணைத்த பிணைப்பு,” என்று Die Zeit சஞ்சிகைக்குக் கொடுத்த நேர்காணலில் அவர்கள் கூறியிருந்தனர். அவர்களின் நடனமே அவர்களை உலகுக்குத் தெரிய வைத்தது. அந்நாளில் பெண்கள் கால்களை மட்டும் காட்டி ஆடினாலும் இளைஞர்கள் கூட்டம் கூடி விடும். அப்படியான சூழலில், இவர்கள் தாராளமாகவே அந்தச் சுதந்திரத்தை அரங்கேற்றினர். கால்களின் இயக்கத்தில் திளைத்து ஆண்களின் இதயங்களுக்குள் நுழைந்தார்கள். இருவரின் கவர்ச்சியும் மின்னும் மேடை நடையும் நடனமும், உலகின் அழகிய பெண்களின் பட்டியலில் இவர்களை நிலைநிறுத்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் இவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இத்தாலியில்தான் இவர்களுக்கு மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. 1962 முதல் தொடர்ந்து 24 ஆண்டுகள் இவர்களின் அதிகமான நிகழ்ச்சிகள் அங்கு நடந்தேறின. 1975-ல், அப்போது இவர்கள் 35 வயதிலிருந்தபோது, இத்தாலிய Playboy சஞ்சிகை வெளியிட்ட இவர்களின் நிர்வாணப் படங்கள் காரணமாக மூன்று மணிநேரத்துக்குள் அனைத்து Playboy சஞ்சிகைகளும் விற்று முடிந்தன. சில வாரங்களைத் தவிர, அலிஸ் மற்றும் எலன் எல்லாக் காலங்களிலும் ஒன்றாகவே இருந்தவர்கள். திருமணம் செய்யவில்லை. ஒரு பத்திரிகை நேர்காணலில் அலிஸ், “எலன் தான் இயந்திரம். நான் தான் பிரேக்,” என்று சொன்னார். இப்போது அவர்களின் 89வது வயதில்,இயந்திரம் பழுதானதா? அல்லது பிரேக் திடீரெனப் பிடித்து இயந்திரத்தை நிறுத்திவிட்டதா? அது மட்டும் மர்மமாகவே நின்று விட்டது. இரட்டையர்களின் ஆட்டம் ஒன்றை இணைத்திருக்கிறேன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேதா இசையமைத்தது. “ கொஞ்சம் நில்லடி என் கண்ணே கூந்தல் தொட்டுப் பின்னலாமா… என்று அந்தப் பாடல் தொடங்குகிறது

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 4 weeks ago
அது. சிங்களவர்கள். அவர்களால். அடித்து. கலைக்க முடியும். தமிழர்கள். அப்படி. செய்ய முடியாது.

யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.

2 months 4 weeks ago
நாச்சிமார் கோயிலடி இராஜனுடன் யாழில்தான் அறிமுகம் கிடைத்தது. வில்லுப்பாட்டு அவருக்கு ஒரு அடையாளமாக இருந்தாலும், கதை,நாடகங்கள் என்று அவர் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். குறும் படங்களையும் அவர் இயக்கி நடித்திருக்கின்றார். யாழ் இணையத்தில் வரும் கலைஞர்களின் சிறு கதைகளை வில்லுப்பாட்டாக வடிவமைத்து மேடை ஏற்றி இருக்கின்றார். அவர் சார்ந்து பலதை சொல்லிக் கொண்டு போகலாம்… எனது அஞ்சலிகள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

2 months 4 weeks ago
நானும் எத்தனையோ டொல்பின் சம்பந்தப் பட்ட காணொளிகளை பார்த்துள்ளேன். எந்த ஒரு இடத்திலும் டொல்பின்கள் மனிதருடன் ஆக்ரோசமாக நடந்ததில்லை. மாறாக நன்றாக பழகிய நண்பன் மாதிரியே சுற்றிச் சுற்றி வரும். அவசியம் என்றால்… மனிதனுக்கு உதவியும் செய்யும். சரியான தகவலுக்கு நன்றி. 🙂

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

2 months 4 weeks ago
தவறான தகவல். பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம். அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

2 months 4 weeks ago
அது ஒரு விபத்து போலவே இருக்கு ......... அந்த டொல்பின் அழுதுகொண்டு அவரை சுற்றி தூற்றி தேடுகிறது. என்ன நடந்திருக்கும் என்று சரியாக தெரியவில்லை. நாய்கள் கடித்து ஆயிர கணக்கானவர்கள் இருந்து இருக்கிறார்கள்தானே ?

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

2 months 4 weeks ago
இது முற்றிலும் சரியான தகவல் அல்ல. "யூதம்" ஒரு மதம் என்பது சரி. ஆனால் யூத மக்களின் வாழ்க்கை முறை, மணம் முடிக்கும் முறைகள் காரணமாக jewishness என்பது அவர்களது தாய்வழியின் (matrilineal) ஊடாகப் பேணப் பட்டு வரும் ancestry உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களை அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள் என்பார்கள். இவர்களின் சிறுமணி டி.என்.ஏ (mitochondrial DNA) யில் அவர்களின் தாய்வழி அஷ்கெனாசி டி.என்.ஏ பண்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்னர், இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் இருந்து "நாம் கிழக்கு நோக்கி குடிபெயர்ந்த போது தொலைந்து போன யூத கோத்திரங்களில் (tribe) இருந்து வந்தவர்கள்" என்று ஒரு இந்திய யூதர்கள் சமூகம் இஸ்ரேலுக்குச் சென்று டி.என்.ஏ பரிசோதனையை கோர்ட்டில் சமர்ப்பித்து இஸ்ரேல் குடியுரிமையைப் பெற்றார்கள். "யூத ஜீன்" என்ற ஒன்று இல்லை, ஆனால் ancestry இன் வழியாக யூதப் பின்னணியைக் கண்டறியலாம், நிரூபிக்கலாம்.

இந்திய துணைத் தூதுவர் - மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு

2 months 4 weeks ago
18 Nov, 2025 | 05:22 PM இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230729

நாம் பெருமையடைகின்றோம் - அமெரிக்கத்தூதர் ஜூலி சங்

2 months 4 weeks ago
Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 05:20 PM தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இந்த கூட்டாண்மையின் மூலம் அபாய மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு, கடல் பாதுகாப்பு, தொழில்முறை இராணுவப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்புகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய ஒத்துழைப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. State Partnership Program திட்டத்தின் மூலம் ஏற்படும் இத்தகைய விரிவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230727

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

2 months 4 weeks ago
DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

2 months 4 weeks ago
21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு Nov 18, 2025 - 09:44 PM எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4rx2mg01r6o29nnrvhgnlp

திருகோணமலை சம்பவம் - அறிக்கை கோரிய ஜனாதிபதி

2 months 4 weeks ago
Nov 18, 2025 - 06:07 PM நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது. பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம். இல்லை... அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை. சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டது. தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும். இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் (பிரச்சினை செய்கிறார்கள்)?... அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன. நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள். எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi4k6wzb01qzo29nt32frmoh

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
பவுமா கேலி செய்யப்பட்ட தன் உயரத்தையே பலமாக மாற்றி இந்தியாவை வீழ்த்தியது எப்படி? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சில தினங்களுக்கு முன் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஒருகட்டத்தில் டெம்பா பவுமாவும், மார்கோ யான்சனும் இணைந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். ஓவர்களுக்கு இடையே அவர்கள் அருகருகே நின்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் இப்படிப் பேசினார்கள்: "சர்வதேச கிரிக்கெட்டில் உயர வித்தியாசம் அதிகமாக இருக்கும் ஜோடி இதுவாகத்தான் இருக்கும்." அந்த இருவரும் அருகருகே இருக்கும் காட்சியைப் பார்த்த பலரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு இடையே சுமார் 40 சென்டிமீட்டர் அளவுக்கும் மேல் உயர வித்தியாசம் இருப்பதால் அது பேசுபொருளாகிவிடுகிறது. குறிப்பாக இன்று சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவான வீரர்களில் பவுமாவும் ஒருவர் என்பதால், அதை பற்றிக் குறிப்பிடாமல் பெரும்பாலான உரையாடல்கள் முடிவதில்லை. இதே போட்டியின் முதல் நாளில் பவுமாவுக்கு எதிராக ரிவ்யூ எடுப்பது பற்றி ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசிய உரையாடலில் 'பௌனா' என்ற இந்தி வார்த்தை (உயரம் குறைவானர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தை) பயன்படுத்தப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது பவுமாவை நேரடியாகக் குறிக்கும் வார்த்தை இல்லை என்று சிலர் கூறினாலும், அதைத் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் வாதிட்டனர். பவுமா பற்றிப் பேசினாலே அவரது உயரம் பற்றி பேச்சு வந்துடுவிடுகிறதே என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ் வர்ணனையாளர்கள் இந்தப் போட்டியின்போது பவுமாவின் உயரம் பற்றி வேறொரு பரிமாணத்தில் பேசினார்கள். ஒவ்வொரு பேட்டரும் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யத் தடுமாறும்போது, பவுமா மட்டும் எப்படி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று பேசியவர்கள், "பவுமாவின் உயரம் அவருக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்கள். அவரது குறைவான உயரம்தான் அவரை நீண்ட நேரம் விளையாட வைத்தது என்றார்கள். அதுதான் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க எதிர்பார்த்ததை விட பெரிய ஸ்கோரை எட்டக் காரணம் என்றும் கூறினார்கள். தென்னாப்பிரிக்கா பெரிய ஸ்கோர் எடுக்கவும், இந்தியாவை அவர்கள் வீழ்த்தவும், பவுமாவின் உயரம் உதவியதா? கடினமான களத்தில் பவுமாவின் போராட்டம் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கும் மேலாக சந்தித்த, அரைசதம் அடித்த ஒரே வீரர் பவுமா மட்டும்தான். தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் போராடிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டி நடந்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டர்கள் அனைவரும் பெரும் சவாலை எதிர்கொண்டிருந்தனர். மொத்தம் இரண்டே முக்கால் நாள்களிலேயே முடிந்திருந்த இந்த ஆட்டத்தில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 594 ரன்கள் தான் எடுக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வது அனைவருக்குமே மிகவும் சிரமமாக இருந்தது. பெரும் விமர்சனங்களுக்குள்ளான இந்த ஆடுகளத்தில் பந்துகளைக் கணிப்பது கடினமாக இருந்தது. பந்தின் 'டர்ன்', 'பவுன்ஸ்', 'டிப்' போன்ற விஷயங்களை சரியாக யூகிக்க பேட்டர்கள் தடுமாறினார்கள். . பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்த ஒரே பேட்டர் டெம்பா பவுமா தான் இரண்டாவது நாளின் இறுதியில் வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸுக்கு 120 ரன்கள் என்ற இலக்கே கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தார் இந்திய முன்னாள் வீரர் ஶ்ரீதரன் ஶ்ரீராம். ஆனால், முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பின்தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் 75/6 என்ற நிலையில் இருக்க, 150 ரன்களெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார் பவுமா. தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா விக்கெட்டுகள் மேல் விக்கெட்டுகளாக வீழ்த்தினார். அதிலும் இரண்டாவது நாளின் மூன்றாவது செஷனில் ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. அப்போது தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் பவுமா. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், அவர் நிலைத்து நின்று விளையாடினார். யான்சன் மற்றும் கார்பின் பாஷ் உடன் சிறு பார்ட்னர்ஷிப்களும் அமைத்தார். அனைவரையும் அச்சுறுத்திய ஜடேஜாவுக்கு எதிராக 46 பந்துகள் சந்தித்திருந்தாலும், அதை அற்புதமாகக் கையாண்டார் அவர். அப்போதுதான் தமிழ் வர்ணனையாளளர்கள் அவரது உயரம் அவருக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று பேசினார்கள். பவுமாவின் ஈர்ப்பு மையம் (சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி - Centre of Gravity) நன்கு தாழ்ந்து இருப்பதாலும், அவரது அடித்தளம் நன்கு திடமாக இருப்பதாலும், அது அவருக்கு இந்தப் போட்டியில் உதவியதாக பிபிசி தமிழிடம் கூறினார் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கே.பி.அருண் கார்த்திக். அவரது தாழ்ந்த ஈர்ப்பு மையத்தின் காரணமாக மற்ற வீரர்களைவிட எளிதாக அவரால் இந்த ஆடுகளத்தையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ள முடிந்தது என்றார் அவர். தாழ்ந்த ஈர்ப்பு மையம் என்றால் என்ன? அதன் சாதகம் என்ன? ஒரு பொருளின் மொத்த எடை, ஒரே புள்ளியில் செயல்படுவதாகக் கொள்ளப்படுவதே ஈர்ப்பு மையம் (Centre of Gravity) எனப்படும். உதாரணமாக ஒரு பேனாவின் மையப் பகுதியை நம் விரலில் வைத்து நம்மால் சமநிலைப்படுத்த (balance) முடிகிறது அல்லவா, அதற்குக் காரணம் அந்தப் பேணாவின் ஈர்ப்பு மையம் அந்த நடுப்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் ஈர்ப்பு மையம் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். ''மனிதர்களைப் பொறுத்தவரை ஈர்ப்பு மையம் நம் நிலையைப் பொறுத்து மாறும். நாம் கால்களை அகன்று வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் கீழே இருக்கும். அப்போது நல்ல நிலைத்தன்மை இருக்கும். அதுவே கால்களை ஒட்டி வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் மேலே இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் நாம் எளியில் விழுந்துவிடுவோம். சுமோ வீரர்களோ, மல்யுத்த வீரர்களோ சண்டையிடும்போது கால்களை அகற்றி வைப்பதற்கான காரனம் இதுதான்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் விளையாட்டு மருத்துவரான ஹரிணி முரளிதரன். சுறுக்கமாகச் சொன்னால், ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தால் நிலைத்தன்மை அதிகமாக இருக்கும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தங்கள் நிலைத்தன்மையை அதிகப்படுத்தும் நோக்கில், கால்களை அகலமாக வைத்து தங்கள் ஈர்ப்பு மையத்தை சுமோ வீரர்கள் தாழ்வாக்குகிறார்கள் (கோப்பு படம்) பவுமாவின் உயரம் சாதகமாக அமைந்தது எப்படி? பவுமாவின் உயரம் மற்றும் தாழ்ந்த ஈர்ப்பு மையம் பற்றிப் பேசிய கே.பி.அருண் கார்த்திக், "பொதுவாக 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருக்கும் வீரர்களிடம் நல்ல சமநிலை இருக்கும். பவுமா உயரம் குறைவாக இருப்பதால் அவரது சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்ந்து இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் (பேட்டர்கள் பந்தை சந்திப்பதற்குத் தயாராகும்போது நிற்கும் முறை) சற்று அகலமாக இருக்கிறது. இதனால் அவரால் திடமாக நகர முடிகிறது" என்று கூறினார். "பந்து நன்கு திரும்பும் விக்கெட்டுகளில் இது சாதகமான ஒரு அம்சம். பந்தைப் பற்றி அவரால் நன்கு கணிக்க முடியும். அது எப்படியான பந்து என்பதையும் சீக்கிரம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாக 'லென்த்தில்' வீசப்படும் பந்துகளுக்கு பெரும்பாலான வீரர்கள் 'ஃப்ரன்ட் ஃபூட்' (கால்களை முன் நகர்த்தி) வைத்து ஆடுவார்கள். ஆனால் அவர் அந்தப் பந்துகளை பேக் ஃபூட்டில் (கால்களைப் பின் நகர்த்தி) ஆடினார். அதனால் பந்தின் தன்மையை இன்னும் சரியாகக் கணிக்க முடிகிறது, அதை எதிர்கொள்வதற்கான கூடுதல் அவகாசமும் அவருக்குக் கிடைக்கிறது" என்றும் அருண் கார்த்திக் கூறினார். ஒருவேளை பந்துகள் திரும்பினாலும் கூட அவர் பேட்டுக்கு வெளியே செல்கிறதே தவிர, உள்ளே வரவில்லை என்றும் அவர் கூறினார். அதேசமயம் பவுமாவின் உயரம், ஒரு கட்டத்தில் யான்சன், பாஷ் போன்ற வீரருக்கும் உதவியது என்று கூறினார் அருண் கார்த்திக். "மிகவும் உயர வித்தியாசம் கொண்ட வீரர்கள் ஆடும்போது பௌலர்கள் தங்களின் 'லென்த்தை' மாற்றவேண்டிய நிலை ஏற்படும். அது அவர்களுக்கு சற்று பாதகமான அம்சம். சீராக ஒரே போல் வீசிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாற்றம் பின்னடைவைக் கொடுக்கும். அது பேட்டர்களுக்கு சாதகமாக அமையும்" என்றார் அவர். வர்ணனையின்போது இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் இந்த தாழ்வான ஈர்ப்பு மையமும், பவுமான டிஃபன்ஸிவ் மனநிலையும் இணைந்து ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸைக் கட்டமைத்தது என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பவுமாவின் ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தது ஈடன் கார்டன் போட்டியில் அவருக்கு சாதகமாக அமைந்தது பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய அபினவ் முகுந்த், "தன்னுடைய உயரத்தை நன்கு சாதகமாக்கிக்கொண்ட பவுமா, பந்துகளுக்கு அதிகமாக 'கமிட்' (commit) ஆகவில்லை'' என்றார். ''அவர் அதிகமாக 'இனிஷியல் மூவ்மென்ட்' எதுவும் கொடுக்கவில்லை. அதிகம் முன்னே நகராமல் ரொம்பவும் கொஞ்சமாகதான் கால்களை முன்பு நகர்த்தினார் (a small front press). அதனால் எந்தப் பந்துக்கும் அவர் முன்கூட்டியே சென்றுவிடவில்லை. இது டிஃபன்ஸிவ் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு நல்ல வழிமுறை." என்று கூறினார். தற்போது டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத பவுமாவால் தடுப்பு ஆட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்கா 75/6 என்ற தடுமாறிக்கொண்டிருந்தபோது யான்சன் மற்றும் பாஷ் உடன் கூட்டணி அமைத்துத்தான் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார் பவுமா. பவுமாவுக்கு அடுத்து அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள் அடித்தது பாஷ் (25 ரன்கள்) மற்றும் யான்சன் (13 ரன்கள்) இருவரும்தான். இந்த எதிர்பாராத இன்னிங்ஸ்கள்தான் தென்னாப்பிரிக்கா 123 என்ற பெரிய முன்னிலை (அந்த ஆடுகளத்துக்கு அது பெரிய இலக்காகவே கருதப்பட்டது) பெறக் காரணமாக அமைந்தது. கவாஸ்கர், சச்சின் போன்றவர்களுக்கும் உதவியது பவுமா மட்டுமல்ல, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் முதல் மெஸ்ஸி வரை உயரம் குறைவான வீரர்கள் அதீத நிலைத்தன்மையோடு காணப்பட்டதற்கு அந்த ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்ததுதான் காரணம் என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூட பாட்காஸ்ட்டில் சில மாதங்கள் முன்பு இதுபற்றிப் பேசியிருந்தார். தனக்கு முந்தைய தலைமுறை வீரர்களிடம் பேட்டிங் பற்றி டிராவிட் ஏதும் பின்பற்றியிருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றிப் பேசிய டிராவிட், "கவாஸ்கர் அற்புதமான நிலைத்தன்மை கொண்டவர். அதை நான் எப்போதும் வியந்திருக்கிறேன். நான் சற்று உயரம் அதிகம் என்பதால், என்னால் எதையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்ற வகையில் நான் நின்றேன். அதேசமயம் டெண்டுல்கரும் நன்கு நிலைத்தன்மை கொண்டிருந்தார். உயரம் குறைவான வீரர்களுக்கு 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருப்பதால் அவர்களுக்கு எப்போதுமே அதிக நிலைத்தன்மை கொண்ட பார்வை ஏற்படும் என்று சொல்வார்களே" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன்னை விட உயரம் குறைவான சச்சின், சிறந்த நிலைத்தன்மை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் டிராவிட் (கோப்புப் படம்) மேலும், "கடந்த காலத்தில் விளையாடிய வீரர்களில் பல சிறந்த பேட்டர்கள் உயரம் குறைவானவர்களாக இருந்திருக்கிறார்கள். கவாஸ்கர், டெண்டுல்கர், லாரா, பான்டிங்... அந்தக் காலத்தில் பிராட்மேன் வரை பாருங்கள். கோலி கூட கொஞ்சம் உயரம் குறைவானவர்தான். அவருக்கு நான் அப்படி சொல்வது பிடிக்காமல் போகலாம்" என்றும் டிராவிட் கூறியிருந்தார். தற்போது கிரிக்கெட் மாறிவரும் சூழலில், டி20 கிரிக்கெட் எழுச்சி பெற்றிருக்கும் நிலையில், அது உயரமான வீரர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறினார் டிராவிட். உயரமான வீரர்கள் பந்தை எட்டுவதற்கும் நன்கு பலம் கொடுத்து அடிப்பதற்கும் அவர்கள் உயரம் உதவுவதாகக் கூறிய டிராவிட், கெவின் பீட்டர்சன், கரன் பொல்லார்ட் போன்றவர்களை உதாரணமாகக் கூறினார். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் உயரம் குறைவான வீரர்களால் மற்றவர்களைவிட அதிகம் சோபிக்க முடியும் என்கிறார் கே.பி.அருண் கார்த்திக். ஆலன் டொனால்டுக்கு எதிராக ஈர்ப்பு மையத்தை மேலும் தாழ்வாக்கிய சச்சின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியொன்றில் ஆலன் டொனால்டுக்கு எதிராக தான் ஈர்ப்பு மையத்தை மிகவும் தாழ்த்தி விளையாடியதைப் பற்றி பத்திரிகையாளர் போரியா மஜும்தாரிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். "அரௌண்ட் தி ஸ்டம்ப் (around the stump line) வந்து எனது விலாவைக் குறிவைத்து பந்துவீசிக்கொண்டிருந்தார் ஆலன் டொனால்ட். 'உயரமான வீரர்கள் பந்துக்கு மேலே சென்று ஆடுவதுபோல், நாம் ஏன் பந்துக்கு கீழே சென்று ஆடக்கூடாது' என்று யோசித்தேன். உடனே என்னுடைய ஈர்ப்பு மையத்தைத் தாழ்த்தி, பந்துக்குக் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு அவரை எதிர்கொள்வது சற்று எளிதானது," என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஈர்ப்பு மையத்தை நன்கு தாழ்வாக்கியதன் மூலம் வீசப்படும் பந்து பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்) மேலும், "ஒருவேளை பந்து 'ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில்' (short of good length) பிட்ச் ஆனாலும், என்னால் அதற்குக் கீழே செல்ல முடிந்தது. அதைத் தொடர்ச்சியாக செய்ய நான் என் ஸ்டான்ஸை அகலப்படுத்தி, இன்னும் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு பந்தின் லென்த்தைக் கணிப்பதுதான் விஷயம். அதை நான் சரியாகக் கணித்தபின், பந்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளும் நிலையில் இருந்தேன்." என்றும் சச்சின் கூறினார். ஈடன் கார்டனில் பவுமா இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொண்டது கிட்டத்தட்ட இப்படித்தான். உயர்ந்து நின்ற பவுமா ஈர்ப்பு மையம் தாழ்வாக இருப்பதோடு, நன்கு அகலமான ஸ்டான்ஸ் கொண்டிருந்ததால், வீசப்படும் பந்துகளைப் பவுமாவால் நன்கு அறிந்திருக்க முடிந்தது என்றார் அருண் கார்த்திக். அதனால் தான் ஜடேஜாவுக்கு எதிராக அனைவரும் விக்கெட்டுகள் இழந்தபோது பவுமா உறுதியாக நின்றார் என்கிறார் அவர். ஜடேஜா அன்று வீசியது மிகச் சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவர் வீசிய 20 ஓவர்களில், 17 ஓவர்களில் குறைந்தது ஒரு பந்தையாவது சந்தித்திருந்தார் பவுமா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 75/6 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, பவுமாவின் இன்னிங்ஸாலும், அவர் அமைத்த இரு பார்ட்னர்ஷிப்களாலும் 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றன மற்ற பேட்டர்கள் ஜடேஜாவின் பந்தைக் கணிக்கத் தவறியபோது, பவுமா அதில் எந்தத் தவறும் செய்யவில்லை. காரணம், தமிழ் வர்ணனையாளர்கள் சொன்னதுபோல், பவுமாவின் உயரமும், அவரது ஸ்டான்ஸும். அந்த இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா விரைவில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இலக்கு குறைவாக இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியை வென்றிருக்கும். ஆனால், பவுமாவின் அந்த இன்னிங்ஸ் அதைத் தடுத்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgk2vpyjewo

'மேயரில்லாத மதுரை நகரம்' - ஒரு மாதமாக புதிய மேயரை நியமிக்க முடியாதது ஏன்?

2 months 4 weeks ago
பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, (கோப்புப்படம்) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா 17-ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் தி.மு.க. வசமே இருக்கும் நிலையிலும், புதிய மேயரை நியமிக்க முடியாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பிரச்னையின் பின்னணி என்ன? மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை விவரங்களை 2024-ஆம் ஆண்டில், அப்போதிருந்த மாநகராட்சி ஆணையர் சி. தினேஷ் குமார் வழக்கம்போல ஆராய்ந்தபோது, 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கான வரி பாக்கித் தொகை வெகுவாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, இது குறித்து ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் மாநகராட்சியின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து, மாநகராட்சியின் சொத்து வரியைக் கணக்கிடும் மென் பொருளில் இருந்த ஒரு சிறிய ஓட்டையைப் பயன்படுத்தி பலரது சொத்து வரிகளைக் குறைத்தது தெரியவந்தது. இதன் காரணமாக, இந்த சொத்தின் உடமையாளர்கள், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் கணிசமாகக் குறைந்தது. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 ஜூலை 31 வரையிலான சொத்து வரி விதிப்பு விவரங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை நகரக் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த மதுரை நகரக் காவல்துறை, மூன்றாவது மண்டலத்தில் குறைந்தது 150 பேரின் வரி குறைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து 83வது வார்டின் அ.தி.மு.க. கவுன்சிலர் டி. ரவி, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, மதுரை நகர மேயர் இந்திராணி பொன்வசந்த் (வலது) மற்றும் அவரின் கணவர் பொன். வசந்த் (இடது) இந்த சிறப்பு விசாரணைக் குழு மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் சிலர், வரி விதிப்பிற்கான நிலைக் குழு தலைவரின் கணவர் ஆகியோரைக் கைது செய்தது. மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் மதுரை நகர மேயரின் கணவர் பொன். வசந்த்தை சென்னையில் கைது செய்தது காவல் துறை. அதற்கு முன்னதாகவே, மே மாதத்திலேயே கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்திருந்தது. "மதுரையில் வரலாறு காணாத அதிசயமாக மேயரின் கணவர் சிறையில் இருந்தபோதும், மனைவி மேயராக தொடர்ந்து செயல்பட்டார். எங்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் பல நாட்கள் கழித்து அவர் ராஜினாமா செய்தார். இருந்தாலும் இத்தனை நாட்கள் ஆன பிறகும் புதிய மேயர் நியமிக்கப்படவில்லை. புதிய மேயராக வருவதற்கு மதுரை தி.மு.கவிற்குள் சரியான ஆட்கள் இல்லை போலிருக்கிறது." என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு. "அதனால்தான் புதிய மேயரை நியமிக்காமல் இருக்கிறார்கள். மேயர் மட்டுமல்ல ஐந்து மண்டலத் தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை," என்றார். இந்திராணி பொன். வசந்த் ராஜினாமா செய்து பல நாட்களாகியும் மேயர் பதவிக்கென யாரையும் தி.மு.க. அறிவிக்கவில்லை. பட மூலாதாரம், X/Sellur Raju படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 'பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம்?' இதைப்பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அமைச்சர்களுக்கிடையே முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பி.டி.ஆர். இப்போது இதிலெல்லாம் தலையிடுவதில்லை. இருந்தாலும், புதிய மேயரை நியமிப்பதில் தி.மு.க. தலைமை ஆர்வம் காட்டவில்லை. மதுரையில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகள் எல்லாம் குப்பைகளாகக் கிடக்கின்றன." "அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்போதுவரை சரியாக செயல்படுத்தவில்லை. மேயர் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எந்தப் பணிகளும் நடக்கவில்லை. வைகை ஆறு கூவத்தைப் போல மாறி வருகிறது. இருந்தாலும் அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் செல்லூர் ராஜு. 1971-ஆம் ஆண்டின் மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 40வது பிரிவு, மேயர் பதவி காலியாக இருக்கும்போதோ, 15 நாட்களுக்கு மேல் மேயர் நகரத்தில் இல்லாவிட்டாலோ துணை மேயர் அந்தப் பொறுப்பை வகிப்பார் எனக் கூறுகிறது. . இதனால், துணை மேயரான டி. நாகராஜன் மேயருக்கான பணிகளை தற்போது மேற்கொண்டுவருகிறார். டி. நாகராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சி.பி.எம்.) சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தி.மு.க வட்டாரங்கள் ஒத்துழைப்பதில்லை என சி.பி.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "மாநகராட்சியின் அதிகார அடுக்கில், மேயருக்கு அடுத்த இடத்தில்தான் ஆணையர். இப்போது துணை மேயர்தான், மேயரின் கடமைகளை ஆற்றுகிறார். ஆனால், இப்போதும் விழாக்களுக்கான அழைப்பிதழ்களில் ஆணையாளருக்குக் கீழ் சிறிய எழுத்தில் துணை மேயர் எனக் குறிப்பிட்டு அவரது பெயரை அச்சிடுகிறார்கள். கல்வெட்டுகளிலும் அப்படித்தான் பொறிக்கப்படுகிறது. துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம் எனத் தெரியவில்லை" என சி.பி.எம் மாவட்ட நிர்வாகி ஒருவர் தன் பெயரை குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், D Nagararajan படக்குறிப்பு, துணை மேயர் டி. நாகராஜன். துணை மேயர் டி. நாகராஜன் தன்னை பொறுப்பு மேயராக அறிவிப்பதில் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஏதும் பேச விரும்பவில்லை. எல்லாத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தான் தயாராகவே இருப்பதாக மட்டும் கூறுகிறார். இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மேயர் இல்லாத காலகட்டத்தில் புதிதாக மேயர் நியமிக்கப்படும் வரை, துணை மேயரே பொறுப்பு மேயராக செயல்படலாம் என்கிறது மதுரை மாநகராட்சி சட்டம். அந்த அதிகாரத்தின் கீழ் நான் தற்போது செயல்படுகிறேன். மேயரின் ராஜினாமா 17-ஆம் தேதி ஏற்கப்பட்டது. நான் 19-ஆம் தேதியில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறேன். மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா முருகன் கோவில் கணக்குகளையும் நான்தான் பார்க்கிறேன். அதிகாரிகள், ஆளும்கட்சி, அமைச்சர் ஆகியோரோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். மதுரை நகரின் உள்கட்டமைப்பு, சுத்தம் ஆகியவை குறித்து ஏற்கனவே பல புகார்கள் இருக்கும் நிலையில், மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கின்றன என்றும் சிறிய பணிகள்கூட நடப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அந்த நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். "மழை நீர் வடிகாலைத் தூர்வாரும் பணிகள் அப்படியே நின்று போயிருக்கின்றன. மழை பெரிதாக பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. மாமன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்க வேண்டும். ஆனால், மேயர் இல்லாததால் ஒன்றரை மாதமாக மாமன்றக் கூட்டமே நடக்கவில்லை." என்கிறார் மதுரை மாநகராட்சி ஆணையரின் கௌரவ ஆலோசகராக முன்பு இருந்தவரும் சமூக ஆர்வலருமான டி.ஆர். தேசிகாச்சாரி. "மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை என்பதால் அதன் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததில் இருந்து அந்தக் கூட்டமும் நடக்காமல் கிடக்கிறது. மக்களின் சின்னச் சின்னக் கோரிக்கைகளைக்கூட செயல்படுத்த முடியவில்லை" என்கிறார் அவர். பட மூலாதாரம், X/Madurai Corporation வேறு சில பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுகிறார் டி.ஆர். தேசிகாச்சாரி. 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மதுரை மாநகராட்சிப் பகுதிக்குள் 72 வார்டுகள் இருந்தன. அதற்குப் பிறகு திருப்பரங்குன்றம், ஆவனியாபுரம் என்ற இரு முனிசிபாலிடிகளும் இரண்டு பஞ்சாயத்து யூனியன்களும் 13 பஞ்சாயத்துகளும் மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சிக்குள் உள்ள தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், ''புதிதாக மாநகராட்சிக்குள் இணைந்த பல தெருக்கள் மாநகராட்சியின் இணைய தரவுத் தளத்தில் உள்ளிடப்படவில்லை. இதனால், இந்தத் தெருக்களுக்கு வரி விதிப்பதில் சிரமம் இருக்கிறது. அதேபோல, குடிநீர் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்புகளையும் தர முடியவில்லை. இந்தப் பணிகள் எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மேயரும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது'' என்கிறார் டி.ஆர். தேசிகாச்சாரி. மேயர் பதவி மட்டுமல்லாமல், மாநகராட்சியில் வேறு சில பதவிகளும் காலியாகக் கிடக்கின்றன. வரி ஏய்ப்பு மோசடி குறித்த விவகாரம் வெடித்ததும் ஐந்து மண்டலங்களின் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். அந்தப் பதவிகளும் இன்னும் நிரப்பப்படவில்லை. மண்டலங்களைப் பொறுத்தவரை, சிறு சிறு பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண்டலக் கூட்டங்கள் மாதாமாதம் நடத்தப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுசெய்யப்படும். "ஆனால், மண்டலத் தலைவர்கள் இல்லாததால் கூட்டங்களும் நடப்பதில்லை; பராமரிப்புப் பணிகளும் நடப்பதில்லை" என்கிறார் தேசிகாச்சாரி. பட மூலாதாரம், X/ptrmadurai படக்குறிப்பு, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார் அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 'தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்' மதுரை மாவட்ட தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை. "பிரச்னை வெடித்ததும் மேயரை ராஜினாமா செய்ய வைக்கச் சொன்னார்கள். மேயரை ராஜினாமா செய்ய வைத்தோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. புதிய மேயர் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். இது தொடர்பான எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்." என்கிறார் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரும் மதுரை வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தால் மக்கள் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்கிறார். "புதிய மேயரை நியமிப்பது தொடர்பான பணிகள் நடந்துவருகின்றன. தவிர, துணை மேயர் மேயருக்கான பணிகளைப் பார்த்துவருகிறார்" என்று தெரிவித்தார். துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன பிரச்னை? என கேட்டப்போது, "பொறுப்பு மேயராக நியமிப்பது குறித்து எந்த விதியும் இல்லை. மேயர் இல்லாவிட்டால், துணை மேயரே மேயராகச் செயல்படுவார். அப்படித்தான் செயல்படுகிறார். இதில் ஒரு பிரச்னையும் இல்லை." என்கிறார் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9867l08e85o

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

2 months 4 weeks ago
பிக்குகளுக்கும், சிங்களவனுக்கும்.... காணித் தகராறு. 😂 🤣 காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1161288572801711 👈 வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தபடும் இடம், கிங்கினி ராஜ விகரைக்கு சொந்தமானது... அதை தாருங்கள் என உரிமை கோரி அங்கு வருகை தந்த பிக்குகள்!! இடத்தை தரமுடியாது என விவாதித்த பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசிகள்!!
Checked
Tue, 02/17/2026 - 18:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed