புதிய பதிவுகள்2

பிரித்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு

3 months 2 weeks ago
பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு July 13, 2025 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பமாகியது. தொடர்ந்து அகவத்தின் நிர்வாகிகளினால், தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வின் தேவையும், அதன் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டு, நிகழ்வு ஏற்பாடுகள் பற்றியும் அதில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த உறவுகளின் பல்வேறு கரிசனை மிக்க ஆக்கபூர்வமான கேள்விகளுக்கும் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது. இந்த மக்கள் கலந்துரையாடலில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர் ,தேசிய செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து தேசியத்தலைவரின் வீரவணக்க நிகழ்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தனர் . ஆகவே, எதிர்வரும் 02/08/2025 அன்று தமிழர்களின் அடையாளமாகவும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களது வீரவணக்க நிகழ்வு விற்சர்லாந்து நாட்டில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்த வரலாற்று கடமை நிறைந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றுகூடுமாறு, உரிமையோடு அழைக்கிறார்கள் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர். குறிப்பு:- வீரவணக்க நிகழ்வு ஐரோப்பா தழுவிய நிகழ்வாக சுவிற்சர்லாந்திலும், அவுஸ்திரேலியாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அந் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ்மக்கள் இவ் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் கடமையுணர்வை வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். https://www.uyirpu.com/?p=19637

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

3 months 2 weeks ago
ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

3 months 2 weeks ago
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி July 15, 2025 11:27 am ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/ragging-peak-nine-southeastern-university-students-admitted-to-hospital/

புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்

3 months 2 weeks ago
புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக அவர் செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கின்ற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராகவும் அவர் செயற்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராகவும் அவர் புகழ் பெற்றிருந்தார். இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரால் அவர் மதிப்பளிப்பளிக்கப்பட்டார். புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து, மறைந்த கலைஞர் சங்கநாதனுடன் இணைந்து சத்தியா குரல் வழங்கியிருந்தார். விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் அவர் குரல் வழங்கியும் இருந்தார். மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியைப் புலிகளின் குரல் வானொலியில் அவர் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்திருந்தார். அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் நேற்று அவர் காலமானார். அவரின் இறுதிக்கிரியை நிகழ்வு கிளிநொச்சி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. https://oruvan.com/voice-of-the-tigers-radio-announcer-dies/

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காசாவில் மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் பலி 15 JUL, 2025 | 11:27 AM காசாவில் இஸ்ரேலிய படையினரின் டாங்கி குண்டுவெடிப்பொன்றில் சிக்கியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 19 முதல் 20 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசாவின் வடபகுதி நகரனா ஜபாலியாவில் குண்டுவெடிப்பில் சிக்கிய டாங்கியில் இருந்த படையினரே கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதல் காரணமாகவே டாங்கி வெடித்து சிதறியது என முதலில் கருதியதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் எனினும் டாங்கியின் சுழலும் பீரங்கிமேடைக்குள் தவறுதலாக எறிகணை வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது. 401வது கவசவாகனப்பிரிவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/220035

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!

3 months 2 weeks ago
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை! நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஊழல் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மகேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439225

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

3 months 2 weeks ago
செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன் July 15, 2025 செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இரண் டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் நாள் அகழ்வுப் பணியின் போது ஒரு குழந்தையின் அல்லது சிறுவரின் மண்டையோடு உள்ளிட்ட சிதைவடைந்த எலும்பு கூட்டுத் தொகுதியோடு இன்னும் இருவரது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பமாகி முதல் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவருடையது என சந்தேகிக்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ஏனைய இரண்டும் அடுத்து நாட்க ளில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இதேவேளை இவ்வாறு இரண்டாம் கட்ட அகழ்வின்போது முதல் நாளில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுவரின் எலும்புத் தொகுதி தொடர்பிலும் இங்கு தொடர்ந்தும் வெளிவரும் உறவுகளின் எலும்புக்கூடுகள் தொடர்பிலும், ஆடைகள்,பாடசாலைப் புத்தகப் பை. காலணி,வளையல்கள்,பொம்மைகள் என்பன தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையும்,சோகமும் ஏற்பட்டிருந்தது. இந்நிலை யில் இவ்விடயம் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் மனிதாபிமானம் கொண்டவர்களினதும் பார்வையினை யும் அங்கு திருப்பியதோடு, தொடர்ந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கவனத்தைத் திருப்பி இவ்விவகாரம் பெருமளவில் பேசுபொருளாக மாறியது. இந்த அகழ்வுப் பணிகளானது யாழ் நீதி மன்றத்தின் BR 433 PC 2025 எனும் வழக்கிற்கு அமைவாக கௌரவ.நீதிபதி திரு.ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கட்டளைக்கு அமைவாக அவரது மேற்பார்வையுடன் தொல்லியல் துறை பேராசிரி யர் திரு.ராஜ் சோமதேவா அவர்களுடைய தலைமையில் அவர்களின் குழுவினர், தொல்லியல்துறை மாணவர்கள், மற்றும் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் போலீசார், யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் சோகோ (Sogo) போலீசார் (seen of crime officers ) யாழ் குற்றத் தடுப்பு பொலீஸ் பிரிவினர் என பலரது பிரசன்னத்துடனும் கண்காணிப்புடனும் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர்கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இரு பிரிவுகளாக Site 01 Site 02 என வகைப்படுத்தப்பட்டு இந்த அகழ்வு பணிகள் நடந்திருந்தது. மனிதப் பேரவலத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற செம்மணி சிந்துபாத்தி மயான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது தொடர்ந்தும் பல உறவுகளுடைய எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவற்றில் பல குழந்தைகள், சிறுவர்களுடையதும், தாயும் பிள்ளையுமாகவும், குடும்பமாகவும் ஈவு இரக்கமற்றுக் கொன்று கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் பலத்த சந்தேகத்தின் வெளிப்பாடாகவே பலரது எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அங்கே கண் டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த இடத்தில் இடம்பெறுகின்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் பார்க்கிறபோது இங்கு மீட்கப்படுகின்ற இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உரிய முறைப்படி அடக்கம் செய் யப்படாதது போன்றும் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டது போன்றுமே காணப்படுகிறது, இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி அளவு ஆழத்திலே இருந்து தான் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இவைகளைப் பார்க்கின்றபோது இங்கு நிச்சயமாக ஒரு மனிதப் பேரவலம் இடம்பெற்றிருக்கிறது எனும் சந்தேகத்தை வலுக் கச் செய்கிறது.தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கின்ற எமது உறவுகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழ்ந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டு அவைகள் நீதிமன்றக் கட்டு காவ லில் வைக்கப்படுவதோடு அங்கு கிடைக்கப் பெறுகின்ற ஏனைய சான்றுப் பொருட்களும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்படுகி றது. இதேவேளை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகளின் போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டது போன்று ஏற்பட்டு விடலாம் எனும் கணிப்பின் அடிப்படையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்காமல் வழிந்து ஓடும் வகையிலே JCB இயந்திரம் மூலம் கான் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அவ்வாறு JCB இயந்திரம் மூலமாக கான் வெட்டுகின்ற போது அகழப்பட்ட பகுதிகளிலும் கூட சில மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதனால் அந்த கான் வெட்டும் பணி நிறுத்தப்பட்டதோடு அந்த இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது. 26.06.2025 முதல் 10.07.2025 வரையான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான 15 நாட்கள் முடிவில் இதுவரை 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன, இவைகளில் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர் கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து 63 முழுமையான மண்டையோடுகள் சகிதமான எலும்பு கூட்டுத் தொகுதிகளும், பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சற்றலைட் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு முழுமையான மண்டையோடு சகிதமான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாகவே இந்த 65 எலும்புக்க்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் மூலமாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அத்து டன் அங்கு பெறப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்களும் நீதிமன்றக் கட்டுக்காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பேராசிரியர் திரு.ராஜ் சோமதேவா அவர்களினால் யாழ் நீதிமன்றில் இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கௌரவ நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மனித என்பு எச்சம் 25 மற்றும் பாடசாலைப் புத்தகப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட வேறு பல சான்றுப் பொருட்களுடனும் எடுக்கப்பட்ட என்புகள் தொடர்பான மனித என்பு ஆய்வு தொடர்பிலான அறிக்கைகளையும் சட்ட வைத்தியர் திரு. பிரணவன் செல்லையா அவர்களினால் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யுமா றும் கட்டளை ஒன்று உள்ளது. இதேவேளை அகழ்வுப் பிரதேசம் இலக்கம் இரண்டில் ஒரு இடத்தில் ஒரு பொலித்தின் பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சில என்புக் குவியல்களும் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது. அதில் சிறிய மற்றும் பெரிய எலும்புகளும் காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றும் சட்டத்தரணிகளால் நீதவா னின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த என்புகளும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகளும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கௌரவ நீதவான் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி திரு செ.பிரணவன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறப் பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான இரண்டாம் கட்டத்திற்கு மொத் தமாக 45 நாட்கள் தீர்மானிக்கப்பட்டு அந்த தீர் மானத்திற்கு அமைவாக நீதி அமைச்சினால் நிதி தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நீதி அமைச்சால் கூறப்பட்ட நிதி முழுவதும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கணக்காய்வுப் பகுதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45 நாளில் முதல் கட்டமாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகள் காலை 07.30 முதல் இரவு சுமார் பத்து மணி வரையும் நீடிக்கும் வகையிலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. இறுதி நாளில் (10.07.2025) பேராசிரியர் ராஜ் சோ மதேவா மற்றும் அவரது குழுவினர் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர் யாழ் வைத்திய பீட மாணவர்கள் மற்றும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பணியாளர்களும்,நீதிபதி, சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காவல் துறையினர் பணியாளர்கள் அதிகாரிகள் தொல்லியல் துறையினர் பல்கலைக் கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெற்றிருந்தது. இப்பணியில் ஈடுபட்ட இவர்களுக்கான ஓய்வும் தேவை என்ற அடிப்படையில் பத்தாம் திகதி (10.07.2025) முதல் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு எதிர் வருகின்ற 21 ஆம் திகதி (21.07.2025) முதல் மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகும் என்பதோடு அதுவரையும் இந்த இடம் வழமை போன்று பாதுகாக்கப்பட்ட இடமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஏற்கனவே அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற இரண்டு சிசிடிவி கேமராக்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதோடு மீண்டும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. https://www.ilakku.org/செம்மணியின்-இரண்டாம்-கட்/

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

3 months 2 weeks ago
சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு! 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட குறித்த நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439218

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

3 months 2 weeks ago
பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்காக கல்வி உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறிய அவர், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகர்ப்புறங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களில் பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் வசிப்பதால், புதிய அதிகாரிகள் வீடுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ‘குழந்தைகளை பிரபலமான பாடசாலைகளில் சேர்க்கும் நோக்கில் சில அதிகாரிகள் 30–37 ஆண்டுகள் ஒரே இல்லத்தில் வசிக்கிறார்கள் எனவும் இதனால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையை தவிர்க்க, ஐந்து ஆண்டுகளுக்குப் பிந்தும் ஒரே இல்லத்தில் தொடர்ச்சியாக தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ‘எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல, பிறருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், கல்வி அம்சத்தில் சமத்துவம் உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் கொள்கைகளை, குறிப்பாக முப்படைகளுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகளை காவல்துறை நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை திறம்பட மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதற்கும், அவர்களின் முக்கிய தேவைகளை தீர்க்கும் நோக்கத்துடன் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதில் மா அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் அனுருத்த பண்டாரநாயக்க, ஜானகி செனவிரத்ன, தயாள் இளங்ககோன் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவர் வழக்கறிஞர் நீதா சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439209

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

3 months 2 weeks ago
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 2016 முதல் தபால் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் தபால் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்ததுடன், நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1439213

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

3 months 2 weeks ago
நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months 2 weeks ago
பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன். இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள். மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன. இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

3 months 2 weeks ago
ஈரோடு கிழக்கில் இரு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் கூட டெபாசிட்டை தக்க வைக்க முடியாமல் நாதக அவமானத்தோல்வி அடைந்தபோது… அதை வெற்றி என்றும், வாக்குவீத உயர்வு, 2ம் பெரிய கட்சி எனவும் நீங்களும் இன்னும் பலரும் கஞ்சா கப்ஸா கதைகளை அவிட்டு விட்டீர்கள் அல்லவா? அந்த திரியில், 2026 இல் சீமான் தனித்து நின்று 15% பெறமாட்டார் என பந்தையம் கட்ட அழைத்தேன். அத்தனை சீமானியர்களும் கூண்டோடு எஸ் (நீங்களும்)…. சீமானின் மீது விமர்சன பார்வை உள்ளவரான வாத்தியார் அண்ணா மட்டும் பந்தயம் கட்டினார்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
ஆனால், மூன்றாவது பெரிய கட்சிக்கு வைப்புத் தொகையே கிடைக்காத ஒற்றையெண் வீதம் அல்லவா வாக்கு வீதம்? அதனால் கருத்துக் கணிப்பில் கூட பெரும்பாலும் உள்ளடக்குவதில்லை என நினைக்கிறேன். அதிருக்கட்டும். அந்த புள்ளி விபரம், பால் உற்பத்தி பற்றி என்ன நிலைவரம்? எஸ்கேப் தானா?
Checked
Sat, 11/01/2025 - 14:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed