புதிய பதிவுகள்2

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 1 week ago
உதென்ன விசமத்தனமான கேள்வி? நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அதை சொல்லுங்கள் முதலில். அவரை ஆதரிப்பதென்றால்; அவரைப்போல் கொள்கையில்லாமல், நேரம் ஒரு கதை பேசிக்கொண்டு, தான் பேசுவதே என்னவென்று தெரியாதவர்களாக கூத்தாடியாக இருக்கவேண்டும்.

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 1 week ago
பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் ஊழல்வாதிகளும் , கள்ளரும், குடுகாரரும் கொலை, கொள்ளையாளரும் , பைத்தியங்களும், படிப்பு, பண்பு, அறிவு திறமை இல்லாதவர்களுமே. இவர்கள் போதாது என்று இன்னும் பைத்தியங்களை அனுப்பிவைக்கிறார்கள் மக்கள். இவர்கள் வெளியில் இருந்தால் தங்களுக்கு தொல்லை என்று எல்லோரையும் ஒரே இடத்தில வைத்து, யார் முத்தினது என்று கண்டுபிடிப்பதற்காக. தங்கள் குற்றங்களையும் அழுக்குகளையும் மறைக்க வேண்டுமென்றால் மற்றவர்களை குற்றவாளிகளாக்க வேண்டும் சேறடிக்க வேண்டும் விமர்ச்சிக்கவேண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும் அவற்றில் இவர்கள் குறைகள் மறைக்கப்பட்டுவிடுமென நினைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

1 month 1 week ago
ஒன்றும் ஒன்றும். இரண்டு. கூட்டுத்தொகை. மூன்று. வரவேண்டும தயவுசெய்து. அடிக்கடி. கணக்கில். பிழைவிட வேண்டாம்

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
மோகனுக்கும். பிள்ளைகளுக்கும். மற்றும் நெருங்கிய. உறவினருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து. இரங்கல்களை. தெரிவித்துக் கொள்கிறேன் ஒம் சாந்தி.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
நாம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் ஆறாது உங்கள் உள்ளம், அந்த இழப்பை ஈடு செய்யவும் முடியாது. மீளாத்துயரில் இருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அதிலிருந்து மீண்டு வரவும், அவரின் ஆன்மா அமைதியில் இறைவனோடு இளைப்பாறவும் பிரார்த்திக்கிறேன்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
துணைவியை இழந்து தவிக்கும் மோகனுக்கும் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அதிர்ச்சியாக இருக்கிறது . ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை .துயரில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன் .

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 1 week ago
இங்கு நீங்கள் குறிப்பிடுவது யாரை, தமிழர்களையா? தமிழர்களைத்தான் என்று எடுத்துக்கொண்டால், தமிழர்களில் எந்தப் பிரிவினர் மேற்குடனும், இலங்கையுடனும் சேர்ந்து பயணிக்கலாம் என்று விரும்புகிறார்கள்? எமக்கான பயன் கிடைக்குமென்றால் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை. ஆனால் அந்தப் பயன் தான் என்ன? அதனைத் தருவதற்கு இந்தியா உடன்படுகின்றதா? அதற்கான சமிக்ஞைகள் இந்தியாவினால் எப்போது, யாரிடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன? நீங்கள் சிட்னியில் உங்களின் இந்திய நண்பர்களுடாக இந்திய அதிகார வர்க்கத்தினை அணுகியிருக்கிறீர்களா? புலிகளை அழிக்க உதவுங்கள், நாம் மகிந்தவிடம் உங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதியளித்த பின்னர், யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்டபோதும், தனது வாக்குறுதியைத் தானே தூக்கிக் கடாசிவிட்டு பேசாமலிருக்கும் இந்தியா இப்போது எதற்காக எமக்கான தீர்வைத் தரப்போகிறது என்று நினைக்கிறீர்கள்?

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 1 week ago
இங்கு "நம்ம நானா " என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் குறிப்பிடும் நபர் சிங்கள இனவாதிகளில் மிகத் தீவிரமானவர்களில் ஒருவரான சிறிமாவை ஆதரித்தவர் என்பதுடன் அவரது செயற்பாடுகளை இன்றுவரை நியாயப்படுத்தி வருபவர், தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக்கு எதிரானவர், த‌மிழரின் விடுதலைப் போராட்டத்தை இன்றுவரை கொச்சைப்படுத்தி வருபவர், தமீழத் தேசியத் தலைமைத் தண்டிக்கவேண்டும் என்று கூறிவருபவர் , பொதுவாகத் தமிழ்த் தேசியம் என்பது அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர். ஆக, நான் சொல்பவரும் நீங்கள் குறிப்பிடுபவரும் ஒரே நபர்தான் என்றால், நீங்கள் சரியாகவே கணித்திருக்கிறீர்கள் என்று பொருள். மேலதிக விபரங்களுக்கு என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள், நாம் அந்த நபரை யாரென்று சரியாக இனங்கண்டுகொள்ளலாம்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
நம்பவே முடியவில்லை.மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் மோகனுக்கும் அம்மாவை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆளாத்துயரில் நானும் பங்கெடுக்கின்றேன்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
மிகவும் துயரமான தகவல். எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! 🙏

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
மோகன் அண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.

1 month 1 week ago
ஆ.......நம்பவே முடியாதிருக்கிறது.....மோகண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 1 week ago
அப்படியானால் சீமான் , இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரர் சிறிதரன் தவெக கட்சி தலைவர் விஜய் எல்லாம் முதியவர்கள் தாத்தாக்கள் தான்
Checked
Thu, 02/26/2026 - 16:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed