1 month 2 weeks ago
பெண் பார்க்கும் பரிதாபங்கள் ..
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
ஆடி மாத பரிதாபங்கள் ..
1 month 2 weeks ago
தமிழால் இணைவோம்..
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
விஞ்ஞானிகளை ஏன் கைது செய்யுறியள்.? "
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
எல்லோருக்கும் நன்றிகள்
1 month 2 weeks ago
எல்லோருக்கும் நன்றிகள்
1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 17 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 17 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''திஸ்ஸ' என்ற பெயர் சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதா?' பெயர் 'திஸ்ஸ ' [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம், திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு. அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் 'திஸ்ஸ' கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது. தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீழடிக்கு வருகை தந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் k ராஜன், தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கொண்ட பானை ஓடுகள் தகவல் தொடர்பு முறையின் பரவலைக் காட்டுவதாகக் கூறினார். பிராமி எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டாலும், தமிழ் மற்றும் பிராகிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. பானை ஓடு ஒன்றில் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட "திஸ்ஸா" என்ற பெயர் பிராகிருத மொழிக்கு சொந்தமானது. பிராகிருதப் பெயர் கீழடிக்கு இலங்கையுடன் கடல்சார் வர்த்தகம் இருந்ததை உணர்த்துவதாக ராஜன் உறுதியாக நம்புகிறார். / 'Digging up Madurai’s Sangam past'. கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ் - பிராமி எழுத்துருக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன், திஸன், குவிரன், குலவன், உலசன், போன்ற தமிழ் சொற்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. [Vendan, Sendan Avadi, Chandan, Satan, Madasi, Eravadan, Uthtrai, Aathan, Muyan, Iyanan, Tissan, Kwiran, Kulavan, Ulasan. இங்கு கடைசியில் உள்ள 'ன்' ['N'] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம். ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது எனவே திஸ்ஸ என்ற பெயர் சிங்களவர்களை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது ஒரு பௌத்தப் பெயராக இருந்திருக்கலாம்? மேலும் தமிழ் நாடுகள் சமணம், சைவம், வைணவம் மற்றும் பிற மதங்களுடன் பௌத்தத்தையும் ஒரு காலத்தில் பின்பற்றின என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது, தமிழ் பகுதிகள், இந்தியா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பல்வேறு மதங்கள் மேலோங்கி இருந்தன, மேலும் சில காலப்போக்கில் செல்வாக்கை இழந்தன, மற்றவை முக்கியத்துவம் பெற்றன என்பதே உண்மை. இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள கொடுவில்லில் [குடுவில் கல்வெட்டு, அம்பாறை / Kuḍuvil inscription, Amparai] கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ‘திஸ’ [திஸ்ஸ] என்னும் பெயருடைய தமிழ் பெருவணிகனொருவன் அங்குள்ள பௌத்த சங்கத்துக்கு தானம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. [The cave of the merchants who are the citizens of Dighavapi, of the sons of . . . . and of the wife Tissā, the Tamil. / Paranavitana, Senarath (1970). "Inscriptions of Ceylon - Volume I, Inscription no. 480". inscriptions.lk. Retrieved 14 December 2023.] மேலும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் சுமார் 15 கல்வெட்டுகளில் ‘திஸ’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. வணிக சமூகத்தில் ‘திஸ’ ஒரு தனிச்சிறப்பு மிக்க நிலையைக் குறிப்பதாக இலங்கை ஆய்வாளர் புஷ்பரத்னம் கருதுகிறார். மேலும் அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. [A Brahmic inscription on the head of a Tamil family is found in the Abhayagiri Viharai area in the ancient city of Anuradhapuram. At a distance of about 300 meters on the western side of Abhayagiri obelisk some boulders are found. An inscription is engraved on one of these rocks. ] பேராசிரியர் பரணவிதானா, இந்த கல்வெட்டை மொழிபெயர்த்து இப்படி கூறுகிறார், இது “இல்லு பரதனான தமிழன் சமன மூலம் அமைக்கப்பட்ட தமிழ் குடும்பத் தலைவனின் மடம். சகவின் ஆசனம், நசடவின் ஆசனம், க…திசனின் ஆசனம், .. .. ..ஆசனம், குபிர சுஜாதாவின் ஆசனம், கப்பலோட்டி கரவனின் ஆசனம் எனப் பொருள்படுகிறது என்கிறார். இந்தக் கல்வெட்டில் இரண்டு இடங்களில் தமிழர்கள் என திருப்ப திருப்ப குறிப்பிடப்பட்டுள்ளனர். முதலாவது “தமிழ் சமணன்” என்றும், இரண்டாவது “தமிழ் குடும்பத் தலைவர்” என்றும் ஆகும். இந்த கட்டிடம் தமிழ் பாரம்பரிய சின்னமாக உள்ளது. இங்கும் 'திஸ்ஸ' ஒரு தமிழரைக் குறிக்கிறது. Part: 17 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Does the name 'Tissa' refer only to Sinhalese people?' Tissa is a common name as per the chronicles in the Buddhist countries, but it was a common name with extension, such as Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc among Tamils too. The Name Tissa was found in the recent archaeological excavation at Keezzadi in Tamil Nadu-India during 2014 to 2015. It was widely reported. This was dated to be about 300 B. C. to 400 B. C. Devanampiyatissa’s reign id from 247 B. C. to 207 B. C. The names, which were found on the potsherds, are Uthiran, Aathan, Saathan, Tissan, Surama etc. If ‘n’ in the name Tissan is left out then it is Tissa. It is therefore clear that the name Tissa does not exclusively indicate Sinhalese. It could have been a Buddhist name, and the Tamil countries were following Buddhism along with Jainism, Saivism, Vaisnava and various other religions during that time. Being part of a continental India, various religions prevailed, and some lost influence with passage of time and others gained prominence. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 18 தொடரும் / Will Follow பகுதி Part: 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/30744917858490125/? எல்லோருக்கும் நன்றிகள்
1 month 2 weeks ago
யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா! யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபிரிக்க நாடொன்றில் என்ற நாட்டில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் விமானம் மூலம் கட்டுநாயக்கவுக்குத் திரும்பியவர்கள். எனவே வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டும். இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட செயற்றிட்டங்களை 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் முன்னெடுத்தல் அவசியம் - என்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
1 month 2 weeks ago
07 Aug, 2025 | 04:18 PM 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா? இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்? வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!! ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி | Virakesari.lk
1 month 2 weeks ago
08 Aug, 2025 | 09:06 AM யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk
1 month 2 weeks ago
08 Aug, 2025 | 09:57 AM நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார். நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில் திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார். மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர். மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன. விபத்தில் இறப்பு வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம். எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk
1 month 2 weeks ago
நன்றி சசிகாந்த் செந்தில். சீமான் போன்ற ரோ ஏஜெண்டுகளின் பேச்சை கேட்டு இவரை ஒத்த காங்கிரஸ், திமுக ஆட்களுக்கு எதிராக புலம்பெயர் மொக்கசாமிகள் மிக அவதூறாக- எழுதியபின்னும் கூட இப்படி இவர் குரல் கொடுப்பது ஒரு ஆச்சரியமான சந்தோசம்தான்.
1 month 2 weeks ago
ஒலிபெருக்கி பாவனைக்கு தடை written by admin August 8, 2025 கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார். தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார். https://globaltamilnews.net/2025/218987/
1 month 2 weeks ago
யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பு ட்ரம்ப்: நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு… வாழ்வின் எல்லை சென்று… ஒன்றாக வாழலாம்…. புடின்: ஆயுள் காலம் யாவும்… அன்பே நீயே போதும்…. இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம்… ட்ரம்ப்: நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்… புடின்: என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி…. ட்ரம்ப்: என் வானம் நீ… என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி… புடின்: என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி…. ட்ரம்ப்: என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி…. புடின்: ஓ…. நீயும் நானும் அன்பே… கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்….
1 month 2 weeks ago
அண்ணை, சரி சரி Positive ஆ எடுத்துக்கிறோம். மாப்பிள்ளைக்கு கைக்கு எட்டியது..... பயமா இருக்குமில்லையா?
1 month 2 weeks ago
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொதுமன்னிப்பளியுங்கள் - சிறிதரன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நீதியமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமதம்பி சிவகுமார்,விக்னேஸ்வரநாதன் பார்த்திபன்,கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார்,ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 14 முதல் 30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குடும்பத்தை கருத்திற்கொள்ளுங்கள், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222058
Checked
Mon, 09/29/2025 - 06:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed