1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:40 PM (நமது நிருபர்) பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர். எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் பொறியியல் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின் பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் மேன்மைதங்கிய ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222104
1 month 2 weeks ago
யாழில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 08 AUG, 2025 | 04:39 PM யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்று வெள்ளிக்கிழமை (08) குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222103
1 month 2 weeks ago
மலேரியா தாக்கம் குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை! 08 AUG, 2025 | 07:46 PM மலேரியா தாக்கம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் மலேரியா நோய் பரம்பல் பூரணமாக ஒழிக்கப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தபட்டது. அதன் பின்னர் உள்ளூரில் பரவும் மலேரியா நோயாளர்கள் யாரும் எமது நாட்டில் இனங்காணப்படவில்லை. ஆயினும், உலகில் பல நாடுகளில் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென்அமெரிக்கா கண்டங்களில் உள்ள பல நாடுகளில் மலேரியா நோயின் பரம்பல் இன்னமும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் எமது நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஐரோப்பிய, வடஅமெரிக்க கண்டங்களுக்கு சட்ட விரோதமாக சென்று குடியேறும் நோக்குடன் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று தங்கியுள்ளனர். இவர்களில் பலர் ஐரோப்பிய, வட அமரிக்க கண்டங்களுக்குச் செல்ல முடியாது பல மாதங்களாக ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்து விட்டு எமது நாட்டிற்கு மீண்டும் திரும்பி வரும் போது அவர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறாக எமது நாட்டில் கடந்த பல வருடங்களாக மலேரியா அதிக பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் 2021 ஆம் ஆண்டு 26 பேரும், 2022 இல் 37 பேரும், 2023 இல் 62 பேரும், 2024 இல் 38 பேரும், 2025 இல் 29 பேரும் நாடு திரும்பியோர் மத்தியில் மலேரியா நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறே யாழ் மாவட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு 2 பேரும், 2022 இல் 7 பேரும், 2023 இல் 6 பேரும், 2024 இல் 2 பேரும், 2025 இல் இது வரையான காலப்பகுதியில் 5 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வாரம் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆபிரிக்க நாடான டோகாவிற்குச் சென்று கடந்த செப்ரெம்பர் 30 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய 2 நோயாளர்களிடையே மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. முதலாவது நோயாளி நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்துள்ளார். இவர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கடுமையான நடுக்கம், மாறாட்டம் போன்ற அறிகுறிகளுடன் இரவு 10.30 மணிக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 5 ஆம் திகதி காலையில் இவரது குடும்பத்தினர் மூலம் இவர் ஆபிரிக்க நாட்டிற்கு சென்று வந்த தகவல் கிடைத்ததும் மலேரியாவிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு உடனடியாகவே மலேரியா நோய்க்கான ஊசி மருந்துகள் நாளத்தின் ஊடாக ஏற்றப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. ஆயினும், அவருக்குக் காணப்பட்ட பல்வேறு வேறுநோய் நிலைகளால் அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். மேற்படி நோயாளியுடன் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பியுள்ளார். இத்தகவல் கிடைத்ததுமே மலேரியா தடுப்பு இயக்க உத்தியோகத்தர்கள் இவருக்கு மலேரியா பரிசோதனைகளை மேற்கொண்ட போது இவருக்கும் Falciparum malaria இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை. இருப்பினும், இவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மலேரியாவிற்கான பூரணமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 நோயாளிகளைப் பொறுத்த வரையில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எவ்விதத்தாமதமும் இன்றி உடனடியாக தமது மலேரியா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எமது நாட்டில் மலேரியா நோயின் உள்ளூர் பரம்பல் முற்றாக ஒழிக்கப்பட்டாலும் மலேரியா நோயைப் பரப்புகின்ற நுளம்புகள் இன்னமும் காணப்படுகின்றன. எனவே, மேற்படி நோயாளர்களிடம் இருந்து அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மலேரியா நோய் பரவாதிருக்க அவர்களது வதிவிடங்களைச் சுற்றி நுளம்புகளுக்கான பூச்சியியல் ஆய்வும், நுளம்புகளை அழிக்கும் புகையூட்டல் நடவடிக்கைகளும் வீடுகளுக்கான நுளம்பு கொல்லி மருந்துகளை விசிறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பொது மக்கள் பண்ணையில் அமைந்துள்ள மலேரியா தடுப்புப் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவர்கள் அந்த நாடுகளில் தங்கியுள்ள காலப்பகுதியில் இத்தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் மலேரியா நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். அடுத்ததாக மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் நாடு திரும்பியவுடன் மலேரியாவிற்கான குருதிப் பரிசோதனையை எமது வைத்தியசாலைகளில் மேற்கொண்டு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது மக்கள் அனைவரும் மலேரியா பரம்பல் அதிகமாகக் காணப்படும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குச் செல்லும் போது மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு எமது நாட்டில் மலேரியா நோய் பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222118
1 month 2 weeks ago
முறைப்பாடு செய்தவரிடம் பேட்டி எடுக்கிறார்கள். இது நம்மாள் யாரோ போட்டுக் கொடுத்துள்ளனர். இருந்தாலும் நல்ல விடயம்.
1 month 2 weeks ago
தமிழ்நாட்டிலேயே தேர்தல் நேரங்களில் அண்டா குண்டா குக்கர் பணம் என்று பகிரங்கமாகவே கொடுக்கிறார்கள். ஆனாலும் எங்காவது யாரையாவது பிடித்தார்களா என்றால் அது ஓரிரு எதிர்க் கட்சிகளாகவே இருக்கும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் ஆணையம் ஊழலில் ஊறிவிட்டது.
1 month 2 weeks ago
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மட்டு மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை Published By: VISHNU 08 AUG, 2025 | 07:16 PM மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் ஆனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஜடி யினர் வியாழக்கிழமை (07) விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் 6ம் திகதி சந்தேகத்தில் சிஜடி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் கடந்த 30 ம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு மாநகர முதல்வருக்கு மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார். பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஜடி யின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் சிஜடி யினர் மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/222129
1 month 2 weeks ago
இவர்கள் என்ன குற்றங்கள் செய்தார்கள் என்றாவது வழக்கைப் பதிவு செய்து அவர்களுக்கான தண்டனைகளைக் கொடுக்கலாமே? இதைச் செய்தால் அவர்களுக்கு தண்டனையே வழங்க முடியாது. ஒரு காலத்தில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக துள்ளிக் குதித்த ஜேவிபி இன்று அதைஒத்த பயங்கரவாத சட்டத்தை இயற்றி அதில் குளிர்காய்கிறது.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
கிராமங்களில் அடிக்கடி வந்து கோம்மை நிமிர்ந்து கிடக்கு அது இது என்று குற்றம் அறவிடுவதில் மிகவும் கறாராக இருக்கிறார்கள். இதையே யாழ் வைத்தியசாலைச் சுற்றி ஸ்ரான்லி வீதி இரும்புக்கடைகள் உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள் இருக்குமிடங்கள் என்று பல இடங்களில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நின்று நாற்றமும் எடுக்கிறது.
1 month 2 weeks ago
பெண்களால் ரொம்பவும் நொந்து போனவரின் கவிதை போலிருக்கே? பாராட்டுக்கள் தில்லை.
1 month 2 weeks ago
யாழ். வடமராட்சி கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீ வைப்பு! Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 07:07 PM யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதனை அவதானித்த இராணுவத்தினர், தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனம் மற்றும் மருதங்கேணி இராணுவ முகாமிலிருந்து 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விஷமிகளால் வைக்கப்பட்ட தீ வேகமாகப் பரவியதால், அருகில் இருந்த ஏனைய பனை மரங்களும் தீக்கிரையாகின. சுமார் இரண்டு மணிநேர கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது பனம் பழ சீசன் என்பதால், பனைகளை நம்பி வாழும் மக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/222126
1 month 2 weeks ago
புரட்சி ஏன் சார் எந்திரிக்கணும்? அவசர சிகிச்சைப் பிரிவினர் வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.
1 month 2 weeks ago
இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனந்தோப்பில் எப்படி வெளியார் தீ வைப்பார்கள்? இராணுவமே தீயை வைத்துவிட்டு வெளியாரை சாடுகின்றதோ?
1 month 2 weeks ago
சொல்ல துடிக்குது மனசு
1 month 2 weeks ago
தாயகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில் இருந்து..... https://www.facebook.com/share/v/1D8jFnopBx/
1 month 2 weeks ago
அலாவுதீனின் அற்புத விளக்கு
1 month 2 weeks ago
சசிகாந்த் செந்தில் இந்திய புலனாய்வு துறையை சேர்ந்தவர் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?
1 month 2 weeks ago
கோவா
1 month 2 weeks ago
பாராட்டுக்கள்.. தற்செயலா அடிபட்டு கீழ விழுந்தால் உடனே எந்திரிக்க முடியுமா ரெல் மீ ..
Checked
Mon, 09/29/2025 - 06:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed