Aggregator

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months 2 weeks ago
அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.

யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்

3 months 2 weeks ago
18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/230670

யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்

3 months 2 weeks ago

18 Nov, 2025 | 12:31 PM

image

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்  101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி  காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது.

கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/230670

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months 2 weeks ago
இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் 18 Nov, 2025 | 12:28 PM மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/230668

இஷாரா செவ்வந்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளது

3 months 2 weeks ago
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது Nov 18, 2025 - 12:02 PM சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi474yvb01qio29nqzuhha26

இஷாரா செவ்வந்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளது

3 months 2 weeks ago

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது

Nov 18, 2025 - 12:02 PM

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். 

மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmi474yvb01qio29nqzuhha26

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

3 months 2 weeks ago
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு : 931 பேர் கைது! Published By: Digital Desk 1 18 Nov, 2025 | 11:02 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 677 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 177 கிராம் ஐஸ், 63 கிலோகிராம் 495 கிராம் கஞ்சா, 23,097 கஞ்சா செடிகள், 273 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 49 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1357 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 931 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 34 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இருவரும்; கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 936 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 64 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230655

பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த் Nov 18, 2025 - 01:56 PM பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4b80oa01qqo29n1uakqsyu

ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - சுந்தர் பிச்சை

3 months 2 weeks ago
Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன." "நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால்" ஏஐ கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் "இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" "எங்களால் முடிந்த அளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன," https://www.virakesari.lk/article/230693

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

3 months 2 weeks ago
எங்கெல்லாம் பணவசதி பெருகிய மக்களும் அறியாமையும் சேர்ந்து தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயப்பன் மட்டுமல்ல எல்லா சாமிகளும் எழுந்தருளுவார்கள்

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

3 months 2 weeks ago
ஐயப்ப சாமி உண்மையோ பொய்யோ தெரியாது நண்பர் ஒருத்தர் கடந்த கொர்னோ காலத்தை விட 28 வருடமாய் சென்று வருகிறார் அப்படி சென்று வரும்போது அவரின் சுகர் பிரசர் போன்றவை கட்டுப்பாட்டில் ஒரு சில மாதம்களுக்கு இருக்கும் காரணம் அங்குள்ள காலநிலை நடந்து திரிந்து மலை ஏறுதல் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் .ஆனால் இன்னும் சில புதிய சாமிகளின் அலப்பறை தாங்க முடியாது விமானத்தில் செல்லும்போது விமானத்தின் கதிரையில் இருக்காமல் தரையில் வாழையிலை போட்டு கறுத்த உடுப்புடன் கூட்டமாக உணவு உண்ணுகிறார்கள் அவர்களுக்கு யார் அப்படி செய்ய சொல்லிய வர்கள் என்று தெரியவில்லை .

திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்

3 months 2 weeks ago
வெள்ளைக்காரிக்கு... அந்தரங்க உறுப்பை காட்டியவர், மொட்டை அடித்து... தனது முக அடையாளத்தை மாற்றியும் பயனில்லை!! கண்டு பிடித்து விட்டார்கள். 😂 குட் லக், நெக்ஸ்ட் ரைம்.

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

3 months 2 weeks ago
நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன். முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே

பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை

3 months 2 weeks ago
அதுவம் ஒரு காரனம்.மற்றது மத்திய கிழக்கிலிருந்து கிழமைக்கு இரன்டு விமானமாவது வந்து பலாலியில் ரச் பண்னி போனாலே தெரியும் லாபமா நட்டமா என்று.பிரச்சனை அவர்களுக்கு விருப்பம் இல்லை .அவளவு தான்.

இனித்திடும் இனிய தமிழே....!

3 months 2 weeks ago
Chandran Veerasamy · காதல் என்ற வார்த்தை இருக்கவே கூடாது .. கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் போட்ட கண்டிஷன்!! அப்படி வந்தது தான் இந்த பாட்டு காதல் பாடல் என்றாலே அந்த பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால் கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்ற போற்ற வைக்கிறது. ’பாவ மன்னிப்பு’ என்ற படத்திற்காக ஒரு காதல் பாடல் வேண்டும் என்று இயக்குனர் பீம்சிங் தெரிவித்திருந்தார். இந்த பாடல் அனைத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த நிலையில், அந்த பாடலுக்கு டியூன் போட்ட எம்எஸ் விஸ்வநாதன், காதல் என்ற வார்த்தை இல்லாமல் எனக்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்தார். கவியரசு கண்ணதாசன் ஒரு சில வினாடிகள் மட்டுமே யோசித்தபோது அவருக்கு உடனே பகவத் கீதையில் உள்ள மாதங்களில் அவள் மார்கழி எழுதிய வரி ஞாபகத்திற்கு வந்தது. உடனே அதை மனதில் வைத்து காதலையும், காதலியையும் உவமை படுத்தி ஒரு பாடலை எழுதினார். இதுதான் ’காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல். அந்த பாடல் இதோ: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை பறவைகளில் அவள் மணிப் புறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி கண் போல் வளர்ப்பதில் அன்னை கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞனாக்கினாள் என்னை இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வசந்தம், ஓவியம், மார்கழி, மல்லிகை, மணிப்புறா, தாலாட்டு, மாங்கனி, தென்றல் ஆகியவை காதலையும் காதலியையும் குறிக்கும் என்றாலும் ஒரு வார்த்தை கூட இந்த பாடலில் காதல் என்ற சொல் இருக்காது. இந்த நிலையில்தான் எம்ஜிஆர் அவர்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி கொண்டிருந்தபோது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும் நவரசம் சொட்டும் வகையில் காதல் அந்த பாடலில் இருக்க வேண்டும், ஆனால் காதல் என்ற வார்த்தை வரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எழுதிய பாடல் தான் ’அவள் ஒரு நவரச நாயகன்’. இந்த பாடலிலும் காதல் மற்றும் காதலியை உவமைப்படுத்த கண்ணதாசன் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் இதோ. அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம் மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை கார்த்திகை திங்களின் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் அருசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம் ஊடல் அவளது வாடிக்கை என்னைத் தந்தேன் காணிக்கை மேற்கண்ட இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் விரும்பி கேட்ட பாடலாக இருந்தது. இந்த பாடல்களை ஆழ்ந்து கேட்டால் இன்றளவும் இதில் இருக்கும் உவமை ஆச்சரியத்தை வரவழைக்கும். Voir la traduction கண்ணதாசன் ஒரு தமிழ்க்கடல் .........! 🙏

🌾“நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”

3 months 2 weeks ago
🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil அமைதியான வடக்கின் கரைகளிலும் காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது அது புனிதமானது, நிலையானது அது மையால் எழுதப்படாத நாள் அது நவம்பர் இருபத்தியேழு! மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம் கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்! பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள் வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள் கதிரவனுடன் உதித்த விவசாயிகள் தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள் பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள் வாழ, பேச, வாக்களிக்க, சமமான மனிதர்களாக மதிக்கப்பட சாதாரண உரிமைகளைக் கேட்கும் சாதாரண மனிதர்களே இவர்கள்! அவர்களின் அமைதியான நம்பிக்கைகளை அரசின் இரும்புக்கரம் உடைத்தது அவர்களின் அடையாளத்தை அச்சுறுத்தியது அவர்களின் குரலை பயங்கரவாதியாக்கியது அவர்களின் இருப்பை நசுக்கியது! நீண்ட போர் அரசு திணித்தது முப்பது வருடங்கள் இடம்பெயர்வு எறிகணை வீச்சு, வீடுகள் எரிந்தன குடும்பங்கள், நிலங்கள் உடைந்தன கல்லறைகள் முளைத்தன ஆயிரம்ஆயிரம் மண்ணின் கீழ் அமைதியாக மறைந்தன! வீழ்ந்த ஒவ்வொரு போராளிக்கும் பருவம் அடையாத பிஞ்சுக் குழந்தைக்கும் கற்பு பறிகொடுத்து மரணித்த பெண்ணுக்கும் இரவில் கடத்தப்பட்ட ஒவ்வொரு அப்பாவிக்கும் இப்போது ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது! யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை டொராண்டோவிலிருந்து லண்டன் வரை பாரிஸிலிருந்து சிட்னி வரை இதயத்தில் நிறுத்தி விளக்கு ஏற்றி தமிழர் வணங்கும் நாளிது! போருக்காக அல்ல பழிவாங்குவதற்காக அல்ல கண்ணியத்திற்காக நீதிக்காக உலகம் பார்க்க மறுத்தவர்களுக்காக துக்கப்படுவதற்கான உரிமை இது! விளக்குகள் ஒளிர்கின்றன, உண்மைகள் புலப்படுது தேசத்தின் ஒற்றுமை குலைக்க முடியாது இறந்தவர்களை வணங்க தடுக்க முடியாது சமத்துவம் மறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டாலும் அணைக்கப்படாத சுடராக ஓங்கி எரியும்! நவம்பர் 27 அரசியலல்ல, அன்பைப் பற்றியது தாய்நாட்டிற்காக, மொழிக்காக, தொலைந்து போன குழந்தைகளுக்காக, அழிக்கப்பட்ட உண்மை வரலாற்றுக்காக ஒரு மக்களின் தாய்நாட்டின் அன்பு! ஒவ்வொரு விளக்கும் சிமிட்டும் போதும் உலகம் அழைக்கப்படுகிறது அப்பாவிகள் வணங்கப் படுகிறார்கள் பெயர்கள் பூச்சிக்கப் படுகின்றன! ஏனென்றால் ..... நினைவாற்றல் - ஒரு எதிர்ப்பின் செயல் ஒளி - நீதியின் ஒரு வடிவம் நினைப்பது - அழிக்கப்படுவதை மறுப்பது! சவக்குழிகள் மறைந்திருக்கும் இடத்திலும், குரல்கள் மௌனமாக்கப்பட்ட இடத்திலும், உயிர்கள் திருடப்பட்ட இடத்திலும் ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் பொன்னான, உறுதியான, நித்தியமான விளக்குகள் இன்று எரிகின்றன! தீபஒளியில் வாக்குறுதி வாழ்கிறது ஒரு நாள் உண்மை எழும் சிதறப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் அதே சூரியனின் கீழ் சமமாக நிற்பார்கள்! அதுவரை, ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் - நாங்கள் நினைவில் கொள்கிறோம் நாங்கள் தீபம் ஏற்றுகிறோம் நாங்கள் பேசுகிறோம் நாங்கள் மதிக்கிறோம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🌾 “November 27 — Lamps of Memory On the quiet shores of the North, and the wind-swept plains of the East, a date returns each year— solemn, unbroken, undefeated! November 27. A day written not in ink, but in blood, tears, and the breath of a people who refused to disappear! They were sons who dreamed of universities, daughters who whispered poems in classrooms, farmers who rose with the sun, mothers who hum lullabies to sleeping children, fathers who bent over fields of palmyra shadow— ordinary lives asking for ordinary rights: to live, to speak, to vote, to be treated as equal human beings! But their peaceful hopes met the iron fist of a state that saw their identity as a threat, their voice as a rebellion, their existence as something to erase! And so the long war came— thirty harrowing years of displacement, shelling, burning homes, broken families, broken lands, and a thousand unmarked graves hidden beneath the soil of silence! For every fallen fighter, for every child who never reached adulthood, for every woman whose final cry vanished in the smoke, for every innocent man taken in the night— a lamp now glows! And the Tamil people, wherever they are— from Jaffna to Batticaloa, from Toronto to London, from Paris to Sydney— pause, remember, and pray! Not for war. Not for revenge. But for dignity. For justice. For the right to grieve openly for those the world refused to see! The lamps illuminate more than memory. They expose the truth: that a nation cannot kill its way to unity, that a people cannot be forced to forget their dead, that equality denied returns again and again as the unextinguished flame! November 27 is not about politics— it is about love. The love of a people for their homeland, their language, their lost children, their erased history! And as each lamp flickers, the world is invited— at last— to understand why Tamils bow their heads and whisper the names of the unreturned! For memory is an act of resistance. Light is a form of justice. And to remember is to refuse erasure! So the lamps burn on— golden, steadfast, eternal— in every Tamil home across the globe. They stand where graves were hidden, where voices were silenced, where lives were stolen! And in their glow lives a promise: that one day, the world will hear, the truth will rise, and the Tamil people— scattered, scarred, but unbroken— will stand equal under the same sun that once witnessed their suffering! Until then, we remember. We light. We speak. We honour. Every November 27, and every day after! Kandiah Thillaivinayagalingan, Athiady, Jaffna. துளி/DROP: 1904 [🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” https://www.facebook.com/groups/978753388866632/posts/32427541396894421/?

🌾“நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”

3 months 2 weeks ago

🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil



அமைதியான வடக்கின் கரைகளிலும்
காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது
அது புனிதமானது, நிலையானது
அது மையால் எழுதப்படாத நாள்
அது நவம்பர் இருபத்தியேழு!



மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம்
கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்!
பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள்
வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள்
கதிரவனுடன் உதித்த விவசாயிகள்
தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள்
பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள்
வாழ, பேச, வாக்களிக்க,
சமமான மனிதர்களாக மதிக்கப்பட
சாதாரண உரிமைகளைக் கேட்கும்
சாதாரண மனிதர்களே இவர்கள்!

அவர்களின் அமைதியான நம்பிக்கைகளை
அரசின் இரும்புக்கரம் உடைத்தது
அவர்களின் அடையாளத்தை அச்சுறுத்தியது
அவர்களின் குரலை பயங்கரவாதியாக்கியது
அவர்களின் இருப்பை நசுக்கியது!

நீண்ட போர் அரசு திணித்தது
முப்பது வருடங்கள் இடம்பெயர்வு
எறிகணை வீச்சு, வீடுகள் எரிந்தன
குடும்பங்கள், நிலங்கள் உடைந்தன
கல்லறைகள் முளைத்தன ஆயிரம்ஆயிரம்
மண்ணின் கீழ் அமைதியாக மறைந்தன!

வீழ்ந்த ஒவ்வொரு போராளிக்கும்
பருவம் அடையாத பிஞ்சுக் குழந்தைக்கும்
கற்பு பறிகொடுத்து மரணித்த பெண்ணுக்கும்
இரவில் கடத்தப்பட்ட ஒவ்வொரு அப்பாவிக்கும்
இப்போது ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது!

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை
டொராண்டோவிலிருந்து லண்டன் வரை
பாரிஸிலிருந்து சிட்னி வரை
இதயத்தில் நிறுத்தி விளக்கு ஏற்றி
தமிழர் வணங்கும் நாளிது!

போருக்காக அல்ல
பழிவாங்குவதற்காக அல்ல
கண்ணியத்திற்காக நீதிக்காக
உலகம் பார்க்க மறுத்தவர்களுக்காக
துக்கப்படுவதற்கான உரிமை இது!

விளக்குகள் ஒளிர்கின்றன, உண்மைகள் புலப்படுது
தேசத்தின் ஒற்றுமை குலைக்க முடியாது
இறந்தவர்களை வணங்க தடுக்க முடியாது
சமத்துவம் மறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டாலும்
அணைக்கப்படாத சுடராக ஓங்கி எரியும்!

நவம்பர் 27 அரசியலல்ல, அன்பைப் பற்றியது
தாய்நாட்டிற்காக, மொழிக்காக,
தொலைந்து போன குழந்தைகளுக்காக,
அழிக்கப்பட்ட உண்மை வரலாற்றுக்காக
ஒரு மக்களின் தாய்நாட்டின் அன்பு!

ஒவ்வொரு விளக்கும் சிமிட்டும் போதும்
உலகம் அழைக்கப்படுகிறது
அப்பாவிகள் வணங்கப் படுகிறார்கள்
பெயர்கள் பூச்சிக்கப் படுகின்றன!

ஏனென்றால் .....

நினைவாற்றல் - ஒரு எதிர்ப்பின் செயல்
ஒளி - நீதியின் ஒரு வடிவம்
நினைப்பது - அழிக்கப்படுவதை மறுப்பது!

சவக்குழிகள் மறைந்திருக்கும் இடத்திலும்,
குரல்கள் மௌனமாக்கப்பட்ட இடத்திலும்,
உயிர்கள் திருடப்பட்ட இடத்திலும்
ஒவ்வொரு தமிழ் வீட்டிலும்
பொன்னான, உறுதியான, நித்தியமான
விளக்குகள் இன்று எரிகின்றன!

தீபஒளியில் வாக்குறுதி வாழ்கிறது
ஒரு நாள் உண்மை எழும்
சிதறப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்
அதே சூரியனின் கீழ் சமமாக நிற்பார்கள்!

அதுவரை,

ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும்
அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் -
நாங்கள் நினைவில் கொள்கிறோம்
நாங்கள் தீபம் ஏற்றுகிறோம்
நாங்கள் பேசுகிறோம்
நாங்கள் மதிக்கிறோம்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

🌾 “November 27 — Lamps of Memory

On the quiet shores of the North,
and the wind-swept plains of the East,
a date returns each year—
solemn, unbroken, undefeated!

November 27.

A day written not in ink,
but in blood, tears, and the breath
of a people who refused to disappear!

They were sons who dreamed of universities,
daughters who whispered poems in classrooms,
farmers who rose with the sun,
mothers who hum lullabies to sleeping children,
fathers who bent over fields of palmyra shadow—
ordinary lives
asking for ordinary rights:
to live, to speak, to vote, to be treated as equal human beings!

But their peaceful hopes
met the iron fist of a state
that saw their identity as a threat,
their voice as a rebellion,
their existence as something to erase!

And so the long war came—
thirty harrowing years
of displacement, shelling, burning homes,
broken families, broken lands,
and a thousand unmarked graves
hidden beneath the soil of silence!

For every fallen fighter,
for every child who never reached adulthood,
for every woman whose final cry vanished in the smoke,
for every innocent man taken in the night—
a lamp now glows!

And the Tamil people, wherever they are—
from Jaffna to Batticaloa,
from Toronto to London,
from Paris to Sydney—
pause, remember, and pray!

Not for war.
Not for revenge.
But for dignity.
For justice.
For the right to grieve openly
for those the world refused to see!

The lamps illuminate more than memory.
They expose the truth:
that a nation cannot kill its way to unity,
that a people cannot be forced
to forget their dead,
that equality denied
returns again and again
as the unextinguished flame!

November 27 is not about politics—
it is about love.
The love of a people
for their homeland,
their language,
their lost children,
their erased history!

And as each lamp flickers,
the world is invited—
at last—
to understand why Tamils bow their heads
and whisper the names
of the unreturned!

For memory is an act of resistance.
Light is a form of justice.
And to remember
is to refuse erasure!

So the lamps burn on—
golden, steadfast, eternal—
in every Tamil home across the globe.
They stand where graves were hidden,
where voices were silenced,
where lives were stolen!

And in their glow lives a promise:
that one day, the world will hear,
the truth will rise,
and the Tamil people—
scattered, scarred, but unbroken—
will stand equal under the same sun
that once witnessed their suffering!

Until then,
we remember.
We light.
We speak.
We honour.
Every November 27,
and every day after!

Kandiah Thillaivinayagalingan,
Athiady, Jaffna.

துளி/DROP: 1904 [🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”
https://www.facebook.com/groups/978753388866632/posts/32427541396894421/?