Aggregator
நீ இயந்திரம் நான் பிரேக்
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் அவர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். பெற்றோர் பருத்தித்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன
”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன
திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட பௌத்த துறவிகள், பொலிஸார், உள்ளிட்டவர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) ரொஷான் அக்மீமன தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரைாடலின் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில பேர் இணைந்து செயல்படுத்த முயன்ற இனவாத அரசியலை தோற்கடிக்க தலையிட்ட திருகோணமலை மாவட்ட அனைத்து மூத்த பிக்குமார்கள் மற்றும் மத தலைவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
அதேபோல், வெளியிலிருந்து வந்த சிறிய குழுவொன்று திருகோணமலையின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சித்ததை உணர்ந்து அந்த தருணத்தில் அதற்கு எதிராக ஒன்றுபட்டு நின்ற திருகோணமலை மக்களைப் பற்றி நான் உண்மையிலே சந்தோசமடைகிறேன்.
மேலும் இந்த சம்பவத்தை இன மோதலாக மாற்ற முயன்ற இனவாத அரசியல்வாதிகளின் ஊக்குவிப்புகளுக்கு இரையாகாமல், அமைதியாக செயல்பட்ட சிங்கள, தமிழ் சகோதர சகோதரிகளின் செயல் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
திருகோணமலை என்பது ஒரு வானவில் போல அழகான நகரம். அதன் அழகு புலப்படும் தருணம் அனைத்து நிறங்களும் ஒன்றாகத் தெரிவதிலேயே உள்ளது.
நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்து நடத்திய கலந்துரையாடலி சில முடிவுகள் எட்டப்பட்டன, அதில் புத்தர் சிலையை விகாரைக்கு சொந்தமான குறித்த இடத்தில் வைப்பது, விகாரஸ்தானத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடங்கள் இருந்த நிலத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் எல்லை குறியீடுகள் வைப்பது, அந்த நிலம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்கும் திருகோணமலை நகரம் நகர அபிவிருத்தி ஆணையத்திற்கும் உட்பட்ட பகுதியாக இருப்பதால், எந்தக் கட்டிடம் அமைக்க வேண்டுமானாலும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்று சட்ட பிரச்சினைகளை தவிர்ப்பது ஆகய முடிவுகள் எட்டப்பட்டன.
திருகோணமலைக்கு தலைமை வழங்குவது என்பது உண்மையில் சவாலான பொறுப்பாகும். ஏனைய மாவட்டங்களிலிருந்து மாறுபட்டு, திருகோணமலையில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதும் அனைத்து கலாச்சரத்தையும் பின்பற்றுவோரின் விதிமுறைகளையும் மதித்து செயல்பட வேண்டும் என்பதும் இதற்க்கு காரணமாகும்.
நாங்கள் கண்ட பழைய அரசியல் என்பது இனத்தின் படி மக்களை பிரித்து ஆழ்ந்த அரசியலாகும். ஆனால் அந்த ஆட்சி எமக்கு விட்டுச்சென்ற இனவாதத்தின் பின்விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் எங்கள் ஆட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று அல்லாமல், “திருகோணமலையின் மக்கள்” என்று அனைவரையும் மதிக்கும் ஆட்சியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். அவர்களின் கலாச்சார அடையாளங்களில் வேறுபாடே ஏற்றுக்கொண்டு, எல்லா மதத்தையும் மதிக்கின்ற ஓர் தினசரி வாழ்வை நிலைநாட்டுவதே எங்கள் பயணமாகும். இந்த பாதையை தனிப்பட்ட அரசியல் நலத்திற்காக எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!
adminNovember 19, 2025

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது
தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரவப்பட்டு வருகிறது.

போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்
போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்
போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான்
adminNovember 18, 2025

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் . இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் , யாழ் நகர் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் குறித்த வித்துவானை கைது செய்து சோதனையிட்ட வேளை அவரது உடைமையில் இருந்து 490 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினா் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபருக்கு போதைப்பொருளை யாழ் . நகர் பகுதியில் வைத்து விற்பனை செய்த நபர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அந்நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்
கருத்து படங்கள்
தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!
தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.
இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன்
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!
ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!

ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!
தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.
டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.