புதிய பதிவுகள்2

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

5 days 7 hours ago
@குமாரசாமி //மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄// வாற கிழமை... உங்களுடைய அந்த பொன்னான ஐடியாவை கேட்க ஆவலாக உள்ளேன். 🙂 ஏனென்றால்.... குரங்குகளின் தொல்லை பெருந் தொல்லையாக கிடக்கு. 🤥 ஒரு குரூப் வந்தால் காரியமில்லை. கருங்குரங்கு, செங்குரங்கு, மந்தி, ஒரங்குட்டான், கொரில்லா என்று... பன்றி போலை கூட்டமாக வருகுதுகள். அதுகளை பிடித்து.... யாழ்ப்பாண முறையில் நலம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமும் இருக்கு. 😂

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

5 days 7 hours ago
வழமையான போட்டியாளர்கள் விரைவாக பங்கு பற்றுங்கோ, பஸ் வெளிக்கிடப்போகிறது. @வாதவூரான், @கறுப்பி, @Eppothum Thamizhan, @தமிழ் சிறி, @வீரப் பையன்26, @நிலாமதி, @புலவர், @nilmini, @சுவைப்பிரியன், @Ahasthiyan, @நந்தன், @goshan_che, @நீர்வேலியான், @ரசோதரன், @குமாரசாமி, @ஈழப்பிரியன், @முதல்வன், @பிரபா, @nunavilan @kalyani அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கச்சிகள் எல்லோரும் ஓடி வாங்கோ.

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

5 days 8 hours ago
அதையும் ஒருக்கா முயற்ச்சித்து; பார்ப்போம்.சரி வந்தால் உங்களுக்கு ஒரு முடை மாம்பழம் தருவேன்.கடந்த இரன்டு வருடங்களாக ஒரு மாங்காய் கூட பிடுங்கியது இல்லை.யம்பு மரமே காலி.

ஐ.நா.வில் நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

5 days 8 hours ago
நெதன்யாகுவின் ஆடையில் அணிந்திருந்த QR குறியீடு சொல்வது என்ன? 27 September 2025 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றும் போது தனது ஆடையில் QR குறியீடு பொத்தானை அணிந்திருப்பதைக் காண முடிந்தது. காசாவில் போர் தொடங்கியதிலிருந்து தனது நாட்டின் நடவடிக்கைகளை நன்கு புரிந்துகொள்ள, குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். குறியீட்டை ஸ்கேன் செய்வது, ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் கொடூரமான படங்கள் மற்றும் காணொளிகளைக் கொண்ட ஒரு வலைத்தளத்திற்கு செல்லும். வலைத்தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கும் எச்சரிக்கை அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய நெதன்யாகு, உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒக்டோபர் 07 இப்போது நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் அதை நினைவில் கொள்கிறோம். இஸ்ரேல் நன்றாக நினைவில் கொண்டுள்ளது. நாம் ஏன் சண்டையிடுகிறோம்? நாம் ஏன் வெல்ல வேண்டும்? இதையெல்லாம் நீங்கள் இந்த குறியீட்டினுள் செல்வதன் ஊடாக காண்பீர்கள். இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம், காசா மற்றும் பிற இடங்களில் இஸ்ரேல் தனது எதிரிகளுடன் ஏன் தொடர்ந்து போராடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்," என்று அவர் கூறினார். மேலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஹமாஸ் செய்ததாக வலைத்தளம் குற்றம் சாட்டுகிறது. https://hirunews.lk/tm/422426/what-does-the-qr-code-on-netanyahus-clothes-say

அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக!

5 days 9 hours ago
அண்ணா, எம்ஜிஆரை கீழ்த்தரமாக விமர்சித்த சீமான்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிமுக! 26 Sep 2025, 6:05 PM அண்ணா, எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 26) விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை.. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார். சரி.. மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்.. என்பதை பற்றி எல்லாம் அவர் சொல்லவே இல்லையே. நாங்கள் ஸ்ட்ரெய்ட்டாக பாயிண்டுக்கு வருவோம் என்கிறார். இதுவரை ஒரு பாயிண்டுக்கும் வரவில்லை. நாளை கரூர், நாமக்கல் என இரண்டு பாயிண்ட்களில் பேசுகிறார். அதுதான் அவருடைய பாயிண்ட்” என விமர்சித்திருந்தார். விஜய்யை விமர்சிப்பதாக கூறி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரையும் கீழ்த்தரமாக சீமான் சாடியுள்ளது திமுக, அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வேடிக்கை பார்க்காது! அதிமுக மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆர் யார் என தெரியாது, ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யார், என்ன செய்திருக்கிறார் என பிரபாகரனுக்கு தெரியும், சொல்லி இருக்கிறார். பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது!” என அவர் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/seeman-who-spoke-disparagingly-of-anna-and-mgr/

ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்

5 days 9 hours ago
ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன் September 26, 2025 வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மகாவலி அதிகார சபையின் (எல்) வலயத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படவுள்ள பாரிய பாதிப்பு நிலைதொடர்பிலும் இந்த உயரியசபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மாயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன்ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறாக கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பலவும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடை கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்து பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும். அதேவேளை தமிழர்களின் இதயபூமி எனப்படுகின்ற பூர்வீக மணலாற்றுப் பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறிக்குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர். அத்தோடு தற்போது ஆட்சி பீடத்தில் இருக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுவதில் அதிக அக்கறையோடு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது. தமிழ் மக்களின் சிறிய பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள் என்பவற்றை விழுங்குகின்ற இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை தயவுசெய்து உடனடியாக நிறுத்துமாறு இந்த உயரியசபையினூடாக கோருக்கின்றேன். அத்தோடு மகாவலி அதிகார சபை இந்தத் திட்டத்திற்கென ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற தமிழர்களது பூர்வீக சிறிய விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான விவசாயநிலங்களையும், பூர்வீகத் தமிழ்க் கிராமங்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்த உயரிய சபையினைக் கோருகின்றேன். எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். https://www.ilakku.org/stop-the-oya-project-immediately-ravikaran/#google_vignette

ஐ.நா.வில் நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

5 days 9 hours ago
நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதன்படி, இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம். உலகின் பெரும்பகுதியினர் ஒக்டோபர் 7ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர். பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg10h5q000nwqplpsibo47mf

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள்

5 days 9 hours ago
காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்டுவீச்சு தாக்குதலுக்கு மத்தியில், "ஒவ்வொரு எட்டு அல்லது ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வான்வழித் தாக்குதலை" நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன், சர்ச்சைக்குரிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் தளங்களிலிருந்து உதவி பெற முயன்றபோது வெள்ளிக்கிழமை பலர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன https://www.virakesari.lk/article/226219

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

5 days 9 hours ago
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.. இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/50768

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

5 days 9 hours ago
தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி என்றும் தன்னை விளித்துள்ளார் அருச்சுனா. இவர் ஒரு கொள்கையோடு செயற்படுவதாக தெரியவில்லை. ஒரு தடவை நாமலை உயர்த்தி பேசுகிறார். தனது தந்தையை காணாமலாக்கியதை மன்னித்து விட்டதாக கூறுகிறார், அவரது தந்தை மட்டும் அவர்களால் காணாமலாக்கப்படவில்லை. தையிட்டி விகாரையை அகற்ற முடியாது அவர்களுக்கு வேறு காணி வழங்கப்படும் என்றார். ஆனால் தனது காணியை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், மதம் இனம் என்பது கவனிக்கப்படாது என்றார். இப்படி மாற்றி மாற்றி ஏதோ குழப்பி பேசி தன்னைத்தானே மற்றவர்கள் பரிகசிக்க வைக்கிறார்.

ஒரு பயணமும் சில கதைகளும்

5 days 10 hours ago
மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன? உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.

சமையல் செய்முறைகள் சில

5 days 11 hours ago
இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽 ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

5 days 11 hours ago
அனுரா… புராணம் தூக்கலாக இருக்கு. 😂 உங்களுக்கு…. ஶ்ரீலங்காவிற்கு கொலிடே போற ஐடியா இருக்குப் போலை. 🤣 பிற் குறிப்பு: பகிடிக்கு எழுதியது. யாரும் இதனை சீரியசாக எடுக்க வேண்டாம். 😜

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

5 days 11 hours ago
இந்த முன்னாள் நீதிபதிப் பெண்மணி… தனது சட்டத்தரணி கணவரின் தவறான வழிகாட்டலில் வழங்கப் பட்ட நீதி தவறி ஒரு தலைப் பட்சமாக வழங்கிய தீர்ப்புகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இனி யார் நீதியை பெற்றுக் கொடுப்பது. அல்லது…. தலை விதியே என்று இருப்பதா. அரசே… முன் வந்து, அவர்களுக்கு தகுந்த நீதியை பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப் பட்டவர்கள் தமது தரப்பு சட்டத்தரணிக்கு பணம் கொடுத்து வாதாடியும்…. நீதிபதியின் கீழ்த்தரமான செய்கையால், நொந்து போய் உள்ளவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ அல்லது மீண்டும் சட்டத்தரணி பிடித்து பணம் செலவழித்து வாதாடி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க விடுவது சரியல்ல.

ஒரு பயணமும் சில கதைகளும்

5 days 11 hours ago
ரசோ....நல்ல கதைகள்... இடையிடையே எங்களுக்கு கதையும் விட்டிருக்கிறியள்... ரசித்தேன்...மிகவும் அருமை.. நான் எதோ ஆனந்தவிகடன் மணியன்போல் ...நீண்ட தொடராக எதிர் பார்த்தேன் ..இப்படி பண்ணிட்டீங்களே.. அதுசரி பூனை வீட்டில்...வீட்டில் இறந்ததாக சொன்னீர்கள்...பரிகாரம் செய்தியளோ... பெரிசா இல்லை ...பத்துப்பேரைக் கூப்பிட்டு ..நல்ல மச்ச மாமிச பாட்டி வைக்கிறதுதான் ...மறக்காமல் பிரியன் சாரை கூப்பிட்டுடுங்க..
Checked
Thu, 10/02/2025 - 13:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed