5 days 12 hours ago
அக்குரேகொட இரட்டைக் கொலை: நான்கு வாகனங்கள் மீட்பு ! 25 Feb, 2026 | 04:37 PM அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், தலைமறைவாக இருந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், எரிக்கப்பட்ட வாகனத்தைச் செலுத்திய சாரதியைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், இந்த முழுச் சம்பவத்தையும் பின்னணியிலிருந்து இயக்கிய பிரதான சூத்திரதாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார். "இந்தக் கொலைச் சம்பவம் ஒரு பாதாள உலகக் குழுவினால் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். ஆரம்பத்தில் பொலிஸாரிடம் 'கார் ஒன்றில் வந்தவர்கள் சுட்டுவிட்டுத் தப்பினர்' என்ற மிகக் குறைந்த தகவலே இருந்தது. எனினும், சிறிய தகவல்களைக் கூட ஆதாரங்களாக மாற்றி முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது 80 சதவீத முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது" என சஜீவ மெதவத்த தெரிவித்தார். இரண்டாவது துப்பாக்கிதாரியைப் பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையில், பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று மொனராகலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் இக்கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் தற்போது பொலிஸ் வசம் உள்ளனர். இவர்களுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/239566
5 days 12 hours ago
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 25 Feb, 2026 | 04:10 PM உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன. அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 1966ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது. தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு (Academic Conference) நவம்பர் 29ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் 1ஆம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “வஸ்” காலம் முடிந்த பிறகு நடைபெறும் இந்த விழா, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி குறித்து உலகிற்கு சிறந்த செய்தியை வழங்கும் என்றும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்பாடு செய்வதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், நியமிக்கப்படும் விசேட குழுவினால் அரசாங்கத் தரப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு நிறைவேற்றவேண்டிய பணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் குறித்து மிகவும் சிறந்த செய்தியை முழு உலகிற்கும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு வருகை தரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயில்களை (VIP facilities / Counter) நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக முறையான இராஜதந்திர அழைப்புகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தவும், நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கவும் இந்த நிகழ்வு வழங்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர், கலாநிதி வண, அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாக் குழுவின் தலைவர் கலாநிதி வண, போதாகம சந்திம நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239559
5 days 12 hours ago
ஆரோ தலகுளி + பச்ச தண்ணிய ஒண்டா குடுத்துட்டானுகள் 😂 நியூசீ நிண்ட நிலையில்தான் இவையும் நிக்கினம். ஆனால் scoreboard pressure மடக்கி போடும்.
5 days 12 hours ago
ரச்சினின் உருட்டலில் உளலும் இலங்கை
5 days 12 hours ago
அப்ப எனக்கும் கிடைக்கும்.
5 days 12 hours ago
பணமோசடி வழக்கில் இருந்து யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சிக்கு விடுதலை Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 03:54 PM பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து, யோஷித்த ராஜக்ஷவின் பாட்டியான டெய்சி பாரஸ்ட் என்பவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது. டெய்சி பாரஸ்ட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடந்த விசாரணைகளின் போது தமது கட்சிக்காரர் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் விசேட மனநல அறிக்கை ஒன்றை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையின்படி, பிரதிவாதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்கத் தேவையான மன ஆரோக்கியத்துடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார். சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் வருமானம் ஈட்டியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டெய்சி பாரஸ்ட் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார். திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் கீழ் அவருக்கு எதிரான வழக்குத் தொடரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/239558
5 days 12 hours ago
95அ விட குறைய அடிப்பினம் போல என்ன அவசரமோ. உங்களுக்கு எங்க தெரியப்போகுது. 🤣
5 days 12 hours ago
அவர் முறை செஞ்சி, பரிசமும் கட்டிவிட்டு போய்ட்டார்😂
5 days 13 hours ago
SL 47 / 5 ......11
5 days 13 hours ago
எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் கிட்டும்😀 NZ 168/7 SL (11/20 ov, T:169) 47/5 Sri Lanka need 122 runs in 54 balls. CRR: 4.27 • RRR: 13.55 • Last 5 ov (RR): 27/3 (5.40)
5 days 13 hours ago
இரண்டு விடயங்களுக்காக இதை பதிந்தேன். ஒன்று என் அனுபவத்தை பதிவது அடுத்தது இங்குள்ள பேரன்மார்களின் பேரன்பை வெளிக் கொண்டு வருவது...🥰 நன்றி சகோ. தேடல் தொடரும்
5 days 13 hours ago
அமெரிக்காவின் 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இஸ்ரேலில் குவிப்பு - ஈரானைத் தாக்கத் தயாரா? 25 Feb, 2026 | 05:12 PM அமெரிக்க விமானப் படையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இஸ்ரேலில் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகளவில் தென்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்ப நிலைகளும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க காத்திருப்பதாக சர்வதேச பரப்பில் பேசப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் விதமாகவே அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா அதன் படைகளை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இடம் மாற்றி வருகிறது. தாக்குதலுக்கு தயாராகி வருவதால் அமெரிக்கா தனது படையினரைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. அதன்படி, கட்டாரின் அல் உதீத் படைத்தளத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட படைவீரர்களை இடம் மாற்றியுள்ளது என்பதை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் உள்ள இராணுவ அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதோடு, அவர்களது ஆயுதங்களும் வேறிடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வேளை ஈரானுடன் போர் ஏற்பட்டால் அமெரிக்க வீரர்கள் தாக்கப்படலாம் என்பதாலேயே வீரர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா இடம் மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. அமெரிக்கா தாக்கினால், தாமும் பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து, தற்போது அமெரிக்காவின் 2 விமானந்தாங்கிக் கப்பல்கள் ஈரானிலிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் தாக்குதலை பலமாக எதிர்கொள்ள இவ்வாறு தயார் நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும் பேசப்படுகிறது. https://www.virakesari.lk/article/239575
5 days 13 hours ago
84-6 லிருந்து 168க்கு கொண்டு வந்து விட்டார் அணித்தலைவர். இப்போ இலங்கை அணித்தலைவரின் முறை.
5 days 13 hours ago
தென்கிழக்காசியாவில் செயல்படும் மோசடி கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – எஃப்.பி.ஐ. எச்சரிக்கை Published By: Priyatharshan 25 Feb, 2026 | 05:06 PM தென்கிழக்காசியாவில் தொழில்துறை அளவில் செயல்படும் சர்வதேச மோசடி கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாட்சி விசாரணைப் பணியகம் (FBI) கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதென அந்த அமைப்பின் துணை உதவி பணிப்பாளர் ஸ்கொட் ஷெல்பிள் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் Asia Pacific Media Hub ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அவர், சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார். தென்கிழக்காசியாவில் சீன அமைப்பு சார்ந்த குற்றச்செயல் கும்பல்கள் நடத்தும் மோசடி மையங்கள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருவதாகவும், அவை தினமும் அமெரிக்கர்களை குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “இவை தனிப்பட்ட அல்லது சிறிய குற்றச்செயல்கள் அல்ல. நவீன தொழில்நுட்பம், எல்லை தாண்டிய அமைப்பு மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பல கூறுகளை பயன்படுத்தி, மிகப்பெரிய லாபம் ஈட்டும் அமைப்புகளாக செயல்படுகின்றன” என அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் மட்டும், எஃப்பிஐயின் Internet Crime Complaint Center (IC3) மூலம் 80,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், மொத்த நிதி இழப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மோசடி மையங்களில் பணிபுரிபவர்களில் பலர் மனித கடத்தலுக்குள்ளானவர்களாக இருப்பதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இவை வெறும் இணைய மோசடிகள் அல்ல; இது அமைப்புசார்ந்த குற்றச்செயல். மனித கடத்தல், பணமோசடி மற்றும் ஊழல் அனைத்தும் இதில் கலந்துள்ளன,” என அவர் தெரிவித்தார். கம்போடியா, தாய்லாந்து அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் மட்டும் இந்த பிரச்சினை இருப்பதாக கருத முடியாது என்றும், இது முழு பிராந்தியத்தையும் பாதிக்கும் ஒரு சிக்கலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு நாட்டில் அழுத்தம் அதிகரித்தால், இந்த கும்பல்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. எனவே, எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கையே முக்கியம்,” என அவர் தெரிவித்தார். தாய்லாந்து பொலிஸ், கம்போடிய தேசிய பொலிஸ் மற்றும் வியட்நாம் பொது பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் எஃப்பிஐ நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கூட்டு விசாரணை அணிகள் மூலம் பல வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்கர்களை குறிவைக்கும் “Pig Butchering” என அழைக்கப்படும் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, அறிமுகமற்ற நபர்களின் முதலீட்டு வாய்ப்புகளை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம், உண்மையான நிதி நிறுவனங்களைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதள முகவரிகளை கவனிக்கவும், சந்தேகமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், “அதிக லாபம்” வாக்குறுதி அளிக்கும் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகவும், “உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நல்லதாகத் தோன்றினால், அது மோசடியாக இருக்க வாய்ப்பே அதிகம்” என அவர் எச்சரித்தார். குற்றவாளிகள் புவியியல் எல்லைகள் தங்களை பாதுகாக்கும் என நினைக்கக் கூடாது எனவும், அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார். “இது எஃப்பிஐ மட்டும் செய்யக்கூடிய வேலை அல்ல. சர்வதேச ஒத்துழைப்பே வெற்றியின் விசை,” என அவர் நிறைவுரையில் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239574
5 days 13 hours ago
nerodtSspofhct4m71mm16u9h634 2tfu59m685m3g4281h1ht4050020g50 · எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட காலம். #திருநெல்வேலி க்கு அருகே #ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை. உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில்கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர். மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி. அவர்கள் நம்பமறுக்க, பனையில் இருந்து இளம்பனைநுங்கோடு பதநீர் கலந்து, பனைவெல்லம் சேர்த்து மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுக்க நேற்று சாப்பிட்ட அதே ருசி. "வாவ்" என வாயை பிளந்த அதிகாரிகள் பனைமரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் ரயில்பாதை அமைக்க உத்தரவிட்டனர். நுங்கு சீசன் முடியும்வரை அவர்களுக்கு மக்கள் தயாரித்தளித்த பனை உணவே மதிய உணவானது. மக்களின் சாதுர்யத்தால் பெரிய அளவில் பனைமரங்கள் வெட்டுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளையர்களிடமிருந்து பனைமரங்களை காத்த நம்மால் இன்று ஆளும்வர்க்கம் சாலை விரிவாக்கம் என்றப் பெயரிலும், அறியா மக்கள் பனை எதற்கு என்று முடிவெடுத்து அதை அழிக்கும் முடிவிலிருந்தும் காக்க முடியவில்லை. பனை என்றதும் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது நுங்கு. வியர்குருக்கு மருந்தான நுங்கை ருசியான பாயசம் வைத்தும் அசத்த முடியும். நுங்கு எடுத்து சாப்பிட்டபின் காயைக் கொண்டு தயாரித்த வண்டி உருவாக்கி விளையாடிய அனுபவம் முன் தலைமுறையோடு பறிபோனது. முற்றிய நிலையில் உள்ள பனம்பழத்தை பறித்து சீவி, அவித்து சாப்பிட்ட ருசி, விழுந்த பழத்தை சுட்டு சாப்பிட்ட ருசி, இன்னும் நாவிலிருந்து அகலவில்லை. அன்றைய கிராமத்துவாழ்க்கையில் பனம்பழம் விழும்காலங்களில் எங்கள் முதல் வேலை பனம்பழம் பொறுக்குவது. பொறுக்கிவந்த பழங்களை ஒரு இடத்தில் குவித்துவைத்திருப்போம். சில வாரங்களில் நன்கு பழுத்து அந்த பகுதியில் செல்லும் போது வாசம் வரும் பக்குவத்தில் அதை தனித்தனி விதைகளாக பிரித்து உலரவிடுவோம். விதைகள் உலரும் அதே நேரத்தில் பனங்கிழங்கு விளையவைக்க இடத்தை தயார்செய்வோம். இரண்டடி ஆழத்திற்கு மண்ணை புரட்டி சாம்பல் மக்கிய உரங்கள் கலந்து நடுமிடத்தை மட்டமாக்கி, உலர்ந்த விதையின் தலைப்பகுதி மேலிருக்குமாறு அடுக்கி மேலே சிறிது மணல் தூவிவிட்டோமென்றால் போதும் 115 லிருந்து 130 நாட்களுக்குள் பனங்கிழங்கு தயாராகிவிடும். அவித்து உண்பதாகட்டும், சுட்டு சாப்பிடுவதாகட்டும் அவ்வளவு ருசி. அதுவும் இரவு படுக்கச் செல்லும்போது, விறகடுப்பு நெருப்பில் புதைத்து வைத்து காலையில் எடுக்கும் பனங்கிழங்கை இலேசாக வளைத்தால் சுருக்கம் சுருக்கமாக வந்தால் அது சரியாக வெந்திருக்கிறது என்பதை உணர்த்தும். சுட்ட பனங்கிழங்கை துருவி அதோடு அப்போது பறித்த தேங்காயின் துருவலை சேர்த்து சாப்பிட்டா..! அடடா பாழாய்போன பணத்தை தேடி நகரத்துக்கு வந்ததால் இழந்தவைதான் எத்தனை.! பனங்கிழங்கை சனி மாலை அறுவடைசெய்து அரையடி நீளத்துக்கு வேரைவிட்டு நறுக்கி விதைகளை நீக்கி தலைப்பு மாற்றி நூறு கிழங்குகளாக கட்டி மறுநாள் ஞாயிறு சந்தைக்கு எடுத்துச்சென்று விற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவோம். சரியாக கிழங்கு வராத சிறு விழுதுமட்டும் வந்த விதையை குறுக்காக வெட்டினால் உள்ளிருக்கும் பனம்பூவின் ருசிக்கு பனைமரத்தையே எழுதிவெக்கலாம். பனங்கிழங்கு அறுவடை செய்தபின் கிடைக்கும் விதைக்குடுகை அற்புதமான விறகு. பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னே பனங்குருத்தை வெட்டி, சரியான அளவில் வகுந்து, பனியிலும் வெயிலிலும் பதப்படுத்தி முட்டுமாலை, நெத்திச்சுட்டி, அரிசிமாலை எனச்செய்து மண்பானை ஓட்டில் சாயம் காய்ச்சி, அதில் பனம் ஓலையில் செய்தபொருட்களை முக்கி, சாயமேற்றி மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவித்து மகிழ்வோம். • பனை ஓலை காத்தாடி, • பனை ஓலை கொழுக்கட்டை, • பனை ஓலை பாய், • பனை ஓலை பெட்டி, • பனை ஓலை கூடை, • பனை ஓலை குச்சிபெட்டி, • அபூர்வமாய் இருந்த ஒரே மாதுளைச்செடியில் காய்களை அணில் கடிக்காமல் இருக்க அப்பா செய்து கட்டிவிடும் பனை ஓலை பெட்டி, • அக்கினி நட்சத்திரத்தன்று வெட்டி, அழகாய் அடுக்கி, பதப்படுத்திய பனை மட்டையில் வெய்த வீட்டில் கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் உணர்ந்த அனுபவம், • அப்பப்பா பனைஓலையில்தான் எத்தனை பரவசம். • பதநீர் குடிக்கவும், சாப்பிடவும் பயன்பட்ட பச்சை பனை ஓலை குடலை. • கால்சியம் நிறைந்த ருசியான பதநீர், அதில் காய்ச்சி எடுத்த நலம்பயக்கும் பனைவெல்லம். பதப்படுத்திய மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு. • வீடுகட்ட வாரை, விறகாக மட்டை, மிதியடிசெய்ய சப்பை (ஒரு காலத்தில் கீழ் தஞ்சையில் பலகுடும்பங்கள் பனைமட்டை நார் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி அந்த நார் மிதியடியாக தமிழ்நாடு திரும்பும்). • காய்கறி பந்தல் போட நார். • வீடுகட்டவும், கட்டில் தயாரிக்கவும் பயன்படும் அகனி. • முக்கியமாக உடலுக்கு நல்லதா? கெடுதலா? என விவாதத்தில் இருக்கும் கள்ளு. • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட பனையிலிருந்து தயாரிக்கும் பனை வெல்லத்தோடு ஒப்பிடுகையில் அதே பரப்பில் பயிரிடும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெல்லத்தின் மதிப்பீடு குறைவு. • ஒருமுறைவிதைத்தால் பத்து ஆண்டுகளில் இருந்து ஒரு நூற்றாண்டுவரை பயன்தரக்கூடியது பனை. • மழைநீரை பூமிக்கடியில் சேகரித்து வெளியே விடாமல் பராமரிப்பது பனை. • தன்னிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் மனித வாழ்வை தன்னிறைவாக்கும் பனை. பனையின் பயன்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். #பனைமரம் #பனை பனை மரத்தின் பெருமையை இதைவிட யாரும் அழகாக சொல்லி விட முடியாது... பனை சார்ந்த வாழ்வியலையும் பனை சார்ந்த உணவுகளையும் ஏனோ மறந்து போனது தமிழ் சமூகம்... 💥"#பனைவிவசாயம் 🌴" #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥" #palmtrees #Palm #பனைமரம்......!
5 days 13 hours ago
Sri Lanka vs New Zealand, 46th Match, Super Eights, Group 2 at Colombo, T20 World Cup, Feb 25 2026 - Live Cricket Score Live 46th Match, Super Eights, Group 2 (N), Colombo (RPS), February 25, 2026, ICC Men's T20 World Cup PrevNext New Zealand 168/7 Sri Lanka (2.1/20 ov, T:169) 6/2 Sri Lanka need 163 runs in 107 balls. Current RR: 2.76 • Required RR: 9.14
5 days 13 hours ago
5 days 13 hours ago
ஆழ்ந்த இரங்கல்கள்.................😢
5 days 14 hours ago
அருமை சுவி ஐயா................❤️.
5 days 14 hours ago
Checked
Tue, 03/03/2026 - 05:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed