1 month 1 week ago
அப்ப அமெரிக்காவை, நேட்டோ நாடுகளை நம்பினால்...?
1 month 1 week ago
அனுராவின் காலில் எல்லாம் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.அவரும் ஒரு சாதரண மனிதர் தானே ஏன் இவ்வளவு கோமாளித்தனம் செய்கிறார்கள்...ஆலாத்தி, பூச்செண்டு, காலில் தொட்டுக் கும்பிடுதல் கடவுளே..
1 month 1 week ago
சீனாவை நம்பினால் நடுதெருவில் கைவிடப்படுவார்
1 month 1 week ago
அநுரகுமார திசாநாயக்கவை பார்க்க யாழ்பாண தமிழர்கள் முண்டியடித்து நடந்து கொண்டவிதம் காணொளியில் காட்டினார்கள் டூ மச் இல்லை திறி மச் அவமானம். தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை பர்க்க முண்டியடிக்கிறார்களே லூசு கூட்டம் என்று நினைத்தால் இங்கே நிலைமை மோசம் ☹️
1 month 1 week ago
🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨 🚨 தடுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்! 🚨 written by admin January 16, 2026 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார். இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள். கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர். எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA https://globaltamilnews.net/2026/226655/
1 month 1 week ago
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை 50% அதிகரிக்கக் கனடா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வர்த்தக வரிகளைக் குறைக்கவும், பதிலுக்குச் சீனா கனடிய விவசாயப் பொருட்கள் (Canola) மீதான வரிகளைக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. “உலகம் பிரிவினையாலும் குழப்பத்தாலும் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில், கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும்” என்கிறார் பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் (Tariffs) கனடா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க, இந்தச் சீனப் பயணம் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. #Canada #China #Mark Carney #NewWorldOrder #GlobalPolitics #TradeNews #CanadaChinaRelation #BreakingNews #TamilNews #கனடா #சீனா #மார்க் கார்னி #உலகஅரசியல் Global Tamil News🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! - Global Tami...கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு…
1 month 1 week ago
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி (Justice Brian Cummings KC) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும், 4 வெட்டுக் காயங்களும் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” மதியபரணம் அங்கு சென்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். 💢" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஒரு குடும்ப நிகழ்வுக்குத் தன்னை அழைக்காததால் ஏற்பட்ட கடும் கோபமே இந்த கொலைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. தாக்குதலுக்கு முன்பே மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டவர் என்பதும், தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தடையை அவர் மீறியிருந்ததும் விசாரணையில் உறுதியானது. 💔" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்தத் தாக்குதலின் போது 18 வயதான மூத்த மகள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தையே உலுக்கியது: “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” ⚖️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிமலராஜா மதியபரணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். #UnitedKingdom #Liverpool #CrimeNews #JusticeForNilani #TamilNews #UKCourt #DomesticViolence #BreakingNews #LiverpoolCrime #SrilankanTamilNews https://globaltamilnews.net/2026/226663/
1 month 1 week ago
நான் படம் பார்ப்பது மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முற்காலத்தில் பெரிய அளவில் நடைபெற்றது அதன் பின்பு அண்ணா தலைமையில் திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தது என்பதை பலர் சொல்லவும் வாசிப்பு மூலமும் அறிந்ததால் பராசக்தி படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து. தியோட்டரில் பார்த்தேன் தோற்கடிக்கபட்ட காங்கிரஸ் மீண்டு எழ முடியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கின்றனர் 👍
1 month 1 week ago
யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! written by admin January 16, 2026 யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் மாண்புமிகு ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/226630/
1 month 1 week ago
பெண் நிர்வாணபடத்தை ஆண் பகிர்ந்தாலோ, அல்லது ஆண் நிர்வாணபடத்தை பெண் பகிர்ந்தாலோ பெயர் அடிவாங்க போவது பெண்ணோடதுதான். ஒன்று இவவின் அந்த படத்தைதான் அவன் வாட்சப்பில் போட்டவனாம் என்று பேசும், அல்லது இவவுக்குத்தான் அந்த படத்தை அவன் அனுப்பினவனாம் என்று பேசும். கத்திமீது அப்பிள் விழுந்தாலும் அப்பிள்மீது கத்தி விழுந்தாலும் சேதம் என்னவோ அப்பிளுக்குத்தான் என்ற நிலையில் இன்றுவரை இருக்கிறது யாழ் மண்ணின் பெண் உரிமை.
1 month 1 week ago
நோபல் பரிசு சமாதனத்திற்கு கொடுப்பது என்பது ஓர் பூச்சாண்டி....தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி நடைபெறும் நாடுகளின் எதிர் கட்சியினருக்கு பரிசை கொடுத்து ஆட்சியை கவிழ்ப்பது இவர்களின் செயல் ..
1 month 1 week ago
பொதுவாக ஜனாதிபதி ஒருவர் யாழ்ப்பாணம் வந்தால்; கறுப்பு கொடி எதிர்ப்பு காட்டுவது, போராட்டம் நடத்துவது, பகிஷ்கரிப்பு கடையடைப்பு செய்வது, டக்கியார் மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்துகொண்டுபோய் வரவேற்பது, அவர்களும் இராணுவ, போலீஸ் பாதுகாப்போடு வந்து மேடையில் ஏமாற்று வார்த்தைகளை கூறிவிட்டு தென்பகுதிக்குப்போய் வேறொரு விளக்கம் கொடுப்பார்கள். இவர் என்னடாவெண்டால்; சாதாரண உடையில் வாறார், மக்கள் அவரை பாக்க முண்டியடிக்கிறார்கள், அரசியல் வாதிகளை காணேல, மக்களோட கைகுலுக்குகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், அவர்களோடு கூட இருந்து பொங்கி சாப்பிடுகிறார். தமிழரை அழித்துவிட்டு பாற்சோறு சாப்பிட்ட நினைவு யாருக்கும் வந்திருக்காது. தமிழ், சிங்கள உறவை பிரிக்க புத்தர் சிலையை கொண்டு ஒரு கூட்டம் அலையுது, இவர் என்னடா என்றால் தமிழரோடு பொங்கல் கொண்டாட வடக்கிற்கு வருகிறார், வழமையாக தேர்தல்காலத்திற்தான் பொய்யான வாக்குறுதிகளோடு வருவார்கள். இந்த உறவு நிலைக்க வேண்டும், தமிழரின் அபிலாசைகள் நிறைவேற்றி வைக்கப்படவேண்டும். அதுசரி.... நான்தான் அனுரா காவடி என்று களத்தில் முத்திரை குற்றினார்கள், இப்போ யாரையும் காணல கருத்துப்பரிமாற. நான்தான் மக்களை திரட்டி வரவேற்பளித்தேன் என்று கூறாதவரை சந்தோசம். பாவம் தமிழர்! அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளே. அடுத்த தேர்தலின் முடிவுகளை மக்களே சொல்லிவிட்டார்கள். இனி வருங்காலத்தில் சவால் விடும்போது இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
1 month 1 week ago
ஹாஹா..... காலம் மாறிவிட்டது. பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு, அதுபோனால் வாழமுடியாது என்கிற வாதம் மலையேறிவிட்டது. காலம் எப்படியெல்லாம் மாறுகிறது. இனி இவர் அந்தபெண்ணைதான் கைப்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களாக இருக்கும், அதுதான் பெடியன் முறைப்பாடு அளித்திருக்கிறான். அதென்ன அசிங்க பழக்கம் நிர்வாண புகைப்படங்களை ஒருவருக்கொருவர் அனுப்புவது? அப்படியே தெருவிலும் போவது, வீட்டிலுள்ளவர்களுக்கும் கொஞ்சம் காட்டி அதன் விளைவு என்னவென்று பார்ப்பது. பெண் முந்திக்கொண்டு விட்டார்!
1 month 1 week ago
ட்ரம்பின் இந்தச் செயல் சின்னப்புள்ளத் தனமா இல்ல மூளை சீரழிந்த தனமா ? லூசிக்குப் பொறந்த, லூசிட புருசன்.
1 month 1 week ago
இலண்டனில் இந்திய தணிக்கை குழுவின் கத்தரி இல்லாமல் திரையில் பார்த்தேன். இந்தி திணிப்புக்கு எதிரான கதை எனினும் பல சமசரங்களுடன்தான் திரைக்கதை அமைந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் கட்சிகளால்தான் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது என்பது புரிதல். ஆனால் படத்தில் இந்திய நாடு முழுவதும் பரவிய இரகசிய மாணவர் அமைப்பினால் (அதுவும் தமிழ்ப் பெயராகிய புறநானூற்றுப் படை) முன்னெடுக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது புனைவு. திராவிடக் கட்சிகள், இடது சித்தாந்தக் கட்சிகளின் பங்களிப்பு காட்டப்படவில்லை. இப்போதைய "ஜென் Z" தலைமுறைக்கு இப்படி ஒரு வரலாறு இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் இன்னும் உணர்வோடு சொல்லியிருக்கலாம்.
1 month 1 week ago
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 10 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ 4 புலவர் 5 சுவைப்பிரியன் 6 அல்வாயன் 7 ஈழப்பிரியன் 8 நியூ பலன்ஸ் 9 வாத்தியார் 10 கறுப்பி பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, சிறிலங்கா, இத்தாலி, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இன்னமும் தங்கள் வீரர்களின் பட்டியலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
1 month 1 week ago
அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. மகாபாரதத்தில் துரியோதனனின் நண்பன் அஸ்வத்தாமனுக்கு சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்..
1 month 1 week ago
@Newbalance , உங்கள் தெரிவுகளின்படி இந்தக் கேள்விக்கான பதில் SA அல்லது WI. உங்கள் தெரிவைத் தாருங்கள்.
1 month 1 week ago
1 month 1 week ago
இந்த மான் உந்த சொந்தமான் எங்கப்பா அந்த தொண்டைமான் காளை ?
Checked
Thu, 02/26/2026 - 19:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed