Aggregator
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்
யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்
18 Nov, 2025 | 12:31 PM
![]()
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார்.
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
இஷாரா செவ்வந்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளது
இஷாரா செவ்வந்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளது
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது
Nov 18, 2025 - 12:02 PM
சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - சுந்தர் பிச்சை
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
இரசித்த.... புகைப்படங்கள்.
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
இனித்திடும் இனிய தமிழே....!
🌾“நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”
🌾“நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”
🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory” / In English & Tamil
அமைதியான வடக்கின் கரைகளிலும்
காற்றுவீசும் கிழக்கின் சமவெளிகளிலும்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேதி வருகிறது
அது புனிதமானது, நிலையானது
அது மையால் எழுதப்படாத நாள்
அது நவம்பர் இருபத்தியேழு!
மறைந்து போக மறுத்த மக்களின் இரத்தம்
கண்ணீராலும் சுவாசத்தாலும் எழுதப்பட்ட நாள்!
பல்கலைக்கழகங்களைக் கனவு கண்ட மகன்கள்
வகுப்பறைகளில் கவிதைகளைப் பேசும் மகள்கள்
கதிரவனுடன் உதித்த விவசாயிகள்
தாலாட்டுப் பாடல்கள் பாடும் தாய்மார்கள்
பனைமர நிழலின் வயல்களில் சாய்ந்த தந்தைகள்
வாழ, பேச, வாக்களிக்க,
சமமான மனிதர்களாக மதிக்கப்பட
சாதாரண உரிமைகளைக் கேட்கும்
சாதாரண மனிதர்களே இவர்கள்!
அவர்களின் அமைதியான நம்பிக்கைகளை
அரசின் இரும்புக்கரம் உடைத்தது
அவர்களின் அடையாளத்தை அச்சுறுத்தியது
அவர்களின் குரலை பயங்கரவாதியாக்கியது
அவர்களின் இருப்பை நசுக்கியது!
நீண்ட போர் அரசு திணித்தது
முப்பது வருடங்கள் இடம்பெயர்வு
எறிகணை வீச்சு, வீடுகள் எரிந்தன
குடும்பங்கள், நிலங்கள் உடைந்தன
கல்லறைகள் முளைத்தன ஆயிரம்ஆயிரம்
மண்ணின் கீழ் அமைதியாக மறைந்தன!
வீழ்ந்த ஒவ்வொரு போராளிக்கும்
பருவம் அடையாத பிஞ்சுக் குழந்தைக்கும்
கற்பு பறிகொடுத்து மரணித்த பெண்ணுக்கும்
இரவில் கடத்தப்பட்ட ஒவ்வொரு அப்பாவிக்கும்
இப்போது ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது!
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை
டொராண்டோவிலிருந்து லண்டன் வரை
பாரிஸிலிருந்து சிட்னி வரை
இதயத்தில் நிறுத்தி விளக்கு ஏற்றி
தமிழர் வணங்கும் நாளிது!
போருக்காக அல்ல
பழிவாங்குவதற்காக அல்ல
கண்ணியத்திற்காக நீதிக்காக
உலகம் பார்க்க மறுத்தவர்களுக்காக
துக்கப்படுவதற்கான உரிமை இது!
விளக்குகள் ஒளிர்கின்றன, உண்மைகள் புலப்படுது
தேசத்தின் ஒற்றுமை குலைக்க முடியாது
இறந்தவர்களை வணங்க தடுக்க முடியாது
சமத்துவம் மறுக்கப்பட்டு ஒடுக்கப் பட்டாலும்
அணைக்கப்படாத சுடராக ஓங்கி எரியும்!
நவம்பர் 27 அரசியலல்ல, அன்பைப் பற்றியது
தாய்நாட்டிற்காக, மொழிக்காக,
தொலைந்து போன குழந்தைகளுக்காக,
அழிக்கப்பட்ட உண்மை வரலாற்றுக்காக
ஒரு மக்களின் தாய்நாட்டின் அன்பு!
ஒவ்வொரு விளக்கும் சிமிட்டும் போதும்
உலகம் அழைக்கப்படுகிறது
அப்பாவிகள் வணங்கப் படுகிறார்கள்
பெயர்கள் பூச்சிக்கப் படுகின்றன!
ஏனென்றால் .....
நினைவாற்றல் - ஒரு எதிர்ப்பின் செயல்
ஒளி - நீதியின் ஒரு வடிவம்
நினைப்பது - அழிக்கப்படுவதை மறுப்பது!
சவக்குழிகள் மறைந்திருக்கும் இடத்திலும்,
குரல்கள் மௌனமாக்கப்பட்ட இடத்திலும்,
உயிர்கள் திருடப்பட்ட இடத்திலும்
ஒவ்வொரு தமிழ் வீட்டிலும்
பொன்னான, உறுதியான, நித்தியமான
விளக்குகள் இன்று எரிகின்றன!
தீபஒளியில் வாக்குறுதி வாழ்கிறது
ஒரு நாள் உண்மை எழும்
சிதறப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள்
அதே சூரியனின் கீழ் சமமாக நிற்பார்கள்!
அதுவரை,
ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும்
அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் -
நாங்கள் நினைவில் கொள்கிறோம்
நாங்கள் தீபம் ஏற்றுகிறோம்
நாங்கள் பேசுகிறோம்
நாங்கள் மதிக்கிறோம்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
🌾 “November 27 — Lamps of Memory
On the quiet shores of the North,
and the wind-swept plains of the East,
a date returns each year—
solemn, unbroken, undefeated!
November 27.
A day written not in ink,
but in blood, tears, and the breath
of a people who refused to disappear!
They were sons who dreamed of universities,
daughters who whispered poems in classrooms,
farmers who rose with the sun,
mothers who hum lullabies to sleeping children,
fathers who bent over fields of palmyra shadow—
ordinary lives
asking for ordinary rights:
to live, to speak, to vote, to be treated as equal human beings!
But their peaceful hopes
met the iron fist of a state
that saw their identity as a threat,
their voice as a rebellion,
their existence as something to erase!
And so the long war came—
thirty harrowing years
of displacement, shelling, burning homes,
broken families, broken lands,
and a thousand unmarked graves
hidden beneath the soil of silence!
For every fallen fighter,
for every child who never reached adulthood,
for every woman whose final cry vanished in the smoke,
for every innocent man taken in the night—
a lamp now glows!
And the Tamil people, wherever they are—
from Jaffna to Batticaloa,
from Toronto to London,
from Paris to Sydney—
pause, remember, and pray!
Not for war.
Not for revenge.
But for dignity.
For justice.
For the right to grieve openly
for those the world refused to see!
The lamps illuminate more than memory.
They expose the truth:
that a nation cannot kill its way to unity,
that a people cannot be forced
to forget their dead,
that equality denied
returns again and again
as the unextinguished flame!
November 27 is not about politics—
it is about love.
The love of a people
for their homeland,
their language,
their lost children,
their erased history!
And as each lamp flickers,
the world is invited—
at last—
to understand why Tamils bow their heads
and whisper the names
of the unreturned!
For memory is an act of resistance.
Light is a form of justice.
And to remember
is to refuse erasure!
So the lamps burn on—
golden, steadfast, eternal—
in every Tamil home across the globe.
They stand where graves were hidden,
where voices were silenced,
where lives were stolen!
And in their glow lives a promise:
that one day, the world will hear,
the truth will rise,
and the Tamil people—
scattered, scarred, but unbroken—
will stand equal under the same sun
that once witnessed their suffering!
Until then,
we remember.
We light.
We speak.
We honour.
Every November 27,
and every day after!
Kandiah Thillaivinayagalingan,
Athiady, Jaffna.
துளி/DROP: 1904 [🌾 “நவம்பர் 27 — நினைவுத் தீபங்கள்” / 🌾 “November 27 — Lamps of Memory”
https://www.facebook.com/groups/978753388866632/posts/32427541396894421/?