Aggregator

தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு

1 week 3 days ago

தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு

19 Dec, 2025 | 10:47 AM

image

தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (EU–Mercosur) ஐரோப்பிய ஒன்றியம் (ஈயூ) ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பும், பிரான்ஸ் மற்றும் இத்தாலி முன்வைத்த கடைசி நேர எதிர்ப்பும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதிகளை மறித்து பட்டாசுகள் மற்றும் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈயூ–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் கையெழுத்தாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை பேச்சாளர் பவுலா பின்யோ வியாழக்கிழமை (18) உறுதிப்படுத்தினார். சுமார் 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இந்த ஒப்பந்தம் மீண்டும் தாமதமடைந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் பிரேசிலுக்கு பயணம் செய்யவிருந்தார். ஆனால், ஈயூ உறுப்புநாடுகளில் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

பிரஸல்ஸில் நடைபெற்ற ஈயூ உச்சி மாநாட்டின் போது, வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையில் ஜனவரி மாதம் ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கும் நிபந்தனையுடன் ஒத்திவைப்புக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, மேலும் சலுகைகள் மற்றும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவை எனக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இத்தாலி, போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் என்பதுடன், வாகனங்கள், இயந்திரங்கள், மதுபானங்கள் உள்ளிட்ட ஈயூ தயாரிப்புகளின் லத்தீன் அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/233796

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

1 week 3 days ago
19இன் கீழ் ஆசிய கிண்ண அரை இறுதியில் வலிமைமிக்க இந்திய அணியின சவாலை முறியடிக்குமா இலங்கை? Published By: Vishnu 18 Dec, 2025 | 11:22 PM (நெவில் அன்தனி) துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் வலிமைமிக்க இந்திய இளையோர் அணியிடம் இலங்கை இளையோர் அணி பலத்த சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இப் போட்டி துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. பி குழுவில் இடம்பெற்ற இலங்கை மாறுபாடான பெறுபேறுகளுடனும் ஏ குழுவில் இடம்பெற்ற இந்தியா தோல்வி அடையாத அணியாகவும் அரை இறுதியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. பி குழுவில் நேபாளத்தை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை, ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவர்வரை போராடியே வெற்றிபெற்றது. கடைசிப் போட்டியில் பங்களாதேஷிடம் அடைந்த தோல்வியினால் இலங்கை நெருக்கடிக்குள்ளானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மாத்திரமே இலங்கை 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷுடனான போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் கவனக்குறைவால் விக்கெட்களை தாரைவார்த்தனர். இலங்கை துடுப்பாட்டத்தில் திமன்த மஹாவித்தான (124 ஓட்டங்கள்), சாமிக்க ஹீனட்டிகல (ஒரு அரைச் சதத்துடன் 128 ஓட்டங்கள்), விரான் சமுதித்த (ஒரு அரைச் சதத்துடன் 113 ஓட்டங்கள்) ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர். கவிஜ கமகே சகலதுறைகளிலும் பிரகாசித்து இலங்கையின் முன்னணி வீரராகத் திகழ்கிறார். அவர் 3 போட்டிகளில் 95 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றி தனது சகலதுறை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரத்ன 8 விக்கெட்களையும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களையும் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய அணி சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்து ஐக்கிய அரபு இராச்சியத்தையும் மலேசியாவையும் மிக இலவாக வெற்றிகொண்டது. அந்த இரண்டு போட்டிகளிலும் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த இந்தியா, இடையில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றிபெற்றது. அப் போட்டியில் இந்தியா 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்திய அணியில் அபிக்யான் அபிஷேக் குண்டு (ஆட்டம் இழக்காத ஓர் இரட்டைச் சதத்துடன் 263 ஓட்டங்கள்), வைபவ் சூரியவன்ஷி (ஒரு சதத்துடன் 226 ஓட்டங்கள்), ஆரோன் ஜோர்ஜ் (ஒரு அரைச் சதத்துடன் 154 ஓட்டங்கள்), வேதாந்த் த்ரிவேதி (ஒரு அரைச் சதத்துடன் 135 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் தீப்பேஷ் தேவேந்த்ரா (10 விக்கெட்கள்), கனிஷ்க் சௌஹான், கிஷான் சிங் (இருவரும் தலா 4 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சில் பிரகாசித்துள்ளனர். இரண்டு அணிகளினதும் ஆற்றல் வெளிப்பாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒருவேளை இலங்கை அசாத்திய திறமையை வெளிப்படுத்தினால் அவ்வணிக்கு சாதகமான பெறுபேறு கிடைக்க வாய்ப்புள்ளது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 8 தடவைகள் சம்பயினான இந்தியாவுடன் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒரே ஒரு வெற்றியை ஈட்டியுள்ளது. 5 இறுதிப் போட்டிகள் உட்பட 9 போட்டிகளில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. ஒரு போட்டி சீரற்ற கால நிலையால் முற்றாக கைவிடப்பட்டது. பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை பாகிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது. பி குழுவில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது. மறு பக்கத்தில் மலேசியாவை மிக இலகுவாக வெற்றிகொண்ட பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வெற்றிகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாகத் தென்படுவதால் இந்த அரை இறுதிப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/233773

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

1 week 3 days ago
தமிழக முதல்வருடன் தமிழ்த்தேசியப் பேரவை சந்திப்பு : தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறைமை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல் Published By: Vishnu 19 Dec, 2025 | 03:09 AM (நா.தனுஜா) தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர், மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத்தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பின்போது 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பை நிராகரித்து தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கல், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் என்பன தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு இச்சந்திப்பில் பேசப்பட்ட மற்றும் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கையளித்தனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குறித்த முயற்சியானது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்குவதாக அமையவேண்டும் என்ற நோக்கிலேயே எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களினதும், அதன் முதலமைச்சரான தங்களதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருந்தோம். நீங்கள் ஈழப்போராட்ட வரலாற்றை நன்கு அறிந்தவர். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரதிபலனாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுது. அவ்வொப்பந்தத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறித்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாகக்கொண்டு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்குச் செயல்வடிவம் வழங்குதல் எனும் பெயரில் இலங்கை அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தமும், அதனூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையும் ஓர் ஒற்றையாட்சி வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட முறைமையாகவே காணப்படுகின்றது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் தாற்பரியத்தையும், ஈழத்தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டையும் மிகத் தந்திரமாக நிராகரிக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக இந்த மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இலங்கையின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் மாகாணசபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படமுடியாது என்றும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றும் இலங்கையின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாகத் தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரைவானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை விடவும் மிகப் பலவீனமானதாகும். இந்நிலையில் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரான நீங்களும் மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக புதிய அரசியலமைப்பில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இப்போது பொருளாதார ரீதியில் வீழ்ச்சிகண்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியமாகும். அதுமாத்திரமன்றி தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும், தொடர்பாடலையும் கட்டியெழுப்பாமல் பொருளாதார வளர்ச்சியை அடைவதென்பது இலங்கைக்கு சவாலானதாகவே இருக்கும். ஆகவே இலங்கைமீது கணிசமான அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழர்கள் விரும்பும் மேற்படி தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்கமுடியும் என நம்புகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233777

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

1 week 3 days ago
வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் ! Published By: Digital Desk 1 19 Dec, 2025 | 10:19 AM வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/233785

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

1 week 3 days ago

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

Published By: Digital Desk 1

19 Dec, 2025 | 10:19 AM

image

வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20251219_080149.jpg

IMG_20251219_083935.jpg

IMG_20251219_075904.jpg

https://www.virakesari.lk/article/233785

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 week 3 days ago
கிளிநொச்சி A9 வீதியின் ஓராமாக அமைந்திருந்த வேறொரு விதமான மாவீரர் நினைவாலயம். 27-11-2007 | இது பாண்டியன் சுவையூற்று என்று நினைக்கிறன்... சரியாக ஞாபகமில்லை!

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 week 3 days ago
பாகம் - 18 26.11.1990 கரிகாலனுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் யோகன் வந்தார். மட்டக்களப்புப் பிராந்தியத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். ‘பொதுமக்களின் இரண்டு ட்றக்ரர்களுக்கு இராணுவம் சுட்டுவிட்டது என்றார். என்ன நடந்தது? என்று கேட்டேன், 'தமது பொருள்களை எடுத்து வர ஊருக்குள் போனபோது இராணுவம் சுட்டு விட்டது' என்றார். ‘எந்த இடத்தில்' என்று கேட்டேன் 'வந்தாறுமூலை அம்பலத்தடியில்' என்றார். 'பொதுமக்களுக்கு ஏதாவது...’ என்று கேட்டேன் ‘அதைப்பற்றி தெரியவில்லை’ என்றார். மீண்டும் அடுத்த நாள் (03-10-90) அகதிகளைப்பார்க்கப் புறப்பட்டோம். அன்று செல்லும் குழுவுக்கு மட்டக் களப்பு அரசியல் பொறுப்பாளர் விசு தலைமை தாங்கினார். புறப்படும்போது பொம்மர்கள் வந்தன. எனவே ஒரு இடத்தில் தங்கிவிட்டோம். பொம்மர்களின் குழப்படி முடிந்தவுடன் மீண்டும் புறப்பட்டோம். வழியில் சந்தித்தவர்களிடம் எங்கே பொம்மர் தாக்கியது என்று விசாரித்தோம். இலுப்பையடிச்சேனை, களங்காட்டுமுனை ஆகிய பகுதிகளில் தான் தாக்குதல் நடந்ததாகவும் நாலு மாடுகள் இறந்ததாகவும் தெரிவித்தனர். சிவத்தப்பாலம் என்னும் இடத்தை அடைந்தோம். இந்த இடத்திற்குப் பக்கத்தில் ‘மீசைக்காரர்’ என்று அழைக்கப்படும் ஒருவர் எனக்குப் பரிச்சயமானவர். வயதானாலும் திட காத்திரமானவர். நான் அடிக்கடி அவரிடம் செல்வதுண்டு. எனவே ‘மீசைக்காரரிடம் போய்வருவோம்’ என்றேன். ‘அவர் இப்போது உயிரோடு இல்லை. இந்திய இராணுவத்தின் காலத்தில் அவரைக கொன்றுவிட்டார்கள்’ என்றார் யோகன். என்ன நடந்தது?' என்றுகேட்டேன். ‘இந்திய இராணுவம் பிரதான பாதையை அண்டிய கிராமங்களில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கிய சமயம் பயத்தினால் ஓடிய மக்கள் இவரது வாடியில் தமது ரீ.வி. போன்ற பொருட்களை வைத்துவிட்டு காட்டுக்குள் ஓடினர். இந்திய இராணுவத்தினர் இவரது வாடிக்கு வந்த சமயம் எல். ரி, ரியின் ரீவியா’ என்று கேட்டனர். இவர் ‘இல்லை’ யென்றார். இவரை அடிக்க முயன்றனர். ‘நீ அடித்தால் நானும் அடிட்பேன்’ என்றார். ஒருவன் அடித்தான், அடித்த இராணுவத்தை இடுப்பில் பிடித்து தலை கீழாக குத்தினார் மீசைக்காரர். அவரை அடித்தே கொன்று விட்டனர் இந்திய இராணு வத்தினர்’ என்றார். இதைப்போல எத்தனை விடயங்கள் தான் வெளியுல்கிற்குத் தெரியாமல் இருக்கின்றன. மீசைக்காரரின் வாடியைப் பார்த்தேன். சூழ்நிலை அமைதியாக இருந்தது. அந்து கம்பீரமான குரலை இனிக் கேட்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்து. அவரது அன்புக்கு பாத்திரமான மாடுகள் நிமிர்ந்து பார்த்தன. பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி புறப்பட்டேன். போகும்போது விசுவிடம் “மட்டக்களப்பு அகதிகளின் உணவு நிலைமை என்ன மாதிரி?” என்று கேட்டேன். “கொஞ்ச நாட்களுக்கு சமாளிப்பார்கள். அதன் பிறகு தான் பெரும் உணவுப் பஞ்சம் வரவிருக்கிறது” என்றார். “அந்த கொஞ்ச நாட்களும் எப்படிச் சமாளிப்பார்கள்” என்று கேட்டேன். அறுவடை செய்த வயல்களில் கதிர் பொறுக்குகிறார்கள். அறுவடை செய்யப்பயந்து வெட்டப்படாமலிருக்கும் வயல்களில் யானைகள் மிதித்து சேதம் பண்ணியிருக்கின்றன. அந்த வயல்களிலும் போய் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகுதான் சிரமம். பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கும்” என்றார். நிவாரண உதவிகள் என்னமாதிரி? என்று கேட்டேன். “தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் அதிலும்கூட முஸ்லிம்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது” என்றார். ஏன் அரசாங்க அதிபர் தமிழர் தானே? ஏன் அவரால் இயன்றளவு செய்யமுடியாதா?” என்று கேட்டேன். அரச அதிபர் தமிழர்தான். ஆனால் அவர் ஒரு பொம்மை மாதிரி இருக்கவேண்டியது தான். நடைமுறையில் அதிகாரம் அவரிடம் இல்லை. ஒரு முஸ்லிம் உதவி அரசாங்க அதிபரிடம் தான் என்றார். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கேட்டேன். நிவாரணத்துக்கென வாங்கும் அரிசியை காத்தான்குடியிலுள்ள தனது மைத்துனனின் அரிசி ஆலையில் மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது அவரது மில்லில் ஒரு மூட்டைக்கு மூட்டைக்கு ஆறு கிலோ அரிசி குறைவு இதை யார் எதிர்த்துக் கேட்கமுடியும். நிறுத்து தரும்படி கேட்க கூட்டுறவாளர்களுக்கு பயம், மூட்டைக்கு ஆறு கிலோ என்றால் அதை எப்படி; எந்தக் கணக்கில் பகிர்ந்தளிப்பது என்று கூட்டுறவுச் சங்கங்களும் கிராம சேவையாளர்களும் திணறுகின்றனர். இதே நிலைமை கூட சில நாட்களாகத்தான். அதற்கு முதல் எந்த உதவிகளும் இல்லை என்றார். உலகத்தை ஏமாற்ற நிவாரணம் கொடுக்கிறோம் என்று அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது. அந்த நிவாரணத்தில் கூட மூட்டைக்கு ஆறுகிலோ முஸ்லிம்களின் அதிகாரத்துக்குப் போகவேண்டிய நிலை நிலவுகிறது. “முஸ்லிம்களின் நிவாரணங்கள் என்னமாதிரி” என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. அரசு இவர்கள் விடயத்தில் விசேட அக்கறை எடுக்கிறது. சண்டை தொடங்கியதும் நகரத்தில் இருந்த முஸ்லிம் வீடுகளுக்கு இராணுவம் சென்று உங்களை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று கூறி வெபர் அரங்குக்கும் அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பி முஸ்லிம்கள் அகதிகளாகின்றனர் என்று உலகிற்கு பிரச்சாரப்படுத்தி தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பார்க்கிறது என்றார். “அரசியல் நோக்கங்களென்றால்.... என்றேன். 'இங்சேமுஸ்லிம்கள் அகதிளாகின்றனர் என்று முஸ்லிம் நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திதான் உதவிகள் பெற முனைகிறது ஸ்ரீலங்கா அரசு” என்றார். தொடர்ந்து முஸ்லிம்களோ இராணுவமோ இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும், ஆனால் ரெலோவினர் செய்வதை நீங்கள் கேட்டால்" என்றார் "சொல்லுங்கள்'' என்றேன். (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 week 3 days ago
பாகம் - 17 23.11.1990 அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றோம். வழியில் ஒரு மரத்தடியில் சிலர் படுத்திருந்தார்கள். சில மூட்டை முடிச்சுக்களும் காணப்பட்டன. அவர்களை அணுகினோம். அங்கிருந்த பெண்மணியிடம் “ஏனம்மா ஏதாவது பள்ளிக்கூடத்திலோ, அல்லது யாரிடமாவது உதவிபெற்று கொட்டிலோ குடிசையோ அமைத்து இருக்கலாம் தானே? இந்த மாதிரி ஏன் மரத்துக்குக் கீழ் படுத் திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் “பள்ளிக்கூடங்கள் எல்லாம் நிறைந்து விட்டன. எங்களுக்கு இனிமேல் தான் வாடியடிக்கவேண்டும். அதுக்கு வசதியில்லை. எங்களுடைய வீடு வாசலெல்லாம் இழந்து இப்படி அலைய வேண்டியிருக்கிறது” என்றார் அவர். ஏனம்மா உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என்று விசாரித்தேன். ‘செங்கலடி' என்றார். தொடர்ந்து "இப்போது அது வீடாக இருக்குமோ என்பது சந்தேகமே" என்றார். “வீட் டுக்கு என்ன நடந்தது?" என்றேன். அப்போது அங்கே இருந்த ஒரு பெரியவர் இடையே குறுக்கிட்டார். “இராணுவம் நகருக்குள் புகும்போது கூடவே வெற்று லொறிகளும் வரும்” என்றார். “வெற்று லொறிகளா, எதற்கு?” என்றேன், ஸ்டிக்கரோடு வரும் இராணுவத்துக்கு சாமான் ஏற்றத்தான்” என்றார். “கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்” என்றேன். “இராணுவம் வரும் போது கூட்டங் கூட்டமாகத்தான் வீடுகளுக்குள் வரும். ஒவ்வொரு இராணுவத்தினரும் தமது பெயரைக் கொண்ட ஸ்டிக்கர்களைக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொருள்களில் தனக்குத் தேவை யான பொருள்களின் மீது தமது ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டியதுதான். அப்டி ஓட்டப்படும் பொருள்கள் மீது மற்றவர் உரிமை கொண்டாட முடியாது. ஸ்டிக்கர் ஒட்டி முடிந்ததும் லொறியை அழைப்பார்கள். லொறியில் வருபவர்கள் பொருள்களை ஏற்றிக் கொண்டு போவார்கள் என்றார். “இது இராணுவத்தினரின் சொந்தத் தேவைக்குத்தான் போகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். அதற்கு அவர் “எனது நண்பர் ஒருவர் உயர் பதவியில் உள்ளார். அவருக்குச் சிங்களம் நன்றாகத் தெரியும். இவரது வீட்டிற்கு வந்த இராணுவத்தினரில் ஒருவன் இவரிடம் 'உமக்கு சிங்களம் பேசத் தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான். இவர் ‘தெரியாது’ என்றார் அதைக் கேட்டதும் அவன் முகம் பிரகாசமடைந்தது. அவரது வீட்டிலிருந்த தொலைபேசியை எடுத்து எவருடனோ தொடர்புகொள்ள முயற்சித்தான் - நீண்ட நேர பிரயத்தனத்தின் பின் அவனுக்குத் தொடர்பு கிடைத்தது. பேசினான்: ‘அப்பா நான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தேன் - வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் சேகரித்து விட்டேன் - தங்கச்சியிடம் சொல்லுங்கள் அவள் கேட்ட தங்கநகைகள்தான் இன்னும் சேகரிக்க முடியவில்லை. வெகு விரைவில் அவற்றையும் சேகரித்துவிடுவேன் என்றான். முந்தித்தான் சிங்களவன் மொக்கன் என்று சொன்னோம். ஆனால் அவன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடிக்கிறான்” என்றார். “எதைக் கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். 1977ஆம் ஆண்டுக் கலவரத்தில் ஆட்களைக் கொல்வதிலும், வீடு வாசல் பொருள்களை எரிப்ப திலுமாக தாறுமாறாக நடந்து கொண்டான். இந்த முறை தமிழரைக் கொல்லும் பொறுப்பை முஸ்லிம்கள் கையில் ஒப்படைத்து, அவர்கள் தான் உங்களைக் கொல்கிறார்கள் என்ற தோற்றத்தை எமக்கு ஏற்படுத்துகிறான், அதே வேளை வீடுகளிலுள்ள பொருள்களைப் பத்திரமாகத் தமது வீடுகளுக்கு ஏற்றி அனுப்புகிறான்” இந்தப் பொருட்களை ஒரு இராணுவச் சிப்பாயால் சேகரிக்க, எத்தனை வருடம் பிடிக்கும்? தமிழரிடம் இருந்து எடுப்பதெல்லாம் உங்களுக்குத்தாள் என்று சொன்னால் தமது வாழ்க்கைத்தரம் விரைவில் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இராணுவத்தில் சேர முயற்சிப்பார்கள். சி ஏற்கனவே வீணாகக் சாகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் இராணுவத்தினரை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது” என்றார். ‘சரி முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன். ‘இளனி குடிப்பவன் குடிக்க கோம்பை சூப்புபவனின் நிலைதான் இவர்களது நிலை ரி.வி., டெக், றேடியோ போல விலை உயர்ந்த பொருள்களை இராணுவத்தினர் எடுத்துக் கொண்டு போக எஞ்சியிருக்கும் பொருள்களையும் நிலை, ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதிலும்தான் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்றார். சரி தமிழரைக் கொல்வதையும், பெண்களைக் கற்பழிப்பதையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். சிங்களவன் இவர்களைச் சரியாக ஏமாற்றிவிட்டான். யாருடைய ஏவுதலாலோ இவர்கள் தாறுமாறாக நடந்து கொள்கின்றனர். தமிழர்களைத்தானே கொல்கிறார்கள், தமிழ் பெண்களைத்தானே கற்பழிக்கிறார்கள் என்று முஸ்லிம் சமூகம் தற்போது அசட்டையாக இருக்கலாம். நாளை இது இவர்களையே சூழும்' என்றார். 'அப்படியென்றால்? என்றேன். தமிழர்களைக் கொலை செய்துவிட்டு தமிழ்ப் பெண்களைக் கற்பழித்து விட்டு கொட்டியாவைத்தான் கொன்றோம் என்றபோது மனிதாபிமானம், தர்மம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு இராணுவத்தினரின் தீரச்செயலைப் புகழ்ந்தார்கள் சிங்களவர்கள். கொலைசெய்தும், கற்பழித்தும் பழக்கப்பட்ட இராணுவம் பின்னர் ஜே. வி, பி. பிரச்சினையில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர் களைக் கொன்றபோது, ரயர் போட்டுக் கொளுத்தியபோது தான் தமது தவறை உணர்ந்து கொண்டார்கள். அதேபோலத்தான் இன்று அல்லாவைத் தொழாத தமிழர்களைக் கொல்வது பாவமில்லை என முஸ்லிம் மக்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கொலைசெய்து பழக்கப்பட்ட, கற்பழித்துப் பழக்கப்பட்ட முஸ்லிம் காடையர் நாளை தமது இனத்தில் இவ்வாறானசெயல்களில் ஈடுபடும்போதுதான் தமது தவறை உணர்வார்கள். அப்போது அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்க மாட்டார்கள் என்றார். (தொடரும்)

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 week 3 days ago
சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.

தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.

1 week 3 days ago
இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும். அமெரிக்காவே வருக வருக.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 3 days ago
உலக இனங்களின் வரலாறுகளை திரும்ப திரும்ப நாம் எடுத்து பேசக்கூடாது. அப்படி பேச வெளிக்கிட்டால் குடியேறிய அமெரிக்கனும் கனேடியனும் அவுஸ்ரேலியனும் எங்கே போய் மீள குடியேறுவதாம்? அமெரிக்கா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது. கனடா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது அவுஸ்ரேலியா பூர்வீக தொல்குடிகளுக்கு சொந்தமானது. முதலில் நாகரீகமடைந்த உலகினர் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கட்டும்.அவர்களுக்குள்ளேயே சீழ் பிடித்த பிரச்சனைகள்.இதில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பிரிவினைகளுக்கு தீர்வு காண்பார்களாம்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 3 days ago
உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 3 days ago
இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 3 days ago
இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

1 week 3 days ago
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு! written by admin December 18, 2025 மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன. 🔍 சம்பவத்தின் விபரங்கள்: இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 🚩 பின்னணி: கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 💬 மீனவர்களின் கவனத்திற்கு: கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும். #SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue https://globaltamilnews.net/2025/224471/

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

1 week 3 days ago

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

written by admin December 18, 2025

srilankan-boats-roundup-in-malteives.jpg

மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

🔍 சம்பவத்தின் விபரங்கள்:

  • இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

  • நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

🚩 பின்னணி:

கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

💬 மீனவர்களின் கவனத்திற்கு:

கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும்.

#SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue


https://globaltamilnews.net/2025/224471/