3 months ago
அமெரிக்க தாக்குதலின் பின் ஈரானின் பதிலுக்காக உலகம் காத்திருக்கிறது! 1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை அடுத்து, உலகம் ஈரானின் பதிலடிக்கு தயாராக உள்ளது. ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்திற்கு மேலே உள்ள மலையில் அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடையுள்ள பதுங்கு குழி குண்டுகளை வீசிய ஒரு நாளுக்குப் பின்னர் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள சபதம் செய்தது. அமெரிக்கத் தலைவர்கள் தெஹ்ரானை பின்வாங்குமாறு வலியுறுத்தினர். அதேநேரம், அமெரிக்க நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். ஞாயிற்றுக்கிழமை சமூக தளத்தில் டொனால்ட் ட்ரம்ப் எழுதிய பதிவில், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை எழுப்பினார். “‘ஆட்சி மாற்றம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது??? என்று கேள்வி எழுப்பினார். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த பின்னர், தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஒரு பெரிய விரிவாக்கமாகவும், இஸ்ரேலுடன் மோதலில் முதல் நேரடி அமெரிக்க இராணுவ ஈடுபாடாகவும் வந்தன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கப் படைகள் ஈரானின் உள்ளே ஆழமாகத் தாக்கியதாகவும், இதனால் அந்நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு “பெரும் சேதம்” ஏற்பட்டதாகவும், இது ஒரு புல்ஸ்ஐ தாக்குதல் என்றும், ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை தாக்குதலில் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகவும் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார். ஈரானின் நிலத்தடி ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டதாக வணிக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின. எனினும், அந்த தளத்தின் நிலை உறுதிப்படுத்தப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னர் தளத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவுகளில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை என்று கூறியது. நிலத்தடியில் ஏற்பட்ட சேதத்தை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி CNN இடம் கூறியுள்ளார். ஃபோர்டோவில் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி தாக்குதலுக்கு முன்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக ஈரானிய மூத்த வட்டாரம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் அச்சுறுத்தல் சூழல் சைபர் தாக்குதல்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்ட வன்முறைக்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டி, அமெரிக்காவில் “அச்சுறுத்தல் சூழல் அதிகரித்துள்ளதாக” அந் நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரித்தது. இதன் விளைவாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மத, கலாச்சார மற்றும் இராஜதந்திர தளங்களை மையமாகக் கொண்டு ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது அமெரிக்க தளங்களை குறிவைப்பதன் மூலமோ அல்லது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்க முயற்சிப்பதன் மூலமோ அமெரிக்காவிற்கு எதிரான பழிவாங்கும் அச்சுறுத்தல்களை தெஹ்ரான் இதுவரை பின்பற்றவில்லை. எனினும் அது வெகு காலம் நீடிக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்தான்புல்லில் பேசிய ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தனது நாடு சாத்தியமான அனைத்து பதில்களையும் பரிசீலிக்கும் என்று கூறினார். அது பதிலடி கொடுக்கும் வரை இராஜதந்திரத்திற்கு திரும்ப முடியாது என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணை தொடர்பான அச்சுறுத்தல் மேற்கத்திய நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாக ஈரானின் அச்சுறுத்தலாக பரவலாகக் கருதப்படும் ஒரு படியாக, அதன் நாடாளுமன்றம் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. உலகளாவிய எண்ணெய் கப்பல்களில் கிட்டத்தட்ட கால் பகுதி ஈரான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த குறுகிய நீர்வழிகள் மூலமாக செல்கின்றன. நீரிணையை மூடுவதன் மூலம் வளைகுடா எண்ணெய் வர்த்தகத்தை மூச்சுத் திணறடிக்க முயற்சிப்பது உலகளாவிய எண்ணெய் விலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிக்கு உயர்த்தக் கூடும். இது உலகப் பொருளாதாரத்தை தடம் புரளச் செய்யலாம். மேலும், வளைகுடாவைத் திறந்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய ஐந்தாவது கடற்படையுடன் மோதலுக்கு வழிவகுக்கும். எண்ணெய் விலை உயர்வு பிரெண்ட் மசகு எண்ணெய் மற்றும் அமெரிக்க மசகு எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டங்களுக்கு உயர்ந்தன. பிரெண்ட் மசகு எண்ணெய் $3.20 அதிகரித்து $80.28 ஆகவும், அமெரிக்க மசகு எண்ணெய் $2.89 ஆகவும் $76.73 ஆகவும் உயர்ந்தன. போர் நிறுத்தத்திற்கான அழைப்பு ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்தன. அமெரிக்க தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436650
3 months ago
ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!
3 months ago
அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.
3 months ago
டொனால்ட் ரம்ப் அவர்களின் ஈரான் மீதான தாக்குதலை அடுத்து.....ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ரம்ப் மீதான வரி வன்மத்தை குறைத்து அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர்.😋 தம்பி உக்ரேன் இன்னும் உயிரோடுதான் இருக்கியா?
3 months ago
அந்த அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.🙏கேள்விகள் கேட்டு இன்னும் உங்களை மனக்கஸ்ரப்படுத்துவதை விரும்பவில்லை.மனதை திடமாக வைத்திருங்கள்.🙏
3 months ago
3 months ago
https://www.youtube.com/watch?v=TriASB-F5UY BUNKER BUSTER BOMB Myth /MIT Prof Ted Postol & Lt Col Daniel Davis தாக்குதலுக்கு பிந்திய படங்களை பார்க்கும் போது மேலே வீடியோவில் சொன்னமாதிரிதானிருக்கு, பெரிய பாதிப்பில்லை
3 months ago
ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍
3 months ago
ஈரானியர்கள் அந்த அடக்குமுறைக்கெதிராக போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள் ஆனால் கடும் அடக்குமுறை சட்டங்கள் அதனை வெளித்தெரியாதவாறு மறைக்கிறது என கருதுகிறேன். எனது அபிப்பிராயம் ஈரானின் அணுசக்தி மீதான தாக்குதல் என கூறிக்கொண்டு ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன், இரண்டு வாரமாக அணுநிலைகள் மீதா தொடர்ந்து தாக்குதல் செய்தார்கள்? ஆட்சியின் ஒவ்வொரு மட்டத்தலைமைகளை முடிப்பதிலேயே இஸ்ரேல் கவனம் செலுத்தியது போல இருக்கிறது அதே நேரம் அவர்களது கவனத்தினை அணுநிலைகளில் குவிக்கவைத்து மெதுவாக இரண்டுவார கால அவகாசம் கொடுத்து ஈரானியர்கள் அணுநிலைகளைன் முக்கியமானவற்றை இடமாற்றம் செய்வது என அதே விடயத்தில் கவனத்தினை திசை திருப்பும் முயற்சியாக இந்த அணுகுண்டு செய்திகளை கருதுகிறேன், ஆட்சி மாற்றத்திற்கு தேவையான படுகொலைகளை செய்து சதுரங்கத்தில் ஒவ்வொரு காயாக வெட்டி கடைசியாக அரசனுக்கு கெடுவைப்பார்கள் என கருதுகிறேன். ஈரானில் உறுதியான ஆட்சிமாற்றம் நிகழலாம் என கருதுகிறேன் அது பிசகினால் ஈரான் பேரழிவிற்குள்ளாகலாம். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
3 months ago
ஈரானில் அடக்குமுறை இருக்கு அது அவர்களின் கலாச்சாரம் ] இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்
3 months ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months ago
முன்னர் மன்னராட்சிக்காலத்தில் (அமெரிக்க மேற்கு ஆதரவினால் உருவாக்கப்பட்ட) கொடுங்கோல் ஆட்சியினாலேயே மக்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்பதனை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மக்கள் ஆட்சியினை வளங்களை சுரண்டும் மேற்கு கடந்த கால அனுபவ அறிவின் மூலம் அனுமதிகாது (மக்கள் தமது தேசியம் சார்பான விழிப்புணர்வு உள்ளதால்), தற்போது கூட அவர்கள் தெரிவாக மன்னர் சாவின் (ஈரானின் 🤣) வாரிசினையே ஆட்சிக்கு கொண்டு வர முனைகிறார்கள் என கூறப்படுகிறது, அதனால் ஈரானியர்களுக்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை, தற்போதுள்ள அரசாட்சியினை விட ஓரளவு நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்க வேண்டியதுதான், ஆனால் மக்கள் தற்போதுள்ள ஆட்சியில் வெறுப்புடன் இருக்கிறார்கள் என கருதுகிறேன் ( அங்கு நடைபெறும் சிறு சிறு போராட்டங்கள் அதனையே குறிக்கிறது)
3 months ago
Labrinth - Jealous [Verse 1] I'm jealous of the rain That falls upon your skin It's closer than my hands have been I'm jealous of the rain I'm jealous of the wind That ripples through your clothes It's closer than your shadow Oh, I'm jealous of the wind [Chorus] 'Cause I wished you the best of All this world could give And I told you when you left me There's nothing to forgive But I always thought you'd come back, tell me all you found was Heartbreak and misery It's hard for me to say, I'm jealous of the way You're happy without me [Verse 2] I'm jealous of the nights That I don't spend with you I'm wondering who you lay next to Oh, I'm jealous of the nights I'm jealous of the love Love that was in here Gone for someone else to share Oh, I'm jealous of the love
3 months ago
பேஸ்போலின் பந்து சின்னன் அண்ணா நீங்கள் சொல்வது சரி என படுது , பேஸ்போலின் பந்து வீச்சாளர்கள் வேகமாக எறிவினம்.................பேஸ்பேல் பந்தை எப்படியும் பிடிக்கலாம் அதற்க்கு விதிமுறைகள் ஒன்றும் இல்லை , மக்கள் பார்வையிடும் இடத்தில் கூட பாய்ந்து பிடிப்பினம் உலக அளவில் பேஸ்போலுக்கு பெரிய வரவேற்ப்பு இல்லை , ஆனால் அமெரிக்காவில் இந்த விளையாட்டை பெரிய தொடரா நடத்துவினம் , இப்ப கூட நடந்து கொண்டு தான் இருக்கு விளையாட்டு👍.....................................
3 months ago
இந்த விதிமுறைய போன வருடன் அமுல் படுத்தி இருந்தா இந்தியா பினலில் தோத்து இருக்கும் மில்லர் அடிச்ச பந்து சூரியகுமார் ஜடாவ் எப்படி பிடித்தவர் என்று நீங்களும் பார்த்து இருப்பிங்கள் உண்மை தான் இது பந்து வீச்சாளர்களுக்கு பெரிய தொலையா அமையும்...................மட்டை வீரர்களுக்கு இது சாதகமாய் அமையும்.................................
3 months ago
ஏன் அண்ணா ஈரானுக்கு சவுதிக்கு போவான் , தமிழ் நாட்டில் என்ன ஆட்ச்சி நடக்குது முதல் கருணாநிதி , பிறக்கு ஸ்டாலின் , பிறக்கு உதயநிதி , பிறக்கு இன்பநிதி..........................இந்த ஆட்சிய எம்மவர்கள் விமர்சனம் செய்ய மாட்டினம்😁😛...........................
3 months ago
3 months ago
பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்.... இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍
3 months ago
ஈரானிய பெண்கள் கைபந்து விளையாட்டில் மெதுவாய் வளந்து கொண்டு வருகினம் ,உலக கிண்ண கைபந்து போட்டியில் ஈரான் பெண்கள் ஜரோப்பா பெண்கள் கூட விளையாடினதை பார்த்தேன்👍.................... ஈரான் வீரர்கள் ஒவ்வொரு கால்பந்து உலக கிண்ண போட்டியிலும் கலந்து கொள்ளுகிறவை....................கூடைபந்து விளையாட்டில் ஆசியாவில் ஈரான் தான் பலமான அணி....................ஈரானில் பல விளையாட்டு கிலப்புகள் இருக்கு இந்தியாவை விட ஈரான் நாட்டவர்கள் பல விளையாட்டில் திறமை மிக்கவர்கள்..........................ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கு அதை மதிச்சு தான் நடக்கனும்.......................... இப்படி ஈரான் நாட்டை பற்றி சொல்ல நிறைய இருக்கு.........................கால்பந்து உலக கிண்ண போட்டியில் இந்த நூற்றாண்டில் இந்தியா கலந்து கொண்டு இருக்கா , ஆனால் ஈரான் ஒவ்வொரு முறையும் கலந்து கொள்ளினம்.......................... மக்களுக்கான முழு சுதந்திரம் ஈரானிடம் இருக்கு........................
3 months ago
சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.
Checked
Thu, 09/25/2025 - 12:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed