Aggregator
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் - பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு அழுத்தம் கொடுக்கின்றது பிரான்ஸ்
Published By: RAJEEBAN
28 MAY, 2025 | 02:33 PM
பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது.
பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார்.
இரு அரசுகள் தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது.
அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம்.
பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை.
இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது.
பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது.
கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை
மக்ரோனின் முன்னிலை
பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார்.
ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை.
இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார்.
இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார்.
இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை.
இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலை ; 240க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், சட்டத்தரணிகள் நீதியமைச்சருக்கு கடிதம்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலை ; 240க்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார், சட்டத்தரணிகள் நீதியமைச்சருக்கு கடிதம்
Published By: RAJEEBAN
29 MAY, 2025 | 02:21 PM
பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும், மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என 240க்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் மதகுருமாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள இவர்கள், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
நீதியமைச்சருக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து பரிந்துரைகளை கருத்துக்களை யோசனைகளை முன்வைக்குமாறு கோரும் பத்திரிகை அறிவிப்பு குறித்து (லங்காதீப 16-5-2025 இல் வெளியானது இலங்கையின் கரிசனை கொண்டுள்ள பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் பதிலளிக்கின்றோம்.
பொதுமக்களிற்கு தங்கள் கருத்துக்கள் யோசனைகள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு வெறுமனே இரண்டுவார கால அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் பொதுமக்களிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற மிகக்கடுமையான ஒடுக்குமுறை சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் தக்கவைக்காது என்ற வெளிப்படையான வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் என வெளியாகும் அறிக்கைகளும், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையும்,மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயல்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேசிய மக்கள் வழங்கிய வாக்குறுதி தற்போது ஆட்சியில் உள்ள கட்சியினால் மழுப்பப்படுகின்றது.
இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்களை பார்க்கும்போது இலங்கையின் பெரும்பான்மை நிர்வாக சாதனங்கள் , இனவெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலையில் எவ்வாறு சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விடயம் குறித்த அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த குழுவில் முக்கியமானவர்கள் உள்வாங்கப்படவில்லை, பெருமளவிற்கு அரசாங்க அதிகாரிகள் காணப்படுகின்றனர், இராணுவத்தினரும்,பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் காணப்படுகின்றனர், ஆனால் பாதிக்கப்ட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களோ தமிழ் முஸ்லீம் சமூகத்தினரோ இடம்பெறவில்லை.
இதன் காரணமாக இந்த குழு மக்களின் பார்வையில் எந்த நியாயதன்மையும் இல்லாததாக காணப்படுகின்றது, மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக,குறிப்பாக எங்கள் சமூகத்தில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளக்கூடிய அமைப்பாக இது காணப்படவில்லை.
ஈவிரக்கமற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மனித உயிர்களிற்கு ஏற்பட்ட பாரிய அளவு இழப்புகள், ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து நீதியமைச்சர் தீவிரமாக ஆராயவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ரப் பாடகர் வேடன்
ரப் பாடகர் வேடன்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
தபாலக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
தபாலக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
Published By: DIGITAL DESK 3
29 MAY, 2025 | 01:21 PM
தபாலக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை.
முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
இருவரது குரல் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.
ரப் பாடகர் வேடன்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது!
விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது!
விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பின்னர் சந்தேக நபரான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பயணி நீர்கொழும்பு தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.