3 months 2 weeks ago
நிலாவில் பாட்டி வடை சுடுகிறா அல்லது வெத்திலை இடிக்கிறா.😀
3 months 2 weeks ago
இரட்டையர்களில் அனேகமானோர் அழகாகவும் ஒரே மாதிரியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். இறப்பு ஒன்றாக நடந்திருப்பது புதுமை தான். காரணம் வேறு தெரியவில்லை.
3 months 2 weeks ago
நீ இயந்திரம் நான் பிரேக் அவர்கள் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். பிறந்த நாளிலிருந்தே பிரிக்க முடியாதவர்கள், அலிஸ் (Alice) மற்றும் எலன் (Ellen). ஒருகாலத்தில் “உலகின் மிக அழகான பெண்கள்” என்று புகழப்பட்ட இந்த இருவரும், இன்று இல்லை. எப்படி ஒன்றாக உயிர் பெற்றார்களோ, அவ்வாறே ஒன்றாக உயிர் பிரிந்தும் விட்டார்கள். இருவரும் ஜெர்மனியின் மூனிச் மாநிலத்திலுள்ள கிரூன்வால்டில் 89 வயதில் மரணமடைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. வெளிப்புறக் காரணமில்லை என்ற அறிவிப்புடன் அந்தச் செய்தி முடிந்து விட்டது. அவர்கள் இயல்பாகச் சென்றார்களா? தற்கொலையா? யாருக்கும் தெரியவில்லை. “நாங்கள் இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் என்பதற்கும் மேலாக, எங்களது தந்தையின் பயங்கரமான கோபத்தின் பயம் எங்களை ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டபடி வாழ கற்றுக் கொடுத்தது. வேறு யாரையும் முழுமையாக நம்ப முடியாத நிலை, எங்கள் இருவரையும் இணைத்த பிணைப்பு,” என்று Die Zeit சஞ்சிகைக்குக் கொடுத்த நேர்காணலில் அவர்கள் கூறியிருந்தனர். அவர்களின் நடனமே அவர்களை உலகுக்குத் தெரிய வைத்தது. அந்நாளில் பெண்கள் கால்களை மட்டும் காட்டி ஆடினாலும் இளைஞர்கள் கூட்டம் கூடி விடும். அப்படியான சூழலில், இவர்கள் தாராளமாகவே அந்தச் சுதந்திரத்தை அரங்கேற்றினர். கால்களின் இயக்கத்தில் திளைத்து ஆண்களின் இதயங்களுக்குள் நுழைந்தார்கள். இருவரின் கவர்ச்சியும் மின்னும் மேடை நடையும் நடனமும், உலகின் அழகிய பெண்களின் பட்டியலில் இவர்களை நிலைநிறுத்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் இவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இத்தாலியில்தான் இவர்களுக்கு மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. 1962 முதல் தொடர்ந்து 24 ஆண்டுகள் இவர்களின் அதிகமான நிகழ்ச்சிகள் அங்கு நடந்தேறின. 1975-ல், அப்போது இவர்கள் 35 வயதிலிருந்தபோது, இத்தாலிய Playboy சஞ்சிகை வெளியிட்ட இவர்களின் நிர்வாணப் படங்கள் காரணமாக மூன்று மணிநேரத்துக்குள் அனைத்து Playboy சஞ்சிகைகளும் விற்று முடிந்தன. சில வாரங்களைத் தவிர, அலிஸ் மற்றும் எலன் எல்லாக் காலங்களிலும் ஒன்றாகவே இருந்தவர்கள். திருமணம் செய்யவில்லை. ஒரு பத்திரிகை நேர்காணலில் அலிஸ், “எலன் தான் இயந்திரம். நான் தான் பிரேக்,” என்று சொன்னார். இப்போது அவர்களின் 89வது வயதில்,இயந்திரம் பழுதானதா? அல்லது பிரேக் திடீரெனப் பிடித்து இயந்திரத்தை நிறுத்திவிட்டதா? அது மட்டும் மர்மமாகவே நின்று விட்டது. இரட்டையர்களின் ஆட்டம் ஒன்றை இணைத்திருக்கிறேன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேதா இசையமைத்தது. “ கொஞ்சம் நில்லடி என் கண்ணே கூந்தல் தொட்டுப் பின்னலாமா… என்று அந்தப் பாடல் தொடங்குகிறது
3 months 2 weeks ago
அய்யா இது எனக்கு விளங்கவில்லை
3 months 2 weeks ago
இந்திய துணைத்தூதுவர் இன்றீ சந்திதவர் அல்லோ....
3 months 2 weeks ago
அது. சிங்களவர்கள். அவர்களால். அடித்து. கலைக்க முடியும். தமிழர்கள். அப்படி. செய்ய முடியாது.
3 months 2 weeks ago
நாச்சிமார் கோயிலடி இராஜனுடன் யாழில்தான் அறிமுகம் கிடைத்தது. வில்லுப்பாட்டு அவருக்கு ஒரு அடையாளமாக இருந்தாலும், கதை,நாடகங்கள் என்று அவர் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். குறும் படங்களையும் அவர் இயக்கி நடித்திருக்கின்றார். யாழ் இணையத்தில் வரும் கலைஞர்களின் சிறு கதைகளை வில்லுப்பாட்டாக வடிவமைத்து மேடை ஏற்றி இருக்கின்றார். அவர் சார்ந்து பலதை சொல்லிக் கொண்டு போகலாம்… எனது அஞ்சலிகள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D
3 months 2 weeks ago
நானும் எத்தனையோ டொல்பின் சம்பந்தப் பட்ட காணொளிகளை பார்த்துள்ளேன். எந்த ஒரு இடத்திலும் டொல்பின்கள் மனிதருடன் ஆக்ரோசமாக நடந்ததில்லை. மாறாக நன்றாக பழகிய நண்பன் மாதிரியே சுற்றிச் சுற்றி வரும். அவசியம் என்றால்… மனிதனுக்கு உதவியும் செய்யும். சரியான தகவலுக்கு நன்றி. 🙂
3 months 2 weeks ago
தவறான தகவல். பெண் பயிற்சிவிற்பாளரைக் ( Dawn Brancheau) கொன்றது டொல்பின் அல்ல. Orca வகையை சார்ந்த திமிங்கிலம். அமெரிக்காவில் Orlando , Florida வில் Sea works Orlando எனும் animal theme park இல் 2010 இல் நிகழ்ந்தது.
3 months 2 weeks ago
அது ஒரு விபத்து போலவே இருக்கு ......... அந்த டொல்பின் அழுதுகொண்டு அவரை சுற்றி தூற்றி தேடுகிறது. என்ன நடந்திருக்கும் என்று சரியாக தெரியவில்லை. நாய்கள் கடித்து ஆயிர கணக்கானவர்கள் இருந்து இருக்கிறார்கள்தானே ?
3 months 2 weeks ago
இது முற்றிலும் சரியான தகவல் அல்ல. "யூதம்" ஒரு மதம் என்பது சரி. ஆனால் யூத மக்களின் வாழ்க்கை முறை, மணம் முடிக்கும் முறைகள் காரணமாக jewishness என்பது அவர்களது தாய்வழியின் (matrilineal) ஊடாகப் பேணப் பட்டு வரும் ancestry உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய, கிழக்கு ஐரோப்பிய யூதர்களை அஷ்கெனாசி (Ashkenazi) யூதர்கள் என்பார்கள். இவர்களின் சிறுமணி டி.என்.ஏ (mitochondrial DNA) யில் அவர்களின் தாய்வழி அஷ்கெனாசி டி.என்.ஏ பண்பு இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்னர், இந்தியாவின் கிழக்கு மாநிலத்தில் இருந்து "நாம் கிழக்கு நோக்கி குடிபெயர்ந்த போது தொலைந்து போன யூத கோத்திரங்களில் (tribe) இருந்து வந்தவர்கள்" என்று ஒரு இந்திய யூதர்கள் சமூகம் இஸ்ரேலுக்குச் சென்று டி.என்.ஏ பரிசோதனையை கோர்ட்டில் சமர்ப்பித்து இஸ்ரேல் குடியுரிமையைப் பெற்றார்கள். "யூத ஜீன்" என்ற ஒன்று இல்லை, ஆனால் ancestry இன் வழியாக யூதப் பின்னணியைக் கண்டறியலாம், நிரூபிக்கலாம்.
3 months 2 weeks ago
18 Nov, 2025 | 05:22 PM இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230729
3 months 2 weeks ago
18 Nov, 2025 | 05:22 PM

இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.



https://www.virakesari.lk/article/230729
3 months 2 weeks ago
Buy one get one free யோ அல்லது பேப்பர்காரனின் எழுத்து பிழையோ ? ஒண்ணுமே புரியலை .
3 months 2 weeks ago
Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 05:20 PM தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இந்த கூட்டாண்மையின் மூலம் அபாய மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு, கடல் பாதுகாப்பு, தொழில்முறை இராணுவப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்புகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய ஒத்துழைப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. State Partnership Program திட்டத்தின் மூலம் ஏற்படும் இத்தகைய விரிவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230727
3 months 2 weeks ago
Published By: Digital Desk 3
18 Nov, 2025 | 05:20 PM

தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகின்றோம்.
இந்த கூட்டாண்மையின் மூலம் அபாய மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு, கடல் பாதுகாப்பு, தொழில்முறை இராணுவப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்புகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய ஒத்துழைப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
State Partnership Program திட்டத்தின் மூலம் ஏற்படும் இத்தகைய விரிவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.virakesari.lk/article/230727
3 months 2 weeks ago
அட பாவிகளா வாகனத்தை ஓரமா நிறுத்திவிட்டு ஒழுங்கா அனுபவித்திருக்கலாமே?
3 months 2 weeks ago
DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.
3 months 2 weeks ago
21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு Nov 18, 2025 - 09:44 PM எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4rx2mg01r6o29nnrvhgnlp
3 months 2 weeks ago
Nov 18, 2025 - 06:07 PM நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது. பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம். இல்லை... அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை. சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டது. தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும். இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் (பிரச்சினை செய்கிறார்கள்)?... அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன. நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள். எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi4k6wzb01qzo29nt32frmoh